Pages

Sunday 29 November 2009

ஈனத்தமிழன் இவன்தானோ


பேரினவாதத்தின் கைப்பொம்மை; தமிழ் - சிங்களப் புரோக்கர்; மத்தியில் கிழிந்த ஆட்சி, மாநிலத்தில் நைந்த ஆட்சி புரியும் தோழருக்கு சனீஸ்வரனின் இரண்டாவது மடல்



"நவம்பர் 27 கொலைகாரர்கள் தினம்" என்று நேற்றைய தினம் மன்னாரில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய இலங்கையின் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அறிக்கையை வாபஸ் வாங்குமாறு கோரி யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார்.
சனீஸ்வரனின் அறிக்கையின் முழுவடிவம்:-

வார்த்தைகளால் வரிக்க முடியாக ஈகத்தைப் புரிந்த மகத்தான அந்த மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி “கொலைகாரர்கள் தினம்” என்று வர்ணித்து உன் சுயரூபத்தையே காட்டிவிட்டாயேடா நீயா தமிழரின் பிரதிநிதி - நீயா மக்கள் தொண்டன் - நீயா ஈழத்தின் விடிவெள்ளி – உன்பின்னால் கோஷம் போட்டுத் திரியும் கூட்டம் கூட உன்னை மன்னிக்காதடா மாபாவி – நடந்து முடிந்தவற்றை எண்ணி மனதுக்குள் மௌமாக அழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் உணர்வு புரியாது கொலைகாரர்கள் தினம் என்று கொக்கரித்தாயே நாசமாய்த்தான் போவாயடா…
வேலை கேட்டுத்திரியும் யாழ்ப்பாணத்து இளஞ்சமூகமே சிந்தியுங்கள். உங்கள் வீடுகளிலும் ஒரு மாவீரன் இருப்பான் - அவனும் கொலைகாரனா - இந்த இரக்கமற்றவனிடம் கையேந்துவதை விடுத்து சிங்களவனிடம் கையேந்துங்கள். அவன் வேலை தருவான். துரோகியிடம் செல்வதை விடுத்து விரோதியிடம் செல்லுங்கள். இவனின் வேலைப்பிச்சையால் சோறு தின்பதை விட மலத்தை உண்ணலாம்.
முப்பத்தையாயிரம் இளம் பிஞ்சுகளின் தியாகத்தை ஒரு வார்த்தையால் மிதித்துவிட்டான் பாவி. உன்னை தாய் மண்ணை, தாயை நேசிக்கும் எங்கள் வீட்டு சொறி நாய் கூட மன்னிக்காதடா? பிரேமதாசாவின் வேட்டிக்குள்ளும் சந்திரிக்காவின் பாவாடைக்குள்ளும் இன்று மகிந்தனின் வேட்டிக்குள்ளும் ஒளித்திருந்து அரசியல் செய்யும் உனக்கு தியாகம் என்ற ஒற்றைச் சொல் புரியாது தானடா பாவி. மக்களையும் மாவீரரையும் பிரித்து பார்க்காதேடா பாவி.

நீ ஒரு தமிழ் தலைவனாக இருக்க ஏன் ஒரு மனிதனாக இருக்க கூட தகுதியில்லாதவன். தான் கொண்ட இலட்சியத்திற்காக தன்னையே ஆகுதியாக்கிய எங்கள் குழந்தைகளை கொலைகாரர்கள் என்று சொன்னால் நீ யாரடா படுபாவி. யாழில் வாழும் ம(h)க்களே இவன் பேச்சை மன்னிக்கப் போகின்றீர்களா.
இவனது வேலை வாய்ப்பை நம்பி இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடப் போகின்றீர்களா? இவனின் காசு வாங்கி கோயில் கட்டினால் பாவம்தானடா மிஞ்சும். இவனது காசில் வாசிகசாலை திருத்தினால் அறியாமைதானடா எஞ்சும். இவனிடம் திரிந்து ஊர்வலம் சென்று போஸ்டர் ஒட்டி காசு லஞ்சம் கொடுத்து கேவலம் ஒரு வேலை வாங்குவதைவிட நாக்கை பிடுங்கிக் கொண்டு கொண்டு சாவதே மேலடா.
கேடு கெட்ட இனமல்லடா எங்கள் இனம். கங்கை கொண்டு கடாரம் வென்று கோலோச்சிய இனமடா எங்கள் இனம். மஞ்சள் துண்டுக்கு கழுத்தறுத்த சிங்களவனிடம் மடியேந்திப் பிச்சை கேட்பதா? ஏனடா இவனும் இவனது தலைவன் பத்மநாபாவும் போராடப் போனாங்கள். மதகு திருத்தவும், தார் ஊற்றவுமாடா போனவங்கள்.

யாழ்ப்பாணத்து இளைஞர்களே எல்லோரும் ஒரு கணம் சிந்தியுங்கள்.

மாவீரர்களின் தொகை முப்பத்தையாயிரத்தை தாண்டிவிட்டது. ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு மாவீரனோ போராளியோ இருக்கும் நிலை தமிழீழத்தில் இன்று காணப்படுகின்றது. இவர்களனைவரையும் கொலைகாரர்கள் என்று கூறி கொச்சைப்படுத்தும் ஒரு கூட்டத்தின் பின்னால் திரிந்து போஸ்டர் ஒட்டி கோஷம் போட்டு, ஊர்வலம் சென்று, சங்கு ஊதி பிழைப்பதை விடுத்து சுய தொழில் ஒன்றை தேடிக் கொள்ளுங்கள்.
வேலையில்லாப் பட்டதாரிகளே! இவனுக்கு பின்னால் சென்று ஊம்பித்தான் வேலை எடுக்க வேண்டும் என்றில்லை. உங்களுக்கு கட்டாயம் சிங்கள அரசு வேலை தரவேண்டும். அவன் தாறதை இவன் ஏதோ தான் தாறதாக நடிக்கிறான் அவ்வளவும்தான்.
நீங்கள் அன்று பல்கலைக்கழகத்தில் இருந்து செய்யத பொங்கு தமிழை நினைத்து பாருங்கள். இப்போது வேலை கேட்டு அவன் வாசலில் போய் நிற்க வெட்கமாயில்லை.

