Wednesday 23 December 2009

கடவுளுக்கு “பிட்டு” ப்படம்


கருவறையில் கடவுளின்
கண்கள் திறந்திருக்க
காஞ்சி குருக்களின்
காமக் களியாட்டம்

சட்டத்தின் பிடியில்
வெட்ட வெளிச்சமானது.
ஓட்ட வெட்டவேண்டும்
சட்டத்தின் கைக்கொண்டு.

கடவுளின் பெயரால்
காம லீலை,
கடவுளுக்கே நேரடி
ஒளி பரப்பு.

கடையிலே காட்சிப்பொருள்
குருந்தட்டிலே விருந்து
கலகல விற்பனை
கல்லா நிறைவு.

காமுகனை இரும்புக்கரம்
கொண்டு கண்டிக்க
சட்டம் தன்
கடமையை செய்யட்டும்.


கருவியாக இருந்த
கண்ணிகைகளை கண்
திறந்துப் பார்த்த
கடவுள் தண்டிக்கட்டும்.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 20 December 2009

மண்ணாங்கட்டியின் சந்தேகம்-தெலுங்கானா.


ஏனுங்கோ நான் மண்ணாங்கட்டி, மறுபடியும் வரேனுங்கோ. நம்ம பக்கத்து மாநிலத்துலே இன்னாங்கோ ஒரே கலீஜா, கலட்டவா கீது.ஏனுங்கோ இந்த தெலுங்கானாப் பத்தி நொம்ப நாளா பேசிக்கிறானுங்கோ, எனிக்கித் தெரிஞ்ச எங்க அப்பாரு காலத்திலேயே இந்தப் பிரச்சினை இருந்துகீதுங்கோ.

அத்தே விடுங்கோ இந்த சந்திர சேகர ராவ் ஏதோ உண்ணாவிரதம் இருந்தாரு சரிங்கோ, அத்தே நிறுத்த குண்டுகட்டா பிடிச்சு உள்ளே போட்டிருந்தா அல்லாம் சரியா பூடுமே, அத்தே வுட்டுட்டு தெலுங்கானா பிரிச்சிடலாம், ஹைதராபாட தலை நகராகிடலாம், நம்ம செட்டியாரு பேச சொல்ல இப்போ ஆந்திர எரியிதுங்கோ.

நடுவால ஒருக் கும்பலு நம்ம சென்னைக்கு வர தண்ணிய நிப்பாட்ட கண்டலேருக்கிட்டே ஆபிஸ அடிச்சிக்ரானுங்கோ. நம்ம ஊருலே ஒரு சொலவடை உண்டுங்கோ, "தென்ன மரத்துலே தேள் கொட்டினா, பனே மரத்துலே நரி கட்டிக்குமாம்". அது போலதான் கீது இவனுக ஊருலே ஏதோ ஒரு கேனயன் பிரச்சினைய ஆரம்பிப்பான், நம்மா ஊரு ஏதாவது சொல்லுவானுங்கோ, அவ்ளவுதான் நமக்கு வர தண்ணிய புடுங்கிடுவானுங்கோ. ஏற்கனவே கர்நாடகாகாரன் எங்களுக்கு அப்போப்போ டார்ச்சர் குடுத்துகின்னு கிரான். நாங்களே இந்த வருஷம் எத்தனை போகம் போடலாம், இன்னா போடலாமுன்னு யோசிக்க நாட்டு நடப்ப தெரிஞ்சுக்க வேண்டியதாயிடுச்சு.

முன்னே எல்லாம் அப்படி கிடையாதுங்கோ, காலைலே எழுந்தோமா, கஞ்சி குடிச்சிட்டு, தொ கிறானே இந்த மருதுப் பையனையும், இன்னும் சில சித்தாளையும் இட்டாந்தோமா, பொழுது சாயர வரைக்கும் வயலிலே வேலைதான்.

இப்போயெல்லாம் அப்படி இல்லைங்க, நாத்து நடனுமா, பயறு போடனும்மான்னு முடிவு பண்ண நாட்டு நடப்ப தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு.

எனக்கு ஒரு யோசனை தோனுதுங்கோ, ஆனா நாம சோனா யாரும் கேட்கமாட்டானுங்கோ.

பேசாம அல்லா மாநிலத்தையும், எத்தனை பார்ட்டி இருக்கோ அத்தனை பாகமா பிரிச்சிட்டா, எல்லா பார்ட்டிக்கும் பவர் இருக்கும், சம்பாதிக்கலாம். இப்போ மகாராஷ்டிரா மாநிலத்திலே மூணு பார்ட்டி இருக்குதுன் வச்சிக்கிங்கோ, காங்கிரஸ், சிவசேனா, என்.சி.பி மகாராஷ்டிராவ மூனா பிரிச்சு ஆளுக்கு குடுத்திடலாமே. தமிழ் நாட்டே பிரிச்சு, அ.தி.மு.க, தி.மு.க., காங்கிரஸ், பா.ம. க, தி. தி மு. க ஒரு பத்து கட்சி இருந்தா ஆளுக்கு ரெண்டு ரெண்டு மாவட்டமுன்னு கொடுத்திடலாம்.

இப்படி சொன்னா, நம்ம மருது நக்கலடிக்கிறான், இன்ன நீ கேனத்தனமா பேசுறே, கட்சியிலே கோஷ்டியிருந்தா என்னாப் பன்றதான் அப்படிங்கிறான் அதிகப் பிரசங்கி.

லே மருது போய் வேலையைப் பாருலே.
நான் சொன்னது நடக்கத்தான் போகுதுலே,

நம்மைச் சென்னையே, சைதாபேட்டை, கிரோம்பேட்டை, சிந்தாதிரிப் பேட்டை, தேனாம்பேட்டை, வண்ணாரபேட்டை, கொருக்குபேட்டையுன்னு தனி தனி கட்சி ஆளபோகுதா இல்லையாப் பாருலே.

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 19 December 2009

பிச்சை


யார் பெற்ற பிள்ளையையோ
வேர்வையுடன் சுமந்து
காரருகில் கைநீட்டும்
கருத்த நிறத்தவளின்
ஓயாத தட்டல்கள்
அய்யா அம்மா என்று
அலுக்காத குரல்கள்
இடுப்பில் இருக்கும் குழந்தை
பசியில் சிணுங்க இரக்கமின்றி
அடிக்கும் இவளுக்கும்
கால் கடுக்க படியேறி
ஓட்டுப் பிச்சை எடுத்தவர்கள்
கால்வயிற்று கஞ்சிக்கு
கால்கடுக்க கடையில்
நின்று கடுப்பானவர்களின்
வாழ்கைத் தரம் உயர்த்துவோம்
என்று சூளுரைத்து வெறும்
ஐம்பது ரூபாயிலே அனைத்தும்
தருவோம், பொன் தருவோம்
பொருள் தருவோம் என்று
உறவினரிடமே ஒப்பந்தப்
புள்ளி கூறி, ஓயாமல்
கொள்ளையடித்து, கொள்கை
கடமை என ஜல்லியடிக்கும்
சில்லரைப் பொறுக்கிகளுக்கும்
வித்யாசம் எத்தனை
என்று வியக்கிறது
விவரம் தெரியா மனது

Follow kummachi on Twitter

Post Comment

Friday 18 December 2009

ரசிகன்


கதிரவன் அன்று விடியற்காலையிலேயே எழுந்து விட்டான். அவன் அப்பா "சூரியனுக்கு சூ----க் காட்டிக்கொண்டு இன்னும் என்ன தூக்கம்" என்று வழக்கமாக பாடும் பல்லவி இன்று இல்லை. அவன் அப்பா வெகு நாட்களாகவே சொல்லிகொண்டிருக்கிறார். கதிரவனை அவருடைய நண்பரின் கடையில் வேலைக்கு சேர்த்து விடுவதாக. இன்று அப்பாவின் நண்பர் கதிரவனையும் கூட்டிக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்.
அப்பா மகன் இன்று நேரத்திலேயே எழுந்து விட்ட மகிழ்ச்சியில் பிள்ளைக்கு பொறுப்பு வந்து விட்டது என்று சொல்லிக்கொண்டு துண்டை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு குளிக்க கிளம்பினார். நேரத்திற்கே போனால் தான் நண்பரை பார்த்து எப்படியாவது தன் பையனுக்கு இன்று வேலை வாங்கிக் கொடுத்து விடவேண்டும். இன்னும் ஒரு சில மாதங்களில் அவர் அரசு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறப்போகிறார். இன்னும் எத்தனை வருடம் தான் பேருந்தின் ஸ்டீரிங்கை பிடித்துக் கொண்டு ஒரே ரூட்டில் ஒட்டிகொண்டிருப்பது. இப்போதெல்லாம் அடிக்கடி நெஞ்சு வலி வேறு படுத்துகிறது. மருத்துவரிடம் காண்பித்தால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்கிறார். அதற்கு உண்டான பணம் இன்னும் சேரவில்லை. மகளின் கல்யாணம் வேறு பயமுறுத்துகிறது.

கிணற்றடிக்கு சென்று குளித்து முடித்து விட்டு, காலை உணவை முடித்து விட்டு கிளம்பத் தயாரானார். மனைவியிடம் கதிரவன் தயாராகிவிட்டானா என்று கேட்டார். மனைவியிடமிருந்து பதிலில்லை. காதில் விழவில்லைப் போலும். கதிரவனை அழைத்தார். ஆளை வீட்டில் காணவில்லை. தன் மகளிடம் கேட்டார், கதிரவன் இன்னுமா தயாராகவில்லை, இன்று நண்பரைப் பார்க்க போகணும் என்று சொல்லியிருந்தேனே என்றார்.
"தெரியலே அப்பா, அண்ணன் இப்பொழுது தான் வாசல் பக்கம் வந்த நண்பனைப் பார்க்க சென்றான், இன்னும் வரவில்லை" என்றாள்.

"நீ கொஞ்சம் வெளியே சென்று பாரம்மா, அவனை கூட்டிக்கொண்டு வா, சீக்கிரம் கிளம்ப வேண்டும்". என்றார்.
அவள் சற்று நேரம் கழித்து “கதிரவன் தெருக் கோடிக் கடயன்டையும் இல்லை” என்றாள்.
“தோட்டப் பக்கம் பாரு” என்றார். அங்கேயும் கதிரவனை காணவில்லை.

கதிரவன் வரவுக்காக அவர் காத்திருந்தார்.

கதிரவன் காலையில் எழுந்தவுடன், பெருசு குளித்து முடித்துவிட்டு வரும் முன்பு எஸ் ஆகிவிடவேண்டும் என்று நினைத்திருந்தான்.
ஆதலால் நண்பன் முருகை காலையிலே வரச் சொல்லியிருந்தான். முருகு வந்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்து அம்மா கழற்றி வைத்திருந்த இரண்டு பௌன் வளையலை பாக்கெட்டில் திணித்துக் கொண்டு கிளம்பினான். இப்பொழுது அவனுக்கு குற்ற உணர்வு அடிக்கடி வருவதில்லை. நான் பெரிய ஆளாகி இது போல் நிறைய நகை செய்து அம்மாவிற்கு கொடுத்து என்று நினைத்துக்கொண்டான்.

போகும் வழியில் சேட் கடையில் நகை வித்து பணத்தை பெற்றுக் கொண்டான். சேட் பணத்தை கொடுக்கும் முன்பு ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டான். "ஏய் பேட்டா சோரிக்கா மால் நை அனா" என்றான்.

போகும் முன்பு நண்பனின் கடையில் சொல்லி வைத்து இரவே வாங்கி வைத்திருந்த பீர் பாட்டல்களை சேகரித்துக் கொண்டான். கதிரவனும் முருகும் அந்தத் திரையரங்குக்கு வந்த பொழுது வாட்ச்மேன் கேட்டை திறந்துக் கொண்டிருந்தான். அவனிடம் கட்டவுட் கட்ட வேண்டிய இடத்தை தெரிந்துக் கொண்டு வண்டி வரக்காத்திருந்தார்கள்.

இப்பொழுது இன்னும் இரு நண்பர்களும் சேர்ந்துக் கொண்டார்கள். கட்டவுட் வந்து இறங்கியதும் கட்டிமுடித்தார்கள். கட்டவுட்காரனுக்கு பணத்தைக் கொடுத்தார்கள். இப்பொழுது முதல் காட்சிக்கு கூட்டம் கூடியது. இப்பொழுது கதிரவனும் நண்பர்களும் கட்டவுட்டின் மேல் விறு விறு வென்றி ஏறி கையிலிருந்த பீர் பாட்டிலைத் திறந்து தங்கள் அபிமான நடிகனின் பிம்பத்தின் மேல் ஊற்றினார்கள். கூடியக் கூட்டம் ஆரவாரமாகக் கைதட்டி கோஷமிட்டார்கள்.
“அண்ணன் கூட நடிக்கும் அன்னிக்கும் பீராபிஷேகம்”.

அரைகுறை ஆடையில் இருந்த அவள் பீர் மழையில் கூட்டத்தைக் கிறங்க அடித்தாள்.

கதிரவன் மகிழ்ச்சியுடன் கீழிறங்கினான்.

கதிரவன் பெருசை ஏமாற்றி முருகுடன் கிளம்பியதை மற்ற நண்பர்களுக்கு ஆரவாரமாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 17 December 2009

பாரதி பிறந்த தின நிகழ்ச்சி -பொதிகை தொலைக்காட்சி


“பொதிகை” தொலைக் காட்சியில் டிசம்பர் பத்தாம் தேதி இரவு பாரதி பிறந்த தின நினைவாக ஒரு தொகுப்பு வழங்கினார்கள். முழுக்க முழுக்க நிலய கலைஞர்களை வைத்து பாரதியின் பாடல்களுக்கு விரசமில்லாமல் நடனம் ஆடினார்கள். இதையெல்லாம் சன் டிவி, கலைஞர் டிவி நடன நிகழ்ச்சிகளுக்கு ஒப்பிடமுடியாது. ஜட்ஜ் கிடையாது, எனர்ஜி இல்லை மச்சான்ஸ் என்ற அபத்தம் கிடையாது. தேவையில்லாமல் ஜட்ஜுகளின் அழுகை உணர்ச்சி வசபடுதல் கிடையாது. ஆனாலும் பெரும்பாலானவர்கள் பொதிகை தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை என்பது வருந்தக் கூடிய உண்மை.
சில முத்தான பாரதிக் கவிதைகளை நிலைய வித்வான்களே மெட்டமைத்து பாடினார்கள். முக்கியமாக கேட்பவர்களுக்கு கவியின் வரிகளில் உள்ள அழகை கொண்டு செல்வதிலேயே கவனம் இருந்தது.
இதே நேரத்தில் ஜெயா டிவியிலும் பாரதியின் பாடல்கள் திரைப் படத்தில் வந்ததை ஒளி பரப்பினார்கள்.
நாம் இருவரில் தொடங்கி, ஏழாவது மனிதன், கைக் கொடுத்த தெய்வம், பாரதி, படிக்காத மேதை, வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்களில் இருந்து பாடல்கள் ஒளி பரப்பினார்கள்.

இந்த பட பாடல்களில் இசை அமைத்த இசை அமைப்பாளர்களின் திறமை வியக்க வைக்கிறது. கவிதையின் நயம் கெடாமல் வரிகளின் உச்சரிப்பில் கவனம் செலுத்தியது வியக்கத் தக்கது.

பாரதி என்ற ஒரு அற்புதமான கவியை நினைவு கூர்ந்தது வரவேற்க வேண்டிய நிகழ்ச்சி. பாரதியை கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் மறந்துக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது.

இன்றைய இளைஞர் தமிழ் சமுதாயம், பாரதி பற்றிய விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.

பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வை மிக எளிமையாக மக்களிடம் கொண்டு சென்றவன்.

“கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”

என்று முழங்கியவன்

“தேடிச் சோறு நிதம் தின்று,
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பம் மிக உழன்று-பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரைக் கூடிக் கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”


என்று வரம் வேண்டுதலில் கேட்கிறான்.

“வெள்ளை நிறத்தொறுப் பூனை
ஏன் வீட்டில் வளருதுக் கண்டீர்
பிள்ளைகள் பெற்றதுப் பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்
சாந்தின் நிறம் ஒருக் குட்டி
கருஞ்சாம்பல் நிறம் ஒருக் குட்டி
பாம்பின் நிறம் ஒருக் குட்டி
வெள்ளைப் பாலின் நிறம் ஒருக் குட்டி
எந்த நிறம் என்றாலும்
அவை யாவும் ஒருத்தரம் அன்றோ”.

என்று பாமரனுக்கும் புரியும் படி ஜாதி பேதங்களைச் சாடிய
பாரதியை “மகாகவி” என்று அழைப்பது அந்த வார்த்தைக்கு அழகு சேர்க்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 15 December 2009

தொல்லைக்காட்சிகளில் "பொதிகை" தனிவிதம்


மத்தியக் கிழக்கு நாடுகளில் இப்பொழுது மழைக்காலம். ஆனால் நம்ம ஊருபோல பொத்திக்கிட்டு ஊத்தாது. ஓயாமல் தூறிக்கொண்டிருக்கும், அதுகூட ஒரு இரண்டு நாட்களுக்கு. அதற்கே தெருவெல்லாம் தண்ணீர் தேங்கும். வண்டி எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முடியாது. என்போல ஒற்றை ஆட்களுக்கு தொலைக்காட்சிதான் பொழுதுபோக்கு. பிள்ளைகளும் மனைவியும் ஊரில் இருப்பதால் வெளியே போவதிலும் ஒரு மஜா இல்லை.

தொலைக் காட்சியிலும் சன், விஜய் கலைஞர் டிவி எதை திருப்பினாலும், தொப்புள். தொடை, மார்புப்பிளவு என்று சஞ்சலத்தை தூண்டும் அபத்தங்கள். ஒரு நாளைக்கு இரண்டு செய்திகளுக்கு மேல் பார்க்கக் கூடாது என்பது நான் எனக்கே வைத்துக் கொண்ட லோக்கல் ரூல். ஆதலால் பெரும்பாலும், நேஷனல் ஜாகரபி, அனிமல் பிளானெட், போன்ற டாகுமெண்டரி காட்சிகள், அவ்வப்போது பொதிகை என்று பார்ப்பேன்.

அவ்வாறு நான் பார்த்தது, டிசம்பர் பத்தாம் தேதியன்று பொதிகையில் கண்ணதாசன் பற்றிய ஒரு நினைவு நிகழ்ச்சியும், பாரதியார் பிறந்த தின நினைவுகளும்.

கண்ணதாசனை நாம் திரைப் பட பாடலாசிரியர் ஆக வெவ்வேறு பரிமாணத்தில் பார்த்துள்ளோம். ஆனால் திரைப் பட பாடல்களிலும் ஒரு தரத்தை வைத்துக் கொண்டு அறிய தத்துவங்களை புகுத்தியதை கூர்ந்து நோக்கினால் புலப்படும்

"இருப்போம் என்று இருப்பவன் கண்களை
இறந்தவன் தானே திறக்கின்றான்".

நீர்க்குமிழி என்ற திரைப் படப் பாடலில் வரும் வரிகள்.

புறநானூற்று பாடல்களில் வரும் கருத்தை பாமரனுக்கும் புரியும்படி எழுதியவர்.

"தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேனருந்த மலர் மூடிக்கொள்ள
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
என் உள்ளத்தில் நீ நின்று ஆடுகிறாய்".

ஒரு சிறந்த உதாரணம்.

திரைப்படப் பாடலுக்கும் அப்பால் அவருடைய கவிதையில் எனக்குப் பிடித்தது.

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,
பிறந்த பார் என இறைவன் பணித்தான்,
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,
இறந்த பார் என இறைவன் பணித்தான்,
மனையாள் சுகம் என்பது யாதெனக் கேட்டேன்,
மணந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தே தெரிந்து கொள்வது எனில்,
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்,
அந்த ஆண்டவன் சற்றே அருகினில் வந்து,
அந்த அனுபவமே நான் தான் என்றான்.

இறந்தும் வாழும் கவிஞன்.
“நான் நிரந்தரமானவன் முடிவும் இல்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை".
உண்மை.
அடுத்தப் பதிவில் "பாரதியைப்பற்றி" .

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 10 December 2009

கெட்டாலும் மேன்மக்கள்


நான் அந்த கிளினிக்கில் நுழையும் பொழுதே எனக்கு முன்னால் ஆறு பேர் காத்துக்கொண்டிருந்தார்கள். அதில் என்னுடைய கல்லூரியில் படிக்கும் சீனியர் ஒருவர். ஒரு அம்மா தன் கைக்குழையுடன் காத்துக்கொண்டிருந்தாள். ஒரு வயசானவரும், மற்றும் இரு வயதான பெண்மணிகளும் இருந்தார்கள். வழக்கமாக கொடுக்கப்படும் நம்பர் டோக்கன் கொடுக்கப் படவில்லை. அதைக் கொடுக்கும் சிறுமி இன்று வேலைக்கு வரவில்லை போலும்.

எனக்கு காலையிலிருந்தே நல்ல காய்ச்சல். ஒரு "அடோல்" போட்டுக்கொண்டால் சரியாகிவிடும் என்று ஒரு மாத்திரைப் போட்டுக்கொண்டு நாளைய பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தேன். மாலை ஆக காய்ச்சல் அதிகமாகியது. ஆதலால் தெரு முக்கு மருத்துவரைப் பார்க்க வந்தேன். இவர் பிங்க் சாயத்தில் ஒரு மருந்துக் கொடுப்பார், அடுத்த நாள் உருவி விட்டாற்போல் ஆகிவிடும், பரீட்சை எழுதலாம் என்று வந்தேன். மிகவும் முக்கியமான முழுப் பரீட்சை. என் எதிரே உட்கார்ந்திருந்த சீனியருக்கும் நல்ல காய்ச்சல் போலும், அவருக்கு இரண்டு நாள் கழித்து பரீட்சை ஆரம்பம். கண்ணை மூடிக்கொண்டு பெஞ்சில் சாய்ந்துக் கொண்டிருந்தார்.

உள்ளே மருத்துவர் ஒரு நோயாளியை "ஆ" காட்ட சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நோயாளி வந்தவுடன் வயதானவர் உள்ளே சென்றார். பின்பு இரண்டு பெண்மணிகளும் நுழைந்தனர். இப்பொழுது என்னுடைய கல்லூரி சீனியரின் முறை வரும் நேரம். அப்பொழுது அந்த பெரிய மனிதர் கிளினிக் உள்ளே தன மகனுடன் வந்தார். அவர்களைப் பார்த்தால் யாருக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல முடியவில்லை. இப்பொழுது மருத்துவர் அடுத்து வந்த
பெண்மணியின் குழந்தையைப் பார்த்துவிட்டு அவர்களை அனுப்பிவிட்டு அறையின் கதவை திறந்து கல்லூரி சீனியரை அழைக்கும் முன்பு அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தப் பெரியமனிதர் மருத்துவரிடம் மாலை வணக்கம் என்று சொல்லிக் கொண்டு மருத்துவர் அறையினுள் நுழைந்தார். நாங்கள் இதை எதிர் பார்க்கவில்லை. நானும் கல்லூரி சீனியரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
உள்ளே போனவர் அந்தப் பெரியமனிதர் எங்கள் தெருவில் உள்ளவர்தான். அவர் ஒரு தனியார் கம்பெனியில் பொது மேலாளராக இருந்தார். அவர் மருத்துவரிடம் தன் அலுவலக அறையில் புதியதாக குளிர்சாதனம் பொருத்தியிருப்பதாகவும், அது தனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்லிகொண்டிருந்தார். அவர் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தது எங்களுக்கு துல்லியமாகக் கேட்டது. மேலும் அவர் அலுவலக நிமித்தமாக வெளிநாடு சென்றதும் என்ன என்ன வாங்கிக் கொண்டு வந்தார் என்று கதை அளந்துக் கொண்டிருந்தார். அவர் மருத்துவரிடம் தன் பெருமையை சொல்லிக் கொள்ள வந்ததாகத்தான் தோன்றியது. மருத்துவரும் அவர் பேச்சை நிறுத்தி அவரை வெளியே அனுப்புவதாகத் தெரியவில்லை.

எதிரே இருந்த சீநியரோ காய்ச்சல் வேகத்தில் முனகிக் கொண்டிருந்தார். எனக்கு நாளைய பரீட்சை பயமுறுத்தி கொண்டிருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து பெரிய மனிதர் தன் தம்பட்டத்தை முடித்து வெளியே வந்தார்.

அப்பொழுது சீனியர் அவரை நோக்கி கோபத்தில் " நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா" என்றார். அதற்கு அந்தப் பெரியமனிதர் "என்ன மரியாதை இல்லாமல் பேசுகிறாய்" என்று அவரிடம் பாய்ந்தார். மருத்துவர் அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்பு அந்தப் பெரிய மனிதர் தன் மகனிடம் "நீ வாடா இவனுடன் எண்ணப் பேச்சு, நாம் செய்வதை செய்யவேண்டும், விளைவை எதிர் பார்க்கக் கூடாது, பகவான் கீதையில் அதான் சொல்லியிருக்கிறார்" என்று மகனை அழைத்துக் கொண்டு விறு விறுவென்று வெளியே நடந்தார்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 7 December 2009

மருத்துவர் ஐயாவும், அன்புமணியும் பின்னர் சூப்பர் ஸ்டாரும்.


இடம் தைலாபுரம்.


மருத்துவர் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு ஏதோ சிந்தனையில் இருக்கிறார்.
அன்புமணி குறுக்கும் நெடுக்கும் கோட் சூட்டுடன் அலைந்துக் கொண்டிருக்கிறார்.
மருமகள் இரண்டுபேருக்கும் மோர் கொண்டு வருகிறாள்.

“ஏம்மா இவன் காலையிலேயே எழுந்து கோட் சூட் போட்டுக்கிட்டு உலாத்தின்னு இருக்கான்”.

“அதை ஏன் மாமா கேக்குறிங்க, காலையிலேயே எழுந்து பழைய நியாபகத்துலே கோட் சூட் போட்டுக்கின்னு மீனம்பாக்கம் வரையிலும் போயிட்டு ஏர்போர்ட்ல உள்ளே விடலேன்னு அப்செட்லே இருக்கார்”.

“அன்புமணி குறுக்கிட்டு அதுக்குதான் நான் அப்பவே சொன்னேன் அம்மாகிட்டே போக வேண்டாம்னு கேட்டிங்களா.
இப்போ ஒரு பையன் நம்மளே மதிக்க மாட்டேங்கிறான். தொ இந்த தைலாபுரத்திலியே மதிக்க மாட்டேங்கிறான், இதுலே மீனம்பாகத்திலே இருக்கிறவன் எப்படி மதிப்பான்”.

“பொறுமையா இருடா மவனே நமக்கு காலம் வரும்”.

“எப்போ வரும், எல்லோரையும் பகைச்சின்னுரிக்கிங்க”

“இருடா காடுவெட்டி குரு, மத்த எல்லா கட்சி ஆளையும் கூப்பிட்டு இருக்கேன், எல்லாம் வந்த வுடனே எதான செய்வோம்”.

“அப்பா இத மக்களுக்கு சொல்லுங்கப்பா, ஏற்கனவே எதானா கேனத்தனமா ஒரு முடிவ எடுத்திட்டு அப்புறம் ஏதோ கட்சியோட சேர்ந்த முடிவுமாதிரி நம்மகிட்டயே உங்க வேலையே காட்டுரிங்களே”.

“எனக்கு போர் அடிக்குதுப்பா, நான் பாட்டுக்கு டெல்லிக்கும், தைலாபுரத்துக்கும் ட்ரிப் அடித்து, டிவி யிலே அப்பப்போ என்ன காட்டிகொண்டிருந்தார்கள், எல்லாத்துக்கும் வச்சிட்டியேப்பா ஆப்பு.
அது சரிப்பா திருசெந்தூருக்கும், வந்தவாசிக்கும் என்ன பண்ணப்போறோம்”.

“மருத்துவர் மனதுக்குள் "ஆமாம் என்னத்தே கிழிக்கப் போறோம், எப்பவும் போலே அறிக்கை வுட வேண்டியது தான்".

“அதாடா கண்ணு நம்ம கட்சியாளுங்க 49 ஒ ல போட சொல்லியிருக்கேன்.”.

“ஆமா இது பெரிய முடிவாக்கும், எப்படியிருந்தாலும் நம்ம ஆளுங்க எவனும் வெளியே வரவில்லை”.

“வேறே எதாவது சொல்லுங்கப்பா”

“சரிடா ரஜினி படம் ஏதோ வெளியே வரப்போகுதாமே, அத்த எதிர்த்து ஒரு அறிக்கை விடலாம்”.

“ஏம்பா இத விட உனக்கு கேனத்தனமான் ஐடியா இல்லையா.
ஏற்கனவே ஒரு தபா அந்த ஆளு கூட்டத்தோட மோதி, அப்புறம் என்ன அனுப்பி மன்னிப்பு கேட்க சொன்னே”.

“நம்ம வூட்லே எல்லோரும் அவர் படம் தான் பாக்கிறாங்க. அதுவும் ஒரு தடவ பார்த்தா பரவாயில்லே, இருபது தடவ பாக்கிறாங்க, அதையெல்லாம் அவர்கிட்டே சொன்ன வுடனே தான் அவர் தங்கள் ரசிகர்களை அமைதியா இருக்க சொன்னார், இல்லேன்னா நம்ம கத கந்தல் ஆகியிருக்கும்”.

“சரிடா இப்போ என்னதான் பண்ண சொல்லற அத்த சொல்லு”.
“கம்முன்னு அரசியல் விட்டு விலகிடுங்கப்பா. நான் மீதியே பாத்துகிறேன். ரொம்ப நாளைக்கி நாம வன்னியர், தமிழ், விவசாயின்னு குப்பைகொட்ட முடியாது. கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுப்பா”.
அப்போது கதவு தட்டப் படவே, திபு திபுவென்று கட்சியாட்கள் உள்ளே ஓடி வந்து, “தலை நீ சொன்ன சரி தலை” என்று மருத்துவரிடம் ஓடுகிறார்கள்
அன்புமணி மனைவியிடம், "பேசாம நம்ம தனியா கழண்டுக்க வேண்டியதுதான்".

கிழவனோட லொள்ளு தாங்கமுடியவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 6 December 2009

மஞ்சள் துண்டு மடாதிபதிக்கு மண்ணாங்கட்டி எழுதும் மடல்


ஐயா தமிழீனத்தலைவரே, நான் மண்ணாங்கட்டி ஒரு தற்குறி, அதால இந்த மடலில் எதாவது எழுத்துபிழை இருந்த மன்னியுங்கள். ஆனா கருத்துப் பிழை இருக்காதுங்கோ.

முதலில் நீங்கப் போடும் மஞ்சள் துண்டின் மர்மம் என்னாங்கோ?. உங்களை பகுத்தறிவாதின்னு வேறே சொல்லிக்கிறீங்கோ. வூட்டுக்கு சாய்பாபா வராரு, வுங்க வூட்டு அம்மா காலிலே விழறாங்கோ இதையெல்லாம் கண்டுக்க மாட்டிங்களா?. வூட்ட திருத்தாத நீங்கோ எப்படிங்கோ ஒரு கூட்டத்தே, கண்மணிக்கு கடிதம் மூலமாவே மூளை சலவை செஞ்சு வச்சிகிறீங்க.

