Sunday 17 December 2017

கலக்கல் காக்டெயில் 181

ஆர். கே. நகர்

ஆர் கே நகர் என்ற இடம் தேசத்தலைவர்களோ, அறிஞர்களோ இல்லை குறைந்த  பட்சம் கதாநாயகர்கள் இல்லை கதாநாயகிகள் அவதரித்த இடமோ இல்லையென்றாலும் கிட்டத்தட்ட ஒரு புண்ணிய ஷேத்ரம் அளவிற்கு பிரபலமாகிவிட்டது. தமிழத்தின் ஆளுமை!!!!! என்று புனையப்பட்ட கொள்ளைகூட்ட தலைமை தேர்தலில் நின்று வென்ற இடம் மர்மமான முறையில் காலியாகி தபா தபா தேர்தல் சூடு ஏற்றிவிடப்பட்டு அனையவிட்டுக்கொண்டிருக்கும் இடமாகிவிட்டது.  போனமுறை தொப்பியும் பிணமும் வலம்வந்து காசு இறைத்து களேபரமாகி இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது, பிறகு இரட்டை இலையை பெற இருபக்கமும் இழுத்ததால் இலை இரண்டாகி குக்கரும், சருகுமாகி போட்டிபோட்டு கொண்டிருக்கிறது. தொகுதி மக்கள் மிகவும் பாக்கியசாலிகள். போனமுறை நான்காயிரம் இப்பொழுது அகவிலைப்படி ஏற்றம் பெற்று குக்கரும்  ஆறாயிரம் ரொக்கமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தல் இப்பொழுதும் "வரும்.....................ஆனா வராது".................என்ற செய்தியை எதிர்நோக்கி பாடிகாட் முனீஸ்வரனுக்கு படையல் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆர் கே நகர் வாக்காள பெருமக்கள்.

ஹீரோ டாக்கீஸ்

ஹீரோ டாக்கீஸ் புண்ணியத்தில் இப்பொழுதெல்லாம் வாரம் இரண்டு மூன்று படங்கள் ஓய்வு நேரத்தில் பார்க்கமுடிகிறது. மாதம் ஏழு அமெரிக்க டாலர்கள் செலுத்தினால் தரமான தரத்தில் தமிழ் படங்களை பார்க்கமுடிகிறது. அதிலும் சில மாஸ் பொடிமாஸ் என்று வடைசுடும் நடிகர்களின் அரத பழசு மசாலா உல்டா படங்களை தவிர்த்து சில அறிய படங்களை நமது விருப்பம் போல் பார்க்கலாம்.

பழைய படம் பார்க்கவேண்டுமா...............கருப்பு வெள்ளை படங்களிளுருந்து எழுபது எண்பதுகளில் வந்த சில அரிய பொக்கிஷங்கள் உள்ளன.........அந்த வகையில் கலிபோர்னிய தலைநகர் வந்து ஒரு அதிகாலை பொழுது உறக்கம்வராமல் வாடை குளிரில் நடை பயிற்சியும் போகாமல் அதிகாலையில் பார்த்த படம் "முள்ளும் மலரும்" இருபதாவது முறை பார்த்தாலும்  அலுக்காத படம்............சும்மா சொல்லக்கூடாது மகேந்திரன் ரஜினியை வைத்து ஒவ்வொரு காட்சியும் செதுக்கியிருக்கிறார். அதிலும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி எத்தனை முறை பார்த்தாலும் வியக்க வைக்கும்.

ரசித்த கவிதை

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு!

முறுக்கு மீசை வில்லன்களால் 
தூக்கிவரப்பட்ட 
நாயகிகளாய்த் தவிக்கிறது வாழ்வு.
கற்பு பற்றிய பயமெல்லாம் இல்லை
மெய்ப்பொருள் தேடும் வாழ்வில் 
பொய்ப்பொருள் பதற்றம் எதற்கு?

ஜன்னல்களை உடைத்துக்கொண்டோ
உத்தரத்தைப் பெயர்த்துக்கொண்டோ
பூமியைப் பிளந்துகொண்டோ வரப்போகும்  
ஹீரோக்களுக்காகக் காத்திருக்கும்போதுதான் ஒன்று புரிகிறது
நேரம் செல்லச் செல்ல 
இந்த ஹீரோக்களுக்கான விக்கை சரிசெய்வதற்குள்
வில்லன்களையே நாம் ரசித்துவிடுவோம்போல!

நன்றி. ரா. பிரசன்னா........

சினிமா கார்னர்


ஹீரோ டாக்கீஸில் சமீபத்தில் கண்ட  "காதல் கசுக்குதையா" பட நாயகி, பேர் வெண்பாவாம். ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு, ஆனால் என்ன தமிழ் சினிமாவில் இது போன்ற நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போவார்கள்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 24 July 2017

பெத்த பாஸ்லு.....

பெரிய முதலாளி, பெத்த பாஸ்லு, BIGG BOSS, பற்றி தெரியலேன்னா ஏதோ வேற்று கிரக வாசிபோல நம்ம பார்ப்பாங்க போல. இது ஏதோ டுபாகூர் ப்ரோக்ராம் இத எவன் பார்க்கிறது என்று செவனே இருந்த நம்மள சமூக ஊடகங்கள் இந்த பக்கம் திருப்பிவிட்டது.

ட்விட்டர், மூஞ்சிபுத்தகம் பக்கம் போனால் ஒவியாங்கறான், நமீதாங்கறான், ஜூலிங்கிறான், கால்சியம் ஆண்டின்கிறான் ஒன்னும் புரியல. இது என்னடா புது ரோதனையாபோச்சு என்று அலுவலக தோழிய கேட்கப்போக அந்தக்கா பெரிய முதலாளி பார்க்காத நீ எல்லாம் ஒரு மனுஷனா என்று நம்மை நாய் கொண்டு போட்ட வஸ்துவை பார்ப்பது போல ஒரு பார்வை வீசி சென்றாள்.

சரி இது என்னடா என்று பார்க்கப்போனால் நம்ம உலக நாயகன் வந்து பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்காரு.

எது எப்படியோ இதை வைத்து வரும் மீம்சுகள், கீச்சுகள் நம்மை நகைக்க வைக்கின்றன.

அதில் ஜூலியை கலாய்த்து வரும் கீச்சுகள் அதிகம்..............அந்த புள்ள என்ன பாவம் பண்ணிச்சு என்று பார்த்தால் அது கால்சியம் ஆண்டி கூட கூட்டணி வச்சிகிட்டு "ஓவியா பாப்பா"விற்கு கொடைச்சல் கொடுக்குதுங்க............அதான் மேட்டரா? அதான் தமிழகமே ஜூலிய கழுவி ஊத்துது. ஆண்டவர் வேற ஜூலி ஒரு புளுகு மூட்டை என்று "குறும்படம்" விட்டு வீர தமிழச்சி மானத்த  கழுவுல ஏத்திட்டார்.

இனி அந்த வரலாறு சிறப்பு மிக்க கீச்சுகள்

ஜூலிக்கு மேக்கப் போட்டு பிக்பாஸ் குடும்பத்துல வாழ விடுறதும் நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைக்கிறதும் ஒன்னு தான்.

என்ன ஜூலி ஆண்டவர்கிட்டேய வார்த்தை விளையாட்டா ? கிழிச்சு கேப்பையி நட்டுப்புடுவாரும்மா.

கொட்டிலில் மாடு தன் சாணத்தின் மேல் உருண்டு புரண்டு மிதித்து அதோடேயே வாழும் வேறு இடத்தில் கட்டும் வரை. அதே நிலையில் ஜூலி. இவரை மன்னியும் ஆண்டவரே.

காயத்ரி மாதிரி அம்மாவும் ஜூலி மாதிரி மனைவியும் கெடைச்சா பரணி மாதிரி சுவர் ஏறி குதிச்சுதான் வெளியே ஓடனும்.

தெரியாத்தனமா எங்க வீட்டு நாய்க்கு ஜூலின்னு பேரு வச்சிட்டேன், முதலில் ஒரு நல்ல நாள் பார்த்து பேர மாத்தி வச்சு, காது குத்தி ஒரு கணபதி ஹோமம் பண்ணிடனும்.



Follow kummachi on Twitter

Post Comment

Friday 21 July 2017

மன்மத வம்பன், மொத்தமும் வில்லன், உலக்கை நாயகன்.....ஒன்டிக்கி ஒண்டி வாறியா?

மல்ஹாசன் தற்போதைய ஆட்சி ஊழல் நிறைந்தது என்று சொல்லப்போக ஆளுங்கட்சி அமைச்சர்கள் முதல் பெஞ்சு தட்டி அல்லக்கைகள் வரை அவரை வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக
 இன்று நமது எம்.ஜி.ஆரில் கமலை வசை பாடி ஒரு பதிவு இட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ள அருஞ்சொட்கள்தான் தலைப்பில் உள்ளவை.




ஏழைக்குப் பயன்படாத இந்த குரோட்டன்ஸ் செடி எளியோருக்குப்பயன்படும் கீரையைப் பார்த்து பழிக்கிறது! 'உன்னால் முடியும் தம்பி' என்று இவர் உதட்டளவில் வாயசைத்துப்பாடியதை, இளையோர் கரத்தில் மடிக்கணினி கொடுத்து உலகை உள்ளங்கைக்குள் உட்கார வைத்த ஒப்பில்லா கழகத்தை முப்பொழுதும் தப்பென்று பழிக்கிறார். மஞ்சள் துண்டு தயவு கூடவே, ஒன்றே முக்கால் லட்சம் கோடி கொள்ளையர்க்கு ஒத்தடமும் கொடுக்கிறார். மஞ்சள் துண்டின் தயவில் மக்கள் திலகத்தின் இயக்கத்தை வன்மத்து வார்த்தைகளால் வசைபாடி திரிகிறார்.

புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவியின் புகழ்மனத்து இயக்கத்தை புண்படுத்தி மு.க.வை மகிழ்விக்க முன்னோட்டம் பார்க்கிறார். ஓடுவேன் என்றார் ஒரு படம் ஓடாவிட்டாலே ஓடுவேன் நாட்டைவிட்டு என்ற இந்த ஒப்பாரித் திலகம் குகையில் சிம்மம் இல்லை என்றதும் ஒத்தைக்கு ஒத்தை வர்றியா என்பதாக ஊளையெல்லாம் இடுகிறார். காவி மீது பாசம் கருப்புச் சட்டை போட்டுக்கிட்டு சாதிக்கு ஆலவட்டம் வீசுகிற சாடிஸ்ட் கோஷம் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிவைத்து காவி மீதும் பாசம். காவேரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன், கெயில், நெடுவாசல், 'நீட்...' என்றெனும் தமிழர்தம் உரிமை என்றால் மட்டும் மன்மத வம்பன் போடுவதோ மவுன விரத வேஷம். உலக்கை நாயகன் இந்த உலக்கை நாயகனின் விமர்சன எல்லையெல்லாம் கழகத்தைப் பழிக்கிற ஓரம்ச திட்டம் மட்டும் என்றால் அதனை உலகம் சுற்றும் வாலிபனின் இயக்கம் ஓட ஓட விரட்டும்.



ஊழல் நிறைந்த ஆட்சி என்று கமல் சொன்னதைத்தான் ஓட்டுபோட்ட நாளிலிருந்து மக்கள் காசுவாங்கி ஒட்டு போட்ட பாவத்திற்காக சொல்லாமல் அடுத்த தேர்தலை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆளும்கட்சிதான் அவரை வசை பாடுகிறது என்றால் "ஏன் சங்கத்து ஆள எவண்டா அடிச்சது" என்று எலும்பு நிபுணரும் டுமீளிசையும் கமல்மீது சேற்றை வாரி இறைப்பதாக நினைத்து தாங்களே சாக்கடையில் முங்கி எழுந்திருக்கின்றனர்.

ஆளுங்கட்சி அல்லக்கைகள் ஒருபடி மேலே போயி அவரது 
 சொந்த வாழ்க்கையை விமர்சிக்கின்றனர். அதுவும் ரெட்போர்ட்டான்
 சொல்லுவதுதான் முரண். இவர் கட்டியவளை விட்டு செட்டப்புடன் இருப்பதாக கட்டியவள் ஒற்றை ரோசாவிடம் முறையிட்டதால் அமைச்சர் பதவிய இழந்தவர்.

எது எப்படியோ நல்ல ஷோதான். 


