Monday 4 January 2016

கலக்கல் காக்டெயில் 175


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

யானையும், சம்பத்தும்,  இன்னோவாவும் 

இன்னோவா சம்பத்து நல்ல பேச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது கேடுகாலம் வைகோவை விட்டு பிரிந்து அடிமைகட்சியில் ஐக்கியமானதுதான். பொதுவாகவே அடிமைகட்சியில் உள்ள அமைச்சர்கள் எந்த பேட்டியும் கொடுக்கமாட்டார்கள். மைக்கைக் கண்டாலே கல்லடிபட்ட நாய் போல வாலை காலிடுக்கில் சொருகிக்கொண்டு ஓடுவார்கள், அதற்கு உதாரணம் சென்னை "செயற்கை" வெள்ளத்தில் பேட்டி எடுக்க வந்த நிருபரின் ஒலிவாங்கியை தட்டி விட்டு ஓடிய மேயரும், ஓளர்மதியும்.

இன்னோவா சம்பத்து தந்தி டிவி பாண்டேவிடமும், புதியதலைமுறை குணசேகரனிமும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நின்றார். அவரை சொல்லிக்குற்றமில்லை. அவர் எப்படி பேசியிருந்தாலும் அவருக்கு ஆப்பு நிச்சயம்தான், அதுதான் அடிமைகட்சியின் தனித்தன்மை. நாடாளுமன்ற தேர்தலின் பீஜெபியுடன் "ஆத்தா" இணக்கமாக செயல்படுவார் என்று சொன்ன மலைச்சாமியின்  கதி என்ன என்று நமக்குத் தெரியும். மொத்தத்தில் பாண்டேவும், குணாவும், சம்பத்தை வச்சி நல்லாவே செஞ்சுட்டாங்க.

கூட்டணி அரசியல் 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கே மாதங்கள் உள்ளன. இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடு பிடிக்கவில்லை. இன்றைய தேதியில் கேப்டனுக்கு நல்ல டிமான்ட். பா.ம.க விழுப்புரம் மாநாடு எல்லாம் கூட்டி அன்புமணி முதல்வர் என்றால் எல்லா கட்சியும் எங்களோடு வாங்க என்று கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

கேப்டன் இப்பொழுது முடிவெடுக்கமாட்டார் என்பது நமக்குத் தெரியும். அதன் காரணம் அரசியலில் அரிச்சுவடி பிடித்தவனுக்கும் தெரியும். ஆத்தா கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்று சொல்லிவிட்டு வெள்ளத்தின் போது தூங்கியதால் இப்பொழுது நிலைமை மாறியிருக்கிறது.

இந்த தடவை மக்கள் ஓட்டிற்கு அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

பிடித்த கவிதை 

கை
ற்றை அள்ளிவந்து 
வீடு கட்டாதே’ என்றானே.
நான்தான் கேட்கவில்லை
இப்போது வீடுபுகும் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.
’வயலைத் தூர்த்து
மனை போடாதே’ என்றானே.
நான்தான் செவிமடுக்கவில்லை
இதோ என் சோற்றுப்பானை
தண்ணீரில் மிதக்கிறது.
 ’பணத்தை நம்பாதே
பாதாளத்தில் தள்ளும்’ என்றானே
உண்மைதான்
கணக்கில் பல லகரம் இருந்தும்
கையேந்தி நின்றேன்.
’மனிதர்களை நம்பு
மதமும் சாதியும்
முகமூடிகள்’ என்றாயே
நம்புவேன் இனி,
அதோ வருகிறது
வெள்ளத்தில் தத்தளிப்பவனைக்
கரைசேர்க்கும் கரமொன்று
அதில் கடவுள் குறித்த
எந்த முத்திரையும் இல்லை.

நன்றி: சூ. சிவராமன் 

ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment