Monday 26 August 2013

கலக்கல் காக்டெயில்-120

பணவீக்கம் 

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போகிறது.  பொருளாதார வல்லுனர்கள் மூன்று பேர் இருந்தும் ஒன்று செய்யமுடியவில்லை. மண்ணு, புரானாப்பு, செட்டியார்  என்று பழந்தின்று கொட்டை போட்டவர்கள் முழி பிதுங்கி நிற்கின்றனர். ரூபாய் மதிப்பு சரிவை சமாளிக்க இரண்டு முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். ஒன்று பெட்ரோலியம்  மற்றொன்று தங்கம். இரண்டும் நம்நாட்டின் அபரிமித தேவைக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் ஓரளவுக்கு தங்கத்தைதான் கட்டுப்படுத்த முடியும். அதற்கு வரிவிகிதத்தை ஏற்றினாலும் இறக்குமதியை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களின் பொன்னாசைக்கு விடிவு கிடையாது.

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மூல காரணம் நம் நாட்டை சுரண்டி ஊருக்கு விற்ற "திருவாழத்தான்கள்தான்" என்பது மக்களுக்கு தெரியும்.

என்னவோ போடா மாதவா........... இன்னி தேதிக்கு சரக்கும் சோறும் கிடைத்தால் போதும்.

விசுவாசத்திற்கு வந்த சோதனை

விசுவாசம் என்றால் ஓப்பித்தான், ஓப்பி என்றால் விசுவாசம் என்று ஆத்தாவே புகழ்ந்த தேனிக்காரருக்கு அஷ்டமத்தில் சனி போல. ஆத்தா சந்தேகப்படும் படியாக ஏதோ தில்லுமுல்லு செய்திருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் போட்டுக்கொடுத்து விட்டார்களாம்.

அவர் குனிந்த குனியலுக்கு இப்பொழுது குனியவைத்து கும்முவார்கள் போலும். ஓப்பிக்கு ஆப்பு ரெடி.

குனிந்தாலும் பதவி நிரந்தரமில்லை என்று புரிந்தால் போதும்.

கேப்டன் 61

கேப்டனுக்கு 61 வயசாகுதான். எல்லா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

ராகுல்காந்தியும் வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறாராம்.என்ன அனுப்பித்திருப்பார், "அறுபத்தியோராவது வயதில் அடி எடுத்து வைக்கும் கேப்டனுக்கு ஏன் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்றா?


ரசித்த கவிதை

யாழ்நகரில் என் பையன்
கொழும்புவில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் ஃப்ரான்க்போர்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஓஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக்குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையனையா?
பாட்டனார் பயன்படுத்தி
பழமரங்கள் நாட்டிவைத்த
தோப்பை அழியவிட்டு
தொலைதேசம் வந்தவன் நான்.
என்னுடைய பேரனுக்காய்
எவன் வைப்பான் பழத்தோட்டம்?
-----------------------------------------------------ஜெயபாலன்

ஜொள்ளு




 



Follow kummachi on Twitter

Post Comment

Friday 23 August 2013

சிறு சிறு கதைகள்- படித்ததில் ரசித்தது

சுஜாதாவின் சிறு சிறு கதைகள் படித்துக்கொண்டிருந்தேன். ஐம்பத்தைந்து வார்த்தைகளுக்குள் சிறு சிறு கதைகள் எழுதவேண்டும் எனபது விதி. ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் எழுபதுகளில் இவை ஒரு பக்கக்கதை என்று வரும். சில மிகவும் சுவாரசியமாக இருக்கும். அதுவும் கடைசி வரியில் அந்தத்  திருப்பம் வித்யாசமாக இருக்கும்.

பதிவர்களில் அருணா செல்வம் இது போன்ற ஒரு பக்கக்கதைகள் ஒரு நிமிடக்கதைகள் என்ற தலைப்பில் எழுதுகிறார். நன்றாகவே எழுதுகிறார். வேறு யாரும் இது போல்  எழுதுகிறார்களா என்று பார்க்கவேண்டும். சொல்லவந்த கதையை தேவையற்ற வர்ணனையை தவிர்த்து எழுதுவது ஒரு பெரிய சவால்.

சுஜாதாவின் இந்தப்புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த பொழுது கவிதை வடிவில் ஒரு சிறு சிறு கதையை படிக்க நேர்ந்தது. அதை மிகவும் ரசித்தேன். ரா. ஸ்ரீநிவாசன் அவர்கள் "கணத்தோற்றம்" என்ற கவிதைத் தொகுப்பில் "பொட்டு" என்ற தலைப்பில் சிறு சிறு கதை (கவிதை வடிவில்) நீங்களும் படிக்க.

