Sunday, 8 September 2019

சீமாண்டியும், சந்திராயனும் மற்றும் விக்ரம் லேன்டரும்.................

கடந்த இரண்டு நாட்களாக இஸ்ரோ ஏவிய சந்திராயனைபற்றியும், நிலவில் இறங்குவதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த விக்ரம் லேன்டர் தொடர்பை இழந்ததும் பற்றிதான் சமூக வலைதளங்களில் பேச்சு.

மோடி சிவன் கட்டித்தழுவல், கண்ணீர் காட்சி பற்றி ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலைதளங்களில் வலம் வந்துவிட்டன.

லேன்டர் மேட்டர்  தமிழ்நாட்டில் உள்ள வக்கிரம் பிடித்தவர்களை தோலுரித்து காட்டியது.

இனி சீமானார் பேச்சு............கற்பனைதான்.................


நானும் தலைவரும் சந்திரனை நோக்கி சென்றுகொண்டிருந்தோம் , நம்ம தம்பி........... துரைதான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான். ரொம்ப வேகமாக நிலவை நோக்கி சென்று கொண்டிருந்தான்........நான்தான்... தம்பி ரிவர்ஸ் கியர் போட்டு பிரேக்க விட்டு விட்டு பிடி..........அப்போதான் ஸ்மூத்தா லேண்டாகும்..........அப்பால அந்த கீழ வச்சிருக்கிறோம் பாரு ஆமை ஓடு அத்த கவுத்து போட்டாபோல வண்டில மாட்டி இறக்கு ராக்கெட்டுக்கு ஒன்னும் ஆவாது......நம்ம அப்பத்தா  வேற அங்கு வட சுட்டுகிட்டு இருக்கும்.......சட்டி கவுந்துட்டா நமக்கு வட கிடைக்காது...........ஹ்...ஹா.ஹ...ஹா........உடனே பக்கத்திலிருந்த தலைவரு என் முதுகுல தட்டி..........தம்பி நீதான்பா தலைவர் நான் உன் தம்பி என்றார். அப்புறம் வண்டிய விட்டு நானும் தலைவரும் இறங்கினோம்.........உடனே அங்கிருந்த நம்ம மக்கள் வாங்க சீமான் அண்ணே உங்க கூட இறங்கியிருக்காரே அவர் யாருன்னு கேட்டாங்க? நான்தான் தம்பி அவரு தமிழ் தேசிய தலைவரு.........ன்னு அறிமுகப்படுத்தினேன்...........ஹ...ஹ...ஹ...ஹ...ஹா. அப்புறம் அப்பத்தா வந்து சூடா..இரண்டு வடை  எனக்கு கொடுத்திச்சு,............அப்பத்தா தலைவருக்கும் ரெண்டு வட கொடுங்கன்னு கேட்டேன்...........அதுக்கு அப்பத்தா நீ சாப்பிடு அவருக்கு வட ஒரு கேடா? ன்னுச்சு..............வேணுமுன்னா ஊசிப்போன அரை வடை இருக்கு அத்த கொடுக்கிறேன்னிடிச்சு.அப்புறம் நான்தான் அப்பத்தாகிட்ட பதவிசா பேசி ஒரே ஒரு வட வாங்கி தலீவருகிட்டே நீட்டினேன்...........அவருக்கு அப்படியே கண்ணு கலங்கிடிச்சு........தம்பீன்னு என்ன கட்டிபிடிச்சு என்ன நிலவுக்கு கூட்டி வந்ததுமில்லாம வட வாங்கிக் கொடுத்த பாரு நீதான் தம்பி  நம்ம தமிழ் ஈழத்த காக்கவந்த அடுத்த தலைவருன்னு ஒரே கண்ணீர் விட்டு கதற ஆரபிச்சுட்டார்.

அப்போதான் அந்த பக்கம் நம்ம ஆர்ம்ஸ்ட்ராங்கு பையன் என்ன பாத்து ஓடி வந்தான்...........

அண்ணே சீமான் எப்படி இருக்கீங்க உங்க பேச்சு இங்கே தினம் கேட்குது.....அத கேட்காம நாங்க இங்க இருக்க முடியாது.

அப்புறம் தம்பி உனக்கு இங்கே என்ன பிரச்சினை ............அப்படின்னு கேட்டேன்.

இங்கே தண்ணியே இல்ல............ஆடு...........மாடுங்க கூட இல்ல.......இருந்தா கொஞ்சம் பாலாவது கறந்து குடிப்போம் அப்படின்னு ஒரு அழுவாச்சி.

தம்பி கலங்காத...........அடுத்தது நிலவுல நம்ம ஆட்சிதான்.........நம்ம தம்பிங்ககிட்ட சொல்லி ஒரு பத்தாயிரம் மாடு, கூட கண்ணு.........ஒரு ரெண்டு லட்சம் வக்க பிறி எல்லாம் அடுத்த வண்டில ஏத்தி அனுப்ப சொல்லியிருக்கேன்..........கவலை படாத தம்பின்னு...........சொன்னேன்.

அப்படியே ஆம்ஸ்ட்ராங்கு என் கால பிடிச்சிக்கிட்டான்.

உடனே தலீவரு என்ன தம்பி நாம திரும்ப எப்போ பூமிக்கு போப்போறோம் அப்படின்னாரு?

வாங்க வண்டில ஏறுங்க..............போகலம்முன்னு கிளம்பி அடுத்த இரண்டு நிமிடத்துல அவர கிளிநொச்சில இறக்கிட்டு............ஒரு ஆமை ஓட்டுல ஏறி இங்கே வந்துட்டேன்..........

ஹே.........ஹ.............ஹி   





Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 5 September 2019

ஆச்சார்யா தேவோ பவ

ஆசிரியர் தினங்களில் பெரும்பாலும் எல்லோரும் நினைவு கொள்வது நம்மை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வியையும் மற்றும் தொழில் நிறுவனங்களில் நமக்கு தொழில் சொல்லிக்கொடுத்த பயிற்ச்சியாளர்களையும்தான்.

ஆனால் நமது வாழ்வில் நமக்கு ஒவ்வொரு பருவத்திலும் வாழ்க்கை பாதையில் தேவையான போதனைகளை தந்த அனைவருமே நமது ஆசிரியர்கள்தான். அந்த வகையில்  தாய், தந்தை, ஆசிரியர் தொடங்கி எத்தனையோ முகம் மறந்த ஆசிரியர்கள் நம் வாழ்வில் இணைந்திருக்கிறார்கள்.

அந்த வகையில்..............

நான் சென்னையில் மணலியில் பணி புரிந்த காலம். இரவு பகல் என்று ஷிப்ட் வேலை.  தி.நகர் பஸ் ஸ்டாண்டில் கம்பனி வண்டி ஏறினால் சுமார் ஒரு மணி நேர பயணம். சென்னை சிட்டியில் உள்ள எல்லோரையம் வண்டி ஏற்றிக்கொண்டு விவேகானந்தர் இல்லத்தருகே எங்கள் பஸ் இன்றைய காமராஜர் சாலை (பீச் ரோட்) பிடித்து அடுத்த நிருத்தம் பீச் ஸ்டேஷன். பிறகு நேராக கம்பனி செக்யூரிட்டி கேட்தான். நிற்க நான் சொல்லவந்தது எங்கள் பஸ் ரூட் பற்றி அல்ல.

இந்த பஸ் ரூட்டில்தான் அண்ணா நீச்சல் குளம் உள்ளது. ஒருநாள் நாங்கள் இரவு டூட்டி முடிந்து வரும் பொழுது அண்ணா சமாதி அருகே ஏதோ சினிமா ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. (டைரடக்கர் ஸ்ரீதர் கார்த்திக்கையும், ஜீஜியையயும் விரட்டிக்கொண்டிருந்தார்)  எவனோ பஸ்ஸில் இருந்த ஒருவன் குரல் கொடுக்க தூக்கத்தில் இருந்து முழித்த என் சக தொழிலாளி..

 டேய் மச்சி இறங்கு இறங்கு.. ...

என்று சொன்னவுடன் நான் அங்கேயே தூக்க கலக்கத்தில் இறங்கி விட்டேன், கூட இறங்கிய நண்பன் அண்ணா நீச்சல் குளம் நோக்கி நடையை கட்டினான்.

டேய் எங்கடா போற...

நீச்சல் குளத்திற்கு

எதுக்குடா என்ன கூப்பிட்ட

நான் எங்கே கூப்பிட்டேன்

நீதானடா எறங்கு எறங்குன்ன

டேய் நான் உன்ன கூப்பிடலடா சகாதேவனை கூப்பிட்டேன் அந்த பாடு தூங்கிட்டான் போல...

சரி உனக்கு என்ன இப்போ பிரச்சினை என்றான்.

ஒன்னும இல்ல இப்போ நான் பல்லவன் பிடிச்சுதான் வீட்டுக்கு போகணும்

ஒன்னும் பிரச்சினை  இல்லை என்னோடு ஒரு அரை மணி நேரம் இரு அப்புறம் மேன்ஷன் போயிட்டு என்னோட வண்டியில் வீட்டில் கொண்டு விடுகிறேன் என்றான்.

நான் பார்வையாளராக இருக்க அவன் பாட்டிற்கு நீந்த சென்றுவிட்டான்.

அப்பொழுது வந்த ஆசைதான் எனக்கு நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று.......

அன்று முதல் நான் அவனுடன் நீச்சல்  குளத்திற்கு ரெகுலராக ஆஜராகி விடுவேன்.

அனால் பிரச்சினை எனக்கு நீந்தத் தெரியாது.

தத்தக்கா பித்தக்கா என்று தண்ணீரில் காலையும் கையையும் அடித்துக்கொண்டிருப்பேன்

அதை பார்த்த ஒரு முதியவர், அவருக்கு கிட்டத்தட்ட ஒரு எனபது வயதிருக்கும், தம்பி இங்கே வா நீச்சல் எனபது இப்படி அல்ல.

முதலில் நீ மூழ்க மாட்டாய் என்று நம்பிக்கை வை. பிறகு தண்ணீரில் மூழ்கும் பொழுது கண்களை மூடாதே............பிறகு நீந்தும்  பொழுது தலையை எந்த கோணத்தில் வைத்துக்கொண்டால் எளிதாக நீந்தலாம் என்று எத்துணையோ பாடங்களை கற்றுத்தந்தார், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தண்ணீரில் பிணம் போல மிதக்கும் வித்தையை கிட்டத்தட்ட இரண்டே நிமிடங்களில் எனக்கு கற்றுத்தந்தார்.