உயர்ந்தவர்கள் நாமெல்லாரும்
உலகத்தாய் வயிற்று மைந்தர்
நசிந்து இனி கிடக்க மாட்டோம்
நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்
நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்
நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்

உங்களது கோஷத்தை சனீஸ்வரன் உங்களுக்கு சொல்லி தர வேண்டியதில்லை. புரிந்து கொள்ளுங்கள்.

தோழரே! நீர் திருந்துவீர் மக்கள் தொண்டனாய் மாறுவீர் என்று எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் மாவீரச் செல்வங்களை கொலைகாரர் என்று கூறியதன் மூலம் பேரினவாதத்தின் பிச்சைக்காரன் நீர் என்பதை மீண்டும் ஒருமுறை அறியத்தந்துவிட்டீர்.
உமது மனதில் இன்னும் கொஞ்சம் ஈரம் ஒட்டியிருந்தால் உமது அறிக்கையை வாபஸ் வாங்கி எங்கள் வயிற்றெரிச்சலை சம்பாதிக்காமல் இரும்.

மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும் வரை
யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

Saturday 28 November 2009

மாவீரர் தினம், தமிழ் ஈழம், மற்றும் இலங்கைத் தமிழர்களின் நிலை


இந்த மாவீரர் தினம் மற்ற எல்லா மாவீரர் தினங்களைவிட ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்ததாக எதிர் பார்க்கப்பட்டது. காரணம் பிரபாகரன் தோன்றுவார், பொட்டு அம்மன் உரையாற்றுவார் என்றெல்லாம் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எதிர் பார்த்த ஒன்றும் நிகழவில்லை. சீமானின் நாடு கடத்தல் ஒரு செய்தியானது. அவர் நக்கீரனில் கொடுத்த காணொளி பரபரப்பு செய்தியானது. என்னால் இந்தக் காணொளியை காண முடியவில்லை. புலம் பெயர் தமிழர்கள் அந்த அந்த நாடுகளில் இந்த மாவீரர் தினத்தை சிறப்பாக நடாத்தியிருக்கின்றனர்.

என் சிந்தனைகளில் ஈழப்போர் முடிந்து விட்டதாக ஸ்ரீலங்கா அரசு நினைப்பது போல் சொல்ல முடியாது. இன்னும் சில வருடங்கள் கழித்து மீண்டும் வேறு வடிவம் கொண்டு எழும் என்றே தோன்றுகிறது. போர் முனையில் இருந்த குழந்தைகள், இளைஞர்கள் இந்த யுத்தப் பூமியில் வளர்ந்தவர்கள். அவர்கள் இதை கண்டிப்பாக அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள் என்றே தோன்றுகிறது.

இதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன.

1.சிறிலங்கத் தமிழன் காலாகாலமாக ஒரு இரண்டாம் தரக் குடிமகனாகவே நடத்தப்படுவது.
2.எத்துனை திறமை இருந்தாலும் தமிழர்களுக்கு பள்ளியிலும், கல்லூரியிலும் வேலை வாய்ப்பிலும் வாய்ப்பினை ஏற்படுத்தாத சிங்கள அரசு, இளைஞர் மனதில் வேற்றுமையை வளர்ப்பது.
3.புலம் பெயர் தமிழர்கள் தங்கள் துறையில் அந்நிய நாட்டில் முன்னேறி, தங்கள் பிள்ளைச் செலவங்களை உயர் படிப்பு படிக்க வைத்திருப்பது.
4.புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்து ஈழப்போருக்கு கொடுத்த ஆதரவு.
5.தமிழனின் இயல்பான தன்மான உணர்ச்சி, போராடும் குணம்.
6.முக்கியமாக சிங்களன் தங்கள் அறிவுத்திறமை, உழைப்பை வளர்த்துக் கொள்ளாமல், சிங்களன் என்ற ஒரே காரணத்திற்காக அரசிடம் எல்லாம் எதிர் பார்ப்பது.
7.ஆனால் இன்னும் தொடரும் தமிழனின் கடும் உழைப்பு. கொழும்புவிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் வடக்கே செல்லும் பொழுதே தமிழர்கள் தேயிலைத் தோட்டத்திலும், வயல்களிலும் வேலை செய்துக் கொண்டிருப்பதை பார்க்கமுடியும்.
8.சோம்பித்திரியும் சிங்களவன் குணம்.
9.பிச்சைக்கும், ஏமாற்றுவதற்கும் தயங்காத சிங்களவனின் குணம்.
10.சிங்களவன் உழைப்பை நம்பாமல், ஏமாற்றி பிழைப்பதை யோசிப்பது.
11.சிங்களப் பெண்களின் கலாசார சீரழிவு. பெரியதாக கலாச்சாரம் இருந்தற்கான அறிகுறிகள் இல்லை. (காலையில் மிருகக் காட்சி சாலையின் உள்ளே ஒதுங்கும் பள்ளி, கல்லூரிப் பெண்கள் தங்கள் துணையுடன் தனியிடத்தில் ஒதுங்கி கெட்ட காரியங்களில் ஈடுபடுவதை மிகச் சாதாரணமாகக் காணலாம்) இவர்கள் சந்ததிகள் எப்படி இருப்பார்கள்?.
12.சிங்கள அரசின் மெத்தனம், மலிந்துக் கிடக்கும் ஊழல், அந்நிய நாடுகளை நம்பியிருத்தல்.

இவை எல்லாவற்றையும் நினைத்து பார்க்கும் பொழுதும், தமிழனின் போராடும் குணங்களையும் நினைத்துப் பார்த்தால், ஈழப்போர் வேறு வடிவம் கொண்டு எழும் என்றே தோன்றுகிறது. வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவே உணர்கிறேன்.

