Thursday 27 February 2014

கலக்கல் காக்டெயில்- 137

குனிந்தவர்களுக்கு எல்லாம் ஆ.... ஆப்புதான்

அ. தி.மு. க வின் நாடாளுமன்ற தேர்தலுக்கு நாற்பது வேட்பாளர்களையும் அம்மா அறிவித்துவிட்டார்கள். தற்போதைய எம். பி. க்கள் மூன்று பேரை தவிர மற்ற எல்லோரும் புது முகங்கள். இதில் ஓ.பி யும், நத்தம் விஸ்வநாதனும், செல்லூர் ராஜுவும் தங்களது மகன், மருமவ பிள்ளைகளுக்கு நாடாளு மன்றத்தில் துண்டு போட்டு வைத்திருந்தார்கள். அம்மா அறிவித்த பேர்களில் அவர்கள் ஆட்கள் இல்லை.

நாளை அமைச்சரவை மாற்றமாம். நால்வர் அணி என்று சொல்லப்படுகிற ஓ.பி, நத்தம், முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரின் பதவி பறிக்கப்படலாம் என்ற வதந்தி உலவுகிறது.

ஓ.பி குனிந்த குனிவிற்கு நல்ல வைக்கிறாங்கப்பா ஆப்பு.

கேப்டன் கட்சிக்கு சங்குதான் போல......

கேப்டன் எந்த கட்சியுடன் கூட்டணி என்று சொல்லாமல்பா.ஜ.க, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறார். தற்பொழுது ப.சி யும் கேப்டனும் சிங்கப்பூரில் ரகசியமாக சந்தித்தாக செய்திகள் வருகின்றன. மறுபுறம் சுதீஷ் பாரதிய ஜனதா கட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

இந்த குழப்பங்களை எல்லாம் வாக்காளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் இரண்டு மூன்று கட்சிகளுக்கு சங்குதான்போல.

ரசித்த கவிதை

ஓட்டம்

இனி
நிற்க நேரமில்லை
சோட்டாபீம்
ஓடத்தொடங்கிவிட்டான்

வழி நெடுகக்
காத்திருக்கும்
துப்பக்கிக்காரனை
பெரும் பூதத்தை
நெருப்பை
கழுகை
தலைக்கு மேலே
தொங்கும் பாம்பை
தாண்டிப் போயாக வேண்டும்

ஓட்டம் தொய்வுறும் வேளைகளில்
சில சலுகைகள்

நின்று நிதானிக்க அனுமதியில்லை

வென்றால்
அடுத்த கட்ட ஓட்டம்
தோற்றால்
ஆரம்பத்திலிருந்து மறுபடியும்

இவ்வாறே
அமைந்திருக்கின்றன
எல்லா விளையாட்டுகளும்
சமயத்தில்
வாழ்க்கை உள்பட

சோட்டா பீம் ஓடத் தொடங்குகிறான்
----------------------------------சுஜாதா செல்வராஜ் 

ஜொள்ளு 




Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 25 February 2014

பாசறை தாயும், கலைஞரின் முகவரியும் மற்றும் பிளாட்பார ஞானிகளும்

கிட்டத்தட்ட ஐந்து வாரங்கள் விடுமுறையில் "நம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு" சென்று வந்தேன். முதலில் மருமகனின் கல்யாணத்திற்காக  குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல் முறையாக செல்கிறேன். திருநெல்வேலியின் பசுமை வயல்கள் நமக்கு பட்டிகாட்டான் யானையை பார்ப்பது போல. சென்னையிலும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பான்மையான நாட்களை கழிக்கும் நமக்கு பசுமைக்கு அர்த்தம் தெரியாது. குற்றாலம் ஐந்தருவியிலும் மற்றும் பிரதான அருவியிலும் ஷயரோகக்காரன் உச்சா மாதிரி தண்ணீர் வருகிறது. நாம் போன நேரம் அப்படி.

சென்னையில் தேர்தல் வருவதற்கான அறிகுறிகள் சுவரெங்கும் தெரிகின்றன. அம்மாவின் அல்லக்கைகள் வைத்திருக்கும் பிளக்ஸ் போர்டுகளும், மற்றும் சுவரொட்டிகளும் அம்மாவை ஏகத்திற்கு ஏற்றிவிடுகின்றன. நாளைய பிரதமரே, வருங்கால பாரதமே, மற்றும் அம்மா அம்மா என்று அம்மா புகழ் பாடுகின்றன. இதில் "பாசறை தாயே" என்று ஒரு ப்ளக்ஸ் போர்டு. இதற்கு பொருள் விளங்கவில்லை. எனக்கு தெரிந்தவரையில் "பாசறை" என்றால் கிடங்கு என்று பொருள். தமிழ் பண்டிதர்களிடம் கேட்டால்  இதற்கு சற்று விரிவான விளக்கம் கிடைக்கும். அடுத்தது "நிரந்தர பாரத பிரதமரே" என்று ஒரு சுவரொட்டி. அம்மா நாற்பது வேட்பாளர்களையும் அறிவித்த பின் தெரிகிறது இந்த சுவரொட்டிகளின் நோக்கம்.

ஐயா அல்லக்கைகளோ தளபதிக்கு நன்றாக கொடி பிடிக்கின்றனர். அங்கும் ஏகத்திற்கு சொம்படிக்கிறார்கள். தளபதிக்கு அடிக்கும் சொம்பின் உச்சம் "கலைஞரின் முகவரியே". இதன் அர்த்தம் யாருக்கு புரியுமோ தெரியவில்லை. உண்மையில் கலைஞருக்கு நன்றாகவே புரியும். சமீபத்தில் நடந்த நேர்காணலில் சொம்படித்தவர் சென்றிருந்தால் வறுத்தெடுத்திருப்பார்.

மற்றபடி சென்னை டாஸ்மாக் புண்ணியத்தில் நடை பாதை ஞானிகள் நித்திரையில் நன்றாகவே விழித்திருக்கிறது.


Follow kummachi on Twitter

Post Comment