அதன் பிறகு எனக்கு நீச்சல் ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் காலப்போக்கில் நமது பழக்க வழக்கங்களால் நீச்சல் குளம் பக்கம் போகவில்லை.

ஆனால் சமீபத்தில் ஆர்தரைடிஸ் தொல்லையால் அவத்திப்படும் பொழுது எனது மருத்துவர் ..................உங்களது பிரச்சினை போக வேண்டுமென்றால் வாட்டர் தெரப்பி தான் சிறந்தது என்றார்.

இப்பொழுது மறுபடியும் நீச்சல் குளம் நாடி.....................அவரை நினைவு கொள்கிறேன்............

கிட்டத்தட்ட இரண்டே மாதங்கள் எனது நீச்சல் பயிற்சியை தொடர்ந்ததால் வலி போயயே போச்சு..........

இப்பொழுது எனக்கு நீச்சல் பயிற்சி அளித்த அந்த முதியவரை நினைவு கொள்கிறேன்.

குருவே சரணம்..........

Follow kummachi on Twitter

Post Comment

Friday, 30 August 2019

நானும் ரவுடிதான்


காட்சி

காலை நேரம் ஏழு மணி, செயல் தலீவரு வீட்டு ஹால்

ஆ.....க செயல் வீட்டில் மிச்சர் தின்றுக்கொண்டிருக்கிறார். வூட்டம்மா பாபா  கோவில் பொங்கல் வாங்க தூக்குடன் போயிருக்கிறார்.

மூன்றாம் கலீனறு, லவ்வில் ஜூட் லாங்க்வேஜ்டன் தொலைபேசியில் அடுத்த ஆறாம் கலீனர் மேட்டரை பேசிக்கொண்டிருக்கிறார்.

மூன்றாம் கலீனறு கக்கா போன பேக்குடன் உடன் பிறப்பை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்.

கூர்க்கா வீட்டின் மெயின் கேட்டில் ஒரு முப்பது உடன் பருப்புகளை மேய்த்துக்கொண்டிருக்கிறார்.

ஓசி சோறு உடன் பருப்புகள் பின்னாடி தட்டுடன் நின்று கொண்டிருக்கிறார்.

இனி

செயலின் அலைபேசி அழைக்கிறது

அன்பு உடன் பிறப்பே...............

ஆமா உண்ட பிறப்புதான்........................ நான்தான் செல்வி

சொல்லு சகோ.....................

இப்போதான் அஞ்சாநெஞ்சன் பேசினாரு...........அவருக்கு கட்சில ஏதாவது ஒரு பதவி கொடேன்............

பதவியா இன்னா பதவி வேணுமாம்

தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவி கேக்குறார்..............இனி உன்னோட சண்டை போடமாட்டார்.........

இனாது நோசான்ஸ்...............சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பான்னு சொல்லிடு........................ ஆக எடப்பாடி பதவி விலக......

அடேய் சும்மா நிறுத்து........எப்பபாரு எடப்பாடி......காட்பாடின்னு ............

அலைபேசி கட்டாகிறது............

அருகிலிருக்கும் போண்டா வாயன்  ....................

தல...........என்ன பண்ற.............நம்ப பொழப்ப எவனோ பேரி தாசோ........மாரி தாசோ........நாரடிச்சுன்னு இருக்கான்......நீ இங்க மிச்சர துன்னுகினு, பொங்கலுக்கும் உண்டகட்டிக்கும் தேவுடு காத்துக்கினு இருக்க.....

அப்படியா என்ன மேட்டரு செப்பண்டி.................

நம்ம கட்சிக்கும் பாகிஸ்தான் தொடர்பு, ஹவாலா....எல்லாத்தையும் புட்டுபுட்டு வச்சிட்டான்.

சரி நம்ம இணைய அல்லக்கைங்கள கவனிக்க சொல்லுவோம்.

டேய், மிருகபுத்திரா, நீ பாரிசாலன், மாரிதாசன் டுபாக்கூர் அப்படின்னு கலீனர்  டீவில பேசுற......இந்தா இருநூறு ரூவா, அப்படியே ஒரு கவிதைன்னு சொல்லி ஏதோ போடுவியே அத தேட்டர்ல போட்டுரு

தளபதி அது தேட்டர் இல்ல ட்விட்டர்.

டேய் பியூசு நீ இன்னா பண்ற பாஜக ஆபீசுல போயி........பொருளாதாரம் ஏன் புட்டுக்கிச்சின்னு விளக்கம் கேளு.........வாய் மேலேயே போடுவானுங்க........மெர்சல் ஆவாத.....நான் ஒரு அறிக்கை ரெடி பண்ணிட்டேன் அத்த உட்டு உன்னிய பாத்துகிறேன்.

டேய் கக்கூசு நீ என்ன  பண்ற ஆரியம் வடஇந்தியா பொருக்கி தேசமுன்னு அல்லாத்தையும் மட திருப்பு.

டேய் தோச நீ வழக்கம்போல தோச, ஆரியம், பார்பனீயம், ட்ராவிடமுன்னு வட சுடு......

ஆக எடப்பாடி பதவி விலக  வேண்டும்............பாசிச மோடி............

அல்லக்கைகள்: தனி ஒரு மனிதனாக தரணிய கலக்கும் தளபதிதான் அடுத்த முதல்வர்.............











Follow kummachi on Twitter

Post Comment

Monday, 26 August 2019

கலக்கல் காக்டெயில் -192

திமுக

தி.மு.க விற்கு பலவிதமான விளக்கங்களை பார்த்திருக்கிறோம்,

திருட்டு முட்டாள் கழகம்
திருக்குவளை முன்னேற்ற கழகம்
திருடர்கள் முன்னேற்ற கழகம்

இப்பொழுது திராவிட முஜஹிதீன் கழகம்

மாரிதாஸ் யு ட்டுயூபில் போடும் ஆதாரங்களைப் பார்த்தால் திமுக விற்கும் பாக்கிஸ்தானுக்கும் சம்பந்தம் இருக்குமோ இருக்காதோ தெரியாது, ஆனால் கட்டாயமாக காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் சம்பந்தம் இருப்பது புலனாகிறது. மேலும் முப்டி, அப்துல்லா குடும்பங்களின் வாரிசுகள் சென்னையில் வசிப்பதாகவும், கட்டுமரக் குடும்ப வாரிசுகளுடன் வியாபாராம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் மாரிதாசின் பதிவிற்குப் பிறகு, உபீஸ் பொங்குவதும், கொலைமிரட்டல் விடுவதையும் பார்த்தால் "நெருப்பில்லாமல் புகையாது போலிருக்கிறது"

மேலும் தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்ற செய்தி திராவிட முஜஹிடீன் கழகத்தின் சமீபத்திய டெல்லி போராட்டத்தின் வீர்யத்தை!!! குறைக்க செய்யப்பட்ட திசை திருப்பல் நடவடிக்கை என்று மிருகபுத்திரன் முகநூல் பொங்கல் திமுக கலங்கி இருப்பது தெரிகிறது. ஏதோ நடக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம்.

ப.சி திருவிளையாடல்

 ப.சிதம்பரம் முன்ஜாமீன் மறுக்கப்பட்டு இருபத்தியேழு மணி நேர ஓடி ஒளிந்த பிறகு சுவரேறி குதித்து கைதி செய்யப்பட்டது நாடறிந்த விஷயம். அவரது விசாரணை போகும் போக்கைப் பார்த்தல் ஒன்று நன்றாக தெரிகிறது, வினைவிதைத்தவன் வினையறுப்பான். இந்திராணி முகர்ஜி, பெண் நிருபர்கள் ஜல்சா என்று காட்சிகளை போட்டுக் காட்டி முன்னாள் நிதியமைச்சரை கலங்கடித்து  உண்மையை வரவைக்கிறார்களாம். சிபிஐ விசாரணை எப்படி இருக்கும் என்று ஓரளவிற்கு நமக்கு தெரியும்.

ஒரே கேள்வியை வேறு வேறு நபர்கள் கேட்பார்களாம், தொடர்ச்சியாக யாராலும் பொய் சொல்லமுடியாது கான்செப்ட் தான்.

ப.சி கூட ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறார்கள் என்று புலம்புகிறார். அவருக்கு தெரியாததா இந்த விசாரணையின் போக்கு பற்றி.

இந்த ஊழல் வழக்குகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம், கடைசியில் இதன் முடிவு என்னவென்று ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது.

ரசித்த கவிதை 

தாக்கம்

நினைத்த நேரத்தில் 
பறந்து விடுகின்றன பறவைகள்
பாவம் கிளைகள்தான்
நீண்டநேரம் அசைந்து கொண்டிருக்கின்றன.

நன்றி: திரு வெங்கட்

திரையுலகம் 

தமிழ் திரையுலகம் இன்னும் சரியாக உபயோகிக்காத தமிழ் நடிகை "கயல் ஆனந்தி" என்று சமீபத்தில் அவர் படங்களை பார்த்த பின்  தோன்றியது எனக்கு மட்டும்தானா?.


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 20 August 2019

யார் மண் இது?

மீபத்தில் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாட்டு மண் பற்றிய பேச்சு அதிகமாக உள்ளது.

அதுவும் அத்திவரதர் நாற்பது வருடங்களுக்குப் பிறகு எழுந்தருளியதால் சர்ச்சை தொடங்கியது. நிறைய பெரியார் அல்லக்கைகள் ஏதோ இந்த முறைதான்  அத்தி வந்ததாகவும் நாற்பது வருடங்களுக்கு முன் அவர் இல்லை எனவும் பிதற்றிக்கொண்டிருந்தார்கள். 1979ல் எழுந்தருளிய பொழுது சமூக வலைத்தளங்கள் இல்லாத காரணத்தால் வந்த கூட்டம் பற்றிய தகவல்கள் இல்லை. ஆனால் இப்பொழுது நிலைமை வேறு

இத பார்த்துட்டு வருவாங்க பாருங்க ஒரு ஓசி சோறு கூட்டம் 


அந்த காண்டுலதான் கடைசிநாள் வந்த நயன்தாராவும் அர்ச்சகர்கள் விட்ட ஜொள்ளும்.