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 19 July 2017

கலக்கல் காக்டெயில் 180

அரசியலுக்கு ஆண்டவர் தேவை 

ஒரு நடிகர் அரசியலுக்கு வரேன்னு சொல்லவே இல்ல அதுக்குள்ளே எல்லா ஊடகங்களும் இதோ வாராரு, அதோ வராரருன்னு ஒரு ரெண்டு மாதம்  அலறினானுக.....

போதாத குறைக்கு அஞ்சு ஒட்டு பத்து ஒட்டு வாங்கினவனுங்க அவரு வந்தேறி மரமேறி அவர விடமாட்டோம்........அவருக்கு அறிவு பத்தாது என்று தங்களது அறிவின் முழு வீச்சை முஷ்டி முறுக்கி முழங்கினார்கள்.

இப்போ பேட்டை ஆண்டவர் வழக்கம்போல் புரியாத கவிதை எழுதி அரசியல் வியாதிகளின் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கிறார்.

இவர்கள் வருவார்களா மாட்டார்களா தெரியாது, ஆனால் இவர்களை எதிர்த்து குரல் கொண்டுத்துக்கொண்டிருக்கும் அல்லக்கைகளின் பயம் மக்களுக்கு புரியும்.

பணம் பரப்பன அக்ரஹாரா வரை பாயும்

தவ வாழ்வு வாழும் மினியம்மா பரப்பன ஆக்ராஹரவில் பூனை நடை நடந்து கடைத்தெரு செல்லும்  காட்சி கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சிறையின் முதலாவது மாடியில் ஐந்து அறைகளை ஆக்கிரமித்துக் கொண்டு வேண்டியதை சமைத்து உண்டு கிட்டத்தட்ட  போயஸ் தோட்ட வீட்டு வாழ்க்கை போல  வாழ்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

இந்த செட்டப்பிற்கு இரண்டு கோடி மொத்தமாகவும் மாதத்திற்கு கை செலவிற்கு மூன்று லட்சம் கொடுத்து வருவதாகவும் பேசப்படுகிறது.

அஞ்சு பத்து ஆட்டையப்போடுரவனுங்க இனியாவது திருந்துங்க...அடிச்சா ஐநூறு ஆயிரம் கோடின்னு அடிங்கடா அப்ரசண்டிகளா!!!!!

ரசித்த கவிதை  

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தேழுவோம் மனதளவில் உம்போல் யாம்  மன்னரில்லை
தோற்றரிந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
பேடா மூடா எனலாம் அது தவறு
தேடாப்பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்
அன்புடன்
நான்

கவிஞர்: ஆழ்வார் பேட்டை ஆண்டவர் 

புரிவதும் புரியாததும் அவரவர் தமிழ் அறிவை சார்ந்த விஷயம்

பிக் பாஸ்  



பிக்பாஸ் வாக்கெடுப்பில் ஜனநாயக கடமை ஆற்றும் "ஓவியா புரட்சிப்படை தொண்டர்களுக்கும்" மற்றும் கள்ளவோட்டு போடும் கடமை வீரர்களுக்கும் சமர்ப்பணம்



Follow kummachi on Twitter

Post Comment

Sunday 5 March 2017

கலக்கல் காக்டெயில் 179

சசி இல்லேன்னா சுசி 

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லை. ஒரு வழியாக ஜல்லிக்கட்டு முடிந்து, ஒ.பி.எஸ், மினிம்மா, பரப்பன ஆக்ராஹார, தினகரன், எடப்பாடின்னு செட்டில் ஆகும் பொழுது மீண்டும் பரபரப்பு ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் நெடுவாசலில் மையம் கொண்டிருந்தது.

அந்த போராட்டம் வலுப்பெற்று அரசை ஆட்டிப்பார்க்கும் வேளையில் அடுத்த புயல் ஆபாச வேடம் தாங்கி இளைஞரை திசை திருப்புகிறது.

பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் தளத்தில் இரண்டு நடிகர்கள் கையைப்பிடித்து இழுத்தார்கள் என்று புலம்பலுடன் தொடங்கி (ஏம்ப்பா நீ கையபிடிச்சு இழுத்தியா?) பின்பு அவர்கள் சில நடிகைகளுடன் கில்மா வேலையில் இருந்த ஒரு சில பிட்டு படங்களைப் போட்டு அடுத்து இந்த நடிகர் இந்த நடிகையுடன் திங்கள் கிழமை வெளியிடுவேன், மற்றுமொரு நடிகர் நடிகையுடன் செவ்வாய்க்கிழமை வெளியிடுவேன் என்று ஒரு அட்டவணையே வெளியிட்டு நெட்டிசண்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்....

மேலும் ஒரு சில பாடகிகள், நடிகைகள் எப்படி வாய்ப்பு பெற்றார்கள் என்ற "casting couch" கோடம்பாக்க பழக்க வழக்கங்களை கொட்டி இருக்கிறார்.

இணையப்போரளிகளின் கவனம் இப்பொழுது சசியை விட்டு சுசியிடம் திரும்பி உள்ளது.

தண்ணீர் பஞ்சம்

கடந்த வருடம் பருவமழை பொய்த்த காரணத்தால் இந்த வருடம் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடப்போகிறது என்று நீர் நிலைகளின் இருப்பு சொல்கிறது. கோவை, நெல்லை தவிர மற்ற மாவட்டங்கள் இந்த தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். தற்பொழுது நடக்கும்!!!! அரசு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை. முன்னேற்பாடுகள் அவசியம். ஆனால் ஆளும் கட்சியோ தங்கள் பஞ்சாயத்தை தீர்ப்பதில் மும்முரமாக உள்ளார்கள்.

வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனோபாவம். அது சரி அடுத்த தேர்தல் வந்தால் இருக்கவே இருக்கறது கண்டைனர் பணம்............போடுங்கம்மா ஒட்டு....

ரசித்த கவிதை 

சந்திப்பு 

நீண்ட நாட்களுக்குப் பிறகு
அப்பாவின் நண்பர் ஒருவரை
வழியில் சந்திக்க வாய்த்தது
அவரின் மகனாவென
அவரும் கேட்கையில்
இறந்து வருடங்களான
அப்பா குறித்து பகிர்ந்திட
என்னிடம் எதுவுமில்லை
எனினும்
எங்கள் கண்கள்
சந்தித்து மீண்ட
அச்சிறு தருணத்தில்
எனக்குள்ளிருந்த அப்பாவும்
அவருக்குள்ளிருந்த அப்பாவும் புன்னகைத்தபடி
கைகுலுக்கிக் கொண்டதை
என்னைப்போல அவரும்
உணர்ந்திருக்கக்கூடும்.

நன்றி: கே. ஸ்டாலின்

சினிமா

அதேகண்கள் என்ற திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது, வித்யாசமான கதை. ஆட்டம்போடும் நடிகர்களுக்கு நடுவில் சத்தமில்லாமல் நல்ல கதை களத்தில் ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர் நடிகைகள் நடிப்பில் வெளிவரும் இது போன்ற படங்கள் நன்றாகவே உள்ளன. என்ன ஒரு கூட்டம் இதெல்லாம் தியேட்டரில் பார்க்கமுடியாது என்று விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு சொம்படிப்பர்.

அதேகண்கள் ஷிவ்தா நாயர்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 2 March 2017

விதிக்குரங்கின் சேட்டைகள்

வீடு வாசல் துறந்து
கடற்கரையில் திரண்டு
நாடு வியந்து நோக்க
அமைதி வழியில் நடந்து
அதிரடியில் அரசாங்கம்
அவசர சட்டம் இயற்றி...
நாடு மெச்சும் வகையில்
வாடி வாசல் திறந்து .
அரசியல் அவலங்களை
அசதியுடன் கடந்து..
இனி வரும் காலங்கள்
இனிதாக இருக்கும் என்று
இறுமாந்து போகையிலே
அடுத்து வரும் அறிவிப்பு
நெடுவாசல் தொட்டு
தமிழ்நாட்டை அழிக்க வந்த
இயற்கை எரிவாயு திட்டமாம்
மறுபடியும் மக்களை
வீடு வாசல் விட்டொழித்து
நடு வீதியில் நிற்க வைக்கும்
நன்மை பயக்கும் திட்டம்!!
வாழ்க்கை சீரமைய
போராட்டங்கள் அவசியம்
போராட்டங்களே வாழ்க்கை ..
என்றாகிப்போனது.....
விஞ்ஞான வளர்ச்சியின்
பெயரில்.....
வியாபாரிகளின் உயரிய
நோக்கில்....
விதிக்குரங்கின்.................
சேட்டைகள்



Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 28 February 2017

ஹைட்ரோகார்பன்-பெரியகுடும்பம்

நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நெஞ்சமே.......

டேய் ஹாஃப் பாயில் மண்டையா என்னடா பாட்டு பாடின்னு வர, அடேய் கும்மாச்சி தலையா இந்த மாதிரி பாட்டெல்லாம் எங்கேந்துடா பிடிக்கிற...

அதுக்கெல்லாம் ஞானம் வேணுமுன்னே....

டேய் கரிசட்டி தலையா நக்கலு.... வந்த வேலை என்ன அத்த சொல்லு. எனக்கு வேல இருக்கு இந்த பெட்ரோமேக்ஸ் லைட்டுக்கு இன்னிக்குதான் வேல வந்திருக்குது...இதுக்கு பத்து ரூபா வாடக வரப்போவுது.

அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே....

உனக்குமாடா....

அண்ணே இந்த ஹைட்ரோகார்பன்....ஹைட்ரோகார்பன்...அப்படிங்கறாங்களே அப்படின்னா என்ன அண்ணே..........

அப்படி கேளுடா............அதுக்குதான் இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா வோணும்....டேய் அது ஒரு பெரிய குடும்பம்டா....நீ உக்காந்துன்னு இருக்கியே இத்து போன பிளாஸ்டிக் அதுல கூட இருக்குதுடா...

அட்ப்போங்கன்னே சும்மா சொல்லுறீங்க...

டேய் அதுல மெய்னா.....ரெண்டு ஜாதி இருக்கு....அலிஃபேட்டிக்கு....ஆரோமடிக்குனு...அதுக்கப்புறம் அதோடா கொழுந்தியா, கூத்தியா குடும்பமுன்னு இப்படி ஏகப்பட்டது இருக்குடா...வடசட்டி தலையா....

அண்ணே அண்ணே சொல்லுங்கண்ணே...அண்ணிகிட்ட சொல்லமாட்டேன்..

டேய் இப்போ நான் என் கதையா சொல்லுறேன்...அண்ணி நொந்நின்னு....

சரிங்கண்ணே....சொல்லுங்கண்ணே

டேய்  குடும்பமுன்னு ஒரு ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்தா சொல்லுறோம்...இங்க கார்பனும்...ஹைட்ரஜனும்டா...பாய்லர் தலையா....

அடப் போங்க அண்ணே

டேய் இதுல மெய்னா இருக்காங்க பாரு மீதேன், ஈதேன், ப்ரோபேன், ப்யுட்டேன்,பென்ட்டேன், ஹெக்சேன், ஹெப்ட்டேன், ஆக்டேன்,  நானேன், டேகேன்...இவனுங்க எல்லாம் அண்ணன் தம்பிங்க...எல்லாம் சிங்கள் பாண்டு...இவனுங்க எல்லாம் ஊருல ஆல்கேன் குடும்பமுன்னு சொல்லுவாங்க

 எண்ணே கொளுத்துக்காரனுன்களா...பாண்டு வச்சிகிறாங்க.

டேய் பாலி ப்ரோபிளின் தலையா...அதாவது அவனுங்க எல்லாம் எண்ணிய மாதிரி ஒரு பொண்டாட்டி காரனுங்க...இவனுங்க பங்காளிங்க இருக்கானுங்க அவனுங்க ரெண்டு பாண்டு...அதாவது ரெண்டு பொண்டாட்டி காரனுங்க, இவனுங்கள ஆள்கீன்ஸ் குடும்பமுன்னு சொல்லுவாங்க...

அப்படிங்களா அண்ணே..அவனுங்க பேரு என்ன அண்ணே

இன்ன அப்படிங்களா..அப்படி கேளுடா. ...அவனுங்க இருக்கானுங்க எதிலின், ப்ரோபீன், ப்யூடின்........அதே ரேஞ்சுக்கு இருக்கானுங்க...

அப்பா மூணு பொண்டாட்டி வச்சிக்கிறது....நம்ம தலீவரு கணக்கா..

