Thursday 30 August 2018

சீமானிய அலப்பறைகள்.

ஒரு மைக்கு கைதட்ட கொஞ்சம் அல்லக்கைகள் அவ்ளவுதான் வேணும் எதை வேண்டுமானாலும் பேசலாம்.

இனி சீமான் சொன்னதும் சொல்லாததும்.

இருபத்தி எட்டு கிலோ ஆமைக்கறி ஒரே ஆளா தின்னு, தலைவரோட  கடலிலே  அப்படியே போய்கிட்டு இருக்கும் பொழுது எதிர்க்க ஒருத்தன் ஆமை ஓட்ட திருப்பிப்போட்டு ஓட்டிகிட்டே போறான். ஹெஹ்ஹ்ஹஏஏஏ.

முப்பாட்டன் அறுபதாயிரம் யானையை படகுல  ஏத்திக்கிட்டு போருக்குப் போவான், கூடவே அம்பதாயிரம் டன்னு புல்லுக்காட்டு, ஐயாயிரம் குண்டான் அரிசி சோறு..........நாற்பதாயிரம் டன்னு அரிசி மூட்டை.

என் தலைவன் ஒரு முறை என்னிடம் இந்த ஏ.கே. 47 வைச்சு எப்படி சுடணும்னு கேட்டாப்ல, நான் உடனே அப்படியே அத்த வாங்கி ஒரு ஒருலட்சம் சிங்களன் தலைகளை சுட்டு தள்ளினேன், அப்ப  தலைவர், தம்பி நீதாண்டா இந்த தமிழ் ஈழத்தின் எதிர்காலம்  என்றார்.

அவர் சட்டை பையில் உள்ள பேனாவை எடுத்து எழுதிவிட்டு திரும்ப அவரு பையிலேயே வைக்கும் அளவிற்கு எனக்கும் கலைஞருக்கும் நெருக்கம் இருந்தது.

ஒரு முறை சிவாஜி செட்டுல வசனம் பேச என்னய கத்துக்கொடுக்க சொன்னாரு, நான் அவருக்கு சொல்லிக்கொடுத்துட்டு ஒரு ஓரமா போயி நின்னுக்கிட்டேன், அவரு அந்த வசனத்த பேசிட்டு எண்ணிய தேடுறாரு. ஏம்பா கரெக்ட்டா பேசினேனான்னு கேக்குறாரு.

தலைவரு பிரபாகரன் கழுத்துல சயனைடு குப்பியை எடுத்து ரெண்டு சப்பு சப்பிவிட்டு வைக்கும் அளவிற்கு எனக்கும் தலைவனுக்கும் பழக்கம் இருந்தது.

காந்தி உப்பு சத்தியாகிரகம்  தொடங்க தடியை பிடிச்சிக்கிட்டு நிக்குறாரு. எல்லோரும் தயாராயிட்டாங்க. அப்போ எண்ணிய தேடுறாரு. சொல்லுப்பா எங்கே போகலாமுன்னு........கேக்குறாரு,  அப்போ நான்தான் கண்டி பக்கம் போலாமுன்னேன், அப்போ அவரு வேணாம்பா அது ரொம்ப தூரம் கால் வலிக்கும் நம்ம தண்டி பக்கமா போவோம்னு சொல்லிட்டு என் பின்னாடியே வந்துட்டாரு.

இப்படித்தான் ஈழப்போர் நடந்துக்கிட்டிருக்கு,  தளபதி தமிழ்செல்வனுக்கு காலு துண்டா போயிடுச்சி, அவரு  வலில அப்படியா ஓரமா உக்காந்துட்டாரு. அந்தப்பக்கம் இன்னொருத்தனுக்கு காலு துண்டா போய் அப்படியே கத்துறான் கதறுறான். இவரு டேய் ஏண்டா கத்தறேன்னு கேக்குறாரு. அண்ணே காலு துண்டா போயிடிச்சு வலிக்குதண்ணேன்னு கதறுறான். டேய் சும்மா இருடா  காலுத்தானே துண்டா போச்சு அங்க பாருடா பக்கத்துல ஒருத்தனுக்கு தலையே துண்டா போச்சு கத்துறானா பாரு சும்மா இருங்குறாரு.

வான் புலிகள் கிளிநொச்சிக்கு மேலே பறந்துகிட்டு இருக்காங்க. அண்ணன் பிரபாகரந்தான் ஹெலிகாப்டரில் உக்காந்திருக்காப்ல.  வெயிட்டுக்கு வண்டி சாயவும் ட்ரைவரு "அண்ணே வண்டி பின்னுக்கு இழுக்குதண்ணே" அப்ப  தலைவரு   சொல்றாரு முன்னுக்கு இழுத்து விடுன்னு.........ஹெஹ்ஹ்ஹயே ...........என்ன ஒரு நகைச்சுவை பாத்துக்கிடுங்க...........

என்னோட பாஞ்சாலங்குறிச்சி படம் பார்த்துப்புட்டு கலைஞர் என் வீட்டுக்கு வந்து அடுத்த படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு கேட்டாரு, நான்தான் அவரை இன்னும் நீங்க வசனகர்த்தாவா நிரூபிக்கல இன்னுமொரு அஞ்சாறு படத்துக்கு எழுதிட்டு வாங்கண்ணு சொன்னேன், அப்ப அவரு எழுதி கொணாந்துதான் 'பராசக்தி".

கடைசியாக "திராவிட சுடுகாடு" ......வேண்டாம் அதை எழுதுவது அவ்வளவு நல்லதல்ல. 




