Tuesday 11 August 2015

குடித்திருப்போம்...........போராடுவோம்......(கவுஜ)


குடி குடியைக் கெடுக்கும்
குடித்தால் இலவசங்கள் கிடைக்கும்
குடியதனால் நாடு வளர்ச்சி அடையும்
நலத்திட்டங்கள் பெருகும்.......

மதுவிலக்கு போராட்டம் வளரும்
பொது தேர்தல் வரை தொடரும்
எது எப்படி போனாலும்
அரசாங்கம் விற்பனையைப் பெருக்கும்.

அடாது கோஷங்கள் தொடர்ந்தாலும்
விடாது விற்பனை நடக்கும்
கெடாது லாபங்கள் குவியும்
விடாது காவல் பணிகள் தொடரும்

நாட்டு நலன் என்றே சொல்லி
காட்டு  வாசிகள் கூட்டம்
ஒட்டு வேட்டையாடி நடிக்கும்
கூட்டுக் களவாணிகள் கொள்ளையடிக்கும்

நாட்டு நலன் கருதி நாமும்
ஓட்டுக்கு காசு வாங்கி
கூட்டணி அரசியலில் மயங்கி
குடித்திருப்போம், கூடிக்களித்திருப்போம்.



Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 5 August 2015

மது ஒழிப்பு மகாயுத்தம்

தமிழ்நாட்டில் இப்பொழுது ஒரு மகாயுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. மது ஒழிப்பு வேண்டி ஆதியிலிருந்தே பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தவர்களின் போராட்டங்கள் இப்பொழுது ஆடை அவிழ்த்து அம்மணமாக அலைகிறது. இல்லை துச்சாதனர்களால் துகிலுரியப்பட்டிருக்கின்றன.
இங்கு பார் வசதியும் போலிஸ் பாதுகாப்பும் உண்டு.

இப்பொழுது இந்தப் போராட்டம் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சி ஏற்கனவே இந்த யோசனையை விவாதித்தாகவும் அதை ஏதோ ஒரு எட்டப்பன் எதிரணியில் போட்டுக்கொடுக்க வந்தது "மது ஒழிப்பு போராட்டம்".

முழுமையான மது ஒழிப்பு சாத்தியமா? என்ற கேள்வி இப்பொழுது எல்லோரிடமும் உள்ளது. முழு மது ஒழிப்பு சாத்தியமா? என்பது ஒரு புறம் இருக்கட்டும், மதுவை அரசாங்கம் விற்க ஆரம்பிக்கும் முன் தமிழகம் எப்படி இருந்தது? மது அரசாங்கம் ஆரம்பித்தவுடன் இருந்த நிலை என்ன? இப்பொழுதைய நிலை என்ன? நாம் சற்று சிந்திக்க வேண்டும்.
குடிக்கிறவங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்கக்கூடாது......செய்வீங்களா? செய்வீங்களா?

தனியாரிடம் மது விற்பனை இருந்த பொழுது நிலைமை ஒரளவு கட்டுக்கு அடங்கி இருந்தது. அரசாங்கம் கையிலெடுத்து சில்லறை விற்பனை ஆரம்பித்தவுடனும் அவ்வளவாக பிரச்சனை இல்லை. எப்பொழுது இலவசம், விலையில்லா பொருட்கள் தேர்தல் உதவியால் சந்தைக்கு வந்தவுடன் பிரச்சனை தலை தூக்கியது.