டேய் பென்சீன் வாயா...இன்ன என்ன மாட்டிவுடுறையா..மவனே சிசிஎல் போர...வாயில ஊத்திடுவேன்.

இல்லிங்கண்ணே நம்ம பஞ்சாய்த்து தலைவர சொன்னேன்....


டேய் அவனுங்க மூணு பாண்டு காரனுங்க....அவனுங்கள ஆல்கைன்ஸ் குடும்பமுன்னு சொல்லுவாங்க...ஒவ்வொருத்தனும் மூணு பொண்டாட்டி வச்சிருப்பானுங்க...இவனுங்கள ஊருக்குள்ள ஆள்கைன்ஸ் குடும்பமுன்னு ஊருல சொல்லுவானுங்க...

அப்ப அந்த ஆரோமடிக் குடும்பமுன்னே....

அவனுங்க இணைவி, துணைவி, எடுப்பு..தொடுப்புன்னு நிறைய வச்சிக்கிட்டு சுத்தி சுத்தி வருவானுங்க....சைக்ளிக் குடும்பமுன்னு சொல்லுவானுக...

அண்ணே அது என்ன அண்ணே அரோமாடிக்.

அடேய் பிட்டுமின் தலையா...............ஆரோமேடிக்...ன்ன கப்பு.....இந்த குடும்பக்காரனுங்க எல்லா உன்னிய மாதிரி ....கப்பு வாயனுங்க.

இவனுங்களுக்கு பொறந்த வாரிசு நெறைய இருக்கு................ஐசொமேர்....பாலிமர் ன்னு வச வச ன்னு பெத்து உட்டுருக்கானுங்க....

அவனுக பேரு என்னன்னே ...............

அவனுங்க இருக்கானுங்க பாலிஎதிலின், பாலிப்றோபிளின், ஸ்டைரீன், ஸ்டில்பீன்....பாலி ஸ்தைரீன்...ஏகப்பட்ட பேரு இருக்கானுங்க...

இன்னங்கன்னே வெள்ளகார பேரா இருக்குது.............

ஆமாண்டா டொலுவீன்....வாயா.....

ஆமாம் இவரு பெரிய ஜி.டி.நாய்டு....கண்டு பிடிச்சிட்டாரு........டேய் அவனுங்க வெள்ளக்காரி......சைனாகாரின்னு ...........ஒன்னோட ஒன்னு கலந்துட்டுவங்கடா..............

அப்புறம் அண்ணே..........

இன்ன அப்புறம்....விழுப்புரமுன்னுட்டு.................இந்த மேண்டில கை வைக்கிறதுக்கு முன்னே கெளம்பு....

அண்ணே நீங்க பெரிய ஆளு அண்ணே..............

டேய் நான் யாருடா..............ஹவார்டு, ஸ்டான்போர்டு, யுனிவர்சிட்டில...ப்ரோபெசரா...இருக்க வேண்டியவண்டா...ஏன் நேரம் உன் மாதிரி நாப்தலின் மண்டையன்கிட்ட கெமிஸ்ட்ரி பேசிட்டு...........பெட்ரோமேக்ஸ் தொடச்சிகிட்டு இருக்கேன்...

அண்ணே இந்த மீத்தேன....அல்கேன் வச்சிகிராறு..........அந்த ஸ்டில்பீனா யாரு அண்ணே வச்சி இருக்காங்க.............

டேய் களோரஃபாம் வாயா............ஒரு ப்ரோபெஸர பாத்து கேட்கிற கேள்வியாடா இது..................

Follow kummachi on Twitter

Post Comment

Monday 27 February 2017

ஹைட்ரோகார்பன் திட்டம்-நெடுவாசல்

மீபத்திய செய்திகளில் நாம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பது ஹைட்ரோகார்பன் திட்டம்,  நெடுவாசல் என்ற இரண்டு வார்த்தைகளை. இந்த திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம். இந்தியாவின் வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு நடுவண் அரசு தமிழ் நாட்டில் கொண்டு வரும் திட்டங்கள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை. மாறாக தமிழ் நாட்டை ஒட்டு மொத்தமாக அழிக்கப் போகிறது.

நெடுவாசலில் பூமிக்கடியில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோகார்பன்) வளம் உள்ளது என்று சில வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. தற்பொழுது அந்த இயற்கை எரிவாயுவை வெளிக்கொணரும் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது. அதற்கு தமிழக அரசும் ஒப்புதல் கொடுத்துவிட்டது. யார் கொடுத்தார்கள் என்று ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் ஒருவரை ஒருவர் கை காண்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு தெரியும் இருவருமே காரணம் என்பது.

இந்த திட்டத்தின் சாதக பாதங்கங்களை அலசிப்பார்த்தால் இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகளை விட இழப்புகள் அதிகம் என்பதை பாமர மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த குழம்பியக் குட்டையில் அரசியல் மீன் பிடிக்க சில அல்லக்கைகள் கூட்டம் கூட்டி மைக் பிடித்து ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன, அது மீதேன் தான்பா அதுக்கு இன்னொரு பேர் இருக்கு என்று பாட்ஷா வசனம் பேசிக்கொண்டு ஜல்லியடிக்கிறார்கள். சீமானோ இந்த வாயுவை எடுக்க (அவரது கூற்றின் படி காற்று) ஆழ்துளை கிணறுகள் தோண்டும் முறை அதனால் பூகம்ப வாய்ப்பு என்று அடித்து விட்டுக்கொண்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் அவர்கள் பங்கிற்கு "யாரோ பானபுத்திரறாம், பத்திரரும் இல்ல புத்திரரும் இல்ல" என்று ஹைட்ரோக்கர்பனை வைத்து "செய்து"கொண்டிருக்கிறார்கள்.
இது தான் மீதேன் கிணறு என்றும் இதை அணைக்க இதை தோண்டிய நாடு  இன்னும் முயன்று கொண்டிருக்கிறது என்று!!!! அடேய் அடேய் சும்மா அடிச்சு விடாத!!!!!

ஹைட்ரோகார்பன் பற்றிய ஆராய்ச்சியை பத்தாம் வகுப்பு மாணவர்களின் வேதியல் தேர்விற்கு விட்டுவிடுவோம். நெடுவாசல் மக்கள் நன்றாகவே தெரிந்துகொண்டுதான் இப்பொழுது போராடுகிறார்கள் என்பது உண்மை.

கர்நாடக வளர காவிரி யு டர்ன் அடித்தது
ஆந்திரா கொழிக்க பாலாறு வரண்டது
கேரளா செழிக்க முல்லைபெரியாறு முடங்கிவிட்டது
கோக்ககோலா ஓட தாமிரபரணி நின்றது
இலங்கை இன்புற மீனவர்கள் துன்புறுகின்றனர்.
இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை.

போராடுபவர்களுக்கு முடிந்தால் நாம் உதவுவோம், அதுவரை இந்தப் பிரச்சினையில் குளிர்காய நினைக்கும் ஒட்டு பொறுக்கிகளே ஒதுக்கி வைப்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 21 February 2017

கலக்கல் காக்டெயில் 178

மிஸ் யூ தலைவா....

இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் தமிழகம் கண்டிப்பாக ஒரு சிறந்த அரசியல் தலைவரின் அறிக்கைகளையும், போராட்ட வியூகங்களையும் இழந்திருக்கிறது. என்னதான் செயல்தலைவர் ஒரு சில முடிவுகளை எடுத்து அரசியல் ஆர்பாட்டங்கள் நடத்தினாலும் தலீவரின் ஒரு அறிக்கை செய்யும் மாயத்தை செய்யமுடியவில்லை.

எவ்வளவோ அரசியல் எதிரிகளை பார்த்துவிட்டார். இவரது அறிக்கைகளின் தன்மை எதிரிகளை சும்மா இருக்க விடாது, ஒன்று பதிலறிக்கை வெளியிடவேண்டும் அல்லது அவர் சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்திவிட்டு ஜல்லியடித்தாக வேண்டும்.  இதற்கு சிறந்த உதாரணம் மறைந்த இரண்டு முதலமைச்சர்களுமே. இருவருமே இவரது எதிர்கட்சி செயல்பாட்டுக்கு தெரிந்தோ தெரியாமலோ மதிப்பளித்தனர்.

தலைமைசெயலகத்திலிருந்து தகவல்கள் முதலமைச்சருக்குப் போகுமுன்பே எதிர்கட்சி தலைவரான இவரது வீடு தேடி வந்துவிடும். அதை வைத்துக்கொண்டு இன்னும் பல புள்ளிவிவரங்களையும் வைத்து வார்த்தை ஜாலத்தில் அறிக்கை வாயிலாக எதிரணிக்கு குடைச்சல் கொடுப்பார்.

இன்று அவர் செயல்படும் நிலையிருந்தால்.....

ஊழல் பெருச்சாளிகளின் சாம்ராஜ்யம் முடிந்தது
வளையில் பெருச்சாளிகள்
கவலையில் மக்கள் ..............
உடன்பிறப்பே
உண்மத்தம்கொண்டோர்
கூவத்தூரில்
கூடியிருக்க
களம் பல கண்ட நாம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
அறமே தவமெனக் கொண்டு
ஆட்சி அமைப்போம்...

என்று அடித்துவிட்டிருப்பார்.

மிஸ் யூ தலைவா.................


றைந்திருக்கும் எதிரி 

முதன் முதலாக தமிழக மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஒரு வருட காலத்திலேயே எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். வழக்கமாக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை இந்த முடிவை எடுப்பார்கள். அதற்கு காரணம் தற்பொழுது நடந்த உட்கட்சி பூசல்களும் கட்சியையும் ஆட்சியையும் ஒரு மாஃபியா கும்பல் கபளீகரம் செய்வதை தடுக்க முடியாத கையாலாகத்தனம்.

ஏழு கோடி மக்கள் விரும்பாத ஒரு முதலமைச்சரை வெறும் 122 பேர் முடிவில் வைக்கும் நமது அரசியல் சாசனத்திற்கு இப்பொழுது தேவை ஒரு சீராய்வு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட முடிவை எதிர்கொள்வது, ஏற்கக்கூடியதல்ல.

இனி நமது போராட்டம் இந்த காசு போட்டு ஒட்டு பொறுக்கும் அரசியல்வாதிகள் மேல் மட்டுமல்லாமல் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் மீது திரும்ப வேண்டியது அவசியம்.

சித்த கவிதை

நீதியை தேடி 

நித்திரையில் வரும் கனவோ!
நிழலாய்த்தொடரும் உறவோ!
கடையில் இருக்கும் பொருளோ!
காகிதத்தில் எழுதும் கதையோ!

நீதியும் தராசும் நிதியின் பக்கம் -
நிழலாய்ப்போனதில் 
மெய்யும் இன்று 
பொய்யாய்ப்போனதே!

வாய்தா வாங்கியே வழக்கும் நீளுது!
வறுமை அன்றோ வரட்சியில் வாடுது !
கேட்டுப்பையில் காசும் நிறைந்தது !
கோர்ட்டில் ஃபைலோ கேசாய் குமியுது!

நீதியைத்தேடி ஒரு கூட்டம் !
நித்திரை தொலைத்து ஒரு கூட்டம்!
தானாய்  சேருது ஒரு கூட்டம்!
இணையதளத்தால் கூடுது ஒரு கூட்டம் !
வீதியைய் நிறைத்தது ஒரு கூட்டம்! 
விளங்கவும் மறக்குது ஒரு கூட்டம் !

நாட்டை பிடித்த கேடா!
நயவஞ்சகத்தின் நாடா!
எதிர்க்க துணிந்தோம்;
எதிரியும் இல்லை!

நன்றி: H. ஹாஜா மொஹினுதீன் 

மிழ் சினிமா 



2017 ம் வருடத்தில் இதுவரை 21  படங்கள் வெளிவந்துள்ளன. சரி அதனால் என்ன? என்றுதான் கேட்கிறீர்கள். ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம் (வாயால் வடைசுடும் வியாபர தகவல்கள் நீங்கலாக).

2016  டிசம்பரில் வெளிவந்த "துருவங்கள் பதினாறு" நல்ல படம் என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள் இன்னும் பார்க்கவில்லை.

தெலுங்கு திரைப்பட உலகில் இந்த வருடம் 8 திரைப்படங்கள் வந்ததில் நான்கு அமோக வெற்றியாம், தயாரிப்பாளர்கள் இப்பொழுது அங்கு ரீ மேக் உரிமைக்கு அடித்துக்கொண்டிருப்பார்கள். 