Tuesday 17 November 2009

மறுபடியும் மாயா


பல வருடங்கள் கழித்து, தீபாவளிக்கு ஊருக்கு சென்றேன். நான் தீபாவளிக்கு குடும்பத்துடன் அங்கு வந்ததில் என் பெற்றோருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என் அம்மா ஒவ்வொரு வருடமும் நானும் உன் அப்பாவும் தனியாகத்தான் தீபாவளிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆதலால் நீங்கள் எங்களுடன் தங்கி தீபாவளி கொண்டாடுங்கள் வேறு எங்கேயும் பார்ட்டி என்று போய் விடாதீர்கள் என்றாள். தீபாவளி நாள் இனிதே சென்றது. பேரக்குழந்தைகளுடன் தீபாவளியை பெற்றோர்கள் கொண்டாடியதில் எங்களுக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி.

பண்டிகை முடிந்து தொழில் நிமித்தம் ஊர் திரும்ப தயாராகிக் கொண்டிருந்தோம். மனைவி ஊருக்கு வாங்க வேண்டிய பொருட்களை லிஸ்ட் போட்டு வைத்து மும்முரமாக வாங்கிக் கொண்டிருந்தாள். நான் வழக்கம்போல் “சாரதி” வேலையும், மூட்டை தூக்கும் வேலையும் செய்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அலை பேசியில் என் பால்ய நண்பன் அழைத்தான். அவன் என் அப்பாவை இன்று பார்த்ததாகவும் அவர் நான் ஊருக்கு வந்திருக்கும் செய்தி சொன்னார் என்றும், மேலும் இன்று இரவு அவர்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தான். இம்முறை நிறைய நண்பர்கள் ஊரில் இருப்பதால் எல்லோரையும் சந்திக்க சந்தர்ப்பம் அமையும் என்றான்.
இரவு எட்டு மணிக்கு அவன் வீட்டிற்கு சென்றேன். பழைய நண்பர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அவன் வீட்டு வாசலில் பிளாஸ்டிக் நாற்காலி தெருவை அடைத்துப் போட்டு அரட்டை தொடங்கியது. பால்ய காலத்திலிருந்து சமீப காலம் வரை ஒரு ரவுண்டு வந்து விட்டோம். நேரம் போனதே தெரியவில்லை. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஒரு பெண்மணி அடிக்கடி எங்களை கடந்து போவதும், சில சமயம் சிறிது தள்ளி அமர்ந்து தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தாள். பைத்தியம் போலத் தோற்றம், தலை முடியெல்லாம் சடை கட்டி அழுக்காக இருந்தாள். நான் அவளை கவனிப்பதைக் கண்டு ராஜுதான் “யார் தெரிகிறதா?” என்று என்னைக் கேட்டான்.
எனக்கு அடையாளம் தெரியவில்லை.
"மாயாடா" என்றான்.
மாயா நினைவுக்கு வந்தாள்.
தெருவில் நாங்கள் ஒரு எட்டு பத்துபேர் ஏறக்குறைய ஒரே வயதினர்கள். எல்லாக் குடும்பங்களும் ஒரே குடும்பம் போல் பழகியக் காலம். என்னுடன் ஒரு வயது மூத்தவன் அருண்குமார். அவ்ன் தங்கை தான் மாயா. தெருவின் முனையில் கடைசி வீட்டிற்கு முன் வீடு அவர்களது. மிக எழ்மையானக் குடும்பம். சிறுவயதில் தாயை இழந்து விட்டவர்கள். இவர்களுக்கு ஒரு அண்ணன் உண்டு மிகவும் வயதில் மூத்தவன், அவன் கல்யாணம் செய்துகொண்டு தனிக் குடித்தனம் போய் இங்கு வருவதே கிடையாது. அவன் அம்மா இறந்த அன்றைக்கி மட்டும் வந்ததை நாங்கள் பார்த்தோம். மற்றபடி அவனுக்கும் இந்தக் குடும்பத்திற்கும் தொடர்பு அற்றுப் போய் விட்டதாக அருண்குமார் சொல்லியிருக்கிறான். அவர்களுடைய தந்தை ஏதோ ஒரு தனியார் கம்பெனியில் கணக்கராக இருந்தார். சம்பளம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

மாயாவும் என் தங்கையும் ஒரே வகுப்பில் படித்தார்கள். மாயா சிறு வயதில் சூடிகையானப் பெண். அவள் அம்மா இறந்தவுடன் அவளிடம் ஒரு சோகம் குடி கொண்டது. பண்டிகை காலங்களில் எங்களது நண்பர்கள் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு அவர்களுக்கு தின்பண்டங்கள் கொடுப்போம். அதை அருணும் மாயாவும் ஒரு வெட்கத்துடன் வாங்கிக் கொள்வார்கள். பெரும்பாலும் அருண், மாயாவிற்கு பாடப் புத்தகங்கள் எங்களது பழையப் புத்தகங்களைக் கொடுத்து உதவி செய்வோம்.

அருண் நன்றாகப் படித்தான். அமெரிக்காவிற்கு வேலைக்கு சென்றான். அப்பொழுது தான் நான் அவனைக் கடைசியாகப் பார்த்து. பின்பு நானும் பிழைப்பு தேடி வெளிநாடு வந்து விட்டேன். பின்பு அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் அறிய வாய்ப்பில்லை.

இப்பொழுது மாயாவை இந்த நிலைமையில் பார்த்த பொழுது மனது கனத்தது. அருண் அமெரிக்க போய் இரண்டு மாதத்தில் பிணமாகத்தான் திரும்பினானாம். நியூயார்க் சுரங்கப் பாதையில் தனியாக வந்த பொழுது திருடர்களால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறான்.

மாயா சிறு வயதில் தாயை இழந்து, ஒரே நம்பிக்கையான அண்ணனையும் இழந்து, வயதானத் தந்தையும் கவனிக்க முடியாமல், தொடர்ந்து சோகத் தாக்குதலால் இப்படி ஆகிவிட்டதாக நண்பர்கள் கூறினர்.