Follow kummachi on Twitter

Post Comment

Saturday 25 August 2018

கலக்கல் காக்டெயில் -189

பிச்சைக்கு பாடும் பாட்டு 

நினைவேந்தலுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இப்பொழுது அந்தக் கட்சியின் தலைவர் வரவு சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை கிளப்பி விட்டுள்ளது. வழக்கம்போல இணையத்தில் உ.பீசுகளும் எதிரணிகளும் முட்டி மோதிக்கொள்கிறார்கள். அடுத்த தேர்தல் கூட்டுக்கு இது அச்சாரமா? என்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இப்பொழுது காங்கிரஸ் இருக்கும் நிலைமையில் எந்த கூட்டணியும் சாத்தியமே, கூட்டணி விவரம் போகப் போகத்தான் தெரியும். இதற்காக பெரிய அடிதடி தேவையில்லைதான். அரசியலில் எதுவும் நடக்கும். இதையெல்லாம் பார்க்கும் பொழுது..........ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் ராதா "தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்" என்று பாடிக்கொண்டு  ஒரு வீட்டில் பிச்சைக்கு நிற்பார். அப்போது அந்த வீட்டுக்காரர் ஏன் அந்த கோவிந்தன் உன் வினையை தீர்க்கவில்லை என்று கேட்பார்.

ராதா நக்கலாக ஒரு பார்வை பார்த்து........அடேங்கப்பா டேய் அது பிச்சைக்கு பாடுற பாட்டுடாப்பா.........என்று சொல்லி செல்வார்.

அதேபோலத்தான் இந்த நிகழ்வுகளும் ..............ஓட்டு பிச்சைக்காக...........

முக்கொம்புக்கு டெங்குவாம்...........

முக்கொம்பு தடுப்பணையில் ஒன்பது மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாக போய்க்கொண்டிருக்கிறது. அதை பார்வையிட்ட நமது முதல்வர் நிருபர்களிடம் நமக்கு எல்லாம் காய்ச்சல் வருவதில்லையா? அது போல அணைக்கும் வந்து உடைந்து விட்டது என்று இணைய போராளிகள்  திரித்துக்கூறும் வகையில் ஒரு வாக்கியத்தை சொல்லப்போக இப்பொழுது எல்லோரும் அவரை வைத்து செய்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அமைச்சர்களை நாமெல்லாம் லூசு என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் உளறலைப்பற்றி அவர்களே கவலைப் படுவதில்லை. அவர்கள் கருமமே கண்ணாயிருக்கிறார்கள்......எப்படியோ கல்லா கட்டினால் சரி என்பதுதான் அவர்களது குறிக்கோள்.

டிஸ்கி: பொதுப்பணித்துறை கான்டிராக்ட் எல்லாம் அவரது பினாமிகள் பேரிலதானாமே.

கனவுகண்டேன் நான் கனவுகண்டேன் 

கேரளா வெள்ளத்தில் மூழ்கிய பொழுது உலகமே அவர்களுக்கு உதவிக்கொண்டிருக்க "பினாய்ராஜ்" அமீரகம் 700 கோடி கொடுக்க முன்வந்துள்ளது என்று கூறி ப்ளக்ஸ் எல்லாம் அடித்து ஓட்டினார்கள். போதாக்குறைக்கு
பா. ஜ .க மோடி
எங்கே எழுநூறு கோடி
கேரளா பக்கம் வாடி
என்று கவி பாட
இப்பொழுது அமீரகம் எழுநூறா? நாங்க எங்கே சொன்னோம்.........என்று விழிக்க......பினாய் முழி பிதுங்கிக்கொண்டு கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் எழுநூறு கோடி வர கனவு கண்டேன் என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

ரசித்த கவிதை 

ஒரு குழந்தையின் டைரி

வீட்டில் பதார்த்தங்கள் செய்தால்
நண்பர்களுக்கென்றும்
பள்ளியில் மதிய உணவு முட்டையை
தம்பிக்கென்றும்
எடுத்து வைத்துக்கொள்ளும் குழந்தை,
வழியில் வாளிப்பான பிரம்பு கிடைத்தால் மட்டும்
"இது ஆசிரியருக்கென" எடுத்து பத்திரப்படுத்துகிறது.

நன்றி: சாமி கிரிஷ்

சினிமா

சமீபத்திய சென்சேஷன் இன்கெம்......இன்கெம்...இன்கெம்..... காவாலேதான்..

கீதகோவிந்தம் ராஷ்மிகா....அடுத்த  கவர்ச்சிப்புயல் வரும்வரை தெலுகு ரசிகர்களுக்கு இன்கெம்....இன்கெம்....தான்.....


Follow kummachi on Twitter

Post Comment

Friday 24 August 2018

அண்ணே முதலீடு, நிவாரணம் என்ன வித்யாசம் அண்ணே?

அண்ணே இந்த முதலீடுன்னா இன்னா நிவாரணமுன்னா என்ன அண்ணே?

ஏன்டா கரிச்சட்டி தலையா? ஏன்டா எங்கிட்ட வந்து அந்தக் கேள்வியை கேக்குறே?

ஐய்ய சும்மா சொல்லுங்க அண்ணே, இந்த மத்திய அரசு புல்லட் ட்ரைனுக்கு காசு வாங்குது, ஆனா கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு காசு வாங்க மாட்டேங்குது அதானே கேட்டேன்

டேய் ஆம்லெட் வாயா, நீ கார்ல போ சொல்ல இந்த சிஃக்னல்ல காரு தொடைக்கிற துணி, ப்ரஷு, பொம்மையெல்லாம் காட்டி விப்பாங்க, அதே காசு கொடுத்து வாங்கினா அது அவன் பொழைப்புக்கு முதலீடு, அதையே பொருளை வாங்காம இந்த பத்து ரூபா வாசிச்சுக்கோன்னு கொடுத்தா அது பிச்சடா கோமுட்டி தலையா.

சரிங்கண்ணே இந்த துபாய் காரன் எழுநூறு கோடி கொடுக்குறாங்களே அதே ஏன் வாங்க மாட்டேங்குறாங்க.