Follow kummachi on Twitter

Post Comment

Monday 20 February 2017

எடப்பாடி பயோடேட்டா

இயற்பெயர்-----------------இடைப்பாடி பழனிசாமி
இடைப்பட்ட பெயர்------எடப்பாடி, எடுபிடி, டெ..பாடி இன்னும் சில
தற்போதைய வேலை---நாற்காலியை சூடாக வைத்திருப்பது
நிரந்தர வேலை------------பெஞ்சு தட்டுவது
பலம்-----------------------------தனக்கே தெரியாதது
பலவீனம்----------------------மக்களுக்கு தெரிந்தது
சமீபத்திய சாதனை-----கூவத்தூர் கும்மாளம்
நிரந்தர சாதனை----------முதலமைச்சர்!!! எவ்வளவு நாளோ???
மறக்காதது-------------------சின்னம்மா சபதம்
மறந்தது------------------------பெரியம்மா மரணம்
சமீபத்திய எரிச்சல்-------சபாநாயகர் கணக்கு
நிரந்தர எரிச்சல்------------தொகுதி மக்கள்
சமீபத்திய நண்பர்--------தினகரன்
நிரந்தர நண்பர்-------------கட்சியில் இல்லை
சமீபத்திய எதிரி------------ஓபிஎஸ்
நிரந்தர எதிரி----------------சமீபத்திய நண்பர்
பிடித்த பல்லவி-------------யார் தருவார் இந்த அரியாசனம்....
பிடிக்காத பல்லவி--------இது எங்க ஏரியா உள்ள வராதே...

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 16 February 2017

தாமதிக்கப்பட்ட நீதியும் தரங்கெட்ட அரசியலும்

சொத்துக்குவிப்பு வழக்கின் உச்ச(சா) நீதிமன்ற தீர்ப்பு விசாரணை எல்லாம் என்றோ முடிவடைந்த நிலையில் நேற்றைய முன் தினம் வெளியானது. மறைந்த முதலமைச்சர் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்ட போதே இந்த தீர்ப்பு தேதி குறிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது. அதன் காரணம் ஒன்றும் நாம் அறியாததல்ல.

இந்த வழக்கின் போக்கை முதலிருந்தே கவனித்தவர்களுக்கு தெரியும் இதன் தீர்ப்பு எப்படி இருக்குமென்று. இடையிடையே வழக்கை எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ அந்த அளவிற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து விளையாடினார்கள் என்பதை நாடறியும்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு நகலை படித்தவர்களுக்கு தெரியும் இந்த வழக்கு இனி எங்கு சென்றாலும் குன்ஹா தீர்ப்பை மாற்றுவது கடினம் என்று, ஏனெனில் இந்த வழக்கில் ஆதாரங்கள் மிகவும் நேர்த்தியாக சமர்பிக்கப்பட்டு இருந்தது. குன்ஹா தீர்ப்பை விலாவரியாக எழுதி (கிட்டத்தட்ட ஆயிரத்தி நூறு பக்கங்கள்) வருமானத்திற்கும் சொத்துக்களுக்கும் உள்ள வித்தியாசத்தை புட்டு புட்டு வைத்திருந்தார். இடையே வந்த குமாரசாமி ஒரு புதிய கணக்கை உண்டாக்கி வருமானத்திற்கும் சொத்துக்களுக்கும் உள்ள வித்யாசம் ஒரு எட்டு விழுக்காடுதான் "தப்பிச்சுக்கோ" என்று தீர்ப்பு எழதினார். இந்த தீர்ப்பு நகலைப் படித்தவர்கள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டனர்.

ஆனால் கர்நாடக அரசு இதை விடுவதாக இல்லை உச்ச்நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்து தங்களது பணியை செவ்வனே செய்தது. இந்த வழக்கு உச்ச்சநீதிமன்றத்திற்கு வந்த பொது இது ஒரு "OPEN AND SHUT CASE" என்று சட்ட வல்லுனர்களுக்கு தெரிந்திருக்கும். ஏன் என்றால் உயர்நீதிமன்ற தீர்ப்பில் உள்ள கணக்கு குளறுபடிகள்.

ஆனால் தீர்ப்பு சில அரசியல் காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் அரசியல் போக்கே மாறியதை நாம் இப்பொழுது பார்த்துக்கொண்டிருக்கிறோம். இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் உடல் நிலை காரணமாக  கிட்டத்தட்ட செயல்படாத நிலையில் இருந்தார். இதனால் அரசாங்கம் ஸ்தம்பித்தது. அவரது நேரடி பார்வை இல்லாததால் அல்லக்கைகள் ஆட்டையைப் போட ஆரம்பித்தனர். கூடவே இருந்த கூட்டமோ தங்களது ஆட்டத்தை முடுக்கிவிட்டது. பிறகு முதலமைச்சர் நோய்வாய்ப்பட அப்போலோ வாசலில் அமைச்சர்கள் நின்று காவடி எடுத்து அதிகாரிகளின் கையில் ஆட்சி போக பின்னர் நடந்த குளறுபடிகளும் அதன் தொடர்ச்சியாக நடந்த வருமானவரித்துறை நடத்திய அதிரடி நடவடிக்கைகளும் தமிழகத்தின் கேவல நிலையை வெட்ட வெளிச்சமாக்கியது.

முதலமைச்சரின் மர்ம சாவு, பின்னர் மாஃபியாக்களின் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற ஆடிய ஆட்டங்கள் தற்பொழுது தமிழகத்தின் இன்றைய நிலை ஒரு கேலிக்கூத்து.

கட்சியின்
நிரந்தரப் பொதுசெயலாளர் செத்துப்போயிட்டார்.
தற்காலிக பொதுசெயலாளர் ஜெயிலுக்கு போயிட்டார்
துனைப் பொதுச்செயலாளர் இப்போதான் கட்சியில் சேர்ந்துள்ளார்
முதலைச்சர் கட்சியிலேயே இல்லை
எம்.எல். ஏக்கள் எங்க இருக்காங்கன்னு தெரியல
எம்'பி'க்கள் எதுக்கு இருக்காங்கன்னு தெரியல
காவல்துறை எந்தப்பக்கமுன்னு அவங்களுக்கே தெரியல
ஆளுநருக்கு ஒன்னும் புரியல...............

இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக நான்கு பெரும் குற்றவாளிகள் என்றும் மினிம்மா கூட்டம் இந்த ஆதாயத்திற்காகவே மறைந்த முதலமைச்சருடன் தங்கி இருந்தனர் என்று நாமறிந்த உண்மையை ஊரறிய சொல்லியிருக்கிறது.

குற்றவாளியின் புகைப்படங்கள் அரசாங்க அலுவலகங்களிலோ இல்லை சட்டசபையிலோ இருக்கக்கூடாது அகற்றப்படவேண்டும் என்று சட்டம் சொல்லுகிறது.

பிறந்த குழந்தைமுதல் இறந்த பிணம் இன்ன பிற அரசு நிவாரணப்பொருட்கள் என்று எல்லா இடத்திலும் ஸ்டிக்கர் ஒட்டியவர்களின் கதி அந்த முகத்தை எங்குமே யாரும் பார்க்கக்கூடாது என்று விதி வழிவிட்டுவிட்டது.

அதிகாரத்தில் இருந்த பொழுது அனைவரையும் காலடியில் விழவைத்த கொடுமை இப்பொழுது கால்களோடு புதைப்பட்டதா  இல்லையா என்ற சர்ச்சையை இழுத்து விட்டிருக்கிறது.

கூடவே இருந்த குழிபறித்து ஆட்டடையை போட்ட கூட்டம் களி தின்ன சென்றுவிட்டது.

ஆடி அடங்கும் வாழ்கை, ஆறடி நிலம்தான் சொந்தம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் யாரும் ஆட்டத்தை நிறுத்தப்போவதில்லை.........

இதுவும் கடந்து போகும்.....

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 7 February 2017

அப்போல்லோவின் அல்வா.....புத்தம் புதிய படம்

நேற்று மன்னார்குடி மாபியா  தயாரிப்பில் யாரும் எதிர்பாராமல் வந்த புத்தம் புதிய படம்

அப்போல்லோவின் அல்வா  (Truth Prevails)

திரைக்கதை, வசனம், இயக்கம் ---------ம. நடராசன்
அறிமுக நடிகர்கள்----------------------------- டாக்டர்கள்  ரிச்சர்ட்  பெலே,
 சுதா சேஷையன், பாலாஜி, பாபு
ஒளிப்பதிவு-----------------------------------------எல்லா டி,வி. சேனல்களும்
ஒளிப்பதிவு மேற்பார்வை--------------------தந்தி டி.வி மற்றும் ஜெயா டிவி
இசை---------------------------------------------------மன்னார்குடி கோஷ்டி

இந்த படத்தின் ட்ரைலர் வந்த போதே முழ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி இருந்தது. நமது எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா?  படத்தை பார்ப்போம்...

முதலில் திரை கதை வசனம்  எழுதியதில் ஒரே குழப்பம், இயக்குனர் பல இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார்.  கதை என்னதான் மறைந்த ஓரு மனிதரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை நீக்குவதை நோக்கி எழுதப்பட்டாலும் ட்ரைலரில் இடம் பெற்ற இட்லி கேட்டு வாங்கி சாப்பிடும் காட்சியையும், பந்தடித்து விளையாடிய காட்சியையும் படத்தில் கடுகளவு கூட காண்பிக்கவில்லை,

ரிச்சர்ட் பெலேவின் நடிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை, அவர் என்னதான் இயக்குனரின் நடிகராக இருந்தாலும் பட இடங்களில் தேவையான உடல் மொழியை தரவில்லை. வசன உச்சரிப்பில் அசத்தியிருக்கிறார். இருந்தாலும் வெளிநாட்டு நடிகர் என்பதால் அவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற இயக்குனரின் நம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் காட்சிகளில் தர வேண்டிய முகபாவங்கள் மற்ற நடிகர்களிடம் மிஸ்ஸிங். சுதா சேஷையன் எம்பாமிங் செய்யப்பட்டதை விளக்கியது ஏற்றுகொள்ள முடிந்தாலும், அவரை அழைக்கப்பட்ட நேரமும், செய்த நேரமும் முன்னுக்கு பின் முரணாக இருப்பது இயக்குனர் சறுக்கிய இடம். மேலும் அதற்குண்டான அவசியத்தை விளக்காதது கதையில் விழுந்த மெகா சைஸ் ஓட்டை.

படத்தில் நகைச்சுவையை அங்கங்கே அள்ளி தெளித்திருப்பது ஓரளவுக்கு நன்றாக இருந்தது. முக்கியமாக விசிடிங் கார்டு பற்றிய கேள்விக்கு பெலே அளித்த பதில் வயிறு குலுங்க சிரிக்கவைத்தது. வாங்கியவரை தெரியாது ஏதோ ஜோசியர் போல் இருக்கிறது என்று சொல்லும் பொழுது தியேட்டரில் ஒரே ஆரவாரம்.

ஆளுநர் பார்த்தார், பார்க்கவில்லை என்று ஒவ்வொரு கேரக்டரும் மாற்றி மாற்றி சொல்லுவது கதையை மேலும் குழப்புகிறது. எடிட்டர் கோட்டை விட்ட இடம் போல....

பின்னணி இசை நன்றாக இருந்தது. முழ படத்திலும் பின்னணியில் ஏமாறாதே ஏமாற்றாதே என்ற பாடலின் ரீ மிக்சிங்கை வைத்து நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்கள். பாடல்கள் சுமார் ரகம்.

"சின்னம்மா இப்படி பண்றீங்களேம்மா", "சின்னம்மா என்றழைக்காத டயர் நக்கிகள் இல்லையே" பாடல்கள் மீண்டும் கேட்கத்தூண்டும்.