உங்கள் உதவியாளர் சண்முகநாதன் கொஞ்ச நாள் காணாமப் போனதற்கு ஏதோ காரணம் சொல்லறாங்களே உண்மையாங்கோ? அவரு நீங்க கூட்டத்தில் பேச சொல்ல உங்களுக்கு கொடுக்க வேண்டியக் குறிப்ப தேட சொல்ல எவ கூ--ல வச்சேன்னு கேட்டத்துனாலதான் அவர் போயிட்டாருன்னு பேசிக்கறாங்களே. அவரு படிச்ச ஆபிசருங்கோ, அதான் கம்முன்னு போயிட்டார். வேறே யாரவதிருந்தா பதில் சொல்லியிருப்பாருங்கோ. கனிமொழிதில் என்று சொன்னால் உங்க நிலைமை மோசமாயிருக்கும்.
நீங்கதான் தமிழ வாழ வைக்கிறா மாதிரியும் மத்தவங்கோ ஏதோ தமிழ குழி தோண்டிப் புதைக்கிரா மாதிரியும் ஒரு மாயை வளர்த்து குப்பை கொட்டுறீங்களே ஏங்க ஒரு நியாயம் வேணாமா? உண்மையிலயே நீங்க தமிழ் பேர்லயும், தமிழினம் பேர்லயும் பற்று இருந்திச்சுன்னா ஈழப்போர் உக்கிர நிலையில் இருந்தப்போ உங்கள் பாராளுமன்ற உறுப்பினரேல்லாம் வெளியே வரச்சொல்லியிருக்கணும். ஏதோ சிங்களவன் குண்டு போட்டத நிறுத்திட்டா மாதிரி சும்மா லெட்டர் வாங்கி வச்சிக்கின்னு அப்பாலே கிழிச்சிட்டிங்க. ஆனா ஒன்னு உண்மைங்கோ உங்களே மாதிரி மவனே நடிகன் உலகத்திலே யாருமே இல்லீங்கோ. கலைமாமணி விருது உங்க அரசு குடுக்குதே அதிலே உங்க பேரையும் போட்டு ஒன்னு வாங்கிக்கோங்க ஆஸ்கார் நாங்க பாத்துகிறோம்.
ஈழத்துக்கு சும்மா தொப்புள்கொடி உறவு, அது இதுன்னு சொல்லி நல்லாத்தான் எமாத்திநிங்க. இப்போ வேறே சொல்லுறிங்கோ வீரம் ஒன்றும் செய்யாது, விவேகம் துணைக்கு வராவிட்டால். நல்லாத்தான் அல்வா கொடுக்கிறிங்க.

உங்களாலே சில பேர் அசாத்திய முன்னேற்றம் அடைஞ்சது உண்மைதாங்கோ. மக்களே லிஸ்ட் வச்சிக்ராங்கோ. ஏன் கூட வயலிலே வேலை செய்யறானே பொடியன் மருது அவனே சொல்லறாங்கோ. நாத்து நட வருதோ இல்லையோ, நாட்டு நடப்ப கரீட்ட சொல்லரானுங்கோ. அழகிரி எவ்வளவு வச்சிக்கிறார், கனிமொழி எவ்வளவு வச்சிகிராருன்னு கணக்கு வச்சிகின்னு அல்லர் கிட்டேயும் சொல்லிகின்னுகிறான். அதே துரை முருகன் அடிச்சா அவரே மெரட்டுரிங்க, பாலு சம்பாதிக்க விடாம ஆப்பு வக்குறீங்கோ, உங்களே மாதிரி ஒரு தகப்பன் இல்லையேன்னு அவன் வாயிலே புகை வுட்டுக்கின்னு இருக்கானுங்கோ.

அது சரி அந்த ஜோசியர் மார்ச் கடைசிக்குள் புது தலமைசெயகலத்துல நீங்க உட்காரணுமாம், அப்போதான் உங்க குடும்பம் செழிக்கும் என்று சொல்லிகிறார், அதாலே அந்த வேலையே முதலிலே கவனிங்கோ, நாடு கிடக்குது விடுங்க.

"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" மறந்துராதிங்க.

அப்பாலே அந்த புவனேஸ்வரி மேட்டர் இன்னான்னு உங்க புள்ளைய கேட்டிங்களா?

இப்படிக்கு,

ஏதோ விவசாயம் பாத்துக்கினு, தண்ணி வராத சொல்ல, உங்க டிவியிலே காட்டுறே மானாட மயிலாட பாத்துகின்னுகிற( பிகர் எல்லாம் சூப்பருங்கோ) "மண்ணாங்கட்டி"

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 3 December 2009

ஹாஸ்டல் அட்டூழியம்-------ஜூனியர் விகடன்


கடந்த வார ஜூனியர் விகடனில் ஒரு திடுக்கிடும் தகவல் என்ற பெயரில் கோயமுத்தூர் கல்லூரி விடுதியில் பெண்கள் அறையில் மது பாட்டில்களும், ஆணுறைகளும் கல்லூரி நிர்வாகம் அதிரடி சோதனையில் கண்டுபிடித்து செய்வதறியாது விழிக்கிறனர்.

இதன் உச்சம் ஒரு மாணவி உபயோகித்த ஆணுறைகளை பத்திரப்படுத்தி லேபல் இட்டு வைத்திருந்ததுதான். அவளை விசாரித்தபொழுது பிற்பாடு அவனில் ஒருவன் கணவனாக வந்தால் அவனை அதை வைத்து மிரட்ட என்று கூலாக சொன்னாளாம். நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தன் வார்த்தைகள் "கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இது தான்யா பொன்னகரம்" தவறாக உபயோகிக்க வேண்டியுள்ளது.
யோசித்துப் பார்த்தால் தவறு எங்கிருந்து தொடங்குகிறது?.

நம்மை கேட்காமலே நம் வீட்டின் வரவேற்பறையில் நுழையும் தொலைகாட்சி தொடர்கள். நம்ம மொழி தொடர்கள் இன்னும் மாமியார் மருமகள் பழி வாங்கும் படலத்தை தாண்ட வில்லை. ஆனால் வடமொழியிலோ "போல்ட் அண்ட் பியூட்டிபுல்" போன்ற அமெரிக்க சோப் ஒபெரக்களின் தாக்கம் அதிகம். அதில் மச்சினனுடன் அண்ணி உறவு கொள்ளுதல், யாருடன் யார் வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் என்பது சர்வ சாதாரணமாக காட்டப்படுகிறது. இதைப் பார்த்து வளரும் இன்றைய தலைமுறையினர் இது தவறு இல்லை என்று நினைக்கிறார்கள். தவறு தொலைக் காட்சியில் தொடங்குகிறது.

கிட்டத்தட்ட இருபது வருடம் முன்பு பெண்களுடன் பேசினாலே தவறு என்ற நினைத்த சமூகம், உலகமயமாக்குதலுக்கு கொடுத்த விலை.
பெசன்ட் நகர் பீச்சில் இரவு நடந்து செல்லும் பொழுது பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் கையில் சிகரெட்டுடன் மூஞ்சியில் வூதிவிட்டு செல்கின்றனர். கூட வரும் ஆண் கையில் சிகரெட்டே இல்லை. மது சர்வ சாதாரண விஷயம் ஆகிவிட்டது. லண்டனிலும் பாரிசிலும், பார்க்கிலும், தரையடி ரயிலிலும் காணும் முத்தக் காட்சி, இப்பொழுது நம்ம ஊரில், பீச்சிலும் பார்க் மரத்தின் பின்பும் பார்ப்பது சர்வ சாதாரணம்.

பெற்றோர் கண் காணிப்பு இல்லாத பெண்கள் சிலர் ஏமாற்றப்படுகின்றனர், சிலர் வலிய வந்து ஏமாறுகின்றனர். கல்லூரிப் பெண்களின் பேச்சுக்கள் அவர்களுக்கு தெரியாமல் கேட்டுப்பாருங்கள், எத்தனை பாய் பிரிண்டுகள், எத்தனைப் பேரை டம்ப் செய்தாள் என்பதுதான் பிரதானமாக இருக்கும். போதாக்குறைக்கு இப்பொழுது சில காண்வெண்டுகளில் விழா என்ற பெயரில் பள்ளிப் பிள்ளைகளை இரவில் ஸ்கூலில் தங்க அனுமதிக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் கான்வென்ட்டுக்கு அடுத்த வீடுதான் என் வீடு. மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் விடிய விடிய பெண்களும் பையன்களும் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். சடுதியில் ஒரு ஜோடி காணாமல் போய் திரும்ப வரும்.
எங்கே போகும் எங்கே முடியும் இதெல்லாம் தெரியவில்லை?.

சுதந்திரம் எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கப்படவேண்டும், எங்கு தவறாகப் பயன் படுத்தப்படுகிறதோ அங்கு முடக்க வேண்டும்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 1 December 2009

படித்ததில் பிடித்தது ---------(1)


1. பேசும்முன் கேளுங்கள்,
எழுதும்முன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய
ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.
கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும்,
நான்தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன்
எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்முன்பே
சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே,சிறிய
தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவானதகவல்களை வைத்துக்கொண்டு
சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில்ஒருநாள் இழப்பு. அறுவடை
சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில்
வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர்.
ஒருவர்இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு.நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம்தோன்றுவதில்லை.
ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட,
இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதை விட,
எது சரி என்பதே முக்கியம்

17. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக
ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன்
பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும்.
பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது
வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடைஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர்
ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன்,
இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்தசெயலைக் கவனமாகச் செய்
என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும்என்று
எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை.
சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதற்குப்
பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்துஇலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 29 November 2009

ஈனத்தமிழன் இவன்தானோ


பேரினவாதத்தின் கைப்பொம்மை; தமிழ் - சிங்களப் புரோக்கர்; மத்தியில் கிழிந்த ஆட்சி, மாநிலத்தில் நைந்த ஆட்சி புரியும் தோழருக்கு சனீஸ்வரனின் இரண்டாவது மடல்



"நவம்பர் 27 கொலைகாரர்கள் தினம்" என்று நேற்றைய தினம் மன்னாரில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய இலங்கையின் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அறிக்கையை வாபஸ் வாங்குமாறு கோரி யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார்.
சனீஸ்வரனின் அறிக்கையின் முழுவடிவம்:-

வார்த்தைகளால் வரிக்க முடியாக ஈகத்தைப் புரிந்த மகத்தான அந்த மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி “கொலைகாரர்கள் தினம்” என்று வர்ணித்து உன் சுயரூபத்தையே காட்டிவிட்டாயேடா நீயா தமிழரின் பிரதிநிதி - நீயா மக்கள் தொண்டன் - நீயா ஈழத்தின் விடிவெள்ளி – உன்பின்னால் கோஷம் போட்டுத் திரியும் கூட்டம் கூட உன்னை மன்னிக்காதடா மாபாவி – நடந்து முடிந்தவற்றை எண்ணி மனதுக்குள் மௌமாக அழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் உணர்வு புரியாது கொலைகாரர்கள் தினம் என்று கொக்கரித்தாயே நாசமாய்த்தான் போவாயடா…
வேலை கேட்டுத்திரியும் யாழ்ப்பாணத்து இளஞ்சமூகமே சிந்தியுங்கள். உங்கள் வீடுகளிலும் ஒரு மாவீரன் இருப்பான் - அவனும் கொலைகாரனா - இந்த இரக்கமற்றவனிடம் கையேந்துவதை விடுத்து சிங்களவனிடம் கையேந்துங்கள். அவன் வேலை தருவான். துரோகியிடம் செல்வதை விடுத்து விரோதியிடம் செல்லுங்கள். இவனின் வேலைப்பிச்சையால் சோறு தின்பதை விட மலத்தை உண்ணலாம்.
முப்பத்தையாயிரம் இளம் பிஞ்சுகளின் தியாகத்தை ஒரு வார்த்தையால் மிதித்துவிட்டான் பாவி. உன்னை தாய் மண்ணை, தாயை நேசிக்கும் எங்கள் வீட்டு சொறி நாய் கூட மன்னிக்காதடா? பிரேமதாசாவின் வேட்டிக்குள்ளும் சந்திரிக்காவின் பாவாடைக்குள்ளும் இன்று மகிந்தனின் வேட்டிக்குள்ளும் ஒளித்திருந்து அரசியல் செய்யும் உனக்கு தியாகம் என்ற ஒற்றைச் சொல் புரியாது தானடா பாவி. மக்களையும் மாவீரரையும் பிரித்து பார்க்காதேடா பாவி.

நீ ஒரு தமிழ் தலைவனாக இருக்க ஏன் ஒரு மனிதனாக இருக்க கூட தகுதியில்லாதவன். தான் கொண்ட இலட்சியத்திற்காக தன்னையே ஆகுதியாக்கிய எங்கள் குழந்தைகளை கொலைகாரர்கள் என்று சொன்னால் நீ யாரடா படுபாவி. யாழில் வாழும் ம(h)க்களே இவன் பேச்சை மன்னிக்கப் போகின்றீர்களா.
இவனது வேலை வாய்ப்பை நம்பி இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடப் போகின்றீர்களா? இவனின் காசு வாங்கி கோயில் கட்டினால் பாவம்தானடா மிஞ்சும். இவனது காசில் வாசிகசாலை திருத்தினால் அறியாமைதானடா எஞ்சும். இவனிடம் திரிந்து ஊர்வலம் சென்று போஸ்டர் ஒட்டி காசு லஞ்சம் கொடுத்து கேவலம் ஒரு வேலை வாங்குவதைவிட நாக்கை பிடுங்கிக் கொண்டு கொண்டு சாவதே மேலடா.
கேடு கெட்ட இனமல்லடா எங்கள் இனம். கங்கை கொண்டு கடாரம் வென்று கோலோச்சிய இனமடா எங்கள் இனம். மஞ்சள் துண்டுக்கு கழுத்தறுத்த சிங்களவனிடம் மடியேந்திப் பிச்சை கேட்பதா? ஏனடா இவனும் இவனது தலைவன் பத்மநாபாவும் போராடப் போனாங்கள். மதகு திருத்தவும், தார் ஊற்றவுமாடா போனவங்கள்.

யாழ்ப்பாணத்து இளைஞர்களே எல்லோரும் ஒரு கணம் சிந்தியுங்கள்.

மாவீரர்களின் தொகை முப்பத்தையாயிரத்தை தாண்டிவிட்டது. ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு மாவீரனோ போராளியோ இருக்கும் நிலை தமிழீழத்தில் இன்று காணப்படுகின்றது. இவர்களனைவரையும் கொலைகாரர்கள் என்று கூறி கொச்சைப்படுத்தும் ஒரு கூட்டத்தின் பின்னால் திரிந்து போஸ்டர் ஒட்டி கோஷம் போட்டு, ஊர்வலம் சென்று, சங்கு ஊதி பிழைப்பதை விடுத்து சுய தொழில் ஒன்றை தேடிக் கொள்ளுங்கள்.
வேலையில்லாப் பட்டதாரிகளே! இவனுக்கு பின்னால் சென்று ஊம்பித்தான் வேலை எடுக்க வேண்டும் என்றில்லை. உங்களுக்கு கட்டாயம் சிங்கள அரசு வேலை தரவேண்டும். அவன் தாறதை இவன் ஏதோ தான் தாறதாக நடிக்கிறான் அவ்வளவும்தான்.
நீங்கள் அன்று பல்கலைக்கழகத்தில் இருந்து செய்யத பொங்கு தமிழை நினைத்து பாருங்கள். இப்போது வேலை கேட்டு அவன் வாசலில் போய் நிற்க வெட்கமாயில்லை.

உயர்ந்தவர்கள் நாமெல்லாரும்
உலகத்தாய் வயிற்று மைந்தர்
நசிந்து இனி கிடக்க மாட்டோம்
நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்
நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்
நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்

உங்களது கோஷத்தை சனீஸ்வரன் உங்களுக்கு சொல்லி தர வேண்டியதில்லை. புரிந்து கொள்ளுங்கள்.