விதியின் கோரத்தாண்டவம், இப்படியும் இருக்குமா?

கருணாகரனின் கவலை




















கருணாகரன் கவலையுடன்
கதவருகே காத்திருக்க
கல்யாணி கல்லூரியில்
கணினி வகுப்பை முடித்து
கடைசி பேருந்தில் வந்தாள்.

என்றாவது கேட்கவேண்டும்
என்று நினைத்ததை
இன்றாவது கேட்கவேண்டும்
நன்றாக பதில் கிடைக்குமானால்
சென்றாக வேண்டும் நண்பர் வீடு.

கல்யாணி கேள் "பெண்ணே
கல்யாணம் எப்பொழுது,
நல்ல வரன் வரும்பொழுது
தள்ளுவது நல்லதல்ல
சொல் உன் முடிவை"

உனக்கு அடுத்த படியாக
உஷாவும் காத்திருக்கிறாள்
மூத்தவள் மீனாதான், கண்
மூடி முடிவெடுத்தாள்
முருகனுடன் ஓடிப்போக

உன் தங்கை உஷாவோ
உன் திருமணம் முடிய
உறவுடன் கைகூடும்
உற்ற நேரம் எப்பொழுது
தப்பாமல் வரும் என்று.

அருமை நண்பன்
அருண்குமார் புதல்வன்
அமெரிக்காவில் பணி
அழகானவன், அறிவுள்ளவன்
அவனை ஏற்றுக்கொள்.

எத்துனை சொல்லியும்
எதிர்ப்பும் காட்டாமல்
ஏறெடுத்தும் பாராமல்
எதிர்வீட்டு சன்னலை
ஏக்கமுடன் நோக்குகிறாள்.

இவள் திருமணமும்
நான் சொன்ன மாப்பிள்ளை
இல்லமால் எதிர் வீட்டு
சன்னலில் தெரியும்
கண்ணனுடன் தானோ.

Monday 16 November 2009

விபத்து


ரமணன் அன்று காலையில் எழுந்தவுடன், அந்த பல்லாவரம் பெண்ணின் நியாபகம் வந்தது. இன்று அவளிடம் நிச்சயம் பெயர் கேட்டுப் பேசிவிடவேண்டும். மாம்பலத்தில் ஏறும் பெண்ணை சிறிது நாட்களாகக் காணவில்லை, படிப்பை முடித்து விட்டாளா இல்லை நிறுத்தி விட்டாளா தெரியவில்லை.

ரமணன் தாம்பரத்தில் உள்ளவன். தொடர் வண்டி நிலையத்திற்கு காலை எட்டுமணிக்கே வந்து விடுவான். எட்டு மணி இருபது நிமிடத்திற்கு புறப்படும் வண்டியில் தான் பிரயாணம் செய்வான். வண்டி எவ்வளவு காலியாக இருந்தாலும் மகளிர் பெட்டிக்கு அடுத்தப் பெட்டியின் கதவருகில் நின்று கொண்டு தலைமுடி காற்றில் பறக்க வருவான். ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி வண்டி கிளம்பியவுடன் ஓடிசென்றுதான் ஏறுவான்.

அவன் அவ்வாறு சாகசம் செய்வதை மகளிர்ப் பெட்டியில் உள்ளப் பெண்கள் வேடிக்கைப் பார்ப்பதால் அவன் சாகசங்களின் எல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. அன்றும் வழக்கம்போல் பல்லாவரம் நிலையம் வரும் முன்பே அவன் தினமும் பார்க்கும் அந்த பெண் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தாள். வண்டி நின்றவுடன் மகளிர் பெட்டியில் ஏறி கதவின் சன்னல் ஓரமான இருக்கையில் அமர்ந்தாள். அங்கிருந்து ரமணனை கடைக்கண்ணால் பார்த்தாள்.

வண்டி மீனம்பாக்கம், பழவந்தாங்கல், மவுண்ட் தாண்டி கிண்டியில் நுழைந்தது. ஒரு வயது முதிர்ந்தவர் ரமணன் ஏறும் பெட்டியில் கதவருகே உள்ள சன்னலின் ஓரமாக இருக்கையில் அமர்ந்தார். கிண்டியில் வண்டி கிளம்பியவுடன் ரமணன் வண்டியுடன் ஓடி வந்து ஏறுவதை கவனித்தார். வண்டி சைதாபெட் வரும்வரை ரமணன் கதவுப் பிடியை பிடித்துக் கொண்டு தன் உடல் முழுவதும் வண்டிக்கு வெளியே வைத்துக் கொண்டு அபாயகரமாக பயணிப்பது அவருக்கு உள்ளே ஒரு அச்சத்தை உண்டாக்கியது.

வண்டி கோடம்பாக்கம் தாண்டியதும் வழக்கம் போல் ரமணன் வண்டி கிளம்பியவுடன் ஓடி வந்து ஏறி, மகளிர் பெட்டியை எட்டி ஒருப் பார்வை பார்த்து தலையைக் கோதிக் கொண்டான். வயது முதிர்ந்தவர் ரமணன் தன் பக்கம் பார்வை பார்த்தபொழுது உள்ளே வர சொல்லி சைகை செய்தார். ரமணன் அதை மதிக்கவில்லை. மற்றும் ஒரு முறை அதே போல் செய்தார், அவன் அவரை ஒரு ஏளனப் பார்வை பார்த்து முகத்தை திருப்பி மகளிர்ப் பக்கம் பார்வை வைத்தான்.

வண்டி நுங்கம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன், அவன் கை தன் சன்னலின் அருகே உள்ளதை கவனித்து, அவன் கையை தட்டி உள்ளே வர சைகை செய்தார். இப்பொழுது ரமணணின் பார்வையில் ஒரு எரிச்சல், அவரை முறைத்து விட்டு தன் பார்வையை மகளிர் பெட்டியின் பக்கம் திருப்பிக் கொண்டான்.