இலவசங்கள் கொடுக்க அரசுக்கு அபரிமிதமான வருமானம் தேவை, அதற்கு மது விற்பனை கைகொடுக்கிறது என்றால் அது மிகையாகாது. அரசாங்கம் ஓரளவுக்கு கடனாளியாகாமல் இருக்க மது விற்பனையில் இலக்கு, நூறு மீட்டருக்கு ஒரு கடை என்று வியாவாரம் பெருக ஆரம்பித்தது. எத்துணையோ பேர் அறிவுறுத்தியும் போராட்டங்கள் நடத்தியும், வழிப்பாட்டுதலங்கள், பள்ளிகளு அருகிலேயே மதுக்கடைகள் என்று அரசாங்கம் திறந்துகொண்டே விற்பனையை அதிகரித்தது. விற்பனை ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கமிஷன் தரப்பட்டது, அவர்கள் எல்லோரிடமும் விற்பனையை தொடங்கினார்கள், இதற்கு சிறுவர், சிறுமியர் விதிவிலக்கு அல்ல.

அண்டை மாநிலங்களில் மது விற்பனை இருக்கிறது, ஏன் இந்தியாவில் இரண்டு மூன்று மாநிலங்கள் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் மது விற்பனை இருக்கிறது. ஆனால் அங்கு பட்டப்பகலில் மது அருந்திவிட்டு ஒரு தெருவிற்கு நான்கு பேர் மட்டையாகும் "மன்னுளிப்பாம்புகளை" பார்க்க முடியாது. ஏன்? இந்தக் கேள்விக்கு நம் எல்லோருக்கும் பதில் தெரியும்.
ஆஹா க்வாட்டர் விட்டு மல்லாக்க படுக்கறது ஆனந்தம்.........

வேலையில்லாது எல்லாம் கிடைக்க வழி செய்தால் வரும் காசை எப்படி செலவழிப்பது. இந்த மன்னுளிப்பாம்புகள் எல்லாம் பெரும்பாலும் வெட்டிதான்........அவர்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் சம்பாரிக்கும் காசுதான் இங்கு சரக்காக ஏறி மட்டையடிக்க வைக்கிறது.........இதர செலவுகளுக்கு இருக்கவே இருக்கிறது இலவசங்கள்............
ஒ இது மண்ணுளி இல்லையோ? வேறே வகை போலுள்ளது.........

இப்பொழுது போராட்டம் என்ற பெயரில் கடைகள் சூறையாடப்படுகின்றன? அடித்து நொறுக்கப்பட்ட எல்லா கடைகளிலிருந்தும் போராட்டக்காரர்கள் கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு ஓடியதை பார்க்கமுடிந்தது.

அரசாங்கம் கடைகளுக்கு பாதுகாப்பு கொடுத்தது இப்பொழுது கேலிக்குரியதாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் அரசாங்க பாதுகாப்பை வைத்து ஆளாளுக்கு கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.
தலைவரே நல்லா படியுங்க, அப்புறம் கடைய மூடலாம்.........
ஆகமொத்தம் மதுவிலக்கு என்பது இப்பொழுது நல்ல அரசியல் வியாபாரம், தேர்தல் வரை ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுக்க இது ஒரு வழி என்று எதிர்கட்சிகள் கையிலெடுத்திருக்கின்றன.

மதுவை தவிர வேறு பிரச்சினைகள் இவர்கள் கண்களுக்கு இப்பொழுது தெரியாது.

எல்லாம் தேர்தல் மாயம்...........






Follow kummachi on Twitter

Post Comment

Sunday 2 August 2015

கலக்கல் காக்டெயில்-169

சரக்கும், ஓட்டும்,  பின்னே ஐய்யாவும், ஆயாவும்..........

தமிழ் நாட்டில் இப்பொழுது மதுவிலக்கு பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. எப்படியும் தேர்தல் வருமுன்பே ஆயாவே இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று தோட்டத்தில் பேசியதை "கோயிலில் உருண்டவரிடம்" போட்டு கொடுக்க அதை தனது கைத்தடியிடம் சொல்ல அது தாத்தாவை எட்டி இருக்கிறது. அவர் விடுவாரா கொளுத்திப் போட்டு விட்டார். ஆத்தாவிற்கு விஷயம் எப்படி எதிர்த்த முகாம் போனதென்று குழம்பி பின்னர் உண்மை தெரிந்தவுடன் எடுத்த முடிவுதான்................கல்தா படலம்.