ஏண்டா டேய் என்ன வம்புல மாட்டுறியா? அது சரிடா இது மாதிரி மேட்டரெல்லாம் எங்கேடா பிடிக்கிற?

அது வந்தண்ணே இந்த பேஸ்புக், ட்விட்டர் இதுலே எல்லாம் போடறாங்கண்ணே.

ஏண்டா டபுள் பேரிங் மண்டையா? நீயே தூக்கு சட்டியை  தூக்கிட்டு எந்த கோவிலுல  எத்தனை மணிக்கு உண்டக்கட்டி போடறாங்கன்னு இம்ப்ரமேசன் சப்பளை செய்யுற பேமானி, நீ இதெல்லாம் படிக்குற?  அது சரிடா அதெல்லாம் படிச்சு நீ இன்னாடா பண்ணப்போற?

இல்லிங்கண்ணே சும்மா ஒரு பொது அறிவுக்குத்தான் அண்ணே.

ஆமா அப்படியே இவருக்கு எல்லா அறிவும் ரொம்பி வழியுது பொது அறிவை தேடிவந்துட்டாரு? ஏன்டா ஏன் உயிரை வாங்குற?

இல்லண்ணே சொல்லுங்கண்ணே?

ஏன்டா பேரிக்கா மண்டையா.......அவங்க கொடுக்கிறேன்னு சொன்னதா எங்களுக்கு ஒன்னும் தகவல் இல்லேன்னு லூலூ ஓனரும், அம்பாசிடரும் சொல்லிட்டாங்களே அது உன் நொள்ள கண்ணுக்கு தெரியலையாக்கும்.

இதுல எது உண்மைங்கண்ணே?

டேய் ஹாஃப் பாயில் தலையா உனக்கு எதுக்குடா அந்த வம்பு? டேய் இந்த ஃபேஸ் புக்கு வாயனுங்க, ட்விட்டர் வாயனுக இவனுங்களுக்கு உன் மண்டையில இருக்கிற முடியளவுக்குக் கூட  உள்ளே ஒன்னும் கெடையாது. அடுத்த படிச்சிட்டு எங்கிட்ட வந்து லொள்ளு பண்ற.

ஏன்டா கடைக்கு வந்தமா நாலு சைக்கிள் வீலுக்கு பெண்டு எடுத்தமா? பெட்ரோமாக்ஸ் வாடகைக்கு விட்டமான்னு இருக்கனும். சும்மா வந்து ஃபேஸ்   புக்கு, ட்விட்டருன்னு லந்து பண்ணுற. அது சரி உன்னிய வச்சு நான் எங்க பெட்ரோமேக்ஸ் லைட்ட வாடகைக்கு உடுறது, போடா போய் அந்த பெயிண்டு மணடயனோட  போய் இளநி ஆட்டைய போடு.

போங்கண்ணே நான் இப்போ ரொம்ப திருந்திட்டேண்ணே.

அட இது பாருடா? யாரு சொன்னா?

நாந்தான் சொன்னேன்.

டேய்.......டேய் அந்த பேஸ்புக்கு,  ட்விட்டர் பக்கம் போயிடாதடா அப்புறம் அவனுங்க உன்னிய திட்டறுத்துக்கு எனக்கு புதுசா சஙகீசு, உ.பீஸு, ரரங்க, தொம்பீஸ், டம்ளர் பாய்ஸ், மாங்காஸ்,பஜனை பார்ட்டின்னு புதுசு புதுசா வார்த்தைங்க கொடுப்பானுங்க.

ஐயோ இன்னா சொல்றீங்கண்ணே?

டேய் அதுக்குதாண்டா உனுக்கு அட்வைஸ் பண்ண என்ன மாதிரி ஆள் இந்த ஆல் அழகு ராஜா வேணுங்கறது. டேய் வாழைப்பழ வாயா.....அதுக்குதான்டா இங்கிலீஷுல சொல்லுவாங்க.

IGNORANCE IS BLISS...ன்னு.  அது சரி அது உனக்கு எங்க புரியப்போகுது.....டேய் இதெல்லாம் தெரிஞ்சிக்காம இருக்கோணுமுடா...கோமுட்டி தலையா.





Follow kummachi on Twitter

Post Comment

Thursday 23 August 2018

கவிஞராவது எப்படி?

எல்லோருக்குமே கவிஞராக வேண்டும் என்ற ஆசை உள்மனதில் இருக்கும்? ஆனால்  ஒரு தயக்கமும் கூடவே இருக்கும். மேலும் அதை எழுதி பதிவிட்டால் யார் எப்படி எந்த திசையிலிருந்து வந்து துப்புவார்கள் என்ற பயமும் அடிவயிற்றை கவ்வும். பிரச்சினை இல்லை. அதையெல்லாம் களைந்து உங்களை ஒரு பிரபல கவிஞர் ஆக்குவதற்காகவே இந்த விசேஷ பதிவு.

சரி தயாரா?

முதலில் நாம் எந்த மாதிரி கவிதை எழுதவேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இந்த மரபு கவிதை, ஆம் அதே தான் அந்த பக்கம் தலை வைத்துக் கூட படுக்காதீர்கள். ஏன்னென்றால் அதற்கு மிகவும் தமிழ் இலக்கணம் அறிந்திருக்க வேண்டும். அதில் சீர் என்பார்கள், வெண்பா(நடிகை அல்ல) கலிப்பா, ஆசிரியப்பா, கொச்சகக்கலிப்பா (கொச்சச்சன் அல்ல), அறுசீர் விருத்தம் என்று ஆயிரம் வகை வைத்து அதற்கு இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, என்று ஏதேதோ சொல்வார்கள். அதெல்லாம் நமக்கு வேலைக்கு ஆகாது. நமக்கு குளித்தலைக்கு அப்பால் தெரியாது எதற்கு வம்பு.