வண்டி சேத்துப்பட்டு நிலையத்தை வளைவில் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் ரமணன் மின்சாரக் கம்பத்தில் அடிபட்டு விழுவதை முதிர்ந்தவர் கவனித்தார். ஒரு கலவரத்துடன் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி, ரயில்வே சிப்பந்திகள் சிலரை கூட்டிக்கொண்டு ரமணன் விழுந்த இடத்திற்கு விரைந்தார்.

இந்தச் சம்பவம் நடந்து, ஒரு மூன்று வாரம் கழித்து, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்த ரமணன் கோமாவில் இருந்து மீண்டான். அருகிலிருந்த அவன் அம்மாவை நியாபகத்தில் கொண்டு வர மிகக் கடினப்பட்டான்.

அவனை கொண்டு மருத்துவமனையில் சேர்த்து, தக்க தருணத்தில் அவனை பிழைக்க வைத்த முதியவர், அன்று இரவு மாரடைப்பால் இறந்தது அவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

Friday 13 November 2009

வாத்தியாரம்மா


அருமையான கல்லூரிக்காலம். எங்கள் தெருவில் உள்ள என் வயது பையன்கள் எல்லோரும் வெவ்வேறு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தோம். கல்லூரிக்கு செல்ல எல்லோரும் வீட்டிலிருந்து நடந்து ரயில் நிலையத்தை அடைந்து பிறகு சில பேர் தெற்கு நோக்கிச்செல்லும் வண்டியிலும் மீதிபேர் வடக்கு நோக்கிச் செல்லும் வண்டியிலும் பயணிப்போம். வண்டியில் மற்ற நிறுத்தத்தில் வருபவர்களும் சேர்த்து கொண்டு உலக விஷயங்களையும் கல்லூரி விஷயங்களையும் சத்தமாகப் பேசிக்கொண்டு செல்வோம்.

தெருவில் உள்ள எல்லோரும் பெரும்பாலும் சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்திற்கு செல்வோம். எங்கள் கூட்டம் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டோம். பெரும்பாலும் சினிமா, அரசியல், விளையாட்டுக்களை பேசிக்கொண்டு செல்வோம். மேலும் எங்கள் எல்லோருக்கும் பெண்களுடன் பேசுவதற்கோ, கிண்டல் செய்வதற்கோ ஒரு வித பயம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாங்கள் தவறாக நடந்து கொண்டால் விஷயம் நாம் கல்லூரி விட்டு வரும் முன்பே வீட்டை அடைந்துவிடும்.

அன்று நான், ஸ்ரீதர், குமார், ராஜாராமன், வெங்கட், சுந்தர் எல்லோருமாக ரயில் நிலையத்திற்கு செல்லும் பொழுது சத்தமாக அன்று முதல் நாள் நடந்த கிரிக்கெட் மாட்சில் இந்தியா வென்றது பற்றி பேசிக்கொண்டு சென்றுகொண்டிருந்தோம். அப்பொழுது ஸ்ரீதர், முதல் நாள் மாட்சில் எதோ ஒரு பிளேயர் அடித்த சிச்செரை ச்லாகித்துக்கொண்டு எல்லோரும் பார்த்தீர்களா என்று கேட்டுக்கொண்டு வந்தான். ராஜா ராமன் ஏதோ யோசனையில் வந்து பதில் சொல்லாததனால், "என்ன ராஜாராமா” என்று சற்று குரலை உயர்த்திக் கேட்டான்.

அடுத்து நாங்கள் சற்றும் எதிர்பாராமல் நடந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தன் காலணியைக் கழற்றி "என்ன கிண்டலா, செருப்பால் அடிப்பேன்" என்றாள்.

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. "வாத்தியாரம்மா என்று கிண்டலா செய்கிறீர்கள்".என்றாள்
நாங்கள் ஏதும் பதில் சொல்வதற்கு முன்பு அங்கு அலுவலகம் செல்லும் மற்ற கூட்டம் கூடிவிட்டது. சகட்டுமேனிக்கு அவர் அவர்கள் எங்களை திட்டினார்கள். போததற்கு அறிவுரை வேறு, படிக்கிற வழியைப் பாருங்கள் என்று.

அந்தப் பெண்மணி எங்கள் தெருவில் இருக்கும் எங்கள் குடும்ப மருத்துவரின் மனைவி. அவர்கள் நகரத்தில் உள்ள பிரசித்திபெற்ற பெண்கள் கல்லூரியில் ஆங்கில பேராசிரியை. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது, அவர்கள் கல்லூரியிலிருந்து திரும்பியவுடன் என் அம்மாவிற்கு செய்தி போய் விடும். பின்பு என்ன வீட்டில் ஒரே களேபரம்தான். போதாகுறைக்கு போன பரீட்சையில் நான் வாங்கிய மார்க்குகள் ஒன்றும் சொல்லும்படியாகவே இல்லை. இப்பொழுதுதான் அதற்கு உண்டான ஒரு “மண்டல அர்ச்சனை” முடிந்தது.

மாலை கல்லூரியில் இருந்து வந்தவுடன், விளையாட்டில் மனம் செல்லவில்லை. என் வீட்டு வாசலில் கூடி காலையில் நடந்ததை நினைத்து ஒரு வித பயத்துடன் வருந்தி கொண்டிருந்தோம்.

ராஜாராமன் வீட்டிற்கு கிளம்ப இருந்த சமயம், ஸ்ரீதர்தான் "ஏய் வாத்தியாரம்மா" என்றான். நான் ஸ்ரீதரை அதட்டினேன். ஏண்டா திரும்ப வம்பு இழுக்கிறே என்றேன்.

நான் ராஜராமனைக் கூப்பிட்டேன் என்றான். என்காதில் சத்தியமாக “வாத்தியாரம்மா” என்றுதான் விழுந்தது.

இப்போது எனக்கு எல்லாம் பளிங்கு போல விளங்கிவிட்டது. மாலை பேராசிரியை வரக்காத்திருந்தோம். விஷயம் எங்கள் பெற்றோரை எட்டுமுன் அவர்களுக்கு விளக்கி விடவேண்டும் என்று.