சரி விஷயத்திற்கு வருவோம். நெடுநாளாகவே பல போராட்டங்களை நடத்தி மதுவிலக்கிற்காக போராடிவந்த சசிபெருமாளின் மரணம் இப்பொழுது அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பா.ம.க இதை வைத்து "செருப்படிபட்டாலும் பரவாயில்லை" "லவ்பெல்லை" முன்னிறுத்தி எப்படியும் முதல்வராக்கி விடலாம் என்று மனப்பால் குடித்த வேளையில் ஆளாளுக்கு இப்போது  மதுவிலக்கை கையில் எடுத்துக்கொண்டு விட்டார்கள்.

இதில் ஆதாரம் இல்லாமல் போராடிய சசிபெருமாள் போன்றவர்கள் உயிரை விட்டதுதான் மிச்சம்.

மொத்தத்தில் மதுவிலக்கு வருமோ வராதோ நமக்குத் தெரியாது, ஒட்டு வேட்டையாட வேண்டிய நேரம் வந்துவிட்டது, யார் செத்தால் அவர்களுக்கென்ன? ஹூம் நடத்துங்க உங்கள் அரசியலை..........

மரணத்திலும் அரசியல்

அப்துல் கலாம் அவர்களின் இறுதிச்சடங்கிற்கு செல்லாமல் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவரும்  ஏதோ காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அண்டை மாநில அமைச்சர்கள் வருகிறார்கள், பிரதமர் வருகிறார், மற்றும் மத்திய அமைச்சர்கள் வருகிறார்கள். ஓய்விற்கு கொடநாடு செல்லும் ஆத்தாவிற்கும், மகளுக்கும் மருமவனுக்கும் மந்திரி பதவி வேண்டி சக்கரம் உருட்டி டில்லி செல்லும் தாத்தாவிற்கும் இப்பொழுது மேலுக்கு சரியில்லையாம்..........

அனுப்பிவைத்த அல்லக்கைகளும் நேரம் காலம் தெரியாமல் கலாம் அவர்களின் புகழ் உடலுக்கு  "மாண்புமிகு அம்மா மலர்வளையம்" வைத்து சொம்படிக்கிரார்கள்.........டேய் நல்லா இருங்க டே......

ரசித்த கவிதை 
பரிவார தேவதைகள் 
டி மாத விசேஷங்களில் 
பெண்கள் ஊர்க் கோயில்களில் கூடுகிறார்கள்.
அலகு குத்தியவர்கள் பாதங்களில் வணங்குகிறார்கள்.
பின்னர் பால்குடம் எடுக்கிறார்கள்.
மதியம் அம்மா கையால் சாப்பிடுகிறார்கள்.
அள்ளிப்போட்டுப் பாத்திரங்களைக் கழுவிய பின்
கடைகண்ணிக்குப் போகிறார்கள்.
மாலையில் தீமிதி பார்த்துவிட்டு
அன்றிரவே புறப்பட்டவர்கள்
அம்மாவை அழ வைக்கிறார்கள்.
மீண்டும் கணவனும் மகன்களும்
கலந்து கலகலப்பாய் இருக்க
அடுத்த விசேஷ தினத்தில் இவர்கள் வர வேண்டும்!

நன்றி:    ராம்வசந்த் 

நகைச்சுவை கீச்சுகள் (படித்ததில் பிடித்தது)
ஆபீசில் மேனேஜர் வீட்டு நாய் செத்ததற்கு 
எல்லோரும் அழுதார்கள்
அடுத்த வாரம் மேனேஜரே செத்தார்
ஒரு நாய் கூட அழவில்லை...........

ஜொள்ளு

எத்தனை நாளுக்குத்தான் உள்ளூர் பிகருக்கே ஜொள்ளு விடுவது.........அதான் ஹிஹி...

Follow kummachi on Twitter

Post Comment