Friday 24 December 2010

ராசாவிடம் சி.பி. ஐ மராத்தான் விசாரணை-சொல்லுங்கள் ராசாவே

இன்று ராசா டெல்லி வந்த பிறகு சி.பி ஐ அலுவலகத்தில் ஆஜரானார். காலை பதினொரு மணிக்கு துவங்கிய விசாரணை மாலை ஏழு மணி வரை தொடர்ந்து நடை பெற்றது.


விசாரணை எவ்வாறு போயிருக்கும் என்பதில் நமது கற்பனை.

சி.பி.ஐ ஆபிசர்: வாங்க

ராசா: என்ன வாங்க

சி.பி.ஐ ஆபிசர்: சரி வாங்க ராசா

ராசா: என்ன சரி வாங்க ராசா

சி.பி.ஐ ஆபிசர்: வந்து அந்த டூஜி ஸ்பெக்ட்ரம்

ராசா: என்ன வந்து அந்த டூஜி ஸ்பெக்ட்ரம்

சி.பி.ஐ ஆபிசர்: இல்லை நீங்க தொலை தொடர்பு மந்திரியா இருந்தப்போ

ராசா: என்ன இல்லை நீங்க தொலை தொடர்பு மந்திரியா இருந்தப்போ

சி.பி.ஐ ஆபிசர்: ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு

ராசா: என்ன ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு

சி.பி.ஐ ஆபிசர்: முறைகேடு நடந்திருக்கு

ராசா: என்ன முறைகேடு நடந்திருக்கு

சி.பி.ஐ ஆபிசர்: அது வந்து நீரா ராடியா

ராசா: என்ன அது வந்து நீரா ராடியா

சி.பி.ஐ ஆபிசர்: சரி டி.எஸ்.மத்தூர்

ராசா: என்ன சரி டி.எஸ்.மத்தூர்

சி.பி.ஐ ஆபிசர்: அவர் சொன்ன ஆலோசனைகளை

ராசா: என்ன அவர் சொன்ன ஆலோசனைகளை

சி.பி.ஐ ஆபிசர்: உள்நோக்கத்தோடு உதாசீனம் செய்தீர்களாமே

ராசா: என்ன உள்நோக்கத்தோடு உதாசீனம் செய்தீர்களாமே

சி.பி.ஐ ஆபிசர்: பிரதீப் பைஜால் பணம் கைமாறி

ராசா: என்ன பிரதீப் பைஜால் பணம் கைமாறி

சி.பி.ஐ ஆபிசர்: ஹவாலா ஜெயின் சகோதர்கள்

ராசா: என்ன ஹவாலா ஜெயின் சகோதர்கள்

சி.பி.ஐ ஆபிசர்: கிரீன் ஹவுஸ் ப்ரமொடேர்ஸ்

ராசா: என்ன கிரீன் ஹவுஸ் ப்ரமொடேர்ஸ்

சி.பி.ஐ ஆபிசர்: திரும்ப திரும்ப சொல்லறீங்க

ராசா: என்ன திரும்ப திரும்ப சொல்லறீங்க

சி.பி.ஐ ஆபிசர்: இல்லை திரும்ப திரும்ப சொல்லறீங்க

ராசா: என்ன இல்லை திரும்ப திரும்ப சொல்லறீங்க

சி.பி.ஐ ஆபிசர்: யோவ் ராசா

ராசா: என்ன யோவ் ராசா

சி.பி.ஐ ஆபிசர்: ஹூம் விசாரணை அவ்வளவுதான்

ராசா: என்ன ஹூம் விசாரணை அவ்வளவுதான்



ஒரு வழியாக விசாரணை முடிந்து வெளியே வந்த ராசாவை பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்ட பொழுது, தான் சி.பி.ஐக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறி தன் காரில் சிரித்த முகத்துடன் சென்றார்.

Follow kummachi on Twitter

Post Comment

கலக்கல் காக்டெயில்-15

சுஜாதாவின் “அது”வும் நிகழ்கால ஜல்சா சாமியார்களும்


சமீபத்தில் சென்னை சென்ற பொழுது சுஜாதாவின் “விஞ்ஞான சிறுகதைகள்” வாங்கி வந்தேன். ஐம்பது விஞ்ஞான சிறுகதைகளின் தொகுப்பு. இதில் சில கதைகளை திரும்ப திரும்ப பல முறை படித்திருக்கிறேன். காலயந்திரம், திமலா, ஜில்லு, யாகம் எத்துனை முறை படித்தாலும் அலுக்காதவை.

இப்பொழுது படிக்கும் பொழுது “அது” கதையை வெகுவாக ரசித்தேன். கதையின் சுருக்கம்

அந்தப் புதிய ஒளி  வட்டம் வானத்தில் தெரிய ஆரம்பித்தவுடனே நாட்டு மக்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். அரசாங்கம் பிடிவாதமாக வதந்திகளை நம்பாதீர்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள்.

ஆத்மாவும் நித்யாவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அப்பொழுதுதான் நித்யா நவீன மெஸ்ஸயா பாவாவிடம் போகலாம் என்று சொல்லுகிறாள். ஒரு நெடிய வரிசையில் நின்று அவரை சந்திக்கிறார்கள். அவர் உலகம் எப்படியும் அழியப் போகிறது என்னிடம் பாவ மன்னிப்பு பெறுங்கள் என்று சொல்லுகிறார்.

ஆத்மா, நித்யா முறை வருகிறது. ஆத்மா அவரிடம் “பாவா நீங்கள் தான் ஒரு பாவமும் செய்யாதவர் பின் ஏன் நீங்களும் பாவ மன்னிப்பு கோருகிறீர்கள்” என்று கேட்கிறான்.

அதற்கு பாவா, நீ கேட்ட கேள்வி ஆதாரமானது, அதை நான் அதிகம் யோசித்தேன். என் வாழ்நாள் முழுவதும் நான் ஒரு பாவமும் செய்யவில்லை. பாவம் எப்படி இருக்கும் என்று அறியாதவன் என்று சொல்லிக் கொண்டே ஒரு அறையின் கதவை திறக்கிறார்.

அறையின் நடுவே பத்துப் பதினைந்துப் பெண்கள் அரைகுறை உடையில் “பாவா” என்று ஓடிவருகின்றனர்.

பாவா இப்பொழுது அறைக் கதவை மூடிக் கொண்டே ஆத்மாவிடம் “இருக்கும் ஒன்றிரண்டு நாட்களில் கொஞ்சம் பாவம் செய்யலாம் என்று இருக்கிறேன்” என்று கண்ணை சிமிட்டிக் கதவை மூடுகிறார்.

உள்ளே “வலிக்கிறது பாவா” என்று பெண்கள் குரல் கேட்கிறது.

வா பெண்ணே என் முன் மண்டியிடு என்கிறார்.

இதைப் படித்தவுடன் சமீப கால ஜல்சா சாமியார்கள் நினைவு வந்தால் அதற்கு சுஜாதா பொறுப்பில்லை.

ரசித்த கவிதை

பொழுது விடியும் புதுவையில் ஓர் வீட்டில்

விழி மலர்ந்த பாரதியார் காலைவினை முடித்து

மாடிக்குப் போவார் கடிதங்கள் வந்திருக்கும்

வாடிக்கையாக வரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்

சென்னைத் தினசரியின் சேதி பல பார்ப்பார்

முன்னாள் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்

சரியாய் படிந்ததுண்டா இல்லையா என்று

வரி மேல் விரல் வைத்து வாசிப்பார் ஏட்டை


இந்த வகையான பாரதிதாசன் எளிய நடை கவிதைகளுக்கு பொழிப்புரை தேவையில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 15 December 2010

அரசியலில் அன்டிராயர்..............................சகஜமப்பா

குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் ஒரு மக்கள் பிரச்சனை கூட பேசப்படாமல் தினமும் ஒரு பத்து நிமிடம் கும்பலுடன் கோவிந்தா போட்டு, குய்யோ முறையோ என்று கூவி கும்மியடிக்கப் போய் விட்டனர் நமது எம்.பி கூட்டம். இந்தக் கூத்துக்கு இவர்களுக்கு சம்பளம், பேட்டா, விமான டிக்கெட், மயிரு மட்டு என்று ஏகப்பட்ட சலுகைகள். இதன்  எதிரொலிதான் நம் கத்திரிக்காய், உப்பு, பருப்பில் தெரிகிறது. போதாக்குறைக்கு இந்த வருடம் எட்டாவது முறையாக பெட்ரோல் விலை ஏற்றப்படுகிறது.


இவ்வளவு கூப்பாடு போட்டும், எதிர் கட்சிகள் ஜே.பி.சி விசாரணை என்று கூவினாலும், அசராமல் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் தினமும் பத்து நிமிடம் வந்து போனாரே, நம்ம டர்பன் தாத்தா, அப்பா இவரு பெரிய ஆளுப்பா. இவருக்கு இதற்காகவே “பாரதரத்னா” கொடுக்கலாம்.

நம்ம ஊரு அரசியல் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது. நீரா ராடியவுடன் ஐயா வூட்டுக் காரங்களும், அவர்களது நண்பிகளும் பேசிய பேச்சுக்கள் அய்யா குடும்பத்தின் சச்சரவுகள் குழாயடி ரேஞ்சுக்கு வந்துவிட்டது. இதில் அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் விபரீத முடிவுக்குப் போவார்கள் என்று வேறு பேசுகிறார்கள். இப்படி கூடவா அமைச்சர் ஆவார்கள் என்று கேள்வி எழுகிறது.

ஜன நாயகத்தில் ஏதோ கட்சி தலைவர்கள் எல்லாம் சேர்ந்து தான் அமைச்சரவை அமைக்கப் படுகிறது என்று நினைத்த நமக்கெல்லாம் வைத்த ஆப்பு இப்பொழுது எரிகிறது. கனவான்களும், மாமாக்களும் (மாமிகளும்) தான் முடிவு செய்யறாங்கப் போல. இந்த வியாபாரம் நல்ல வியாபாரம் போல் தெரிகிறது. எதிர் காலத்தில் இந்த வேலைக்கு பலத்தப் போட்டி இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

இப்பொழுது தியேட்டர் கிடைக்காதவன், தியேட்டரில் டிக்கெட் கிடைக்காதவன், என்று ஒரு கூட்டம் இந்த ஜோதியில் ஐக்கியமாக தயாராகிறது. இன்னும் போக போக என்ன ஆகுமோ தெரியவில்லை.

அதுக்குதான் அம்மட்டன் வாராவதி மேல் நின்னு அரை பாட்டில் வுட்டு அசையாம நின்ன ஐயாவு அன்னைக்கே சொன்னாரு “ஏலே அரசியல்வாதியையும் அன்டிராயரையும் அடிச்சு துவைத்து காயப் போடணும் இல்லாங்காட்டி நாறிடும்” னு.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 13 December 2010

ஊழலுடன் பிறந்தோம்

உயிர் தரிக்கும் முன்பே


உற்றாருடன் தொடங்கி

நகை நட்டு, கட்டில், தொட்டில்

வரதட்சினை இன்ன பிற

மல்லிப்பூ, அல்வா மணக்க

மஞ்சத்தில் அடங்கி

மருத்துவமனை பிறப்பில்

மறக்காது கூட வரும்

அறிவுக்கண் திறக்க

அனைத்திலும் அயராது

சிரித்து நிற்கும்.



நின்றால் நடந்தால்

நிழல் போல தொடர்ந்து

வேலை வீடு என

வெளிர் பல் காட்டி

வேகம் பிடித்து

வேண்டாது கூடவரும்.

அறிந்தும் அறியாமல்

இருக்க அறிவுக்கண்

திறந்து விடும்.

அரசாங்கம் புகுந்து

அயராமல் ஆட்சிபுரியும்

எண்ணாயிரம் ஜாதியில்

எங்கள் நாடு பிரிந்தாலும்

ஒன்றே குலம்

ஒருவனே தேவனாகி

ஒன்றாக “ஒருஜாதி” என்று

ஓங்கி உயர்த்தும்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 9 December 2010

கேவுருல நெய் ஒழுகுது டோய்.......................அமெரிக்காவுல கூப்பிட்டாக, அண்டார்டிகாவுல கூப்பிட்டாக, அயனாவரத்துலயும் கூப்பிட்டாக.

சோழிங்கர்: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க தமிழகத்தை ஆளும் கட்சி, இதுவரை ஆண்ட கட்சி, தேசிய கட்சி என பல கட்சிகளும் பாமகவுக்கு அழைப்பு விடுத்து கொண்டிருக்கின்றன என்று அக் கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி கூறினார்.




கூட்டணிக்கு ஒபாமா கூப்பிட்டாரு, நாங்கதான் ஐந்து கோடி வன்னியரை தவிக்கவிட்டுப் போகவில்லை.


பாமக இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில் பேசிய அவர், உலகின் பல்வேறு நாடுகளிலும் 5 கோடி வன்னியர்கள் உள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறிய கிராமத்தில் பிறந்தார். வேளாண் தொழில் செய்து கிடைத்த வருமானத்தில் படித்தார். டாக்டருக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தும் கூட உறவினர்கள் உதவியுடன்தான் படிக்க முடிந்தது.



இன்னாபா சொல்லுற ஒன்னியும் விளங்கமாட்டேங்குது. ஒரே கேராகீது.

படித்து முடித்ததும் அமெரிக்காவுக்கு வேலைக்கு அழைத்தனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். எனது சமுதாயத்துக்காக பாடுபடப் போகிறேன் என்று கூறிவிட்டார்.

அஹான் அமெரிக்காவுல இடது கைபோன பாட்டிய பாத்துக்கவா. நாளைக்கு ஒரு டாலர் சம்பளம், மாதம் முப்பது டாலர் பிடிப்பு, அந்த வேலைதானே?

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி பாமக மட்டும் தான். மற்ற கட்சிகள் அனைத்தும் தேய்ந்து வருகின்றன. மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களையும் பாமகவுக்கு அழைத்து வர வேண்டும்.




ஏம்பா நல்லா அளந்து பாத்தீங்களா, எத்தனை இஞ்ச் வளர்ந்தீங்கன்னு புள்ளிவிவரம் கொடுங்கப்பு. வளர்த்தும், தேயர்தும் அரசியலில் சகஜமப்பா.