"எண்ணெய்விட்டுச் சீவிய கூந்தலில்
மணக்கத் தயங்காது மல்லிகை 
உதட்டுச்சாயம் எடுப்பாய்த் தெரியும்
செவிகளில் தொங்கும் கம்மல் போலி 
கழுத்தில் முத்துக்கோத்த கருமணி மாலையோடு
சாளரம் வைத்த ரவிக்கையும்  வாவென்று அழைக்கும்
வழவழவெனக் காணும் சேலைகள்தான் அணிவாள் 
வயது என்ன முப்பதுக்குள் இருக்கும்
தோள்பையில் என்னென்ன இருக்கும்?
மானிறத்துக்கோர்  மாற்றுக் குறைவாய் அவள் நிறம்
நெற்றியில்  எழுதி ஒட்டப்படவில்லை 
என்றாலும் அவளைக் கண்டால்
ஐயமறத் தெரியவரும் 
காலையில் அலுவல் நேரம் 
துவங்கும்போது அவளும் துவங்குவாள் உலாவ 
நெடுஞ்சாலையில் நடைபாதையில் 
ஆபரணப் போலிகள் விற்கும்
முஸ்தபாவிற்கு அவள் கைராசி.
ஒவ்வொரு காலையும் கல்லாபெட்டியைத் 
தொட்டுவிட்டுச் செல்ல சொல்லுவார்.
தேநீர் அருந்திய பின்பு
நின்றிருப்பாள். பேருந்து நிறுத்தம்,
அல்லாது போனால் சுரங்கப் பாதை நுழைவாயிலருகே,
பயந்து ஒளிவாள் போலீஸ்காரரைக் கண்டால் மட்டும்
குற்ற மன்றங்களில் கட்டிய அபராதத்துக்கு 
கணக்கில்லை அவள் வசம் 
சுழலும் விழிகளால் வலைகள் வீசுவாள்.
தனக்கு ஐம்பது, தங்கும் விடுதிக்கு ஐம்பது
அவகாசம் இருமணி நேரம்,
என்பதவள் நிர்ணயம் குறைந்தபட்சம்.
பேரம்படியா வாடிக்கையாளரை 
வேசிமகனென்று ஏசவும் செய்வாள். நொடிக்கோர்முறை
எச்சில்உமிழும்
கொடியதோர் பழக்கம் அவளுக்கு 
இரவில் இருப்பிடம் திரும்பும்போது 
பரிசுசீட்டுகள் தவறாமல் பெறுகிறாள்.
ஏதோ ஒன்று அவளிடம் குறைந்திருக்கக் கண்டு 
சீட்டு விற்பவன் வியப்புடன் கேட்டான்.
நெற்றிக்கு பொட்டு இட்டுக் கொள்வதில்லையா?
வெற்றிடமாய்க் காணப்பட்ட நெற்றியை விரல்களால் 
தொட்டபடி அவள் சொன்னாள் பெருமிதம் பொங்க
மரித்துவிட்ட கணவன் நினைவாய் 
பொட்டு மட்டும் இட்டுக் கொள்வதில்லை".

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 21 August 2013

பன்ச் டயலாக்ஸ் பஞ்சமின்றி கிடைக்கும்

இப்பொழுதெல்லாம் படமெடுத்து  வெளிக்கொணர படாத பாடு படவேண்டியிருக்கிறது. ஆட்சியாளர்களை எரிச்சல் கொள்ளும் வசனங்கள் வைத்தால் கேட்கவே வேண்டாம். மேலும் தமிழ் சினிமாவில் பன்ச் டயலாக் இல்லையென்றால் டாஸ்மாக் மூடிய நாளில் குடிமகர்கள்(மரியாதையை கவனிக்கவும்) போல் ஆகிவிடுவார்கள் நம் கதாநாயகர்கள். ஆதலால் யாரையும் உசுப்பிவிடாத பன்ச் (பஞ்ச) டயலாக்கிற்கு  இப்பொழுது மவுசு அதிகமாகிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் நம்மால் முடிந்த உதவியை தமிழ் கலையுலகிற்கு அளிக்க  ரூம் போட்டு கவுந்து படுத்து யோசித்தது.

தல, தளபதி, சுப்ரீம், சூப்பர், ஒலக்கை நாயகன் இன்னும் லிட்டில் சூப்பர், பிக் சூப்பர், புரட்சி, பவர், என்று எல்லா ஸ்டார்களும் உபயோகிக்க நம்மால் முடிந்த கலையுலக சேவை.

அதிகமா கொதிச்ச ரசமும், குறைவா கொதிச்ச சாம்பாரும் ருசிச்சதா சரித்திரம், பூகோளம் எதுவமே இல்லை.

இது இரண்டு வழிப்பாதை  எப்படி வேணுமானாலும் போகலாம் ஆனால் திரும்பி வரமுடியாது.

டேய் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டுன்றேயே ஆண்ட்ராய்டா உன்னைப் பெத்தது , உங்க அம்மாடா.

கண்ணா நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காமப் போனாலும் முட்டிக்கப்போறது நீதான்.

அணில் பெருச்சாளியாகலாம் ஆனா ஆமை வடையாகுமாடா?

டேய் என்னையெல்லாம் பார்க்காம இருந்தா பிடிக்கும் ஆனால் என்ன பார்க்க பார்க்க எவனுக்குமே பிடிக்காது டா.

டேய் நீங்களெல்லாம் மணலுலதான் கயிறு திரிப்பீங்க நாங்க கயிறுல கோமணம் கட்டுவோம்.

எச்ச்சச்ச்ச எச்ச்சச்ச்ச கச்ச உம்மேல துப்புவேண்டா எச்ச.

கடவுள நேரா பார்த்தவனும் இல்லை, கலக்கல கப்புன்னு குடிச்சவனும் இல்ல.

நாங்க எல்லாம் தப்பு பண்றவங்க இல்லை தப்புகள் பண்றவங்க புரிஞ்சுக்க.

நீங்களெல்லாம் கரண்டிய சாம்பார் ஊத்த தான் உபயோகிப்பிங்க  நாங்க அதால அடி, குத்து, உதை எல்லாம் வாங்குவோம்.

உன்ன பார்க்குற பிகர நீ பார்த்தா நீ தேத்தற பிகர இன்னொருவனும் தேத்துவான்.

டேய் நான் யாரு தெரியுமா எங்க அப்பா அம்மாக்கு பிள்ளைடா, அண்ணனுக்கு தம்பிடா, தங்கச்சிக்கு அண்ணன்டா.


ஐ ம் சிட்டிங்............, ஐ ம் டாக்கிங்................ நீ ஸ்லீப்பிங் ............. 

டாஸ்மாக் என்பது  உன்னை தேடி வருவதில்ல நீ தேடிப்போறது.

சாக்கடையில தலைய விட்டவனும் இல்லை டீக்கடையில பொறையை சுட்டவனும் இல்லை.

இன்னும் வேண்டுமென்றால் தயாரிப்பாளர்கள் இருபது கோடி ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாகவும், எ, பி, சி ஏரியா உரிமையும் தந்தால் மல்லாக்கப்  படுத்து யோசித்து கதாநாயகனின் தரத்திற்கு ஏற்ப எழுதிக் கொடுக்கப்படும்.