அவர்கள் வீட்டிற்கு திரும்பியவுடன் சிறிது நேரம் கழித்து, அவர்கள் வீட்டுக் கதவை தட்டினோம். பேராசிரியை தான் திறந்தார்கள்.அவர்களிடம் விஷயத்தை விளக்கினோம். அவர்கள் அரை மனதாகத் தான் ஏற்றுக் கொண்டார்கள்.

அதற்குப் பிறகு அவர்களைக் கண்டாலே எங்கள் பேச்சு நின்று ஒரு அசாத்திய மௌனம் நிலவும்.

அவர்கள் எங்களை காலணியைக் கழற்றி திட்டியதற்கு ஒரு சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அதில் உள்ள அநியாயம் இன்னும் ஜீரணிக்கமுடியவில்லை.

Thursday 12 November 2009

வழக்கொழிந்து போன விளையாட்டுகள்




கிட்டத்தட்ட ஒரு இருபது வருடத்திற்கு முன்பு இந்த விளையாட்டுகள் சென்னையில் ஏன் தமிழகத்தில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பரவலாக சிறுவர்களால் ஆடப்பட்டவை. இப்போது உள்ள கிரிக்கெட், கால்பந்து மோகத்தில் வழக்கொழிந்து போய்விட்டன. அத்தகைய பழைய விளையாட்டுகள் பற்றிய ஒரு நினைவுப் பதிவு.

கில்லி-தாண்டு


இந்த விளையாட்டிற்கு கிரிக்கெட் போல டெக்னிக் தேவை. விளையாட்டுப் பொருட்கள் சுமார் நாலு அங்குல நீல கட்டை, இருப் பக்கமும் கூறாக சீவப் பட்டிருக்க வேண்டும், அதை நெம்பி அடிக்க சுமார் ஒன்னரை அடி நீளமுள்ள மெல்லிய உருட்டுக் கட்டை.

இரு அணிகளில் நான்கு முதல் ஆறு பேர் வரை ஆடும் ஆட்டம். முதலில் பூவா தலையா போட்டபின்பு, வென்ற அணி கில்லி அடிக்கும், மற்றைய அணியினர் அதை கேட்ச் பிடிக்க வேண்டும் இல்லை கிரிக்கெட் போல தடுத்து நிறுத்தி எண்ணிக்கையின் அளவை குறைக்க வேண்டும். கேட்ச் பிடித்தால் அந்த தாண்டு பிடித்தவன் அவுட் ஆகி அடுத்தவன் அடிக்க வேண்டும். இல்லையென்றால் அடித்தவன் தாண்டை குறுக்காக வைத்து எதிர் அணியினர் அதில் குறி பார்த்து அடிப்பார்கள், கில்லி தாண்டில் பட்டால் அவன் கிரிக்கெட் போல போல்ட் அவுட். இல்லையென்றால் அந்த இடத்திலிருந்து அவன் மூன்று முறை தூர தேசத்திற்கு அடிப்பான், அங்கிருத்து அவன் குத்துமதிப்பாக நானூறு என்று கேட்பான். பீல்டிங் சைடு அதை அளக்க வேண்டும் (தாண்டினால், இரு முறை தட்டி அடித்தால் கில்லியினால் அதை அளக்க வேண்டும்), அளவு சரியாக இருந்தால் அவனுக்கு அந்த எண்ணிக்கை ஏறும் . இதில் ஸ்கோர் போச்சா ஆட்டம் போச்சா என்ற வினோத விதி முறைகளும் உண்டு.

குச்சிப் ப்ளே

தேவையானப் பொருட்கள், சுமார் மூன்று அடி நீளமுள்ள ஒரு கம்பு.
ஆறு முதல் எட்டுப் பேர்கள் விளையாடும் ஆட்டம்.
முதலில் ஷா பூ த்ரீ போட்டு, எஞ்சியவன் தனது இரு கைகளையும் உயரத் தூக்கி, ஆட்காட்டி விரலுக்கும் கட்டை விரலையும் ஆங்கில எழுத்து வி போல வைத்து குச்சியை தளர்வாகப் பிடிக்க வேண்டும். ஒருவன் தன கம்பை இடையில் வைத்து அதை லாவகமாக தூர தள்ளி விடுவான். மற்றவர்கள் அதை தாம்பரத்திலிருந்து தண்டையார் பேட்டை வரை தள்ளிவிடுவார்கள். குச்சியை இழந்தவன் மற்றவர்களை குச்சி கல்லில் வைக்காதப் பொழுது தொட வேண்டும். அப்படிதொட்டால் அவன் அவுட். அடுத்த பலி அவன் தான். குச்சி எங்கிருக்கிறதோ அங்கிருந்து கிளம்பிய இடத்திற்கு நொண்டிக் கொண்டே வரவேண்டும். நாம் முதலில் மாட்டினால் அம்மா கூப்பிடுகிறாள் என்று “எஸ்” ஆகி விடுவது உத்தமம்.

பம்பரம்-(டாவால அபிட்)

இதில் இரண்டுக்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் உண்டு. ஒன்று பால் குடம், மற்றது தலையேறி.

பால்குடம்: எல்லோரிடமும் பம்பரமும் சாட்டையும் அவசியம். பம்பரம் புதியதாகவும், ஆணி கூறாகவும் இருந்தால் நல்லது. எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். ஒரு வட்டத்திற்குள் ஒரு பத்து பதினைந்து கூழாங்கற்களைப் போட்டு முதலில் அதன் மேல் பம்பரத்தை குத்துபோல் விடவேண்டும், ஒரு கல் வெளியே வந்தாலும் எல்லோரும் அபிட் எடுக்கவேண்டும். அபிட் என்பது பம்பரத்தை சுழல விட்டு அதை லாவகமாக சாட்டையால் நெம்பி கையில் பிடிக்க வேண்டும். கடைசியாக அபிட் எடுத்தவன் தான் முதல் பலி. இப்பொழுது அவன் பம்பரம் வட்டத்தின் நடுவே வைத்து அதன் மேல் எல்லோரும் பம்பரத்தை குத்துவார்கள். இப்பொழுதுதான் ஆக்கர் என்ற சமாசாரம் வரும். குத்து வாங்க வாங்க பம்பரம் சொறிநாய் போல் ஆகிவிடும்.

