Thursday 30 August 2018

சீமானிய அலப்பறைகள்.

ஒரு மைக்கு கைதட்ட கொஞ்சம் அல்லக்கைகள் அவ்ளவுதான் வேணும் எதை வேண்டுமானாலும் பேசலாம்.

இனி சீமான் சொன்னதும் சொல்லாததும்.

இருபத்தி எட்டு கிலோ ஆமைக்கறி ஒரே ஆளா தின்னு, தலைவரோட  கடலிலே  அப்படியே போய்கிட்டு இருக்கும் பொழுது எதிர்க்க ஒருத்தன் ஆமை ஓட்ட திருப்பிப்போட்டு ஓட்டிகிட்டே போறான். ஹெஹ்ஹ்ஹஏஏஏ.

முப்பாட்டன் அறுபதாயிரம் யானையை படகுல  ஏத்திக்கிட்டு போருக்குப் போவான், கூடவே அம்பதாயிரம் டன்னு புல்லுக்காட்டு, ஐயாயிரம் குண்டான் அரிசி சோறு..........நாற்பதாயிரம் டன்னு அரிசி மூட்டை.

என் தலைவன் ஒரு முறை என்னிடம் இந்த ஏ.கே. 47 வைச்சு எப்படி சுடணும்னு கேட்டாப்ல, நான் உடனே அப்படியே அத்த வாங்கி ஒரு ஒருலட்சம் சிங்களன் தலைகளை சுட்டு தள்ளினேன், அப்ப  தலைவர், தம்பி நீதாண்டா இந்த தமிழ் ஈழத்தின் எதிர்காலம்  என்றார்.

அவர் சட்டை பையில் உள்ள பேனாவை எடுத்து எழுதிவிட்டு திரும்ப அவரு பையிலேயே வைக்கும் அளவிற்கு எனக்கும் கலைஞருக்கும் நெருக்கம் இருந்தது.

ஒரு முறை சிவாஜி செட்டுல வசனம் பேச என்னய கத்துக்கொடுக்க சொன்னாரு, நான் அவருக்கு சொல்லிக்கொடுத்துட்டு ஒரு ஓரமா போயி நின்னுக்கிட்டேன், அவரு அந்த வசனத்த பேசிட்டு எண்ணிய தேடுறாரு. ஏம்பா கரெக்ட்டா பேசினேனான்னு கேக்குறாரு.

தலைவரு பிரபாகரன் கழுத்துல சயனைடு குப்பியை எடுத்து ரெண்டு சப்பு சப்பிவிட்டு வைக்கும் அளவிற்கு எனக்கும் தலைவனுக்கும் பழக்கம் இருந்தது.

காந்தி உப்பு சத்தியாகிரகம்  தொடங்க தடியை பிடிச்சிக்கிட்டு நிக்குறாரு. எல்லோரும் தயாராயிட்டாங்க. அப்போ எண்ணிய தேடுறாரு. சொல்லுப்பா எங்கே போகலாமுன்னு........கேக்குறாரு,  அப்போ நான்தான் கண்டி பக்கம் போலாமுன்னேன், அப்போ அவரு வேணாம்பா அது ரொம்ப தூரம் கால் வலிக்கும் நம்ம தண்டி பக்கமா போவோம்னு சொல்லிட்டு என் பின்னாடியே வந்துட்டாரு.

இப்படித்தான் ஈழப்போர் நடந்துக்கிட்டிருக்கு,  தளபதி தமிழ்செல்வனுக்கு காலு துண்டா போயிடுச்சி, அவரு  வலில அப்படியா ஓரமா உக்காந்துட்டாரு. அந்தப்பக்கம் இன்னொருத்தனுக்கு காலு துண்டா போய் அப்படியே கத்துறான் கதறுறான். இவரு டேய் ஏண்டா கத்தறேன்னு கேக்குறாரு. அண்ணே காலு துண்டா போயிடிச்சு வலிக்குதண்ணேன்னு கதறுறான். டேய் சும்மா இருடா  காலுத்தானே துண்டா போச்சு அங்க பாருடா பக்கத்துல ஒருத்தனுக்கு தலையே துண்டா போச்சு கத்துறானா பாரு சும்மா இருங்குறாரு.

வான் புலிகள் கிளிநொச்சிக்கு மேலே பறந்துகிட்டு இருக்காங்க. அண்ணன் பிரபாகரந்தான் ஹெலிகாப்டரில் உக்காந்திருக்காப்ல.  வெயிட்டுக்கு வண்டி சாயவும் ட்ரைவரு "அண்ணே வண்டி பின்னுக்கு இழுக்குதண்ணே" அப்ப  தலைவரு   சொல்றாரு முன்னுக்கு இழுத்து விடுன்னு.........ஹெஹ்ஹ்ஹயே ...........என்ன ஒரு நகைச்சுவை பாத்துக்கிடுங்க...........

என்னோட பாஞ்சாலங்குறிச்சி படம் பார்த்துப்புட்டு கலைஞர் என் வீட்டுக்கு வந்து அடுத்த படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு கேட்டாரு, நான்தான் அவரை இன்னும் நீங்க வசனகர்த்தாவா நிரூபிக்கல இன்னுமொரு அஞ்சாறு படத்துக்கு எழுதிட்டு வாங்கண்ணு சொன்னேன், அப்ப அவரு எழுதி கொணாந்துதான் 'பராசக்தி".

கடைசியாக "திராவிட சுடுகாடு" ......வேண்டாம் அதை எழுதுவது அவ்வளவு நல்லதல்ல. 




Follow kummachi on Twitter

Post Comment

Saturday 25 August 2018

கலக்கல் காக்டெயில் -189

பிச்சைக்கு பாடும் பாட்டு 

நினைவேந்தலுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இப்பொழுது அந்தக் கட்சியின் தலைவர் வரவு சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை கிளப்பி விட்டுள்ளது. வழக்கம்போல இணையத்தில் உ.பீசுகளும் எதிரணிகளும் முட்டி மோதிக்கொள்கிறார்கள். அடுத்த தேர்தல் கூட்டுக்கு இது அச்சாரமா? என்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இப்பொழுது காங்கிரஸ் இருக்கும் நிலைமையில் எந்த கூட்டணியும் சாத்தியமே, கூட்டணி விவரம் போகப் போகத்தான் தெரியும். இதற்காக பெரிய அடிதடி தேவையில்லைதான். அரசியலில் எதுவும் நடக்கும். இதையெல்லாம் பார்க்கும் பொழுது..........ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் ராதா "தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்" என்று பாடிக்கொண்டு  ஒரு வீட்டில் பிச்சைக்கு நிற்பார். அப்போது அந்த வீட்டுக்காரர் ஏன் அந்த கோவிந்தன் உன் வினையை தீர்க்கவில்லை என்று கேட்பார்.

ராதா நக்கலாக ஒரு பார்வை பார்த்து........அடேங்கப்பா டேய் அது பிச்சைக்கு பாடுற பாட்டுடாப்பா.........என்று சொல்லி செல்வார்.

அதேபோலத்தான் இந்த நிகழ்வுகளும் ..............ஓட்டு பிச்சைக்காக...........

முக்கொம்புக்கு டெங்குவாம்...........

முக்கொம்பு தடுப்பணையில் ஒன்பது மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாக போய்க்கொண்டிருக்கிறது. அதை பார்வையிட்ட நமது முதல்வர் நிருபர்களிடம் நமக்கு எல்லாம் காய்ச்சல் வருவதில்லையா? அது போல அணைக்கும் வந்து உடைந்து விட்டது என்று இணைய போராளிகள்  திரித்துக்கூறும் வகையில் ஒரு வாக்கியத்தை சொல்லப்போக இப்பொழுது எல்லோரும் அவரை வைத்து செய்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அமைச்சர்களை நாமெல்லாம் லூசு என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் உளறலைப்பற்றி அவர்களே கவலைப் படுவதில்லை. அவர்கள் கருமமே கண்ணாயிருக்கிறார்கள்......எப்படியோ கல்லா கட்டினால் சரி என்பதுதான் அவர்களது குறிக்கோள்.

டிஸ்கி: பொதுப்பணித்துறை கான்டிராக்ட் எல்லாம் அவரது பினாமிகள் பேரிலதானாமே.

கனவுகண்டேன் நான் கனவுகண்டேன் 

கேரளா வெள்ளத்தில் மூழ்கிய பொழுது உலகமே அவர்களுக்கு உதவிக்கொண்டிருக்க "பினாய்ராஜ்" அமீரகம் 700 கோடி கொடுக்க முன்வந்துள்ளது என்று கூறி ப்ளக்ஸ் எல்லாம் அடித்து ஓட்டினார்கள். போதாக்குறைக்கு
பா. ஜ .க மோடி
எங்கே எழுநூறு கோடி
கேரளா பக்கம் வாடி
என்று கவி பாட
இப்பொழுது அமீரகம் எழுநூறா? நாங்க எங்கே சொன்னோம்.........என்று விழிக்க......பினாய் முழி பிதுங்கிக்கொண்டு கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் எழுநூறு கோடி வர கனவு கண்டேன் என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

ரசித்த கவிதை 

ஒரு குழந்தையின் டைரி

வீட்டில் பதார்த்தங்கள் செய்தால்
நண்பர்களுக்கென்றும்
பள்ளியில் மதிய உணவு முட்டையை
தம்பிக்கென்றும்
எடுத்து வைத்துக்கொள்ளும் குழந்தை,
வழியில் வாளிப்பான பிரம்பு கிடைத்தால் மட்டும்
"இது ஆசிரியருக்கென" எடுத்து பத்திரப்படுத்துகிறது.

நன்றி: சாமி கிரிஷ்

சினிமா

சமீபத்திய சென்சேஷன் இன்கெம்......இன்கெம்...இன்கெம்..... காவாலேதான்..

கீதகோவிந்தம் ராஷ்மிகா....அடுத்த  கவர்ச்சிப்புயல் வரும்வரை தெலுகு ரசிகர்களுக்கு இன்கெம்....இன்கெம்....தான்.....


Follow kummachi on Twitter

Post Comment

Friday 24 August 2018

அண்ணே முதலீடு, நிவாரணம் என்ன வித்யாசம் அண்ணே?

அண்ணே இந்த முதலீடுன்னா இன்னா நிவாரணமுன்னா என்ன அண்ணே?

ஏன்டா கரிச்சட்டி தலையா? ஏன்டா எங்கிட்ட வந்து அந்தக் கேள்வியை கேக்குறே?

ஐய்ய சும்மா சொல்லுங்க அண்ணே, இந்த மத்திய அரசு புல்லட் ட்ரைனுக்கு காசு வாங்குது, ஆனா கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு காசு வாங்க மாட்டேங்குது அதானே கேட்டேன்

டேய் ஆம்லெட் வாயா, நீ கார்ல போ சொல்ல இந்த சிஃக்னல்ல காரு தொடைக்கிற துணி, ப்ரஷு, பொம்மையெல்லாம் காட்டி விப்பாங்க, அதே காசு கொடுத்து வாங்கினா அது அவன் பொழைப்புக்கு முதலீடு, அதையே பொருளை வாங்காம இந்த பத்து ரூபா வாசிச்சுக்கோன்னு கொடுத்தா அது பிச்சடா கோமுட்டி தலையா.

சரிங்கண்ணே இந்த துபாய் காரன் எழுநூறு கோடி கொடுக்குறாங்களே அதே ஏன் வாங்க மாட்டேங்குறாங்க.

ஏண்டா டேய் என்ன வம்புல மாட்டுறியா? அது சரிடா இது மாதிரி மேட்டரெல்லாம் எங்கேடா பிடிக்கிற?

அது வந்தண்ணே இந்த பேஸ்புக், ட்விட்டர் இதுலே எல்லாம் போடறாங்கண்ணே.

ஏண்டா டபுள் பேரிங் மண்டையா? நீயே தூக்கு சட்டியை  தூக்கிட்டு எந்த கோவிலுல  எத்தனை மணிக்கு உண்டக்கட்டி போடறாங்கன்னு இம்ப்ரமேசன் சப்பளை செய்யுற பேமானி, நீ இதெல்லாம் படிக்குற?  அது சரிடா அதெல்லாம் படிச்சு நீ இன்னாடா பண்ணப்போற?

இல்லிங்கண்ணே சும்மா ஒரு பொது அறிவுக்குத்தான் அண்ணே.

ஆமா அப்படியே இவருக்கு எல்லா அறிவும் ரொம்பி வழியுது பொது அறிவை தேடிவந்துட்டாரு? ஏன்டா ஏன் உயிரை வாங்குற?

இல்லண்ணே சொல்லுங்கண்ணே?

ஏன்டா பேரிக்கா மண்டையா.......அவங்க கொடுக்கிறேன்னு சொன்னதா எங்களுக்கு ஒன்னும் தகவல் இல்லேன்னு லூலூ ஓனரும், அம்பாசிடரும் சொல்லிட்டாங்களே அது உன் நொள்ள கண்ணுக்கு தெரியலையாக்கும்.

இதுல எது உண்மைங்கண்ணே?

டேய் ஹாஃப் பாயில் தலையா உனக்கு எதுக்குடா அந்த வம்பு? டேய் இந்த ஃபேஸ் புக்கு வாயனுங்க, ட்விட்டர் வாயனுக இவனுங்களுக்கு உன் மண்டையில இருக்கிற முடியளவுக்குக் கூட  உள்ளே ஒன்னும் கெடையாது. அடுத்த படிச்சிட்டு எங்கிட்ட வந்து லொள்ளு பண்ற.