மொத்தத்தில் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்றால்......இல்லை

விகடன் ரேட்டிங் 0/100

மொத்தத்தில்அப்போல்லோவின் அல்வா-------தயிரில் ஊறிய குலாப் ஜாமூன் 

Follow kummachi on Twitter

Post Comment

Monday 6 February 2017

சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

மினிம்மா நேற்று எல்லா ஆளுங்கட்சி சட்டசபை உறுப்பினர்களையும் கட்சி அலுவலகம் வரவைத்து வேலையை கச்சிதமாக முடித்துவிட்டார்கள். ஒ.பி.எஸ் ராஜினாமா செய்துவிட்டார். இவரது சமீபத்திய செயல்களை வைத்து மக்கள் இவர் மிச்சர் மாமா இல்லை என்று ஓரளவுக்கு நம்பத்தொடங்கினார்கள். ஆனால் அவர் இப்பொழுது லாலாகடையில் ஒன்றரை கிலோ மிச்சர் வாங்கி ஓரமாக உட்கார்ந்துவிட்டார். நீங்க இவ்வளவுதானா பன்னீர்!!!!,. முதலமைச்சரின் அதிகாரம் என்னவென்றே தெரியாமல் இப்படி டொக்காகி போன ஒருவரை தமிழகம் பெற்றதற்கு பெருமைப்படும்.

 வலைதளங்களில் மினிம்மாவிற்கு எதிராக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு படி தாண்டி வேலைக்காரி முதலமைச்சரா? என்று வரம்பு மீறுவதில் அவர்களின் வெறுப்பு தெரிகிறது. இந்திய அரசியல் சாசனாப்படி யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம். கூத்தாடிகள் ஆகும்பொழுது வேலைக்காரி ஆனால் என்ன?

ஆனால் மக்களது கோபம் அதனால் இல்லை. அவர்கள் பொங்குவது முன்னாள் முதலமைச்சருடன் 33 வருடங்கள் உடனிருந்தார்  என்பது ஒரு தகுதியாகுமா? என்பதே வாதம்.  மேலும் முன்னாள் முதலமைச்சர் சந்தித்த வழக்குகள் அனுபவித்த சிறைவாசம் எல்லாமே மன்னார்குடி மாஃபியாவால் தான் என்று ஒரு பரவலான கருத்து உண்டு. ஜெவின் தீவிர விசுவாசிகள் தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் சொல்கின்றன.

இது வரை மக்களையே சந்திக்காத, கட்சியிலும் எந்த பதவியிலும் இல்லாமல் திடீரென்று ஒருவர் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைதான் தொண்டர்களின் கருத்தும் ஏன் பொதுவாக மக்களின் கருத்தும் கூட. சின்னம்மா முதலைமச்ச்சர் ஆகி ஆறு மாதத்திற்குள் தேர்தலின் நின்று சட்டசபை உறுப்பினர் ஆகவேண்டும். அப்பொழுது மக்கள் பதில் சொல்வார்கள் எனபது விதண்டாவாதம். அவர் தேர்தலில் வெல்ல ஒன்றும் உழைக்க வேண்டியதில்லை........காசு, பணம், துட்டு பார்த்துக்கொள்ளும்.

சமூக வலைதளங்களில் நமது நெட்டிசன்கள் இபோழுது ரொம்ப பிசி...பிசியோ பிசி....

அவர்கள் போடும் நையாண்டிகளில் சில...

இப்பொழுது தி.மு.க இளனிய உருவா ஆரம்பிச்சா  சீக்கிரம் கடை போட்டுடலாம்..........

அப்போல்லோ வரை கொண்டு போகாமல் பன்னீர் செல்வத்தை பத்திரமாக இறக்கி விட்டதற்கு நன்றி..

ஒருத்தருக்கு பிடிக்கலைன்னா பரவாயில்லை ஒருத்தனுக்கூட பிடிக்கலைன்னா...

பன்னீர்செல்வத்திற்கு கொண்டு போன ஸ்பெஷல் பால கவுண்டமனியாட்டம் நடுவழில நடராசன் பிடுங்கி குடிச்சிட்டாப்ல..

ராதை மாண்டாலும் கோதை ஆண்டாலும் நமக்கொரு குவளை இல்லை...

சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு..உச்சாநீதிமன்றம்.

மணியா நாட்டாம யாரு நம்ம குமராசமியா?

சசிகலா முதல்வராக பதவியேற்கும் வரை பன்னீர்செல்வம் முதல்வராக நீடிப்பார்....மாப்ள இவர்தான் ஆனா இவர் போட்டிருக்க சட்டை அவருதில்லை மொமென்ட்..

சசிகலா முதல்வராவதற்கு திருமாவளவன் வரவேற்பு--செய்தி # நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா இல்லை சிவலிங்கமுன்னு தெரியுமா?


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 1 February 2017

வைகோ பயோடேட்டா

இயற்பெயர்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒வையாபுரி கோபால்சாமி

நிலைத்த பெயர்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒வை.கோ

மறந்த தொழில்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒வக்கீல்

தற்போதைய  தொழில்⇒⇒⇒⇒⇒⇒⇒புரோக்கர்

சமீபத்திய சாதனை⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ 1500 கோடி

நிரந்தர சாதனை⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ம.ந.கூ கட்சிகளை ஏமாற்றியது

நண்பர்கள்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒கட்சியில் இல்லை

எதிரிகள்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ஊடகங்கள்

சமீபத்திய எரிச்சல்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒காவேரி ஹாஸ்பிடல் வரவேற்பு

நிரந்தர எரிச்சல்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒தளபதி

தற்போதைய முகவரி⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒C/O மினிம்மா, போயஸ் தோட்டம்

நிரந்தர முகவரி⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒கலிங்கப்பட்டி

மறந்தது⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒பொடா சிறைவாசம்

மறக்காதது⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒தமிழ் ஈழம்

பிடித்த பல்லவி⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒எத்தனை கோடி!!! இன்பம் வைத்தாய்


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 31 January 2017

தீ வச்சது ஒரு குற்றமா?

செய்திகளும்................... லொள்ளுகளும்

ஆட்டோ குடிசைகளுக்கு தீ வைத்த பெண்காவலர்களிடம் கமிஷனர் விசாரணை......ஏம்மா தீ வைச்சிங்களா?

தீ பத்திரமா இருக்கனும்முன்னு குடிசைக்குள்ளேயும், ஆட்டோக்குள்ளேயும் வச்சது ஒரு குற்றமா கமிஷனர் அய்யா....

கல்வி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதான 36 மாணவர்கள் விடுதலை......சட்டசபையில் ஒ.பி.எஸ்

ரொம்ப நல்லவரா இருக்காரே? சின்னம்மா.... சின்னம்மா....



அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சின்னம்மா தலைமையில் நடைபெறும்-செய்தி 

பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு ஆட்டையப் போட்டுச்சாம் அனுமாரு........

பொது இடங்களில் என்னை மரியாதையாகப் பேசுங்கள்-----சூனா சாமி 

ஒகே பொறுக்கி சாமி..........இந்த மரியாதை போதுங்களா? இந்தப்பக்கம் வாங்க இன்னும் மகளிரணி மரியாதை செய்யுறோம்..

பா.ஜ.க பிரமுகர் முத்து படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்...வானதி ஸ்ரீநிவாசன்...

இந்த உலகத்திலேயே கள்ளக்காதல் விவகாரத்தில் தற்கொலை செய்ததை கண்டனம் செய்த ஒரே கரகாட்ட கோஷ்டி நாம்தான்..........ட்விட்டரில் யாரோ 

மேற்கு வங்கத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டிடத்திற்கு தீ வைப்பு--செய்தி 

தமிழ் நாட்டு போலீசு யாரையாச்சும் அங்கே ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்களோ?

நிருபர் கேப்டனிடம் உங்கள் பார்வையில் சமூக விரோதி யார்?
கேப்டன்: நீங்கதான்

செருப்படி.............👌👌👌




Follow kummachi on Twitter

Post Comment

Sunday 29 January 2017

அண்ணே 144 அண்ணே

அண்ணே இன்னிக்கு பேப்பர பார்த்தீங்களா அண்ணே..........

(மைன்ட் வாய்சில்) ஏன் இந்த நாயி இன்னிக்கு பேப்பர பத்தி கொலைக்குது...
டேய் ஏண்டா நாயே நீ பாத்தியாக்கும்..........

இல்லீங்கண்ணே படிச்சேன்............


டேய் பேப்பருல சுருட்டி வச்ச ப்ரியானிய லவுட்டி தின்ற பேமானி நீ பேப்பர நீ படிச்சியாக்கும்.............டேய்.........அதெப்படிடா பொய் உன் வாயில காவாத்தண்ணி மாறி கொட்டுது..............

இல்லீங்கண்ணே உண்மையா படிச்சேன் அண்ணே...........மெரினாவுல 144 ன்னு போட்டிருக்காங்கண்ணே...

சரி அதுக்கு இன்னடா இப்பொ கோமுட்டி தலையா....

144 ன்னா என்ன அண்ணே? 9 பேருக்கு மேல கூட்டம் சேரக்கூடாது......அதுதானுங்களே அண்ணே............

டேய் கூமுட்ட தலையா.............உனக்கு எவண்டா 9 பேருன்னு சொன்னது...........டேய் CrPC 144  இன்ன சொல்லுதுன்னா 4  பேருக்கு மேல கூட்டம் சேரக்கூடாது.............

அப்படியும் சொல்லலாம் கூட்டம்.........அப்போ 144 கூட்டுங்க 9 வருதா அதான் சொன்னேன்...நான் சொலரதுதாண்ணே  ரைட்டு.........

டேய் செங்கல் மண்டையா காலையில ஏண்டா எங்கிட்ட வந்து லொள்ளு பண்ற............நாயே சரி 144  சட்டம் போட்டிருக்காங்க அதுக்கு இன்ன்ன...........

அதெப்படி அண்ணே............நடக்கும் இப்பொ பாருங்க நானு, நீங்க அண்ணி.......நாலு பேரும் பீச்சுக்குப் போறோமா?

டேய் நாயி....அண்ணி உன்கிட்டே வரேன்னு சொன்னாளாக்கும்............சரிடா கரிச்சட்டி தலையா......அதெப்படி நாலு பேரு.............

அண்ணே கூட உங்க தங்கச்சியும் வருமில்ல................

டேய் கருவாயா ஏண்டா காலைல கடை முன்ன வம்பு பண்ற.........போடா......

அது இல்லீங்கண்ணே.........அதுபோல நாலு நாலு பேரா வருவாங்க இல்ல...........அவங்க சுண்டல் கடைல நின்னா கூட்டமாவுமில்ல அப்போ போலீசு இன்னா செய்வாங்க...............

டேய் கோமுட்டி தலையா ஒரு முதலாளிய பார்த்து கேக்குற கேள்வியாடா இது..

அதில்லைங்க அண்ணே.....இன்ன செய்வாங்க கைது பண்ணுவாங்களா அண்ணே....

டேய் அதுக்குதான் சொல்லியிருக்காரு இல்ல............நடக்கிறவங்க........குடும்பமா வரவங்களுக்கு பிரச்சின இல்ல.........

அதெப்படி அண்ணே கூட்டமா நடந்து போனா...............

டேய் நாயே உனக்கு இன்னா வேணும்..............சொம்மா இங்க லொள்ளு பண்ணாதா........அதோ நாய்க்கு வைக்க ரெண்டு பொற வச்சிருக்கேன்.........அத்த கவ்விட்டு ஓடிடு.............அடேய்.........அந்த பெரிய பீச்சுக்கு 144  போட்ட ஒரே கவுமெண்டு நம்ம கவுமெண்டுதான்........அத்த பத்தி இந்த நாயி காலைல பேச வந்த்திடுச்சு....இல்ல கொலைக்க வந்திடுச்சு.........இன்னிக்கு நரி ஊளை உட்டிடிச்சு டோய்............ஊ...ஊ...ஒ..





Follow kummachi on Twitter

Post Comment

Thursday 26 January 2017

கலக்கல் காக்டெயில் -177

வி.ஐ.பி பாஸ் 

ன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஒ.பி.எஸ் கொடியேற்றி வைத்தார். சுதந்திரம் அடைந்த நாள் முதல் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் கவர்னர் கொடியேற்றி வைப்பதுதான் மரபாக இருந்தது. ஆனால் சிலவருடங்களுக்கு முன்பு இந்த மரபை மாற்றியவர் முன்னாள் முதல்வர் கலைஞர், அதன்படி சுதந்திர தின விழாவில் முதலமைச்சரும் குடியரசு தின விழாவில் கவர்னரும் கொடியேற்றுவது மரபாக இருந்தது. ஆனால் இந்த குடியரசு தின விழாவில் கவர்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் கலந்து கொள்வதால் அந்த பொறுப்பு ஒ.பி.எஸ் டம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விழாவிற்கு கொடுக்கவேண்டிய வி.ஐ.பி பாஸ்கள் மன்னார்குடி வகையறாக்களுக்கு கொடுக்கப்படும் அவர்களும் முன் வரிசையில் வந்து தங்களது ஆளுமையை காண்பிக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் நடந்தது வேறு..........