அப்புறம் ஹைக்கூ, லிமெரிக் என்று  சில சற்றே எளிய வகைகள் உண்டு. முயற்சிக்கலாம். ஆனால் "L" போர்டு கவிஞர்களுக்கு சாலச்சிறந்தது புதுக்கவிதையே, என்று பட்டிமன்றத் தலைப்புப்போல வைத்துக்கொள்வோம்.

இந்த வகை மிகவும் எளிது.

திருச்செந்தூர் வேங்கட சுப்பன் கடலை மிட்டாய் திருடித்தின்றான். இதான் மேட்டர்.

இதைப் பின் வருமாறு எழுதினால் புதுக்கவிதை.

திருச்செந்தூர்
வேங்கட சுப்பன்
கடலை
மிட்டாய்
திருடித்தின்றான்.

சரி என்ன தலைப்பு எதைப்பற்றி எழுதலாம்? இந்த காதல், கத்திரிக்கா, இயற்கை வர்ணனை இதெல்லாம் போனியாகாது. அரசியல், பகுத்தறிவு, இந்த மாதிரி வைத்து எழுதினால் நல்ல மௌசு. ஆனால் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம். ஆனால் யாரைப்பற்றி எழுதுகிறீர்கள், ஜாதி,மத ஒழிப்பு என்றால் யாரை தாக்கணும் இல்லை யாரை தூக்கணும் என்று கொஞ்சம் பொது அறிவு அவசியம். நீங்கள் வெட்டுக்குத்து, இந்த கையெறிகுண்டு இதற்கெல்லாம் அஞ்சவில்லை என்றால் பாதகம் இல்லை, என்ன  வேணாலும் எழுதலாம். எதற்கு வம்பு நீங்க என்ன தாக்கி எழுதினாலும்  எருமை மாட்டு மேல மழை பெய்தாமாதிரி ரொம்ப நல்ல கூட்டம் ஒன்று இருக்கு, என்ன அடித்தாலும் தாங்கிக்கொள்ளும், அதுங்கள தாக்கியோ இல்லை உசுப்பியோ எழுதுங்க. சும்மா கொஞ்ச நேரம் குரைத்துவிட்டு ஓய்ஞ்சிடுவாங்க. இனி செய்முறைக்கு போவோம்.

கவிதையில் அங்கங்கு பகுத்தறிவு, திராவிடம், மூடநம்பிக்கை சம்பந்தப்பட்ட கருத்துக்களை மசாலா போல தூவணும். (ஆச்சி, சக்தி, என்று எந்த மசாலா என்பதை நீங்கதான் முடிவு செய்யணும்).

சரி அடுத்து வார்த்தைகள் தேர்வு மிக முக்கியம்.

காவி, பாவி, சீவி, என்று எகன,மொகனை வார்த்தைகள் ஒரு ஐம்பதை தேத்திக்க வேண்டும்.

இதற்கு தமிழ் மொழியில் நிறைய இருக்கிறது.

ஆத்தா, பார்த்தா, சேர்த்தா, வாத்தா
பாடு, ஓடு, தேடு, போடு
தடாய் , கடாய், விடாய்
கயிறு, வயிறு, மயிரு
ஜாதி, பீதி, பேதி
வாடி, போடி, பீடி,
தடி, அடி, கடி வெடி, மடி
செடி,பிடி
என்ன, வெண்ண, நொண்ண
 இது போல இன்னும் கொஞ்சம் வார்த்தைகள் தேத்திக்கணும்.
இந்த மாதிரி படங்களுடன் போட்டால் கவிதைக்கு அழகு சேர்க்கும்
இப்ப நீங்க கவிஞராகலாம்.

இத வெச்சி நீங்க கவிதையில் யாரை வேண்டுமென்றாலும் வேணாம் அவங்கள??? மட்டும் வச்சி செய்யலாம்.

இப்போ பதிவிடுங்கள் நீங்கள் அரை கவிஞர் ஆகிட்டீங்க. சொந்த பேரில் எழுதக்கூடாது. புனை பெயரில் எழுதவேண்டும். மறந்தும் உங்கள் பெயரில் ஜாதி மத சம்பந்தம் இருக்கக்கூடாது. இது ரொம்ப முக்கியம்,  ஏனென்றால் பிற்பாடு இது மிகவும் உதவும்.

ஆனால் வேலை இத்துடன் முடியவில்லை.

இதுக்கு உடனே எதிர் வினையாக நாலுபேரு வந்து பதிவிலேயும், முகநூலிலும் இல்லை தொலைபேசியிலும் வான்டடாக வந்து துப்புவான். ஆஹா வெட்டிடுவேன், தூக்கிடுவேன் என்று குரைப்பான். இப்போ கொஞ்சம் கைகாலெல்லாம் நடுங்கும் பயம் வேண்டாம். இப்போதான் முக்கிய வேலை ஒன்று பாக்கி உள்ளது.

உடனே நீங்க காவல்துறைக்கு முறையிடனும், அங்க இந்த கவிதையெல்லாம் வேலைக்கு ஆவாது.

அங்கே உரைநடைதான் செல்லுபடியாகவும். அதற்கும் சில வரைமுறைகள் உண்டு.

முதலில் உங்களது பெயரை முழுமையாக எழுதவேண்டும். அதில் ஜாதி மத விவரங்களை கோடிட்டு இதனால் தான் ஏன் மீது துப்புகிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும்.

பின்னர் எனக்கு ஒரு கண்ணில் புரை, ஒரு காது மந்தம், ஆறுவிரல், மூலம், காலில் ஆணி, போன்ற அங்க விவரங்களையம் உபாதைகளையும்  குறிப்பிடவேண்டும். அப்போதான்  எல்லோராலும் கவனிக்கப்பட்டு சே பாவம்யா!! இந்த ஆளு என்ற கருணை உணர்ச்சி துப்பினவனுக்கும் பிறக்கும்.