தோழரே! நீர் திருந்துவீர் மக்கள் தொண்டனாய் மாறுவீர் என்று எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் மாவீரச் செல்வங்களை கொலைகாரர் என்று கூறியதன் மூலம் பேரினவாதத்தின் பிச்சைக்காரன் நீர் என்பதை மீண்டும் ஒருமுறை அறியத்தந்துவிட்டீர்.
உமது மனதில் இன்னும் கொஞ்சம் ஈரம் ஒட்டியிருந்தால் உமது அறிக்கையை வாபஸ் வாங்கி எங்கள் வயிற்றெரிச்சலை சம்பாதிக்காமல் இரும்.

மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும் வரை
யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 28 November 2009

மாவீரர் தினம், தமிழ் ஈழம், மற்றும் இலங்கைத் தமிழர்களின் நிலை


இந்த மாவீரர் தினம் மற்ற எல்லா மாவீரர் தினங்களைவிட ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்ததாக எதிர் பார்க்கப்பட்டது. காரணம் பிரபாகரன் தோன்றுவார், பொட்டு அம்மன் உரையாற்றுவார் என்றெல்லாம் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எதிர் பார்த்த ஒன்றும் நிகழவில்லை. சீமானின் நாடு கடத்தல் ஒரு செய்தியானது. அவர் நக்கீரனில் கொடுத்த காணொளி பரபரப்பு செய்தியானது. என்னால் இந்தக் காணொளியை காண முடியவில்லை. புலம் பெயர் தமிழர்கள் அந்த அந்த நாடுகளில் இந்த மாவீரர் தினத்தை சிறப்பாக நடாத்தியிருக்கின்றனர்.

என் சிந்தனைகளில் ஈழப்போர் முடிந்து விட்டதாக ஸ்ரீலங்கா அரசு நினைப்பது போல் சொல்ல முடியாது. இன்னும் சில வருடங்கள் கழித்து மீண்டும் வேறு வடிவம் கொண்டு எழும் என்றே தோன்றுகிறது. போர் முனையில் இருந்த குழந்தைகள், இளைஞர்கள் இந்த யுத்தப் பூமியில் வளர்ந்தவர்கள். அவர்கள் இதை கண்டிப்பாக அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள் என்றே தோன்றுகிறது.

இதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன.

1.சிறிலங்கத் தமிழன் காலாகாலமாக ஒரு இரண்டாம் தரக் குடிமகனாகவே நடத்தப்படுவது.
2.எத்துனை திறமை இருந்தாலும் தமிழர்களுக்கு பள்ளியிலும், கல்லூரியிலும் வேலை வாய்ப்பிலும் வாய்ப்பினை ஏற்படுத்தாத சிங்கள அரசு, இளைஞர் மனதில் வேற்றுமையை வளர்ப்பது.
3.புலம் பெயர் தமிழர்கள் தங்கள் துறையில் அந்நிய நாட்டில் முன்னேறி, தங்கள் பிள்ளைச் செலவங்களை உயர் படிப்பு படிக்க வைத்திருப்பது.
4.புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்து ஈழப்போருக்கு கொடுத்த ஆதரவு.
5.தமிழனின் இயல்பான தன்மான உணர்ச்சி, போராடும் குணம்.
6.முக்கியமாக சிங்களன் தங்கள் அறிவுத்திறமை, உழைப்பை வளர்த்துக் கொள்ளாமல், சிங்களன் என்ற ஒரே காரணத்திற்காக அரசிடம் எல்லாம் எதிர் பார்ப்பது.
7.ஆனால் இன்னும் தொடரும் தமிழனின் கடும் உழைப்பு. கொழும்புவிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் வடக்கே செல்லும் பொழுதே தமிழர்கள் தேயிலைத் தோட்டத்திலும், வயல்களிலும் வேலை செய்துக் கொண்டிருப்பதை பார்க்கமுடியும்.
8.சோம்பித்திரியும் சிங்களவன் குணம்.
9.பிச்சைக்கும், ஏமாற்றுவதற்கும் தயங்காத சிங்களவனின் குணம்.
10.சிங்களவன் உழைப்பை நம்பாமல், ஏமாற்றி பிழைப்பதை யோசிப்பது.
11.சிங்களப் பெண்களின் கலாசார சீரழிவு. பெரியதாக கலாச்சாரம் இருந்தற்கான அறிகுறிகள் இல்லை. (காலையில் மிருகக் காட்சி சாலையின் உள்ளே ஒதுங்கும் பள்ளி, கல்லூரிப் பெண்கள் தங்கள் துணையுடன் தனியிடத்தில் ஒதுங்கி கெட்ட காரியங்களில் ஈடுபடுவதை மிகச் சாதாரணமாகக் காணலாம்) இவர்கள் சந்ததிகள் எப்படி இருப்பார்கள்?.
12.சிங்கள அரசின் மெத்தனம், மலிந்துக் கிடக்கும் ஊழல், அந்நிய நாடுகளை நம்பியிருத்தல்.

இவை எல்லாவற்றையும் நினைத்து பார்க்கும் பொழுதும், தமிழனின் போராடும் குணங்களையும் நினைத்துப் பார்த்தால், ஈழப்போர் வேறு வடிவம் கொண்டு எழும் என்றே தோன்றுகிறது. வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவே உணர்கிறேன்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 17 November 2009

மறுபடியும் மாயா


பல வருடங்கள் கழித்து, தீபாவளிக்கு ஊருக்கு சென்றேன். நான் தீபாவளிக்கு குடும்பத்துடன் அங்கு வந்ததில் என் பெற்றோருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என் அம்மா ஒவ்வொரு வருடமும் நானும் உன் அப்பாவும் தனியாகத்தான் தீபாவளிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆதலால் நீங்கள் எங்களுடன் தங்கி தீபாவளி கொண்டாடுங்கள் வேறு எங்கேயும் பார்ட்டி என்று போய் விடாதீர்கள் என்றாள். தீபாவளி நாள் இனிதே சென்றது. பேரக்குழந்தைகளுடன் தீபாவளியை பெற்றோர்கள் கொண்டாடியதில் எங்களுக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி.

பண்டிகை முடிந்து தொழில் நிமித்தம் ஊர் திரும்ப தயாராகிக் கொண்டிருந்தோம். மனைவி ஊருக்கு வாங்க வேண்டிய பொருட்களை லிஸ்ட் போட்டு வைத்து மும்முரமாக வாங்கிக் கொண்டிருந்தாள். நான் வழக்கம்போல் “சாரதி” வேலையும், மூட்டை தூக்கும் வேலையும் செய்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அலை பேசியில் என் பால்ய நண்பன் அழைத்தான். அவன் என் அப்பாவை இன்று பார்த்ததாகவும் அவர் நான் ஊருக்கு வந்திருக்கும் செய்தி சொன்னார் என்றும், மேலும் இன்று இரவு அவர்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தான். இம்முறை நிறைய நண்பர்கள் ஊரில் இருப்பதால் எல்லோரையும் சந்திக்க சந்தர்ப்பம் அமையும் என்றான்.
இரவு எட்டு மணிக்கு அவன் வீட்டிற்கு சென்றேன். பழைய நண்பர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அவன் வீட்டு வாசலில் பிளாஸ்டிக் நாற்காலி தெருவை அடைத்துப் போட்டு அரட்டை தொடங்கியது. பால்ய காலத்திலிருந்து சமீப காலம் வரை ஒரு ரவுண்டு வந்து விட்டோம். நேரம் போனதே தெரியவில்லை. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஒரு பெண்மணி அடிக்கடி எங்களை கடந்து போவதும், சில சமயம் சிறிது தள்ளி அமர்ந்து தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தாள். பைத்தியம் போலத் தோற்றம், தலை முடியெல்லாம் சடை கட்டி அழுக்காக இருந்தாள். நான் அவளை கவனிப்பதைக் கண்டு ராஜுதான் “யார் தெரிகிறதா?” என்று என்னைக் கேட்டான்.
எனக்கு அடையாளம் தெரியவில்லை.
"மாயாடா" என்றான்.
மாயா நினைவுக்கு வந்தாள்.
தெருவில் நாங்கள் ஒரு எட்டு பத்துபேர் ஏறக்குறைய ஒரே வயதினர்கள். எல்லாக் குடும்பங்களும் ஒரே குடும்பம் போல் பழகியக் காலம். என்னுடன் ஒரு வயது மூத்தவன் அருண்குமார். அவ்ன் தங்கை தான் மாயா. தெருவின் முனையில் கடைசி வீட்டிற்கு முன் வீடு அவர்களது. மிக எழ்மையானக் குடும்பம். சிறுவயதில் தாயை இழந்து விட்டவர்கள். இவர்களுக்கு ஒரு அண்ணன் உண்டு மிகவும் வயதில் மூத்தவன், அவன் கல்யாணம் செய்துகொண்டு தனிக் குடித்தனம் போய் இங்கு வருவதே கிடையாது. அவன் அம்மா இறந்த அன்றைக்கி மட்டும் வந்ததை நாங்கள் பார்த்தோம். மற்றபடி அவனுக்கும் இந்தக் குடும்பத்திற்கும் தொடர்பு அற்றுப் போய் விட்டதாக அருண்குமார் சொல்லியிருக்கிறான். அவர்களுடைய தந்தை ஏதோ ஒரு தனியார் கம்பெனியில் கணக்கராக இருந்தார். சம்பளம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

மாயாவும் என் தங்கையும் ஒரே வகுப்பில் படித்தார்கள். மாயா சிறு வயதில் சூடிகையானப் பெண். அவள் அம்மா இறந்தவுடன் அவளிடம் ஒரு சோகம் குடி கொண்டது. பண்டிகை காலங்களில் எங்களது நண்பர்கள் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு அவர்களுக்கு தின்பண்டங்கள் கொடுப்போம். அதை அருணும் மாயாவும் ஒரு வெட்கத்துடன் வாங்கிக் கொள்வார்கள். பெரும்பாலும் அருண், மாயாவிற்கு பாடப் புத்தகங்கள் எங்களது பழையப் புத்தகங்களைக் கொடுத்து உதவி செய்வோம்.

அருண் நன்றாகப் படித்தான். அமெரிக்காவிற்கு வேலைக்கு சென்றான். அப்பொழுது தான் நான் அவனைக் கடைசியாகப் பார்த்து. பின்பு நானும் பிழைப்பு தேடி வெளிநாடு வந்து விட்டேன். பின்பு அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் அறிய வாய்ப்பில்லை.

இப்பொழுது மாயாவை இந்த நிலைமையில் பார்த்த பொழுது மனது கனத்தது. அருண் அமெரிக்க போய் இரண்டு மாதத்தில் பிணமாகத்தான் திரும்பினானாம். நியூயார்க் சுரங்கப் பாதையில் தனியாக வந்த பொழுது திருடர்களால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறான்.

மாயா சிறு வயதில் தாயை இழந்து, ஒரே நம்பிக்கையான அண்ணனையும் இழந்து, வயதானத் தந்தையும் கவனிக்க முடியாமல், தொடர்ந்து சோகத் தாக்குதலால் இப்படி ஆகிவிட்டதாக நண்பர்கள் கூறினர்.

விதியின் கோரத்தாண்டவம், இப்படியும் இருக்குமா?

Follow kummachi on Twitter

Post Comment

கருணாகரனின் கவலை




















கருணாகரன் கவலையுடன்
கதவருகே காத்திருக்க
கல்யாணி கல்லூரியில்
கணினி வகுப்பை முடித்து
கடைசி பேருந்தில் வந்தாள்.

என்றாவது கேட்கவேண்டும்
என்று நினைத்ததை
இன்றாவது கேட்கவேண்டும்
நன்றாக பதில் கிடைக்குமானால்
சென்றாக வேண்டும் நண்பர் வீடு.

கல்யாணி கேள் "பெண்ணே
கல்யாணம் எப்பொழுது,
நல்ல வரன் வரும்பொழுது
தள்ளுவது நல்லதல்ல
சொல் உன் முடிவை"

உனக்கு அடுத்த படியாக
உஷாவும் காத்திருக்கிறாள்
மூத்தவள் மீனாதான், கண்
மூடி முடிவெடுத்தாள்
முருகனுடன் ஓடிப்போக

உன் தங்கை உஷாவோ
உன் திருமணம் முடிய
உறவுடன் கைகூடும்
உற்ற நேரம் எப்பொழுது
தப்பாமல் வரும் என்று.

அருமை நண்பன்
அருண்குமார் புதல்வன்
அமெரிக்காவில் பணி
அழகானவன், அறிவுள்ளவன்
அவனை ஏற்றுக்கொள்.

எத்துனை சொல்லியும்
எதிர்ப்பும் காட்டாமல்
ஏறெடுத்தும் பாராமல்
எதிர்வீட்டு சன்னலை
ஏக்கமுடன் நோக்குகிறாள்.

இவள் திருமணமும்
நான் சொன்ன மாப்பிள்ளை
இல்லமால் எதிர் வீட்டு
சன்னலில் தெரியும்
கண்ணனுடன் தானோ.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 16 November 2009

விபத்து


ரமணன் அன்று காலையில் எழுந்தவுடன், அந்த பல்லாவரம் பெண்ணின் நியாபகம் வந்தது. இன்று அவளிடம் நிச்சயம் பெயர் கேட்டுப் பேசிவிடவேண்டும். மாம்பலத்தில் ஏறும் பெண்ணை சிறிது நாட்களாகக் காணவில்லை, படிப்பை முடித்து விட்டாளா இல்லை நிறுத்தி விட்டாளா தெரியவில்லை.

ரமணன் தாம்பரத்தில் உள்ளவன். தொடர் வண்டி நிலையத்திற்கு காலை எட்டுமணிக்கே வந்து விடுவான். எட்டு மணி இருபது நிமிடத்திற்கு புறப்படும் வண்டியில் தான் பிரயாணம் செய்வான். வண்டி எவ்வளவு காலியாக இருந்தாலும் மகளிர் பெட்டிக்கு அடுத்தப் பெட்டியின் கதவருகில் நின்று கொண்டு தலைமுடி காற்றில் பறக்க வருவான். ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி வண்டி கிளம்பியவுடன் ஓடிசென்றுதான் ஏறுவான்.

அவன் அவ்வாறு சாகசம் செய்வதை மகளிர்ப் பெட்டியில் உள்ளப் பெண்கள் வேடிக்கைப் பார்ப்பதால் அவன் சாகசங்களின் எல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. அன்றும் வழக்கம்போல் பல்லாவரம் நிலையம் வரும் முன்பே அவன் தினமும் பார்க்கும் அந்த பெண் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தாள். வண்டி நின்றவுடன் மகளிர் பெட்டியில் ஏறி கதவின் சன்னல் ஓரமான இருக்கையில் அமர்ந்தாள். அங்கிருந்து ரமணனை கடைக்கண்ணால் பார்த்தாள்.

வண்டி மீனம்பாக்கம், பழவந்தாங்கல், மவுண்ட் தாண்டி கிண்டியில் நுழைந்தது. ஒரு வயது முதிர்ந்தவர் ரமணன் ஏறும் பெட்டியில் கதவருகே உள்ள சன்னலின் ஓரமாக இருக்கையில் அமர்ந்தார். கிண்டியில் வண்டி கிளம்பியவுடன் ரமணன் வண்டியுடன் ஓடி வந்து ஏறுவதை கவனித்தார். வண்டி சைதாபெட் வரும்வரை ரமணன் கதவுப் பிடியை பிடித்துக் கொண்டு தன் உடல் முழுவதும் வண்டிக்கு வெளியே வைத்துக் கொண்டு அபாயகரமாக பயணிப்பது அவருக்கு உள்ளே ஒரு அச்சத்தை உண்டாக்கியது.