ஏன்டா கடைக்கு வந்தமா நாலு சைக்கிள் வீலுக்கு பெண்டு எடுத்தமா? பெட்ரோமாக்ஸ் வாடகைக்கு விட்டமான்னு இருக்கனும். சும்மா வந்து ஃபேஸ்   புக்கு, ட்விட்டருன்னு லந்து பண்ணுற. அது சரி உன்னிய வச்சு நான் எங்க பெட்ரோமேக்ஸ் லைட்ட வாடகைக்கு உடுறது, போடா போய் அந்த பெயிண்டு மணடயனோட  போய் இளநி ஆட்டைய போடு.

போங்கண்ணே நான் இப்போ ரொம்ப திருந்திட்டேண்ணே.

அட இது பாருடா? யாரு சொன்னா?

நாந்தான் சொன்னேன்.

டேய்.......டேய் அந்த பேஸ்புக்கு,  ட்விட்டர் பக்கம் போயிடாதடா அப்புறம் அவனுங்க உன்னிய திட்டறுத்துக்கு எனக்கு புதுசா சஙகீசு, உ.பீஸு, ரரங்க, தொம்பீஸ், டம்ளர் பாய்ஸ், மாங்காஸ்,பஜனை பார்ட்டின்னு புதுசு புதுசா வார்த்தைங்க கொடுப்பானுங்க.

ஐயோ இன்னா சொல்றீங்கண்ணே?

டேய் அதுக்குதாண்டா உனுக்கு அட்வைஸ் பண்ண என்ன மாதிரி ஆள் இந்த ஆல் அழகு ராஜா வேணுங்கறது. டேய் வாழைப்பழ வாயா.....அதுக்குதான்டா இங்கிலீஷுல சொல்லுவாங்க.

IGNORANCE IS BLISS...ன்னு.  அது சரி அது உனக்கு எங்க புரியப்போகுது.....டேய் இதெல்லாம் தெரிஞ்சிக்காம இருக்கோணுமுடா...கோமுட்டி தலையா.





Follow kummachi on Twitter

Post Comment

Thursday 23 August 2018

கவிஞராவது எப்படி?

எல்லோருக்குமே கவிஞராக வேண்டும் என்ற ஆசை உள்மனதில் இருக்கும்? ஆனால்  ஒரு தயக்கமும் கூடவே இருக்கும். மேலும் அதை எழுதி பதிவிட்டால் யார் எப்படி எந்த திசையிலிருந்து வந்து துப்புவார்கள் என்ற பயமும் அடிவயிற்றை கவ்வும். பிரச்சினை இல்லை. அதையெல்லாம் களைந்து உங்களை ஒரு பிரபல கவிஞர் ஆக்குவதற்காகவே இந்த விசேஷ பதிவு.

சரி தயாரா?

முதலில் நாம் எந்த மாதிரி கவிதை எழுதவேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இந்த மரபு கவிதை, ஆம் அதே தான் அந்த பக்கம் தலை வைத்துக் கூட படுக்காதீர்கள். ஏன்னென்றால் அதற்கு மிகவும் தமிழ் இலக்கணம் அறிந்திருக்க வேண்டும். அதில் சீர் என்பார்கள், வெண்பா(நடிகை அல்ல) கலிப்பா, ஆசிரியப்பா, கொச்சகக்கலிப்பா (கொச்சச்சன் அல்ல), அறுசீர் விருத்தம் என்று ஆயிரம் வகை வைத்து அதற்கு இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, என்று ஏதேதோ சொல்வார்கள். அதெல்லாம் நமக்கு வேலைக்கு ஆகாது. நமக்கு குளித்தலைக்கு அப்பால் தெரியாது எதற்கு வம்பு.

அப்புறம் ஹைக்கூ, லிமெரிக் என்று  சில சற்றே எளிய வகைகள் உண்டு. முயற்சிக்கலாம். ஆனால் "L" போர்டு கவிஞர்களுக்கு சாலச்சிறந்தது புதுக்கவிதையே, என்று பட்டிமன்றத் தலைப்புப்போல வைத்துக்கொள்வோம்.

இந்த வகை மிகவும் எளிது.

திருச்செந்தூர் வேங்கட சுப்பன் கடலை மிட்டாய் திருடித்தின்றான். இதான் மேட்டர்.

இதைப் பின் வருமாறு எழுதினால் புதுக்கவிதை.

திருச்செந்தூர்
வேங்கட சுப்பன்
கடலை
மிட்டாய்
திருடித்தின்றான்.

சரி என்ன தலைப்பு எதைப்பற்றி எழுதலாம்? இந்த காதல், கத்திரிக்கா, இயற்கை வர்ணனை இதெல்லாம் போனியாகாது. அரசியல், பகுத்தறிவு, இந்த மாதிரி வைத்து எழுதினால் நல்ல மௌசு. ஆனால் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம். ஆனால் யாரைப்பற்றி எழுதுகிறீர்கள், ஜாதி,மத ஒழிப்பு என்றால் யாரை தாக்கணும் இல்லை யாரை தூக்கணும் என்று கொஞ்சம் பொது அறிவு அவசியம். நீங்கள் வெட்டுக்குத்து, இந்த கையெறிகுண்டு இதற்கெல்லாம் அஞ்சவில்லை என்றால் பாதகம் இல்லை, என்ன  வேணாலும் எழுதலாம். எதற்கு வம்பு நீங்க என்ன தாக்கி எழுதினாலும்  எருமை மாட்டு மேல மழை பெய்தாமாதிரி ரொம்ப நல்ல கூட்டம் ஒன்று இருக்கு, என்ன அடித்தாலும் தாங்கிக்கொள்ளும், அதுங்கள தாக்கியோ இல்லை உசுப்பியோ எழுதுங்க. சும்மா கொஞ்ச நேரம் குரைத்துவிட்டு ஓய்ஞ்சிடுவாங்க. இனி செய்முறைக்கு போவோம்.

கவிதையில் அங்கங்கு பகுத்தறிவு, திராவிடம், மூடநம்பிக்கை சம்பந்தப்பட்ட கருத்துக்களை மசாலா போல தூவணும். (ஆச்சி, சக்தி, என்று எந்த மசாலா என்பதை நீங்கதான் முடிவு செய்யணும்).

சரி அடுத்து வார்த்தைகள் தேர்வு மிக முக்கியம்.

காவி, பாவி, சீவி, என்று எகன,மொகனை வார்த்தைகள் ஒரு ஐம்பதை தேத்திக்க வேண்டும்.

இதற்கு தமிழ் மொழியில் நிறைய இருக்கிறது.

ஆத்தா, பார்த்தா, சேர்த்தா, வாத்தா
பாடு, ஓடு, தேடு, போடு
தடாய் , கடாய், விடாய்
கயிறு, வயிறு, மயிரு
ஜாதி, பீதி, பேதி
வாடி, போடி, பீடி,
தடி, அடி, கடி வெடி, மடி
செடி,பிடி
என்ன, வெண்ண, நொண்ண
 இது போல இன்னும் கொஞ்சம் வார்த்தைகள் தேத்திக்கணும்.
இந்த மாதிரி படங்களுடன் போட்டால் கவிதைக்கு அழகு சேர்க்கும்
இப்ப நீங்க கவிஞராகலாம்.

இத வெச்சி நீங்க கவிதையில் யாரை வேண்டுமென்றாலும் வேணாம் அவங்கள??? மட்டும் வச்சி செய்யலாம்.

இப்போ பதிவிடுங்கள் நீங்கள் அரை கவிஞர் ஆகிட்டீங்க. சொந்த பேரில் எழுதக்கூடாது. புனை பெயரில் எழுதவேண்டும். மறந்தும் உங்கள் பெயரில் ஜாதி மத சம்பந்தம் இருக்கக்கூடாது. இது ரொம்ப முக்கியம்,  ஏனென்றால் பிற்பாடு இது மிகவும் உதவும்.

ஆனால் வேலை இத்துடன் முடியவில்லை.

இதுக்கு உடனே எதிர் வினையாக நாலுபேரு வந்து பதிவிலேயும், முகநூலிலும் இல்லை தொலைபேசியிலும் வான்டடாக வந்து துப்புவான். ஆஹா வெட்டிடுவேன், தூக்கிடுவேன் என்று குரைப்பான். இப்போ கொஞ்சம் கைகாலெல்லாம் நடுங்கும் பயம் வேண்டாம். இப்போதான் முக்கிய வேலை ஒன்று பாக்கி உள்ளது.

உடனே நீங்க காவல்துறைக்கு முறையிடனும், அங்க இந்த கவிதையெல்லாம் வேலைக்கு ஆவாது.

அங்கே உரைநடைதான் செல்லுபடியாகவும். அதற்கும் சில வரைமுறைகள் உண்டு.

முதலில் உங்களது பெயரை முழுமையாக எழுதவேண்டும். அதில் ஜாதி மத விவரங்களை கோடிட்டு இதனால் தான் ஏன் மீது துப்புகிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும்.

பின்னர் எனக்கு ஒரு கண்ணில் புரை, ஒரு காது மந்தம், ஆறுவிரல், மூலம், காலில் ஆணி, போன்ற அங்க விவரங்களையம் உபாதைகளையும்  குறிப்பிடவேண்டும். அப்போதான்  எல்லோராலும் கவனிக்கப்பட்டு சே பாவம்யா!! இந்த ஆளு என்ற கருணை உணர்ச்சி துப்பினவனுக்கும் பிறக்கும்.

என்ன சரியா இப்போ நீங்க ஒரு பிரபல கவிஞர் ஆகிட்டீங்க. சும்மா கலக்குங்க.


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 22 August 2018

ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அவர்களுக்கு

ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அவர்களுக்கு

மனநிலை பாதிக்கப்பட்ட கும்மாச்சியும் கருணாநிதியும்.........என்ற தங்களது பதிவைப்  படித்தேன், மேலும் எனது பதிவின் பின்னூட்டத்தில் இட்ட கருத்தையும் வெளியிட்டு இருக்கிறேன்.

http://timeforsomelove.blogspot.com/2018/08/blog-post_21.html

நீங்கள் எனது மனநலம் குறித்து கொடுத்த அறிவுரைகளை மனதில் ஏற்றுக்கொள்கிறேன். எனது இறப்பை பற்றியும் பதிவிட்டிருக்கிறீர்கள் நன்றி. இறப்பு எனது கையிலோ அல்லது உங்கள் கையில்!!! இல்லை என்று நம்புகிறேன்!!!.

கலைஞருக்கும் எனக்கும் எந்த வாய்க்கா வரப்பு பிரச்சினைகள் இல்லை என்பதையும் இந்த நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும் நீங்கள் , கடந்த பத்துவருடங்களாக பதிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதில் பல தனிமனித தாக்குதல்களும்,  பதிவர்களின் மீது இன  வெறித்தாக்குதல்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களது பதிவுகளுக்கு எதிர் கருத்து தெரிவிப்பார் மீது பிரசுரிக்க தகாத வார்த்தைகளையும் உபயோகப்படுத்த தயங்கவில்லை. என்ன கெட்ட வார்த்தைகள் உங்களது கணிப்பில் ஆங்கிலத்தில் பதிவிட்டால் நாகரீகம் என்று சடுதியில் ஆங்கிலத்தில் "get the F*** out of here" என்று வெளிவிடுகிறீர்கள்.

உங்களது ஜாதி மற்றும் இன வெறி பதிவுகள் அமிர்தம் கக்குகிறது என்று நம்புகிறீர்கள்.

உங்களது வலைப்பூவில் உங்களது கருத்தை வெளியிடுகிறீர்கள் அது உங்களது உரிமை. அதற்காக உங்களை மனநலம் குன்றியவர் என்றோ இல்லை அந்த சமுதாயம் உங்களை வெகுவாக பாதித்தது என்றோ நான் அனுமானிக்கவில்லை.

 உங்களது பதிவுகளில் நிறைய எழுத்தாளர்கள் பற்றி எழுதி இருக்கிறீர்கள், குறிப்பாக தி. ஜானகிராமனை பற்றிய பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தது. நான் அவருடைய அத்தனை புத்தகங்களையும் சேர்த்து வைத்திருக்கிறேன். இருபது வருடகங்களுக்கு முன்பு "ஐந்திணை பதிப்பகம்" அவருடைய ஒரு சிறுகதை தொகுப்பை மறுபதிப்பு செய்ய என்ன அணுகியபொழுது என்னிடமிருந்த நகலை கொடுத்திருக்கிறேன்.

இந்த விஷயத்தில் நமக்குள் ஒற்றுமையை நான் உணர்கிறேன், அதே சமயத்தில் உங்களது பதிவுகள் அனைத்தும்  என்னுடைய கருத்துடன் ஒத்துபோகவில்லை என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் உங்களுக்கு தோன்றிய கருத்தை பதிவிடுகிறீர்கள். எதிர் கருத்துக்கு மாறாக நான் பின்னூட்டங்கள் இடுவதில்லை.

வாழ்க வளமுடன்.





Follow kummachi on Twitter

Post Comment

Monday 20 August 2018

அவரு பெரிய மனுஷன்!!!!