இருந்தாலும் அத்திவரதர் ஆனந்தமாக மறுபடியும் ஆனந்தசர்ஸ் குளத்தில் ஐக்கியமாகிவிட்டார்.

மிழக எதிர்கட்சி தலைவரின் துணைவியார் சமீபத்தில் ஏதோ ஒரு தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டியில் தலைவர் பாபா கோவில் பொங்கலும், பெருமாள் கோவில் புளிசோறு!!! முதலியவற்றை கேட்டுவாங்கி சாபிடுவாராம். அதற்காக ஒரு அட்டவணையே வைத்து கோவில் போவாங்க போல.
இம்ப்ரமேசன் இஸ் வெல்த்

டைசியா தலைவரின் அறிவை வியந்த ஒரு மீம்ஸ்




Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 14 August 2019

தமிழ் மணத்திற்கு என்னாச்சு?

வலைப்பதிவுகளை திரட்ட நிறைய திரட்டிகள் வந்து போனாலும் ஓரளவிற்கு களத்தில் நின்று  விளையாடியது "தமிழ்மணம்" என்று சொன்னால் அது மிகையாகாது.
யோவ் தமிழ்மணத்திற்கும் எனக்கும் என்னையா தொடர்பு,

சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை என்று பல சிறப்பு அம்சங்களுடன் திரட்டிகளில் தனித்துவமாக இயங்கிக்கொண்டிருந்தது.

நடுவால த இன்ட்லி, ஈகரை, நியூஸ் பானை, தமிழ் திரட்டி, நம்குரல், பதிவர், தமிழ்களஞ்சியம் என்று எத்துணையோ திரட்டிகள் வந்து சிறிது  காலம் இயங்கி பின்னர் மாண்டு போய்விட்டன.

சமீபகாலமாக நம்முடைய பதிவுகள் சமர்ப்பிக்க தமிழ்மணம் ஒன்றே இருந்து வந்தது, ஜூலை 26ம் தேதிக்கு பிறகு தமிழ்மணம் இயங்குவதாக தெரியவில்லை. இந்த பிரச்சினை எனக்கு மட்டும்தானா இல்லை அகில உலகத்திற்குமா என்று விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் காஷ்மீரில் "தால்" ஏரிக்கரை ஓரம் ஒன்றரை ஏக்கர் நிலமும், ஒரு ஆப்பிள் தோட்டமும் எழுதிக்கொடுக்க தயாராக இருக்கிறேன்.

இந்த சலுகை அம்பானி கடை போடும்வரைதான்.

ஆதலால் சக பதிவர்கள் முந்திக்கொள்ளவும்.

அதுவரை என்னுடைய மொக்கைகள் முகநூலிலும், கீச்சுலகிலும் தொடர்ந்து வந்து தாளிக்கும்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday, 5 August 2019

370

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பாக அளிக்கப்பட அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவை இப்பொழுது மத்திய அரசு நீக்கி இருக்கிறது. லால்பகதூர் சாஸ்திரியோ, இல்லை இந்திரா காந்தி அம்மையாரோ இந்தக் காரியத்தை செய்யமுனைந்தும்  அப்பொழுது இருந்த உலக அரசியல் சூழ்நிலை இடமளிக்கவில்லை. தற்பொழுது காலம் கனிந்து வரும்பொழுது மத்திய அரசு அதற்குண்டான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து பின்னர் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறது.

இதுநாள் அரசியல் சாசனம் 370 அதன் கூட 35A இரண்டும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்திருந்தது,

அதன் படி


  • ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்கள் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள், அவர்கள் இந்தியாவிலும் குடியேறலாம், பாகிஸ்தானிலும் குடியேறலாம்.
  • ஜம்மு காஷ்மீருக்கு தனிக்கொடி உள்ளது, அது இந்திய தேசியக்கொடியுடன் ஏற்றப்படவேண்டும், ஆனாலும் இந்திய தேசியக் கோடியை அவமதித்தால் தேசத் துரோக வழக்கு கிடையாது.
  • ஜம்மு காஷ்மீரின் சட்டசபையின் ஆயுட்காலம் ஆறு ஆண்டுகள்.
  • இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் அத்துனை உத்துரவுகளும் ஜம்முகஷ்மீரை கட்டுப்படுத்தாது.
  •  பாராளுமன்றத்தால் அந்த மாநிலத்தில் சில இடங்களுக்கு மட்டுமே சட்ட திருத்தங்களை செய்ய உரிமை உள்ளது.
  • ஜம்மு காஷ்மீரில் உள்ள பெண் மற்ற மாநிலங்களில் உள்ள ஆணை திருமணம் செய்தால் குடியுரிமையை இழப்பார். அதே சமயம் பாகிஸ்தானில் உள்ள ஆணை திருமணம் செய்தால் ஆணிற்கு குடியுரிமை வழங்கப்படும்,
  • ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் அசையா சொத்துக்களை வாங்க முடியாது.
  • காஷ்மீர் மக்களுக்கு வரிச்சலுகை இந்திய அரசாங்கம் அளிக்கவேண்டும்.( இந்த ஓசியை  அனுபவித்துக்கொண்டு நமது தேசியக்கொடியை அவமதிப்பது, நமது ராணுவ வீரர்களை முதுகில் குத்திக் கொலை செய்வது என்பதை ஒரு வித நன்றி உணர்வோடு செய்துகொண்டிருப்பார்கள், நாம் கண்களை மூடி  இருக்க வேண்டும்)
இப்பொழுது இந்திய அரசாங்கம் இதுக்குத்தான் ஆப்பு வைத்திருக்கிறது. 

வழக்கம் போல சுடலை கோஷ்டி இதை எதிர்த்து கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறது.

இதனால் நாட்டுக்கு நன்மையா தீமையா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. சைக்கோ, சுடலை, குருமா இவர்கள் எல்லாம் எதிர்க்கிறார்கள் என்றால் மத்திய அரசின் முடிவு நன்மைக்காகத்தான் இருக்கும்.

 

Follow kummachi on Twitter

Post Comment

Sunday, 28 July 2019

கலக்கல் காக்டெயில்-191

Lion King

லயன் கிங் முதலில் வந்தது 1994ல், அப்பொழுது எனது மகனிற்கு நான்கு வயது,  இந்த படத்தின் "ஒளிநாடா" அவனுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தோம். பிறகு ஒவ்வொரு நாளும் நாங்கள் காலையில் முழிப்பதே இந்த படத்தின் முதல் பாட்டு ஒலி கேட்டுத்தான், சுப்ரபாதம் போல் ஒலிக்கும். பள்ளி விடுமுறை நாட்களில் நான்கு முறையும், பள்ளிநாட்களில் இரண்டு முறையும்  வீட்டில எல்லோரும் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும்.

அதற்குப் பிறகு இதனை லைவ் ஆக ஹாங்காங்கிலிலும், லாஸ் ஏஞ்சலிசிலும் நிறைய முறை பார்த்தாகிவிட்டது. இன்று சிக்காகோவில் மறுபடி வேறு வித அனிமேஷனில் உருவாகியிருக்கும்  அதே படம் பார்த்தேன்,  இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு 3D வடிவில் லயன்கிங்,  ஒரு புது அனுபவம்.

லயன்கிங், ஜங்கிள்புக், டாம்அண்ட் ஜெர்ரி எல்லாம் எப்பொழுது பார்த்தாலும் நம்முள் இருக்கும் "ரெட்டைவால் ரங்குடுவை" உசுப்பி விடுகிறது என்றால் மிகையாகாது.

காப்பீடு முக்கியம்

மருத்துவ காப்பீடு இப்பொழுதெல்லாம் மிகவும் அத்யாவஸ்யமான ஒன்று. அது அம்பாசமுத்திரத்தில் இருந்தாலும் சரி இல்லை அண்டார்டிகாவில் இருந்தாலும் சரி. பணியில் இருந்த பொழுது இந்த பிரச்சினை வந்ததில்லை. கவலை இல்லாமல் இருந்து விட்டேன். ஆனால் இப்பொழுது ஓய்வு பெற்ற பின் மகளுடன் இருக்க சிகாகோ வரும் பொழுதுதான் பிரச்சினை. இந்தியாவிலிருந்தே காப்பீடு எடுத்துக்கொண்டு வரலாம் என்றால், இங்கு அதை சீண்டக்கூட மாட்டார்கள். நீங்கள் அங்கு கட்டும்  பிரமீயம் நேரு கணக்கில் (அது என்ன எப்பவும் காந்தி கணக்கு) போய்விடும். ஆதலால் இங்கு வந்தவுடன் எடுக்கலாம் என்று அசால்ட்டாக இருந்துவிட்டேன். ஆனால் பிரச்சினை  ப்ளேனில் கொடுத்த சீஸ் மசாலாவில் வந்தது. அதை சாப்பிடும் பொழுது எனது கிரீடத்தை இழந்து விட்டேன். இது ஒன்றும் மனிமுடியல்ல, பெரிய தலைப்பு செய்தியாக வர, கடவாய்ப்பல்லில் ரூட் கெனால் செய்து மேல இட்ட கிரௌன் சீசுடன் ஒட்டிக்கொண்டு வந்து விட்டது.  சரி அப்படியே பெவிக்கால் போட்டு ஒட்டிக்கலாம் என்று பல் டாக்டரிடம் போனால்,  அவர் அது அப்படி ஒன்று சுலபமல்ல,  உங்க பல்லுக்கு பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து வேலை செய்யணும், ஆதலால் இவ்வளவு ஆகும் என்று ஒரு பில்லைக் கொடுத்தார். அந்த பில்லில் நம்ம வூருல 32 பல்லையும் தங்கத்திலேயே செய்து கொடுப்பார்கள்.

என்ன செய்ய அடுத்த முறை வரும் பொழுது "சீஸ்" பக்கம் போகக்கூடாது, இல்லை  அலிக்கோவில் முறைவாசல் செய்துவிட்டுதான் கிளம்பவேண்டும்.

ரசித்த கவிதை 

தாமரைப்பூவில் வண்டு வந்து
தேனருந்த மலர் மூடிக்கொள்ள
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
என் உள்ளத்திலே நீ நின்று ஆடுகிறாய்

நன்றி: ??????