என்ன சரியா இப்போ நீங்க ஒரு பிரபல கவிஞர் ஆகிட்டீங்க. சும்மா கலக்குங்க.


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 22 August 2018

ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அவர்களுக்கு

ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அவர்களுக்கு

மனநிலை பாதிக்கப்பட்ட கும்மாச்சியும் கருணாநிதியும்.........என்ற தங்களது பதிவைப்  படித்தேன், மேலும் எனது பதிவின் பின்னூட்டத்தில் இட்ட கருத்தையும் வெளியிட்டு இருக்கிறேன்.

http://timeforsomelove.blogspot.com/2018/08/blog-post_21.html

நீங்கள் எனது மனநலம் குறித்து கொடுத்த அறிவுரைகளை மனதில் ஏற்றுக்கொள்கிறேன். எனது இறப்பை பற்றியும் பதிவிட்டிருக்கிறீர்கள் நன்றி. இறப்பு எனது கையிலோ அல்லது உங்கள் கையில்!!! இல்லை என்று நம்புகிறேன்!!!.

கலைஞருக்கும் எனக்கும் எந்த வாய்க்கா வரப்பு பிரச்சினைகள் இல்லை என்பதையும் இந்த நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும் நீங்கள் , கடந்த பத்துவருடங்களாக பதிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதில் பல தனிமனித தாக்குதல்களும்,  பதிவர்களின் மீது இன  வெறித்தாக்குதல்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களது பதிவுகளுக்கு எதிர் கருத்து தெரிவிப்பார் மீது பிரசுரிக்க தகாத வார்த்தைகளையும் உபயோகப்படுத்த தயங்கவில்லை. என்ன கெட்ட வார்த்தைகள் உங்களது கணிப்பில் ஆங்கிலத்தில் பதிவிட்டால் நாகரீகம் என்று சடுதியில் ஆங்கிலத்தில் "get the F*** out of here" என்று வெளிவிடுகிறீர்கள்.

உங்களது ஜாதி மற்றும் இன வெறி பதிவுகள் அமிர்தம் கக்குகிறது என்று நம்புகிறீர்கள்.

உங்களது வலைப்பூவில் உங்களது கருத்தை வெளியிடுகிறீர்கள் அது உங்களது உரிமை. அதற்காக உங்களை மனநலம் குன்றியவர் என்றோ இல்லை அந்த சமுதாயம் உங்களை வெகுவாக பாதித்தது என்றோ நான் அனுமானிக்கவில்லை.

 உங்களது பதிவுகளில் நிறைய எழுத்தாளர்கள் பற்றி எழுதி இருக்கிறீர்கள், குறிப்பாக தி. ஜானகிராமனை பற்றிய பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தது. நான் அவருடைய அத்தனை புத்தகங்களையும் சேர்த்து வைத்திருக்கிறேன். இருபது வருடகங்களுக்கு முன்பு "ஐந்திணை பதிப்பகம்" அவருடைய ஒரு சிறுகதை தொகுப்பை மறுபதிப்பு செய்ய என்ன அணுகியபொழுது என்னிடமிருந்த நகலை கொடுத்திருக்கிறேன்.

இந்த விஷயத்தில் நமக்குள் ஒற்றுமையை நான் உணர்கிறேன், அதே சமயத்தில் உங்களது பதிவுகள் அனைத்தும்  என்னுடைய கருத்துடன் ஒத்துபோகவில்லை என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் உங்களுக்கு தோன்றிய கருத்தை பதிவிடுகிறீர்கள். எதிர் கருத்துக்கு மாறாக நான் பின்னூட்டங்கள் இடுவதில்லை.

வாழ்க வளமுடன்.





Follow kummachi on Twitter

Post Comment

Monday 20 August 2018

அவரு பெரிய மனுஷன்!!!!

தலைவர் இறந்துவிட்டார். கல்யாண சாவுதான். பிள்ளைகள், பெண்கள்,  பேரன்கள், கொள்ளு பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேத்திகள் மாமன் மச்சான் மருமவன்கள் என்று எல்லோர் பேரிலும் சொத்து சேர்க்க வைத்து தனக்கு என்று ஒன்றும் இல்லாது ஆறடி நிலத்திற்கு நாயடி பேயடி பட்டு மண்ணுடன் மண்ணாக ஐக்கியமாகிவிட்டார்.

அவருடைய வாழ்க்கை வரலாறு அவரது கட்சி சார்ந்த தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவரது பழைய பேட்டி ஒன்று நினைவிற்கு வந்தது.

பத்து இருபது வருடங்களுக்கு முன் அவர் பலகாலம் வனவாசத்திற்கு பின் கோட்டையில் (கோ)கொடியை நாட்டினார். அப்பொழுது பிரபல வார பத்திரிகை ஒன்று அவரின் அன்றாட நிகழ்வுகளை அவரிடமிருந்து பேட்டியாக பெற்று பதிவிட்டு இருந்தார்கள்.

அவர் முதல் நாள் இரவு துணைவியார் வீட்டில் படுக்க செல்வாராம், காலையில் எழுந்தவுடன் கட்சி அலுவலகத்தில் ஒரு மணி நேரம் நடை பயிற்சி. பின்னர் மனைவியின் வீட்டில் இட்லி மீன் கொழம்பு சகிதம் நாஸ்தா. பிறகு கோட்டைக்கு சென்று கோப்புகளை பார்வையிடுவார். மதியம் துணைவியார் வீட்டில் அறுசுவை மதிய உணவு. மறுபடியும் கோட்டையில் குப்பை கொட்டுவது. இரவு உணவிற்கு மனைவி கையால் அறுசுவை. அடுத்த நாள் காலையில் துணைவியார் வீட்டில் நாஸ்தா என்று ஒரு அட்டவணை போட்டு ஓயாமல் உழைத்து கூவம் நதிக்கரையில் ஓய்வெடுக்கும் அளவிற்கு வாழ்ந்திருக்கிறார்.