வண்டி கோடம்பாக்கம் தாண்டியதும் வழக்கம் போல் ரமணன் வண்டி கிளம்பியவுடன் ஓடி வந்து ஏறி, மகளிர் பெட்டியை எட்டி ஒருப் பார்வை பார்த்து தலையைக் கோதிக் கொண்டான். வயது முதிர்ந்தவர் ரமணன் தன் பக்கம் பார்வை பார்த்தபொழுது உள்ளே வர சொல்லி சைகை செய்தார். ரமணன் அதை மதிக்கவில்லை. மற்றும் ஒரு முறை அதே போல் செய்தார், அவன் அவரை ஒரு ஏளனப் பார்வை பார்த்து முகத்தை திருப்பி மகளிர்ப் பக்கம் பார்வை வைத்தான்.

வண்டி நுங்கம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன், அவன் கை தன் சன்னலின் அருகே உள்ளதை கவனித்து, அவன் கையை தட்டி உள்ளே வர சைகை செய்தார். இப்பொழுது ரமணணின் பார்வையில் ஒரு எரிச்சல், அவரை முறைத்து விட்டு தன் பார்வையை மகளிர் பெட்டியின் பக்கம் திருப்பிக் கொண்டான்.

வண்டி சேத்துப்பட்டு நிலையத்தை வளைவில் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் ரமணன் மின்சாரக் கம்பத்தில் அடிபட்டு விழுவதை முதிர்ந்தவர் கவனித்தார். ஒரு கலவரத்துடன் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி, ரயில்வே சிப்பந்திகள் சிலரை கூட்டிக்கொண்டு ரமணன் விழுந்த இடத்திற்கு விரைந்தார்.

இந்தச் சம்பவம் நடந்து, ஒரு மூன்று வாரம் கழித்து, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்த ரமணன் கோமாவில் இருந்து மீண்டான். அருகிலிருந்த அவன் அம்மாவை நியாபகத்தில் கொண்டு வர மிகக் கடினப்பட்டான்.

அவனை கொண்டு மருத்துவமனையில் சேர்த்து, தக்க தருணத்தில் அவனை பிழைக்க வைத்த முதியவர், அன்று இரவு மாரடைப்பால் இறந்தது அவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 13 November 2009

வாத்தியாரம்மா


அருமையான கல்லூரிக்காலம். எங்கள் தெருவில் உள்ள என் வயது பையன்கள் எல்லோரும் வெவ்வேறு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தோம். கல்லூரிக்கு செல்ல எல்லோரும் வீட்டிலிருந்து நடந்து ரயில் நிலையத்தை அடைந்து பிறகு சில பேர் தெற்கு நோக்கிச்செல்லும் வண்டியிலும் மீதிபேர் வடக்கு நோக்கிச் செல்லும் வண்டியிலும் பயணிப்போம். வண்டியில் மற்ற நிறுத்தத்தில் வருபவர்களும் சேர்த்து கொண்டு உலக விஷயங்களையும் கல்லூரி விஷயங்களையும் சத்தமாகப் பேசிக்கொண்டு செல்வோம்.

தெருவில் உள்ள எல்லோரும் பெரும்பாலும் சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்திற்கு செல்வோம். எங்கள் கூட்டம் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டோம். பெரும்பாலும் சினிமா, அரசியல், விளையாட்டுக்களை பேசிக்கொண்டு செல்வோம். மேலும் எங்கள் எல்லோருக்கும் பெண்களுடன் பேசுவதற்கோ, கிண்டல் செய்வதற்கோ ஒரு வித பயம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாங்கள் தவறாக நடந்து கொண்டால் விஷயம் நாம் கல்லூரி விட்டு வரும் முன்பே வீட்டை அடைந்துவிடும்.

அன்று நான், ஸ்ரீதர், குமார், ராஜாராமன், வெங்கட், சுந்தர் எல்லோருமாக ரயில் நிலையத்திற்கு செல்லும் பொழுது சத்தமாக அன்று முதல் நாள் நடந்த கிரிக்கெட் மாட்சில் இந்தியா வென்றது பற்றி பேசிக்கொண்டு சென்றுகொண்டிருந்தோம். அப்பொழுது ஸ்ரீதர், முதல் நாள் மாட்சில் எதோ ஒரு பிளேயர் அடித்த சிச்செரை ச்லாகித்துக்கொண்டு எல்லோரும் பார்த்தீர்களா என்று கேட்டுக்கொண்டு வந்தான். ராஜா ராமன் ஏதோ யோசனையில் வந்து பதில் சொல்லாததனால், "என்ன ராஜாராமா” என்று சற்று குரலை உயர்த்திக் கேட்டான்.

அடுத்து நாங்கள் சற்றும் எதிர்பாராமல் நடந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தன் காலணியைக் கழற்றி "என்ன கிண்டலா, செருப்பால் அடிப்பேன்" என்றாள்.

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. "வாத்தியாரம்மா என்று கிண்டலா செய்கிறீர்கள்".என்றாள்
நாங்கள் ஏதும் பதில் சொல்வதற்கு முன்பு அங்கு அலுவலகம் செல்லும் மற்ற கூட்டம் கூடிவிட்டது. சகட்டுமேனிக்கு அவர் அவர்கள் எங்களை திட்டினார்கள். போததற்கு அறிவுரை வேறு, படிக்கிற வழியைப் பாருங்கள் என்று.

அந்தப் பெண்மணி எங்கள் தெருவில் இருக்கும் எங்கள் குடும்ப மருத்துவரின் மனைவி. அவர்கள் நகரத்தில் உள்ள பிரசித்திபெற்ற பெண்கள் கல்லூரியில் ஆங்கில பேராசிரியை. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது, அவர்கள் கல்லூரியிலிருந்து திரும்பியவுடன் என் அம்மாவிற்கு செய்தி போய் விடும். பின்பு என்ன வீட்டில் ஒரே களேபரம்தான். போதாகுறைக்கு போன பரீட்சையில் நான் வாங்கிய மார்க்குகள் ஒன்றும் சொல்லும்படியாகவே இல்லை. இப்பொழுதுதான் அதற்கு உண்டான ஒரு “மண்டல அர்ச்சனை” முடிந்தது.

மாலை கல்லூரியில் இருந்து வந்தவுடன், விளையாட்டில் மனம் செல்லவில்லை. என் வீட்டு வாசலில் கூடி காலையில் நடந்ததை நினைத்து ஒரு வித பயத்துடன் வருந்தி கொண்டிருந்தோம்.

ராஜாராமன் வீட்டிற்கு கிளம்ப இருந்த சமயம், ஸ்ரீதர்தான் "ஏய் வாத்தியாரம்மா" என்றான். நான் ஸ்ரீதரை அதட்டினேன். ஏண்டா திரும்ப வம்பு இழுக்கிறே என்றேன்.

நான் ராஜராமனைக் கூப்பிட்டேன் என்றான். என்காதில் சத்தியமாக “வாத்தியாரம்மா” என்றுதான் விழுந்தது.

இப்போது எனக்கு எல்லாம் பளிங்கு போல விளங்கிவிட்டது. மாலை பேராசிரியை வரக்காத்திருந்தோம். விஷயம் எங்கள் பெற்றோரை எட்டுமுன் அவர்களுக்கு விளக்கி விடவேண்டும் என்று.

அவர்கள் வீட்டிற்கு திரும்பியவுடன் சிறிது நேரம் கழித்து, அவர்கள் வீட்டுக் கதவை தட்டினோம். பேராசிரியை தான் திறந்தார்கள்.அவர்களிடம் விஷயத்தை விளக்கினோம். அவர்கள் அரை மனதாகத் தான் ஏற்றுக் கொண்டார்கள்.

அதற்குப் பிறகு அவர்களைக் கண்டாலே எங்கள் பேச்சு நின்று ஒரு அசாத்திய மௌனம் நிலவும்.

அவர்கள் எங்களை காலணியைக் கழற்றி திட்டியதற்கு ஒரு சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அதில் உள்ள அநியாயம் இன்னும் ஜீரணிக்கமுடியவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 12 November 2009

வழக்கொழிந்து போன விளையாட்டுகள்




கிட்டத்தட்ட ஒரு இருபது வருடத்திற்கு முன்பு இந்த விளையாட்டுகள் சென்னையில் ஏன் தமிழகத்தில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பரவலாக சிறுவர்களால் ஆடப்பட்டவை. இப்போது உள்ள கிரிக்கெட், கால்பந்து மோகத்தில் வழக்கொழிந்து போய்விட்டன. அத்தகைய பழைய விளையாட்டுகள் பற்றிய ஒரு நினைவுப் பதிவு.

கில்லி-தாண்டு


இந்த விளையாட்டிற்கு கிரிக்கெட் போல டெக்னிக் தேவை. விளையாட்டுப் பொருட்கள் சுமார் நாலு அங்குல நீல கட்டை, இருப் பக்கமும் கூறாக சீவப் பட்டிருக்க வேண்டும், அதை நெம்பி அடிக்க சுமார் ஒன்னரை அடி நீளமுள்ள மெல்லிய உருட்டுக் கட்டை.

இரு அணிகளில் நான்கு முதல் ஆறு பேர் வரை ஆடும் ஆட்டம். முதலில் பூவா தலையா போட்டபின்பு, வென்ற அணி கில்லி அடிக்கும், மற்றைய அணியினர் அதை கேட்ச் பிடிக்க வேண்டும் இல்லை கிரிக்கெட் போல தடுத்து நிறுத்தி எண்ணிக்கையின் அளவை குறைக்க வேண்டும். கேட்ச் பிடித்தால் அந்த தாண்டு பிடித்தவன் அவுட் ஆகி அடுத்தவன் அடிக்க வேண்டும். இல்லையென்றால் அடித்தவன் தாண்டை குறுக்காக வைத்து எதிர் அணியினர் அதில் குறி பார்த்து அடிப்பார்கள், கில்லி தாண்டில் பட்டால் அவன் கிரிக்கெட் போல போல்ட் அவுட். இல்லையென்றால் அந்த இடத்திலிருந்து அவன் மூன்று முறை தூர தேசத்திற்கு அடிப்பான், அங்கிருத்து அவன் குத்துமதிப்பாக நானூறு என்று கேட்பான். பீல்டிங் சைடு அதை அளக்க வேண்டும் (தாண்டினால், இரு முறை தட்டி அடித்தால் கில்லியினால் அதை அளக்க வேண்டும்), அளவு சரியாக இருந்தால் அவனுக்கு அந்த எண்ணிக்கை ஏறும் . இதில் ஸ்கோர் போச்சா ஆட்டம் போச்சா என்ற வினோத விதி முறைகளும் உண்டு.

குச்சிப் ப்ளே

தேவையானப் பொருட்கள், சுமார் மூன்று அடி நீளமுள்ள ஒரு கம்பு.
ஆறு முதல் எட்டுப் பேர்கள் விளையாடும் ஆட்டம்.
முதலில் ஷா பூ த்ரீ போட்டு, எஞ்சியவன் தனது இரு கைகளையும் உயரத் தூக்கி, ஆட்காட்டி விரலுக்கும் கட்டை விரலையும் ஆங்கில எழுத்து வி போல வைத்து குச்சியை தளர்வாகப் பிடிக்க வேண்டும். ஒருவன் தன கம்பை இடையில் வைத்து அதை லாவகமாக தூர தள்ளி விடுவான். மற்றவர்கள் அதை தாம்பரத்திலிருந்து தண்டையார் பேட்டை வரை தள்ளிவிடுவார்கள். குச்சியை இழந்தவன் மற்றவர்களை குச்சி கல்லில் வைக்காதப் பொழுது தொட வேண்டும். அப்படிதொட்டால் அவன் அவுட். அடுத்த பலி அவன் தான். குச்சி எங்கிருக்கிறதோ அங்கிருந்து கிளம்பிய இடத்திற்கு நொண்டிக் கொண்டே வரவேண்டும். நாம் முதலில் மாட்டினால் அம்மா கூப்பிடுகிறாள் என்று “எஸ்” ஆகி விடுவது உத்தமம்.

பம்பரம்-(டாவால அபிட்)

இதில் இரண்டுக்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் உண்டு. ஒன்று பால் குடம், மற்றது தலையேறி.

பால்குடம்: எல்லோரிடமும் பம்பரமும் சாட்டையும் அவசியம். பம்பரம் புதியதாகவும், ஆணி கூறாகவும் இருந்தால் நல்லது. எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். ஒரு வட்டத்திற்குள் ஒரு பத்து பதினைந்து கூழாங்கற்களைப் போட்டு முதலில் அதன் மேல் பம்பரத்தை குத்துபோல் விடவேண்டும், ஒரு கல் வெளியே வந்தாலும் எல்லோரும் அபிட் எடுக்கவேண்டும். அபிட் என்பது பம்பரத்தை சுழல விட்டு அதை லாவகமாக சாட்டையால் நெம்பி கையில் பிடிக்க வேண்டும். கடைசியாக அபிட் எடுத்தவன் தான் முதல் பலி. இப்பொழுது அவன் பம்பரம் வட்டத்தின் நடுவே வைத்து அதன் மேல் எல்லோரும் பம்பரத்தை குத்துவார்கள். இப்பொழுதுதான் ஆக்கர் என்ற சமாசாரம் வரும். குத்து வாங்க வாங்க பம்பரம் சொறிநாய் போல் ஆகிவிடும்.

தலையேறி: இது ஒரு வினோதமான விளையாட்டு, வட்டத்திற்கு பதில் இருபத்து அடி இடைவெளியில் இரண்டு கோடுகள். ஷா பூ த்ரீயில் எஞ்சியவன் பம்பரம் முதல் பலி. அவன் பம்பரம் ஒரு கோட்டிலிருந்து இன்னொரு கோட்டுக்கு ஆக்கர் குத்தியே அலைக்கழிக்கப்படும். இதிலும் அபிட், டாவால்ல அபிட் போன்ற வினோத சொற்களும், வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிபேட்டை சொற்களும் அடங்கும்.

இதைதவிர மேலும் மங்காத்தா (சீட்டுகட்டு), பேந்தா (கோலிகுண்டு) விளையாட்டுக்களும் வழக்கொழிந்துப் போய் விட்டன. இந்த மாதிரி விளையாட்டுக்கள் இப்பொழுது யாரவது விளையாடுகிறார்களா என்பதற்கு சான்றுகள் இல்லை.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 11 November 2009

தேடல்


வாழ்கையில் தேடல் எப்பொழுது தொடங்குகிறது. யோசித்துப் பார்த்தால், ஒரு உயிர் ஜனிக்கும் பொழுதே தொடங்குகிறது.

பிறந்த சிசு பாலுக்கு மடி தேடல்,
வளரும் பொழுது அன்பு தேடல்
அரவணைப்புத் தேடல்,
பிறகு அறிவுத் தேடல்
சிறுவயதில் நட்புத் தேடல்,
தொடர்ந்து அறிவுத் தேடல்
பிழைக்க வேலைத் தேடல்
தொடரும் பொருள் தேடல்
தேடிய பொருளை பாதுகாக்க இடம் தேடல்
உற்ற துணைத் தேடல்
துணையிடம் அன்புத் தேடல்
ஓயாது நிம்மதித் தேடல்
இன்ன பிறத் தேடல்கள்.

பிறக்கு குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் தேடல்
தொடர்ந்து படிக்க பொருள் தேடல்
வளர்ந்தவுடன் அவர்களுக்கு வேலைத் தேடல்
அவசியமிருந்தால் அவர்களுக்கு துணைத் தேடல்
தேடல் முடியும் வேளையில் தனியாக விடப்பட்டு
தொடரும் அன்புத் தேடல்கள்

எத்தனைத் தேடலடா
என்றும் முடிவதில்லையடா.
நரைக் கூடிக் கிழப் பருவம்
வந்து நாளை என்னும் பொழுதும்
தொடரும் துணைத் தேடல்.