தமிழ் திரை உலகம்

"உலக்கை நாயகன்" பெரிய முதலாளியில் (BIG BOSS) எத்தனையோ பேரை கொண்டு வந்து கல்லா கட்டுகிறார், அனால்  இன்று வரை சின்னையா புகைவிடும் ரேஞ்சுக்கு இன்னும் ஒருத்தரை கொண்டு வரவில்ல என்பது ஒரு பெரிய குறையே..................





Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 25 July 2019

ரிலாக்ஸ் ப்ளீஸ்.............

ரிலாக்ஸ் ப்ளீஸ்  என்று ஒரு வலைத்தளம், ஆனால் அவர் எப்பொழுதும் முறுக்கி, இறுக்கி டென்சனா..........இருப்பார். அவருடைய பெரும்பாலான பதிவுகள் நான்தான் அறிவாளி, மற்றவன் எல்லாம் அறிவிலி, என்ற தொனியிலேயே இருக்கும்.

கட்டுமரம், பகுத்தறிவு, பெரியார் மண், நாத்திகன் இந்த சப்ஜெக்டுகளுக்கு எதிராக ஏதாவது ஒரு பதிவு வந்தால் தன் மனதை ரிலாக்சாக வைத்துக்கொண்டு பின்னூட்டப் பெட்டியில்  வந்து துப்புவார். பின்னர் ஆங்கில அகராதியில் தேடிப்பிடித்து எல்லா கெட்டவார்த்தைகளும் பிரயோகித்து ஒரு பதில் பதிவு இடுவார். ஆங்கிலத்துல திட்டனும் அப்போதான் நம்மள அறிவாளின்னு உலகம் ஒத்துக்கும், தமிழில் திட்டினால் தரக்குறைவு, என்று தாமாகவே எண்ணிக்கொண்டு ஆங்கிலப்படங்கள் பார்த்துக் கற்றுக்கொண்ட ஆங்கில அறிவை பதிவுகளில் அள்ளித் தெளிப்பார்.

இவர் ஒரு வித்யாசமான உபீஸ் போல என்று ஒரு எண்ணம் உண்டு.

சமீபத்தில் அவருடைய பதிவில் வந்த பொன்மொழிகள்



 Listen idiots!

Once one become a rationalist, there is NO fucking WAY to come back and worship your fucking God! If someone goes back, that only means he/she was fake from the beginning!

Leave the people who don't care about pleasing your fucking God! 

அன்பரே ரிலாக்ஸ் ப்ளீஸ்....

Follow kummachi on Twitter

Post Comment

அத்தியும் அத்தையும்

நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் தண்ணியிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எழுபதில் வெளியே வந்த பொழுது எனது அத்தையும் மாமாவும் காஞ்சிபுரத்தில் இருந்தார்கள். நிறையமுறை அங்கே வந்தால் சுலபமாக தரிசனம் செய்து வைப்பதாக சொல்லி கூப்பிட்டார்கள்.  அவர்கள் எத்தனை முறை அழைத்தும் அப்பொழுது போக முடியவில்லை. மாமா அப்பொழுது காஞ்சிபுரத்தில் காவல் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டமும் கம்மியும் கூட, பெரியார் மண் என்ற பிரயோகம் எல்லாம் புழக்கத்தில் இல்லாத நேரம். எனது குடும்பத்தில் என்னைத் தவிர எல்லோரும் சென்று அத்தியை கண்டுகொண்டார்கள்.

நாற்பது வருடங்களுக்குப் பிறகு 2019 ல் அத்தி தண்ணியிலிருந்து தற்பொழுது வெளியே வந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு முறை காஞ்சி வழியாக சென்னை பெங்களுரு பயணம், இருந்தும் அத்தியை தரிசனம் செய்யமுடியவில்லை. காரணம் எனக்கும் கூட்டத்திற்கும் ஆகாது. உலகத்தில் எங்கு சென்றாலும் க்யூ (வரிசை) வில் ஒழுங்கு கடை பிடிப்பதை பார்க்கலாம், இந்தியாவைத் தவிர. இங்கு வரிசைத் தாவுவது ( Que Jumping) என்பது கல்யாணங்களிலும் மற்றைய விழாக்களிலும உறவினர்களிடையே " எனக்கு அந்த கட்சியின் "வட்ட சதுர செயலாளர்" ரொம்ப வேண்டப்பட்டவர், நான் அங்கே வரேன் என்று சொன்னவுடன் ஒரே நிமிடத்தில் ஒரு லட்சம் பேர் கடந்து என்னை தரிசனம் செய்ய வைத்தார் என்று சுய தம்பட்டம் சப்ஜெக்ட்.

இந்த முறை அத்தி விழா ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்களில்  செய்தி வந்து கொண்டிருக்கிறது. பெரியார் மண், சொறியார் புண் என்று பிதற்றிக்கொண்டிருந்த பக்கூத்தறிவு கூட்டம்தான் சிபாரிசு கடிதத்துடன் முன்னால் முண்டியடித்து தரிசனம் செய்திருக்கிறார்கள்.

தட்டில் பாப்பான் பிச்சை எடுக்கிறான் என்று சொல்லி வரிசையில் முந்திய பரிகாரத்திற்கு துட்டு இட்டிருக்கிறார்கள்.

டேய் போலி பகூத்தறிவாளிகளா, உங்கள் முகமூடிகள் கிழிந்து கொண்டிருக்கிறது, இன்னும் கோவணம் கிழியும் முன்பே, உங்களது பகுத்தறிவு போராளி பெருச்சாளிகளை உஷார் செய்யுங்கள்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 24 July 2019

பரியேறும், பேட்ட 96

பெங்களூரிலிருந்து சிகாகோ 22 மணி நேர பயணம் முதலில் நான்கு மணி நேரத்தில் டோஹா, பின்னர் இரண்டு மூன்று மணி நேரங்கள் கழித்து டோஹவிலிருந்து 15 மணி நேர பயணம், சற்று கடினமானது தான். என்ன வேளைக்கு சாப்பிட்டுவிட்டு, விட்டுவிட்டு தூக்கம், அவ்வப்பொழுது திரையில் இருக்கும் படங்களில் ஒரு மூன்று படங்கள் பார்க்க நேர்ந்தது. அந்த படங்களை பற்றிய எனது பார்வை.

ரியேறும் பெருமாள், வெகுகாலமாக பார்க்கவேண்டிய படம் இப்பொழுதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது. ப. ரஞ்சித் தயாரிப்பில் மாரிதாஸ் இயக்கத்தில் "பரியேறும் பெருமாள்". ரஞ்சித் படமென்றால் என்ன சப்ஜெக்ட் என்பதை கண்டுபிடிக்க ஒன்றும் மெனக்கெட வேண்டாம், அதேதான் ஜாதி வெறிதான். இவர்கள் எல்லாம் இதே மாதிரி படம் எடுத்துகொண்டு இருக்கும் வரை இந்த பிரச்சினை அணையாமல் இருக்கும். காலத்தின் கட்டாயம் கூட.

இனி படத்தை பற்றி, மிகவும் எதார்த்தமான நடிப்பில்  கதிரும், ஆனந்தியும் மிளிர்கிறார்கள். ஆனந்தியை தமிழ் சினிமா இன்னும் சரியாக உபயோகிக்கவில்லை. சற்றும் மிகைப்படுத்தாத நடிப்பு, ஓராயிரம் உணர்சிகளை காட்டும் கண்கள். கதிரும், யோகிபாபுவும் கல்லூரியில் கடைசிபென்ச் மாணவர்கள், இயல்பான நடிப்பு, எங்களது கல்லூரி காலம் நினைவிற்கு வருகிறது. படத்தில் பிரச்சார நெடி சற்றே அதிகம்தான், ஆனால் தமிழ் சினிமா காலம் காலமாக இதை தவிக்க முயற்ச்சி செய்யவில்லை, சில  இயக்குனர்களை தவிர.


பேட்ட , வழக்கமாக சூப்பர் ஸ்டார் படங்கள் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது தலையாய கடன்,  பேட்ட வந்த பொழுது அதை கடை பிடிக்க முடியவில்லை. கிராம வேலைகளில் மும்முரமாக இருந்ததால் தவற விடப்பட்டது. இப்பொழுது விமானத்தில் பார்க்க நேர்ந்தது.

அக்மார்க் சூப்பர் ஸ்டார் படம். பிரேமுக்கு பிரேம் தலைவரின் அதிரடி. படத்திற்கு வேறெதுவும் தேவையில்லை. சிம்ரன், மேகா ஆகாஷ், த்ரிஷா எல்லாம் வந்து போகிறார்கள். கூடவே சசிகுமார், பாபி சின்ஹா, விஜய்சேதுபதி என்று  பெரிய பட்டாளம் கூடவே வருகிறார்கள். ஆனால் படம் முழுவதும் ரஜினி, ரஜினிதான். பாபி சிம்ஹா வீட்டிற்கே சென்று மிரட்டுவது, அதகளம். சர்க்கரை சற்று தூக்கலா ஒரு டீ என்று பாபி சிம்ஹா அம்மாவிடம் கலாய்ப்பதும், பின்னர் டீ கேன்சல் என்று நடப்பதும், டிபிகல் ரஜினி.

96

90 கிட்ஸ் காதல் கதை, விஜய் சேதுபதி, த்ரிஷா, நடிப்பில் ஒரு காதல் கதை. அரைச்சு கரைச்சு தமிழ் சினிமா கொத்சு,  சட்டினி செய்த கதைதான். புதியதாக ஒன்றுமில்லை. என்ன த்ரிஷாவிற்கு வெகு பொருத்தமான வேடம், நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். விஜய்சேதுபதி வெகு வருடங்கள் கழித்து த்ரிஷாவை பார்க்கும் காட்சியில் காட்டும் எக்ச்பிரசன்ஸ் என்ன என்று புரியவில்லை.

படத்தின் கடைசி ஒரு 45 நிமிடம் எதற்கு என்று நமக்கும் புரியவில்லை, இயக்குனருக்கும் புரிந்திருக்க நியாயமில்லை.




Follow kummachi on Twitter

Post Comment

Friday, 19 July 2019

அண்ணாச்சி

சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சி வாழ்க்கை "பிறன்மனை நோக்கா பேராண்மை" கருத்தில் கொள்ளாததன்  விளைவு.