தொடர்புகொள்ள கொருக்குப்பேட்டை கும்மாச்சியை  அணுகவும்,

முகவரி 

பஞ்ச டயாலாக் கிங் கொருக்குபேட்டை கும்மாச்சி
டாஸ்மாக் இல்லம்
டுபாக்கூர்  குறுக்கு தெரு 
பேமானி நகர் 
பக்கிபுரம் 
சென்னை




.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 20 August 2013

நாட்(டி)டு நாய் கற்பழிச்சிடிச்சு சார்

கோவை கவுண்டன் பாளையம் சரவணா நகர் போலிஸ் ஸ்டேஷனில் வந்த விபரீத கம்ப்ளைன்ட் இது.

எப்படியெல்லாம் சண்டை போடுறாங்கப்பா..........


ஜாதி பிரச்சினை நாய் வரைக்கும் வந்திடுச்சு போல.

ஜாதி கட்சிகள் இதை கண்டுகொண்டார்களா தெரியவில்லை.

எடுராஅறிவாள!!!!!!!!!போட்டுத் தள்ளுடாஅந்த கீழ்சாதி நாய!!!!!!!!!!!!.
நா.பாளையம் : கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் கீழ்தளத்தில் உள்ள வீட்டினர் வெளிநாட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்கியது என்பதால் மிக பத்திரமாக எப்போதும் கட்டியே வைத்திருப்பார்கள். மேல் தளத்தில் உள்ளவர்கள் நாட்டு நாய் ஒன்றை வளர்க்கின்றனர். நேற்று கீழ் வீட்டுக்காரர் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பினார். தங்கள் வீட்டு நாயும் மேல் வீட்டு நாட்டு நாயும் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கம்பை எடுத்து நாட்டு நாயை சரமாரியாக அடித்தார். அது அலறும் சத்தம் கேட்டு, மேல் வீட்டில் இருந்த பெண் இறங்கி வந்தார். அவருக்கும் கீழ் வீட்டு உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘‘நான் வளர்ப்பது ஜாதி நாய். சாதாரணமாக சோறும் குழம்பும் ஊற்றி வளர்க்கவில்லை. மட்டன் போட்டு வளர்க்கிறேன். சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பாட்டி விடுகிறேன். ஊர் மேயும் உன் நாட்டு நாய்க்கு என் ஜாதி நாய் கேட்கிறதா?’’ என்று கத்தினார்.

அந்த பெண்ணும் விடவில்லை. ‘‘நாய்கள் அப்படிதான் இருக்கும். ஜாதி நாய் என்றால் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியதுதானே. வெளியே விட்டது உன் தப்பு. ஊசி இடம் கொடுக்காமல் நூலு நுழையுமா?’’ என்றார். ஒருமையில் பேசிக்கொண்டதால் மோதல் வலுத்தது. கூட்டம் கூட ஆரம்பித்தது. இருவரும் நாய்களுடன் துடியலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். நாட்டு நாய் மீது கற்பழிப்பு வழக்கு போட வேண்டும் என்று இவர் கூற.. நாட்டு நாயை தாக்கிய கீழ்வீட்டு ஆசாமி மீது தாக்குதல் வழக்கு போட வேண்டும் என்று அந்த பெண் கூற.. ஸ்டேஷனே பரபரப்பானது. இந்த வினோத வழக்கால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சமரச பேச்சு நடத்தியும் பலனில்லை. நாய் பிரச்னையை இதோடு விடப்போவதில்லை என்று புறப்பட்ட இரு தரப்பினரையும் இன்றும் போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள்.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=5337#sthash.il4l3EHQ.dpuf

Follow kummachi on Twitter

Post Comment

Monday 19 August 2013

கமல் ஒப்பனா அழுதாரு

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதலங்களான மூஞ்சி புத்தகத்திற்கும் ட்விட்டருக்கும் நல்ல மௌசு. வெங்காயம், தலைவா என்று அவரவர் பிரித்து மேய்ந்து விட்டனர்.

இந்த வாரம் கல்லாகட்டிய கீச்சுகள்



அந்தத் திருமுருகன் மட்டும் கைல கிடைக்கட்டும் மகனே சங்கு தான்!சீரியலா எடுக்குறே.... . ங்கொய்யால#நாத்தசுரம்----ட்வீட்டர் எம்.ஜி.ஆர் 

பாக்குடன் பேச்சுவார்த்தை கிடையாது-மன்மோகன்# பாக்கோட பேச்சுவார்த்தை இல்லாட்டி வெற்றிலையோட இருக்கா தல...---------ரஹீம் கசாலி 

உங்க கிட்ட ட்வீட் போட்டுட்டு ஆர்டி வாங்குறதுக்கு பதிலா ,தெரு முனையில பிச்ச எடுத்தக் கூட ஆறு டீ வாங்கி குடிக்கலாம்------------யாரோ

கமல் ஓப்பனா அழுதாரு அணில் வீட்டுக்குள்ள, மத்தபடி ரெண்டு படத்திலேயும் கட்டிங்ஸ் உண்டுதானே? எது மரணமொக்கைன்றதுல வேணா வித்தியாசம் இருக்கலாம்---------கவிராஜன் 
படம் வெளியே வருதாமே ஒரு வேலை இப்படித்தான் பம்மியிருப்பாரோ?