தலைவர் இறந்துவிட்டார். கல்யாண சாவுதான். பிள்ளைகள், பெண்கள்,  பேரன்கள், கொள்ளு பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேத்திகள் மாமன் மச்சான் மருமவன்கள் என்று எல்லோர் பேரிலும் சொத்து சேர்க்க வைத்து தனக்கு என்று ஒன்றும் இல்லாது ஆறடி நிலத்திற்கு நாயடி பேயடி பட்டு மண்ணுடன் மண்ணாக ஐக்கியமாகிவிட்டார்.

அவருடைய வாழ்க்கை வரலாறு அவரது கட்சி சார்ந்த தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவரது பழைய பேட்டி ஒன்று நினைவிற்கு வந்தது.

பத்து இருபது வருடங்களுக்கு முன் அவர் பலகாலம் வனவாசத்திற்கு பின் கோட்டையில் (கோ)கொடியை நாட்டினார். அப்பொழுது பிரபல வார பத்திரிகை ஒன்று அவரின் அன்றாட நிகழ்வுகளை அவரிடமிருந்து பேட்டியாக பெற்று பதிவிட்டு இருந்தார்கள்.

அவர் முதல் நாள் இரவு துணைவியார் வீட்டில் படுக்க செல்வாராம், காலையில் எழுந்தவுடன் கட்சி அலுவலகத்தில் ஒரு மணி நேரம் நடை பயிற்சி. பின்னர் மனைவியின் வீட்டில் இட்லி மீன் கொழம்பு சகிதம் நாஸ்தா. பிறகு கோட்டைக்கு சென்று கோப்புகளை பார்வையிடுவார். மதியம் துணைவியார் வீட்டில் அறுசுவை மதிய உணவு. மறுபடியும் கோட்டையில் குப்பை கொட்டுவது. இரவு உணவிற்கு மனைவி கையால் அறுசுவை. அடுத்த நாள் காலையில் துணைவியார் வீட்டில் நாஸ்தா என்று ஒரு அட்டவணை போட்டு ஓயாமல் உழைத்து கூவம் நதிக்கரையில் ஓய்வெடுக்கும் அளவிற்கு வாழ்ந்திருக்கிறார்.

ஏனோ இந்த பேட்டி நினைவிற்கு வர மனைவியிடம் இதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.

அவர் பெரிய மனுஷன், ஒரே பெண்ணை தொந்தரவு செய்யாமல் எப்படி அட்டவணை போட்டு வாழ்ந்திருக்கிறார். யோவ் நீயும் இருக்கியே, எப்ப பாரு ஒரே ஆளையே ரப்ச்சர் பண்ணிக்கினு...........நம்மகிட்ட ஒரு ரிவர்ஸ் ஸ்விங்...

அடியே அடியே இப்ப சொல்லுவையே!!! இதையே ஒரு முப்பது வருடம் முன்பு சொல்லியிருந்தால்..............நானும் துணைவி, இறைவி, எடுப்பு, தொடுப்பு என்று வேலைக்கு  ஒரு வீட்டில் உண்டு கொழுத்திருப்பேன்.

இந்த தங்கமனிகளை அந்த பிரம்மனே வந்தாலும்.............ஹூஹூம் வேலைக்கு ஆவாது.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 14 August 2018

கலக்கல் காக்டெயில்-188

சந்து (ட்விட்டர்)

நீங்கள் சந்து வாழ் மனிதரா, நகைச்சுவை உள்ளம் உள்ளவரா? நாயே பேயே என்று திட்டினாலும் மற்றும் சாதிரீதியாக உம்மை வசை பாடினாலும் உணர்ச்சி வசப்படாதவரா? அப்ப சந்தில் வரும் கீச்சுகளை படித்தால் உங்கள் கவலை மறந்து சிரிக்கலாம். அதுவம் சமீபத்திய ட்விட்டரில் வரும் அரசியல் சார்ந்த கீச்சுகள் நகைக்க வைக்கின்றன...........சில அல்சர் ரகம்.

சீமான் கலைஞரிடம் கொண்ட பழக்கத்தை "அவர் சட்டை பையில் இருக்கும் பேனாவை எடுத்து எழுதிவிட்டு வைக்கும் அளவு பழக்கம் இருந்தது என்று சொல்லப் போக..........ஒரு கீச்சர்........

சீமான் சொல்வது போல............."எனக்கும் தலைவருக்கும் பிரபாகரனுக்கும் உள்ள பழக்கம் எப்படி என்றால் அவர் கழுத்தில் வைத்திருக்கும் சயனைட் குப்பியை எடுத்து இரண்டு சப்பு சப்பிவிட்டு வைக்கும் அளவுக்கு நெருக்கம்  இருந்தது".

அடுத்தது கலைஞர் கல்லறையிலிருந்து மகன் ஸ்டாலினுக்கு எழுதும் மடல்.

மகனே இந்த வைரமுத்து எதையோ கிறுக்கி எடுத்து வந்து கவிதை என்று பாடி தலையை சொறிவான்.

பத்து ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டாம்.......அப்பா அதைத்தான் கொடுப்பேன்.

பின் குறிப்பு: அதையும் அருகிலிருப்பவரிடம் இருந்து எடுத்து கொடுத்தால் நலம்.

போடு தகிட தகிட...

இது தர்ம யுத்தம் காலம் போல.....இன்று மெரீனாவில் இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கியது என்பதுதான் இன்றைய ஊடகங்களின் ஸ்கூப்.......

அஞ்சா நெஞ்சன் இன்று கலைஞர் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. தன்னுடைய ஆதங்கங்களை கலைஞரிடம் சொன்னதாகவும், மேலும் தி.மு.கவின் தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாகவும் கூறி இன்று  நடக்கவுள்ள செயற்குழு கூட்டத்தில் குண்டை வைத்து விட்டார்.

ஏற்கனவே ஒரு தலை மறைந்தவுடன் ஒரு கட்சி சின்னா பின்னப்படுத்தப்பட்டது. இப்பொழுது இன்னும் ஒரு பெருந்தலை மறைந்தவுடன் அடுத்த வேலை ஆரம்பம்.

யாரந்த சூத்திரதாரி? காலம் பதில் சொல்லும்.

போடு தகிட தகிட...........ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ? பதவி ஆசை எனும் தொட்டிலிலே..........ஆடாதாரோ?

ரசித்த கவிதை 

இவன் ஒரு வம்பன் ,
இரண்டு நாய் தெருவிலே
இன்புற்றிருந்தால் பிடிக்காது
பொல்லை கொண்டு அடித்தோ.. 
கல்லை தூக்கி எறிந்தோ.. 
கண்ணில் படும் போதெல்லாம்
கலைத்துவிடுவான் காத தூரம்..!

வாயில்லா ஜீவன் அது
வம்பனை காணும்போது
வாலை சுருட்டிக்கொண்டே ஓடிவிடும்,
வாய் மட்டும் இருந்திருந்தால்
"பாடையில போவானே" எண்டு
வஞ்சிக்கும் இவனை கண்டு.., 

நாட்கள் நகர்ந்த ஒருநாள்
வம்பன் வரும் வழியில்
வாலை மடித்து துஞ்சிக்கிடந்த நாய்
வசதியாய் போச்சு இவனுக்கு, இருந்தும்
வம்பனுக்கு ஒரு சந்தேகம்
வாலும் ஆடவில்லை - அதன்
வாயும் அசையவில்லை
வருத்தத்தில் செத்திருக்குமோ..! 

முடிவு செய்துகொள்ள , அதன்
மூக்கு மேல விரலை வச்சான்
மூச்சு வருதா ..?

அவன் எதிர்பார்க்கவில்லை; 
அடுத்த நொடியிலே
"அவ்" என்று ஒரு கடி..,
அத்தனை நாள் ஆத்திரமும்
மொத்தமாய் சேர்த்து வச்சு.!

பாவம் வம்பன் ,
மூக்கு மேல வச்ச விரலில்
மூணு பல் ஆழமாய் - இப்போ
ஆசுப்பத்திரிக்கு போய் வாறான்..,
அஞ்சு ஊசி போட்டாச்சாம்
அடுத்து வரும் நாட்களில்
மிச்சம் இருபத்தி ஆறு..!


நன்றி: மதுரை மைந்தன்

சினிமா

கஜினிகாந்த்...................

ஆர்யா.............சாய்ஷா...





Follow kummachi on Twitter

Post Comment

Monday 13 August 2018

பொது அறிவு?

வாழ்க்கைக்கிற்கு பொது அறிவு மிக அவசியம். எல் .கே.ஜி தொடங்கி ஆணி பிடுங்கப்  போகும் வரை நம் வாழ்விற்கு பொது அறிவு தேவை. ஆதலால் நீங்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிந்திருப்பது அவசியம், இது ஒரு மாதிரி!!!!... வினாத்தாள் தான்.

அமெரிக்காவை கண்டு பிடித்தது யார்?
நீராவி எஞ்சினை கண்டுபிடித்தது யார்?
உழவர் சந்தை கொண்டு வந்தது யார்?
கணினியை கண்டு பிடித்தது யார்?
இணையத்தை நமக்கு கொடுத்தது யார்?
அண்ணா அறிவாலயம் கட்டியது யார்?
சமச்சீர் கல்வி கொண்டு வந்தது யார்?
தொல்காப்பியருக்கு தமிழ் ஆசான் யார்?
திருவள்ளுவருக்கு சிலை வைத்தது யார்?
அரசியல் சாணக்கியர் யார்?
தாஜ்மகாலை கட்டியது யார்?
கத்திப்பாரா பாலத்தை வடிவமைத்தது யார்?
செம்மொழி மாநாடு நடத்தியது யார்?
தமிழ் ஈழம் கண்ட தலைவர் யார்?
பகுத்தறிவுத் தந்தை யார்?
ஃபியூஸை பிடுங்கியது யார்?
புல்டோசர் விட்டது யார்?
தொலைபேசியைக்  கண்டுபிடித்தது யார்?
சீனப் பெருஞ்சுவர் கட்டியது யார்?
சமூகநீதி காத்தவர் யார்?
ஊழலின் தந்தை யார்?
சிலப்பதிகாரம் செய்தது யார்?
மனைவி,துணைவி, இறைவி என்று இலக்கணம் வகுத்தவர் யார்?
தஞ்சை பெரியகோவிலை கட்டியவர் யார்?
கட்டுமரத்தைக் கடலில் விட்டது யார்?
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்?
இறந்தும் போராடியத்  தலைவர் யார்?
நிலவிற்கு ராக்கெட் விட்டது யாரு?
அணு!!!!வை கண்டு பிடித்தது யார்?
ஐ.நா வைக் கட்டமைத்தது யார்?
சரித்திர நாயகன் யார்?
திராவிட தலைமகன் யார்?


இன்னும் போல ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு விடை தெரியவில்லை என்றால், நீங்கள் ஒன்று உலக்கைக்கு பிடிக்காத "நூலை" வைத்திருக்க வேண்டும், இல்லை அந்த கூட்டத்தின் அடிவருடியாக இருக்க வேண்டும்.

மேற்கொண்ட கேள்விகளுக்கு விடை ஒன்றே தான்............உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்கள் கீழ் கண்டவர்களை அணுகினால் பொது அறிவு பெற்று வாழ்க்கையில் சீரும் சிறப்பும் பெறுவீர்கள்.

பிரியாணி கடையில் பாக்ஸிங் செய்து பிரியாணி பிடுங்கும் கூட்டத்தில் யாரை வேண்டுமானாலு அணுகலாம்.
இணையத்தில் உ.பி.  போராளிகளை அணுகலாம். இவர்களை இனம் கண்டுகொள்வது எளிது. (எனது முந்தைய பதிவில் இந்த அறியத் தகவல் உள்ளது).
மேலும் சமீபத்தில் மெரீனா சென்றால் நீங்கள் கேட்கவே வேண்டாம் தன்னாலேயே விடை கிடைக்கும். ஆனால் இந்த சலுகை இன்னும் சில நாட்கள் மட்டுமே. முந்துங்கள்.




Follow kummachi on Twitter

Post Comment

Saturday 11 August 2018

சமூக வலைத்தளங்களில் "உ.பீ "ஸ்

நீங்கள் வலைத்தளங்களில் வரும் செய்திகளையும் நிகழ்வுகளையும் கவனிப்பவர்கள் என்றால் சமீபத்தில் உ.பீஸ்களின் உண்மை முகங்களை தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான பதிவுகள் அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டிருக்கும் நடிகரை கிண்டலடித்து வரும் பதிவுகளாக இருக்கும். மேலும் அவரது வரவை கண்டு நடுங்கி அஞ்சுவதை பறையடித்து காட்டும்.


மற்றுமொரு கூட்டம் மறைந்த தலைவர்தான் தமிழை வளர்த்தார் அவரது மறைவுக்குப் பின் தமிழ் இனி விரைவில் சாகும் என்ற ரேஞ்சில் ஒரேயடியாக ஜல்லியடிப்பார்கள். அப்போ இந்த கம்பர், வள்ளுவர், அவ்வையார் என்ற சங்ககால புலவர்கள், மற்றும் தேவநேயப்பாவாணர், பாரதி, பாரதிதாசன், போன்ற இந்த கால தமிழ் தொண்டு ஆ ற்றியவர்கள்  எல்லாம் என்ன தமிழை வளர்க்காமல் வெட்டினார்களா? என்ற கேள்விகளை நீங்கள் கேட்டால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரும். "பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைத்த வஞ்சகர்கள்" என்ற எதுகை மோனை வகையறாவை சிலாகிக்கும் தமிழ் மீது ஆர்வம் கொண்ட  அறிவுஜீவிகள்.