சாதாரண மளிகைக்கடை வைத்து தொழிலை தொடங்கி, பின்னர் சின்னதாக கே.கே நகரில் ஒரு  சிற்றுண்டி விடுதியை தொடங்கி பின்னர் அதை விஸ்தரிக்க செய்வதற்கு எத்தனை உழைப்பும், சிந்தனையும் வேண்டும்.

70 களில் கே.கே. நகரில் தொடங்கிய மளிகைக்கடையை அடுத்தே தனது முதல் ஓட்டலை திறக்கிறார். சென்னையில் பணிபுரிந்துகொண்டிருந்த பொழுது வளசரவாக்கத்தில்  கிரிக்கட் விளையாட விடுமுறை தினங்களில் மோட்டர்பைக் சகிதமாக ஒரு புல் டீம் கிளம்புவோம். அப்பொழுதுதான் கே.கே நகர் பணிமனையை அடுத்த அந்த சாலை போடப்பட்ட புதிது, காலை  ஏழு மணிக்கு கிளம்பி கே.கே நகர் சரவணபவனில் காலை சிற்றுண்டியை முடித்து வளசரவாக்கம் மாந்தோப்பை நோக்கி கிளம்புவோம். அந்த ஓட்டலில்  ஒரே ஒரு சின்ன ஏசி ஹால்தான் இருக்கும், மொத்தம் நான்கு மேஜைகள். அப்படி ஒரு வாரம் போகும்போதுதான் எங்களது பக்கத்து மேஜையில் (ஒரே காலியான மேஜையில்) டைரக்டர் எ.ஜெகநாதனும், நடிகரும் செந்தாமரையும் அமர்ந்து ஏதோ சீரியசாக "இந்த ஏகாம்பரம் பேரை சொன்னா" என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கு பிறகு அது போல அந்த சரவணா பவனில் நிறைய கதை விவாதங்களை பார்த்திருக்கிறோம். அப்போழுதே அந்த ஓட்டல் சிற்றுண்டிகள் சுவையாக இருக்கும். பின்னர் எங்களது கிரிக்கட் டீம் சமீபத்தில் உலககோப்பையை இழந்த இந்திய அணியைப்போல சிதறி, வேலை நிமித்தமாக பலர் அமேரிக்கா, ஆஸ்திரேலியா, அபுதுபாய், அண்டார்ட்டிக்கா என்று சிதறிவிட்டோம்.

பின்னர் சில வருடங்கள் கழித்து தாய் நாடு திரும்பிய பொழுது சரவணா பவன் என்ற பெயரில் தி. நகர், பீட்டர்ஸ் ரோடு என்று மேலும் சில சரவணபவன்கள். கல்லா  பெட்டி அருகில் பெரிய கிருபானந்தவாரியார் படம் இருக்கும், அருகில் அண்ணாச்சி அமர்ந்து கொண்டிருப்பார். பிறகு சென்னையில் பல இடங்கள், டெல்லி, அமேரிக்கா, துபாய் என்று அண்ணாச்சி தனது வியாபார கரங்களை நீட்டி கிட்டத்தட்ட உலகமெங்கும் வியாபித்து விட்டார். இது சாதாரண விஷயமல்ல.

அதே சமயம் அண்ணாச்சி, முதலில் கிருத்திகா, பின்னர் ஜீவஜோதி விவகாரமும் பெரிதாகிக்கொண்டிருந்தது. அப்பொழுதே வாரியார் சுவாமிகள் அண்ணாச்சியிடம் அடுத்தவன் பெண்டாட்டி மேல் ஆசை படுவது தவறு என்று சொன்னதாக செய்திகள் வந்தது.

அண்ணாச்சியின் ஜோதிட நம்பிக்கை, பெண்ணாசை  அவரது  அறிவுரைக்கு செவிமடுக்கவில்லை போலும். பின்னர் நடந்த வாய்தா, வழக்கு சரித்திரம். அண்ணாச்சி காசைக்கொண்டு எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என்று நம்பியிருந்ததாக தெரிகிறது.

இந்த வழக்கில் காவல்துறைக்கு கிடைத்த தடயங்களை வைத்து மிகவும் வலுவான குற்ற பத்திரிகை தயாரித்தார்கள். வழக்கும் அண்ணாச்சிக்கு எதிராக திரும்பி தண்டனை வழங்கியது. இடையில்  அண்ணாச்சி தடயங்களை அழிக்க, வழக்கை  வாபஸ் வாங்க ஜீவஜோதியை தாமாகவே சென்று மிரட்டியது ஆக!! எல்லாவற்றிற்கும் அவர் ஈட்டிய பொருள் காக்கவில்லை.

கடைசியில் அவரது ஆயுள் தண்டனையை சிறையில் கழிப்பதை தவிர்க்க  (உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தும்) தனது முயற்ச்சியை மேற்கொண்டார்.

இருந்தும் விதி வலியது.


Follow kummachi on Twitter

Post Comment

Monday, 8 July 2019

கலக்கல் காக்டெயில்-190

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் 

மத்திய அரசின் மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் புறநானூறில் மேற்கோள் காட்டி நடப்பு ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்ததை பாராட்டியும் நக்கலடித்தும் சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. "யானை புக்க புலம் போல" வரிகள் விதிப்பது தவறு என்று பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடை நம்பிக்கு "காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே" என்று தொடங்கும் பாடல் மூலம் அறிவுறுத்துகிறார்.நிதியமைச்சர் அவரது பெயரை "பிசிர் ஆந்தையார்" என்று உச்சரிப்பு தெரியாமல் உளறுகிறார் என்று "தமில் வால்க" கூட்டம் நக்கலடித்துக் கொண்டிருக்கிறது. அவரது இயற்பெயர் ஆந்தையார், அவரது ஊர் பாண்டிநாட்டில் உள்ள பிசிர் என்று இருந்த ஊர். அதனாலாயே அவர் பிசிராந்தையார் என்று அழைக்கப்பட்டார். இப்பொழுது அவரது உச்சரிப்பு சரியா? தவறா? என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். அனால் அந்த செய்யுளுக்கு பொழிப்புரை கேட்ட பொழுது நமது முன்னாள் "காற்றில் கறந்த" அமைச்சர்கள் சிரித்த சிரிப்பு இருக்கே "ராஜா, தெய்வீக சிரிப்பையா உமக்கு".


இந்த பட்ஜெட் பற்றிய கருத்து எதிர்கட்சிகள்: இது கார்பரேட்களுக்கான பட்ஜெட்
ஆளுங்கட்சி: வளர்ச்சிக்கான பட்ஜெட்

உலகக் கோப்பை

இலங்கை கிரிக்கட் குழு ஒரு மொக்கையான டீம். நேற்றைய அவர்களுடைய ஆட்டம் டாஸ் வென்ற நல்ல நிலைமையை கோட்டை விட்டதிலிருந்தே தெரிகிறது அவர்களது திறமை. ஆனால் சிறீலங்காவில் உள்ள சிங்களர்களைவிட தமிழகளுக்கு இலங்கை  டீம் மேல் அபார  நம்பிக்கை. சமீபகாலத்தில் அவர்கள் சமூக வலைதளங்களில்  இந்தியாவை நக்கல் அடிப்பதை பார்த்தால் தெரியும் அவர்கள் இந்தியாவின் மீதுகொண்டுள்ள வெறுப்பை, இது கிரிக்கட் மட்டுமல்ல இந்திய அரசியல், தமிழ அரசியல் என்று அவர்கள் நக்கல் செய்வதை பார்த்தால் புரியும். திராவிட அரசியல்தான்  தொப்புள் கொடி, அக்குள் முடி என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறது, மற்றபடி அவர்கள் நம்பளை "*அப்டமன்கார்டாக" கூட மதிப்பதில்லை. (*கிரிக்கட் விளையாடியவர்களுக்கு புரியும்)

ரசித்த கவிதை


கூர்

நீரோடு நீராடி
முற்றும் துறந்து துறவியானது
தன் கூராடை களைந்த
ஆற்றின் கூழாங்கற்கள்..!

நன்றி:
- ச.மோகனப்பிரியா

திரையுலகம்

சிந்துசமவெளி சர்ச்சையை  தொடரும் அமலா பால் "ஆடையில்"


Follow kummachi on Twitter

Post Comment

Friday, 5 July 2019

நான்காம் கலீனரும் கல் தோசையும்

தி.மு.க வில் யாருக்கு பதவி தந்தாலும் அதைப்பற்றி கருத்து சொல்லும் உரிமை தி.மு.கவினருக்கு மட்டுமே உண்டு----------தோசை மாறன்

சரிதான் அவரு இன்னா சொல்றாருன்னா உதயநிதிக்கு இளைஞரணி பதவி கொடுத்ததற்கு குறை சொல்லும் உரிமை இன்பநிதிக்கு கு...கழுவிவிடும் தோசைமாறன் வகையறாக்களுக்கு மட்டுமே உண்டாம்.

எல்லா கட்சியிலும் வாரிசு அரசியல் இருக்கிறது. இந்திரா காந்தி தொடங்கி, அன்புமணி, ஒபிஎஸ் மகன் வரை அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவர்கள் என் குடும்ப வாரிசுகள் பட்டத்திற்கு வர இது ஒன்றும் சங்கரமடமல்ல என்று பிலிம் காட்டவில்லை.

தாத்தா தொடங்கி அப்பன் வரை என் மகனோ மருமகனோ பதவிக்கு வரமாட்டார்கள் என்று வாக்குறுதி கொடுத்து தொண்டர்களை ஏமாற்றவில்லை.

தி.மு.கவிற்கு கோடிகளில் சொத்துக்கள் உண்டு. அதற்கு இப்பவே வாரிசுகளை தயார் செய்யணும், இல்லையென்றால் நடுவில் வேறு யாராவது ஆட்டையை போட்டு விடுவார்கள். மேலும் இதெல்லாம் "கிச்சன் காபினெட்" முடிவு என்பதை ஊரறியும்.

உபீசுகளின் உண்மை நிலை அறிந்தே சுடாலின் அறிவித்திருக்கிறார், அப்படியே அந்த பொருளாளர் பதவியையும் செல்விக்கோ, அருள்நிதிக்கோ கொடுத்தீர்கள் என்றால் வேலை முடிந்தது.