செத்த பாம்பை அடிக்கிறது மகா தப்பு..இதுக்கு மேலயும் தலைவா படத்தை கலாய்க்காதீங்கப்பா..!!----------------சுபாஷ் 

கண்டவனிடம் திட்டு வாங்கி அலுத்துவிட்டது இனி கட்டியவனிடம் திட்டு வாங்கலாம்....-------------நந்து டாக்ஸ் 

இனி 500 ரூவா மொய் வெச்சாத்தான் வெங்காய பச்சடியே வெப்பானுங்க போல கல்யாணத்துல! எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்!------------ஷிவா 

டைம் டு லீட் போச்சு..that துபாய் எங்க இருக்கு.? அது ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கு.! moment.------------------டக்கால்டி

புலி கதைன்னா, புலி மட்டுமே வர்ர மாதிரி கதை சொல்லு, மத்த மிருகங்கள்லாம் வரக்கூடாதுங்கிறா மகள். #உட்கார்ந்து யோசிப்பா போல---------சுதா 

வெங்காயம் தவிர மற்ற காய்கறிகள் விலை குறைவால் சரவணபவனில் விலைக்குறைப்பு போர்டு .. அவ்ளோ நல்லவங்களா நீங்க.---------கிருஷ்குமார்

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 15 August 2013

ஐயோ ...............தலைவா!!!!

முதலில் எல்லோருக்கும் சுதந்திர தினநல்வாழ்த்துகள்........

வீட்டுக்காரம்மாவின் வேண்டுதலுக்கிணங்க அந்தப் படத்த பார்த்து தொலைச்சிட்டேன். ரொம்ப கூட்டமா இருக்கும் அதால இரண்டரை மணி காட்சிக்கு டிக்கட் எடுத்திடலாமுன்னு சொன்னதால பதினொன்றை மணிக்கு சிட்டி செண்டர் போனோம். அங்கே பதினொன்றை மணிக்கே ஒரு காட்சி இருக்கு என்றவுடன் டிக்கட் எடுத்தேன். எந்த சீட்டு வேண்டும் என்று பதிவாளர் கேட்க எங்கே வேண்டுமேன்றாலும் தருகிறேன் என்றாள்.கடைசி ரோவில் இரண்டு சீட்டு வாங்கிக்கொண்டு போய் அமர்ந்தோம்.

எங்களுக்கு முன்பே ஒருவர் வந்து வேறு ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார். நல்ல அணில் குஞ்சு போலும்.  படம் ஆரம்பிக்கும் முன் மேலும் மூவர் வந்தனர். ஆக மொத்தம் தியேட்டரில் ஆப்பரேட்டருடன் சேர்த்து ஏழு பேர்.  ஆனால் படம் பார்த்தது ஆறு பேர்தான். ஆபரேட்டர் ஆட்டோவில் போட்டுவிட்டு பில்லிப்பினியுடன் கடலை போட போய்விட்டார்.

இனி தலைவா படம் பற்றி. இது விமர்சனம் இல்லைங்க்னா..................ஏன் என்றால் படத்தை இதுக்கும் முன்பே பல பேரு அக்குவேறு ஆணிவேரா பிரிச்சு கிழித்து தொங்கவிட்டுட்டாக. ஆதலால் இனி கிழிப்பதற்கு ஒன்று இல்லை.

படத்தில ஆரம்பத்திலே பெரிய சுதந்திர. புரட்சி வீரர்களை எல்லாம் பேக்டிராப்பில் போட்டு நல்ல மரியாதை!!!!!!!!!!!!!!!? கொடுத்திருக்கிராறு இயக்குனர்.

முதலில் இயக்குனருக்கு ஒரு கேள்வி?  நாயகன், பாட்ஷா, தேவர்மகன் என்று கதையை சுட்டு உல்டா பண்ணி ஒரு கதையை ரெடி பண்ணி அடுத்த முதல்வர் கனவில் இருப்பவருக்கு அல்வா கொடுத்திருக்கீங்களே, உங்களுக்கு கூச்சநாச்சம் இல்லையா?

அவிக அப்பாவிடம் கதை சொல்லியிர்ப்பீக போல, அவரு இப்போ தலைவா, தலைவன்னு எத சொன்னாலு நாலுகாலில் குனிந்திடுவார்.

உங்க ஹீரோவிற்கு நடனம் நல்லா வரும். அதையாவது சரியாக உபயோகப்படுத்தி இருக்கலாம். அவருக்கு போட்டி என்று வைத்து ஒரு சொதப்பல் நடனம். அவர் இதை விட நல்ல நடனம் பல படங்களில் ஆடியிருக்கிறார்.

படத்தில அரசியல் கிடையாதுதான். ஓட்டுப்போடுங்க, இலவசத்தை கிண்டல் அடிக்கிற ஸீன் எல்லாம் சத்தியமா கிடையாது. ஒரே ஒரு சீன்ல "உன்னிய மாதிரி (தலையை ஆட்டிக்காட்டி) ஆடினவங்கதான் இப்போ முதன் மந்திரி" என்கிறார். இதுக்கெல்லாம் அம்மா காண்டாகமாட்டாங்க.

இடைவேளை வரைக்கும் படம் நத்தை வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. சரி இண்டர்வல் அப்புறம்  பயங்கர பாஸ்டா போவும்போல என்று நினைத்தால் அதிலும் மண்ணை அள்ளிப்போட்டுட்டாக. 

சத்யராஜ் அபீட் ஆனவுடன் நம்ம தளபதி தலைவா ஆகுறாரு. தக்காளி சத்தியமா இந்தக்கதையை வேற டைரடக்கரு இன்னும் நல்லாவே செய்திருப்பாரு. ஒரு எழுச்சியோ இல்லை ஒரு பில்ட்அப்போ சத்தியமா இல்லை.

படத்தின் இறுதியில் வரும் அந்தப்பாட்டு "வாங்கன்ன வணக்கம்னா" உண்மையான விஷுவல் ட்ரீட்டுதான், ஆனால் அதுமட்டும்தான். மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை.

எ.ஆர். முருகதாஸ் இளைய தளபதியை வைத்து துப்பாக்கி நல்லாவே செய்திருந்தார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்  அதன் திரைக்கதை.

இந்தப்படத்த அணில் குஞ்சுகள் வழக்கம்போல் விஷுவல் ட்ரீட்டு, வசூலில் சாதனை, கோயம்பேடு கோவிந்தாவில் பதினெட்டு பேர் படம் பார்த்தாக, அமெரிக்காவில ஹிட்டு, அண்டார்டிகாவில பிச்சுகிச்சுன்னு அவங்களையே அவங்க ஏமாத்தி அவுக ஹீரோவையும் வளர விடாம பண்றானுங்க.

படத்தில் உள்ள குறைகளை சொல்றவன "புழுத்த நாய் குறுக்கே போகமுடியாத அளவுக்கு" திட்டுவானுங்க.

தலைவா விற்கு எதிரி அவரும், அவர்  தந்தையும், அவருடைய ரசிகர்களும்தான். அவரு நீலாங்கரைக்கு தலைவர் ஆவதே சந்தேகம்தான்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 12 August 2013

கலக்கல் காக்டெயில்- 119

மாண்புமிகு அம்மா, புரட்சித்தலைவியை ரொம்ப பிடிக்கும் 

எதிர்கால எம்.ஜி.ஆரு தன் படம் வெளியே வராததால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருப்பது நன்றாகவே தெரிகிறது.

முதலில் இந்தப் படத்தை வெளியிடுவதில் யாரிடமிருந்து சிக்கல் என்பதே தெளிவாக தெரியவில்லை. விஸ்வரூபம் கொடுத்த பாடத்தில் கொள்ளையடிக்கலாம் என்ற மனநிலையில் டுபாகூர் விளம்பரம் செய்யப்போய் திருப்பி அடிக்கப்பாட்டதா இல்லை உண்மையாகவே அரசியல் சூழ்ச்சியா என்பது இன்னும் நமக்கு புரியாத விஷயம். இந்த பிரச்சினையை கொளுத்தியவர்களுக்கே வெளிச்சம்.

இந்த நிலையில் தான் அணிலிடமிருந்து உதிர்ந்திருக்கும் முத்துக்கள் இவை. கொடநாடு போயி நுழைவாயிலேலே திருப்பி அனுப்பப்பட்ட மானஸ்தர் ரொம்ப நல்லவருப்பா, எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு.

கூடவே ஒருத்தர் இவருக்கு சொம்படிச்ச மானஸ்தர் "உண்மை அரசர்" தகடு தகடு எங்கே என்று தெரியவில்லை.


சூனா சாமி 

சூனா சாமி தன் கட்சியை கலைத்து விட்டு "கலப்பையை" எடுத்துக்கொண்டு பா.ஜ.க வில் ஐக்கியம் ஆகிவிட்டாராம்.

சனியனை எடுத்து பனியனில் விட்டுக்கொண்டு கதைதான் இனி மோடிக்கு. மோடி வந்தால் ஈழப்ப்ரச்சினைக்கு விடிவுகாலம் என்று பேசியவர்கள், இனி அந்தப் பிரச்சினைக்கு மங்களம் பாட வேண்டியதுதான்.

மானாட மயிலாட பார்த்து...........

மானாட மயிலாட பார்த்து பொழுதைக் கழித்தவர்தான் இந்த கருணாநிதி என்று கொடநாட்டிலிருந்து அம்மா அறிக்கை விட "ஐயா" தன் பங்கிற்கு "நானே கேள்வி நானே பதில்" அறிக்கையில் அம்மா செய்த தொழிலைத்தானே அம்மையாரும் செய்தார் என்று நக்கலடித்திருக்கிறார்.

மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்படும். "பரப்பன அக்ராஹார" முடிவை வைத்து அர்ரெஸ்ட் நாடகமும் அரங்கேற வாய்ப்புள்ளது.

அம்மா கொடநாட்டிலிருந்து இன்று தனி விமானத்தில் வருகிறாராம். ரத்தத்தின் ரத்தங்கள் விமான நிலையத்தில் தவம்.

மணல் கொள்ளை

மணல் கொள்ளையில் தூத்துக்குடி ஆட்சியர் இடமாற்றம், மணல் கொள்ளை மறைப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்ப சினிமா படரிலீஸ் விவகாராம் நன்றாகவே உதவி செய்திருக்கிறது.

ரசித்த கவிதை 

காணிக்கை 

காணிக்கை செலுத்தியும்
வேண்டியதை
நிறைவேற்றுவதில்லை
தெய்வங்கள்
சாக்லேட்
கொடுத்தவுடன்
முத்தம் தந்துவிடுகிறது
குழந்தை.
--------------------------------ராஜேஷ்

கீச்சுகள் 

அவன் சத்தமில்லாமல் தான் முத்தம் கொடுத்தான், நான் அடித்த அடியில் தான் மற்றவர்கள் விழித்துக்கொண்டார்கள் #கொசுக்கடியேதான்---------நந்து talks

தேசிய கீதத்திற்கு நெளிந்து கொண்டிருக்கும் மக்கள், தெருவில் நடக்கும் சண்டைகளில் கொஞ்சமும் அசையாமல் நின்று வேடிக்கை பார்ப்பது ஆச்சர்யம்.-------------------டாக்டர் அண்ணாமலை

ஜொள்ளு 





Follow kummachi on Twitter

Post Comment

Saturday 10 August 2013

"தலைவா" வும் சில ஏன்?களும்

சமீபத்தில் தமிழ் ஊடகங்கள், மற்றும் சமூக வலைதளங்களில் ஹாட்டாக போய்க்கொண்டிருக்கும் டாபிக் "தலைவா"

இந்த படம் ஆகஸ்டு ஒன்பதாம் தேதி வெளிவருவதாக முதலில் செய்திகள் வந்தன. திடீர்னு படம் வருவதற்கு இரண்டு நாள் முன்பு படம் வெளிவருவது பற்றியை சர்ச்சைகள் தொடங்கின.

அதை தொடர்ந்து நமக்கு தோன்றிய சில ஏன்? களே இவை. விஷயம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

தலைவா படம் ஆளுங்கட்சியினரால் தடை செய்யப்படுவதாக செய்திகள் வந்தன? இதற்கு ஆளும் கட்சி சார்பில் யாரும் விளக்கம் அளிக்காதது ஏன்?