மற்றுமொரு பிரிவினர். இவர்கள் நடுநிலைவாதிகள் என்ற போர்வையில் வருவார்கள். தங்களது கட்சியின் ஆட்கள் மீது உள்ள வழக்குகளை போலி வழக்கு என்று முதலில் ஆரம்பிப்பார்கள். பின்னர் நீதிமன்றத்தில் சென்று "நீதி வென்றது" என்று பினாத்துவார்கள், தோற்று குற்றவாளி என்று நிரூபணமானால் நீதியரசர்களின் ஜாதியை ஆராய்ந்து பீராய்ந்து தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதே எதிர்க்கட்சி ஆட்களின் வழக்குகளோ அல்லது அவர்கள் எதிர்க்கும் ஜாதிகளின் வழக்குகளை பற்றி செய்தி வரும்பொழுதே இணையத்திலேயே வழக்கை நடத்தி "திருடன், கொலைகாரன்" என்று தீர்ப்பு எழுதி தண்டனையும் தந்து விடுவார்கள்.

மற்றுமொரு வகை,பெரியார் பகுத்தறிவு, அண்ணா கொள்கைகள் என்று சமூக நீதி காக்க வரும் கோமான்கள். இந்த வகை ரொம்ப ரசிக்கத்தக்கவை. பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்று வாய்கிழிய, மன்னிக்கவும்  வலைத்தளம் கிழிய பதிவிட்டு பெருமாள் கோவில் மணி அடித்தவுடன் "உண்டகட்டிக்கி" முதலில் கை  நீட்டுவார்கள். அவர்கள் வீட்டு விசேஷங்களில் பகுத்தறிவை வாசலியேயே நிற்க வைத்து எச்சிலை பொறுக்க விடுவார்கள். இதில் பெரும்பாலான வகை "நூல் பொறுக்கிகள்" என்று புலம்பி இணையத்தில் பதிவிட்டு சுய இன்பம் அடையும் நச்சுக்கூட்டம். இவர்கள் பெரியார் கொள்கைகளு ம் தெரியாது, அண்ணாவின் கொள்கைகளும் தெரியாது. "தொம்பிகளுக்கு" சவால் விடும் வெற்றுக்கூட்டம்.

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் டாஸ்மாக்கு, குவாட்டர், பிரியாணிக்கு பாக்ஸிங், தலைவர்களுக்கு அடிவருடி தெருவில் நிற்பது, அப்பாவிகளை உயிரோடு எரிப்பது, அடிதடி மேலும் முக்கியமாக அருமை தமிழில் உள்ள அத்துணை கெட்டவார்த்தைகளையும் புதுப்புது பொலிவோடு இணையத்தில் பரப்பி பேரானந்தம் அடையும் பெரியோர்கள் சான்றோர்கள்.

நீங்க இப்படியே இருங்க, அப்பொழுதுதான் உங்க தலைவர்கள் உங்களை உபயோகித்து அவர்களது வியாபாரத்தை பெருக்கமுடியும்.



Follow kummachi on Twitter

Post Comment

Friday 10 August 2018

மறைந்த சூரியன்

கலைஞரின் மரணம் தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒரு பேரிழப்பு என்றால் அது மிகையாகாது. கடந்த என்பது வருடங்களாக பொது சேவையிலும், கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் அரசியலிலும் கோலோச்சியவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை தேர்ந்தடுக்கப்பட்டவர், சட்டசபை தேர்தல்களில்  தோல்வியையே சந்திக்காதவர் என்ற பெருமைக்குரியவர். தமிழக அரசியலில் கலைஞரின் பங்கு அளப்பரியது, அது பதவியிலிருந்தாலும் சரி இல்லையென்றாலும் அவரின் இருப்பு தமிழகத்தில் எப்பொழுதும் உணரப்பட்டிருந்தது. ஒரு பெரிய கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பு அவ்வளவு எளிதல்ல, எல்லாவற்றையும் அவர் திறமையாக செய்தார். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்.

கடந்த சில வருடங்களில் தமிழகம் இரண்டு பெரிய ஆளுமையை இழந்திருக்கிறது. இனி தமிழக அரசியல் இந்த இரண்டு தலைவர்கள் இல்லாமல் எந்த பாதையில் செல்லும் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

கலைஞரின் மரணத்திற்குப் பின் தி.மு.க வின் செயல்பாடு எப்படி இருக்கும்?, கட்சியின் நிலைமை என்னவாகும்? என்பதெல்லாம் காலத்தின் கையில் உள்ளது. அவரின் உண்மையான தொண்டர்கள் அதை செவ்வனே செய்வார்கள் என்று நம்புவோம்.

அவரின் மரணத்திற்கு பின் சமூக ஊடகங்களில் நடந்த செயல்கள் சத்தியமாக அவருக்கு புகழ் சேர்க்காது. அவரது உடல் அடக்கம் செய்யவேண்டிய இடத்தை நிர்ணயிப்பதில் நடந்த குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதை வைத்து செய்யப்பட்ட கேலிகளும், ஜாதி விரோதங்களும் தமிழர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. ஆனால் இங்கு யார் தமிழன் என்பதிலே ஒரு பெரிய குழப்பமே இருக்கும் பொழுது ஒற்றுமையை எதிர்பார்ப்பது அறிவீனம்.

கலைஞர் தனது மரணத்தில் தமிழ் சமுதாயத்திற்கு எத்தனையோ செய்திகளையும் சிந்தனைகளையும் உணர்த்திவிட்டு போயிருக்கிறார். ஆனால் நமது சமுதாயம் அதை சிலாகிப்பார்கள் பின்பற்ற மாட்டார்கள்.


Follow kummachi on Twitter

Post Comment

Sunday 24 June 2018

டீ வித் முனியம்மா சீசன்- 2(4)

எண்டே முனிம்மா எந்து பட்டி......

டேய் மீச பட்டி கிட்டின செவுலு திரும்பிடும்.

ஐய முனிம்மா இன்னா நூசுன்னு கேக்குறான் நீ சூடாயிட்ட.

சரி மீச அல்லாருக்கும் சாயா போடு...

இன்னா பாய் பெருநாள் நல்லா போச்சா

அஹான் முனிம்மா? இன்னா நீ வூட்டாண்ட வரல, நல்ல பிரியாணி செஞ்சு வச்சு உனுக்காக காத்துக்கிட்டு இருந்தோம்.....

எங்க பாய் அன்னிக்கி கடையாண்ட ஒரே கூட்டமா நவுரவே முடில.

சரி முனிம்மா ஊரு நடப்பு, நாட்டு நடப்பு அல்லாம் எப்படி கீது?

அத்தே ஏன் கேட்குற லிங்கம் சாரு? தெனிக்கும் ஒரு போராட்டம் நடத்திகினு கீறாங்க? ஜெனங்க ஒரு போராட்டம் நடத்திகினா? எதிர் கட்சி ஒரு சால் சாப்பு சொல்லிகினு தெனிக்கும் வெளிநடப்பு செஞ்சுகின்னு கீறானுங்க?

மெய்தான் முனிம்மா, சேலத்துக்கு போறத்துக்கு புச்சா ரோடு போடுறேன்னு பத்தாயிரம் கோடி எடுத்துகினு வந்தானுங்க, ஜெனங்க விவசாய நெலம் கொடுக்க மாட்டேன்னு தகராறு பண்ணிகிறாங்க, நியாயம்தானே?

ஆனா நீ பாரு முனிம்மா அல்லாரையும் துட்டு கொடுத்தே செட்டப் பண்ணிடுவானுங்க.........இதெல்லாம் நடக்கிறதுதானே.

அது கரீட்டு நாடார்? அப்பால மதுரையாண்ட ஆசுபத்ரி கொண்டாரப் போறாங்கலாம்?

அதுக்கும் தகறாரு பண்ணுவானுங்க? அல்லாம் துட்டு செய்யுற வேல!!

சரியா சொன்ன பாய், ஆசுபத்ரி கொணாந்தா, இட்லி வேவாது, பப்பு வேவாது, சால்னா துன்ன முடியாதுன்னு சொல்லி கொடி பிடிச்சு கூவிட்டு சரக்கு அடிச்சு மட்டையாய்டுவானுங்க.

முனிம்மா செயலு.....ஸ்ரீரங்கம் போயி யாகம் செஞ்சிகினாராமே?

ஆமா லிங்கம் சார், அதெல்லாம் நல்லா செய்வாங்க, சொம்மனாங்காட்டி பகுத்தறிவு, பெரியாரு.........அண்ணா திராவிடம்னு அப்பப்ப ஓட்டு பிச்சைக்கு அவுத்துவுடுவானுங்க?

அது ஏன்? முனிம்மா?

டேய் லோகு அப்பத்தான் மத்த மதத்துக்காரன் குஜாலா இருப்பான், நமக்கு ஒட்டு உயுமுன்னு இன்னுன் நம்பிகினு கீறானுங்க?

சரி இன்னா புது பட போஸ்டர் உட்டதுக்கு ஏதோ தகராறு செஞ்சுகினுகிறாங்க?

அது ஒன்னியும் இல்லடா செல்வம், போஸ்டருல ஈரோ சுருட்ட வாயில வச்சிகின்னு போஸ் கொடுத்துகிராறு.

ஆமா அதுக்கு இன்னா இப்போ?

அடப்போடா லோகு, அத்த கண்டு நம்ம குட்டி மருத்துவரு வயக்கம் போல இதெல்லாம் நல்ல இல்லன்னு சொல்லிகிறாரு.

ஆமா அவரு வயக்கமா சொல்றதுதானே? நல்லத்துக்கு தானே சொல்றாரு?

அடேய் செல்வம் அது உனுக்கு புரியுது? ஆனா ஈரோக்கு பாலூத்தி பிகில் அடிக்கிறானுங்களே ஒரு கூட்டம் அவனுங்களுக்கு அது புரியுமா?

இன்னா சொல்றாருனுங்க?

அவுக ஈரோ குடிக்கிற சுருட்டு ஒசத்தியான், ரொம்ப துட்டாம்? அது குடிச்சா கேன்சர் வராதாம்?

ஏன் முனிம்மா அதுல இஞ்சி, அதிமதுரம், அசுவகந்தா, குப்பைமேனி, கீழாநெல்லி அல்லாம் வச்சி இஸ்குறாரா?

அது தெரியாது? ஆனா அதுக்காக "லவ்பெல்ல" செமையா கலாய்க்கிரானுங்க. எவனோ ஒரு பையன் டாஸ்மாக் சரக்கடிக்கிரத போட்டு லவ்பெல் பையன் சர்க்கடிக்கிறான், அவுன மொதலா திருத்த சொல்லு அப்பால எங்க தளபதியாண்ட வரலாம்னு ஒரே மெர்சல்.

ஐய முனிம்மா அந்தாளுக்கு மூனும் பொண்ணுதானே, பையனே கெடியாதே?

டேய் லோகு அது ஊருக்கே தெரியும்? இவனுக ஒரு தனி கூட்டமடா?  ஒன்னியும் தெரியாது? அவனுக அவருதான் டாப்பு, மத்தவன எல்லாம் கெட்ட வார்த்தையிலேயே திட்டுவானுங்க? அவனுக திட்டசொல்ல சொறிநாய் கூட குறுக்க ஓடாது?

இந்த பேஸ்புக்கு, ட்விட்டர் பக்கம் பாரு ஒரே கலீஜா ஆக்கி வச்சிருப்பானுங்க.

கரெட்டு லிங்கம் சாரு. அத்த ஏன் கேக்குற? நேத்து  கோயம்பேடு பக்கம் போவ சொல்ல ரோகினி தியேட்டராண்ட ஒரு கலாட்டா? அதேதான் வயக்கம் போல இவன் ரசிகனுக்கும் அவன் ரசிகனுக்கும் அடிச்சிகினானுங்க? அப்பால ட்விட்டர்ல வந்து கெட்ட வார்த்தையிலே அடிச்சிகிரானுங்க!!

இவனுங்க திருத்த மாட்டானுங்க

இந்த வாரம் இன்னா புது படம் வந்துகுது?

டேய் செல்வம் "டிக் டிக் டிக்" டா, இன்னும் நீ பாக்கலையா?









Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 19 June 2018

கலக்கல் காக்டெயில் - 187

கண்ணாத்தா கொள்ளையடிச்சுதா?

கண்ணாத்தா கொள்ளையடிச்சுதுன்னு தீர்ப்பு சொன்ன குன்ஹாவை எப்படி எல்லாம் வச்சு செஞ்சீங்க அடிமைஸ்......இப்போ ஆத்தா கொள்ளைடிச்ச பணத்தைதான் தினகரன் பதினெட்டு அல்லக்கைகளுக்கு கொடுத்ததா ஒரு டயர் நக்கி வாக்கு மூலம் கொடுக்குது, டேய் என்னங்கடா இது? அதாலதான் கடைசிவரைக்கும் உங்கள் டயர் நக்க வச்சுது. அந்தம்மா கடைசி வரைக்கும் ரெண்டு இட்லி சாப்டுச்சா? சட்னி வச்சாங்களா? குலாப்ஜாமூன் சாப்டுச்சா? இல்லை ஐஸ் கிரீம்தான் சாப்டுச்சா? தெரியாமயே அடக்கம் பண்ணிட்டு இப்போ அவனவன் அத்த கழுவுல ஏத்தறான்!!