Follow kummachi on Twitter

Post Comment

தொழிலும் பெயர் பொருத்தமும்


சமீபத்தில் மின்னஞ்சலில் வந்ததிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.

பாரசீகர்களும், ஆங்கிலேயர்களும் தங்கள் செய்யும் தொழிலை குடும்பப் பெயர்களாக வைத்திருப்பார்கள். உதாரணம்: ஜேம்ஸ் குக், ஜான் பார்பேர், டவே ஸ்மித்.

தமிழில் அது போல பெயர் பொருத்தம் ஒரு கற்பனை, நகைச்சுவைக்கு மட்டுமே, (யார் மனதையும் புண்படுத்த அல்ல)

மருத்துவர்---------------------வைத்யநாதன்
பல் மருத்துவர்-----------------பல்லவன்
கண் மருத்துவர்----------------கண்ணாயிரம்
நரம்பியல் நிபுணர் -------------நரசிம்மன்
வக்கீல்------------------------கேசவன்
வட இந்திய வக்கீல்-------------பஞ்சாபகேசன்
நிதியாளர்----------------------தனசேகரன்
இருதய நிபுணர்-----------------இருதயராஜ்
குழந்தைநல மருத்துவர்---------குழந்தைசாமி
மனநல மருத்துவர்--------------மனோ
பாலியல் நிபுணர்----------------காமேஸ்வரன்
கல்யாண புரோக்கர்-------------கல்யாணசுந்தரம்
காது மூக்கு தொண்டை நிபுணர்--நீலகண்டன்
சர்க்கரை நோய் மருத்துவர்------சக்கரபாணி
ஹிப்நோடிச்ட்------------------சொக்கலிங்கம்
மூளை நிபுணர்-----------------புத்திசிகாமணி
மேஜிக் நிபுணர்-----------------மாயாண்டி
கட்டிடக் கலை வல்லுநர்--------செங்கல்வராயன்
வெள்ளை அடிப்போர் ----------வெள்ளைச்சாமி
வானிலை ஆய்வாளர்-----------கார்மேகம்
விவசாயம்---------------------பச்சையப்பன்
தலையாரி---------------------பூமிநாதன்
முடிவேட்டுவோர்---------------கொண்டையப்பன்
பிச்சைக்காரர்-------------------பிச்சைமூர்த்தி
ஒப்பனைகாரர்------------------சிங்காரம்
பால்காரர்----------------------பசுபதி, பால்ராஜ்
நாய் பயிற்சியாளர்--------------நாயகன்
பாம்பாட்டி----------------------நாகராஜ், நாகப்பன்
மலையேருவோர்----------------ஏழுமலை
வேல் எரிவோர்-----------------வேலாயுதம்
உயரம்தாண்டுவோர்-------------தாண்டவராயன்
பளு தூக்குவோர்----------------பலராமன்
பேட்ஸ் மேன்------------------தான்டியப்பன்
பௌலேர்----------------------பாலாஜி
கார் டிரைவர்-------------------பார்த்தசாரதி
அரசியல்வாதி------------------பொய்யாமொழி (பொய்யெமொழி)

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 10 November 2009

சுகுணா அறையில் சுண்டெலி


இந்த அனுபவக் கதையில் இரண்டு பிரதான பாத்திரங்கள் தான், மற்றவரெல்லாம் கௌரவத் தோற்றமே. சுகுணா தான் கதாநாயகி, இரண்டாவது பாத்திரமான சுண்டெலி அல்பாயுசில் “அபிட்” ஆகப் போகிறது.

சுகுணா குடும்பத்தினர் எங்கள் காலனியில் புதியதாக குடிவந்தவர்கள். அவளுடைய தந்தை போலிஸ் கமிஷனர் ஆபீஸில் வேலை பார்க்கிறார். சுகுணா பார்க்க ரேஸ் குதிரை போல இருப்பாள். ஏத்தம் கொஞ்சம் அதிகம். அப்பாவின் செல்லம் வேறு. எங்களுக்கெல்லாம் தலைவலியாக வந்து சேர்ந்தாள்.

நாங்கள் தெருவுக்கு குறுக்கே கிரிக்கெட் பிட்ச் போட்டு எதிர் வீட்டு சுவற்றில் கரி கோட்டில் விக்கெட் வரைந்து இத்தனை வருஷங்களாக ஆடிக்கொண்டிருக்கிறோம். இவள் வந்தவுடன் மற்றப் பெண்களுக்கும் எங்களை எதிர்க்க ஓரளவுக்கு துணிவு வந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். வேணுமென்றே நாங்கள் கிரிக்கெட் ஆடும் இடத்தில் தரையில் கரிக்கோடிட்டு பாண்டி ஆடுவாள். எங்களுக்கு கிரிக்கெட் ஆட வேறு சரியான இடம் கிடையாது. எவ்வளவோ செய்து பார்த்து விட்டோம், அவள் மசியவில்லை. அவளை ஒரேயடியாக எதிர்க்க எங்கள் யாருக்கும் துணிவில்லை, அவள் அப்பா போலிஸ் கமிஷனர் ஆபீஸில் வேலை பார்ப்பதால் எங்களுக்கு பயம்.

மொத்தத்தில் அவள் வந்ததில் எங்களுக்கு நிம்மதி போய் விட்டது. கோடை விடுமுறையில் என் வீட்டில் எல்லோருமாக சேர்ந்து கேரம் விளையாடுவோம். அதற்கும் என் தங்கையைத் தூண்டிவிட்டு ஆப்பு வைத்து விட்டாள். நாங்கள் வரும் முன்பே கேரம் போர்டை எடுத்து வைத்துக் கொண்டு ஆட அரம்பித்து விடுவார்கள், அவர்கள் ஆட்டம் முடிந்தவுடன் “ஸ்ட்ரைகரை” ஒழித்து வைத்து விடுவார்கள். என் தங்கையிடம் நான் கேட்டால் கூட இவள் குறுக்கே பூந்து கும்மி அடித்து விடுவாள்.

சுகுணாவின் அராஜகத்தை ஒழிக்க நாங்கள் எவ்வளவு பாடு பட்டும் ஒன்றும் வழித் தெரியவில்லை. அன்றும் வழக்கம் போல் நாங்கள் கிரிக்கெட் ஆடத் தொடங்குமுன் அவள் தன் தோழிகளுடன்(என் தங்கை சனியனும் கூட) வந்து பாண்டி ஆட ஆரம்பித்து விட்டாள். நாங்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிக்கொண்டிருந்த நேரம், அவள் சற்று விளையாட்டை நிறுத்தி, மற்ற பெண்களை விளையாடச் சொல்லிவிட்டு அவள் வீட்டிற்கு போனாள்.
சிறிது நேரத்தில் அவள் வீட்டிலிருந்து வீல் என்று ஒரு அலறல். அவள் அம்மாவும் கூட சேர்ந்து "வீலவே", மணி அவர்கள் வீட்டிற்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடினான், நாங்கள் எல்லோரும் பின் ஓடினோம். என்ன ஆச்சு ஆண்டி, என்று கேட்டுக் கொண்டே நாங்கள் சுகுணா இருந்த ரூமுக்கு சென்றோம், அவள் இன்னும் "வீல்" அலறலை விடவில்லை.
நாங்கள் அவள் அறையில் நுழைந்த பொழுது எங்களது கதா நாயகன் "சுண்டெலி" மணியின் காலின் கீழ் கத்திரிக்காய் துவையல் போல் கிடந்தது. கதாநாயகன் அறிமுகம் முன்பே "அபிட்".

ஆனால் அடுத்தது நாங்கள் கண்ட காட்சி சென்சார் போர்டில் தப்பித்த காட்சி போல் இருந்தது. சுகுணா கட்டிலின் மேல் ஏறி ஒரு காலை ஜன்னலில் வைத்துக் கொண்டிருந்தாள். அவளது "ஸ்கிர்ட்" (குட்டை பாவாடை) அபாய எல்லையைத் தாண்டிவிட்டது. அவளது நிலைமை புரிய அவளுக்கு சில கணங்கள் பிடித்தது.

இப்பொழுதெல்லாம் சுகுணா எங்கள் பிட்சிற்கு போட்டியாக வருவதில்லை. மேலும் அவள் வந்தாலே நம்ம பசங்க "சுண்டெலி" என்று குரல் விடுவார்கள்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 9 November 2009

ஹைக்கூ - பாகம் 3






காதல்

அடையும் வரை ஆனந்தம்,
அடைந்த பின் பூகம்பம்,
காதல்.

ஏட்டுச் சுரைக்காய்


ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது,
எவன் சொன்னது, மனைவி கொடுத்த,
காய்கறிப் பட்டியல்.


உறக்கம்


நாடும் பொழுது நழுவும்,
தவிர்க்கும் பொழுது தழுவும்,
உறக்கம்.


மூட நம்பிக்கை


மழையை எதிர்நோக்குதல் நம்பிக்கை
மழை வர மாக்களை மணந்தால்
மூட நம்பிக்கை.


கடன்காரன்

கன்னியின் மேல் உள்ள காமத்தினால்
கடன்பட்டுப் போனான்
காதலிடம்.

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 3 October 2009

டாஸ்மாக்கில் காந்தி.......


இன்ன நயினா கடையாண்ட இம்மாம் கூட்டம்?
நாளிக்கி கட கிடயாதாம்பா.
ஐய்யே இன்னாவாம், நாளிக்கி தலிவரு பந்த வச்சிகினாரா..
இல்லிபா காந்தி பொறந்த நாளாமபா.
ஏம்பா அவருதான் தபா தபா இந்தபக்கம் வரார், போஸ்டர் ஓட்டலியே பா
யோவ் மெர்சல் பண்ணாதே, அது ராகுல் காந்திபா.
அப்பா நீ யாரே சொல்லுறே? அவரு பட்டானா?
யோவ் அவரு பாட்டனுக்குப் பாட்டன் நேருபா, தொப்பிவச்சிகின்னு, சொக்காயிலே ரோசப்போ சொருகிக்கினுபாரே அவருபா, காந்தி அவரு வேறே பார்டிபா.
இன்னா பார்டி கழகமா.
யோவ் அத்தே சொல்லலே, ஆளே வேற ஆளுபா.
பீச்சண்டே ஒரு செலே வச்சிகிரான்களே அவரு பா.
நம்ம செவாளியறு செலைக்கி எதிருலே நிஙனுகினரே அவருதாம்பா.
ஏம்பா சரி அதுக்கு இன்னாத்துக்கு கடையே அடைக்கிரானுங்கோ.
அவருக்கு போதைன்னா ஆவாதுபா.
சரிபா அவரு கட்டிங் உட வேணாம், நமக்கு ஏன் கொடுக்க மாட்டேங்கராங்கோ.
அது கவர்மென்ட் உத்தறவுபா.
அப்பாலே நாம எண்ணப் பன்றதுபா.
டாச்மாக்தான் கிடையாதுப்பா, கிளுப்புக்காரனுங்கோ தொரந்துக்கின்னு கொடுப்பானுங்கோ.
நம்மளே உள்ளே உடமாட்டானுங்க்ப, அவனுங்கோ ரவுசு பார்டிங்கோ.
அப்போ இன்னாத்தான் செயறதான்.
ப்ளாக்கிலே விப்பானுங்கபா, இன்னிக்கே வாங்கி, நாயர் கடையிலே கொடுத்தா, கட்டிங் உட்டுக்கலாம்பா.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 1 October 2009

பதினாலு இட்லி பத்மநாபன்













பக்கத்து வீட்டு பெண்மணியிடம் என் மனைவியின் "ஓட்டல்" சற்று அதிகமாகவே இருக்கும்.

என்னங்க கீதா உங்க கல்யாண நாள் விருந்து எங்க தரப்போறிங்க என்று தொடங்கும் அரட்டை.

அவங்க வந்து வீட்டிலேயே செஞ்சுடலாங்க என்பார்கள்.

வீட்டிலே வேண்டாங்க வெளியிலே எங்கேயாவது போகலாமே என்பாள்.

உடனே கீதா "பீச் போகலாங்க" என்பாள்.

சரி அப்புறம் எந்த ஹோட்டலுக்கு போகலாம், மனைவி நக்கல் ஆரம்பமாகும் நேரம்.

அவங்க எந்த ஹோட்டல் சொன்னாலும் மறந்து கூட அந்த மைலாபூர் ஹோட்டல் பேரே சொல்லமாட்டாங்க.

மனைவி விடாம அந்த ஹோட்டலுக்குத்தான் போகணும் என்பாள்.

அந்த ஹோட்டல் பேரே சொன்னாலே அவங்க அலறுவாங்க.

வெகு நாட்கள் வரை என்னக் காரணம் என்று புரியவில்லை.
மனைவி விடாமல் என்னக் காரணம் என்று கண்டுபிடித்துவிட்டாள்.

கீதாவின் புருஷன் பத்மநாபன் ஒரு பயங்கிற உஷார் பேர்வழி.

காய்கறி காரியிடம் மல்லுகட்டி எப்படியோ ஒரு கிலோ என்பதை ஒன்னே கால் கிலோ வாங்கிடுவான். அவளிடன் தராசை எடுக்கும்போழுதே தான் பிடுங்கிக்கொண்டு, இதென்னம்மா தராசு ஒரு சைடா பொருள் இல்லாமலேயே சாயுது என்று ஆரம்பித்து அவளை ஒரு வழி பண்ணி அவளிடம் எக்ஸ்ட்ரா காய்கறி இஞ்சி, கொத்தமல்லி என்று கொசுரே வாங்கிவிடுவான்.

காய்கறிக்காரி போகும் பொழுது நம்ம பத்மனாபானின் குலம், கோத்திரம் எல்லாவற்றையும் ஒரு வழி பண்ணி, மேலும் அவன் பிறப்பையே கேள்விக்குரியிட்டுப் போய் விடுவாள்.

அப்பேர் பட்ட ஆளு, தன் மனைவியின் தொல்லை தாளாமல் அந்த ஹோட்டலுக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறான்.

காய்கறிக்காரி போகும் பொழுது நம்ம பத்மனாபானின் குலம், கோத்திரம் எல்லாவற்றையும் ஒரு வழி பண்ணி, மேலும் அவன் பிறப்பையே கேள்விக்குறியாக்கிவிட்டுப் போவாள்.

விஷயம் இதுதான் நம்ம ஆளு பதினாலு இட்லின்னு ஒரு ஐட்டம் அத்தே ஆர்டர் பண்ணிட்டு, மனைவிக்கு மசால் தோசை ஆர்டர் எல்லாம் செய்து நல்லா ஒரு கட்டிட்டு சர்வர் பில்லுகொடுக்கும் பொழுது தன் கைவரிசையை (சொல்வரிசையை) காட்டியிருக்கிறார்.

ஏம்பா பதினாலு இட்லின்னு சொன்னே பன்னிரண்டு இட்லிதான் இருந்தது. சார் குட்டி குட்டியா பதினாலு சாம்பார்லே மூழ்கியிருக்கும் சார் என்றிருக்கிறான்.

நம்ம "பத்து" விடாமே யோவ் பன்னிரெண்டுதான் இருந்தது, நான் சாப்பிட்டவன் எனக்குத் தெரியாதா, பதினாலு இட்லி ஐம்பத்தாறு ருபாய், பன்னிரண்டு இட்லி நான் நாற்பத்தெட்டு ருபாய் தான் தருவேன்.

சார் பேஜார் பண்ணாதே, இன்னா சார் இது போலே யாரும் சொன்னதில்லே சார், நீ கொடுக்கலேன்னா மானஜெர் காச்சிடுவார், டிப்ஸ் வேணா தராதே சார் என்றிருக்கிறான்.

யோவ் டிப்சா அப்படின்னா என்னா, யோவ் அம்மாக்கு நான் என்னய்யா கேட்டேன், மசால் தோசை நீ என்னய்யா கொடுத்தே சாதா தோசை அதாலே நீ அதுலே ஒரு நாலு ரூபாய் கழித்து வேறே பில் கொண்டுவா என்று சொல்லி ரப்ச்சர் பண்ணியிருக்கிறார்.

