Monday 21 September 2009

இரட்டுறமொழிதல்-ஆடிக் குடத்தடையும்- பதவுரை




ஆடிக் குடத்தடையும், ஆடும்போதே இரையும்,
மூடித்திறப்பின் முகம் காட்டும்
ஓடி மண்டை பற்றி பரபர என எரியும்
பாரில் பிண்ணாக்கும் உண்டாம்
முற்றிலும் பாம்பை எள்ளெனவே ஒது.



ஆடிக் குடத்தடையும்
எள்ளை செக்கில் இட்டு ஆட்டியபின் வரும் எண்ணெய் குடத்தில் வைக்கப்படும்
பாம்பு படம் எடுத்து ஆடிய பின் கூடையில் வைக்கப்படும்.


ஆடும்போதே இரையும்

எள்ளு செக்கில் ஆடும் பொழுது இரைச்சலிடும்
பாம்பு படம் எடுத்து ஆடும் பொழுது, சப்தமிடும்.


மூடித் திறப்பின் முகம் காட்டும்

எண்ணைக் குடத்தின் மூடித்திறந்து பார்த்தால் நம் முகம் தெரியும்
கூடையின் மூடித் திறந்தால் பாம்பு தன் முகம் காட்டும்.


ஓடி மண்டைப் பற்றி பரபரவென எரியும்

நல்லெண்னையைத் தலையில் தேய்த்துக்கொண்டால், வெப்பம் உண்டாகி பின்பு தணியும்.
பாம்பு கடித்தால் விஷம் விரைவில் தலைக்கேறும்.


பாரில் பிண்ணாக்கும் உண்டாம்.

செக்கில் எண்ணெய் எடுத்தபின் மிஞ்சுவது பிண்ணாக்கு.
பாம்பிற்கு இரட்டை நாக்கு (பின் நாக்கு)


கடைசி வரிக்கு விளக்கம் தேவையில்லை.

ஆதலால் முற்றிலும் பாம்பை எள்ளெனவே ஓது.

ஷங்கருக்கு நன்றி, போனப் பதிவிலே எல்லாவற்றையும் தெளிவு படுத்தியதற்கு.

Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.