படத்தை வெளியிடும் வேந்தர் மூவிஸ் இதை ஆட்சேபிக்காதது ஏன்?

படம் வெளிவருவதில் உள்ள சிக்கலுக்கு எதிராக நடிகர் சங்கம் குரல் கொடுக்காதது ஏன்?

தயாரிப்பாளர்கள் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தலைவரான "எதிர்கால அண்ணா" எஸ்.எ.சி அரசை எதிர்த்து அறிக்கை விடாதது ஏன்?

படத்தின் கதாநாயகன் அரசை எதிர்த்தோ இல்லை பிரச்சினையை விளக்கியோ (கமலை போன்று) அறிக்கையோ இல்லை பத்திரிகையாளர் சந்திப்போ ஏற்பாடு செய்யாதது ஏன்?

வெடிகுண்டு மிரட்டல்கள் என்று செய்திகள் வந்த கூட்டத்தை அடையாளம் காணாதது ஏன்?

தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வெளியிடத் தயங்கியது ஏன்?

பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்கால அண்ணாவும் எம்.ஜி.ஆரும் அம்மாவை காண கொடநாடு சென்றபொழுது வாசலிலேயே மடக்கி அனுப்பப்பட்டது ஏன்?

குளிரடிக்குதே ஏன்?
எதிர்கால எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக அறிவாலயம் அறிக்கை விட்டது ஏன்? (கிரீஸ் டப்பாவ எப்படி உதைச்ச?)

படம் மொக்கை(மரண) என்று விமர்சனங்கள் வருவது ஏன்?

படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கில்லை என்று விளக்கமளித்துள்ளது, அப்படியானால் வரிவிலக்குதான் காரணமென்றால் கதாநாயகன் தனது சம்பளத்தில் குறைத்துக்கொண்டு படத்தை வெளியே கொண்டு வரவில்லையே ஏன்?

படம் வெளிவருவதில் உள்ள சிக்கலுக்கு காவல்துறை காரணமில்லை என்று விளக்கமளித்துள்ள நிலையில் விளம்பர போர்டுகளை அகற்றச்சொன்னது ஏன்?

ரசிகர்களுக்கு ஆளும்கட்சியை பகைத்துக் கொள்ளாமல் இருக்க அறிவுரைகள் கொடுத்தது ஏன்?

எதிர்கால எம்.ஜி.ஆருக்கு சொம்படிக்கும் சத்தியராஜ் குரல் கொடுக்காதது ஏன்?

சுப்ரீம் சொம்பு இந்த விஷயத்தில் அட்ரெஸ் இல்லாமல் இருப்பது ஏன்? 

ஓரிரு நடிகர்கள் தவிர மற்றவர்கள் மௌனம் காப்பது ஏன்?

ஒரு படம் வெளிவரவில்லை என்றால் இவ்வளவு ஆர்பாட்டம் ஏன்?

இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு ஒரு பதிவை தேற்றியது ஏன்?



Follow kummachi on Twitter

Post Comment

Thursday 8 August 2013

சினிமா விருதுகள்

சமீபத்தில் சுஜாதாவின் "தமிழ் அன்றும் இன்றும்" என்ற புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன். அதில் புறநானூறு, விமர்சனங்கள், சினிமா என்று கலந்துகட்டி எல்லா தலைப்புகளிலும் எழுதியிருந்தார். அதில் சினிமா விருதுகள் என்ற தலைப்பில் ஒரு பக்க கட்டுரை. அந்த கட்டுரையில் அவர் சுட்டிக்காட்டியவை நாமும் வருடா வருடம் பார்ப்பதுதான். அதில் ஒரு pattern இருப்பதை அவர் கவனித்து அவருடைய பாணியில் எழுதியிருக்கிறார்.

இனி அவருடைய வரிகள்

மாணிக்சந்த் ஃபிலிம்பேர் அவரர்டு நிகழ்ச்சிகளை நடுராத்திரிவரை ராஜ் டிவியில் பார்த்த பாக்கியசாலிகளில் நானும் ஒருவன். பிதாமகன் படத்திற்கு எட்டு அவார்டுகளும் விஜயசாந்திக்கு வாழ்நாள் சாதனை விருதும் கொடுத்தார்கள். இந்த மாதிரி விழாக்களில் ஒரு "pattern" இருப்பதை ஒரு எளிய குக்கூ கடிகார மூளையால்கூட கவனிக்க முடியும்.

விழாவுக்கு வருகை தருபவர்கள்  மூன்று வகைப்படுவார்கள். விருது பெறுபவர்கள், புது நடிகைகள், வேடிக்கை பார்க்க வந்த ரசிகர் மன்றர்கள்.

நட்சத்திரங்கள் விழாவுக்குள் நுழையும்  போதே வாழ்த்துச் செய்தி வழங்குவார்கள். அவர்கள் பாதியில் கழன்று கொள்வார்கள். விழாவை வழி நடத்த தமிழ்நாட்டில் மூன்று பேர்தான் உண்டு. அப்துல் ஹமீது, விவேக், குஷ்பு. பக்கத்தில் ஒரு அழகான பெண் நிற்கவேண்டும். பேசவேண்டியதில்லை.

விழாவில் விருது பெறும் நடிகைகள் கட்டாயமாக ஒரு பாட்டுக்கு நடனம் ஆடவேண்டும். இதில் எதுவும் அவர்களுக்கு சிரமம் இல்லை. பத்து நிமிஷம் ஒத்திகைப் பார்த்தால் போதும். நடனத்தில் முக்கால் வாசியை  துணை நடனமணிகள் வேர்க்க விறுவிறுக்க ஆட இவர்கள் குறுக்கே நடந்து வந்து கையை காலை இரண்டு உதறல் உதறினால் போதும். தப்புகள் சைக்கடெலிக் விளக்குகளில் யாருக்குமே தெரியாது.