கணியக்காவிற்கு எம்.பி யோட சரி, சும்மா பொத்திக்கிட்டு இருக்கணும்.

போண்டா வாயன் இப்பொழுதே உதயநிதிக்கு அடிவருட ஆரம்பித்துவிட்டார். இல்லையென்றால் அவருக்கு ஆப்பு அடிக்கப்படும். ஏற்கனவே அவரது மகன் தேர்தலில் வெற்றிபெறாமல் இருக்கவேண்டிய ஆயத்தங்களை செய்தாகிவிட்டது.

கோவாலுக்கு ராஜ்யசபா எலும்புத்துண்டு போட்டாகிவிட்டது, இல்லையென்றாலும் சற்றுநேரம் குரைத்துவிட்டு ஓய்ந்துவிடும். இருந்தாலும் அவர் வெளி ஆள்.

அடேய் இணைய அல்லக்கைகளா அப்படியே முட்டுகொடுத்துகிட்டு இருங்க. உங்களது சம்பளம் 200 லிருந்து 250  ஆக உயர்த்த நான்காம் கலீனர் ஆவன செய்வார். ஆனா நல்லா கழுவனும் OK. தோச புரிஞ்சுதா.........நல்ல சோப்பா வாங்கி வச்சுக்க.....ஆமா.


Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 4 July 2019

உலகக்கோப்பையும், லாஸ்லியாவும் மற்றும் இத்துப்போன ஈழமும்

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி அரை இறுதி இடத்தை பங்களாதேஷ் அணியை வென்று உறுதி செய்துவிட்டது. இதுவரையில் நமது பலவீனங்களை உணர்ந்து எல்லா அணிகளிடனும் நன்றகாவே ஆடினார்கள், இங்கிலாந்து நீங்கலாக. வழக்கம் போல் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ரசிகர்கள் புகைவிட ஆரம்பித்து விட்டனர். இதில் பாகிஸ்தானும், பங்களாதேஷ் அணிகள் இந்த போட்டிகளில் பிரமாதமாக ஆடினார்கள், அனால் இலங்கை அணி சொதப்பிய சொதப்பல்கள் கிரிக்கட் உலகம் அறிந்தது. இங்கிலாந்தை  வென்றது அவர்களின் ஆட்டம் அன்று சிறப்பாக இருந்தது. பங்களாதேஷ் ரசிகர்களும், பாக் ரசிகர்களும் சற்று அடங்கிவிட்டார்கள், ஸ்ரீலங்கா ரசிகர்கள்?.

இப்பொழுது வழக்கம்போல இந்தியா, ஸ்ரீலங்கா ஆட்டத்தை பார்க்க இந்திய ரசிகர்கள் ஆவலாக உள்ளார்களோ இல்லையோ, ஸ்ரீலங்கா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். சமீபத்திய இந்திய ஸ்ரீலங்கா போட்டிகளின் முடிவுகள் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கு சாதகமாக இல்லை. இருந்தாலும் முகநூலில் பொங்கல் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எது எப்படியோ ஓவியா "பெரிய முதலாளி" வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு மையத்தாரின் ஆஸ்தான ஷோவிற்கு பார்வையாளர்கள் குறைந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இப்பொழுது நடக்கும் பெரிய முதலாளியில் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாச்லியா பங்குபெறுகிறார். இலங்கை கிரிக்கட்டில் சோர்ந்து போயிருக்கும் ரசிகர்களுக்கு, இலங்கை தோல்விமுகம் காணும் பொழுது சிறிது லாஸ்லியாக்கும் "ஜொள்ளுகிறார்கள்".

"பேண்டவர்" ஆறாம் தேதி வரை லாஸ்லியா வெளியேறாமல் பார்த்துக்கொள்வது அவருக்கும் இலங்கை கிரிக்கட்டுக்கும் நல்லது.

அது சரி அது என்ன இத்துப்போன ஈழம்?, அதற்கு நம் தொம்பிகளை தான் கேட்கவேண்டும். ஆமைக்கறியார் தலைவர் எப்படி சம்பாதித்தார் என்று சமீபத்திய செய்திகள் எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டது.


Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 30 August 2018

சீமானிய அலப்பறைகள்.

ஒரு மைக்கு கைதட்ட கொஞ்சம் அல்லக்கைகள் அவ்ளவுதான் வேணும் எதை வேண்டுமானாலும் பேசலாம்.

இனி சீமான் சொன்னதும் சொல்லாததும்.

இருபத்தி எட்டு கிலோ ஆமைக்கறி ஒரே ஆளா தின்னு, தலைவரோட  கடலிலே  அப்படியே போய்கிட்டு இருக்கும் பொழுது எதிர்க்க ஒருத்தன் ஆமை ஓட்ட திருப்பிப்போட்டு ஓட்டிகிட்டே போறான். ஹெஹ்ஹ்ஹஏஏஏ.

முப்பாட்டன் அறுபதாயிரம் யானையை படகுல  ஏத்திக்கிட்டு போருக்குப் போவான், கூடவே அம்பதாயிரம் டன்னு புல்லுக்காட்டு, ஐயாயிரம் குண்டான் அரிசி சோறு..........நாற்பதாயிரம் டன்னு அரிசி மூட்டை.

என் தலைவன் ஒரு முறை என்னிடம் இந்த ஏ.கே. 47 வைச்சு எப்படி சுடணும்னு கேட்டாப்ல, நான் உடனே அப்படியே அத்த வாங்கி ஒரு ஒருலட்சம் சிங்களன் தலைகளை சுட்டு தள்ளினேன், அப்ப  தலைவர், தம்பி நீதாண்டா இந்த தமிழ் ஈழத்தின் எதிர்காலம்  என்றார்.

அவர் சட்டை பையில் உள்ள பேனாவை எடுத்து எழுதிவிட்டு திரும்ப அவரு பையிலேயே வைக்கும் அளவிற்கு எனக்கும் கலைஞருக்கும் நெருக்கம் இருந்தது.

ஒரு முறை சிவாஜி செட்டுல வசனம் பேச என்னய கத்துக்கொடுக்க சொன்னாரு, நான் அவருக்கு சொல்லிக்கொடுத்துட்டு ஒரு ஓரமா போயி நின்னுக்கிட்டேன், அவரு அந்த வசனத்த பேசிட்டு எண்ணிய தேடுறாரு. ஏம்பா கரெக்ட்டா பேசினேனான்னு கேக்குறாரு.

தலைவரு பிரபாகரன் கழுத்துல சயனைடு குப்பியை எடுத்து ரெண்டு சப்பு சப்பிவிட்டு வைக்கும் அளவிற்கு எனக்கும் தலைவனுக்கும் பழக்கம் இருந்தது.

காந்தி உப்பு சத்தியாகிரகம்  தொடங்க தடியை பிடிச்சிக்கிட்டு நிக்குறாரு. எல்லோரும் தயாராயிட்டாங்க. அப்போ எண்ணிய தேடுறாரு. சொல்லுப்பா எங்கே போகலாமுன்னு........கேக்குறாரு,  அப்போ நான்தான் கண்டி பக்கம் போலாமுன்னேன், அப்போ அவரு வேணாம்பா அது ரொம்ப தூரம் கால் வலிக்கும் நம்ம தண்டி பக்கமா போவோம்னு சொல்லிட்டு என் பின்னாடியே வந்துட்டாரு.

இப்படித்தான் ஈழப்போர் நடந்துக்கிட்டிருக்கு,  தளபதி தமிழ்செல்வனுக்கு காலு துண்டா போயிடுச்சி, அவரு  வலில அப்படியா ஓரமா உக்காந்துட்டாரு. அந்தப்பக்கம் இன்னொருத்தனுக்கு காலு துண்டா போய் அப்படியே கத்துறான் கதறுறான். இவரு டேய் ஏண்டா கத்தறேன்னு கேக்குறாரு. அண்ணே காலு துண்டா போயிடிச்சு வலிக்குதண்ணேன்னு கதறுறான். டேய் சும்மா இருடா  காலுத்தானே துண்டா போச்சு அங்க பாருடா பக்கத்துல ஒருத்தனுக்கு தலையே துண்டா போச்சு கத்துறானா பாரு சும்மா இருங்குறாரு.

வான் புலிகள் கிளிநொச்சிக்கு மேலே பறந்துகிட்டு இருக்காங்க. அண்ணன் பிரபாகரந்தான் ஹெலிகாப்டரில் உக்காந்திருக்காப்ல.  வெயிட்டுக்கு வண்டி சாயவும் ட்ரைவரு "அண்ணே வண்டி பின்னுக்கு இழுக்குதண்ணே" அப்ப  தலைவரு   சொல்றாரு முன்னுக்கு இழுத்து விடுன்னு.........ஹெஹ்ஹ்ஹயே ...........என்ன ஒரு நகைச்சுவை பாத்துக்கிடுங்க...........

என்னோட பாஞ்சாலங்குறிச்சி படம் பார்த்துப்புட்டு கலைஞர் என் வீட்டுக்கு வந்து அடுத்த படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு கேட்டாரு, நான்தான் அவரை இன்னும் நீங்க வசனகர்த்தாவா நிரூபிக்கல இன்னுமொரு அஞ்சாறு படத்துக்கு எழுதிட்டு வாங்கண்ணு சொன்னேன், அப்ப அவரு எழுதி கொணாந்துதான் 'பராசக்தி".

கடைசியாக "திராவிட சுடுகாடு" ......வேண்டாம் அதை எழுதுவது அவ்வளவு நல்லதல்ல. 




Follow kummachi on Twitter

Post Comment

Saturday, 25 August 2018

கலக்கல் காக்டெயில் -189

பிச்சைக்கு பாடும் பாட்டு 

நினைவேந்தலுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இப்பொழுது அந்தக் கட்சியின் தலைவர் வரவு சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை கிளப்பி விட்டுள்ளது. வழக்கம்போல இணையத்தில் உ.பீசுகளும் எதிரணிகளும் முட்டி மோதிக்கொள்கிறார்கள். அடுத்த தேர்தல் கூட்டுக்கு இது அச்சாரமா? என்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இப்பொழுது காங்கிரஸ் இருக்கும் நிலைமையில் எந்த கூட்டணியும் சாத்தியமே, கூட்டணி விவரம் போகப் போகத்தான் தெரியும். இதற்காக பெரிய அடிதடி தேவையில்லைதான். அரசியலில் எதுவும் நடக்கும். இதையெல்லாம் பார்க்கும் பொழுது..........ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் ராதா "தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்" என்று பாடிக்கொண்டு  ஒரு வீட்டில் பிச்சைக்கு நிற்பார். அப்போது அந்த வீட்டுக்காரர் ஏன் அந்த கோவிந்தன் உன் வினையை தீர்க்கவில்லை என்று கேட்பார்.