பாமக ஆதரவு இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது. டாக்டர் ராமதாஸ் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் முதல்வர் ஆக முடியும் என்றார் அன்புமணி ராமதாஸ்.

ஏனுங்க நீங்க முதல்வராகற கனவு அப்போ இந்த ஜென்மத்தில் இல்லையா?


அப்போ விஜயகாந்து, விஜய் டி ராஜேந்தர், விஜய், சிம்பு யார் பக்கமாவாது கையை காமிப்பீங்களா? பாத்து கைய காமிங்க.


அப்பாலே இன்னும் நிறைய பேர் இருக்காங்க. வைகோவ மறக்காதீங்க.


ஏங்க தமிழ்நாட்டு மக்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?

...........

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 8 December 2010

கலக்கல் காக்டெயில்-14

மழையில் சிங்கார சென்னை


ஒரு வார விடுமுறையில் சென்னை சென்று வந்தேன். நான் சென்னையில் இறங்கிய வேளை என்னுடன் சேர்ந்து மழையும் இறங்கியது. இரண்டே நாளில் சென்னை தெருக்கள் எல்லாம் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய நிலவு போல் ஆகிவிட்டது. பனகல் பார்க் சரவணா ஸ்டோர்ஸ் பக்கம் யாரும் மழை நாளில் வெள்ளையும் சொள்ளையுமாக போய் விடாதீர்கள். பத்தடி நடப்பதற்குள் பாதாள சாக்கடையில் விழுந்த பன்னிக்குட்டி போல் ஆகிவிடுவோம். பசுல்லா ரோடிற்கு பெயர் மாற்றம் தேவை. பசுல்லா எரி என்று மாற்றிவிடலாம். ஐ. டி ஹைவே பெருங்குடி, நாவலூர் வரையில் நன்றாக உள்ளாது. அதற்குப் பிறகு அங்கு ரோடு இருந்ததற்கான அறி குறியே இல்லை. பெசன்ட்நகர் பஸ் நிறுத்தம் அருகே தேங்கியிருக்கும் தண்ணீர் கழிவு நீருடன் சேர்ந்து கலங்க வைக்கிறது. மாநகராட்சி என்ன செய்கிறார்களோ தெரியவில்லை.

வேலூர் போகும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு, விபத்தை தவிர்க்க வைத்திருக்கும் போர்டின் வாசகம் யோசிக்க வைக்கிறது.

ஆபாச போஸ்டர் பார்க்காதே,

அஞ்சலி போஸ்டர் ஆகாதே.



ரசித்த கவிதை

ஒரு எஞ்சினியரின் புலம்பல்

விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அந்நாள்.


புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.


பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய் ஃபேஸ்புக்கில் சிரிக்க,
பெங்களுரைத் தாண்டாத விரக்திகள் எரிச்சலைக் கிளப்புகிறது.


சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.


பாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது

"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".


அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்ட தர்க்கங்களில் 'புரிந்தது' போல நடித்து,
வீட்டிற்கு செல்வதற்குள் "செல்லமே" கூட முடிந்து விடுகிறது.



செம்மறி ஆடுகள் பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
பொறியாளர்கள் பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.



...................எழுதியவர் பெயர் தெரியவில்லை

ரசித்த மொக்கைகள்

“கமலா, நான் வீட்டு வாசலில் தண்ணி தெளிச்சா போதும் என் வீட்டுக்காரர் உடனே எழுந்துடுவார்”.

“எப்படிடி விமலா”.

அவர் சரக்கு வுட்டுட்டு அங்கேதானே விழுந்து கிடப்பார்.

------------------------------------------------------------------------------------------------------------

நீ எப்போடீ இந்த புடவை எடுத்தே?

தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா?

கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 2 December 2010

சி. ஜீ.....நண்பேன்டா

சிறு வயதில் நாம் செய்யும் எத்தனையோ செயல்கள், பின்பு யோசித்துப் பார்க்கும் பொழுது அபத்தமாக தோன்றும். அந்த ஒரு அனுபவம் ஹாங்காங் ஏர்போர்டில் பிளாஸ்டிக் நாற்காலியில் விமானத்திற்காக காத்திருக்கும் பொழுது எனக்குத் தோன்றும் எதிர் பார்க்கவில்லை. எனக்கு நன்றாகத் தெரியும் சி. ஜியும் அப்படித்தான் நினைத்திருப்பான் என்று.


சி. ஜியும் நானும் மூன்றாம் வகுப்பிலிருந்தே பகைவர்கள். நாங்கள் மூன்றாம் வகுப்பு அரைப் பரீட்சை முடிந்தவுடன் எனிமி விட்டுக் கொண்டோம். எதற்காக என்று இன்று வரை காரணம் எனக்குத் தெரியாது. அரைப் பரீட்சை முடிந்தவுடன் என்னை அவன் வீட்டிற்கு கூட்டிசென்றான். அப்பொழுது நண்பர்களாக இருந்தோம். அன்று அவன் அம்மா எங்களுக்கு அடை, மோர்க்குழம்பு எல்லாம் செய்து கொடுத்தார்கள். அவர்கள் வீட்டு ஸ்பெஷாலிட்டி அது. பிறகு நன்றாக விளையாடினோம். பின்பு நான் வீட்டிற்கு வந்து அன்று இரவு விடுமுறையை கழிக்க பொள்ளாச்சியில் சித்தப்பா வீட்டிற்கு பயணமானோம். பிறகு விடுமுறை முடிந்து, பொங்கல் முடிந்து பள்ளித் திறந்தவுடந்தான் சி. ஜீ வித்யாசமாக நடந்து கொண்டான். என்னிடம் எனிமி விட்டான்.



இருந்தாலும் அதற்குப் பிறகு இருவரும் ஒன்றாக இருப்போம், ஒன்றாக விளையாடுவோம் ஆனால் பேசிக்கொள்ள மாட்டோம். என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் மற்றவரிடம் சொல்லி சொல்லச் சொல்வான். அதே சமயத்தில் எங்களில் ஒருவருக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தயங்காமல் உதவி செய்து கொள்வோம். இது எங்களுடன் இருக்கும் மற்றத் தோழர்களுக்கு வித்தியாசமாக இருக்கும்.


பள்ளி இறுதியாண்டு முடியும் சமயம் ஒரு கூட்டம் எங்களை எப்படியும் பேச வைக்க வேண்டுமென்று தீர்மானித்து தனியாக கொண்டு சென்றார்கள்.

எங்கள் இருவரையும் கை குலுக்க வைத்து பேச சொன்னார்கள்.

நான்தான் முதலில் என்னாட சி ஜீ என்றேன்.

சி ஜீ பதிலுக்கு என்னாடா சங்கர்லால் என்றான்.

ஆனால் எங்களின் நட்பு அடுத்த நாளே முறிந்தது.

சி ஜீ அடுத்த நாள் அழுது கொண்டே பள்ளிக்கு வந்தான். நான் அவனுடன் “எனிமிதாண்டா” என்று மற்றவர்களிடம் சொன்னான். அதற்குப் பிறகும் நாங்கள் ஒன்றாகத் தான் இருந்தோம், ஆனால் பேச்சும் வார்த்தை மட்டும் கிடையாது.

இது இப்படியிருக்க சி ஜியின் தங்கை என் கல்லூரித் தோழனை காதலித்தாள். அவர்கள் இருவரும் திருமனம் புரிய நான்தான் காரணமாயிருந்தேன். அவன் தங்கை சாயா ஒரு வேற்று ஜாதிக் காரனை காதலித்தாள். நான் அவன் அம்மாவிடம் பேசி கல்யாணம் முடித்து வைத்தேன். அவர்கள் வீட்டில் அந்த பையனை யாருக்கும் பிடிக்கவில்லை. இருந்தாலும் கல்யாணம் நடந்தேறியது.


பிறகு காலத்தின் கட்டாயத்தில் நாங்கள் பிழைப்புக்காக வேறு வேறு நாடு சென்று சிதறி விட்டோம். இப்பொழுது சி ஜீயுடன் ஹாங்காங்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறன். சாயாவை பற்றி பேச்சு திரும்பியது. சாயாவுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொன்னான், இருந்தாலும் அவளைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டான்.


சாயா என்னுடனும், என் மனைவியுடனும் தினமும் பேசிக் கொண்டிருக்கிறாள் என்றேன். அவளுக்கு இப்பொழுது இரண்டு பையன்கள், அட்லாண்டாவில் சுகமாக இருக்கிறாள் என்றேன்.


போன விடுமுறை நாங்கள் அவள் குடும்பத்துடந்தான் கழித்தேன் என்றேன். உன்னை பற்றி நாங்கள் பேசாத நாளில்லை என்றேன்.

பிறகு எனக்கு விமானத்திற்கு சமயம் ஆகிவிட்டதால் நான் அவனை பிரிய முடியாமல் பிரிந்தேன்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 1 December 2010

கவுஜ எழுதலாம் வாங்க.......

கவுஜ எழுதலாம் என்று தொடங்குமுன் என்ன கவிதை என்பதை யோசிக்க வேண்டும். கருத்து மிகவும் முக்கியம். தலைப்பு சும்மா நச்சுன்னு இருக்கணும்.


அப்புறம் மரபுக் கவிதைன்னா இந்த சீர், தளை அதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் படிக்க வில்லையென்றால் ஐயம்பெருமாள் கோனார் விலாவரியாக சொல்லியிருக்கிறார், அந்தப் புத்தகத்தை தேடி படிக்க வேண்டும்.

இதற்கு பழக வேண்டுமானால், சீத்தலை சாத்தனார், போன்றவர்களின் கவிதைகளை எடுத்து தளை பிரித்து அதை தேமா, புளிமா தோசை மா என்று பிரித்து அக்கு அக்காக அடுக்கி வைக்கப் பழக வேண்டும்.

இதை வைத்து அறுசீர் விருத்தம், கழிநெடி விருத்தம், வெண்பா, கலிப்பா, கட்டளைக் கலிப்பா, அருட்பா..................

இருப்பா!!!!!!!!!!..................... எங்கே ஓடுறீங்க.

சரி சரி அதெல்லாம் வேண்டாமா, அப்போ வாங்க நீங்க நம்ம ஆளு.

இப்படித்தான் நம்ம நண்பன் ஒருத்தன் பக்கத்து செக்ஷனில் ஆணி பிடுங்குற பய வந்து என்னாண்ட கேட்டான், மச்சி நீ எப்படிடா கவுஜ எழுதுற எனக்கு வர மாட்டேங்குது.

நான் எங்கேடா எழுதினேன், அது சும்மா உவ்வாகாட்டிக்கு.

அப்படியும் விடாம இல்ல மச்சி சொல்லிக் கொடுடா என்று கேட்டு நகர மாட்டேங்கிறான்.

டேய் போடா போய் ஆணி புடுங்கு, இங்கே எனக்கு தலைக்கு மேல வேலை இருக்குன்னாலும் கேக்காம நகர மாட்டேங்கிறான்.

சரி இவன எப்படிடா காலி பண்றதுன்னு சொல்லித்தான் மேலே கூறிய இலக்கணமெல்லாம் அவுத்து வுட்டேன்.

ஹூஹூம் பய அசரலை.

சரி இப்போ உனக்கு என்ன மாதிரிக் கவிதை வேணும் சொல்லுன்னேன்.

தோடா மெதுவா சின்னதா எழுத ஆர்மபிச்சு அப்பால சினிமாவுக்கு பாட்டு எழுதுனமுங்கிறான்.

சரி அவ்வளவுதானே வுடு,

தோ பார் மொதல்ல எதுகை மோனை தெரிஞ்சிருக்கணும். உதாரணத்திற்கு

பஞ்சம்- மஞ்சம்

மாடு – காடு

வாடி- போடி

வாடா – போடா

அடி- கடி

இது போல ஒரு நூறு வார்த்தை தெருஞ்சிக்கின்னு அத்தே மொதோ வரியிலும் அடுத்த வரியிலும் முதலில் வைத்து அப்பால நீ இன்னா வார்த்தை வேனுமுன்னாலும் போட்டுக்கலாம், இன்னா தெரியுதான்னு கேட்டா, ஓகே மாமு இப்போ புரியுது அப்படின்னான்.

இதுதான் புதுக் கவிதைன்னு சொல்றானுங்க, இதே எப்படி வேணுன்னாலும் எழுதலாம். எத்தகை மோனைப் போட்டா சினிமாவுல போனியாகும். அப்படிய இல்லன்னா பத்திரிகை, வலைப்பூவுல பிச்சிக்கின்னு ஒடுன்னேன்.

இன்ன வேனுமுன்னாலும் எழுது அப்படின்னேன்.

சரி நான் உனக்கு முதல் வரி எடுத்துக் குடுக்கிறேன் நீ கவிதை சொல்லுன்னேன்.

ஆத்தா நான் பாசாயிட்டேன்.


அதுக்கு அவன்

.. த்தா நான் பெயிலாயிட்டேன்


மவனே அவன் சொன்ன அந்த வரியில நான் ஆடிப் போயிட்டேன்.

சரி ஆள வுடு இனி தமிழ்நாட்டுல உன்னை விட சிறந்த கவிஞன் எவனும் பிறக்கப் போவதில்லைன்னு வாழ்த்தி அனுப்பி விட்டேன்.

பையன் இப்போ நிறைய சினிமாப் பாட்டு எழுதிக்கின்னு இருக்கான்.

சமீபத்தில் கூட ஒரு பாட்டு நீங்க கேட்டிருப்பீங்க.



ங்கொய்யால ங்கொய்யால

ஐய்யால ஐய்யால

இன்னாடா பண்ணலாம்

எவளாண்ட போவலாம்

கீதா தேடிப் போனா

சோடா குடின்னு சொன்னா



அது அவன் எழுதியப் பாட்டுதான். அந்தப் பாட்டு விருதுக்கு போயிருக்குன்னு சொல்லின்டிருக்கான்.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 28 November 2010

ஏட்டையா, நானும் அரசியல்வாதி, பகுத்தறிவாளன் சொன்னா நம்புங்க

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.ராஜா ஊழல் செய்தார் என்று சிஏஜி குற்றம் சாட்டவில்லை. அவருக்கு எதிராக ஒரு ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கையில் சில மீடியாக்கள் தொடர்ந்து ராஜாவை குற்றவாளி போல சித்தரித்து வருவது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.

