Tuesday 19 June 2018

கலக்கல் காக்டெயில் - 187

கண்ணாத்தா கொள்ளையடிச்சுதா?

கண்ணாத்தா கொள்ளையடிச்சுதுன்னு தீர்ப்பு சொன்ன குன்ஹாவை எப்படி எல்லாம் வச்சு செஞ்சீங்க அடிமைஸ்......இப்போ ஆத்தா கொள்ளைடிச்ச பணத்தைதான் தினகரன் பதினெட்டு அல்லக்கைகளுக்கு கொடுத்ததா ஒரு டயர் நக்கி வாக்கு மூலம் கொடுக்குது, டேய் என்னங்கடா இது? அதாலதான் கடைசிவரைக்கும் உங்கள் டயர் நக்க வச்சுது. அந்தம்மா கடைசி வரைக்கும் ரெண்டு இட்லி சாப்டுச்சா? சட்னி வச்சாங்களா? குலாப்ஜாமூன் சாப்டுச்சா? இல்லை ஐஸ் கிரீம்தான் சாப்டுச்சா? தெரியாமயே அடக்கம் பண்ணிட்டு இப்போ அவனவன் அத்த கழுவுல ஏத்தறான்!!

எல்லோரையும் காலில விழ வச்ச ஒத்த ரோசா காலோட போச்சா காலில்லாம போச்சான்னு விசாரணை கமிஷன் வச்சு நல்ல வச்சு செயுரானுங்க?

வெற்றிடம்னு சொன்னவரையும் வச்சு செய்யுறானுங்க!!

நல்ல இருங்கடே!!!!

பிக் பாஸ் 

பிக் பாஸ் டூவாம்! பொன்னம்பலம், ஆனந்த வைத்யநாதன், தாடி பாலாஜி, யாரோ மகாத்தான், ஜனனி, யாஷிகா, நித்யா, இன்னும் சில சில்லறைகளை "உலக்கை" எறக்கி இருக்கிறார்.

பிக் பாஸ் அசிங்கம், யாஷிகா அசிங்கம், பொன்னம்பலம் அசிங்கம், தாய் கிழவி அசிங்கம், மலையெல்லாம் பெண்டத்தால் வாசனை, எல்லாம் அசிங்கம், அபிராமி சீ, ஓவியா ஓவியா, அப்பப்போ மானே தேனே எல்லாம் போட்டுக்கணும்.

சீ இந்த பிக் பாஸ் அசிங்கம்............பிக் பாஸ் அசிங்கம்...........

ரசித்த கவிதை

ஆதி நிறம்!

நேற்று சில நட்சத்திரங்களைக்
கடந்து செல்லக் கிடைத்தது
கடந்து செல்லும்போது
சில மலைகளையும்
சில மேகங்களையும்
கடந்து செல்லவேண்டியிருந்தது
யார் யாரோ யோசிக்கலாம்
இப்படிக் கடந்து செல்லும்போது
நான் யாரென!
நான் பறவை என்பதா
நான் காற்று என்பதா

ஆழத்தின் அறிதலை
மனப்பேழை நிரப்பி
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்
சில நேரம்
குகை ஒன்றுக்குள்
ஓவியமாய் இருக்கிறேன்
சில நேரம்
ஆதி நிறத்தின்
வண்ணமாய் இருக்கிறேன்
சில நேரம்
சலனங்களைப் பருகிய
பெருங்கடலாய் இருக்கிறேன்
நான் யார் என்பதை
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்
உங்களது ஒவ்வொரு முடிவிலும்
காலத்தையும் வாழ்வையும்
கடந்து செல்கிறேன் நான்.


- சாமி கிரிஷ்

ஜொள்ளு 



Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

Anonymous said...

Super boss.

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை அருமை...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.