Thursday 30 August 2018

சீமானிய அலப்பறைகள்.

ஒரு மைக்கு கைதட்ட கொஞ்சம் அல்லக்கைகள் அவ்ளவுதான் வேணும் எதை வேண்டுமானாலும் பேசலாம்.

இனி சீமான் சொன்னதும் சொல்லாததும்.

இருபத்தி எட்டு கிலோ ஆமைக்கறி ஒரே ஆளா தின்னு, தலைவரோட  கடலிலே  அப்படியே போய்கிட்டு இருக்கும் பொழுது எதிர்க்க ஒருத்தன் ஆமை ஓட்ட திருப்பிப்போட்டு ஓட்டிகிட்டே போறான். ஹெஹ்ஹ்ஹஏஏஏ.

முப்பாட்டன் அறுபதாயிரம் யானையை படகுல  ஏத்திக்கிட்டு போருக்குப் போவான், கூடவே அம்பதாயிரம் டன்னு புல்லுக்காட்டு, ஐயாயிரம் குண்டான் அரிசி சோறு..........நாற்பதாயிரம் டன்னு அரிசி மூட்டை.

என் தலைவன் ஒரு முறை என்னிடம் இந்த ஏ.கே. 47 வைச்சு எப்படி சுடணும்னு கேட்டாப்ல, நான் உடனே அப்படியே அத்த வாங்கி ஒரு ஒருலட்சம் சிங்களன் தலைகளை சுட்டு தள்ளினேன், அப்ப  தலைவர், தம்பி நீதாண்டா இந்த தமிழ் ஈழத்தின் எதிர்காலம்  என்றார்.

அவர் சட்டை பையில் உள்ள பேனாவை எடுத்து எழுதிவிட்டு திரும்ப அவரு பையிலேயே வைக்கும் அளவிற்கு எனக்கும் கலைஞருக்கும் நெருக்கம் இருந்தது.

ஒரு முறை சிவாஜி செட்டுல வசனம் பேச என்னய கத்துக்கொடுக்க சொன்னாரு, நான் அவருக்கு சொல்லிக்கொடுத்துட்டு ஒரு ஓரமா போயி நின்னுக்கிட்டேன், அவரு அந்த வசனத்த பேசிட்டு எண்ணிய தேடுறாரு. ஏம்பா கரெக்ட்டா பேசினேனான்னு கேக்குறாரு.

தலைவரு பிரபாகரன் கழுத்துல சயனைடு குப்பியை எடுத்து ரெண்டு சப்பு சப்பிவிட்டு வைக்கும் அளவிற்கு எனக்கும் தலைவனுக்கும் பழக்கம் இருந்தது.

காந்தி உப்பு சத்தியாகிரகம்  தொடங்க தடியை பிடிச்சிக்கிட்டு நிக்குறாரு. எல்லோரும் தயாராயிட்டாங்க. அப்போ எண்ணிய தேடுறாரு. சொல்லுப்பா எங்கே போகலாமுன்னு........கேக்குறாரு,  அப்போ நான்தான் கண்டி பக்கம் போலாமுன்னேன், அப்போ அவரு வேணாம்பா அது ரொம்ப தூரம் கால் வலிக்கும் நம்ம தண்டி பக்கமா போவோம்னு சொல்லிட்டு என் பின்னாடியே வந்துட்டாரு.

இப்படித்தான் ஈழப்போர் நடந்துக்கிட்டிருக்கு,  தளபதி தமிழ்செல்வனுக்கு காலு துண்டா போயிடுச்சி, அவரு  வலில அப்படியா ஓரமா உக்காந்துட்டாரு. அந்தப்பக்கம் இன்னொருத்தனுக்கு காலு துண்டா போய் அப்படியே கத்துறான் கதறுறான். இவரு டேய் ஏண்டா கத்தறேன்னு கேக்குறாரு. அண்ணே காலு துண்டா போயிடிச்சு வலிக்குதண்ணேன்னு கதறுறான். டேய் சும்மா இருடா  காலுத்தானே துண்டா போச்சு அங்க பாருடா பக்கத்துல ஒருத்தனுக்கு தலையே துண்டா போச்சு கத்துறானா பாரு சும்மா இருங்குறாரு.

வான் புலிகள் கிளிநொச்சிக்கு மேலே பறந்துகிட்டு இருக்காங்க. அண்ணன் பிரபாகரந்தான் ஹெலிகாப்டரில் உக்காந்திருக்காப்ல.  வெயிட்டுக்கு வண்டி சாயவும் ட்ரைவரு "அண்ணே வண்டி பின்னுக்கு இழுக்குதண்ணே" அப்ப  தலைவரு   சொல்றாரு முன்னுக்கு இழுத்து விடுன்னு.........ஹெஹ்ஹ்ஹயே ...........என்ன ஒரு நகைச்சுவை பாத்துக்கிடுங்க...........

என்னோட பாஞ்சாலங்குறிச்சி படம் பார்த்துப்புட்டு கலைஞர் என் வீட்டுக்கு வந்து அடுத்த படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு கேட்டாரு, நான்தான் அவரை இன்னும் நீங்க வசனகர்த்தாவா நிரூபிக்கல இன்னுமொரு அஞ்சாறு படத்துக்கு எழுதிட்டு வாங்கண்ணு சொன்னேன், அப்ப அவரு எழுதி கொணாந்துதான் 'பராசக்தி".

கடைசியாக "திராவிட சுடுகாடு" ......வேண்டாம் அதை எழுதுவது அவ்வளவு நல்லதல்ல. 




Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

ஸ்ரீராம். said...

சீமான் பேச்சு கேட்டதில்லை என்பதால்....

வேகநரி said...

இவருடைய காமெடிகள் சில பார்த்தேன் ரொம்ப ஓவர்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.