ராதா நக்கலாக ஒரு பார்வை பார்த்து........அடேங்கப்பா டேய் அது பிச்சைக்கு பாடுற பாட்டுடாப்பா.........என்று சொல்லி செல்வார்.

அதேபோலத்தான் இந்த நிகழ்வுகளும் ..............ஓட்டு பிச்சைக்காக...........

முக்கொம்புக்கு டெங்குவாம்...........

முக்கொம்பு தடுப்பணையில் ஒன்பது மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாக போய்க்கொண்டிருக்கிறது. அதை பார்வையிட்ட நமது முதல்வர் நிருபர்களிடம் நமக்கு எல்லாம் காய்ச்சல் வருவதில்லையா? அது போல அணைக்கும் வந்து உடைந்து விட்டது என்று இணைய போராளிகள்  திரித்துக்கூறும் வகையில் ஒரு வாக்கியத்தை சொல்லப்போக இப்பொழுது எல்லோரும் அவரை வைத்து செய்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அமைச்சர்களை நாமெல்லாம் லூசு என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் உளறலைப்பற்றி அவர்களே கவலைப் படுவதில்லை. அவர்கள் கருமமே கண்ணாயிருக்கிறார்கள்......எப்படியோ கல்லா கட்டினால் சரி என்பதுதான் அவர்களது குறிக்கோள்.

டிஸ்கி: பொதுப்பணித்துறை கான்டிராக்ட் எல்லாம் அவரது பினாமிகள் பேரிலதானாமே.

கனவுகண்டேன் நான் கனவுகண்டேன் 

கேரளா வெள்ளத்தில் மூழ்கிய பொழுது உலகமே அவர்களுக்கு உதவிக்கொண்டிருக்க "பினாய்ராஜ்" அமீரகம் 700 கோடி கொடுக்க முன்வந்துள்ளது என்று கூறி ப்ளக்ஸ் எல்லாம் அடித்து ஓட்டினார்கள். போதாக்குறைக்கு
பா. ஜ .க மோடி
எங்கே எழுநூறு கோடி
கேரளா பக்கம் வாடி
என்று கவி பாட
இப்பொழுது அமீரகம் எழுநூறா? நாங்க எங்கே சொன்னோம்.........என்று விழிக்க......பினாய் முழி பிதுங்கிக்கொண்டு கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் எழுநூறு கோடி வர கனவு கண்டேன் என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

ரசித்த கவிதை 

ஒரு குழந்தையின் டைரி

வீட்டில் பதார்த்தங்கள் செய்தால்
நண்பர்களுக்கென்றும்
பள்ளியில் மதிய உணவு முட்டையை
தம்பிக்கென்றும்
எடுத்து வைத்துக்கொள்ளும் குழந்தை,
வழியில் வாளிப்பான பிரம்பு கிடைத்தால் மட்டும்
"இது ஆசிரியருக்கென" எடுத்து பத்திரப்படுத்துகிறது.

நன்றி: சாமி கிரிஷ்

சினிமா

சமீபத்திய சென்சேஷன் இன்கெம்......இன்கெம்...இன்கெம்..... காவாலேதான்..

கீதகோவிந்தம் ராஷ்மிகா....அடுத்த  கவர்ச்சிப்புயல் வரும்வரை தெலுகு ரசிகர்களுக்கு இன்கெம்....இன்கெம்....தான்.....


Follow kummachi on Twitter

Post Comment

Friday, 24 August 2018

அண்ணே முதலீடு, நிவாரணம் என்ன வித்யாசம் அண்ணே?

அண்ணே இந்த முதலீடுன்னா இன்னா நிவாரணமுன்னா என்ன அண்ணே?

ஏன்டா கரிச்சட்டி தலையா? ஏன்டா எங்கிட்ட வந்து அந்தக் கேள்வியை கேக்குறே?

ஐய்ய சும்மா சொல்லுங்க அண்ணே, இந்த மத்திய அரசு புல்லட் ட்ரைனுக்கு காசு வாங்குது, ஆனா கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு காசு வாங்க மாட்டேங்குது அதானே கேட்டேன்

டேய் ஆம்லெட் வாயா, நீ கார்ல போ சொல்ல இந்த சிஃக்னல்ல காரு தொடைக்கிற துணி, ப்ரஷு, பொம்மையெல்லாம் காட்டி விப்பாங்க, அதே காசு கொடுத்து வாங்கினா அது அவன் பொழைப்புக்கு முதலீடு, அதையே பொருளை வாங்காம இந்த பத்து ரூபா வாசிச்சுக்கோன்னு கொடுத்தா அது பிச்சடா கோமுட்டி தலையா.

சரிங்கண்ணே இந்த துபாய் காரன் எழுநூறு கோடி கொடுக்குறாங்களே அதே ஏன் வாங்க மாட்டேங்குறாங்க.

ஏண்டா டேய் என்ன வம்புல மாட்டுறியா? அது சரிடா இது மாதிரி மேட்டரெல்லாம் எங்கேடா பிடிக்கிற?

அது வந்தண்ணே இந்த பேஸ்புக், ட்விட்டர் இதுலே எல்லாம் போடறாங்கண்ணே.

ஏண்டா டபுள் பேரிங் மண்டையா? நீயே தூக்கு சட்டியை  தூக்கிட்டு எந்த கோவிலுல  எத்தனை மணிக்கு உண்டக்கட்டி போடறாங்கன்னு இம்ப்ரமேசன் சப்பளை செய்யுற பேமானி, நீ இதெல்லாம் படிக்குற?  அது சரிடா அதெல்லாம் படிச்சு நீ இன்னாடா பண்ணப்போற?

இல்லிங்கண்ணே சும்மா ஒரு பொது அறிவுக்குத்தான் அண்ணே.

ஆமா அப்படியே இவருக்கு எல்லா அறிவும் ரொம்பி வழியுது பொது அறிவை தேடிவந்துட்டாரு? ஏன்டா ஏன் உயிரை வாங்குற?

இல்லண்ணே சொல்லுங்கண்ணே?

ஏன்டா பேரிக்கா மண்டையா.......அவங்க கொடுக்கிறேன்னு சொன்னதா எங்களுக்கு ஒன்னும் தகவல் இல்லேன்னு லூலூ ஓனரும், அம்பாசிடரும் சொல்லிட்டாங்களே அது உன் நொள்ள கண்ணுக்கு தெரியலையாக்கும்.

இதுல எது உண்மைங்கண்ணே?

டேய் ஹாஃப் பாயில் தலையா உனக்கு எதுக்குடா அந்த வம்பு? டேய் இந்த ஃபேஸ் புக்கு வாயனுங்க, ட்விட்டர் வாயனுக இவனுங்களுக்கு உன் மண்டையில இருக்கிற முடியளவுக்குக் கூட  உள்ளே ஒன்னும் கெடையாது. அடுத்த படிச்சிட்டு எங்கிட்ட வந்து லொள்ளு பண்ற.

ஏன்டா கடைக்கு வந்தமா நாலு சைக்கிள் வீலுக்கு பெண்டு எடுத்தமா? பெட்ரோமாக்ஸ் வாடகைக்கு விட்டமான்னு இருக்கனும். சும்மா வந்து ஃபேஸ்   புக்கு, ட்விட்டருன்னு லந்து பண்ணுற. அது சரி உன்னிய வச்சு நான் எங்க பெட்ரோமேக்ஸ் லைட்ட வாடகைக்கு உடுறது, போடா போய் அந்த பெயிண்டு மணடயனோட  போய் இளநி ஆட்டைய போடு.

போங்கண்ணே நான் இப்போ ரொம்ப திருந்திட்டேண்ணே.

அட இது பாருடா? யாரு சொன்னா?

நாந்தான் சொன்னேன்.

டேய்.......டேய் அந்த பேஸ்புக்கு,  ட்விட்டர் பக்கம் போயிடாதடா அப்புறம் அவனுங்க உன்னிய திட்டறுத்துக்கு எனக்கு புதுசா சஙகீசு, உ.பீஸு, ரரங்க, தொம்பீஸ், டம்ளர் பாய்ஸ், மாங்காஸ்,பஜனை பார்ட்டின்னு புதுசு புதுசா வார்த்தைங்க கொடுப்பானுங்க.

ஐயோ இன்னா சொல்றீங்கண்ணே?

டேய் அதுக்குதாண்டா உனுக்கு அட்வைஸ் பண்ண என்ன மாதிரி ஆள் இந்த ஆல் அழகு ராஜா வேணுங்கறது. டேய் வாழைப்பழ வாயா.....அதுக்குதான்டா இங்கிலீஷுல சொல்லுவாங்க.

IGNORANCE IS BLISS...ன்னு.  அது சரி அது உனக்கு எங்க புரியப்போகுது.....டேய் இதெல்லாம் தெரிஞ்சிக்காம இருக்கோணுமுடா...கோமுட்டி தலையா.





Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 23 August 2018

கவிஞராவது எப்படி?

எல்லோருக்குமே கவிஞராக வேண்டும் என்ற ஆசை உள்மனதில் இருக்கும்? ஆனால்  ஒரு தயக்கமும் கூடவே இருக்கும். மேலும் அதை எழுதி பதிவிட்டால் யார் எப்படி எந்த திசையிலிருந்து வந்து துப்புவார்கள் என்ற பயமும் அடிவயிற்றை கவ்வும். பிரச்சினை இல்லை. அதையெல்லாம் களைந்து உங்களை ஒரு பிரபல கவிஞர் ஆக்குவதற்காகவே இந்த விசேஷ பதிவு.

சரி தயாரா?