ஓ.பி.எஸ் தனது மனைவி சகிதமாக அமர்ந்து குடியரசு தின நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்...............நான் முதலமைச்சரா இருப்பது உங்களுக்கு எரியுதுனா.............நான் இருப்பேன்டா கெத்தா..........ஸ்டைலா.........என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

அவருடைய செயல்பாடுகள் இப்பொழுது மக்கள் ஆதரவைப் பெறுகின்றன. இவரை மறைந்த முதல்வர் சரியாக உபயோகப்படுத்தவில்லையோ என்றே தோன்றுகிறது.

PETA ஒழித்தவை

பீட்டாவின் குறிக்கோள் என்ன என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே நாட்டு மாடுகள் அழிவை தொடங்கிய அவர்கள் நாட்டு நாய்களையும் ஒழிக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.  தமிழ் நாட்டில் கோம்பை, கன்னி, ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை என்று நான்கு  நல்ல நாட்டு நாய் வகைகள் உண்டு. இவற்றின் இனப்பெருக்கத்திற்காக சென்னை சைதாப்பேட்டையில் ஆராய்ச்சி மையமும், இனப்பெருக்கக்கூடமும் செயல்பட்டு வந்துகொண்டிருந்தது. அதை நாய்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றன, சுகாதார வசதிகள் இல்லை என்று வாதாடி அதை இழுத்து மூடிவிட்டன. அதன் மூலம் வெளிநாட்டு வகைகளான, லாப்ரடார், ராட்வீளர், ப்க் (PUG) வகை நாய்களை இறக்கியாகி விட்டது. இதன் வர்த்தக உள்நோக்கம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நாட்டு நாய்கள் உணவு நமது எளிய வகை உணவுகள்தாம். ஆனால் வெளிநாட்டு நாய்களுக்கு ஸ்பெஷல் மீல்ஸ்!!!! கொடுக்கவேண்டும். இதன் வியாபார விஸ்தாரணம் அளவிட முடியாது. அதன் விளைவுதான் சூப்பர் மார்கெட்களில் PEDIGREE  இத்யாதி வகைகளை பார்க்கலாம்.

ரசித்த கவிதை

கைச்செலவுக்கும் பணமற்ற கடவுள் 

ஓய்வூதியத்தில் ஒதுக்கிவைத்த 
சிறுதொகையை எடுக்க விரைகிறார்
ஏ.டி.எம் படியேறுகையில் பாதம் தடுமாற
தாங்கிப்பிடித்த தாடிக்கார யுவனுக்கு
ஆங்கிலத்தில் நன்றி சொல்கிறார்
வரிசைகண்டு மலைத்து வாசலில் நிற்கையில்
வழுக்கையில் விழும் வெய்யிலை 
குடைகொண்டு தடைசெய்கிறார்
கண்கள் பூத்துக் காத்திருந்து கடைசியில் 
தனக்கும் முந்தைய வாடிக்கையாளரோடு
இருப்பின் பரிவர்த்தனை முடிவுபெற
இறுதியில் முகம் சுருக்கிச் சபிக்கிறார் 
ஆற்றாமை பொங்க
"உலகம் அழியட்டும்".    நன்றி: ஸ்ரீதர்பாரதி

தமிழ் சினிமா

ரித்விகா

சமீபத்திய தமிழ் படங்களில் வந்து கொண்டிருக்கும் வளரும் நட்சத்திரம். பாலாவின் பரதேசியில் முதலில் பார்த்த நியாபகம், ஆனால் பிறகு வந்த மெட்ராஸ் படத்தில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். சமீபத்தில் கபாலியில் சூப்பர் ஸ்டாருடன்...முக்கியமாக  சொந்தக்குரலில் தமிழ் பேசி நடிக்கும் சென்னை பெண்...





Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 25 January 2017

படித்ததில் சிரித்தது

டந்த ஒரு வார காலமாகவே தமிழ்நாட்டில் செய்திகளுக்கு பஞ்சமில்லை. ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடங்கிய பின்பு பிரபலங்களின் பேச்சுகளும், கேப்பில் கிடா வெட்டிய அரசியல் வியாதிகளின் போராட்டங்களும் உளறல்களும் அதனைத் தொடர்ந்து நெட்டிசன்களின் கலாய்ப்புகள் சில சிரிக்க வைத்தன சில சிந்திக்கவும் வைத்தன........அவற்றின் தொகுப்பு...........

ஆபத்தான விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்கிவிட்டு காவலர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்த ராதாராஜன் வேறு யாருமல்ல த்ரிஷாதான் மேக்கப் இல்லாம சுத்துராப்போல.

ஹல்லோ யாரு போலீசுங்களா நம்ம வீட்டு அடுப்ப கொஞ்சம் பத்த வக்கிறீங்களா!!!

நம்ம கேப்டன் குடிச்சிட்டு பேசுறத்தான் கமலு குடிக்காம பேசுறாரு.



இனி எண்ட ட்ரின்க் பவாண்டோ, எண்ட சைடு டிஷு மிச்சர், எண்ட சரக்கு கள்ளு............

ஜல்லிக்கட்டு நடக்க காரணம் சின்னம்மாவாம்.........கலவரத்துக்கு காரணம் மாணவர்களாம்....

கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள்தான்--கமிஷனர் ஜார்ஜ் # அப்புறம் அவங்கள எதுக்கு சார் டிபார்ட்மென்ட்டுல சேர்த்தீங்க?

சிவபெருமான் போலீசை அனுப்பினார், பொறுக்கிகள் ஓடிவிட்டனர்......ட்விட்டரில் சுப்ரமனியசாமி..........யாரிந்த சிவபெருமான்..நடராஜனுக்கே வெளிச்சம்.

ட்ரம்பும் மோடியும் போனில் பேசிக்கொண்டனர்.
ட்ரம்ப்: நீங்க அமெரிக்காவுக்கு வரணும்...
மோடி: உங்க பொடனிக்கு பின்னாடிதான் நிக்குறேன்..ஓவர் ஓவர்

சென்னை கலவரத்தில் 140 போலீஸ் வாகனங்கள் சேதம்--செய்தி# எரிக்கும் போதே எண்ணிட்டிங்களா? போலீஸ்கார்.....


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 24 January 2017

மிச்சர் சி.எம் இல்ல ஊர் மெச்சும் சி.எம்.

த்தனை நாட்களாக ஓ.பி. எஸ் என்றால் அம்மா இல்லாத போது சி.எம் ஆக வந்து நாற்காலியில் அமர்ந்துவிட்டு அம்பேலாவார். ஒன்றும் செய்ய மாட்டார். அம்மா பதவியில் இருந்தால் ஒரு நாற்பது டிக்ரீ கோணத்தில் முன்னால் குனிந்து  பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் நாள் தமிழ் நாட்டு பட்ஜெட் படிப்பார். அதில் வார்த்தைக்கு வார்த்தை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆணைப்படி என்று தவறாமல் சொல்லிவிட்டு மிச்சர் சாப்பிடப் போய்விடுவார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கியவுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட  கைக்குழந்தை முதல் கைத்தடி வைத்த பெரிசுகள் வரை தவறாமல் ஓ.பி.எஸ் மிச்சர் தின்னும் பதாகைகளை தாங்கி ஏறக்குறைய அவரை மிச்சர் மாமா என்று உலக காப்புரிமை வாங்கிவிடும் அளவிற்கு செய்துவிட்டார்கள். இதைக் கண்ட ஒரிஜினல் மிச்சர் மாமா (நாட்டாமையில் நடித்தவர்) காண்டானதாக கேள்வி.

இதற்கான காரணம் போராட்டம் தொடங்கிய அன்று அவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்குகொண்டு ஆயிரத்தில் ஒருவன் பார்த்துக்கொண்டு இருந்தார். ஆதலால்தான் போராட்டக்காரர்களும் வரச்சொல் வரச்சொல் மிச்சர் மாமாவை வரச்சொல் என்றும் சின்னம்மா சின்னம்மா ஒ.பி.எஸ் எங்கேம்மா என்று ஏலம் விட்டுக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால் போராட்டத்தின் வீர்யத்தை உணர்ந்த அவர் உடனடியாக பிரதமரை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய அவசியத்தை உணர்த்தி, பின்பு டில்லியிலேயே ஒரு நாள் தங்கி சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து மேலும் மூன்று அமைச்சகங்களின் செயலர்களை சந்தித்து பேசி சட்ட திருத்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அதில் ஒரு செயலர்தான் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடை சட்டத்தில் இருந்த ஓட்டைகளை வைத்து நீங்கள் இப்படி செய்தால் இனிமேல் யாரும் தடைபோட முடியாது என்று அறிவுரை கூறியிருக்கிறார். அதெல்லாம் முடிந்த பின்புதான் செய்தியாளர்களை சந்தித்து இனி நல்லது நடக்கும் என்று நம்பிக்கையளித்தார். இருந்தும் கூட போராட்டக்காரர்களுக்கோ நமக்கோ நம்பிக்கை ஏற்படவில்லை. இவர் பிரதமரை பத்து நிமிடம் சந்தித்ததில் இரண்டு பேரும் சேர்ந்து மிச்சர் சாப்பிட்டு இருப்பார்கள் என்று பரவலாக பேசப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள் உங்களை சமூக தளங்களில் கிண்டல் செய்கிறார்களே என்று வினவிய பொழுது அவர் சிரித்துக்கொண்டே பொதுவாழ்வில் இதெல்லாம் சாதாரணம் என்று கவுண்டமணி ரேஞ்சில் சொல்லி அசத்தியது அவரைப்பற்றிய கருத்தை மாற்றிக்கொள்ள செய்தது.

சட்டசபை கூடிய முதல் நாள் கவர்னர் உரைக்குப்பின் மறைந்த முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி சட்ட சபை  முடிக்கப்பட்டது, அதான் மரபும் கூட,  ஆனால் மாலை சட்டசபையைக் கூட்டி சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றிய வேகத்தைக் கண்டு இனி இவர் மிச்சர் மாமா இல்லை ஊர் மெச்சும் மாமா என்று மக்கள் தங்கள் என்னத்தை மாற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

இருந்தாலும் நேற்றைய காவல்துறை செயல்பாடு குறிப்பாக காவலர்களே சில இடங்களில் ஆட்டோக்களுக்கு தீ வைத்ததும், மற்றும் சிலவீடுகளில் பெண்காவலர்கள் தீ வைத்ததும் ஒரு கரும்புள்ளியே.

இதை அவரின் மதிப்பு கூடுவதைக்கண்டு எரிச்சலடைந்த கூட்டத்தின் உள்குத்து வேலையாக இருக்கும் என்ற செய்திகளை நம்பாமல் இருக்க முடியவில்லை.

ஓ.பி.எஸ் இப்பொழுது தனது அதிகாரத்தை உணர்ந்து இருப்பார், இவர் இப்படியே தொடர்ந்தால்...........அடுத்து அவரை காலி செய்து நாற்காலி பிடிக்க காத்துக்கொண்டு இருப்பவர்கள் மிச்சர் பார்ட்டி ஆவது உறுதி.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 23 January 2017

ஜல்லிக்கட்டு போராட்டமும் விருப்பமில்லா திருப்பங்களும்

அலங்காநல்லூரில் சில நாட்களாகவே புகைந்துகொண்டிருந்த நெருப்பு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டவுடன், எல்லா நகரங்களிலும் பரவ ஆரம்பித்துவிட்டது. சென்னை மெரீனா கடற்கரையில் அது இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுக்கும் என்று அரசு மட்டுமல்ல யாருமே எதிர்பார்க்காத ஒன்று. முதலில் ஐயாயிரம் என்ற கூட்டம் நாட்கள் செல்ல செல்ல லட்சக்கணக்கில் பெருக ஆரம்பித்தது. இருந்தாலும் போராட்டம் ஒரு  சிறு அசம்பாவிதம் இல்லாமல் வெகு சீராக நடந்தது. அரசும் இதற்கு முதல் துணை போனதன் காரணம் நமக்குப் புரியாமல் இல்லை.