விருது அறிவுக்கும்போது ஆச்சரியப்பட்டது போல் நடிக்க வேண்டும். மேடையைத் தொட்டுக் கும்பிடலாம். அவர்களை மேடைக்கு அழைத்துச் செல்ல இரண்டு அழகான பெண்கள் வேண்டும். பெண்கள் அத்தனை பெரும் கட்டாயமாக தலைவிரித்துக்கொண்டு அவ்வப்போது தள்ளிவிட்டுக்  கொள்ளவேண்டும்.  ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். கைதட்டல் ஆரவாரம்  எல்லாம் பிற்பாடு டிஜிட்டலாக சேர்க்கப்படும் . கலந்துகொள்ளும் அனைவருக்கும் பஸ் சார்ஜிலிருந்து ஏரோப்ளேன் சாரஜ் வரைக்கும் சில்லரை உண்டு. மாணிக்சந்த் விழாவில் மட்டுமல்ல. கோலிவுட் பாலிவுட் சம்பந்தப்பட்ட அனைத்து விழாக்களிலும் தொன்றுதொட்டு அனுசரிக்கப்படும் பழக்கவழக்கங்கள் இவை.

இதன் ஒரிஜினல் ஆஸ்கர்  விருது வழங்கும் விழாவிலிருந்து வருகிறது. வாழ்க்கையின் வெறுமை அலுத்துப்போன மக்களுக்கு புதிய தாற்காலிக தெம்பு தேவைப்படும்போதேல்லாம் இம்மாதிரி விழாக்கள் தெம்பு தரும். இவை சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் என்று பரதேசம் போவதும் உண்டு.

யாராவது சமூகவியலாளர் சினிமா விருது விழாக்களில் "குழுக்குறிகள்"   என்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதலாம். சைக்கலாஜிஸ்டுகள் "  Conditioned reflexes in Film Award Functions" என்று கட்டுரை எழுதலாம்.

எதை வேண்டுமென்றாலும் சுவையாக எழுதலாம் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு உதாரணம்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 7 August 2013

ட்விட்டரில் கும்மியடிக்கும் தலைவா பிரச்சினை

தலைவா படத்தை திரையிட சென்னை, செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் மறுக்க ட்விட்டரில் அவரவர் "அணில்" ரசிகர்களை உசுப்பேத்திக் கொண்டிருக்கிரார்கள்.

படம் திரையிட்டால் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு வைப்போம் என்று ஒரு புதிய புரட்சிப்படை அறிவிக்க, மாநில அரசோ போலிஸ் பாதுகாப்பெல்லாம் கிடையாது என்று சொல்ல படம் சொன்ன தேதிக்கு வெளியே வருமா வராதா என்று தெரியவில்லை.

இந்த மாதிரி விஷயம் கிடைத்தால் கீச்ச்சர்களுக்கு கொண்டாட்டம்தான். கழுவி ஊத்திவிடுவார்கள்.

இதோ அந்த கீச்சுகள்



ஒருநாள்,ஒரே ஒருநாள் விஜய் ரசிகரா இருந்து பாருங்க.அப்போ புரியும் அது ஒரு முள்படுக்கைன்னு! #அகலாது அணுகாது----------சகா 

தலைவா படத்தைத் திரையிட்டால் பாதுகாப்பு தர முடியாது - காவல்துறை கை விரிப்பு #படம் பாக்குறவங்களுக்கா?!--------மாயவரத்தான் 


கொஞ்சம் பணிந்து போனதும், காலில் விழுந்ததும் நிஜம் தான் அதற்காக எங்க தலைவாவை சொம்பை என்று நினைத்துவிடாதீர்கள்-------ராஜன் லீக்ஸ் 

தியேட்டர்ல வெடி குண்டு பிரச்னை கூடாதுன்னா, கேண்டின் ஏன்யா உருளை கிழங்கு போண்டா விக்கிறீங்க?-------------கட்டதொர 

தலைவாக்கு வெடிகுண்டெல்லாம் டூமச், சிந்து சமவெளிய ரீ ரிலீஸ் பண்ணாலே போதும், அணிலு தெறிச்சுடும்-------வசந்த் 



அவன் ஏன் பீச்சோரமா பின்னால கையக்கட்டிட்டு சாணிய மிதிச்சாமாதிரி நின்னானு இப்பத்தாம்லே தெரியுது! # அணில் தீர்க்க தரிசிகள்-------ராஜன் லீக்ஸ் 

நான் அண்ணா, எம்மவன் எம்ஜிஆர்" இதெல்லாம் பேசிட்டும் படம் ஒழுங்கா ரிலீசாவணும்னு ஆசைப்பட்டா எப்பிடி சார்?------------காக்கைச் சித்தர் 

ஆட்சியை புடிச்சு அடுத்தவங்களுக்கு அசால்டா கொடுத்துட்டு அயிட்டம் டான்ஸ் ஆடப்போன எங்க தளபதிக்கு தியேட்டர் இல்லையா----பிரம்மன்

அம்மா! வேணும்னா, அடுத்த படத்துல என் மவன தீவிர அதிமுக தொண்டனா நடிக்க வைக்கிறேன்! #எஸ்ஏசி சமாதான பேச்சுவார்த்தை------பாலு 

பைதிவே..நம்ம த்யேட்டர்க்கெல்லாம் பாம் ஜாஸ்தி..லஷ்மி வெடி , யாணை வெடியே போதும்..! பேஸ்மெண்டு அவ்ளொ ஸ்ட்ராங்கு!---------கட்டதொர
 

விஜய்யை மீண்டும் இயக்க விரும்புகிறேன் - பிரபு தேவா #சிட்டியே அல்லோலப்பட்டு கிடக்கு நீ கிரிவலம் நரிவலம்னு காமெடி பண்ணிட்டு இருக்க------தில்லுதொர