கீதாவோ இல்லைங்க மசால் தோசைதான் என்று சொல்ல, நீ கம்முன்னு இரு உனக்கு ஒன்றும் தெரியாது. என்று அடக்கியிருக்கிறார்.

விஷயம் அந்த ஹோட்டல்களில் இருந்த எல்லோருக்கும் தெரிந்து, ஒரே களேபரம் தான்.

மேலும் இவர் எப்பொழுது அந்த ஹோட்டலுக்குப் போனாலும், அந்த சர்வர் எல்லோருமாக சேர்ந்து இவருக்கு இவரை இப்பொழுது ஒருவழிப் பண்ணுகிறார்களாம்.

இவர் குடும்பத்துடன் போனாலே பதினாலு இட்லி பார்டி உஷார் என்கிறார்களாம்.

கீதாவின் அலறலுக்கு இதுவே காரணம் என்று புரிந்தது.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 24 September 2009

அக்யுஸ்ட் (Accused)......


வீட்டின் பின்புறத்தில் ஏதோ சலசலப்பு கேட்கவே, எழுந்து, அறையின் கதவைத் திறந்து வெளியே உள்ள மொட்டை மாடியின் விளக்கை போட்டேன். சலசலப்பு அடங்கியது. வானம் இருட்டி லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. ஏதும் ஆளரவம் தெரியவில்லை. மறுபடியும் அறையின் உள்ளே வந்துப் படுத்தேன். மனைவி தூக்கதிலிருந்து முழித்து, “மணியென்ன” என்றாள். “நாலரை இருக்கும் என்றேன்”.

“என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துவிட்டீர்கள்” என்றாள்.

“இல்லை தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்டது என்னவென்று பார்த்தேன்” என்றேன்.
எங்கள் வீட்டில் திருட்டு அடிக்கடி நடப்பதுண்டு. வீடு ரயில்வே ட்ரக்கை ஒட்டி இருந்தது. ட்ரக்கின் அப்பால் ஒரு முப்பது குடிசைகள், கட்சிகொடிகளுடன் புதியாதாக வரதொடங்கியிருந்தது. என் வீட்டின் பின்புறம் “கம்பௌந்து” சுவர் இருந்தாலும் ஏறிக்குதித்து, கொடியில் காயபோட்டிருக்கும் துணிகள், பாத்ரூம் புக்கெட், டூத்ப்ருஷ் எதையும் வெளியில் வைக்க முடியாது.

வீட்டின் பின் புறமிருந்த இரண்டு தென்னை மரங்களும் வளைந்து சுவர் வெளியே இருப்பதால் மரத்தின் மேல் ஏறி உள்ளே குதித்து விடுவார்கள். சுவரின் மேல் முள் வேலி வேயந்திருந்தேன், ஆதலால் சுவர் ஏறி குதிப்பது கடினம். பொருட்களை எடுத்துக்கொண்டு மரத்தின் மேல் ஏறி அப்பால் குதித்து "எஸ்" ஆகிவிடுவார்கள்.

அன்று நான் காலையில் எப்பொழுதும் போல் பாக்டரி போகத் தயாராகிக் கொண்டிருந்தேன். வீட்டு வாசலில் ஒரே கூட்டம். அப்பாலிருந்த குடியிருப்பு ஆட்கள் ஆண்களும் பெண்களுமாகக் கூடி, என்னை வெளியே வரச்சொல்லி சத்தம் போட்டார்கள். காலையில் ஒரு ஆள் ரயில்வே ட்ரக்கின் ஓரமாக தலையில் காயத்துடன் இறந்து விட்டதாகவும், அவனை நான் கல்லால் அடித்துக் கொன்று விட்டேன் என்றும் கூச்சலிட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு ஒரு கரப்பான் பூச்சியைக் கொல்லக் கூடத் தைரியம் கிடையாது.

அவர்கள் சிறிது நேரம் கூப்பாடு போட்டுவிட்டு கிளம்பி விட்டார்கள்.
எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. ஆளரவம் அடங்கியப் பின்பு நான் என் வண்டியை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள போலீஸ் ஸ்டஷனுக்கு சென்றேன்.
சப் இன்ஸ்பெக்டர் தான் இருந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னேன்.
நான் சற்றும் எதிர்பாராமல் அவர், "இன்னா சார் அந்த ஆளை கல்லாலே அடிச்சு கொன்னுட்டு இப்போ நீயே கம்ப்ளைன்ட் குடுக்கிறியா, நாங்க எப்பவோ எப் ஐ ஆர் போட்டாச்சு" பிறகு அருகிலிருந்த ரைட்டரைக் கூப்பிட்டு, "காலையிலே எப் ஐ ஆர் போட்டோமில்லே, தொ இவர் தான் "அக்யுஸ்ட்", இவர்கிட்டே ஒரு கையெழுத்து வாங்கிக்கோ" என்றார்.

“சார் நான் கல்லால் எல்லாம் அடிக்கலே எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. காலையில் ட்ரக் பக்கம் எதோ சத்தம் கேட்குது என்று எழுந்து விளக்கைப் போட்டேன். வேறொன்னும் செய்யவில்லை” என்றேன்.

“இன்னது விளகாலேப் போட்டு தள்ளிட்டியா, எப்பா ரைட்டேர் அக்யுஸ்ட் ஒத்துகினார்பா, எழுதிக்கோ குத்து விளக்குலே அடிசிட்டராம்பா” என்றார். நான் இந்த எஸ் ஐயிடம் பேசுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று வீடு திரும்பினேன்.

பிறகு நான் அன்று பாக்டரிக்கு லீவ் போட்டுவிட்டேன். சிறிது நேரம் கழித்து வாசலில் ஆளரவம் கேட்கவே, வெளியே சென்றால். ஒரு நாலைந்து ஆட்களும், ஒரு பெண் தன கைக்குழந்தையுடன் அழுதுக் கொண்டு அவர்களுடன் இருந்தாள்.

அந்தக் கூட்டத்தில் நடு நாயகமாக இருந்த ஒருவன், சற்றே கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்து, "இன்னா சார் அநியாயமா அந்த ஆளை கொன்னுட்டியே, பாரு என்ன சினா வயசுப் பாரு இந்தப் பொண்ணு, இது இப்போ வயத்து பொழைப்புக்கு இன்னா செய்யும், நாம அல்லாத்தையும் செட்டில் செய்யலாம், வா என்று என்னை சற்றுத் தள்ளி அழைத்து, நீ இன்னா பண்றே சார் ஒரு மூணு லட்சம் குடுத்திரு, நா அந்தப் பொன்னே கேசே வாபுஸ் வாங்கச் சொல்றேன்" என்றான்.

"யோவ் நான் என்ன செய்தேன், எதுக்கு மூணு லட்சம், சும்மா இங்கே கலாட்டப் பண்ணாதே", என்றேன்.

......த்தா அவ்வளவு முறைப்பகீரியா, கொலைப் பண்ணிட்டு, மவனே போ போயீ களி துன்னுடா. என்று எங்கள் வீட்டின் முன்னே இரண்டு அரை செங்கலை வீசிவிட்டு சென்றான்.
எனக்கு இப்பொழுது பயம் தொற்றிக்கொண்டது. இவர்கள் இது போல் தினமும் வீட்டின் முன்பு வந்து கலாட்டா செய்யப் போகிறார்களே என்றும், மேலும் நான் இல்லாதப் பொழுது மனைவியும் குழந்தைகளும் தனியாக இருக்கும் பொழுது எதாவது செய்து விடுவார்களோ என்று.

ஆதலால் கமிஷனர் ஆபீஸில் வேலை செய்யும் என் நண்பனை கண்டு விவரத்தை சொல்லாலாம் என்று சென்றேன்.

அவன் விஷயத்தை கேட்டு என்னை அசிச்டனட் கமிஷனரை பார்க்கக் கூட்டிச் சென்றான்.
நான் அவரிடம் அன்று நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னேன். பொறுமையாக என் பேச்சைக் கேட்டார், பிறகு யாரையோ அழைத்து எங்கள் ஏரியா எஸ் ஐ யாரென்று கேட்டார், முத்துப்பாண்டி என்று பெயர் சொன்னார்கள்.

பிறகு அவர் என்னிடம் நீங்கள் கவலைப் படாதீர்கள் நான் பார்த்து கொள்கிறேன், யார் பணம் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். உங்களை எப்பொழுது வேணாலும் நான் கூப்பிடுவேன் வரவேண்டியிருக்கும் என்றார்.

நிச்சயமாக வருகிறேன் சார் என்றேன்.

வீட்டுக்கு வந்தால் வீட்டில் எனக்காக எஸ் ஐ முத்துபாண்டி காத்துக் கொண்டிருந்தார்.
“சார் நான் அல்லாத்தையும் விசாரிச்சுட்டேன், என்கிட்டே உண்மையே சொல்லு, தொ பார் நேத்துக் கூட ஒரு கொலை கேசு, நாமாண்ட வந்துச்சு, உண்மையே ஒத்துகினான், அவனே நான் காப்பாத்திட்டேன், தொ பார் இப்போ எட்டாம் நம்பர் கடையாண்ட தண்ணி அடிச்சுகின்னு கிரான்”.

“அந்தக் குப்பத்து ஆளோட வச்சுக்காதே, அவனுங்க ரொம்ப மோசமானவனுங்க. பொலிடிகல் சப்போர்ட் வேறே கீது. நம்மலாண்டே வா உனக்கு அல்லாம் முடிச்சு கொடுக்கிறேன், ஒரு அம்பதாயிரம் கொடு. அல்லாம் சுளுவா முடிஞ்சிரும் இன்னா” என்றார்.
“சார் என் கிட்டே பைசா பேராது, நான் ஒன்றும் செய்யவில்லை, மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன்.

“தோ பார் சார் நீ எங்கே போனாலும் ஒன்னாலே ஒன்னும் பண்ண முடியாது, நல்ல வழி சொல்றேன் காசுக்கு பாக்காதே, அப்புறம் உன் தலை எயுத்து, நா இன்னா சொல்ல” என்று சென்று விட்டார்.

ஒரு வாரம் கழித்து என்னை நண்பன் கமிஷனர் ஆபிசுக்கு வர சொன்னான்.
மறுபடியும் நான் ஏசியை சந்தித்தபொழுது, அவர் என்ன நடந்தது என்று கேட்டார். நான் எஸ். ஐ. வந்த விஷயத்தை அவரிடம் சொல்லவில்லை.

அவர் இந்த கேஸ் ஓபன் அண்ட் ஷட் கேஸ். அவன் அந்த மரத்தின் மேல் ஏற முயற்சித்து, கீழே விழும் பொழுது, கல்லில் மண்டை அடிபட்டு இறந்திருக்கிறான். இந்த கேஸ் நீங்கள் சென்ற போலீஸ் ஸ்டேஷனில் பதிவாகவில்லை. ரயில்வே ஏரியா என்பதால், "ஆர்பிஎபில்" பதிவாகியிருந்தது.

இனி உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது,

நன்றி சார் என்று நான் கிளம்புமுன், நீங்க யாருக்கும் பணம் எதுவும் குடுக்கலியே என்றார்.

இல்லை சார் என்றேன்.

“குட், உங்கள் தெளிவான சிந்தனையும், தைரியமும்(??) உங்களை அனாவசிய பிரச்சனையிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. நீங்க ஒரு முறை பயந்து, பணம் குடுத்தீர்கள் என்றால், இதற்கெல்லாம் முடிவில்லை” என்றார்.

வீட்டிற்கு வந்து மனைவியிடம் விஷயத்தை சொன்னேன்.
பின்பு வீட்டின் பின்புறம் சென்றேன், அங்கு அந்த இறந்தவனின் மனைவி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

மனைவியிடம் கோபமாக வந்து, “இவளை ஏன் வீட்டுக்குள் விட்டாய், மறுபடியும் ஏதாவது பிரச்சினை வரப் போகிறது” என்றேன்.

"பாவம் அவள் என்ன செய்வாள், கணவன் இறந்தவுடன் அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தொந்தரவு செய்கிறார்களாம். இவளை வைத்து காசு சம்பாதிக்கப் பார்கிறார்களாம். என்னிடம் வந்து அழுதாள், நான் தான் அவளை இங்கு வேலைக்கு வைத்து, தோட்டத்தில் உள்ள லும்பர் ரூமில் தங்கச் சொல்லியிருக்கிறேன், பிரச்சினை என்றால் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 22 September 2009

நீ இல்லாத ராத்திரியோ..


நீ இல்லாமல் உறக்கம் வருவதில்லை
நீ இருந்தால் தொல்லைகள் தொலை தூரம்
துடித்து ஓடுகின்றன.
உண்மையில் நீ இல்லாத பொழுது
உன் நினைவை அகற்ற முடிவதில்லை.

உனக்கு ஒவ்வொருமுறையும் கொடுக்கும் விலை
உறுத்தலாகவே இருக்கிறது, என் செய்வது
எங்கும் எதிலும் வியாபாரம்,
உன்னைக் கொணர்ந்து
உன் ஆடையைக் களையும் பொழுதே,
உன் சுகந்தம் தொல்லைகளை துரத்திவிடும்,
நீ மேலும் உன்னை எரித்து, என்னை
உறக்கத்தில் தள்ளும் சுகத்திற்கு,
உள்ளம் ஏங்குகிறது,
“உத்ரா” கடையில்
உன்னை “ஆமை மார்க்” சுருள் என்று
மறக்காமல் கேட்டு வாங்கவேண்டும்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 21 September 2009

இரட்டுறமொழிதல்-ஆடிக் குடத்தடையும்- பதவுரை




ஆடிக் குடத்தடையும், ஆடும்போதே இரையும்,
மூடித்திறப்பின் முகம் காட்டும்
ஓடி மண்டை பற்றி பரபர என எரியும்
பாரில் பிண்ணாக்கும் உண்டாம்
முற்றிலும் பாம்பை எள்ளெனவே ஒது.



ஆடிக் குடத்தடையும்
எள்ளை செக்கில் இட்டு ஆட்டியபின் வரும் எண்ணெய் குடத்தில் வைக்கப்படும்
பாம்பு படம் எடுத்து ஆடிய பின் கூடையில் வைக்கப்படும்.


ஆடும்போதே இரையும்

எள்ளு செக்கில் ஆடும் பொழுது இரைச்சலிடும்
பாம்பு படம் எடுத்து ஆடும் பொழுது, சப்தமிடும்.


மூடித் திறப்பின் முகம் காட்டும்

எண்ணைக் குடத்தின் மூடித்திறந்து பார்த்தால் நம் முகம் தெரியும்
கூடையின் மூடித் திறந்தால் பாம்பு தன் முகம் காட்டும்.


ஓடி மண்டைப் பற்றி பரபரவென எரியும்

நல்லெண்னையைத் தலையில் தேய்த்துக்கொண்டால், வெப்பம் உண்டாகி பின்பு தணியும்.
பாம்பு கடித்தால் விஷம் விரைவில் தலைக்கேறும்.


பாரில் பிண்ணாக்கும் உண்டாம்.

செக்கில் எண்ணெய் எடுத்தபின் மிஞ்சுவது பிண்ணாக்கு.
பாம்பிற்கு இரட்டை நாக்கு (பின் நாக்கு)


கடைசி வரிக்கு விளக்கம் தேவையில்லை.

ஆதலால் முற்றிலும் பாம்பை எள்ளெனவே ஓது.

ஷங்கருக்கு நன்றி, போனப் பதிவிலே எல்லாவற்றையும் தெளிவு படுத்தியதற்கு.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 18 September 2009

இரட்டுற மொழிதல்


ஆடிக் குடத்தடையும், ஆடும்போதே இரையும்,
மூடித்திறப்பின் முகம் காட்டும்
ஓடி மண்டை பற்றி பர பர என எரியும்
முற்றிலும் பாம்பை எள்ளெனவே ஒது.