எல்லோரையும் காலில விழ வச்ச ஒத்த ரோசா காலோட போச்சா காலில்லாம போச்சான்னு விசாரணை கமிஷன் வச்சு நல்ல வச்சு செயுரானுங்க?

வெற்றிடம்னு சொன்னவரையும் வச்சு செய்யுறானுங்க!!

நல்ல இருங்கடே!!!!

பிக் பாஸ் 

பிக் பாஸ் டூவாம்! பொன்னம்பலம், ஆனந்த வைத்யநாதன், தாடி பாலாஜி, யாரோ மகாத்தான், ஜனனி, யாஷிகா, நித்யா, இன்னும் சில சில்லறைகளை "உலக்கை" எறக்கி இருக்கிறார்.

பிக் பாஸ் அசிங்கம், யாஷிகா அசிங்கம், பொன்னம்பலம் அசிங்கம், தாய் கிழவி அசிங்கம், மலையெல்லாம் பெண்டத்தால் வாசனை, எல்லாம் அசிங்கம், அபிராமி சீ, ஓவியா ஓவியா, அப்பப்போ மானே தேனே எல்லாம் போட்டுக்கணும்.

சீ இந்த பிக் பாஸ் அசிங்கம்............பிக் பாஸ் அசிங்கம்...........

ரசித்த கவிதை

ஆதி நிறம்!

நேற்று சில நட்சத்திரங்களைக்
கடந்து செல்லக் கிடைத்தது
கடந்து செல்லும்போது
சில மலைகளையும்
சில மேகங்களையும்
கடந்து செல்லவேண்டியிருந்தது
யார் யாரோ யோசிக்கலாம்
இப்படிக் கடந்து செல்லும்போது
நான் யாரென!
நான் பறவை என்பதா
நான் காற்று என்பதா

ஆழத்தின் அறிதலை
மனப்பேழை நிரப்பி
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்
சில நேரம்
குகை ஒன்றுக்குள்
ஓவியமாய் இருக்கிறேன்
சில நேரம்
ஆதி நிறத்தின்
வண்ணமாய் இருக்கிறேன்
சில நேரம்
சலனங்களைப் பருகிய
பெருங்கடலாய் இருக்கிறேன்
நான் யார் என்பதை
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்
உங்களது ஒவ்வொரு முடிவிலும்
காலத்தையும் வாழ்வையும்
கடந்து செல்கிறேன் நான்.


- சாமி கிரிஷ்

ஜொள்ளு 



Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 12 June 2018

"பெத்த பாஸு"லுவும், "புஸ்வரூபமும்"

பெத்த பாஸ் ஒன்று முடிந்து இப்பொழுது இரண்டாம் பாகம் அடுத்த வாரத்திலிருந்து தொடக்கமாம். இந்த முறையும் "உலக்கை" தான் தொகுத்து வழங்குகிறாராம். இந்தமுறை ஒரு ஓவியா இல்லையாம் பல ஒவியாக்கள் இருப்பாங்களாம், சொல்கிறார்.

போனமுறை ஒரு ஐம்பது நாட்கள் வரை அப்படி இப்படி பார்வையாளர்களை வரவைக்க எத்தனையோ தகிடுதத்தம் செய்தார், போறாததற்கு கூகிளில் வாக்குப்பெட்டி வைத்து "ஒட்டு" என்று சூடேற்றினார்கள். பார்வையாளர்களை கவர ஓவியா, ஆரவ்,  மருத்துவ முத்தம் என்றும், "ரோமரிஷி" காயத்ரி, ட்ரிக்கர் ஷக்தி, "வாய்புரி" நமீதா, மெண்டல் ஜூலி என்று ஜல்லியடித்தார்கள். ஆனால் ஓவியா "எஸ்" ஆனவுடன் நிகழ்ச்சி புட்டுக்கொண்டது. எவ்வளவோ வாய்புரி அங்கிளும், கணேஷ் வெங்கட்ராமும் முட்டுக்கொடுத்தாலும் பிந்து மாதவி, சுஜா வாருணி எல்லாம் வேலைக்காகவில்லை. இருந்தாலும் நூறு நாட்களை எப்படியோ எட்டிப் பிடித்தார்கள்.

இந்த முறை இரண்டாம் பாகம் தொடக்கம், முன்னோட்டம், என்று உசுப்பிவிட்டு "புஸ்வரூபம் 2"  ட்ரைலர் விட்டு கல்லா கட்டப்பார்க்கிறார். ட்ரைலரில் "தேச துரோகி"  என்று பன்ச் அடித்து யாரை தூண்டவேண்டுமோ அவர்களை தூண்டிவிட்டு ப்ரமோஷன் வேலையை தொடங்கிவிட்டார் ஆழ்வார் பேட்டையார். இந்த வசனத்திற்கு மெதுவாக எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது. இந்த தாழ்வு நிலையானது, வலுப்பெற்று புயலாக மாறி "போராட்டம்" "நான் நாட்டை விட்டே ஓடிடுறேன்" என்று மேலும் வலுப்பெற்று சூறாவளியாக மாற அதிக வாய்ப்புள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

பெத்த பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே  "நசரத்பேட்டில்" உள் வீட்டு(நாட்டு) சண்டையும், "பன்ச்" புஸ்வரூபம்  எடுத்து  வெளிநாட்டை கைப்பற்றி தடியடி, முற்றுகை, என்று கொழுந்துவிட்டு எரிய எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே!!!!!

நடக்கட்டும்.


Follow kummachi on Twitter

Post Comment

Sunday 10 June 2018

காலா-----என் பார்வையில்

ந்த பதிவு நான் இந்த வாரம் கண்ட தமிழ் திரைப்படம் "காலா" பற்றியது. இது அரசியல் பதிவு என்று இங்கு வரும் "குபீர்" போராளிகள், உ.பி.ஸ், சங்கீஸ், மங்கீஸ், மற்றும் ஒரு சில அக்கிரமங்களை மட்டுமே கண்டு பொங்கி, தினம் பொங்கல் வைக்கும் முக நூல் வாசிகள், தயவு செய்து பொத்திக்கொண்டு அடுத்த பொட்டிக்கு போயி பொங்கல் வைக்கலாம். மேலும் முக்கியமாக பின்னூட்டம் இட அண்டாவில், இல்ல அண்ட்ராயரில் ஒளிந்து வரும் "அனானிகள்" கொண்ட தெரியுது, நூல் தெரியுது என்று  துப்ப வேண்டுமென்றால் உங்கள் வீட்டு குப்பை தொட்டியில் துப்பிக்கொள்ளவும்.

இனி காலா..........

முதலில் பா. ரஞ்சித்திற்கு ஒரு பாராட்டு, கதைக்களம் ஒரே வரி "எனது நிலம் எனது உரிமை" என்பதை  வைத்து அதை நேர்த்தியாக கதை சொன்ன விதம். மேலும் ரஜினி என்ற மாபெரும் கலைஞனை அவரது பாட்ஷா, படையப்பா சிறையிலிருந்து மீட்டு கபாலியிலும், காலாவிலும் அவரது "முள்ளும் மலரும்" "ஆறிலிருந்து அறுபதுவரை" போன்ற பலபரிமான நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்கு மற்றுமொரு ஒரு சபாஷ். திரைக்கதைக்கு உதவியாக "ஆதவன் தீட்சண்யா", வசனம் மெருகேற்றலில் "மகிழ்நன்". நல்ல கூட்டணி. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் கருத்துக்களையும், தற்கால அரசியல் அவலங்களையும்  பிரச்சார நெடி இல்லாமல் உரைப்பதில்  ரஞ்சித் சாதாரண கதாசிரியர்களிடமிருந்து விலகி நிற்கிறார்.

காலாவில் ரஜினிக்கு வித்தியாசமான அறிமுகம் . எஸ்.பி.பி குரலுடன் "ஒருவன் ஒருவன் முதலாளி, ஆட்டோக்காரன்" என்று வழக்கமான என்ட்ரி தவிர்த்து "காலா ரெண்டு ரன் தான் வேணும், நீ சும்மா தட்டிட்டு வா, ரெண்டு ரன் ஓடிடலாம்" என்ற சிறுவனின் அடவைசை கேட்டு கேமரா பார்த்து "இப்ப பாரு எங்க ஆட்டத்த" என்று சவால் விட்டு ஏதோ என்று சிக்ஸ் அடிக்கப்போகிறார் என்று நினைத்தால் கிளீன் போல்ட் ஆகிறார். அதற்குப் பிறகு அவர் தோன்றும் ஒவ்வொரு சீனிலும் நடிப்பில்  சிக்ஸ் அடிக்கிறார். ஜீப்பில் உட்கார்ந்து வரும் தோரணையிலேயே "எமராஜ்" காலனை கண்முன் நிறுத்துகிறார். ஆமா குமாரு........யாரு இவரு.........என்று மந்திரியை நக்கலடிக்கும் விண்டேஜ் ரஜினி, நானா படேகரிடம் "நான் இன்னும் உன்ன கெளம்பச் சொல்லலையே" என்று கெத்து காட்டுவதும், என்ன "உன்னால கொல்ல முடியாது வேணுமென்றால் முதுகுல குத்திக்கோ" என்று நக்கலடிப்பதும் ரஜினி அட் ஹிஸ் பெஸ்ட். ஸ்டைலு, ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்று எந்தப் பிச்சிலும் செஞ்சுரி அடிக்கும் அதிரடி நாயகன். கடந்த பத்து வருஷமாகவே இவர் திரைப்பட வாழ்க்கை முடிந்தது என்று கூறிக்கொண்டு குப்பை கொட்டுபவர்களுக்கு வழக்கம் போல அவர்கள் வயிற்றில் நெருப்பு அணையாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

திலீப் சுப்பராயனின் அந்த மழை சண்டை காட்சி சூப்பர்.

சந்தோஷ் நாராயணன் பாடல்கள் சுமார் ரகம்தான், ஆனால் பி.ஜி.எம் வழக்கம் போல மிரட்டல்.

படத்தின் ஆர்ட் டைரெக்டர் டி. ராமலிங்கத்திற்கு ஒரு தேசிய விருது பார்சல், தாராவியை அவளவு தத்ரூபம்மாக அமைத்ததற்கு, அதுவும் அந்த டாப் ஆங்கிளில் தாராவி அமர்க்களம்.


வழக்கமான ரஜினி படமாக இருந்தால், அவரைத்தவிர மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவ முக்கியத்துவம் இருக்காது, ஒரு சில படங்களை தவிர. ஆனால் காலாவில் மூன்று வலிமையான பெண் கதாபாத்திரங்கள். ரஜினியின் மனைவி, முன்னாள் காதலி, மற்றும் பெண் போராளி என்ற மூன்றும் வலிமை மிக்கவை.

ஈஸ்வரி ராவ் தேர்ந்த நடிப்பு, எனக்கும் நெல்லைக்கு டிக்கட் போடுங்க "பெருமாள பார்த்து பேசிட்டு வரணும்" என்று சினுங்குவதிலும் சரி, கணவனை எதிர்த்துக் கொண்டு வெளியே செல்லும் மகனிடம் அடே ராஜா நீ எங்கபோவ என்று அவருக்கு ஆதரவாக பேசியே சரி போடா என்பதில் காலா
சேட்டும் நானே என்று உணர்த்துவதாகட்டும் அருமை.

காலாவின் முன்னாள் காதலியாக வரும் ஹ்யூமா குரேஷி காதல் காட்சிகளில் கரிகாலன் என்று நெகிழ்வதிலும், தாராவியை உயர்த்துகிறேன் என்று மக்களிடம் பேசி கார்பரேட் சூழ்ச்சியை அறிந்து மாறுவதிலும் மின்னுகிறார்.

அடுத்தது "அஞ்சலி பட்டீல்" தாராவியின் பெண் போராளி அறிமுக சீனிலேய அள்ளுகிறார்.

சமுத்திரக்கனி காலாவின் நண்பராக வருகிறார். சதா போதையில் தள்ளாடியபடியே தள்ளாடாத பங்களிப்பு. படம் முழுவதும் காமெடி ஒன் லைனில் சிரிக்க வைக்கிறார்.

இவர்களை தவிர திலீபன், மணிகண்டன், சாயாஜிஷிண்டே, அருந்ததி, சம்பத் என்று ஒரு பெரிய கூட்டமே சொன்ன வேலையை செய்திருக்கிறது.

ஹரிதாதாவாக வரும் நானா படேகர் ரஜினிக்கு சரியான வில்லன், வெறும் அந்த கண்ணாடி மூலம் பார்வையிலேயே நடுங்க வைக்கிறார். தாது "He is a good man don't kill him "என்று சொல்லும் பேத்தியிடம் சிரிக்கும் புன்சிரிப்பில் நானா நானாதான்.

படத்தில் நெகடிவ்............அந்த எரிச்சல் மூட்டும் ராப் பாடகர்கள், கதையை முடிக்க குழம்பியிருப்பது, இன்னும் வலுவாக காட்சி அமைக்க வேண்டிய இடத்தில் இயக்குனரின் சறுக்கல்.

காலா....................ரஞ்சித்தும் ரஜினியும் செய்த சரவெடி






Follow kummachi on Twitter

Post Comment

Monday 4 June 2018

இதோ வந்துட்டானுங்க..................