இந்த போராட்ட இளைஞர்கள் அரசியல் வாதிகளை முதலில் தங்களுள் கலக்க (மன்னிக்கவும்) விடவில்ல. அங்கே ஆதரவு தர வந்த ஒன்றிரு தலைவர்களையும் நீங்க போயி உங்க வேலையைப் பாருங்க..........நாங்க பாத்துக்கறோம் என்று அனுப்பிவைத்துவிட்டனர். அடுத்ததாக சினிமாகாரர்களையும் கிட்டே அண்டவிடவில்லை ஓரிருவர் நீங்கலாக. வந்த ஓரிருவரும் அவர்களின் உணவு தேவைகளையும், பெண்கள் கழிப்பிட வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்து  போராட்டம் சீராக செல்ல வழிவகுத்தனர். நாள் செல்ல செல்ல இந்த அறப்போராட்டம் எல்லோராராலும் பாராட்டுகள் பெற மேலும் மேலும் அதிக மக்கள் வந்து சேர ஆரம்பித்தனர்.

போராட்டத்தின் வீர்யத்தை உணர்ந்த அரசும் மத்திய அரசை அணுகி ஜல்லிகட்டு நடத்த உரிய சட்ட திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது, அதே சமயத்தில் இந்த மெரீனா புரட்சியின் ஆணிவேரை ஆராய ஆரம்பித்தது. சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை வெள்ளத்தில் உதவிய இளைஞர்கள்தான் இந்த முறை இதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள், இதை பல்வேறு நகரங்களிலிருந்து 136 பேர்கள் கொண்ட குழு செய்திருக்கிறது. இதை முன்பே மோப்பம் பிடித்த உளவுத்துறை மேலிடத்தில் சொல்லியிருக்கிறது.

இந்த அறவழி போராட்டம் இந்த இளைஞர்களின் வேறொரு பக்கத்தை காண்பித்திருக்கிறது. மேலும் போராட்டம் என்றால் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இன்றைய அரசியல்வாதிகளுக்கு தெரிய வைத்திருக்கிறது. இதே போராட்டம் அரசியல்வாதிகளால் நடத்தப்பட்டிருந்தால் எத்தனை உயிர்களை காவு வாங்கி இருக்கும் மற்றும் எத்தனை பொது சொத்து சேதமாகி இருக்கும் என்று நமக்கு தெரியும்.

இதற்கிடைய நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்று கூடிய நடிகர்களை காமெடி பீசாக மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். ஒரு நடிகர் ஏற்கனவே சொல்லியிருந்தார், இது இளைஞர்களுக்கான் போராட்டம் அதில் நாம் "SHOW STEAL" செய்யக் கூடாது என்று, இருந்தாலும் அவர்கள் ஆடிய தனி ஆவர்த்தனத்தில் அவர் கலந்து கொண்டது வியப்பே.

இந்த இளைஞர்களின் எழுச்சி, அறவழிப்போராட்டம் வடக்கத்தியானையும் நம்மை திரும்பி பார்க்க வைத்தது. இப்பொழுது மத்திய அரசும் மாநில அரசும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, போராடும் இளைஞர்கள் எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று முரண்டு பிடிக்க, இனி அரசியல் நாடங்கள் தொடங்க ஆரம்பித்தன.

இதன் நடுவே இந்த போராட்டத்தை "FREE SEX" என்று சொன்னால் கூட ஐம்பதாயிரம் பேர் கூடுவார்கள் என்று கூறி "PETA" ஆர்வலர் வாங்கிக்கட்டிக்கொண்டார். இவரிடம் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில்  ஒரு நபர் ஜல்லிக்கட்டை தடை செய்கிறீர்களே, ஏன் கோயில்களில் யானைகளையும், குதிரைப் பந்தயங்களையும் தடை செய்யவேண்டியதுதானே, என்றே கேள்விக்கும் எதை தடை செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று பதிலளித்தார். இந்த ஆயா இனி வெளியே வருவது சற்று கடினம்தான், வந்தாலும் இவர்கதி இவரால் கைவிட்டப்பட்ட தெருநாய்கள் கதிதான்......(இது தனி பதிவு மேட்டர்)

சரி இப்பொழுது விருப்பமில்லா திருப்பங்களுக்கு வருவோம்.

அரசு விரைவு மசோதா தவிர வேறு எதுவும் செய்ய இயலாத கையறு நிலை.
இளைஞர்களுக்கோ காளையை காட்ச்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டால் ஜல்லிகட்டு நிரந்தரமாகிவிடும் என்ற புரிதல். அதுவரை போராட்டம் தொடரும் என்ற நிலை.

சட்டசபை தொடங்க வேண்டும், அதற்குள் மெரினாவில் கூடியுள்ளவர்களை கலைக்க வேண்டும் என்று இந்த போராட்டத்தை ஆதரித்த ஓரிரு பிரபலங்களை அணுக அவர்களுக்கு இளைஞர்களுக்கு புரிய வைக்க முடியாத நிலை. அவர்களும் சட்ட சிக்கல்களை கூறி போராட்டத்தை கைவிடுங்கள் என்று சொல்லி சமாதானப்படுத்தாமல் அரசியலும் மதவாதங்களையும் கலந்து போராட்டம் கொச்சைப் படுத்தப்பட இனி இதன் போக்கு நமக்கு தெரிய ஆரம்பித்ததுவிட்டது.

இனி இந்த இளைஞர்கள் கூட்டத்தில் அரசியல் ரவுடிகளும், சமூக விரோதிகளும்  வலுக்கட்டாயமாக கலக்கப்பட்டு தடியடி கண்ணீர் புகை, கல்வீச்சென்று கலைக்கப்பட்டு சின்னா பின்னமாகும் என்று யாவருக்கும் தெரியும் அதுதான் நடந்து கொண்டும் இருக்கிறது.


ஆனால் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கல்வீச்சு கல்லடி காவலர்களுக்கும் உண்மையான போராட்ட இளைஞர்களுக்கும் இடையே என்று நினைத்தால் நீயும் தமிழனே!!!!

இனி இந்தப் போராட்டத்தின் நிறைவு அரசியல்வாதிகளால் முடிக்கப்படும்.........அவர்களது ஸ்டைலில்.........

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 11 January 2017

டீ வித் முனியம்மா --சீசன் -2(1)

டேய் மீச ஸ்ராங்கா ஓர் டீ போடுறா..........

வா செல்வம் அயாலு எவ்விடே........

யார்ரா லோகுவா வந்துகினுகிரான் பாரு.........கண்ணுல இன்னா வச்சிகீற...அவனுக்கும் டீ போடு..........மீச நாஸ்தாவுக்கு இட்லி வடகறி கீது?

டேய் மீச மினிம்மா வந்திச்சு...........

அவ்விடே நோக்கு வருன்னு..................

என்ன மினிம்மா.......எங்க ஆளே காணோம்...........

டேய் செல்வம் மினிம்மா.........மினிம்மானு இன்னொரு தபா கூவுன மவனே செவுலு பிஞ்சிடும்..............

அய்ய அதானே உன் பேரு.........

டேய் முனிம்மான்னு கூப்பிடுறா......லுச்சா...........மினிம்மான்னா நம்மள கட்சிக்காரன் ஒரு மாரியா பாக்குறான்.........இப்பொ தமிழ் நாட்டுல அது பேஜாரு பேருடா.............அத்த சொன்னாலே ஜனம் மெர்சலவுது..........

சரி முனியம்மா..........சர்தானே...........தோ பாரு லிங்கம் சாரும் பாயும் வராங்க பாரு..........சட்டு புட்டுன்னு இன்னா நூசு சொல்லு.....

ஐயே உனுக்கு தெரியாதாக்கும்.............அந்தம்மா பூட்ச்சு.........இப்பொ எல்லா பேமானிங்களும் தோட்டதாண்ட போயி "மினி"ம்மா காலுல உயுந்து முதலமைச்சர் ஆவனுன்னு கூவுரானுங்க.

சரி முனிம்மா அவுங்க ஆவட்டுமே இன்ன பூட்ச்சு இப்ப?

அடப்போ லிங்கம் சாரு போங்கா கீதே...........அந்தம்மா இருக்க சொல்ல இது ஊட்ல இன்ன வேலை செஞ்சிகினு இருந்துது.........

ஐய முனிம்மா விசயம் தெரியாம பேசிகினு கீற...........நம்ம நாட்ல யாரு வேணா முதல் மந்திரியோ இல்ல பிரதமரோ இன்னா வேணா ஆவலாம்......

அதெப்படி பாயி அது இன்னா படிச்சிகீது அதுக்கு இன்ன தெரியும்......

அடப்போ முனிம்மா அதுக்கு இன்னாத்துக்கு படிக்கோணும்............தேவல....இதுக்கு முன்னாடி இருந்தவங்கள யாரு படிச்சவக.......கட்சிய நடத்த தெரியோணும்........மவனே எவனாவது கொரலு உட்டா வச்சி செய்யத் தெரியோணும்............அதா அரசியல் இல்ல தமிழ் நாட்டுல சினிமாவுல நடிச்சிருக்கணும்.........

கலீனறு எப்படிகிறாராம்?

இன்னடா லோகு............அவருக்கு வயசாவுது பாரு ஞாபக சக்தி தாராந்து போயினுகீதுன்னு பேசிகீரானுங்க.

அதான் புள்ளைய செயல் தலீவரு ஆக்கிட்டாங்களாங்காட்டியும்.........

ஆமா லிங்கம் சாரு இன்னா போ............அல்லாம் தமாசுதான். அயுவுறாங்க.....காலுல உயுவுறாங்க...........அந்த கச்சி மாறியே ஆவுறாங்க போல.........

இன்ன முனியம்மா நீ பேங்குல போயி நிக்கல...........

டேய் லோகு என் வியாவாரத்துல எதுக்குடா அம்மாம் துட்டு...........இந்த ஜனம் எல்லாம் தேவையோ தேவைல்லையோ அல்லாம் காப்ரா ஆயி அந்த மெசின நோன்டிகினே இருந்தா அது அம்பேலாயிடுது.

அதான முனிம்மா வேட்டி நூறு ரூவாக்கு குடுக்குரானு நைட்லருந்து வரிசையில நிக்குற பேமாநிங்கதான்.............கூவுரானுங்க.

சரி முனிம்மா இன்னா சினிமா நூசு...................

அத ஏண்டா கேக்குற.........போன வருஷம் இருநூறு படம் வந்திச்சாம்.......அதுல பத்துகூட தேரலயாம்............

அது சரி அல்லாம் கதை இல்லாமையே சொம்மா டான்சு..........., ஃபைட்டு......சேட்டு பொண்ணுன்னு..........டாவுன்னு படம் எடுத்தா எங்க உருப்பட போவுது.............

சரியா சொன்னேடா செல்வம்............வர்ட்டா.........

இன்னா முனிம்மா அவ்ளதானா............

டேய்சீ நீ இன்னாத்துக்கு கொரலு கொடுக்குற அல்லாருக்கும் தெரியும்  அஞ்சலையாண்ட போட்டு குடுத்துருவன்............போவியா........



Follow kummachi on Twitter

Post Comment

Monday 9 January 2017

சொர்க்க வாசல் திறந்திடிச்சு

ணக்கம் நான் உங்கள்  "மந்தி"  டிவியின்  தங்கராஜ் முண்டே............இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி என்பது இன்றைய கால கட்டத்திலே இன்றிமையாத ஒன்று.....இந்த நிகழ்ச்சியை நம் இப்பொழுது நேரடியாக காணலாம் இதற்காக நமது நிருபர்கள், கேமரா மென் போன்றவர்கள் பல இடங்களில் நின்றுகொண்டு இருக்கிறார்கள். இது போன்ற நிகழ்ச்சியை வேறெந்த தொலைக்காட்சிகளிலும் காணமுடியாது. முதன்முறையாக இதை நேரடி ஒலிபரப்பு செய்வது நமது "மந்தி" தொலைக்காட்சி என்பதில் பெருமை கொள்கிறோம். மேலும் இந்த நிகழ்ச்சியில் நமது நிருபர்கள் ஒரே சமயத்தில் சொர்க்கத்தில் உள்ளவர்களையும் பூமியில் உள்ளவர்களையும் பேட்டி காண்பார்கள். அதே சமயத்தில் இரண்டு இடங்களிலும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன........இனி நிகழ்ச்சிக்கு போகலாமா?

முதலில் சொர்க்க வாசல் முன் நிற்கும் எழில்,..........

முண்டே: எழில் அங்க நிலைமை எப்படி இருக்கு?