விஜய் ரசிகர்களோட கம்பார் பண்ணுறப்ப, ராஜா ரசிகர்களெல்லாம் தெய்வம் மாதிரி. கெட்ட வார்த்தைலாம் யூஸ் பண்ணமாட்டாங்க---------மொக்கராசு 

தியேட்டர்ல பாம் மிரட்டலாம். எவனோ வீக் என்ட்ல குருவி படம் பாத்து கடுப்பாகியிருப்பான் போல :)--------வெண்பூ வெங்கட் 

தலைவாரி பூச்சூடினு டைட்டில மாத்து! வெள்ள சட்டைய கழட்டீட்டு துண்டக்கட்டு! அப்பறம் ரிலீஸ் பண்ணிக்க # உத்தரவு---------ராஜன் லீக்ஸ் 

கமல் டூ விஜய் - விஸ்வரூபம் 2 க்கு நான் ஐடியா பண்ணி வெச்சிருந்த மார்க்கெட்டிங்க் டெக்னிக்.நீங்க பாட்டுக்கு யூஸ் பண்ணிக்கிட்டா எப்டி ?----------சி.பி.செந்தில்குமார் 

இது அரசியல் படமே இல்லைங்கண்ணா. அரசியல்னா திருனெல்வேலி தூத்துகுடி பக்கம் இருக்குங்கண்ணா..-------------ஒலைக்கண்ணன் 

விஸ்வரூபம் பிரச்சனைல கமல் சொன்ன மாதிரி இப்ப விஜய் சொன்னா, "சந்தோஷமுடா சாமி,நீ அமேசான் காட்டுக்கே போயிடு"னு அனுப்பி வச்சிருவாங்க!--------பாலு 

ஒரு இமேஜ் உண்டாக்கி அதை கொண்டு அரியாசனம் கண்டவர் எம்ஜிஆர், பொன்/பொருள் போதும் என்றவர் ரஜினி,  ரெண்டும் (கேட்ட) கெட்டவர் விஜேய்----தாய் மனம்

தலைவா படப்பெட்டி தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டலா?! # இந்த வேலைய செஞ்சவன் சுறா படம் மொத ஷோ பாத்தவனாத்தான் இருக்கும்------லாரிக்காரன் 

அப்பிடி என்ன தான் இருக்கிறது படத்தில்"என்கின்ற எதிர்பார்ப்பை 'தலைவா'எதிர்ப்புகள் கிளறிவிட்டிருக்கின்றன.விஸ்வரூபம் பார்ட் 2 இது!-----------மைந்தன் சிவா 

போற பக்கமெல்லாம் குழி வெட்றாய்ங்கன்றத தான் தளபதி ஆல் இஸ் வெல்ன்னாரோ? ;-))------------பிரதீஷ் 

SAC - எனக்கு என்ன தோணுதுன்னா.., விஜய் - அம்மா.அவரை கம்முனு இருக்கச்சொல்லு.இல்ல . வேற ஜில்லாக்கு பார்சல் தான்------------ சி.பி.செந்தில்குமார் 

தலைவா படம் என் வாழ்க்கையை ஒத்திருப்பது மகிழ்ச்சின்னு மருத்துவரய்யா ஒரு அறிக்கைவிட்டாலும் ஃபனால்.----------போக்கிரி 

அம்மாவுக்கு தெரியும்,விஜய்யை இப்போதே வெட்டினால் தான் உண்டு,ரஜனி அளவுக்கு வளர விட்டு வெட்ட நினைத்தால்,ஆட்சி மாற்றம் தான் என்று!---------- மைந்தன் சிவா

டேய், நல்லா யோசிச்சு சொல்லு உன் தலைவனுக்கு உருண்டையா ஒரு குண்டு தான் எடுத்தாய்ங்களா இல்ல ...?? அவ்வ்-------வசந்த் 

ஆன இந்த அணில் குஞ்சுகட்ட புடிச்ச விசயமே அவனுகளும் அணில ஓட்டுரோம்னு தெரியாமையே மரண ஓட்டு ஓட்ரதுதான்-------நத்திங் 

ஏம்பா குண்டுவைக்கும் பெருமக்களே,எக்ஸ்ட்ராவா வேணும்னா காசு தர்றோம்,எஸ்.ஏ.சிக்கு குண்டுவைக்க முடியுமான்னு சொல்றீங்களா?-விஜய் ரசிகர்கள்--------------- மைந்தன் சிவா

இப்பக்கூட ஒண்ணும் கெட்டுபோவல,விஜய் மட்டும் அந்த SACயோட சகவாசத்தை அத்துவுட்டார்ன்னா அடுத்த ஆஸ்கார் விஜய்க்குதான்!----------சகா 

ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச ஒரு பய கூட கேட்க மாட்டான்-------லூசுப்பையன் 

லைட்டா மொறைச்சுகிட்டதுக்கே இந்தப்பாடுன்னா,கேப்டன் எல்லாம் எதுவும் படம் கிடம்ன்னு அண்டாவுக்குள்ள காலை விட்டா அம்புட்டுத்தேன்.----------ஆசான் 

விஸ்வரூபம் கூட ஒப்புவோர்களே விஜயை நாட்டை விட்டு போக போறேன்னு ஒரு அறிக்கை விட சொல்லுங்க பார்க்கலாம் விசா வாங்கிட்டு வந்து நிப்பானுக-------ஓலைக்கண்ணன்

இதுல நான் சி.எம் எல்லாம் ஆகல மேடம்......இது அரசியல் படமெல்லாம் இல்ல மேடம்......மேடம்,இது படமே இல்ல மேடம்.----------ஆசான் 

அதிமுக மகளிர் அணி தலைவர் பதவி கேட்டிருக்காப்டி.அதுக்கு இன்னும் கொஞ்சம் லூஸாகனும் போய்ட்டு வானுட்டாங்களாம். அந்த வெறியிலதான் தலைவா-----------பிரம்மன்

 
 

Follow kummachi on Twitter

Post Comment