தோ முன்பே சொல்லியிருந்ததுபோல் அடுத்த போராட்டம் ஆரம்பம். சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு. தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க ஆறு மணி நேரம் ஆகிறது. இப்பொழுது வரும் 10000 கோடி மதிப்பில் உருவாகும் புதிய 8 வழி பசுமை வழிச்சாலையால் 66 கிலோமீட்டர் தூரம் மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இதற்கான தொடக்கமாக அரூர் பகுதியில் அளவு கற்கள் அமைக்கப்பட்டன. அதை தொடர்ந்துதான் அந்த ஊர் மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றுள்ளனர். இது தொடக்கம்தான் இந்த போராட்டம் மேலும் வீறுகொண்டு எழும், மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் போகப் போக மேலும் உக்கிரம் அடையும் பொழுது வழக்கம் போல பஸ் எரிப்பு, ஆட்சியர் அலுவலகத்தில் பாஸ்பரஸ் வீச்சு என்று அதகளமாகும். மிச்சமிருக்கும் டம்ளர் பாய்ஸ்க்கு வேலை வந்துவிட்டது.

அணு உலை வந்தால் உயிருக்கு ஆபத்து!!
அனல் மின்சாரம் காற்றை மாசுபடுத்தும்!!
காற்றாலைகள் மேகத்தை விரட்டி மழையைக் தடுக்கிறது!!!!!!!!!!!??
சூரிய ஒளி மின்சார பேனல்கள் கழுவ தண்ணீர் தரமாட்டோம்!!!
ஆனால் எங்களுக்கு தடையில்லா மின்சாரம் வேண்டும்.

விவசாயத்திற்கு தண்ணீர் கிடையாது.
புதிய தொழிற்சாலைகள் தொடங்க விடமாட்டோம்.

எல்லா போராட்டங்களையும் அரசு அடக்கிவிடும்........ஆனால்

டாஸ்மாக் எதிரா போராட்டமுன்னா மட்டும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, அல்லக்கை கட்சிகள் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து பொத்திக்கிட்டு இருப்பானுங்க.

டாஸ்மாக் சரக்கு உற்பத்திக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து வருகின்றது என்றெல்லாம் நாங்க கேட்கமாட்டோமே? ஏன்னா நாங்கள் எல்லாம் வீரம் விளைஞ்ச தமிழ் மண்ணுல இருக்கிறவனுங்க. ஆமா??

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 3 June 2018

கலக்கல் காக்டெயில்-186

யார் சமூக விரோதிகள்??

தூத்துகுடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நூறாவது நாள்  நடந்த கலவரமும் அதை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடும் தவிர்க்கப் படவேண்டியது. நூறாவது நடந்த போராட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கி சூடு நடந்ததாக அரசு தரப்பில் சொல்லுகிறார்கள். சமூக விரோதிகள்தான் காரணம் என்று அந்த நடிகர் சொல்லப்போக அவரை "தொம்பிகள்" வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவரை போராளிகளை கொச்சை படுத்துகிறார் என்கிறார்கள். சமூக விரோதிகள் பொது சொத்த நாசமாகியதும், குடியிருப்பில் தீ வைத்தது உண்மைதானே, அப்போது அதை செய்தது சமூக விரோதிகள் இல்லை என்று உங்கள் கூற்றில்தான் நீங்கள் போராளிகளை கொச்சை படுத்துகிறீர்கள்.

அவரை நீங்க யாரு? என்று கேட்ட மானமுள்ள தமிழன்!!! வீரத்தமிழன்!!! அடுத்த நாள் தலையில் இருந்த கட்டுகளை அவிழ்த்து அந்தர் பல்டி அடித்து  தன்மானத் தமிழன் ஆகிவிட்டான்.

இதுதான் சாக்கு என்று இணையப்போராளிகள் இரண்டு நாட்களுக்கு நடிகரை ட்ரோல் செய்ய, தன்மானத்தமிழன் குறுக்கு சால் ஓட்டியதில் பொந்துக்குள் சென்று விட்டனர்.

ஆனாலும் விடாமல் தொம்பிகள் தமிழருக்கு எதிரான நடிகரின் படம் ஆஸ்திரியாவில் இல்லை, நார்வேயில் இல்லை, அண்டார்டிக்காவில் இல்லை என்று ட்ரோல் செய்து ஆர்கசம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.

கலைஞர் 95

லைஞர் தனது தொண்ணூற்று ஐந்தாவது பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்!! மன்னிக்கவும் அவரது உடன் பிறப்புகள் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நாளில் கூட இணையங்களில் அவரை ஹாஷ் டேக் போட்டு கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.

அவரை என்னதான் கிண்டலடித்தாலும் அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்றே நினைக்கிறேன். எந்த ஒரு அரசியல்வாதியும் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் ஆளாகிறார்கள் கலைஞர் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அவை இரண்டையும் அவர் எதிர் கொண்ட விதம் எல்லோராலும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.


தற்பொழுது அவர் அரசியல் அரங்கில் இல்லாதது தமிழ் நாட்டிற்கு பேரிழப்பு தான்.

கவிதை

கையசைப்பு

ப்போதும்
வயல்கள் ஊடாக
தடதடக்கும் சத்தத்தோடு
போய்க்கொண்டுதான் இருக்கின்றன
தொடர் வண்டிகள்....................
விடுமுறை நாளில்
பெற்றோருக்கு உதவ வந்து
வயல் நடுவே நின்று கொண்டு
வரிசையாய்ப் பெட்டிகளை எண்ணியபடி கையசைக்கும்
கிராமத்துச் சிறுவர்கள் இன்றி.

சினிமா



சமீபத்தில் வந்த "சாவித்திரி" வாழ்க்கை திரைப்படமும் அதை தொடர்ந்து வந்த அவர்களது குடும்ப சர்ச்சைகளும் படத்தின் பிரமோஷனுக்காக செய்ததா என்பதற்கு ஆதாரம் இல்லை, ஆனால் படத்தை நன்றாக எடுத்திருக்கிறார்கள் என்று கேள்வி, இன்னும் பார்க்கவில்லை, பார்க்கவேண்டும்.

கைகொடுத்த தெய்வம், மிஸ்ஸியம்மா போன்ற சாவித்ரியின் படங்களை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது, What an artist?



Follow kummachi on Twitter

Post Comment

Thursday 31 May 2018

வாழ்க்கையே போராட்டம்.......

ஜல்லிக்கட்டில் தொடங்கிய போராட்டம்
அம்மாவும், ஐய்யாவும் அடங்கியவுடன்
கடற்கரையில் மையம் கொண்டு
அவுனியாபுரம், அலங்காநல்லூர்
ஆதரவையும் அள்ளிக்கொண்டு
அடங்காத வன்முறையில்
அடக்கி வைக்க அடுத்த
போராட்டம் தொடங்காமல்
கூவத்தூர்  கூத்தாடிகள் கூத்தில்
கூண்டில் அடைக்கப்பட்டது.


அடுத்த காரணம் "காவிரி"
கைகொடுக்க இடையே
நிர்மலாதேவி, கவர்னர் என
ராஜ்பவன் பக்கம் கரை ஒதுங்க!!

அப்போது வந்த ஐபிஎல் சேப்பாக்கம்
என தமிழீன தலைவர்கள் கையில்
தடியடிபட்டு, அடுத்த கட்ட
நகர்வை எட்டியது போராட்டம்!!

இடையே வந்த சேகர்களும், ராஜாக்களும்
திசை திருப்ப, போராட்டம்
தூத்துக்குடி பக்கம் வலுப்பெற
நூறாவது நாள் கலவரத்தில்
அதகளமாக...................
அரசியல் அனல் அடங்கவேண்டாம்
அடுத்த கட்டமாக "சேலம் புறவழியில்"
மூட்டப்பட காத்திருக்கும் நேரங்களில்
இணயம், குளச்சல் என
போராட்ட ஜோதி கொழுந்துவிட்டு
எரியட்டும்!!
வாழ்க்கையே போர்க்களம்
போராட்டம் அதில் நிரந்தரம்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 30 May 2018

ஜாதி விளையாட்டுக்கள்

தற்பொழுது இணையங்களில் ஜாதி வெறி தலை விரித்தாடுகிறது. இதை படித்தவர்களே செய்யும் பொழுது மற்றவர்கள்களை குறை சொல்லி என்ன பயன்?

சமீபத்தில் நடந்த ஐ.பி. எல் கோப்பையை வென்ற குழு கோப்பையை எடுத்துக்கொண்டு சென்னை வந்தடைய, அதை ஏதோ கோவில் வைத்து பூஜை செய்ததாக இணையங்களில் புகைப்படங்கள் வந்தன. அதை வைத்துதான் இணையங்களில் ஜாதி பொங்கல் படையல். அந்த பதிவை ஒருவர் முகநூலில் பதியப் போக, ஒருவர் அது பார்ப்பான் விளையாட்டுப்பா? அப்படிதான் செய்வானுங்க  என்று தனது அடக்கமான பதிவை பதிந்துவிட்டு அமைதியானார்.

இன்னுமொருவர் ஒரு படி மேலே போயி, ஆரிய சூழ்ச்சியால் திராவிட குழுக்கு வரவேண்டிய கோப்பை தட்டி பறிக்கப்பட்டது என்று பொங்கினார்.

அடப்பாவிகளா விளையாட்டுப் போட்டிகளில் கூட உங்க ஜாதி வெறியா? நடத்துங்க. இந்த தீபத்தை அணையாம வச்சுக்குங்க, அப்பத்தான் அது நம்ம அடுத்த சந்ததிக்கு உதவும். அப்படியே மத்த விளையாட்டுக்களுக்கும் உங்க ஜாதி பட்டத்த சூட்டுங்க, எப்படி?

கால்பந்து-கவுண்டர் விளையாட்டு
வாலிபால்-வன்னியர் விளையாட்டு
டென்னிஸ்-ரெட்டியார் விளையாட்டு
பேஸ்கட் பால்-படையாச்சி விளையாட்டு
செஸ்-செட்டியார் விளையாட்டு.
பாட்மிண்டன்-நாயுடு விளையாட்டு

இன்னும் தேடி தேடி ஜாதிக்கு ஒரு விளையாட்டு வையுங்க, இருக்கிற ஜாதிக்கு விளையாட்டு கிடைக்கவில்லை என்றால், அதற்கு ஒரு போராட்டாம், குண்டல் கமிஷன், இட ஒதுக்கீடு,  அது இது என்று உச்ச நீதிமன்றம் வரை போகலாம்.

இவனுக மாதிரி ஆளுக இருக்கும் வரை ஜாதி வெறி ஓயாது.

இதுதான் இந்த மெத்தப் படித்தவர்கள் இனி வரும் சந்ததிகளுக்கு விட்டு செல்லும் பாடம், பயனுள்ள தத்துவம், பகுத்தறிவு, பண்பாடு, வெங்காயம்.............

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 29 May 2018

டீ வித் முனியம்மா-சீசன்-2(3)

இன்னா முனியம்மா நாட்டு நடப்பு ஒன்னும் ஓயுங்காவே இல்ல.........

ஏன் நாடார் இன்னாமோ புச்சா நடக்குறா மாதிரி பொலம்புற.

டேய் மீச நாடார்க்கு ஒரு டீயும் பொறையும் குடுறா..




இன்னா நாடார் இன்னா மேட்டரு.............தெனிக்கும் ஒரு போராட்டம் நடத்திகினு கீறானுங்க...அத்த தானே  சொல்ல வர..

அதான்  செல்வம், தூத்துக்குடில போராட்டம் நடக்க சொல்ல துப்பாக்கி சூடு, பதிமூணு பேர சுட்டானுங்க.............அது பீகுல இருக்க சொல்ல இங்க மாவீரன் புட்டுகினாருன்னு பஸ் கண்ணாடிய ஓடைக்கிரானுங்க.

இதுல்லேந்து இன்னா தெரிது............லிங்கம் சார்.

பாய் நாட்டுல ரொம்ப பேரு வேலை இல்லாம இருக்கிறானுங்க............காலைலேயே டாஸ்மாக் தொறந்ததும் க்வாட்டர் உட்டுக்கினு போராட்டம் கூட்டத்துல கலந்துகின்னு இதுமாரி செய்யசொல்ல மெய்யாலுமே போராட்டம் பண்றவனுங்க மாட்டிகிரானுங்க.....இன்னாத்த  சொல்ல.

முனிம்மா வாட்சப்பு, பெசுபுக்கு அல்லாம் பாக்கிறியா?

அந்த கசுமாலங்கள  பாக்காம எங்க வண்டி ஓடுது? நாட்டுல எப்படா இன்னா நடக்குதுன்னு பாத்துகினே ஒரு கூட்டம் இருக்குது............கொஞ்சம் மேட்டரு கெடைச்சா போதும் அல்லாரையும் வச்சி செயுரானுங்க.

இன்னாத்த சொல்ற முனிமா.............

டேய் லோகு இந்த இணைய போராளின்னு சொல்லிகிடுட்டு ஒரு கூட்டம் அங்க கீதுடா..............ஏதோ இவருதான் அப்படியே நேர்மைக்கு பொறந்தா மாதிரியும் மத்தவன் செய்யறதெல்லாம் அநியாயமுன்னு தெனிக்கும் போஸ்ட் போடுவானுங்க.

அப்பால................