எந்த உணர்வை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லி விளங்கவைக்க வேண்டும் என்று நினைத்தோமோ அந்த உணர்ச்சி மக்களிடையே எரிமலையாக இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம், 3ஜி ஸ்பெக்ட்ரம் என்பதெல்லாம் ஒரு புறத்தோற்றம். உண்மையிலேயே நடக்கின்ற போராட்டம் மனுதர்மத்திற்கும் - மனித தர்மத்திற்குமிடையே நடக்கின்ற போராட்டத்தின் முக்கிய கட்டம்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா மீது எங்கும், எந்த இடத்திலும் குற்றம் சாற்றப்படவில்லை. அதற்குரிய ஆதாரம் எங்குமே இல்லை. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் எங்கே போனது என்று கேட்கிறார்கள். வடமாநில ஆங்கில ஊடகத்தைப் பார்ப்பவர்கள் வெறும் 00.1 சதவிகிதம் என்று சொன்னார்கள்.

இது வெறும் ராசா என்ற தனி நபரைச் சார்ந்த பிரச்சனை அல்ல. இது ஆரிய- திராவிட போராட்டத்தின் முக்கியமான காலகட்டம். ஆதிக்கவர்க்கத்தால் பின்னப்பட்ட சதிவலை, கருணாநிதி சூத்திரர் ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகின்றார். வரக்கூடிய தேர்தலிலே மீண்டும் முதல்வர் கருணாநிதி ஆட்சி வரக்கூடாது என்பதற்காக ஆதிக்க வர்க்கத்தினரால் பின்னப்பட்ட ஒரு சதிவலை.



ஊடகங்கள் சூத்திரர் ஆட்சிக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றன. ராமாயண காலத்திலிருந்தே இதற்கு உதாரணம் இருக்கிறது. நம்மை சிந்திக்கவிடாமல் நமது மூளைக்கு விலங்கு போட்டார்கள்.



பார்ப்பனர் குற்றம் செய்தால் உச்சிக்குடுமியில் இரண்டு முடியை வெட்ட வேண்டும் அவ்வளவு தான். சூத்திரன் தவறு செய்தால் அவனுக்கு கொலை குற்றத்தண்டனை கொடுத்து கொல்ல வேண்டும். மரண தண்டனை விதிக்க வேண்டும். இதுதானே உங்களுடைய மனு தர்மச் சட்டம். சூத்திரனுக்கு ஒரு நீதி; பார்ப்பானுக்கு ஒரு நீதி.




ஏய் யாருலே அது, அவனாடா நீயி

அந்த முழுப் பூசணிக்காயை ...த்துல மறைக்கற கூட்டமா

வந்துட்டாரபா ராசாவுக்கு வக்காலத்து வாங்க.

நாடே ஒரு மெகா சைஸ் முறைகேடப் பார்த்து பொத்திக்கிட்டு இருக்காங்க, இவர் வந்துட்டார்பா. முதலில் உச்ச நீதி மன்றம், சி.பி.ஐயிடம் ஏன் ராசாவையும், அந்தத் துறை செயலரையும், மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒலி கற்றை உரிமையை வாங்கி சேவைத் தொடங்கும் முன்பெ கொள்ளை லாபத்திற்கு விற்ற நிறுவனங்களும் விசாரனைக்குட்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய பொழுதுதான், நம் பகுத்தறிவு சிங்கம், தன் மான சிங்கம் “ராசா பேரில் ஆதாரம் இல்லை” என்கிறார். மேலும் இந்த முறைகேட்டினால் அரசுக்கு ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி இழப்பு என்று சொல்லியிருக்கிறது.

ஐயா இதெல்லாம் இவருக்கு தெரியாது போலிருக்கிறது.

வழக்கமாக அடிக்கும் ஜால்ராவுடன் எப்பொழுதும் சொல்லும் “பார்ப்பணீய சூழ்ச்சியை” விட்டு விட்டார்.

சமீபத்தில் ஊழல புகாரில் சிக்கி ராஜினாமா செய்த கல்மாடியும், அசோக் சவானும் சூத்திரர் அல்லவே. ஆனால் வழக்கை எதிர்கொள்ள துணிவு இல்லாமல் இது போன்று கேவலமாக ஜாதியை சாட்சிக்கு அழைக்கவில்லையே.

அங்கே கூடாரமே ஆடிக் கொண்டு இருக்கிறது. குடும்ப தகராறும், கோஷ்டிகளின் உச்சகட்ட நாடகத்தின் விளைவில் விளைந்த இந்த குற்றச்சாட்டில் தாத்தா வாயடைத்திருக்கிறார்.

சூரமனிக்கு எல்லாம் நேரம், தேர்தல் வரும் முன்பே யாருக்கேனும் ஜால்ரா தட்டி கல்லா கட்ட வேண்டும். இம்முறை ஐயா கட்சி.

இப்பொழுது சுயமரியாதை, பகுத்தறிவு எல்லாம் கெட்ட வார்தைகளாகிவிடும், நம் பெரியாரின் வாரிசுக்கு.

போயா பெரியார் திடலை சுவிசேஷ கூட்டங்களுக்கும், இயேசு உயிருடன் இருக்கிறார் என்ற கூட்டங்களுக்கும் வாடகைக்கு விட்டு, கல்லா கட்டி பொழைப்பை பாருங்க.

பட்சி ஜாதி நீங்க

பகுத்தறிவெல்லாம் பார்க்காதீங்க.

எந்த பட்சி என்று சொல்லத்தேவையில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 25 November 2010

கலக்கல் காக்டெயில்-13

நாட்டாமை வீட்டில் நாட்டாமை


அந்த நாட்டாமை வீட்டிலேயே இப்பொழுது நாட்டாமை தேவை. தன்னை அடித்து துன்புறுத்தியதாக போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறார், நாட்டாமையின் மகள். இப்பொழுது நாட்டாமை தலை மறைவாகியிருக்கிறார். மகனையும் காணவில்லை. விஷயம் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டாமை இருக்கும் ஏரியாவில் அந்த நெடிய வில்லன் நடிகரின் தம்பி ஒரு காலத்தில் சூபெர்மர்கட் வைத்திருந்தார். நாட்டாமை வீட்டு வேலையாள் போய் எல்லா சாமானும் நாட்டாமை அம்மா வாங்கி வரச் சொன்னதாகச் சொல்லி வாங்கிச் சென்றுக்கிறார். காசு கேட்ட பொழுது அம்மாவிடம் பேசிக் கொள்ளுங்கள், அம்மா கொடுப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

தம்பி மாலை அம்மாவிற்கு போன் செய்தால் என்ன தம்பி பணமெல்லாம் கேட்டுக் கொண்டு, இந்தா பாப்பாவிடம் பேசுங்கள் என்று பீப்பாவிடம் போனை கொடுத்திருக்கிறார்.

அவ்வளவு தான் அப்புறம் காசு எங்கே வருது.?

ஊரை அடித்து உலையில் போட்ட சொத்துக்குத்தான் இப்பொழுது தகராறு.

நாட்டாமை, கம்பியிலே எக்ஸ்பெர்ட் முறுக்கு கம்பி வேலைக்கு ஆவலையா?.



படித்ததில் ரசித்த கவிதை

நிதம்

ஒரு சோறு சமைத்து

அதில்

ஒரு பொரியல் சேர்த்து

நின்று நிறைய பரிமாறி

ஒரு சொல்லும் வலித்திடாமல்

ஒத்தடமாய் பேசி

ஏசல் பூசல்

எல்லாம் பெற்று

யவ்வனமாய் உடுத்தி

நிலவு வரக் காத்திருந்து

ஏந்திழையாள்

ஏவல் எல்லாம் செய்திடவே

தாங்கிப் பெற்றவர்களே

தருகிறார்கள்

தங்க நிலவை ஒரு

சமூக அடிமையாய்

சகல மந்திரங்களும் ஓதி

சபை நிறைந்து இருக்க

அவன் மனைவி என

பெயர் சூட்டி அனுப்புகிறார்கள்

ஆயினும் இங்கே கூடி கூடி

கொக்கரிக்கிறார்கள்

ஆங்கிலேயனை துரத்தியபோழுதே

அடிமைத்தனத்தை ஒழித்து விட்டோமென்று.



நகைச்சுவை

நம்ம ஊரு பண்பலை வானொலியில் கேட்டது

ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம்



“எங்கப்பா ரொம்ப பயந்தான்குள்ளிடா”



எப்படிடா சொல்லுறே”



“பின்னே என்னடா ரோடை க்ராஸ் பண்ணும பொழுது என் கையை கெட்டியமா பிடிச்சிக்கிறார்டா”.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 24 November 2010

பார்ப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

“பார்ப்பு வச்கிட்டாண்டா ஆப்புன்னு” வடிவேலு ரேஞ்சுக்கு ஐயா புலம்பும் அளவுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் பாராளுமன்றத்தை பத்து நாட்களாக உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.


அந்த விவகாரத்தில் திக்கு முக்காடி முதலில் ராஜா தலித் ஆதலால் தான் இதை பெரிது படுத்துகிறார்கள் என்று புலம்பினார். இப்பொழுது

சூத்திரர்கோர் நீதி தண்டச்சோறு

பார்ப்புக்கொரு நீதி

என்று பாரதியை மேற்கோள் காட்டுகிறார். மொத்தத்தில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலமையில் தலைமை ஆடிப் போயிருக்கிறது.

போதாதற்கு “நீரா ராடியா” வேறு கனிமொழி ராஜா விவகாரத்தை கிளப்பிவிட்டதே மாறன் தான் என்று புதிய வெடியைப் போட்டிருக்கிறார். அவர்களுக்குள் நடந்த பேச்சு விவகாரம் இப்பொழுது இணைய தளங்களில் உலா வந்துக் கொண்டிருக்கிறது.

உடனே மாறன் தாத்தாவிடம் போய் புதியத் திரியை கிள்ளி விட்டிருக்கிறார். தாத்தாவிற்கு இந்த வயசில் இது தேவையா?

இது தான் சாக்கு என்று கொடநாட்டில் கும்மியிருந்த அம்மா நாளுக்கொரு அறிக்கை விடுகிறார். பட்டுப்போன இலை துளிர் விட ஆரம்பித்திருக்கிறது.

தேர்தலுக்குள் என்ன என்ன நடக்குமோ தெரியவில்லை.

காங்கிரசின் பீகார் கனவு தவிடு பொடியாகிவிட்டது. தமிழ்நாடு காங்கிரசின் நிலைமை அய்யகோதான்.

யார் யார் என்ன வியூகம் அமைக்கப் போகிறார்கள். மருத்துவர் ஐயா எங்கே பிச்சை எடுப்பார்?, கேப்டன் என்ன உதார் விடுவார்?

நடுவில் சுப்ரீம் ஸ்டார், டண்டணக்கா போன்றோர் கட்சிகள் இருக்குமா காணாமல் போகுமா?.

வைகோவிற்கு போக்கிடம் இல்லை.

மே மாதத்திற்குள் ஒரு வழி பண்ணிவிடுவார்கள். பார்ப்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 17 November 2010

காதர்கான் மாமா

“தம்பி நீ தான் எஞ்சினு, நீ தண்டவாளத்தில நேரா போனாதான், பாரு உன் தம்பி தங்கைகள் எல்லாம் பின்னாடி வருவாங்க, அவங்க எல்லாம் பின்னாடி வர பெட்டிங்க” என்று அறிவுரை சொல்லுவார். அவருடைய பேச்சு எல்லாம் ரயில்வே உதாரனங்களாகத்தான் இருக்கும்.


என் அப்பாவும் அவரும் ரயில்வேயில் பணிபுரிபவர்கள். காதர்கான் மாமா தவறாமல் ஞாயிற்று கிழமைகளில் எங்கள் வீட்டில் ஆஜராகிவிடுவார். அவருக்கு அப்பொழுது குழந்தைகள் கிடையாது. என் அப்பாவும் அவரும் ஒரே சமயத்தில் வேலையில் சேர்ந்தவர்கள்.

நான் என் அக்கா தம்பி தங்கைகள் என்று மொத்தம் ஆறுபேர். பெரிய குடும்பம். அவருக்கு விடுமுறை நாட்களை எங்களுடன் கழிப்பதில் ஆனந்தம். சில சமயம் எங்களை அவர் வீட்டுக்கு அழைத்து செல்வார். கதீஜா அத்தை எங்களுக்கு விதவிதமாக சமைத்துப் போடுவார்கள். நாங்கள் சைவம் என்பதால் அன்று அவர்கள் வீட்டில் சைவ சமையல்தான். நாங்கள் அவர்கள் வீட்டில் ஓடியாடி விளையாடுவதை ரசிப்பார்கள். காதர்கான் மாமா கோவப்பட்டு நாங்கள் பார்த்ததில்லை. விளையாட்டில் அவர்கள் வீட்டை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவோம். எதை உடைத்தாலும் கோவம் கொள்ள மாட்டார்கள். எங்கள் விளையாட்டை ரசித்து “மாஷா அல்லா” என்று இருவரும் சொல்லிக்கொள்வார்கள்.

ரம்ஜான் நாட்களில் சில சமயம் வீட்டிற்கு வருவார், ரம்ஜான் நோன்பின் காரணத்தையும் அவர்கள் உபவாசம் இருப்பதையும், சூரிய உதயத்திற்கு சற்று நேரம் முன் தொடரும் நேரத்திலிருந்து பல்லில் தண்ணீர்கூட படாமல் நோன்பு இருப்பதை சொல்லும் பொழுது எங்களுக்கெல்லாம் இப்படியும் இருக்க முடியுமா என்ற ஆச்சர்யம் மேலோங்கும்.

நான் மத்திய கிழக்கு நாடுகளில் வேலையில் சேர்ந்து ஒரு முறை விடுமுறைக்கு சென்னை வந்த பொழுது என்னை பார்க்க வந்தார். அப்பொழுது மனைவியின் நச்சரிப்பால் இரண்டாவது திருமனம் செய்து கொண்டதையும், ஒரு மகன் பிறந்ததையும் சொன்னார். மகன் பிறவியிலேயே பார்வை இல்லாதவன். அவன் ஒரு பிரபல வயலின் வித்தகரிடம் வயலின் கற்றுக் கொள்வதையும், பள்ளியில் படிப்பதையும் சொன்னார்கள்.