ஏனோ இந்த பேட்டி நினைவிற்கு வர மனைவியிடம் இதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.

அவர் பெரிய மனுஷன், ஒரே பெண்ணை தொந்தரவு செய்யாமல் எப்படி அட்டவணை போட்டு வாழ்ந்திருக்கிறார். யோவ் நீயும் இருக்கியே, எப்ப பாரு ஒரே ஆளையே ரப்ச்சர் பண்ணிக்கினு...........நம்மகிட்ட ஒரு ரிவர்ஸ் ஸ்விங்...

அடியே அடியே இப்ப சொல்லுவையே!!! இதையே ஒரு முப்பது வருடம் முன்பு சொல்லியிருந்தால்..............நானும் துணைவி, இறைவி, எடுப்பு, தொடுப்பு என்று வேலைக்கு  ஒரு வீட்டில் உண்டு கொழுத்திருப்பேன்.

இந்த தங்கமனிகளை அந்த பிரம்மனே வந்தாலும்.............ஹூஹூம் வேலைக்கு ஆவாது.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 14 August 2018

கலக்கல் காக்டெயில்-188

சந்து (ட்விட்டர்)

நீங்கள் சந்து வாழ் மனிதரா, நகைச்சுவை உள்ளம் உள்ளவரா? நாயே பேயே என்று திட்டினாலும் மற்றும் சாதிரீதியாக உம்மை வசை பாடினாலும் உணர்ச்சி வசப்படாதவரா? அப்ப சந்தில் வரும் கீச்சுகளை படித்தால் உங்கள் கவலை மறந்து சிரிக்கலாம். அதுவம் சமீபத்திய ட்விட்டரில் வரும் அரசியல் சார்ந்த கீச்சுகள் நகைக்க வைக்கின்றன...........சில அல்சர் ரகம்.

சீமான் கலைஞரிடம் கொண்ட பழக்கத்தை "அவர் சட்டை பையில் இருக்கும் பேனாவை எடுத்து எழுதிவிட்டு வைக்கும் அளவு பழக்கம் இருந்தது என்று சொல்லப் போக..........ஒரு கீச்சர்........

சீமான் சொல்வது போல............."எனக்கும் தலைவருக்கும் பிரபாகரனுக்கும் உள்ள பழக்கம் எப்படி என்றால் அவர் கழுத்தில் வைத்திருக்கும் சயனைட் குப்பியை எடுத்து இரண்டு சப்பு சப்பிவிட்டு வைக்கும் அளவுக்கு நெருக்கம்  இருந்தது".

அடுத்தது கலைஞர் கல்லறையிலிருந்து மகன் ஸ்டாலினுக்கு எழுதும் மடல்.

மகனே இந்த வைரமுத்து எதையோ கிறுக்கி எடுத்து வந்து கவிதை என்று பாடி தலையை சொறிவான்.

பத்து ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டாம்.......அப்பா அதைத்தான் கொடுப்பேன்.

பின் குறிப்பு: அதையும் அருகிலிருப்பவரிடம் இருந்து எடுத்து கொடுத்தால் நலம்.

போடு தகிட தகிட...

இது தர்ம யுத்தம் காலம் போல.....இன்று மெரீனாவில் இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கியது என்பதுதான் இன்றைய ஊடகங்களின் ஸ்கூப்.......

அஞ்சா நெஞ்சன் இன்று கலைஞர் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. தன்னுடைய ஆதங்கங்களை கலைஞரிடம் சொன்னதாகவும், மேலும் தி.மு.கவின் தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாகவும் கூறி இன்று  நடக்கவுள்ள செயற்குழு கூட்டத்தில் குண்டை வைத்து விட்டார்.

ஏற்கனவே ஒரு தலை மறைந்தவுடன் ஒரு கட்சி சின்னா பின்னப்படுத்தப்பட்டது. இப்பொழுது இன்னும் ஒரு பெருந்தலை மறைந்தவுடன் அடுத்த வேலை ஆரம்பம்.

யாரந்த சூத்திரதாரி? காலம் பதில் சொல்லும்.

போடு தகிட தகிட...........ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ? பதவி ஆசை எனும் தொட்டிலிலே..........ஆடாதாரோ?

ரசித்த கவிதை 

இவன் ஒரு வம்பன் ,
இரண்டு நாய் தெருவிலே
இன்புற்றிருந்தால் பிடிக்காது
பொல்லை கொண்டு அடித்தோ.. 
கல்லை தூக்கி எறிந்தோ.. 
கண்ணில் படும் போதெல்லாம்
கலைத்துவிடுவான் காத தூரம்..!

வாயில்லா ஜீவன் அது
வம்பனை காணும்போது
வாலை சுருட்டிக்கொண்டே ஓடிவிடும்,
வாய் மட்டும் இருந்திருந்தால்
"பாடையில போவானே" எண்டு
வஞ்சிக்கும் இவனை கண்டு.., 

நாட்கள் நகர்ந்த ஒருநாள்
வம்பன் வரும் வழியில்
வாலை மடித்து துஞ்சிக்கிடந்த நாய்
வசதியாய் போச்சு இவனுக்கு, இருந்தும்
வம்பனுக்கு ஒரு சந்தேகம்
வாலும் ஆடவில்லை - அதன்
வாயும் அசையவில்லை
வருத்தத்தில் செத்திருக்குமோ..! 

முடிவு செய்துகொள்ள , அதன்
மூக்கு மேல விரலை வச்சான்
மூச்சு வருதா ..?

அவன் எதிர்பார்க்கவில்லை; 
அடுத்த நொடியிலே
"அவ்" என்று ஒரு கடி..,
அத்தனை நாள் ஆத்திரமும்
மொத்தமாய் சேர்த்து வச்சு.!