ஐய இங்க இன்னா கதையா சொல்றாங்க அப்பாலன்னுகினு...........கோயில்ல உண்ட கட்டி கொடுக்க சொல்ல பூசாரி அவன் ஜாதிகாரனுக்கு அரகயு ஜாஸ்தி கொடுத்தான்...........இதெல்லாம் இன்னா நியாயம்னு மொதல்ல ஆரம்பிப்பானுங்க...............அப்பால இன்னா கலவரம்ன்னு வந்தா ஏதோ இவருதான் கூட இருந்து பார்த்தா மாறிக்கி ஏதாவது பழைய போட்டோவ போட்டு காப்ரா செய்வானுங்க.

ரொம்ப கரீட்டு முனிமா?

அஹான் நாடார்...........இதுல எவனாவது வந்து இவன் உள் பெட்டில துப்பி வச்சா.........தோடா வந்துட்டாருடா...........சங்கி, மங்கி, பொங்கின்னு.......போடுவானுங்க........கலாய்க்கிரானுங்களாம்...........

மெய்தான் முனிம்மா...

ஆனா தெனிக்கும் வந்து.........த்தா காவிரில தண்ணி இல்ல நம்ம போராட்டம் பண்ணிக்கினு கீறோம்..........அந்த ஜாதிக்காரன பாரு வாய தொறக்காம சோத்த துன்னுகினு கீறான்.............ன்னு போஸ்டு போடுவான்........

அப்பால..

இதுக்கு கமிண்டு போடவே ஒரு பத்துபேரு குத்த வச்சி குந்திகினு இருப்பானுங்க...........அவன் வந்து ஆமா தலிவரே இந்த மென்டலான் கம்முன்னுகிறான் பா..............ன்னு கமிண்டு போடுவான்.......இன்னொரு ஆளு வந்து மய்யம் பாடு இன்னா சொல்றானுவான்............அந்த கட்சிக்காரன் ஆச்சில இருக்க சொல்லத்தான்........காவிரி மேட்டர கை வுட்டானுங்கன்னு, அம்மா கச்சி, ஐயா கச்சின்னு அல்லாரையும் வச்சி செய்வானுங்க........அப்பால கட்சீல கொண்டு போயி டீக்கடையில கொணாந்து நிப்பாட்டுவானுங்க.

அப்பால............

லோகு கடுப்பபேத்தாத..................கம்முனு இருந்த என்ன உசுப்பிவுட்டு வேடிக்க பாக்குறியா?

சரி முனிம்மா மேட்டருக்கு வா? தூத்துக்குடில சுட ஆர்டரு கொடுத்தது யாராம்?

எப்.ஐ.ஆருல வட்டாட்சியரு, சதுராச்சியருன்னு போட்டு கத உட்டுகினு இருக்கானுங்க.

அப்பால இன்னா நடக்கும்........

விசாரண கமிசன், சி.பி.சி.ஐ.டி அப்படி இப்படின்னு போட்டு கொயப்புவானுங்க........அதுக்குள்ளே அடுத்த போராட்டம் வரும், அவளவுதான் நம்ம பெசுபுக்கு கூட்டம் இத மறந்து அத்த பிடிச்சிப்பானுங்க.

அடுத்த வாரம் கூட ஒரு போராட்டம் வருதாமே.........ஆமா இனயம்  துறைமுகமாம்.........ஏற்கனவே ஒரு கூட்டம் போராட்டம் செஞ்சிகினு கீறானுங்க...28000 கோடி திட்டமாம்......இத்த வச்சி செஞ்சு அல்லாம் காசு தேத்துவானுங்க...........

சரி அல்லாருக்கும் மேட்டர் இருக்குது...........சர்தான் பொறி உருண்ட ஏரியாவா?

சரி முனிம்மா சினிமா மேட்டரு இனா............

டேய் செல்வம் உனுக்கு தெரியாது,.........என்ன கேக்குற...........ஏன் நேத்திக்கி இன்னா மப்பா...................சூனு ஏயாந்தேதிடா ..........








Follow kummachi on Twitter

Post Comment

Sunday 27 May 2018

கவுஜ........அரசியல்

தற்பொழுது சமூக ஊடகங்களில் திடீர் கவிஞர்கள் கவிதை எழுதுகிறார்கள். தற்பொழுது நிகழும் நிகழ்வுகளை வைத்து சிச்சுவஷன் கவிதைகள் ஏராளம், அவை ரசிக்கப்படும்படியாக இருப்பவை இந்த கவிதைகளின் தனி சிறப்பு. சில ட்விட்டுகள் கவிதை போன்று ரசிக்க வைக்கும்.

அந்த வகையில் ட்விட்டரில் தென்படுபவை

அவசரத்திற்கு ஆடியோ  தந்தாய்
ஆர்.கே. நகர் எலெக்ஷனுக்கு வீடியோ தந்தாய்
பதவியாசைக்கு தியானம் தந்தாய்
பன்னீரின் கனவில் ஆவியாய் வந்தாய்
தமிழக மக்களை செத்தும் கெடுத்தாய்..............#ADMK FAILS

கோடி கோடியா கொள்ளையடிச்சவங்கள ஆட்சியில் உக்கார வைக்கிறோம், வயிற்றுப் பசிக்காக பைக் திருடினவர
மரணத்திலும் அசிங்கப்படுத்துறோம் .................சால்ட் பேப்பர் தளபதி

மேலே உள்ள கீச்சு  ஜாதி கட்சி தலைவர் பற்றியது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி
திருப்பூர் சாயப்பட்டறைகள் இன்று விடுமுறை!

கண்ணகி கதாபாத்திரத்துல ஷகீலா நடிச்சா மாதிர் ஒரு ஃபீல்.......அனு சுதா 

குணா கமல் குரலில் படிக்கவும்............

பூனை மேல மதில் மேல
யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே
மானே தேனே பொன்மானேன்னு நடுவால் போட்டுக்கோங்க தளபதி
ட்யூப் லைட் ஆலையை மூட வலியுறுத்தி வாழப்பாடி பழனிசாமிக்கு கடுதாசி....................................நைனா



Follow kummachi on Twitter

Post Comment

Thursday 24 May 2018

கலக்கல் காக்டெயில் -185

கூட்டு களவாணிகள் 

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட இத்தனை நாட்களாக அறவழியில் நடந்த போராட்டம், திசை திரும்பி அல்லது திருப்பப்பட்டு துப்பாக்கி சுடு, பெட்ரோல் குண்டு வீச்சு, பொது சொத்து சேதம் என்று புதிய பேரழிவுகளை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே 14 உயிர்கள் பறிக்கப்பட்டு இருக்கிறது.

வழக்கம் போல பிணங்களின் மீது நடத்தப்படும் அரசியல் வேலைகள் தொடங்கிவிட்டது. தமிழா விழித்தெழு, நெஞ்சை நிமிர்த்து போராடு, உயிரை கொடுக்கவும் தயங்காதே என்று உசுப்பும் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட கூத்தாடி கூட்டம் இப்பொழுது யார் பாவாடையில் ஒளிந்திருக்கிறார்களோ? தெரியவில்லை.

இன்று "செயல்" வழக்கம்போல வெளிநடப்பு செய்து, தர்ணா போராட்டம் என்று நாடகமாடிக்கொண்டு இருக்கிறார். முதல்வரோ நிருபர்களின் கேள்விகளுக்கு முழி பிதுங்கி நிற்கிறார். முன்னாள் நிதியோ மத்திய அரசை கை காட்டுகிறார்.

இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நேரத்தில், சரியாக "அணில் அகர்வாலால்" நன்றாக கவனிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் முன்னாள் நிதி ஸ்டெர்லைட் ஆலையின் "டைரடக்கரா!!!!" வேற இருந்தாராம். செயலு கட்சி எம்.எல்.ஏ அங்கே லாரி ஓட்டுறாங்களாம். மொத்தத்தில் எல்லோரும் கூட்டு களவாணிகள்.

ஏலே நடத்துங்கலே..........

பிழைத்த ஜனநாயகம் 

கர்நாடகா தேர்தல் முடிந்து யாருக்கும் பெரும்பான்மை இல்லாது, ஒரு இரண்டு நாட்களாக எடியூரப்பா முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து பின்னர் எழுந்து போக, ஜனநாயகத்தை கட்டிக் காத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் வெறும் 38  உறுப்பினர்களே உள்ள ம.ஜ.த கட்சியின் குமாரசாமியை முதல்வராக்கி இருக்கிறது. இது எவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்கும் என்று மக்கள் அனைவருக்குமே சந்தேகம் உள்ளது, இருந்தால் என்ன ஜனநாயகம் பிழைத்திருக்கிறது அல்லவா?

நாம இப்படிக்கா போவோம்..

ரசித்த கவிதை 

நடிகர்களே இப்போது புறப்பட்டுவிடாதீர்கள் 

நடிகர்களே இப்போது
புறப்பட்டுவிடாதீர்கள்
உங்களுக்கு
மூச்சுத் திணறல் ஆகிவிடும்
எல்லாம் அடங்கட்டும்
இன்னும்தான்
தேர்தலுக்கு
நாளிருக்கிறதே

நடிகர்களே! உங்கள் அண்ணன்கள்
நன்றாக பேட்டி
கொடுத்துக்கொண்டு
பாதுகாப்பாக
இருக்கிறார்களா?
இருக்கட்டும்
எங்கள் அண்ணன்கள்தான்
செத்துக்கிடக்கிறார்கள்!

நடிகர்களே உங்கள் மகள்கள்
பாதுகாப்பாக
படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்களா?
பாதுகாப்பாக
நடித்துக்கொன்டிருக்கிரார்களா?
இருக்கட்டும்
எங்கள் மகள்கள்தான்
செத்துக்கிடக்கிறார்கள்!

நடிகர்களே! இவர்கள் அரசியல்
வேறு
உங்கள் அரசியல் வேறா?
இவர்களுக்கு
சுடுகாடு!
உங்களுக்கு
சட்டமன்றமா?
ஓ....
நாடாளு மன்றமுமா?

நல்லது
நடிகர்களே
கிளிசரினோடு தேர்தல்
பிரச்சாரத்திற்கு
புறப்படுமுன்
உங்கள் எசமானர்களிடம்
கேட்டுச் சொல்லுங்கள்

எங்கள் உறவுகளின்
சாவுக்காக
நாங்கள்
கொஞ்சம்
அழுது கொள்ள
அனுமதி
கிடைக்குமா!!!

நன்றி: கவிஞர் அறிவுமதி.





Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 23 May 2018

எய்தவன் எங்கிருக்கிறான்?- ஸ்டெர்லைட் பரிதாபங்கள்

நேற்றைய தினம் தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. என்னதான் எச்சை ஊடகங்கள் சம்பவத்தை இருட்டடிப்பு செய்தாலும், நவீன தகவல் தொழில் நுட்பத்தில் இந்த மாதிரி சம்பவங்கள் மக்களை சென்றடைவது எளிதாகிவிட்டது.

குறிப்பாக துப்பாக்கி சுடும் அந்த காட்சி தற்பொழுது எல்லோரது அலைபேசியிலும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. கூட்டத்தை கலைக்க சுடப்படவில்லை என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இன்று காலை மற்றுமொரு செய்தி வாட்சப்பில் துப்பாக்கி சுடுபவரின் குடும்ப விவரங்கள், அலைபேசி எண் எல்லாவற்றையும் வெட்ட வெளிச்ச்சமாகியிருக்கிறார்கள். அந்த நபர் வெறும் அம்புதான்.

எய்தவர் அல்லது எய்தவர்கள் யார்?

வழக்கம்போல விசாரணை கமிஷன் அமைத்து குற்றவாளி தண்டிக்கப் படுவார் என்று அரசு தரப்பில் சொல்லப்படும்.

துப்பாக்கியில் சுட்டவர் பலிகடா ஆக்கப்படுவார்.

எய்தவர்கள் " எஸ்" ஆவார்கள். பணம் படுத்தும் பாடு.

இறந்தவர்களின் குடும்ப நிலை பரிதாபத்திற்குரியது.

சரி எய்தவர்கள் யார்? அவர்களை எய்தத்தூண்டியது யார் என்று கேள்வி கேட்டால் அரசு தொடங்கி அன்றாடங்காய்ச்சி வரை  சுட்டு விரல் திரும்பும்.

ஸ்டெர்லைட் ஆலை துவங்க "அகர்வால்" குஜராத்தில் முயல அங்கிருந்து கோவா பக்கம் திரும்பி செல்ல அங்கும் அரசால் நிராகரிக்கப்பட்டு பின்னர் மகாராஷ்ட்ராவில் தொடங்கினார். ஏறக்குறைய இருநூறு கோடி வரை செலவிட்டு காப்பர் உருக்கும் உலை வரை நிறுவ மக்களின் எதிர்ப்பால் "பவார்" இடத்தை காலி பண்ணுப்பா என்று துரத்தி விட நம்ம
'இரும்பு பெண்ணின்" அழைப்பிற்கு!!! இணங்க தூத்துக்குடியில் துவக்கினார்.

இதை எதிர்த்து மக்கள் போராட்டம் துவங்கிய வேளையில், வரலாற்று சிறப்பு மிக்க 1996  தேர்தல் வந்ததால் எல்லா கட்சிகளும் பொத்தினாப்ல இருந்துவிட்டனர். அதற்குப் பிறகு மக்கள் எழுச்சி பெறும்போதெல்லாம் முதலாளித்துவமும், அரசாங்கமும் அதை ஜாதி சண்டையில் மழுங்க அடித்தன.