பிறகு அப்பாவும் அவரும் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் பென்ஷனர்ஸ் மீட்டிங்கில் சந்தித்துக் கொள்வார்கள். இப்பொழுது இருவருக்கும் வயதாகிவிட்டதால் சந்திப்பு நாள் நாள் பட குறைந்துவிட்டது.

நேற்று நான் நியூ காலேஜ் போக வேண்டிய வேலை இருந்தது. போகும் வழியில் அந்த இடம் அடுத்தநாள் வரப்போகும் ஈத் பெரு நாளுக்கான ஏற்பாட்டில் இருப்பதை உணர முடிந்தது. காலேஜில் நுழைந்து நான் கண்ட நபர் பார்வை இல்லாதவர். அவர் அங்கு அவர் ஆசிரியராக இருக்கிறார். அவரை விசாரித்த பொழுது அவர் காதர்கான் மாமாவின் மகன் என்று புரிந்து கொண்டேன். அவரை ஒரு வேலை விஷயமாக நான் தொலைபேசியில் தொடர்பு கொள்ள அவர் வீட்டு தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டேன்.

இன்று காலை அவர்கள் வீட்டிற்கு போன் செய்தேன். காதர்கான் மாமா தான் எடுத்தார். மாமா “ ஈத் முபாரக்” என்றேன். “சங்கர் நீ ஊரில் இருக்கிறாயா அப்பா எப்படி இருக்கிறார், இப்பொழுதெல்லாம் பார்க்க முடிவதில்லை” என்றார்.

இத்தனை வருடம் கழித்து என் குரலை அடையாளம் கண்டு கொண்டு விசாரித்ததில் எனக்கு மேலும் பேச்சு வரவில்லை

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 16 November 2010

கலக்கல் காக்டெயில்-12 (இருநூறாவது பதிவு)

என் பார்வையில் மைனா
இன்று காலை தொட்டே மழை சென்னையில் பெய்து கொண்டிருந்தபடியால் தியேட்டர் பக்கம் ஒதுங்கினேன். பார்த்த படம் மைனா. கதை ஒன்றும் புதியதல்ல. ஒரு வரி கதைதான். ஆனால் வித்யாசமாக சொல்லப்பட்ட விதத்திற்கு பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள். படத்தின் நாயகனும் நாயகியும் புதுமுகங்கள். விதார்த்தும், அமலாவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். சமீப காலமாக தமிழ் திரையுலகில் இது போன்ற படங்கள் வந்து அவ்வப்போது புது இயக்குனர்கள் நல்ல படம் கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை ஊட்டுகின்றன.

போடி, தேனீ பக்கம் இவ்வளவு அழகான இடங்களா. ஆஹா லொகேசன் அருமை. படத்தின் இன்னும் ரசிக்க வேண்டிய விஷயம் ஈமானின் பின்னணி இசை. காமெடியில் தம்பி ராமையா கலக்கியிருக்கிறார். முக்கியமாக தன் மேலதிகாரியின் பதட்டதைக் குறைத்து, “எனக்கு மட்டுமா தீபாவளி கொண்டாட முடியவில்லை என்று ஆதங்கம் இல்லை. விடுங்க ஸார் அவனை நான் பார்த்துக் கொள்கிறேன், சாப்பாட்டுல விஷம் வைத்துவிடுகிறேன் என்று தன் எல்லா முகங்களையும் காட்டுகிறார். ஜெயில் அதிகாரியாக வரும் சேது, நாயகியின் அம்மா, நாயகனின் அப்பா என்று ஒவ்வொருவரும் படத்தில் இயல்பாக நடித்திருக்கிறார்கள். பேருந்து குத்துப் பாட்டு ஆரம்பிக்கும் முன்பு அரங்கில் எழுந்த ஆரவாரம், குத்துப் பாட்டையும் தமிழ் படத்தையும் பிரிக்க முடியாது என்றே தோன்றுகிறது.

படம் முடியும்பொழுது நல்ல படம் பார்த்த திருப்தி.



ராசாவும் அலைக்கற்றை விவகாரமும்.


ராசா ராஜினாமா எப்பொழுதோ நடந்திருக்க வேண்டிய ஒன்று, தாமதப் படுத்தியதால், தி. மு. க விற்கு தலைக் குனிவு. ராசாவிற்குப் பிறகு “ராணி”தான் அமைச்சர் என்ற பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து காங்கிரெஸ் சட்டமன்ற தேர்தலில் அதிக இடம் பேரம் பேச அச்சாரம் போட்டுவிட்டனர். அம்மா வேறு கதவை திறந்து கூவுகிற படியால் காங்கிரெஸ் பூனை எந்தப் பக்கம் தாவும் என்பது தற்போது கேள்விக் குறியே. மொத்தத்தில் வரும் தேர்தல் அதிக எதிர் பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. ஒன்று யார் வந்தாலும் ஒன்றும் பெரிய மாற்றம் வரப்போவதில்லை என்பது ஊரறிந்த விஷயம்.



அனுபவமொழிகள்

குற்றம் புரிந்தவன் தனக்கு நியாயம் கேட்கிறான், குற்றத்திற்கு ஆட்பட்டவனும் நியாயம் கேட்கிறான், யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம்தான் முடிவு செய்கிறது.

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால், பார்ப்பது எல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.



...............கண்ணதாசன்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 10 November 2010

சுவரொட்டியும் சிங்கார சென்னையும்...................

“ஜல்” புயல் ஜல்சா பண்ணுதுன்னு சொல்லி தோஹாவில் விமானம் கிளம்ப ஐந்து மணி நேரம் தாமதம். திண்டாடி தெரு பொறுக்கி ஒரு வழியாக சிங்கார சென்னை வந்து சேர்ந்தேன். எல்லா வண்டியும் ஒரே நேரத்தில் வந்ததால் நம்ம இமிக்ரேஷன் முழி பிதுங்கி ஒரே குழப்பம். ஒரு வழியாக வெளியே வந்தால் டாக்ஸி இல்லை. புயலுக்கான அறிகுறியே இல்லை. வெயில் பின்னிக்கொண்டிருந்தது. ஒரு மணி நேரம் தேவுடு காத்த பின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன். கிண்டி மேம்பாலம் அருகே நம்ம மேயர் தலைமையில் பிளாக்பெர்ரி விளம்பரத்திற்கு கருப்பு மை பூசிக்கொண்டிருந்தார்கள். டிவி கமெரா வைத்து படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இன்னா விஷயம் என்று சாரதியை கேட்டா, எல்லா விளம்பரத்தையும் அகற்றுகிரார்கள் என்றார். சுவரொட்டி விளம்பர பலகைகள் எல்லாம் அகற்றப்போவதாக சென்னை மாநகராட்சி சொல்லி இருக்கிறார்களாம்.

சுவரொட்டியில்லாத சென்னை கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. இந்த சுவரொட்டி விளம்பரங்கள் ஒரு பெரிய தொழிற்பேட்டை. சமீப காலமாக, மைனாவிற்கு மஞ்சள் நீராட்டு, மங்கத்தாவிற்கு முதலிரவு, இல்லற வாழ்வில் இணையும் இன்பாவிற்கு வாழ்த்து என்று எல்லா சுவர்களும் பல்லிளிக்கின்றன. மேலும் தேர்தல் நெருங்கும் இந்நேரம் சுவரொட்டி, பெயிண்ட் வியாபாரம் களை கட்டும் இது தவிர்க்கப்படுமா என்பது சந்தேகமே.

என் நண்பர்கள் விளம்பர வியாபாரத்தில் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் “பூவா”விற்கு என்ன செய்வார்களோ தெரியவில்லை. அந்தக் கவலையுடனே வீட்டிற்கு வந்து மாலை “கஜா”விற்கு அலை பேசினேன்.

இன்னாடா உன் தொழிலுக்கு பிரச்சினை போல இருக்கே என்றேன். எவன் சொன்னான், அட போடா போக்கத்தவனே இப்போதாண்டா இருபது லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டிருக்கேன், சுவரொட்டியில்லா சென்னை சும்மா “ஓளவாகட்டிக்கு” என்றான்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 8 November 2010

நாயிடம் நான்

தாயிடம் பிறந்தேன்


தந்தையிடம் வளர்ந்தேன்

தமிழிடம் பயின்றேன்

ஆசிரியரிடம் அறிவுற்றேன்

பணத்திடம் படிந்தேன்

குணத்தினை அடகுற்றேன்

தன்மானம் தவிர்த்தேன்

நிஜ வாழ்கை தேடி

நாயிடம் அகப்பட்டு

பேயாகிப் போனேன்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 27 October 2010

கலக்கல் காக்டெயில்-11

வெறி பிடித்திருக்கிறது




அன்புமணி ராமதாஸ் சமீபத்திய கூட்டம் ஒன்றில் தனக்கு வெறி பிடித்திருப்பதாக கூறியுள்ளார். ஆட்சியைப் பிடிக்கும் வெறியாம். மூன்று கோடி வன்னியர் உள்ள நாட்டில் நம் கட்சி ஆட்சியைப் பிடிப்பது அரிதா? என்று கேட்டுள்ளார்.

மேலும் இது வரை இருந்த மத்திய அமைச்ச்சர்களிலே தான் தான் ஏதோ கிழித்ததுப் போலவும், மற்றவர்கள் கு........யை தேய்ப்பதற்கு பாராளுமன்றம் போவதாகவும் கூறியுள்ளார். ஆனால் இவர் பாராளுமன்றம் போனது பின் வழியாக. இன்னும் ஒரு முறைகூட மக்களை சந்திக்கவில்லை.

இவர்கள் பகிரங்கமாக ஜாதியரசியல் நடத்துவது நம் நாட்டின் சாபக்கேடு. வெள்ளையனைவிட இவர்கள் தான் சாதிப்பெயரை சொல்லிக்கொண்டு பிரித்தாண்டு கொண்டிருக்கிறார்கள்.

வெறி நாய்க்கடிக்கு மருந்து கண்டு பிடித்தார்கள், ஆனால் இன்னும் பதவி வெறி, ஜாதி வெறி, பண வெறி, காம வெறி போன்றவற்றிக்கு எப்பொழுது கண்டு பிடிப்பார்களோ?

இந்த முறை இவர்கள் ஆட்சிக்கு வந்தால், அப்பாவும் மகனும் சேர்ந்து ஒரு வேளை கண்டு பிடிப்பார்களோ?



படித்ததில் ரசித்த கவிதைகள் சில

இடமற்று நிற்கும்

கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க

பேருந்து வெளியே

பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம்

எதை எதிர்பார்க்கிறாய்

காதலையா?



வரிக்கு வரி நிஜம்



ஆமாம் ஆமாம்

நீ பேசும் ஒவ்வொன்றும்

வரிக்கு வரி நிஜம்

முற்றுப்புள்ளி உள்ளிட்ட

அனைத்தும் ஏற்கத் தயார்

அனைத்துக்கும் ஆமாம்.

சங்கிலியால் கட்டப்பட்டது

யானை என்றாலே

தப்புவது கடினமாச்சே

சங்கிலியால் கட்டப்பட்ட டம்ளர்

தப்புமோ கூறு.



நன்றி: பா. சத்தியமோகன்.

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 23 October 2010

ஜீரோ ஆன ஹீரோ -----அம்மா பார்வையில்

அம்மாவின் மதுரை கூட்டம்தான் இப்பொழுது அரசியல் களத்தின் ஹைலைட். வழக்கம்போல தி.மு.க தலைவரையும் அவர்கள் குடும்பத்தாரையும் ஒரு பிடி பிடித்துவிட்டார்கள்.


அஞ்சா நெஞ்சனை பிரித்து, அடித்து, பிழிந்து, காயப் போட்டு தொங்க விட்டார்கள். ஐயாவின் குடும்பம் கொழிப்பதையும், திரைப் படத்துறையில் அவர்களது ஆக்கிரமிப்பு, ஆதிக்கம் இப்பொழுது கோலோச்சுவதையும் ஒரு பிடி பிடித்தார்கள். அப்பொழுது சொன்ன விஷயம் ஒன்று நெருடுகிறது. கலைஞர் குடும்பம் ஹீரோவை ஜீரோவாக்கி விட்டதாக சொன்னார்கள். அம்மாவின் பார்வையில் உள்ள அந்த ஹீரோ ஜீரோவானது சூரிய குடும்பம் காரணம் என்று கூற்று சற்றே நெருடுகிறது. அதே சூரிய குடும்பம் அந்த ஹீரோவை தூக்கி வைத்துக் கொண்டாடிய காலமும் உண்டு. உண்மையில் ஹீரோ ஜீரோவாவதும், ஜீரோ ஹீரோவாவதும் அவரவர் திறமை சார்ந்த விஷயம்.

தமிழ் திரையுலகம் எத்தனையோ ஹீரோக்களை பார்த்திருக்கிறது. தயாரிப்பாளர் வாரிசுகள், நடிகர்களின் வாரிசுகள், இயக்குனரின் வாரிசுகள் என்று புது புதிதாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் எத்துனை பேர் நிலைக்கிறார்கள் என்பது தான் கேள்வி. என்ன தான் ஊடங்கங்கள் ஒத்தூதினாலும், உயர தூக்கிப் பிடித்தாலும் ரசிகனின் பார்வை வேறு பட்டது. அதே நேரத்தில் நாம் என்ன பார்க்க வேண்டும், என்ன கேட்க வேண்டும் என்பது இப்பொழுது தொலைக் காட்சிகள் நிர்ணயிக்கின்றன என்ற கூற்றில் ஓரளவிற்கு உண்மை இருக்கவே செய்கிறது.

அம்மா இது போல பல விஷயங்களை மதுரையில் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். அறிவாலயமும் பதிலுக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் கட்சிகள் வந்தாலும் எங்களை ஒன்றும் பண்ண முடியாது என்கிறார்கள். அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இன்னும் என்ன என்ன நடக்கப் போகிறது, திருவாளர் பொது ஜனம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் எழுதப் போகும் தீர்ப்பு அவருக்கே தெரிந்த விஷயம்.