தலையேறி: இது ஒரு வினோதமான விளையாட்டு, வட்டத்திற்கு பதில் இருபத்து அடி இடைவெளியில் இரண்டு கோடுகள். ஷா பூ த்ரீயில் எஞ்சியவன் பம்பரம் முதல் பலி. அவன் பம்பரம் ஒரு கோட்டிலிருந்து இன்னொரு கோட்டுக்கு ஆக்கர் குத்தியே அலைக்கழிக்கப்படும். இதிலும் அபிட், டாவால்ல அபிட் போன்ற வினோத சொற்களும், வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிபேட்டை சொற்களும் அடங்கும்.

இதைதவிர மேலும் மங்காத்தா (சீட்டுகட்டு), பேந்தா (கோலிகுண்டு) விளையாட்டுக்களும் வழக்கொழிந்துப் போய் விட்டன. இந்த மாதிரி விளையாட்டுக்கள் இப்பொழுது யாரவது விளையாடுகிறார்களா என்பதற்கு சான்றுகள் இல்லை.

Wednesday 11 November 2009

தேடல்


வாழ்கையில் தேடல் எப்பொழுது தொடங்குகிறது. யோசித்துப் பார்த்தால், ஒரு உயிர் ஜனிக்கும் பொழுதே தொடங்குகிறது.

பிறந்த சிசு பாலுக்கு மடி தேடல்,
வளரும் பொழுது அன்பு தேடல்
அரவணைப்புத் தேடல்,
பிறகு அறிவுத் தேடல்
சிறுவயதில் நட்புத் தேடல்,
தொடர்ந்து அறிவுத் தேடல்
பிழைக்க வேலைத் தேடல்
தொடரும் பொருள் தேடல்
தேடிய பொருளை பாதுகாக்க இடம் தேடல்
உற்ற துணைத் தேடல்
துணையிடம் அன்புத் தேடல்
ஓயாது நிம்மதித் தேடல்
இன்ன பிறத் தேடல்கள்.

பிறக்கு குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் தேடல்
தொடர்ந்து படிக்க பொருள் தேடல்
வளர்ந்தவுடன் அவர்களுக்கு வேலைத் தேடல்
அவசியமிருந்தால் அவர்களுக்கு துணைத் தேடல்
தேடல் முடியும் வேளையில் தனியாக விடப்பட்டு
தொடரும் அன்புத் தேடல்கள்

எத்தனைத் தேடலடா
என்றும் முடிவதில்லையடா.
நரைக் கூடிக் கிழப் பருவம்
வந்து நாளை என்னும் பொழுதும்
தொடரும் துணைத் தேடல்.

தொழிலும் பெயர் பொருத்தமும்


சமீபத்தில் மின்னஞ்சலில் வந்ததிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.

பாரசீகர்களும், ஆங்கிலேயர்களும் தங்கள் செய்யும் தொழிலை குடும்பப் பெயர்களாக வைத்திருப்பார்கள். உதாரணம்: ஜேம்ஸ் குக், ஜான் பார்பேர், டவே ஸ்மித்.

தமிழில் அது போல பெயர் பொருத்தம் ஒரு கற்பனை, நகைச்சுவைக்கு மட்டுமே, (யார் மனதையும் புண்படுத்த அல்ல)

மருத்துவர்---------------------வைத்யநாதன்
பல் மருத்துவர்-----------------பல்லவன்
கண் மருத்துவர்----------------கண்ணாயிரம்
நரம்பியல் நிபுணர் -------------நரசிம்மன்
வக்கீல்------------------------கேசவன்
வட இந்திய வக்கீல்-------------பஞ்சாபகேசன்
நிதியாளர்----------------------தனசேகரன்
இருதய நிபுணர்-----------------இருதயராஜ்
குழந்தைநல மருத்துவர்---------குழந்தைசாமி
மனநல மருத்துவர்--------------மனோ
பாலியல் நிபுணர்----------------காமேஸ்வரன்
கல்யாண புரோக்கர்-------------கல்யாணசுந்தரம்
காது மூக்கு தொண்டை நிபுணர்--நீலகண்டன்
சர்க்கரை நோய் மருத்துவர்------சக்கரபாணி
ஹிப்நோடிச்ட்------------------சொக்கலிங்கம்
மூளை நிபுணர்-----------------புத்திசிகாமணி
மேஜிக் நிபுணர்-----------------மாயாண்டி
கட்டிடக் கலை வல்லுநர்--------செங்கல்வராயன்
வெள்ளை அடிப்போர் ----------வெள்ளைச்சாமி
வானிலை ஆய்வாளர்-----------கார்மேகம்
விவசாயம்---------------------பச்சையப்பன்
தலையாரி---------------------பூமிநாதன்
முடிவேட்டுவோர்---------------கொண்டையப்பன்
பிச்சைக்காரர்-------------------பிச்சைமூர்த்தி
ஒப்பனைகாரர்------------------சிங்காரம்
பால்காரர்----------------------பசுபதி, பால்ராஜ்
நாய் பயிற்சியாளர்--------------நாயகன்
பாம்பாட்டி----------------------நாகராஜ், நாகப்பன்
மலையேருவோர்----------------ஏழுமலை
வேல் எரிவோர்-----------------வேலாயுதம்
உயரம்தாண்டுவோர்-------------தாண்டவராயன்
பளு தூக்குவோர்----------------பலராமன்
பேட்ஸ் மேன்------------------தான்டியப்பன்
பௌலேர்----------------------பாலாஜி
கார் டிரைவர்-------------------பார்த்தசாரதி
அரசியல்வாதி------------------பொய்யாமொழி (பொய்யெமொழி)

Tuesday 10 November 2009

சுகுணா அறையில் சுண்டெலி


இந்த அனுபவக் கதையில் இரண்டு பிரதான பாத்திரங்கள் தான், மற்றவரெல்லாம் கௌரவத் தோற்றமே. சுகுணா தான் கதாநாயகி, இரண்டாவது பாத்திரமான சுண்டெலி அல்பாயுசில் “அபிட்” ஆகப் போகிறது.