எழில்: நிச்சயமா!! ஒரே பரபரப்பா இருக்கு. சொர்க்கவாசல் முன்னாடி நின்னுகிட்டு இருக்கோம், கதவு எப்ப வேண்டுமானாலும் திறக்கப்படலாம். அதற்க்கான மோட்டார் தயார் நிலைமையில் இருக்கிறதா கிங்கரர்கள் சொல்கிறார்கள்.

முண்டே: கிங்கரர்களா அவர்கள் யாருன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா?

எழில்: நிச்சயமா!! அவர்கள்தான் இங்கு வாட்ச்மேன்கள்......தினமும் காலையில் வேலைக்கு வந்து விடுவார்களாம்..........இந்த கதவருகே நிற்பதுதான் அவர்கள் வேலை.

முண்டே: அவர்களிடம் பேசலாமா?

எழில்: நிச்சயமா!! கிங்கரர் உங்க வேலை என்ன சொல்லுங்க....

கிங்கரர்: தெனைக்கும் வந்து கதவாண்ட நின்னுகினு இருப்போம்... மேலிடத்தில எப்போ தொறன்னு சொன்னாலும் தொறப்போம்...ஆனா வருசத்துக்கு ஒரு தபா தான் தொறக்க சொல்லுவாங்க.

முண்டே: எழில் இணைப்பிலேயே இருங்க........கொயஸ் தோட்டத்து வாசலில் நமது நிருபர் தேன்மொழி இருக்காங்க அவங்க கிட்ட பேசுவோம்........தேன்மொழி நீங்க எங்க இருக்கீங்க அங்கே என்ன நெலமை?

தேன்மொழி: நிச்சயமா? இங்கே ஒரு மக்கல் வெல்லமா இருக்கு..அவர்கலிள் நிறைய பிரபலங்கலும் இறுகாங்க..........எல்லோரும் இங்கே இருந்து சொர்க்கவாசள்...............திறக்க காத்திருக்காங்க............

முண்டே: தேன்மொழி பிரபலங்கள் சொன்னீங்க யாரு யாரு இருக்காங்க?

தேன்மொழி: நிச்சயமா!!  மதிற்பிற்குரிய கம்பினுரை இருக்காரு, கலர்வதி இருக்காங்க, சிதைகுமார் இருக்காரு.............மற்றும் எல்லோரும் கரை வேட்டிக்கட்டிக்கிட்டு காத்திக்கிட்டு இருக்காக............

முண்டே: தேன்மொழி அங்கே என்ன நடக்குது?

தேன்மொழி: நிச்சயமா?!!! எல்லோரும் இங்கே கொயஸ் தோட்டத்து கதவு களற்றி வச்சிருக்கிறதால எல்லாம் கம்பி தடுப்புக்கு முன்னால நின்னுகிட்டு இருக்காங்க.........

முண்டே:கதவ கழ்ட்டிட்டான்களா? அது எப்போ அதை பற்றி ஏதாவது தகவல் உண்டா?

தேன்மொழி: நிச்சயமா!!இதுக்கு முன்னாடி இந்த கதவ எப்பவாவது தொரப்பான்கலாம் ஆனா இப்பொ அடிக்கடி அரசியல் பிரமுகர்கல் குனிஞ்சுகிட்டே வரதால அவுக  முதுகு பட்டு கதவு பெயிண்ட் அடிக்கடி போகுதுன்னு தங்கத்தாரகை மினிம்மா கழட்டி வக்க சொல்லிட்டாங்களாம்.......அப்படின்னு இங்க இருக்கிற பக்கத்து வீட்டு வாட்ச்மேன் சொள்றார்....

முண்டே: சரி அங்கே எதுக்கு எல்லோரும் காத்திருக்காங்க?

தேன்மொழி: நிச்சயமா!!எல்லோரும் மினிம்மா வர காத்திருக்காங்க...........

முண்டே: அவங்க எப்ப வருவாங்க ஏதாவது தகவல் உண்டா?

தேன்மொழி: நிச்சயமா!! அவங்க இப்போதான் புதிய கெட் அப்  போட்டிட்டு இருக்காகளாம்..........இதோ வந்துருவாங்க............

முண்டே: புதிய கெட்டப்பா அதை பற்றி ஏதாவது தகவல் உண்டா தேன்மொழி..

தேன்மொழி: நிச்சயமா!!! அதாவது முப்பது வருஷமா மேக்சிமா கூடவே இருந்ததால அதே மாதிரி கெட்டப் போடனுன்னு ஆடலரசன் சொன்னாராம்?

முண்டே: அதெல்லாம் எப்ப தைக்க குடுத்தாங்களாம் ஏதாவது தகவல் உண்டா?

தேன்மொழி: நிச்சயமா!! அவங்க உதவியாளர இதை பற்றி கேட்கிறேன்......ஏங்க மினிம்மா இந்த டிரஸ் எல்லாம் எப்ப தைக்க கொடுத்தாங்க எதாவது தகவல் உண்டா?

உதவியாளர்: அன்னிக்கு "மேக்சிமா" மயக்கம் போட்டாங்க இல்ல அப்ப இங்கே ஒரே பதட்டமாச்சி.............உடனே அப்போல்லோக்கு போன் போட்டாங்க.......அப்புறம் டைலர் வந்தாரு............அவருகிட்ட அளவெல்லாம் கொடுத்துட்டுதான் அப்போல்லோவுக்கே போனாங்க.........

தேன்மொழி: வந்துட்டாங்க........வந்துட்டாங்க...........மினிம்மா.....இதோ கம்பினுரை போறாரு............தவந்துகிட்டே போறததான் நீங்க பாத்துகிட்டு இருக்கீங்க.............அவரு மினிமா கிட்டே பேசுறாரு...........மைக்க முன்னாடி வக்கிறேன்...........மினிம்மா மினிம்ம நீதான் இனிமே எல்லாம்.............எங்களை எல்லாம் காப்பாத்து மினி தாயே...............அண்ணாவிற்குப் பிறகு தம்பி...........அக்காவிற்கு பிறகு தங்கை................மனைவிக்கு பிறகு துணைவி ............அடுப்புக்கு பிறகு தொடுப்பு...........மினிம்மா நீங்கதான் இனி எல்லாம்........"மேக்சி" பிறகு "மினி" தானே.............

அடுத்து கலர்மதி அழுதுகிட்டே போறாங்க.........மினிம்மா உங்க குரல் இனிமைம்மா..........நீ தான அந்த குயில்..........நீ கண்டி அப்ரோவர் ஆயிருந்த ங்கொயால ஆட்சியையும் இருந்திருக்காது மேக்சிம்மாவும் இருந்திருக்காது........த்தா எந்நன்றி கொண்டார்க்கும் ..மமாள உய்வுண்டாம் பேமானி கண்ட ங்கொய்யால...............சினிமாவுல செல்லாகாசுதானே அந்தம்மா...........நீதான் மினிம்மா இனி அல்லாம்...........

ஆடி அம்பட் இதோ பேசுகிறார்......வான்கோழி மயிலாகலாம்.........தவிடு .........நெல்லாகலாம்............பரோட்டா...........குருமா ஆகலாம்.........சைகோ ஒரு துரோகி..........யானை நடந்தா ............எறும்புகள் மடியத்தான் செய்யும்...

முண்டே: தேன்மொழி இணைப்பில் இருங்க..........எழில் விண்ணுலகிலிருந்து அழைக்கிராறு..........சொர்க்க வாசல் திறந்துட்டாங்களாம். எழில் அங்கே என்ன நடக்குது?

எழில்: நிச்சயமா!!! சொர்க்க வாசல் திறந்து ஐந்து நிமிடம் ஆகிறது........நீங்கள் கொயஸ் தோட்ட நேரலையில் இருந்தததால் அந்நிகழ்வை காண முடியவில்லை.

முண்டே; சரி சொர்க்கவசால் திறந்துட்டாங்க யாராவது தெரிகிறார்களா?

எழில்: நிச்சயமா!!! ஒருத்தரு கையில் சங்குசக்கரம், சங்கு தலையில் கிரீடம் எல்லாம் போட்டுக்கிட்டு பட்டாடை உடுத்தி நடுநாயகமா மேடையில் இருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது...........அவர் முன்பு நிறைய  பேர் உட்கார்ந்திருக்கிறார்கள் சில முகங்கள் நமக்கு பரிச்சயப்பட்ட முகங்கள் போல் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது..........முண்டே........

முண்டே: எழில் அவங்க யாருன்னு உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?

எழில்: நிச்சயமா? மேக்சிமா இருக்காங்க............அவங்ககூட வழுக்கைதலையோட ஒருத்தரு பேசிகிட்டு இருக்காங்க.........முண்டே.......

முண்டே: கேமரா மென் கிட்டே சொல்லி அவங்க கிட்ட ஜூம் பண்ண சொல்லுங்க.......அவங்களையே தெய்வமா வணங்கின கூட்டம் இப்பொ கொயஸ் தொட்டதுலதான் கூடியிருக்கு........அவங்க ஆனந்தப்படுவாங்க...........

எழில்: நிச்சயமா!!இப்பொ பாருங்க அவங்க முகம் தெளிவா தெரியுது..........

முண்டே:  தேன்மொழி சொர்க்கவாசல் திறந்துட்டதா அங்கே இருந்து எழில் சொன்னாரு....

தேன்மொழி: நிச்சயமா!! எங்களுக்கு தெரிகிறது..........மேக்சிமா கூட தெரியிறாங்க...........

முண்டே: அங்கே நிலைமை எப்படி இருக்கு?

தேன்மொழி: நிச்சயமா!!இன் எல்லோரும் மினிம்மா காரு டயர நக்கிட்டு இருக்காங்க............

முண்டே:அங்கே யாரும் சொர்க்க வாசல் நிகழ்ச்சியை பார்க்கவில்லை போல் தோன்றுகிறது என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் தேன்மொழி?

தேன்மொழி: நிச்சயமா!! அவங்க எல்லோரும் குனிந்து இருப்பதால அவங்களுக்கு சொர்க்க வாசல் திறப்போ இல்லை அங்கே அவர்கள் இதற்க்கு முன்னால் குனிந்து வணங்கிய மேக்சிமாவையோ பார்க்கமுடியவில்லை என்பதை நம்மால் காணமுடிகிறது........

முண்டே: தேன்மொழி திடீரென்று அங்கு என்ன கலவரம்........

தேன்மொழி: நிச்சயமா!!! இங்கு ஒருவர மண்டை திறந்திருக்கிறது...........அவரை ஒரு இருபது பேரு சேர்ந்து அடித்திருக்கிறார்கல்........

முண்டே: ஏன் அடிச்சாங்க ஏதாவது காரணம் தெரியுமா?

தேன்மொழி: நிச்சயமா!! இதோ அவருகிட்டேய கேட்போம் அவரு பேச ரொம்ப கஷ்டப்படுறாரு............ஏதோ சொள்றாரு அதை கேட்டு சொள்ரன்.....

முண்டே: கேட்டு சொல்லுங்க...........சத்தமா சொல்லுங்க.....

தேன்மொழி: அவரு மட்டும்தான் இந்தக்கூட்டத்தில் சொர்க்கவாசல் திறப்ப பார்த்தவராம்..........அவரு ஏதோ பழைய விசுவாசத்தில மாண்புமிகு ..........தலீவி மேக்சிமானு சத்தமா சொல்லிட்டாராம்..........

முண்டே: என்ன சொன்னாரு? கொஞ்சம் சத்தமா சொல்லுங்க நேயர்களுக்கு கேட்கணும் இல்ல..........

தேன்மொழி: சத்தமாக மேக்சிமா என்று சொல்ல.............படுத்திருந்த கூட்டம் அவர நோக்கி ..................ஏய் எவடி அவ..........ஓடரா மைக்க..........புடுங்குடா கேமராவா...........

தேன்மொழி: நன்றி உங்கலிடமிருந்து விடை பெறுவது கேமரா மென் குரலசரனுடன் .......தேன்மொலி..............

முண்டே: இதுவரை சொர்க்க வாசல் நிகழ்ச்சியை நேரில் பார்த்தீர்கள்...........இந்த நிகழ்ச்சியை முதலில் காண்பித்தது எங்கள் மந்தி டிவி என்று மற்றுமொரு முறை கூறிக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுவது தங்கராஜ் முண்டே........

சொர்க்கத்திலிருந்து.........சார் முண்டே சார்............நான் எழில்...........நான் எழில்...........என்று கதறிக் கொண்டிருக்கும் போதே திரை ஃபேட் அவுட்டாகிறது.........

Follow kummachi on Twitter

Post Comment