ஆனால் அவர் மாத்தி மாத்தி குத்தி மன்னிப்போம் மறப்போம் என்று எல்லோரும் கொள்ளையடிக்க வழி செய்வார்.

இனி கட்சிகள் அணி மாறும் கூத்து, பேரம் பேசுதல், அல்லக்கை கட்சிகளின் ஆட்டம் ஒரே ரகளைதான்.

இனி ஒரு படம் நடித்தவர், ஓரமா தலையக் காட்டினவர், எல்லோரும் அரசியல் களத்தில் ஆடுவார்கள். இரண்டு கட்சிகளும் மார்க்கெட் போன நடிகை, நடிகர்களை காசு கொடுத்து களத்தில் இறக்குவார்கள். அவர்களும் வாங்கிய காசிற்கு ஜால்ரா போடுவார்கள். தமிழ் நாட்டு அரசியலின் சாபக்கேடு இது.

அது சரி நடிகரின் படத்திற்கு பாலபிஷேகமும், பீரபிஷேகமும் செய்யும் பகுத்தறிவாளர்கள் உள்ள நாடு இது.

எப்பொழுது விடியும்?.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 20 October 2010

கலக்கல் காக்டெயில் -10 (++ 18 வயது வந்தவர்களுக்கு மட்டும்)

எந்திரனும் எரியும் வயிறுகளும்


எந்திரன் அடித்த வசூலைக் கண்டு நிறைய வயிறுகள் இப்பொழுது எரிந்துக் கொண்டிருக்கின்றன. படத்திற்கு வந்த விமர்சனங்களில் பெரும்பாலானவை படத்தைப் பற்றி நல்லதாகவே சொல்லியிருக்கின்றன. படத்தின் பிரம்மாண்டம், கொடுக்கப்பட்ட விளம்பரம் எல்லாம் படத்திற்கு நினைத்ததைவிட சற்று அதிகப் படியான வெற்றியையே கொடுத்திருக்கிறது. படத்திற்கு “ரிபீட் ஆடியன்ஸ்” அதிகம். அடையாரில் உள்ள மூன்று தியேட்டர்களிலும் எந்திரந்தான் ஓடுகிறது. இளைஞர்கள் இந்தப் படத்தை “ ஐ ரோபோ” “பைசெண்டியநெல் மேன்” படங்களின் அட்டைக் காப்பி என்று சொன்னாலும் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் இரண்டு வாரத்தை விட டிக்கெட்டுகள் இப்பொழுது எளிதாக கிடைக்கின்றன. இரண்டாயிரம் தியேட்டரிலிருந்து படிப்படியாக இருநூறு தியேட்டர் என்று இளைத்தாலும் இக்கால கட்டத்தில் இது வெற்றியே. கலாநிதி மாறன் காட்டில் மழை.



படித்ததில் பிடித்த கவிதை

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்

இவைசரி யென்றால் இயம்புதென் தொழில்

இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை

ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்

அவனும் யானுமே அறிந்தலை அறிக

பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்

பாசம் மிகுத்தேன், பற்றுதல் மிகுத்தேன்

நானே தொடக்கம் நானே முடிவு

நானுரைப்பதுதான் நாட்டின் சட்டம்.



--------------கண்ணதாசன்



ரசித்த நகைச்சுவை

சுஜாதாவின் கேள்வி பதில் தொடரில் “வயாக்ரா” பற்றிய கேள்விக்கு, வந்த ஒரு ஜோக்.

ஒருவன் டாக்டரிடம் சென்று தன் இயலாமையை கூறி மருந்து கேட்க அவர் மேற் கூறிய ஏழு மாத்திரைகளைக் கொடுத்து நாளைக்கு ஒன்று வீதம் ஏழு நாட்களுக்கு சாப்பிட சொன்னாராம். அவன் பேராசையில் ஒரே நாளில் ஏழையும் சாப்பிட்டிருக்கிறான். அப்புறம் என்ன ஓயாமல் இன்பத்தில் திளைத்து இறந்தே விட்டான்.

சவப் பெட்டியை இன்னும் மூடமுடியவில்லையாம்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 19 October 2010

மரணம்

பிறப்புடன் தவறாமல் பிறக்கும் சகோதரன்


எப்பொழுதும் இருப்பான் எப்பொழுது அணைப்பான்

தப்பாமல் சொல்ல தந்திரனாலும் இயலாது

வேண்டுவர்க்கு விந்தையாகி வேடிக்கை காட்டுவான்

வேண்டாதவரை விரைந்து வந்து தழுவுவான்

கருணை மறந்து கருவிலும் அழிப்பான்

முதியவர்களின் நண்பன், இளசுகளின் எதிரி

விபத்து, வியாதி, இயற்கை பல ரூபம் காட்டுவான்

சமத்துவத்தை சத்தியாமாக்கும் சாதனையாளன்

சாதிப் பிரிவினை சடுதியிலே மறைத்து

இறுதியிலே ஒரு ஜாதிக் காட்டுவான்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 6 October 2010

கலக்கல் காக்டெயில்-9

எந்திரனும் என் அருமை தங்கமணியும்


எந்திரன் பார்த்த களிப்பில் தற்சமயம் வண்டி பிடித்து நாடு வந்து சேர்ந்துவிட்டேன். ஒரு பத்து நாட்கள் விடுப்பில் வந்திருக்கிறேன். ஆதலால் பதிவு எழுதுவதில் சற்று சுணக்கம். வீடு வந்து சேர்ந்தவுடன் தங்கமணி எந்திரனுக்கு டிக்கெட் புக் செய்து வைத்திருந்த செய்தியை சொன்னாள். தோஹாவில் ஒரு மொக்கை தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தேன். ஒலி அமைப்பு கேவலமாக இருந்தது. இந்த அழகில் முதல் நாள் முதல் காட்சி வேறு, டிக்கெட் வாங்கி மன்னன் ரஜினி, கௌண்டமணி ரேஞ்சில் அரங்கத்திற்குள் நுழைந்தேன். ஆனால் படம் தந்த பிரமிப்பில் இது எல்லாம் ஜூஜூபி. நாளை நல்ல தியேட்டரில் பார்த்துவிட்டு எந்திரன் பார்ட்--2 விமர்சனம்.

நான் ரசித்த கவிதை

நம்ம காக்டெயில் வரிசையில் கவிதை போட வேண்டும். அந்த வகையில் நான் ரசித்த கவிதை

கவிதை என்று எதை சொல்வது?



கவிதை என்று எதை சொல்வது

வார்த்தைகளைக் கோர்த்து வடிவமைத்து

பொருளிலே உட்பொருள் வைத்து

விளங்கச் சொல்வது கவிதையா?, இல்லை



வார்த்தைகளின் தொடர்பறுத்து,

உரை நடையை உடைத்துப் போட்டு

வாசகனின் மூளையை வறுத்தெடுத்து

விளங்காத புதிர் செய்வதையா?, இல்லை



“தளை” பார்த்து “சீர்” அமைத்து

தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்

வெண்பா, கலிப்பா என கிண்டி

புரியாத புதிர் செய்வதா? , இல்லை



யாப்பிலக்கணம் பொருந்தாத

வசனக்கவி, புதுக் கவிதை

ஹைக்கூ, லிமரிக் வடிவ

எளிய வார்த்தைக் கோர்வைகளா?, இல்லை



கந்தனைகான கார்த்திகைக்கு வந்தேன்

உன்னைக் கண்டேன் ஊருக்கு செல்லேன் என்ற

நாட்டுப் புறக் கவிஞனின் எளிமையான

புரியும் மண் வாசக் கவிதைகளா? இல்லை,





குனிந்து நிமிர்ந்து கூடம் பெருக்கினாள்,

கூடம் சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு

என்ற நகர நையாண்டி வகை

புதுக் கவிதைகளா? இல்லை,



எழுதும் கவிஞனின் அறிவும்

எளிமையான வார்த்தைகளும்

நயம் கொண்டு சேர்த்து

வாசகனின் என்ன ஓட்டத்தில்

நிலைத்து நிற்கின்ற

சலனத்தை கொடுக்கும்

கவிதைகளா?

கவிதை என்று

எதை சொல்வது?



இதை எழுதியவர் அடியேன் தான். எல்லா “தலை”ங்களும் மன்னிப்பீர்களாக.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 30 September 2010

எந்திரன்-விமர்சனம்

நான் எழுதும் முதல் தமிழ் பட விமர்சனம். அயல் நாடுகளில் இன்றே எந்திரன் திரையிடப்பட்டது. முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் கிடைத்தது பெரிய அதிசயம், அதைப் பற்றிய பதிவு தனியாகப் போடவேண்டும்.


எண்பதுகளில் வந்த சுஜாதாவின் என் இனிய இயந்திராவும், ஜீனோவும் இணைத்து எடுக்கப்பட்ட கதைதான் கரு. சுஜாதாவின் திரைக்கதையும், வசனமும் படத்தின் பலம். தன் கடைசி பங்களிப்பை மிக சரியாக செய்திருக்கிறார். படத்தின் பெயரை தமிழாக்கம் செய்திருப்பதிலேயே அவருடைய திறமை பளிச்சிடுகிறது.

இரண்டே முக்கால் மணிநேரம் ஓடும் படத்தை சங்கர் மிக விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். நம்ம ஊரு கதையை ஹாலிவுட் ரேஞ்சில் எடுத்திருப்பதற்கு சங்கருக்கு பாராட்டுகள்.

சூப்பர்ஸ்டார் அசத்துகிறார். முக்கியமாக எந்திரனாக வருபவரின் “பாடி லாங்குவேஜ்”, ரோபோ ஆடும் நடனங்களில் அவரின் உழைப்பு தெரிகிறது. கிளைமேக்ஸில் விஞ்ஞானி தான் உருவாக்கிய ரோபோவுடன் கலந்து தன் கோட்டைக்குள் நுழைந்தவுடன் கண்டு பிடிப்பதிலும், கருப்பு ஆட்டை கண்டுபிடித்து கனைக்கிறாரே, இது அவருடைய ஸ்பெஷாலிட்டி. நகைச்சுவையில் சந்தானம் கருணாஸ் கூட்டணியை டம்மி ஆக்கிவிட்டு “எந்திரன்” தூள் கிளப்பிவிட்டார். ரஜினிக்கு நகைச்சுவை இயல்பாக நன்றாகவே வரும். படத்தில் நமக்கு தீபாவளி வாழ்த்தும் அட்வான்சாகவே சொல்லுகிறார். முக்கியமாக இதில் ரஜனிக்கு தேவையில்லாத “பில்டப்” மற்றும் “பஞ்ச் டயலாக்” இல்லை.

எந்திரன் சனாவுடன் காதல் கொண்டு நள்ளிரவில் சந்திக்கப் போய், சனா தன்னை கடித்த “ரங்குஸ்கியை” பிடிக்கப் போய் கொசுக்களுடன் நடத்தும் பேச்சு வார்த்தையில், சுஜாதா, சங்கர் கூட்டணியின் படைப்பு ரசிக்க வைக்கிறது.

ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் கொள்ளை அழகு. நடனத்தில் அசத்தியிருக்கிறார். அவர் ரோபோவை முத்தமிடும் பொழுது அரங்கமே “கபர்தார்” என்று கத்துகிறது.

இசைப்புயல் ரஹமான், “காதல் அணுக்கள்”, “இரும்பிலே ஒரு இதயம்” பாடல்களில் வித்யாசமான இசையைக் கொடுத்து பட்டையை கிளப்பிருக்கிறார். அரிமா அரிமாவில் ஹரிஹரன் அடித்தொண்டையில் “சின்னஞ்சிறுசுகளின் இதயம் திருடும் சிலிகான் சிங்கம் நான்” என்கிறார். ஆமாம் குழந்தைகளுக்கு பிடித்தப் படமாக இருக்கும்.

“காதல் அணுக்கள் படமாக்கப்பட்ட விதம், எடுக்கப்பட்ட இடம் நாம் இதுவரை பார்த்திராத ஒரு லொகேஷன். ரசூல் பூக்குட்டி தன் பெயரை நிலை நாட்டியிருக்கிறார்.

மின்சார வண்டி சண்டை காட்சியில் பீட்டர் ஹெய்ன் ஜொலிக்கிறார்.

இந்தப் படத்தை பார்க்க நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள அரங்கை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இருந்தும் படத்தின் மயக்கத்தில், சூப்பர்ஸ்டார் நடிப்பில் திளைத்திருக்கிறேன்.

கலாநிதி மாறன் கொடுத்த விளம்பரத்திற்கு எந்திரன் சற்றும் குறையவில்லை.

மொத்தத்தில் எந்திரன் – மனதில் நிற்கிறான். ஆம் அவன் அமரன்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 22 September 2010

எந்திரனும் எதிர்வரப் போகும் தேர்தலும்

எந்திரன் எவ்வளவு எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது என்பதை கருவில் உள்ள குழந்தை கூட சொல்லும். பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் இப்பொழுதெல்லாம் லீவ் கடிதங்கள் “As I am suffering from “yenthiran” fever, I kindly request” , என்று எழுதப்படுகின்றன. இனி பாலாபிஷேகம், பீராபிஷேகம் என்று களைகட்டும். ஏற்கனவே எல்லா வானொலிகளிலும் “அரிமாவும் கிளிமாஞ்சாரோவும்” ஒரு நாளைக்கு நூற்றி இருபதுமுறை ஒலிபரப்பப்படுகிறது. “எந்திரன் எப்போ வருவான் எப்போ வருவான்” என்று ஒரு எதிர்பார்ப்பு. இந்த ஜுரம ஏற்கனவே அபாய எல்லையைத் தொட்டுவிட்டது. இதற்கு சற்றும் குறையாதது வரப் போகும் சட்டமன்ற தேர்தல். தமிழ் நாடு 2011 ல் சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கியிருக்கிறது.