பாவம் வம்பன் ,
மூக்கு மேல வச்ச விரலில்
மூணு பல் ஆழமாய் - இப்போ
ஆசுப்பத்திரிக்கு போய் வாறான்..,
அஞ்சு ஊசி போட்டாச்சாம்
அடுத்து வரும் நாட்களில்
மிச்சம் இருபத்தி ஆறு..!


நன்றி: மதுரை மைந்தன்

சினிமா

கஜினிகாந்த்...................

ஆர்யா.............சாய்ஷா...





Follow kummachi on Twitter

Post Comment

Monday 13 August 2018

பொது அறிவு?

வாழ்க்கைக்கிற்கு பொது அறிவு மிக அவசியம். எல் .கே.ஜி தொடங்கி ஆணி பிடுங்கப்  போகும் வரை நம் வாழ்விற்கு பொது அறிவு தேவை. ஆதலால் நீங்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிந்திருப்பது அவசியம், இது ஒரு மாதிரி!!!!... வினாத்தாள் தான்.

அமெரிக்காவை கண்டு பிடித்தது யார்?
நீராவி எஞ்சினை கண்டுபிடித்தது யார்?
உழவர் சந்தை கொண்டு வந்தது யார்?
கணினியை கண்டு பிடித்தது யார்?
இணையத்தை நமக்கு கொடுத்தது யார்?
அண்ணா அறிவாலயம் கட்டியது யார்?
சமச்சீர் கல்வி கொண்டு வந்தது யார்?
தொல்காப்பியருக்கு தமிழ் ஆசான் யார்?
திருவள்ளுவருக்கு சிலை வைத்தது யார்?
அரசியல் சாணக்கியர் யார்?
தாஜ்மகாலை கட்டியது யார்?
கத்திப்பாரா பாலத்தை வடிவமைத்தது யார்?
செம்மொழி மாநாடு நடத்தியது யார்?
தமிழ் ஈழம் கண்ட தலைவர் யார்?
பகுத்தறிவுத் தந்தை யார்?
ஃபியூஸை பிடுங்கியது யார்?
புல்டோசர் விட்டது யார்?
தொலைபேசியைக்  கண்டுபிடித்தது யார்?
சீனப் பெருஞ்சுவர் கட்டியது யார்?
சமூகநீதி காத்தவர் யார்?
ஊழலின் தந்தை யார்?
சிலப்பதிகாரம் செய்தது யார்?
மனைவி,துணைவி, இறைவி என்று இலக்கணம் வகுத்தவர் யார்?
தஞ்சை பெரியகோவிலை கட்டியவர் யார்?
கட்டுமரத்தைக் கடலில் விட்டது யார்?
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்?
இறந்தும் போராடியத்  தலைவர் யார்?
நிலவிற்கு ராக்கெட் விட்டது யாரு?
அணு!!!!வை கண்டு பிடித்தது யார்?
ஐ.நா வைக் கட்டமைத்தது யார்?
சரித்திர நாயகன் யார்?
திராவிட தலைமகன் யார்?


இன்னும் போல ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு விடை தெரியவில்லை என்றால், நீங்கள் ஒன்று உலக்கைக்கு பிடிக்காத "நூலை" வைத்திருக்க வேண்டும், இல்லை அந்த கூட்டத்தின் அடிவருடியாக இருக்க வேண்டும்.

மேற்கொண்ட கேள்விகளுக்கு விடை ஒன்றே தான்............உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்கள் கீழ் கண்டவர்களை அணுகினால் பொது அறிவு பெற்று வாழ்க்கையில் சீரும் சிறப்பும் பெறுவீர்கள்.

பிரியாணி கடையில் பாக்ஸிங் செய்து பிரியாணி பிடுங்கும் கூட்டத்தில் யாரை வேண்டுமானாலு அணுகலாம்.
இணையத்தில் உ.பி.  போராளிகளை அணுகலாம். இவர்களை இனம் கண்டுகொள்வது எளிது. (எனது முந்தைய பதிவில் இந்த அறியத் தகவல் உள்ளது).
மேலும் சமீபத்தில் மெரீனா சென்றால் நீங்கள் கேட்கவே வேண்டாம் தன்னாலேயே விடை கிடைக்கும். ஆனால் இந்த சலுகை இன்னும் சில நாட்கள் மட்டுமே. முந்துங்கள்.




Follow kummachi on Twitter

Post Comment

Saturday 11 August 2018

சமூக வலைத்தளங்களில் "உ.பீ "ஸ்

நீங்கள் வலைத்தளங்களில் வரும் செய்திகளையும் நிகழ்வுகளையும் கவனிப்பவர்கள் என்றால் சமீபத்தில் உ.பீஸ்களின் உண்மை முகங்களை தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான பதிவுகள் அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டிருக்கும் நடிகரை கிண்டலடித்து வரும் பதிவுகளாக இருக்கும். மேலும் அவரது வரவை கண்டு நடுங்கி அஞ்சுவதை பறையடித்து காட்டும்.


மற்றுமொரு கூட்டம் மறைந்த தலைவர்தான் தமிழை வளர்த்தார் அவரது மறைவுக்குப் பின் தமிழ் இனி விரைவில் சாகும் என்ற ரேஞ்சில் ஒரேயடியாக ஜல்லியடிப்பார்கள். அப்போ இந்த கம்பர், வள்ளுவர், அவ்வையார் என்ற சங்ககால புலவர்கள், மற்றும் தேவநேயப்பாவாணர், பாரதி, பாரதிதாசன், போன்ற இந்த கால தமிழ் தொண்டு ஆ ற்றியவர்கள்  எல்லாம் என்ன தமிழை வளர்க்காமல் வெட்டினார்களா? என்ற கேள்விகளை நீங்கள் கேட்டால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரும். "பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைத்த வஞ்சகர்கள்" என்ற எதுகை மோனை வகையறாவை சிலாகிக்கும் தமிழ் மீது ஆர்வம் கொண்ட  அறிவுஜீவிகள்.

