Friday 27 June 2014

டீ வித் முனியம்மா ------------பார்ட் 12

இன்னா முனியம்மா காலிலேயே மெர்சலாயிட்ட........

டேய் போடா லோகு, பேஜார் பண்ணாத, கடையாண்ட ஒரு பேமானி வந்து சௌரசு கடிச்சிகினானமே.........ங்குறான்.........ஒன்நியம் புரில........பேமானி இன்னா நன்சுகினு கிறான்............நான் அப்டியாபட்ட ஆளில்ல.

அதானா மேட்டரு அது ஒன்னியும் இல்ல, இந்த புட்பாலு ஆடுரானுன்களே அதுல ஒரு ஆளு எதிராளி கயுத்தாமட்டையிலே கடிச்சிகினுகிறான்.......நீதான் அல்லா நூசும் படிக்கிறியே.........அதுகண்டி கேட்டுகிறான்........வுடு.......மெர்சலாவாத.......

அதான மேட்டரு நம்மாண்ட வந்து இன்னடா பேசுறான்னு ஒரு லுக்கு வுட்டேன்.........பேமானி முயி ரெண்டும் மொரச்சிகினு ஓடிட்டான்.........இந்த புட்பாலு, பத்தி நமக்கு இன்னா தெரியும்..........நமக்கு ஆவின் பாலு தெரியும்.....அமலா பாலு தெரியும்........

சரி வுடு முனிம்மா நாட்டுல இன்னா நடுப்பு அத்த சொல்லு.........

இன்னா பாய் .......மோடி வந்துகினாறு இனி நமக்கு அல்லாம் விடிவுதான் அப்படினானுங்கோ..........இப்போ அல்லா வெலயும் எறின்னு கீது.....ரயிலு டிக்கெட்டு வெலய ஏத்திகினாறு............

அதெல்லாம் அரசியலிலுல வயக்கம்தான், நான் வந்து அத்தே புடுங்குறேன், இத்தே புடுங்குறேனுவானுங்க அப்பால ஒரு -------ரும் புடுங்கமாட்டானுங்க.........

ஆமாம் லிங்கம் சாரு.......டேய் மீச அல்லாருக்கும் டீ குடுறா..........சொம்மா பப்பரபேன்னு-------குந்திகினுகீற.....

இன்னா முனியம்மா அம்மா உணவகமுன்னாங்க, தண்ணீன்னாக, உப்புன்னாக, அப்பால இப்போ மருந்து வுட்டுகிறாங்க..........

அமாம் நாடாரு.........அடுத்தது டீ வருதான்...........மீச வேற வேலைய பாத்துகினு தலைச்சேரி பக்கம் போவுனும்........

இன்னா முனிமா கலிஞறு மேட்டரு இன்னா....

அவரு கச்சில கீற அல்லா ஆளுங்களையும் தூக்கினுகிராறு..........களை எடுக்கிறாராமா......பாய். பாய் இன்னா இன்னும் ஒரு மாசம் கடையாண்ட பாக்கமுடியாது..........நோம்பு வருதில்ல......

ஆமாம் முனிம்மா.

பாய் இப்போ இந்த அரசியல்வாதிங்க அல்லாம் நோம்பு கஞ்சி ஊத்தறேன்னு வருவானுங்க...........பள்ளிவாசல் பக்கம் வுடாத........

அதானேபாய் இப்போ ஒருக்கா வருவானுங்க அப்பால ஒட்டு பிச்சை எடுக்க வாருவாணுக....

முனிம்மா இன்னா தைலாபுரம் தலீவரு மின்வெட்டு, இருண்ட தமியகம் சொல்லிகினு கொரலு வுட்டுகினுகீராறு...........

அவரு கரீட்டாதான் கேக்குறாரு.......ஒன்னாந்தேதிக்கப்பால மின்வெட்டே இருக்காதுன்னு அம்மா சொல்லிச்சு...........அன்னிக்கிதான் பொயுதன்னிக்கும் பீச புடிங்கிட்டானுங்க...........

இன்னும் அஞ்சு வருஷம் போனாலும் பவரு இப்படியேதான் போயி போயி வந்துகினு இருக்கும்..........அந்தாளு நத்தம் அம்மாக்கு சொம்படிக்க தொ இப்ப வருது...........அப்ப வருதுனு..........டபாய்ச்சிகினுகீராறு.

கேப்டனு எங்க போய்க்கிராறு.............கொரலே காணோம்....

அவரு மலேசியா போய்க்கிராறு..........

இன்னா போதை ஒய்ப்பு தினம்குறாங்கோ கடிய தொறந்து வச்சுகிரானுங்கோ.

அதெல்லாம் டாஸ்மாக்குக்கு கெடையாது முனிம்மா........

சினிமா நூசு இன்னா முனிம்மா........

பயம்,  ஒரு பாப்பாஅஞ்சலியோ சுண்டேலியோ அது  ஆந்திரா பக்கம் போயி சான்சு கேக்க மப்படிச்சு மட்டையாயிடுச்சாம்.........அதாண்டா நூசு.......

 
சரி நான் கடியாண்ட போவனும்.........இன்னிக்கி வெள்ளி கெய்ம கூட்டம் அல்லும்........





Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

Sathish said...

kummachila kalakkitinga sir

கும்மாச்சி said...

சதீஷ்குமார் வருகைக்கு நன்றி.

ராஜி said...

கும்மிட்டே நைனா!

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

Anonymous said...

Nice one

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பிரேம்குமார்.

”தளிர் சுரேஷ்” said...

ஸ்ட்ராங்க் டீ! பகிர்வுக்கு நன்றி!

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

கும்மாச்சி said...

ஜீவலிங்கம் சார் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.