அதற்குள் தொழிற்சாலை தொடங்கி மாசுகட்டுப்பாட்டு விதிமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கவிட்டு உற்பத்தியை அமோகமாக பெருக்கிக்கொண்டு இருந்தார்கள். அப்பப்போ குரல் விடும் அரசியால் வாதிகள் நன்றாக கவனிக்கப்பட்டனர்.

இருந்தாலும் விடாப்பிடியாக போராடி உச்சநீதிமன்றம் வரை சென்று ஆலையை இழுத்து மூடினார் வை.கோ.. பின்னர் அடுத்து வந்த ஆட்சி மாசுகட்டுப்பாட்டு வாரிய அமோக ஆதரவுடன் ஆலையின் உற்பத்தியை தொடங்க அனுமதியளித்தது, நடுவில் என்ன நடந்து இருக்குமென்பது அனைவரும் ஊகிக்கக்கூடியதே. ஆனால் அதன் பின்னர் வை.கோ அமைதியானார். இப்பொழுது விரிவாக்கம் என்று ஆலையை விஸ்தரிக்கப் போக போராட்டம் மறுபடியும் தொடங்கியது.

கடந்து 99  நாட்களாக அறவழியில் மக்களால் நடத்தப்பட்ட ஒரு போராட்டம் நூறாவது நாளில் வன்முறைக்கு உள்ளாகிறது, உயிர்ச்சேதம், தீவைப்பு, பொது சொத்துக்கள் சேதம் என்று திசை திரும்பியதா அல்லது திருப்பப்பட்டதா நாம் அறியோம்.

எய்தவன் அல்லது எய்தவர்கள் யார்?  யோசித்துப்பாருங்கள், பணம் பெருக்கும் முதலாளிகள், துணை போகும் அரசியல் வாதிகள், கமிஷன் வாங்கும் அல்லக்கைகள் ஏன் இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் ஒரு திருடனுக்கு மற்றொரு திருடன் மேல் என்று இலவசங்களுக்கும், க்வாட்டருக்கு விலைபோகும் வாக்காளர்களுமே.

சொந்த சகோதர்கள்
துன்பத்தில் சாகக்கண்டும்
சிந்தை இரங்கார்..............
தம் நலம் ஒன்றே அறிவார்.

இனி என்ன எல்லா ஊடகங்களும், சமூக வலை தளங்களிலும் இவ்வளவு நடந்திருக்கிறதே அவன் வாய் திறந்தானா? அந்த ஜாதிக்காரன்  வாய் திறந்தானா? என்று பிணத்தின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியும், ஜாதி வன்மை அரிப்புகளையும் சொரிந்துவிடுவார்கள்.








Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 22 May 2018

தேன்மொழியும் டெக்கீலாவும்.

"கருப்பையா" சார் இன்றைக்கு என்னை அலுவலகத்தில் தொலைபேசியில் அழைத்திருந்தார். இப்பொழுதெல்லாம் அவரை பார்ப்பது  அரிதாகிவிட்டது, காரணம் அவரல்ல அவருடைய மாணவர்கள் நாங்கள் ஓடி ஓடி ஆணிபிடுங்கி கொண்டிருப்பதால் அவரை காண அடிக்கடி செல்ல முடியவில்லை.

ஏன் அவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் "பட்டா" என்கிற ஆர்யாபட்டாவால் கூட முடிவதில்லை. நான், பட்டா, ராஜசேகர், சூரி மற்றும் ஆறுமுகம்தான் அவருடன் இன்னும் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் அரசு மேல்நிலை பள்ளியில் படித்தோம், அரசுப் பள்ளிகளின் அந்தக்கால எழுதப்படாத விதிகளின் படி ஒரே ஆசிரியர் இரண்டு மூன்று வகுப்புகளை எடுப்பார். அந்த வகையில் கருப்பையா சார் எங்கள் வகுப்பிற்கு ஆறாம்  வகுப்பு தொடங்கி பள்ளி படிப்பு முடியும் வரை தமிழ், கணக்கு, ஆங்கில பாடங்களை எங்களுக்கு எடுத்தார். அவரது வகுப்புகள் எங்களுக்கு போரடிக்காது. மேலும் அவர் மற்ற ஆசிரியர்கள் போல் ட்யூஷன் எல்லாம் எடுப்பதில்லை. அவரது வகுப்பை ஒழுங்காக கவனித்தாலே போதும் கோனார், மற்ற இதர உபரி உதவிகள் தேவையில்லை. இப்பொழுது நான் சொல்ல வந்தது அவரது ஆசிரியத்திறமை பற்றி அல்ல.

கருப்பையா சாருக்கும் எங்களுக்கும் இருந்த ஆசிரியர் மாணவர் உறவைத்தாண்டி இருந்த நட்புதான். மதிய இடைவேளையில் இவர் மற்ற ஆசிரியர்கள் போல் ஆசிரியர் ஒய்வு அறையில் ஓய்வெடுக்கமாட்டார்.  எப்பொழுதும் ஏழாம் "சி" வகுப்பறையில் தான் அந்த நாற்பது நிமிடம் ஓய்வெடுப்பார். எங்களையும் மதிய உணவை எடுத்துக்கொண்டு அங்கு வரச்சொல்லுவார். ஒன்றாக உணவு உண்போம். பின்பு எங்களுடம் மதிய ஆரம்ப மணி அடிக்கும் வரை பேசிக்கொண்டிருப்பார். அவர் எங்களிடம் எப்பொழுதும் எங்கள் வயதுக்கு மீறிய பேச்சுகளை பேசியதில்லை. கோடை விடுமுறையில் மாலை வேளைகளில் அவர் வீட்டில் நாங்கள் அனைவரும் சந்திப்போம். அவர் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அதற்கான காரணம் எங்களுக்கு வெகுநாட்கள் வரை தெரியாது.

எங்களது நட்பு பள்ளிப்படிப்பு முடிந்து, கல்லூரி சென்றாலும், ஏன் வேலை வெட்டி கல்யாணம் என்று நாங்கள் வேறு வேறு ஊரில் சிதறினாலும் அவருடனான எங்களது தொடர்பு சுத்தமாக முறிந்துவிடவில்லை.  உள்ளூரில் இருக்கும் பட்டா, ராஜசேகர், சூரி மற்றும் நான் அடிக்கடி அவரை சிந்திப்போம். முக்கியமாக அவருடைய பிறந்த நாளில் நாங்கள் சந்தித்து அவருடன் கொண்டாடுவது வழக்கம். அப்படி ஒரு முறை சந்திக்கும் பொழுதுதான் அவரது காதல் கதை எங்களுக்கு தெரிய வந்தது.  அது ஏதோ காரணத்தினால் நடக்காத போனதால் அவர் தனி ஆளாக இருந்திருக்கிறார். அனால் அதை பற்றி என்றும் அவர் அலட்டிக்கொண்டதில்லை. எப்பொழுதாவது நாங்கள் அவருடன் சோமபானம் அருந்தும் பொழுதுகூட அதைப்பற்றி எல்லாம் பேசமாட்டார். அவர் ஒன்றும் குடிகாரரும் அல்ல.

வெகு வருடங்களுக்குப் பிறகு ஆறுமுகம் விடுமுறையில் வந்திருந்தான். அவன் கருப்பையா சாருக்கு போன் செய்தது அவரை இன்று மாலை காண வருவதாக சொல்லியிருக்கிறான். அதனால் தான் கருப்பையா சார் இன்று என்னை அலுவலகத்தில் அழைத்தார். ஆறுமுகம் வெளிநாடுகளில்!!! பணிபுரிகிறான். கவனிக்க வெளிநாடுகளில்!! ஒவ்வொரு முறை வரும்பொழுதும் வேறு வேறு இடம் சொல்லுவான். கருப்பையா சார் என்னை போலவே மற்றவர்களுக்கும் தொலைபேசியில் அழைத்து,  வர சொல்லியிருந்தார். பழைய படி நாங்கள் ஆறுபேரும் ஒன்றாக சேர்ந்த மிகவும் அற்புதமான தருணம். பேச்சு எங்களது பள்ளி நாட்கள் பற்றி போய்க்கொண்டிருந்தது. பேச்சு வாக்கில் ஆறுமுகம் தான் கொண்டு வந்த பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்தான். சார் சாப்பிடலாமா என்றான். அவர் வழக்கம் போல நீங்க சாபிடுங்கப்பா நான் வழக்கம் போல உங்களுடன் கம்பெனி கொடுக்கிறேன் என்றார். அதாவது நாங்கள் முடிக்கும் வரை பேருக்கு கொஞ்சம் வைத்துக்கொண்டு குடிப்பார்.

ஆறுமுகம்  "டெக்கிலா " எடுத்தவுடன் ராஜசேகர் வழக்கம் போல அவர் வீட்டில் இருந்த கிளாஸ்களை கழுவிக்கொண்டு வைத்தான். பட்டா ஏன்டா உனக்கு இந்த கிளாஸ் தான் கெடைச்சுதா?   டெக்கில்லாவிற்கு ஒரு மரியாதை வேண்டாம்? அதற்கெல்லாம் ஷாட் கிளாஸ் வேண்டுமடா? பட்டாவிற்கு எல்லாம் அந்த நியமப்படி செய்யவேண்டும்.

பீர் மோர் போல குடிக்கணும்,
விஸ்கிய விட்டு விட்டு குடிக்கணும்
பிராந்திய பயந்துதான் குடிக்கணும்
ஜின்ன வண்ணமயமா குடிக்கனுமுன்னு

பாட ஆரம்பிச்சிடுவான்.

 சரி உனக்கு என்ன வேணும் பட்டா? இது நான்.

டேய் குமாரு வண்டில போயி கடகடன்னு ஷாட் கிளாஸ் வாங்கிண்டு வா? அப்படியே ஒரு ஆறு எலுமிச்சைப் பழமும்  வாங்கிண்டு வா என்று என்ன விரட்டிவிட்டான்.

எல்லாம் ஆகிருதிகளும் தயாரனாவுடன் எல்லோரயும் வலதுகையை நீட்ட சொல்லி புறங்கையில் எலுமிச்சை சாறினால் கோடுபோட்டு உப்பை தடவிவிட்டான். பின்னர் சரக்கை கிளாசில் ஊற்றி "சியர்ஸ்" என்று தொடங்கி வைத்தான்.  நாங்கள் கல்ப்ப...கருப்பையா சார் வழக்கம் போல சப்பிக்கொண்டு இருந்தார்.

பட்டா அவரிடம் சார் இதெல்லாம் இப்படி அடிக்கக்கூடாது என்று அவர தலையைப் படித்து ஏறக்குறைய முழு கிளாசையும் அவர் வாயில் போட்டி விட்டான். பின்னர் அவரது புறங்கையை அவர் வாயில் ஈஷி விட்டான்.

இனி அடுத்த ரவுண்டு, என்று அவருக்கு பழக்கமில்லாத காரியத்தை அளவுக்கு அதிகமாக செய்துவிட்டான். அவர் வேறு ஒரு உலகத்தில் சஞ்சாரிக்க ஆரம்பித்து விட்டார். வழக்கமாக எங்களுடன் நிதானத்துடன் பேசும் அவர் இன்று வாயை மூடிக்கொண்டு விட்டார். எங்கள் எல்லோருக்கும் அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்த பட்டாவின் மேல் செம கடுப்பு , அவனை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தோம்.

சரிடா எவனாவது போயி சாப்பாடு வாங்கி வாங்க என்றான் ஆறுமுகம்.

விடுங்கப்பா....................தேன்மொழி.........................தேன்மொழி என்று சொல்லிவிட்டு மட்டையாகிவிட்டார் கருப்பையா சார்.

ராஜசேகரிடம் யாருடா தேன்மொழி என்று கேட்டதற்கு யாருக்கு தெரியும் ஒரு வேளை அவரது எக்ஸ் ஆக இருக்குமோ? என்று ஆளாளுக்கு புலம்பிக்கொண்டு இருந்தனர். அதற்குள் பட்டா டேய் தேன்மொழி நம்ம மூன்றாம் வகுப்பு கிளாஸ் டீச்சர்டா என்றான்.

அதற்கு ராஜசேகர் சும்மா பேத்தாத.........அந்த டீச்சருக்கு அப்பவே கல்யாணமாகி இரண்டு குழந்தை இருந்தது, என்று காதல் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டனர்.

அப்பொழுது கதவ தட்டப்படும் சத்தம்............யாரது இந்த நேரத்தில் என்று கதவருகில் சென்று கேட்டதற்கு "தேன்மொழி சார் கதவ திறங்க" என்றது கதவுக்கு அந்தப்புரம்.

கதவை திறந்தவுடன் சார் இருக்காரா? என்றாள்.

இருக்காரு என்னா விஷயம், ஆறுபேருக்கு சாப்பாடு சொல்லியிருந்தார் அதை கொடுக்கலாமுன்னு வந்தேன் சார் இல்லையா? என்றாள்.

இருக்காரு எங்ககிட்ட கொடு என்றதற்கு நான் சாரண்டதான் கொடுப்பேன் என்று விடு விடு வென்று வீட்டுக்குள் நுழைந்து........ஐயோ சாருக்கு என்ன ஆச்சு?

பின்பு நிலைமை உணர்ந்த அவள்...........இன்ன மனுஷன் அவரு அவருக்கு போயி இந்த மாதிரி நண்பர்களா? என்று கதவை மூடிவிட்டு சென்றாள் தேன்மொழி...............










Follow kummachi on Twitter

Post Comment