இனி கூட்டணி, பேரணி என்று ஊரு நாடிக்கப்படும். ஏற்கனவே யாரு வேட்டி துவைக்கப் போகிறார்கள், இல்லை உள்பாவாடை துவைக்கப் போகிறார்கள் என்ற பேச்சு தொடங்கிவிட்டது. ஒரு சீட்டு, ரெண்டு சீட்டு கட்சியெல்லாம் இப்பொழுதே துண்டு போட்டு ஒரு இடத்தில் ஒதுங்கிவிட்டனர். முப்பது நாற்பது சீட்டுகள் பேசும் கட்சிகள் முண்டியடித்து பேரம் பேசத் தொடங்கிவிட்டனர். இன்னொருக் கட்சி நானே ராஜா நானே மந்திரி என்று கூவிக் கொண்டிருக்கிறது. தேசியக் கட்சி ஒற்றர்கள் வைத்து வேவு பார்த்து கொண்டிருக்கின்றனர். உளவுப் படையின் அறிக்கையில்தான் கூட்டணி தர்மம் காக்கப்படுமா இல்லை தாக்கப்படுமா என்று தெரியும்.

ஆளுங்கட்சி அறிவிக்கப் போகும் இலவசங்கள் ஏலம் போகும். எதிர் கட்சி ஏளனப் பேச்சு எங்கும் எதிரொலிக்கும். லாரிகளுக்கு கிராக்கி ஏறும். டாஸ்மாக் விற்பனை விண்ணைத்தாண்டும். போஸ்டர் வியாபாரம் கல்லா கட்டும். தலைவர்களை வரவேற்க வெடி விற்பனை, ஏற்கனவே சிவகாசிக்கு மொத்த ஆர்டர் செய்துவிட்டதாக செய்திகள் சொல்லுகின்றன. இனி சந்து முனைகளில் பந்தல்கள் பெருகி மைக் செட் நூற்றி இருபது “டெசிபலை” தாண்டும். எல்லாவற்றையும் மெளனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் திருவாளர் பொது ஜனம்.

எந்திரன் வெல்லுவானா?

அடுத்த ஆட்சி அய்யாவா? இல்லை அம்மாவா?, இல்லை ஐயைய்யாவா?, இல்லை அம்மையாவா?, பொருத்திருந்து பார்ப்போம்.

ஒரு முடிவு இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.

மற்றைய முடிவு தெரிய சில மாதங்கள் ஆகும்.

அய்.. நானும் எந்திரனை வைத்து ஒரு பதிவு போட்டுட்டேனே.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 15 September 2010

வீடு

செங்கலும், மரமும் வைத்துக் கட்டி


தங்க இடமும், பாதுகாப்பும் தந்ததால்

எங்கள் மதிப்பினில் வீடாகியதா? இல்லை

அன்பைக்கொட்டி பல கதைகள் சொல்லித்தந்த

பண்பை வளர்த்த தாத்தா அறையினாலா?

மென்மையாக எங்கள் தலையை கோதி

அன்பை விதைக்கும் பாட்டியினாலா?

அடுப்படியில் உழன்று எல்லோரின்

அடிப்படை தேவைகளை அல்லும் பகலும்

அயராது தரும் என் அன்னையின் இடமா?

நாளெல்லாம் உழைத்து இந்த வீட்டின்

மாளாத தேவைகளை பூர்த்தி செய்து

ஓய்வெடுத்து உறங்கும் அப்பாவின் அறையா?

மழை நீரில் காகிதக் கப்பல் விட

ஏதுவாகும் எங்கள் முற்றமா?

மாவும் தென்னையும் நெடிது நின்று

பூக்கள் பூத்துசொரியும் தோட்டமா?

உற்றமும் சுற்றமும் அல்லும்பகலும்

வந்து செல்லும் வாசலா?

வீடு என்பது எது?

Follow kummachi on Twitter

Post Comment

Friday 10 September 2010

கலக்கல் காக்டெயில்- 8

மெகா சீரியல்


சமீபத்திய சூடான விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் சூதாட்டம் தான். தோண்ட தோண்ட தினமும் புத்தம் புதிய தகல்வல்கள். குள்ள நரி கம்ரன் அகமல் சிட்னி டெஸ்டை தோற்க காரணம் ஆனவர். இதில் நம்ப பாதாள புகழ் தாவூதிர்க்கு ₹ நாற்பது கோடி நஷ்டமாம். அடாடா இப்பவே கண்ணை கட்டுதே. எனக்கு என்னமோ முக்கால்வாசி விளையாட்டுக்கள் நடத்தபடுபவர்களாலேயே முடிவுகள் நிர்ணயிக்கப் படுகின்றனவோ என்ற ஐயப்பாடு எழுகிறது. இதற்கு உதாரணம் சமீபத்திய முத்தரப்பு ஒரு நாள் போட்டி. ந்யுஜிலாந்து இந்தியாவிடம் தோற்று இந்தியா இறுதிப் போட்டியில் வந்ததே முன்னேற்பாடு என்று தோன்றுகிறது.

அட போங்கப்பா விடிய விடிய விளையாட்டை பார்பதற்கு பதில் மெகா சீரியலே தேவலை. வாழ்க மெகா சீரியல்.



கவிதை

சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்

தர்மத்தில் இணைந்து வாழ்வோம்

கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்

பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!

பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்

பக்கத்தில் பங்கு கொள்வோம்!

பாதாதி கேசமும் சீரான நாயகன்

பளிச்சென்று துணைவி வாழ்க!

படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்

பாதியாய்த் துணைவன் வாழ்க!

தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு

என்றெண்ணியே தலைவி வாழ்க!

சமகால யோகமிது வெகுகால யாகமென

சம்சாரம் இனிது வாழ்க!

- கவிஞர் கண்ணதாசன் -



ஜோக் (++18 மட்டும்)

செக்கப் (Checkup), பிக்கப்( pickup)புக்கும் என்ன வித்தியாசம்.

நர்ஸ் நம்ம கையப் பிடிச்சா அது செக்கப்பு.

நாம நர்ஸ் கையப் பிடிச்சா உடனே பிக்கப்பு.



வெண்டைக்காய்க்கும், முருங்கைக்காய்க்கும் என்ன வித்தியாசம்?.

வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா போடலாம்.

முருங்கைக்காய் சாப்பிட்டா கணக்கு டீச்சர........................., கணக்கு பண்ணலாம்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 9 September 2010

அடை மழையும் என் தூங்காத இரவும்

மழை என்றாலே எனக்கு இன்னும் அந்த நினைவு போகவில்லை. இன்று நினைத்தாலும் அந்த தூங்கா இரவு என்னுள் பயம் பரவ செய்யும். சென்னையில் ஒரு அக்டோபர் தினம். அன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து மழை. முதல் நாள் இரவு சற்று ஒய்ந்துவிட்டு அன்று காலை மழை வலுக்கத் தொடங்கிவிட்டது. நான் கம்பெனிக்குப் போகவில்லை. நான் விடுவிக்க வேண்டியவன் எனக்குப் பதில் காலை ஷிப்டில் தங்கிவிட்டான். என் தம்பி தங்கைகளுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை.


கடமை உணர்ச்சி தவறாத என் அப்பா வழக்கம் போல் ஆபீசுக்கு கிளம்பி விட்டார். அவரது பாரம்பரிய உடையான வேட்டியைக் கட்டிக்கொண்டு, ஹவாய் சப்பலுடன் நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேளாமல் கிளம்பிவிட்டார். மதியம் வரை விடாமல் மழை கொட்டிகொண்டிருந்தது. தெருவெல்லாம் ஒரே வெள்ளக் காடு. ஒரு தம் அடிக்கக்கூட வெளியில் செல்ல முடியவில்லை. எப்படியோ மாலை வரை தள்ளிவிட்டேன். நான்கு மணிக்கே இரவு எட்டுமணி போல் இருட்டு. இரவு ஏழு மணியாகியும் அப்பா இன்னு வீடு திரும்பவில்லை. அப்பாவைத் தேடிக்கொண்டு நான் ரயில்வே ஸ்டேஷன் வரை போகலாமென்று கிளம்பினேன். போகும் வழியில் அப்பாவுடன் வேலை செய்பவர் வீடு இருந்தது. அவர் வீட்டில் சென்று அவர் வந்துவிட்டாரா பார்க்கலாம் என்று கதவைத் தட்டினேன். அவர்தான் கதவைத் திறந்தார். அப்பா இன்று மதியம் ஒரு மணிக்கே ஆபிஸை விட்டு கிளம்பிவிட்டார் என்றார். ரயில்வே ஸ்டேஷன் சென்று வண்டி வந்ததா என்று பார்க்கப் போனால் அங்கே ஒரே கும்மிருட்டு. ஸ்டேஷன் மாஸ்டர் ரூமில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. வீடு வந்து அம்மாவிடம் சொன்னேன்.

அம்மா மிக தைரியசாலி, கவலைப் படாதே அப்பா வந்து விடுவார் என்றாள்.இரவு மணி பத்து ஆகியது. உறங்கச் சென்றோம். எனக்கு அப்பாவிற்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்று கவலை. உறக்கம் பிடிக்கவில்லை. இரவு மணி இரண்டு ஆகியது. எப்பொழுது உறங்கினேன் என்று தெரியாது. காலை ஐந்து மணிக்கு எழுந்து நான் கம்பெனிக்கு கிளம்பவேண்டும். அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டில் இப்பொழுது எல்லோரையும் கவலை ஆட்கொண்டது. நான் கம்பெனி செல்லவில்லை. மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. நேரம் ஆக ஆக எல்லோரிடமும் பயம் தொற்றிக்கொண்டது. கிட்ட தட்ட என் தம்பி தங்கைகள் அழும் நிலைக்கு வந்து விட்டார்ககள். மணி எட்டு ஆகிவிட்டது. மழை வலுத்து விட்டது. நானும் என் தம்பியும் குடையை எடுத்துக் அப்பாவை தேடி கொண்டு கிளம்பினோம். ஸ்டேஷன் வரை சென்றேன் வண்டி வந்தத் தடயம் ஏதுமில்லை. அப்பாவை காணவில்லை.

பயம் ஏற ஏற வீட்டிற்கு திரும்பினேன். என் தங்கை வெளியில் அப்பா எங்கே என்றாள்?. இல்லை காணவில்லை என்றேன். தம்பியும் திரும்பி வந்தான். அப்பா வரவில்லை.

அம்மா இப்பொழுதும் தைரியமாக இருந்தாள். அப்பா தன் தங்கை வீட்டிற்கு போயிருப்பார்கள் கவலைப்படாதீர்கள் என்றாள்.

சுமார் பத்து மணிக்கு அப்பா வீட்டிற்கு வந்தார். இரவு முழுதும் கண் முழித்து சிவந்த கண்களுடன் வந்தார். எங்கள் கவலையைக் கண்டு அப்பா ஆச்சர்யமுற்றார். அவர் மதியம் மூன்று மணிக்கு வண்டியில் ஏறி இருக்கிறார். வண்டியில் நல்லக் கூட்டம். இறங்க வேண்டிய ஸ்டேஷன் வரும்பொழுது இறங்க முடியவில்லை. வண்டி அடுத்த ஸ்டேஷனை நெருங்கும் பொழுது மின்சாரம் நின்று போய் வண்டி இரண்டு ஸ்டேஷன்களுக்கு நடுவே நின்று இருக்கிறது.

மறு நாள் மின்சாரம் வந்தவுடன் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி மறு வண்டு பிடித்து வந்திருக்கிறார்.

எங்கள் எல்லோருக்கும் மழை என்றாலே அந்த நியாபகம் வந்து இன்னும் எங்களை பயமுறுத்தும்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 7 September 2010

கந்தன் வளைகுடாதிரும்பி (Gulf return)

கடன உடன வாங்கி


கைய கால புடிச்சி

காசு மேல காச வச்சி

கல்லிவெள்ளி விசா வாங்கி

கள்ளத்தோணி ஏறி

கடல் கடந்து

கடும் வெய்யிலில்

கட்டிடங்கள் கட்டும்

கடினத் தொழிலில்

காசு பணம் சேர்த்து

கனவுலகில் வாழ்க்கை.





காலம் பல கடந்து

ஊருக்குத் திரும்புகையில்

உற்ற சுற்றம் கூடி

பெட்டி பிரித்து

பொருட்கள் சூறையாடல்

பரிவுடனே தாயிடம்

உனக்கு என்ன வேணும்

என்று வினவ

“கந்தன் நல் வாழ்வு”.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 3 September 2010

இரண்டு செய்திகள்---நல்லா அல்வா தராங்கப்பா

இன்று இரண்டு செய்திகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. ஒன்று உமாசங்கர் மீண்டும் பணி நியமனம். தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட உமா சங்கர் டான்சி உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இது மாநில அரசுக்கு விழுந்த அடி. ஊழலை அம்பலப் படுத்தியதற்காக பழைய கோப்பை தூசி தட்டி எடுத்து மாநில அரசு அவரை வீண் பழி சுமத்தி தற்காலிக பணி நீக்கம் செய்தது. அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உமா சங்கருக்கு கிடைத்த முதல் வெற்றி.


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,


மறுபடியும் தர்மம் வெல்லும்.

இரண்டாவது செய்தி, கிரிக்கெட் சூதாட்டத்தில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் கிரிகெட் வீரர்களை ஐசிசி நீக்கியிருக்கிறது. பாகிஸ்தான் வீரர்கள் எங்கு சென்றாலும் தொல்லைதான். மிகவும் ஒழுக்கமானவர், மத நெறிகளை கடைபிடிப்பவர் என்று சொல்லப் பட்ட சயீத் அன்வர், சக்லைன் முஷ்டாக் சவுத் ஆப்ரிக்காவில் பாரில் பௌன்செர்களிடம் அடி வாங்கிய செய்தி சில வருஷங்களுக்கு முன்னால் நடந்தது உலகறிந்த விஷயம். இப்பொழுது அமிர, ஆசிப், பட், மூவரும் சூதாட்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். மேலும் வரும் செய்திகள் பாகிஸ்தான் அரசை உலக அரங்கின் முன் சங்கடப் படுத்தியிருக்கிறது.

ஆதலால் பாகிஸ்தான் இப்பொழுது இந்தியாவை இதற்கு குறை சொல்கிறது. இதற்கெல்லாம் காரணம் இந்திய உளவு அமைப்பான ரா(RAW) தான் காரணமாம். நல்லா யோசிக்கிரானுங்கப்பா. சரத் பவார் இதை திட்டமிட்டு செய்ததாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட்டை சூது கவும்,


அதை பாகிஸ்தான் இந்தியா மீது ஏவும்.