மற்றுமொரு பிரிவினர். இவர்கள் நடுநிலைவாதிகள் என்ற போர்வையில் வருவார்கள். தங்களது கட்சியின் ஆட்கள் மீது உள்ள வழக்குகளை போலி வழக்கு என்று முதலில் ஆரம்பிப்பார்கள். பின்னர் நீதிமன்றத்தில் சென்று "நீதி வென்றது" என்று பினாத்துவார்கள், தோற்று குற்றவாளி என்று நிரூபணமானால் நீதியரசர்களின் ஜாதியை ஆராய்ந்து பீராய்ந்து தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதே எதிர்க்கட்சி ஆட்களின் வழக்குகளோ அல்லது அவர்கள் எதிர்க்கும் ஜாதிகளின் வழக்குகளை பற்றி செய்தி வரும்பொழுதே இணையத்திலேயே வழக்கை நடத்தி "திருடன், கொலைகாரன்" என்று தீர்ப்பு எழுதி தண்டனையும் தந்து விடுவார்கள்.

மற்றுமொரு வகை,பெரியார் பகுத்தறிவு, அண்ணா கொள்கைகள் என்று சமூக நீதி காக்க வரும் கோமான்கள். இந்த வகை ரொம்ப ரசிக்கத்தக்கவை. பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்று வாய்கிழிய, மன்னிக்கவும்  வலைத்தளம் கிழிய பதிவிட்டு பெருமாள் கோவில் மணி அடித்தவுடன் "உண்டகட்டிக்கி" முதலில் கை  நீட்டுவார்கள். அவர்கள் வீட்டு விசேஷங்களில் பகுத்தறிவை வாசலியேயே நிற்க வைத்து எச்சிலை பொறுக்க விடுவார்கள். இதில் பெரும்பாலான வகை "நூல் பொறுக்கிகள்" என்று புலம்பி இணையத்தில் பதிவிட்டு சுய இன்பம் அடையும் நச்சுக்கூட்டம். இவர்கள் பெரியார் கொள்கைகளு ம் தெரியாது, அண்ணாவின் கொள்கைகளும் தெரியாது. "தொம்பிகளுக்கு" சவால் விடும் வெற்றுக்கூட்டம்.

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் டாஸ்மாக்கு, குவாட்டர், பிரியாணிக்கு பாக்ஸிங், தலைவர்களுக்கு அடிவருடி தெருவில் நிற்பது, அப்பாவிகளை உயிரோடு எரிப்பது, அடிதடி மேலும் முக்கியமாக அருமை தமிழில் உள்ள அத்துணை கெட்டவார்த்தைகளையும் புதுப்புது பொலிவோடு இணையத்தில் பரப்பி பேரானந்தம் அடையும் பெரியோர்கள் சான்றோர்கள்.

நீங்க இப்படியே இருங்க, அப்பொழுதுதான் உங்க தலைவர்கள் உங்களை உபயோகித்து அவர்களது வியாபாரத்தை பெருக்கமுடியும்.



Follow kummachi on Twitter

Post Comment

Friday 10 August 2018

மறைந்த சூரியன்

கலைஞரின் மரணம் தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒரு பேரிழப்பு என்றால் அது மிகையாகாது. கடந்த என்பது வருடங்களாக பொது சேவையிலும், கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் அரசியலிலும் கோலோச்சியவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை தேர்ந்தடுக்கப்பட்டவர், சட்டசபை தேர்தல்களில்  தோல்வியையே சந்திக்காதவர் என்ற பெருமைக்குரியவர். தமிழக அரசியலில் கலைஞரின் பங்கு அளப்பரியது, அது பதவியிலிருந்தாலும் சரி இல்லையென்றாலும் அவரின் இருப்பு தமிழகத்தில் எப்பொழுதும் உணரப்பட்டிருந்தது. ஒரு பெரிய கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பு அவ்வளவு எளிதல்ல, எல்லாவற்றையும் அவர் திறமையாக செய்தார். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்.

கடந்த சில வருடங்களில் தமிழகம் இரண்டு பெரிய ஆளுமையை இழந்திருக்கிறது. இனி தமிழக அரசியல் இந்த இரண்டு தலைவர்கள் இல்லாமல் எந்த பாதையில் செல்லும் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

கலைஞரின் மரணத்திற்குப் பின் தி.மு.க வின் செயல்பாடு எப்படி இருக்கும்?, கட்சியின் நிலைமை என்னவாகும்? என்பதெல்லாம் காலத்தின் கையில் உள்ளது. அவரின் உண்மையான தொண்டர்கள் அதை செவ்வனே செய்வார்கள் என்று நம்புவோம்.

அவரின் மரணத்திற்கு பின் சமூக ஊடகங்களில் நடந்த செயல்கள் சத்தியமாக அவருக்கு புகழ் சேர்க்காது. அவரது உடல் அடக்கம் செய்யவேண்டிய இடத்தை நிர்ணயிப்பதில் நடந்த குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதை வைத்து செய்யப்பட்ட கேலிகளும், ஜாதி விரோதங்களும் தமிழர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. ஆனால் இங்கு யார் தமிழன் என்பதிலே ஒரு பெரிய குழப்பமே இருக்கும் பொழுது ஒற்றுமையை எதிர்பார்ப்பது அறிவீனம்.

கலைஞர் தனது மரணத்தில் தமிழ் சமுதாயத்திற்கு எத்தனையோ செய்திகளையும் சிந்தனைகளையும் உணர்த்திவிட்டு போயிருக்கிறார். ஆனால் நமது சமுதாயம் அதை சிலாகிப்பார்கள் பின்பற்ற மாட்டார்கள்.


Follow kummachi on Twitter

Post Comment