சுகுணா குடும்பத்தினர் எங்கள் காலனியில் புதியதாக குடிவந்தவர்கள். அவளுடைய தந்தை போலிஸ் கமிஷனர் ஆபீஸில் வேலை பார்க்கிறார். சுகுணா பார்க்க ரேஸ் குதிரை போல இருப்பாள். ஏத்தம் கொஞ்சம் அதிகம். அப்பாவின் செல்லம் வேறு. எங்களுக்கெல்லாம் தலைவலியாக வந்து சேர்ந்தாள்.

நாங்கள் தெருவுக்கு குறுக்கே கிரிக்கெட் பிட்ச் போட்டு எதிர் வீட்டு சுவற்றில் கரி கோட்டில் விக்கெட் வரைந்து இத்தனை வருஷங்களாக ஆடிக்கொண்டிருக்கிறோம். இவள் வந்தவுடன் மற்றப் பெண்களுக்கும் எங்களை எதிர்க்க ஓரளவுக்கு துணிவு வந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். வேணுமென்றே நாங்கள் கிரிக்கெட் ஆடும் இடத்தில் தரையில் கரிக்கோடிட்டு பாண்டி ஆடுவாள். எங்களுக்கு கிரிக்கெட் ஆட வேறு சரியான இடம் கிடையாது. எவ்வளவோ செய்து பார்த்து விட்டோம், அவள் மசியவில்லை. அவளை ஒரேயடியாக எதிர்க்க எங்கள் யாருக்கும் துணிவில்லை, அவள் அப்பா போலிஸ் கமிஷனர் ஆபீஸில் வேலை பார்ப்பதால் எங்களுக்கு பயம்.

மொத்தத்தில் அவள் வந்ததில் எங்களுக்கு நிம்மதி போய் விட்டது. கோடை விடுமுறையில் என் வீட்டில் எல்லோருமாக சேர்ந்து கேரம் விளையாடுவோம். அதற்கும் என் தங்கையைத் தூண்டிவிட்டு ஆப்பு வைத்து விட்டாள். நாங்கள் வரும் முன்பே கேரம் போர்டை எடுத்து வைத்துக் கொண்டு ஆட அரம்பித்து விடுவார்கள், அவர்கள் ஆட்டம் முடிந்தவுடன் “ஸ்ட்ரைகரை” ஒழித்து வைத்து விடுவார்கள். என் தங்கையிடம் நான் கேட்டால் கூட இவள் குறுக்கே பூந்து கும்மி அடித்து விடுவாள்.

சுகுணாவின் அராஜகத்தை ஒழிக்க நாங்கள் எவ்வளவு பாடு பட்டும் ஒன்றும் வழித் தெரியவில்லை. அன்றும் வழக்கம் போல் நாங்கள் கிரிக்கெட் ஆடத் தொடங்குமுன் அவள் தன் தோழிகளுடன்(என் தங்கை சனியனும் கூட) வந்து பாண்டி ஆட ஆரம்பித்து விட்டாள். நாங்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிக்கொண்டிருந்த நேரம், அவள் சற்று விளையாட்டை நிறுத்தி, மற்ற பெண்களை விளையாடச் சொல்லிவிட்டு அவள் வீட்டிற்கு போனாள்.
சிறிது நேரத்தில் அவள் வீட்டிலிருந்து வீல் என்று ஒரு அலறல். அவள் அம்மாவும் கூட சேர்ந்து "வீலவே", மணி அவர்கள் வீட்டிற்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடினான், நாங்கள் எல்லோரும் பின் ஓடினோம். என்ன ஆச்சு ஆண்டி, என்று கேட்டுக் கொண்டே நாங்கள் சுகுணா இருந்த ரூமுக்கு சென்றோம், அவள் இன்னும் "வீல்" அலறலை விடவில்லை.
நாங்கள் அவள் அறையில் நுழைந்த பொழுது எங்களது கதா நாயகன் "சுண்டெலி" மணியின் காலின் கீழ் கத்திரிக்காய் துவையல் போல் கிடந்தது. கதாநாயகன் அறிமுகம் முன்பே "அபிட்".

ஆனால் அடுத்தது நாங்கள் கண்ட காட்சி சென்சார் போர்டில் தப்பித்த காட்சி போல் இருந்தது. சுகுணா கட்டிலின் மேல் ஏறி ஒரு காலை ஜன்னலில் வைத்துக் கொண்டிருந்தாள். அவளது "ஸ்கிர்ட்" (குட்டை பாவாடை) அபாய எல்லையைத் தாண்டிவிட்டது. அவளது நிலைமை புரிய அவளுக்கு சில கணங்கள் பிடித்தது.

இப்பொழுதெல்லாம் சுகுணா எங்கள் பிட்சிற்கு போட்டியாக வருவதில்லை. மேலும் அவள் வந்தாலே நம்ம பசங்க "சுண்டெலி" என்று குரல் விடுவார்கள்.

Monday 9 November 2009

ஹைக்கூ - பாகம் 3






காதல்

அடையும் வரை ஆனந்தம்,
அடைந்த பின் பூகம்பம்,
காதல்.

ஏட்டுச் சுரைக்காய்


ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது,
எவன் சொன்னது, மனைவி கொடுத்த,
காய்கறிப் பட்டியல்.


உறக்கம்


நாடும் பொழுது நழுவும்,
தவிர்க்கும் பொழுது தழுவும்,
உறக்கம்.


மூட நம்பிக்கை


மழையை எதிர்நோக்குதல் நம்பிக்கை
மழை வர மாக்களை மணந்தால்
மூட நம்பிக்கை.


கடன்காரன்

கன்னியின் மேல் உள்ள காமத்தினால்
கடன்பட்டுப் போனான்
காதலிடம்.