சும்மா ஒரு ப்லோல வந்திடுச்சு.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 2 September 2010

கலக்கல் காக்டெயில்- 7 (18+++ மட்டும்)

பாசத்தலைவனுக்கு பாராட்டு




மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு அரசுக்கு நீர்பாசன வசதியை மேம்படுத்த இந்த வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியான ஆயிரம் கோடியில் வெறும் இருபது கோடியே பெற்றுக் கொண்டு அதற்கு உண்டான திட்டத்தை இன்னும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லையாம்.

ஆனால் மற்ற எல்லா மாநில அரசுகளும் இந்த பணத்தை சரியாக உபயோகப் படுத்தியிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிலும் ஆந்திர அரசு ஆயிரம் கோடியை உபயோகித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது சரி நம்ம அரசு எவ்வளவு வேலைதான் செய்வார்கள். இப்பொழுதுதான் செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். அப்புறம் மானாட மயிலாட, குடும்ப விருத்தி, திரையுலகம் எத்தனை வேலை கவனிக்க வேண்டியிருக்கிறது, இதெல்லாம் என்ன ஜூஜூபி.



ரசித்த கவிதை



பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்

பயணம் போறேண்டா - நான்

பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்

பயணம் போறேண்டா

வெளியே படிக்க வேண்டியது நெறைய இருக்கும்

படிச்சிட்டு வாரேண்டா - சிலர்

படிக்க மறந்தது நெறைய இருக்குப்

படிச்சிட்டு வாரேண்டா.

நன்றி: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்



ரசித்த ஜோக்

கணவன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் மனைவி அவனிடம் “ஏங்க இந்த குளியறை குழாயில் தண்ணீர் வரவில்லை கொஞ்சம் சரி பண்ணுங்க என்றாள்.

அதற்கு அவன் எரிச்சலுடன் “என் நெற்றியில் என்ன ப்ளம்பர் என்று எழுதி ஒட்டியிருக்கா” என்றான்.

அடுத்த நாள் வழக்கம்போல் அவன் வீடு திரும்பியவுடன் “ஏங்க இந்த ஹால் பேன் வேலை செய்யவில்லை கொஞ்சம் சரி செய்யுங்க” என்றாள்.

அவன் இம்முறை மிக எரிச்சலுடன் “என் நெற்றியில் என்ன ஏலேக்ட்ரிஷியன் என்று எழுதி ஒட்டியிருக்கா” என்றான்.

அடுத்த நாள் அவன் வீடு திரும்பியவுடன் குழாயும் பேனும் ரிப்பேர் ஆகியிருப்பதை கண்டு மனைவியிடம் கேட்டான். அதற்கு அவள் உங்க நண்பர் வந்திருந்தார், அவரிடம் ரிப்பேர் செய்ய சொன்னேன் என்றாள்.

உங்க நண்பர் ரிப்பேர் செய்வதற்கு நல்ல சாப்பாடோ இல்லைக் கட்டிலில் விருந்தோ அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஹோ அப்படியா என்ன சமையல் செய்துப் போட்டாய் என்று கேட்டான்.

அதற்கு அவள் “என் நெற்றியில் என்ன சமையல்காரி என்று எழுதியா ஒட்டியிருக்கு” என்றாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 1 September 2010

நான் எப்படி பதிவரானேன்?

ஓடி ஓடி ஆணி பிடுங்கிய என்னை குத்த வச்சு ஆணி பிடுங்க வச்சுட்டான் டேமேஜர். போதாகுறைக்கு ஒரு சப்ப மூஞ்சி செக்கரேடரி வேற இல்லாத ஆணியப் பிடுங்க. ரெண்டு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியலை. மூன்றாம் நாள் டேமஜரிடம் போய் சார் இங்கே ஆணியே இல்லை ஸார், என்னை பழைய இடத்திலேயே போஸ்ட் பண்ணிடுங்க ஓடி ஓடி ஆணி பிடுங்கறேன் ஸார்னு கெஞ்சினா, போயா போய் ஒரே ஆணியே அடிச்சு அடிச்சு பிடுங்குன்னு கடுப்பேத்தி அனுப்பிச்சுட்டான்.


ரிசெஷன் டைம் இதுக்கு மேலே கேட்டா இந்த ஆணிக்கே ஆப்பாயிடும் என்று ஒரே ஆணிய அடிச்சு அடிச்சுப் பிடுங்கிட்டு இருந்தேன். அப்படித்தான் ஒரு நாள் ஒரே ஆணி அடிச்சு அடிச்சு பிடுங்கினதுல தலை மொண்ணை ஆயிடுச்சுன்னு, பக்கத்து ஆபீஸ் நண்பனை பார்க்கப் போனேன். அவன் ஐ.டி டிபார்ட்மென்டில் இல்லாத ஆணியப் பிடுங்குறபய.

என்னை பார்த்தவுடன் நீ எங்கேடா இங்க ஆபீஸ் பக்கம், நீ சைட்ல ஆணி பிடுங்கறவனாச்சே? என்று எதோ பைவ் ஸ்டார் ஹோட்டலில் நுழைந்த பிச்சைக்காரனைப் போல் பார்க்கிறான். சரி அவனோட டீ குடிக்கும் பொழுது ஆபீசில் கணினியில் எல்லா தமிழ் பத்திரிகைகள், ப்ளாக் எல்லாம் படிச்சிட்டிருக்கான். ஏண்டா உனக்கு வேலை கிடையாதா என்றால், சும்மா நொன்ன பேச்சு பேசாத, வந்தோம டீ குடிச்சமா அப்படியே போய்க்கினே இரு அப்படின்றான். அப்புறம் அவன்தான் எனக்கு ப்ளாக் ஆரம்பிக்க சொல்லிக்கொடுத்தான். இதில என்னடா எழுதறதுன்னு கேட்டா எதவேனுன்னா எழுது சும்மா ரப்ச்சர் பண்ணாதே போய்க்கினே இருன்னுட்டான்.

சரின்னு வீட்டுக்கு வந்து இன்னா எழதுறது அப்படின்னு யோசிச்சு எவனோ ஒரு திருமவன் பழத்தின் பெருமையெல்லாம் எழுதினதை கோப்பி பேஸ்ட் செய்து ஒரு பதிவுப் போட்டேன். ரெண்டு நாள் பார்த்தேன் எவனும் சீண்டினதா தெரியலே. அடுத்து கொஞ்சம் சுமரா ரூம் போட்டு யோசிச்சு ஒன்னு எழுதி அடுத்தப் பதிவப் போட்டேன். அது தமில்ஷ்ள ஒரு நாலு ஒட்டு வாங்கி அங்கேயே நின்னுது.

அதே பதிவிலேயே நான் புத்தம் புது கன்னிப் பதிவர் அதால ஓட்ட நல்லா குத்துங்கப்புன்னு ஓரு வேண்டுகோளையும் போட்டேன். அதுக்கு ஒரு மவராசன் இந்த மாதிரி அழுவர வேலை எல்லாம் வச்சிக்காத, நிறையப் படி, நல்லா எழுது, அப்புறம் முதலில் உன்னோட அவதார்ல ஒரு அட்ட பிகர போட்டிருக்கியே அத மாத்து அப்படின்னு அறிவுரை பின்னூட்டம் கொடுத்துட்டான். போதாகுறைக்கு அவனோட முதல் பதிவு ஐம்பது ஒட்டு வந்கிச்சின்னு டிஸ்கி வேறு.அந்த இரண்டாவாது பதிவு முக்கி முக்கி எட்டு ஒட்டு வாங்கி பிரபலமாக அப்படியே நின்னுச்சு.

இதெல்லாம் வேலைகாவதுன்னு இந்த முறை குத்த வச்சி யோசிச்சு பழைய அனுபவமா “துணை நடிகையும் வாழைக்காயும்” அப்படின்னு போட்டேன். அது மவனே நிறைய ஓட்ட வாங்கி பிரபலமாச்சு.

அடடா மவனே தலைப்புல கீதுடா சூட்சுமம் அப்படின்னு யோசிச்சு, “அத்தையுடன் நாங்கள் கண்ட பிட்டு படம்” “மொட்டை பாப்பாத்தி குட்டைல விழுந்தா” “என் கடப்பாரையும், சரோஜாவின் தேக்சாவும்”, அப்படி இப்படின்னு தலைப்பு குடுத்து இப்போ சுமார போவுது.

இப்போ மறுபடியும் அந்த வெறும்பய ஐ.டில ஆணி பிடுங்கறவன் பார்த்துட்டு எப்போ பிரபல பதிவர ஆகப்போறேன்னு கேட்கிறான். அடபோடா அதுக்கு எல்லாப் பதிவரையும் வம்புக்கு இழுக்கணும், எதிர் பதிவு போடணும், மோட்டுவளைய பார்த்துக்கிட்டு குந்தனும், ஓடி ஓடி ஆணி புடுங்கி நானே அம்பேல் ஆயிட்டேன். அவனாண்ட “ஏண்டா பிரபல பதிவர்ன இன்னாடா” ன்னு கேட்டேன்.

மவனே இப்போ என்னப் பார்த்தா காலிடுக்கில வால வுட்டுகின்னு ஓடற பொட்டை நாய் போல ஓடுறான்.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 29 August 2010

ஜெஸ்ஸி என்னை முத்தமிட்டாள்

விமானம் புறப்படுவதற்கான கடைசி அறிவுப்பு செய்துவிட்டார்கள்.


கிளம்புமுன் ஜெஸ்ஸி என்னை முத்தமிட்டாள்.

நான் என் கண்ணில் தோன்றிய கண்ணீர்த் துளிகளும், என் முகம் அழும் விகாரமும் தெரியவேண்டாம் என்று முகத்தை திருப்பிக் கொண்டேன். பிறகு விறுவிறு வென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டேன், என் மனைவியும் பிள்ளைகளும் வர தாமதமாகியது. பின்பு வீடு வந்து ஏதோ சாப்பிட்டு உறங்க சென்றேன். உறக்கம் பிடிக்கவில்லை. என் மனைவி என்னை பரிதாபத்துடன் பார்த்தாள். ஜெஸ்ஸி இல்லாத இந்த வீடு எப்படி இருக்கப் போகிறது?, என்ற அர்த்தமற்ற யோசனை. வாழ்கை இயங்கிக் கொண்டிருக்கும் ஜெஸ்ஸியின் ஞாபகம் எங்கள் எல்லோரிடமிருந்து குறைய சில காலமாகும். என் குழந்தைகள் அழுது அழுது முகம் வீங்கிக் கொண்டு எங்களை ஏறெடுத்து பார்க்கவே இல்லை.

நான் எனது கல்லூரிப் படிப்பை முடித்து அந்த நகரத்தில் சிறந்தக் கம்பனியில் மெடீரியல் டிபார்ட்மெண்டில் பர்ச்சேஸ் ஆபீசராக பதவி ஏற்றேன். ஆபரேஷன் டிபார்ட்மென்ட் ஆர்டர் செய்யும் பொருட்களை அவர்கள் கொடுக்கும் டெக்னிக்கல் விவரங்களை வைத்துக் கொண்டு ஒப்பந்த புள்ளி கோரி குறைந்தது மூன்று சப்ளயரிடம் கொடசன் பெற்று அதனுடைய தரச்சான்றிதழ் ஆபரஷனுக்கு கொடுக்க வேண்டும். தர அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யலாம். ஆனால் கடைசி முடிவு என்னுடையது தான். இது அவர்களுக்கு பிடிக்க வில்லை. இதனால் எனக்கும் ஜோசெப்க்கும் ஒரு முறை ஒரு பெரிய வாக்குவாதம் வந்து இருவரும் நேரில் வந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை தவிர்த்தோம். எங்களது சண்டை கம்பெனியில் மிகவும் பிரபலம். மேலும் வந்த பரிவர்த்தனைகளில் எங்களது சண்டை முற்றி ஒருவர் சொல்வதை மற்றொருவர் வேணும் என்றே எதிர்ப்போம். அப்படி இருந்த எங்களை நண்பர்களாக வைத்தவள் ஜெஸ்ஸி. எப்படி?

அன்று எதோ பொருள் வாங்க வேண்டும் என்று அந்த அங்காடிக்கு சென்றேன். அங்கு நான் ஜோசெப்பை கவலை தோய்ந்த முகத்துடன் கண்டேன். அவனுடைய மனைவி அவனருகே கண்ணீருடன் “ஜெஸ்ஸி ஜெஸ்ஸி” என்று பிதற்றிக் கொண்டிருந்தாள். நான் எங்களது சண்டையை மறந்து என்ன என்று விசாரித்தேன். அவனது இரண்டு வயதுக் குழந்தை அந்த கடைக்கு அவர்கள் ஜவுளி வாங்கிய நேரத்தில் காணவில்லை. கடை சிப்பந்திகள் தேடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு மணி நேரமாக தேடிக் கொண்டிருக்கிரார்கள் குழந்தை கிடைக்கவில்லை. நான் அவர்களை தேற்றி குழந்தையை தேடச் சென்றேன். நான் ஜெஸ்ஸியைப் பார்த்ததில்லை. அந்தக் கடை நான்கு மாடிகள் கொண்டது. இவர்கள் முதல் மாடியில் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் மேல் இரண்டு மாடியிலும் தேடச் சென்றேன். நான் படிவழியாக இரண்டாவது மாடியில் ஏறும் பொழுது அட்டைப் பெட்டிகள் எல்லாம் அடுக்கியிருந்த இடத்தைப் பார்த்தேன், சரி அங்கே தேடலாம் என்று சென்றாள், ஒரு குழந்தை அட்டைப் பெட்டிகளின் நடுவே சிறிய அட்டைப் பெட்டிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அக்கம் பக்கம் யாரும் இல்லை. ஜெஸ்ஸியாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்து குழந்தையை தூக்கினேன்.

உன் பெயர் என்ன என்று கேட்டேன்.

மழலையில் “ஜெச்சி” என்றது.

