Thursday 28 June 2012

ஒலிம்பிக் விளையாட்டு நகைச்சுவைகள்


ஜோக் 1
ஒலிம்பிக்கில் "ஃபென்சிங்" விளையாட்டில் பங்குபெரும் ஒரு ஜெர்மனிய வீரரும், ஒரு பிரான்ஸ் நாட்டு வீரரும், ஒரு ஹங்கேரிய வீரரும் தங்கள் பெருமைகளை பேசிக்கொண்டனர். யோவ் சும்மா பேசினா போராதய்யா சும்மா அவன் அவன் திறமையை காமிங்க என்றார் ஜெர்மானிய வீரர்.
உடனே பிரான்ஸ் வீரர் தன்னுடைய வாளை உருவி அங்கே பறந்து கொண்டிருந்த ஒரு ஈயை நோக்கி வீசினார். ஈ சரியாக இரண்டு துண்டாக விழுந்தது.

உடனே ஜெர்மனிய வீரர் தன் வாளை சுழற்றி மற்றொரு ஈயின் மீது சுழற்றி வீசினார், ஈ தன் இரண்டு இறக்கைகளும் துண்டிக்கப்பட்டு கீழே விழுந்தது.

இப்பொழுது ஹங்கேரிய வீரர் தன் வாளை எடுத்து மற்றொரு ஈயின் மேல் இரண்டு மூன்று முறை வீசினார். ஆனால் ஈ பறந்து கொண்டே இருந்தததை பார்த்து மாற்ற இருவரும் நக்கலாக சிரித்தனர்.
ஹங்கேரிய வீரர் தன் வாளை கீழே போட்டு தன் இரு கைகளையும் வெற்றி என்று உயர்த்தினார். 

“இனி அந்த ஈயால் இனப்பெருக்கம் செய்யமுடியாது” என்றார் ஹங்கேரிய வீரர்.

ஜோக் 2
அந்த வீரர் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்று விட்டு ஒரே புலம்பல். கூட இருந்தவர் "யோவ் ஏன் புலம்புறீர் உனக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது என்று மகிழ்ச்சியாய் இரு" என்றார்.

அதற்கு "யோவ் வெள்ளிப்பதக்கம் என்னான்னு தெரியாம பேசாதே.
அதற்கு அர்த்தம் நீ கிட்டத்தட்ட வென்றுவிட்டாய், ஆனால் வெல்லலை, மேலும் தோத்துப்போன கேனயன்களில் நீதான் முதல் என்று சொல்லாம சொல்லுறாங்க, அதான்யா புலம்புறேன்".

ஜோக் 3
அது சுத்தி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்று.
ஒரு ரஷ்ய வீரர் முதலில் எறிந்தார் மிக அதிக தூரம் கிட்டத்தட்ட உலக சாதனை எண்பத்தைந்து மீட்டர்களை எட்டிவிட்டார். உடனே நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அவரின் சாதனையைப்பற்றிக் கேட்டனர். அதற்கு நான் ரஷ்யா ரானுவப்படையில் இருக்கிறேன் அங்கு எனக்கு கற்று கொடுக்கப்பட்ட ஒழுக்கமே காரணம் என்றார்.

அடுத்ததாக ஒரு பல்கேரிய நாட்டு வீரர் எறிந்தார் அவர் முன்பு வீசிய ரஷ்யா வீரரை வீட இரண்டு மீட்டர் அதிகம் எறிந்தார். உடனே நிருபர்கள் அவரை மொய்த்தனர். அதற்க நான் விவசாய குடும்பத்திலிருந்து வருகிறேன். விவசாயம் செய்து என் உடம்பு தெம்பு ஏறியதே காரணம் என்றார்.

மூன்றாவதாக வந்த இங்கிலாந்து வீரர் அலட்சியமாக எறிந்து நூறு மீட்டரை எட்டினார். அவருக்கு தங்கம் கிடைத்தது, இப்பொழுது அவரை சுற்றி ஒரே நிருபர்கள் கூட்டம், அவரது வெற்றிக்கு காரணம் கேட்டனர்.
அதற்கு அவர் “நான் ஒரு வாழைப்பழ சோம்பேறிக் குடும்பத்தில் பிறந்தவன். எங்களிடம் யாராவது வேலை செய்ய சொல்லி சுத்தி கொடுத்தால் அதை கண்காணாமல் எறிந்து விடுவோம்” என்றார்.

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

rajamelaiyur said...

கலக்கல் நகைசுவைகள்

rajamelaiyur said...

கடைசியில் உள்ள இங்கிலாந்து வீரன் நாம சாதி பய போல ...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ராஜா.

வெளங்காதவன்™ said...

ஹா ஹா ஹா...

:-)

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன். நன்றி சார் !

”தளிர் சுரேஷ்” said...

அட்டகாசமான நகைச்சுவைகள்! பகிர்விற்கு நன்றி!

கும்மாச்சி said...

தனபாலன், சுரேஷ் வருகைக்கு நன்றி.

Unknown said...

ஹஹா....செம!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஸ்குமார்

JR Benedict II said...

Super bash.. 1st joke sema..

JR Benedict II said...

1st joke sooopar bash..

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.