முதலில் நாம் எந்த மாதிரி கவிதை எழுதவேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இந்த மரபு கவிதை, ஆம் அதே தான் அந்த பக்கம் தலை வைத்துக் கூட படுக்காதீர்கள். ஏன்னென்றால் அதற்கு மிகவும் தமிழ் இலக்கணம் அறிந்திருக்க வேண்டும். அதில் சீர் என்பார்கள், வெண்பா(நடிகை அல்ல) கலிப்பா, ஆசிரியப்பா, கொச்சகக்கலிப்பா (கொச்சச்சன் அல்ல), அறுசீர் விருத்தம் என்று ஆயிரம் வகை வைத்து அதற்கு இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, என்று ஏதேதோ சொல்வார்கள். அதெல்லாம் நமக்கு வேலைக்கு ஆகாது. நமக்கு குளித்தலைக்கு அப்பால் தெரியாது எதற்கு வம்பு.

அப்புறம் ஹைக்கூ, லிமெரிக் என்று  சில சற்றே எளிய வகைகள் உண்டு. முயற்சிக்கலாம். ஆனால் "L" போர்டு கவிஞர்களுக்கு சாலச்சிறந்தது புதுக்கவிதையே, என்று பட்டிமன்றத் தலைப்புப்போல வைத்துக்கொள்வோம்.

இந்த வகை மிகவும் எளிது.

திருச்செந்தூர் வேங்கட சுப்பன் கடலை மிட்டாய் திருடித்தின்றான். இதான் மேட்டர்.

இதைப் பின் வருமாறு எழுதினால் புதுக்கவிதை.

திருச்செந்தூர்
வேங்கட சுப்பன்
கடலை
மிட்டாய்
திருடித்தின்றான்.

சரி என்ன தலைப்பு எதைப்பற்றி எழுதலாம்? இந்த காதல், கத்திரிக்கா, இயற்கை வர்ணனை இதெல்லாம் போனியாகாது. அரசியல், பகுத்தறிவு, இந்த மாதிரி வைத்து எழுதினால் நல்ல மௌசு. ஆனால் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம். ஆனால் யாரைப்பற்றி எழுதுகிறீர்கள், ஜாதி,மத ஒழிப்பு என்றால் யாரை தாக்கணும் இல்லை யாரை தூக்கணும் என்று கொஞ்சம் பொது அறிவு அவசியம். நீங்கள் வெட்டுக்குத்து, இந்த கையெறிகுண்டு இதற்கெல்லாம் அஞ்சவில்லை என்றால் பாதகம் இல்லை, என்ன  வேணாலும் எழுதலாம். எதற்கு வம்பு நீங்க என்ன தாக்கி எழுதினாலும்  எருமை மாட்டு மேல மழை பெய்தாமாதிரி ரொம்ப நல்ல கூட்டம் ஒன்று இருக்கு, என்ன அடித்தாலும் தாங்கிக்கொள்ளும், அதுங்கள தாக்கியோ இல்லை உசுப்பியோ எழுதுங்க. சும்மா கொஞ்ச நேரம் குரைத்துவிட்டு ஓய்ஞ்சிடுவாங்க. இனி செய்முறைக்கு போவோம்.

கவிதையில் அங்கங்கு பகுத்தறிவு, திராவிடம், மூடநம்பிக்கை சம்பந்தப்பட்ட கருத்துக்களை மசாலா போல தூவணும். (ஆச்சி, சக்தி, என்று எந்த மசாலா என்பதை நீங்கதான் முடிவு செய்யணும்).

சரி அடுத்து வார்த்தைகள் தேர்வு மிக முக்கியம்.

காவி, பாவி, சீவி, என்று எகன,மொகனை வார்த்தைகள் ஒரு ஐம்பதை தேத்திக்க வேண்டும்.

இதற்கு தமிழ் மொழியில் நிறைய இருக்கிறது.

ஆத்தா, பார்த்தா, சேர்த்தா, வாத்தா
பாடு, ஓடு, தேடு, போடு
தடாய் , கடாய், விடாய்
கயிறு, வயிறு, மயிரு
ஜாதி, பீதி, பேதி
வாடி, போடி, பீடி,
தடி, அடி, கடி வெடி, மடி
செடி,பிடி
என்ன, வெண்ண, நொண்ண
 இது போல இன்னும் கொஞ்சம் வார்த்தைகள் தேத்திக்கணும்.
இந்த மாதிரி படங்களுடன் போட்டால் கவிதைக்கு அழகு சேர்க்கும்
இப்ப நீங்க கவிஞராகலாம்.

இத வெச்சி நீங்க கவிதையில் யாரை வேண்டுமென்றாலும் வேணாம் அவங்கள??? மட்டும் வச்சி செய்யலாம்.

இப்போ பதிவிடுங்கள் நீங்கள் அரை கவிஞர் ஆகிட்டீங்க. சொந்த பேரில் எழுதக்கூடாது. புனை பெயரில் எழுதவேண்டும். மறந்தும் உங்கள் பெயரில் ஜாதி மத சம்பந்தம் இருக்கக்கூடாது. இது ரொம்ப முக்கியம்,  ஏனென்றால் பிற்பாடு இது மிகவும் உதவும்.

ஆனால் வேலை இத்துடன் முடியவில்லை.

இதுக்கு உடனே எதிர் வினையாக நாலுபேரு வந்து பதிவிலேயும், முகநூலிலும் இல்லை தொலைபேசியிலும் வான்டடாக வந்து துப்புவான். ஆஹா வெட்டிடுவேன், தூக்கிடுவேன் என்று குரைப்பான். இப்போ கொஞ்சம் கைகாலெல்லாம் நடுங்கும் பயம் வேண்டாம். இப்போதான் முக்கிய வேலை ஒன்று பாக்கி உள்ளது.

உடனே நீங்க காவல்துறைக்கு முறையிடனும், அங்க இந்த கவிதையெல்லாம் வேலைக்கு ஆவாது.

அங்கே உரைநடைதான் செல்லுபடியாகவும். அதற்கும் சில வரைமுறைகள் உண்டு.

முதலில் உங்களது பெயரை முழுமையாக எழுதவேண்டும். அதில் ஜாதி மத விவரங்களை கோடிட்டு இதனால் தான் ஏன் மீது துப்புகிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும்.

பின்னர் எனக்கு ஒரு கண்ணில் புரை, ஒரு காது மந்தம், ஆறுவிரல், மூலம், காலில் ஆணி, போன்ற அங்க விவரங்களையம் உபாதைகளையும்  குறிப்பிடவேண்டும். அப்போதான்  எல்லோராலும் கவனிக்கப்பட்டு சே பாவம்யா!! இந்த ஆளு என்ற கருணை உணர்ச்சி துப்பினவனுக்கும் பிறக்கும்.

என்ன சரியா இப்போ நீங்க ஒரு பிரபல கவிஞர் ஆகிட்டீங்க. சும்மா கலக்குங்க.


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 22 August 2018

ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அவர்களுக்கு

ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அவர்களுக்கு

மனநிலை பாதிக்கப்பட்ட கும்மாச்சியும் கருணாநிதியும்.........என்ற தங்களது பதிவைப்  படித்தேன், மேலும் எனது பதிவின் பின்னூட்டத்தில் இட்ட கருத்தையும் வெளியிட்டு இருக்கிறேன்.

http://timeforsomelove.blogspot.com/2018/08/blog-post_21.html

நீங்கள் எனது மனநலம் குறித்து கொடுத்த அறிவுரைகளை மனதில் ஏற்றுக்கொள்கிறேன். எனது இறப்பை பற்றியும் பதிவிட்டிருக்கிறீர்கள் நன்றி. இறப்பு எனது கையிலோ அல்லது உங்கள் கையில்!!! இல்லை என்று நம்புகிறேன்!!!.

கலைஞருக்கும் எனக்கும் எந்த வாய்க்கா வரப்பு பிரச்சினைகள் இல்லை என்பதையும் இந்த நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும் நீங்கள் , கடந்த பத்துவருடங்களாக பதிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதில் பல தனிமனித தாக்குதல்களும்,  பதிவர்களின் மீது இன  வெறித்தாக்குதல்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களது பதிவுகளுக்கு எதிர் கருத்து தெரிவிப்பார் மீது பிரசுரிக்க தகாத வார்த்தைகளையும் உபயோகப்படுத்த தயங்கவில்லை. என்ன கெட்ட வார்த்தைகள் உங்களது கணிப்பில் ஆங்கிலத்தில் பதிவிட்டால் நாகரீகம் என்று சடுதியில் ஆங்கிலத்தில் "get the F*** out of here" என்று வெளிவிடுகிறீர்கள்.

உங்களது ஜாதி மற்றும் இன வெறி பதிவுகள் அமிர்தம் கக்குகிறது என்று நம்புகிறீர்கள்.

உங்களது வலைப்பூவில் உங்களது கருத்தை வெளியிடுகிறீர்கள் அது உங்களது உரிமை. அதற்காக உங்களை மனநலம் குன்றியவர் என்றோ இல்லை அந்த சமுதாயம் உங்களை வெகுவாக பாதித்தது என்றோ நான் அனுமானிக்கவில்லை.

 உங்களது பதிவுகளில் நிறைய எழுத்தாளர்கள் பற்றி எழுதி இருக்கிறீர்கள், குறிப்பாக தி. ஜானகிராமனை பற்றிய பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தது. நான் அவருடைய அத்தனை புத்தகங்களையும் சேர்த்து வைத்திருக்கிறேன். இருபது வருடகங்களுக்கு முன்பு "ஐந்திணை பதிப்பகம்" அவருடைய ஒரு சிறுகதை தொகுப்பை மறுபதிப்பு செய்ய என்ன அணுகியபொழுது என்னிடமிருந்த நகலை கொடுத்திருக்கிறேன்.

இந்த விஷயத்தில் நமக்குள் ஒற்றுமையை நான் உணர்கிறேன், அதே சமயத்தில் உங்களது பதிவுகள் அனைத்தும்  என்னுடைய கருத்துடன் ஒத்துபோகவில்லை என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் உங்களுக்கு தோன்றிய கருத்தை பதிவிடுகிறீர்கள். எதிர் கருத்துக்கு மாறாக நான் பின்னூட்டங்கள் இடுவதில்லை.

வாழ்க வளமுடன்.





Follow kummachi on Twitter

Post Comment