குழந்தையை தூக்கிக் கொண்டு ஜோசப் இருக்குமிடம் வந்தேன், அவன் மனைவி மயக்கமுற்றிருந்தாள். அவர்களை சுற்றி ஒரே கூட்டம். நான் கூட்டத்தை விலக்கி குழந்தையை ஜோசெபிடம் கொடுத்தேன். கூட்டம் அவன் மனைவிக்கு மயக்கம் தெளியவைத்து ஆசுவாச படுத்திக் கொண்டிருந்தார்கள். மயக்கம் தெளிந்து குழந்தையை வாரி அணைத்தாள்.

ஆதற்கு பிறகு நானும் ஜோசெபும் மிக நெருங்கினோம். பிறகு எனக்கு கல்யாணம் நடந்தது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் எல்லாம் ஒன்றாகக் கொண்டாடினோம். எனக்கு பிறந்து குழந்தைகளுக்கெல்லாம் ஜெஸ்ஸி தான் அக்கா. ஜெஸ்ஸி எப்பொழுதும் என் வீட்டில் தான் இருப்பாள். அவள் எங்களுக்கு முதல் குழந்தை.

ஒரு முறை ஜோசப்பும் அவன் மனைவியும் வேளாங்கண்ணி சென்றார்கள். ஜெஸ்ஸியை எங்கள் வீட்டில் விட்டுச் சென்றார்கள். வேளாங்கன்னியில் இருந்து திரும்பும்பொழுது கார் விபத்தில் என் நண்பன் ஜோசப் இறந்து போனான். அவன் மனைவி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினாள். அப்பொழுது ஜெஸ்ஸிக்கு ஆறு வயது. மரணம் புரியாத வயது.

அவள் அம்மாவால் குழந்தையை கவனிக்க முடியாத நிலை. ஜெஸ்ஸி என் குழந்தைகளுடன் மூன்றாவது குழந்தையாக வளர ஆரம்பித்தாள்.

அந்த ஜெஸ்ஸிதான் இப்பொழுது இருபத்திரண்டு வயதாகி சாலமனை மணமுடித்து அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறாள்.

அவளை விமான நிலையத்தில் வழியனுப்ப சென்ற பொழுது தான் என்னை முத்தமிட்டாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 26 August 2010

மழை

வானம் பார்த்து


பயிர் வளர்த்து

வயல் வெளியில்

வருகை பார்த்து

உலகை வாழ

வைக்கும் விவசாயிக்கு

உண்மையான தேவதை



கிராமத்தில் போற்றப்பட்டு

கழனியிலே காலணி படாது

கட்டிக்காக்கும் காவலர்களின்

கண் கண்ட தெய்வம்



நகரத்திலே நடந்து வந்தால்

முதல் நாள் போற்றப்பட்டு

தொடர்ந்து வந்தால்

தொல்லை என தூற்றப்பட்டு

மடை திறந்து வந்தால்

மக்களால் வெறுக்கப்படும்.



எப்பொழுது விழுந்தாலும்

ஏற்கும் மனம்,ஏந்தும் கைகள்

ஏன் எனக் கேட்போருக்கு

எந்நிலையில் இருந்தாலும்

என் அங்கம் தடவி

சத்தமுடன் விழுந்து

முத்தமழை பொழிந்து

என்னை தழுவுபவள்

அவள் தானே

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 22 August 2010

கலக்கல் காக்டெயில்-6

முன்னூறு விழுக்காடு அதிகமா.................ங்கொய்யால


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் ரூபாய் 16000 இருந்து 50000 ஆக உயர்த்தப் படுகிறது. இது ரொம்ப டூ டூ மச். ஏற்கனவே இவனுகளுக்கு தொகுதி நிதி, போக்கு வரத்து லொட்டு லொசுக்குன்னு எக்கச்சக்கமா செலவாகுது. ஏம்பா இவனுக இதெல்லாம் வாங்கிக்கின்னு இனிமே அந்தக் கான்ட்ராய்ட்டுல கமிசன், ஒழுகுறதுல பிடிச்சிக்கிறேன், வழியுதுல நக்கிக்கிறேன்னு அப்போ இனிமே செய்யாம இருப்பாங்களா? இப்போ வர சம்பளத்து வச்சிக்கின்னே இவனுங்க பண்றே லொள்ளு தாள முடியல. இன்னும் பாராளுமன்றத்துல அடிச்சிக்கிரானுங்க, இது பத்தாததாம் ரூ 80000 வேணுமாம்.

கிரிகெட்

இந்த ரண்டீவ் நோ பால் விஷயத்துல ஸ்ரீலங்கா ரொம்பத்தான் காண்டாயிருக்கானுங்க, இந்த பதிவ போட சொல்ல, இன்றைய ஆட்டத்தில் அந்த நடுவர் குமார தர்மசேனா மவனே பந்து நம்ம பசங்க பக்கம் போனாலே கையே தூக்கிடுராறு. சொல்லி அனுப்பிச்சிருக்காங்க போல. போதாக் குறைக்கு நம்ம பசங்க பந்த தொடவே பயப்படுரானுங்க.


ரசித்த கவிதை

உறங்குகையிலே பானைகளை

உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே

உருப்படியாய் இருப்பதையும்

கெடுப்பதுவே குரங்குக் குணம்- ஆற்றில்

இறங்குவோரைக் கொன்று

இரையாக்குதல் முதலைக் குணம் - ஆனால்

இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய்

வாழுதடா

பொறக்கும் போது - மனிதன்

பொறக்கும் போது பொறந்த குணம்

போகப் போக மாறுது - எல்லாம்

இருக்கும் போது பிரிந்த குணம்

இறக்கும் போது சேருது

நன்றி- பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.



ரசித்த நகைச்சுவை 


கடற்கரையில் காதல் ஜோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.

அவன்: கண்ணே உன் மடியிலே தலை வச்சிக்கட்டுமா.

அவள்: ஹூம்

அவன்: அப்படியே குனிந்து என்னை முத்தமிடேன்.

அவள்: போங்க இந்த வேலை எனக்கு ராசியில்லை, இது மாதிரி நான் செஞ்சா, அவனுங்க அடுத்த வாராமே வேறே யாரையாவது கல்யாணம் செஞ்சிகிறாங்க.

அவன்: அதுக்கு தான் கேட்டேன், அந்த ஷீலா கல்யாணம் பண்ணிக்க முரண்டு பிடிக்கிறாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 21 August 2010

எந்திரனும் ஆற்காட்டாரும்


சென்னை: டெல்லி, மும்பை, கர்நாடகத்துடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.


ஏய் அவிய்ங்களா நீங்க, நீங்க இன்னும் போகலையா......

சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்,

தமிழகத்தில் நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது காவிரியில் நீர்வரத்து உள்ளதால் அதிலிருந்து 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

அய்யா கெளம்பிட்டாய்ங்கையா கெளம்பிட்டாய்ங்கையா

அனல் மின்சாரம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 30 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தோனேசியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்படும்.

இதே கதைய எத்தனை முறை தான் சொல்லுவீங்க. ஏங்க போன முறை இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொழுது குளறுபடின்னு சொன்னாங்களே அது டுபாக்கூரா.

காற்றாலைகள் மூலம் 7,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று எரிசக்தி மேம்பாட்டு முகமை கூடுதல் செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் கோடையில் காற்று வீசுவது குறைவு.

எங்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலையா, அதால தான் இடத்த மாத்திட்டீங்களா...........

இதுவரை காற்றாலை மூலம் 2,500 முதல் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்துள்ளோம்.

சரி அதுக்கு இப்போ இன்னாங்கறீங்க.

மரம், இலை, எரு, கோழி எச்சம் ஆகியவற்றில் இருந்தும் மரபுசாரா மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு, தமிழகத்தை ஊக்குவித்து வருகிறது.

ஏங்க இது நாலாப்பு பாடத்தில வருதுங்க, இன்னும் நீங்க பாஸ் செய்யலையா?.

சிவகங்கை மாவட்டத்தில் சூரிய சக்தியின் மூலம் 6 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

நல்லாத்தான் ஒப்பிக்கிறீங்க, நீங்க அடுத்த வருஷம் காட்டாயம் அஞ்சாப்புதான்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழும விதியின்படி 5,500 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் அமைப்போர், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கே ஐநூத்தியிம்பது சதுர அடி வூட்டுக்கே முழி பிதுங்குது, அத்த விடுங்க மேலே சொல்லுங்க.

அதே போல கரும்பு சக்கை மூலமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சரி இப்போ இன்னா சொல்ல வரீங்க, நம்ம வூட்ல பாதி நேரம் மின்சாரம் இல்ல அதுக்கு இன்னா இப்போ சொல்றீங்க.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்பற்றாக்குறை குறைவு தான். தமிழகத்தை பொறுத்தவரை கிராமங்களில் 2 மணி நேர மின் தட்டுப்பாடு உள்ளது.

அப்படிப் போடு அறிவாள, சப்ஜெக்டுக்கு வந்துட்டீங்க

அதே நேரத்தில் டெல்லியில் 6 மணி நேர மின் வெட்டும், மும்பையில் 2 மணி நேர வெட்டும், கர்நாடக மாநிலம் முழுவதும்10 மணி நேரம் மின் வெட்டும் நிலவுகிறது என்றார் வீராசாமி.

அதால, தமிழ்நாட்டுல கணக்குப் போட்டு மொத்தமா பதினெட்டு மணி நேரமா.

ங்கொய்யால இங்கே ஏன் மின்சாரம் இல்லேன்னா, அங்க இல்ல இங்க இல்ல இப்படின்னு சொல்றதே உங்களுக்கும் உங்க தலைவருக்கும் பொழைப்பப் போச்சு. பாத்து பக்கத்துப் பையன பாத்து காபி அடிச்சா இன்னும் மூணு வருஷம் பயிலுன்னு சட்டம் இருக்குது. நீங்க நாலாப்பு பாஸ் பண்றா மாதிரித் தெரியல.



சரி தலைப்புக்கும் சப்ஜெக்ட்டுக்கும் இன்னா சம்பந்தமுன்னு ரோசனை செய்யாம வோட்ட போடுங்கப்பு.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 19 August 2010

கலக்கல் காக்டெயில்-5

கைபிள்ள சுராஜ் ரண்டிவ்



ஸ்ரீலங்காவில் நடந்து கொண்டிருக்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியா, ஸ்ரீலங்காவிற்கும் நடந்த ஒரு நாள் போட்டியில் சேவாகின் சதத்தை முடக்கி ரண்டிவ் வீசிய “நோபால்” பற்றிதான் இப்பொழுது கிரிகெட் ரசிகர்கள் வட்டாரத்தில் சூடான விஷயம்.

ரண்டிவ் இதை தானாக செய்தது மாதிரி தெரியவில்லை. சங்கா சொல்லியிருக்க வேண்டும், இப்பொழுது தில்ஷன் தான் சொன்னார் என்று அவர் நிஜாரையும், ரண்டிவ் கோமனத்தையும் உருவியிருக்கிரார்கள்.

ஆனால் ஒன்றும் தெரியாமல் நடித்த சங்காவிற்கு இந்த வருட சிறந்த நடிகருக்கான விருது கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.

ஏம்பா முதல் டெஸ்டில் முரளிக்கு 800வது விக்கெட் கொடுக்காமல் இந்தியாவின் கடைசி ஆட்டக்காரர் ஒஜா ரன் அவுட் ஆகியிருந்தால் ஸ்ரீ லங்காவிற்கு எப்படி இருந்திருக்கும்?.

ஆனா இந்திய கிரிக்கெட் வாரியம் ஒஜாவின் கோமனத்தை உருவாது.

விளையாட்டை விளையாட்டா ஆடுங்கப்பா? BCCI யோட விளயாடதிங்க, பொல்லாதவனுங்க நிஜார உருவி பேஜார் பண்ணிடுவானுங்க.

சிம்மொன்ஸ்(குரங்குப் பய), பஜ்ஜி விவகாரம் நியாபகம் இருக்கட்டும்.

ஆனால் இந்திய ஊடகங்கள் இதெல்லாம் ஒரு மேட்டருன்னு ரொம்ப பெரிசாத்தான் கூவரானுங்க. ஸ்ரீலங்கா போர்டும் பயந்துகின்னு எங்க பிச்சைப் போடறது நிப்பாட்டிடுவாங்கன்னு நடவடிக்கை எடுக்குரானுங்க.

வாழ்க கிரிக்கெட்.



ரசித்த கவிதை.

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

ஐயோ! மரணபயம் வருகிறது!

நான் ஒரு நாள் மடிந்து போவேன்!

அதற்குள் நான் அனுபவிக்கவேண்டும்!

ஆனந்தத்தில் புரளவேண்டும்

போய்விடு!

சுரண்டி தின்னாதே!

சூழச்சி செய்யாதே

என் நண்பர்களே ஓடி வாருங்கள்!

ஓ..! என் உயிருக்குரிய நண்பர்களே

உண்ணுங்கள்

தேன் வேண்டுமா?

பால் வேண்டுமா?

கனி வேண்டுமா?

தெவிட்டாது உண்ணுங்கள்

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

நாம் ஒரு நாள் மடிந்து போவோம்!

இடைக்காலத்தை வீணாக்காதீர்!

உண்போம்!

புதுமை செய்வோம்!

பெருமை கொள்வோம்!

மற்றவர்களினிடத்திலிருந்து உயர்ந்து நிற்போம்

விந்தை கருவிகள் வேண்டியன செய்வோம்!

நாம் அனுபவிப்போம்

வாரி வழங்குவோம்!



நன்றி :- கண்ணதாசன் - போய் வருகிறேன்



ரசித்த விடுகதை ++18


ரம்பாவிற்கு பெருசு, சிம்ரனுக்கு சிறுசு, பெண்களுக்கு(girls) இருக்கும் ஆண்களுக்கு(boys) இருக்காது அது என்ன?

ரொம்ப யோசிக்காம விடை சொல்லுங்க.



ஹூம் ஹூம் தப்பா யோசிக்காதீங்க










விடை தெரியாதவர்கள், மேலே பார்க்காதீங்க, அப்படியே கீழே வாங்க.

\

\

\

\

\

\

\

விடை: ஆங்கில எழுத்து “R”.

Follow kummachi on Twitter

Post Comment