நாம் எல்லோரும் தமிழ் சினிமாக்களில் தான் இரட்டை அர்த்தம் உள்ள வசனங்களையும், பாடல்களையும் கேட்டிருக்கிறோம்.

காளமேகப் புலவர் சொல்லும் இந்த கவியில் உள்ள இரட்டை அர்த்தங்கள் புரிகிறதா.

சிந்தியுங்கள், பதவுரை, பொழிப்புரை, அடுத்த பதிவில் இடுகிறேன்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 14 September 2009

எங்களுடன் தங்கிய ஏஞ்சல்


யுத்தமில்லா உலகம்.
பொறாமையில்லா மனசு.
வியாதி இல்லா உடம்பு
மரணம் இல்லா ஜனனம்
ஊனமில்லா பிறப்பு


அன்புள்ள அறிவு
அறிவுள்ள அன்பு
கருணையுள்ள கடவுள்
கடவுளில்லா கருணை
அன்பே சிவம், அச்சிவம் எங்கும் யாவர்க்கும்.


ஹேமா ஏன் பத்து வரங்கள் மட்டுமே?. கேட்பதில் ஏன் கஞ்சத்தனம். நூறு வரம் கேட்போமே.

ஏஞ்சல் என் வாசலில்

வரம் கேட்ட பின்னர் ஏஞ்சலை திரும்ப அனுப்ப மனமில்லை, ஆதலால் எங்களுடன் தங்க வைத்து விட்டோம்.

என் மனைவி ஏஞ்சலுக்குப் பிடித்த உணவை தயார் செய்தாள்.

முள்ளங்கி சாம்பார், நெய் ரசம், கத்திரிக்காய் பொறியல் என்று ஒரே உபசாரம் தான்.

இரண்டு நாட்கள் தங்கிய ஏஞ்சலை இப்பொழுது மேலும் ஐந்து பேருக்கு அனுப்புகிறேன்.

பதிவுலக நண்பர்கள் எஞ்சலிடம் உங்களது வரங்களைக் கேளுங்கள்.

கார்த்திகைப் பாண்டியன்
சாயர பாலா
லோஷன்
முருகு
பித்தன்

ஹேமா தாமதத்திற்கு மன்னிக்கவும். (வேலை பளு)

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 12 September 2009

ஏஞ்சல் தேவதை என்வாசல் வந்தால்.


யுத்தமில்லா உலகம்.
பொறாமையில்லா மனசு.
வியாதி இல்லா உடம்பு
மரணம் இல்லா ஜனனம்
ஊனமில்லா பிறப்பு


அன்புள்ள அறிவு
அறிவுள்ள அன்பு
கருணையுள்ள கடவுள்
கடவுளில்லா கருணை
அன்பே சிவம், அச்சிவம் எங்கும் யாவர்க்கும்.


ஹேமா ஏன் பத்து வரங்கள் மட்டுமே?. கேட்பதில் ஏன் கஞ்சத்தனம். நூறு வரம் கேட்போமே.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 9 September 2009

எங்கிருந்தோ வந்தார்.......



குருசாமிக்கு ஒரு அறுபத்தைந்து வயது இருக்கும். ஒரு "லொடகனி" சைக்கிளை மிதித்துக் கொண்டு சரியாக வீட்டில் எட்டு மணிக்கு ஆஜராகி விடுவார். எந்த வேலைக் கொடுத்தாலும் செய்வார். அவருக்கு ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபாய் கொடுத்து விடவேண்டும். (வேறு ஒரு வீட்டில் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தால் அந்த வீட்டிற்கு சென்று விடும் அபாயமும் உண்டு). தினக் கூலி தான். ஆனால் வேலைக்கு வராமல் இருக்க மாட்டார். அவரது மனைவி அவரிடம் போட்ட நிபந்தனை அப்படியாம். வீட்டில் சும்மா இருக்கக் கூடாது, வெளியே போய் தினமும் சம்பளம் கொண்டு வரவேண்டும். அவர் மின்சாரத்துறையில் ஒயர் மேனாக இருந்து ஓய்வு பெற்றவர்.

குருசாமிக்கு, தங்கமணி வேலை கொடுக்கும் நேரம் தொடரும் சம்பாஷனைகள் எனக்கும் குழந்தைகளுக்கும் நல்ல பொழுதுபோக்கு.

தங்கமணி: குருசாமி மொட்டை மாடியில் நிறைய தண்ணி ஊத்தி கழுவிட்டு, அப்படியே கடைக்கு போய் இந்த மாவு அரைச்சுகிட்டு வாங்க.

பிறகு அதை அவர் செய்யும் பொழுது ஏதோ முனுமுனுத்து கொண்டு செய்வார்.
வெகு நாட்கள் வரை அவர் என்ன முனுமுனுக்கிறார் என்று தெரியவில்லை.

தங்கமணி: குருசாமி என்ன முனுமுனுக்கிறிங்க, சம்பளம் பத்தலை என்றால் சொல்லுங்க.
அவர்பாட்டுக்கு தன் வேலையை தொடர்ந்து முனுமுனுத்துக் கொண்டே செய்துக் கொண்டிருப்பார். வெகு நாட்களுக்கு பிறகுதான் தெரிந்தது, அவர் நாம் சொல்லும் வேலையை மறக்காமல் இருப்பதற்காக அதை திரும்ப சொல்கிறார் என்று.

ஒரு முறை நான் ஊருக்கு போய் திரும்பி வந்து, காலையில் என்னுடைய பெட்டியையும், பையையும் குழந்தைகள் அறையில் வைத்திருந்தேன். என் மனைவி அந்தப் பைகளை பரணையில் வைக்கச் சொல்லி குருசாமியிடம் சொன்னாள்.

அவர் குழந்தைகளின் பள்ளிக்கூடப் பைகளையும் சேர்த்து மேல வைத்து விட்டார். பிறகு என்ன, குழந்தைகளுக்கு ஸ்கூல் பஸ் வந்தவுடன் பைகளைதேடி காணாததால் ஒரே களேபரம்தான். அரைமணி கழித்துதான் எனக்கு தோன்றியது அவர் பரனையின் மேலே வைத்திருக்கலாம் என்று, பிறகு குழந்தைகளை நான் வண்டியில் பள்ளிக் கூடத்திற்குக் கொண்டு விடும்படி ஆகிவிட்டது.

தங்கமணி, என்ன குருசாமி நேற்று வேலைக்கு வரவில்லை, நான்தான் வரசொல்லியிருந்தேனே என்றால் பதில் சொல்ல மாட்டார். நாளைக்கு கட்டாயம் வரீங்களா இல்லே உங்க மனைவிக்கு போன் செய்யட்டுமா, என்றாலும் பதில் சொல்லமாட்டார்.

சரியான அழுத்தகாரர். சிலநாள் சம்பள முன்னதாகக் கேட்பார், கொடுத்தால் ஒரு நான்கைந்து நாட்களுக்கு நம்ம வீட்டுப் பக்கம் வரமாட்டார். பக்கத்து வீட்டில்தான் வேலை செய்தாலும், நாம் கூப்பிட்டால் அவர் காதில் விழாது.

அவருக்கு வேலை எங்கும் இல்லை என்றால் நம்ம வீட்டில் சொல்லாமலே வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்.

ஆனாலும் எடுபிடி வேலைக்கு எங்களுக்கு இவரை விட்டால் ஆளில்லை.

இவ்வளவு இருந்தும் குருசாமி எங்கள் வீட்டில் ஒரு அங்கத்தினர், வீட்டில் நடக்கும் நல்ல காரியங்களுக்கு வந்து தன்னால் ஆன உதவிகளை செய்யத் தயங்கமாட்டார்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 8 September 2009

வேட்டைக் கரனை வேட்டை ஆடியது யார்- ஊர்குருவி சில நேரம் பருந்து என்று நினைப்பதுண்டு


இது தான் சம்பந்தப் பட்ட நடிகரின் நிலை
ஐம்பது படத்தில் எவ்வளவு படம் லாபத்தை சம்பாதித்தது நினைத்துப் பார்த்தாரா?
ரஜினியே நுழையத் தயங்கும் ஒரு இடம்
இவர் தன்னை ரஜினிபோலும், எம்.ஜி. ஆர். போலும் நினைத்துக்கொண்டு செயல் படுகிறார்.
இவர் தன்னைப் பற்றி விளம்பரம் செய்துகொள்வது அவருக்கே தெரியும, கடைந்தெடுத்த பொய் என்று.
குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடியவேரெல்லாம் மக்கள் தொண்டு என்று வைத்தால் புலியூர் சரோஜாவும், கலாவும், சுந்தரமும், ராஜுவும், பிரபு தேவாவும் தான் இன்று முதல் அமைச்சர் ஆகியிருப்பார்கள்.
நம் தலைவிதி என்ன செய்வது.
அரசியலுக்கு வர தகுதி தேவையில்லை.
ஆனால் இவரை வருவதை நான் முழுமையாக வரவேற்கிறேன்.
அப்பொழுது தான் தமிழ் திரை உலகம் நல்லப் படங்களை பார்க்க நேரிடும்.

வாழ்க ஜன நாயகம், வாழ்க அரசியல், வாழ்க வளமுடன்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 7 September 2009

பாரதி இன்று இருந்தால் (முண்டாசு கவிஞனே மன்னிப்பீராக)


காதலிலே நற் கலவியுண்டாம்.
கலவி முடிந்தபின் பிரிவும் உண்டாம், "கர்ப்பமுமுண்டாம்"
ஆட்கொல்லி “எய்ட்சும்” உண்டாம் ஆதலினால்,
"காண்டமுடன்" கலவி செய்வீர் இவ்வுலகத்தீரே.
எந்தப் பரங்கித் தலையனடா என் கவியை
விளம்பரத்திற்கு உபயோகித்தது,
போங்கடா.........
தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்,
மறுபடியும் மறுபடியும் சூதே கவ்வும்.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 4 September 2009

பால்காரி- பாரிஜாதம்


காலையில் எழுந்ததும்
உன் முகம்
காணாமல் விடியலுக்கு
அர்த்தம் தெரிவதில்லை

எந்தன் பால்
கொண்ட அன்பால்
நீ கொண்டு வரும் பால்
காய்ச்சப் படும் பொழுது
உன் அன்பு அப்பால்
போவதாக உணர்கிறேன்.

உன் நினைவில்லா
நாட்கள் ஒருக்காலும்
பிறந்ததில்லை
என்னுடன் நீ
இருந்தால் நான்
இழந்த கால்கள்
என்னோடு இணைகின்றன.

என் கால்கள்
என்னுடன் இணைய
நம் ஜாதி பேதம்
நாலு கால்கள்
கொண்டு நாட்டை
விட்டே ஓட வேண்டும்.

என் ஓட்டம்
எந்நாளும் இயலாது
நாலு கால்களின்
ஓட்டம் நடக்கும்
நாள் எப்பொழுது.

Follow kummachi on Twitter

Post Comment

கொல்லிமலை மல்லிகா


கொல்லிமலை குமரியவள்
அல்லிபோல் சிரிக்கிறாள்
வெள்ளி முளைக்கையில்
அள்ளி அணைத்தால்
துள்ளி விளையாடுவாள்
கள்ளி வாடி என்
மல்லி என்றழைத்தால்
எள்ளி நகையாடுகிறாள்
புள்ளிமான் கண்களால்
தள்ளி நிற்கும் கணவனைக் காட்டி.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 3 September 2009

அனுஜாவின் காதல்-.உறவுகள் வேண்டாமடி பாப்பா


அண்ணா எனக்கு அவனைப் பிடித்திருக்கிறது, எவ்வளவு நல்லவன். அண்ணா நீ இல்லாத பொழுது ஒரு தடவை கூட அவன் இந்த அறையினுள் வந்ததில்லை. நீ இல்லை என்று சொன்னால் அவன் திரும்ப போய் விடுவான்.

யாரைச் சொல்கிறாய் அணு.

அதான் அண்ணா உன்னோடு, அடிக்கடி நம் வீட்டுக்கு வருகிறானே.

என்னோடு நிறையபேர் வருகிறார்கள் யாரைச் சொல்கிறாய் நீ.

சனிக்கிழமைகளில் அவன் கட்டாயம் வருவான் அண்ணா, அவன் தலை முடிகூட நன்றாக திருத்தப்பட்டு, கொஞ்சம் ஒல்லியாக இருப்பானே.

ஒ விநோதைச் சொல்கிறாயா. ஆமாம் அவன் நல்லவன். எனக்கும் நல்ல நண்பன்.

அண்ணா நீ அவன் வீட்டிற்கு சென்றிருக்கிறாயா?

ஒ அடிக்கடி சென்றிருக்கிறேன்.

அண்ணா அவனைப் பற்றி சொல்லேன்.

ஏன் எதற்கு கேட்கிறாய்?

ஒன்றுமில்லை தெரிஞ்சிக்கத்தான்.

அணு இதைச் சொல்லும் பொழுது உன் கண்கள் விசாலமாகிறது, ஏதோ நடக்குது.
போ அண்ணா....................

சரி அணு நாளை அவன் வருவான் அப்பொழுது அறிமுகப் படுத்துகிறேன். நீயே அவனிடம் பேசிக் கொள். ஆல் தி பெஸ்ட். ஒரு தங்கை கடலைப் போடுகிறாள்.
போ அண்ணா......

வினோத் நீ அனுஜாவைப் பார்த்திருக்கிறாயோ. அணு இங்கே வாயேன், இது தான் என் நண்பன் வினோத்.

ஹாய் வினோத்.

ஹாய் அனுஜா.

சரி வினோத், அணு பேசிக்கொண்டிருங்கள், நான் இதோ வருகிறேன்.

அனுஜா வினோத் இப்பொழுது காதலிக்கிறார்கள். இரண்டு வருடம் கழிகிறது. வீட்டில் கல்யாணப் பேச்சு ஆரம்பிக்கிறது.

அனுஜாவின் அம்மா அணுஜாவிடம், அவன் வீட்டில் யார் யார் உள்ளார்கள்.?

ஏன் கேட்கிறாய் அம்மா? யாரிருந்தால் என்ன? எனக்கு அவனைப் பிடித்திருக்கிறது.

கேட்பதற்கு பதில் சொல்.

அவனுக்கு மூன்று தங்கைகள், அம்மா இருக்கிறார்கள், அப்பா இறந்து விட்டார். இவன்தான் அந்த வீட்டில் சம்பாதிப்பவன். அண்ணா மாதிரியே இந்த வயதிலேயே நல்ல வேலையில் இருக்கிறான். மேலும் அவன் மிகவும் நல்லவன் அம்மா. அன்பு என்கிறாயே அந்த வீட்டில் வந்துப் பார் தெரியும். இந்த வீட்டில் அண்ணாவை தவிர யார் என்னைப் புரிந்திருக்கிறார்கள். அப்பாவும், நீயும் என்னோடு எப்பொழுதாவது பிரீயாகப் பேசியிருக்கிறீர்களா? அப்பாவிற்கு எப்பொழுதும் பிசினஸ் தான்.

சரி அவனை நீ கல்யாணம் செய்து கொள்ள நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். அப்பா கட்டாயம் சம்மதிக்க மாட்டார்.

ஏன் அம்மா?

அதெல்லாம் உனக்குத் தெரியாது. அக்கா தங்கை இல்லாதப் பையனாகப் பார்த்து காதலி, கட்டி வைக்கிறோம்.

அம்மா உனக்கும் அப்பாவிற்கும் இதெல்லாம் புரியாது. நீங்கள் பணத்திற்கும் வசதியான வாழ்க்கைக்கும் வேண்டி, உறவை எல்லாம் துறந்து விடுவீர்கள்.

நான் வாழ்ந்தால் அவனோடுதான்.

Follow kummachi on Twitter

Post Comment