Thursday 26 August 2010

மழை

வானம் பார்த்து


பயிர் வளர்த்து

வயல் வெளியில்

வருகை பார்த்து

உலகை வாழ

வைக்கும் விவசாயிக்கு

உண்மையான தேவதை



கிராமத்தில் போற்றப்பட்டு

கழனியிலே காலணி படாது

கட்டிக்காக்கும் காவலர்களின்

கண் கண்ட தெய்வம்



நகரத்திலே நடந்து வந்தால்

முதல் நாள் போற்றப்பட்டு

தொடர்ந்து வந்தால்

தொல்லை என தூற்றப்பட்டு

மடை திறந்து வந்தால்

மக்களால் வெறுக்கப்படும்.



எப்பொழுது விழுந்தாலும்

ஏற்கும் மனம்,ஏந்தும் கைகள்

ஏன் எனக் கேட்போருக்கு

எந்நிலையில் இருந்தாலும்

என் அங்கம் தடவி

சத்தமுடன் விழுந்து

முத்தமழை பொழிந்து

என்னை தழுவுபவள்

அவள் தானே

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

vasu balaji said...

நல்லாருக்கு கும்மாச்சி.

//காலனி படாது//

காலணி?

கும்மாச்சி said...

நன்றி பாலா ஸார், தவறு திருத்தப்பட்டுவிட்டது.

sakthi said...

எப்பொழுது விழுந்தாலும்

ஏற்கும் மனம்,ஏந்தும் கைகள்

ஏன் எனக் கேட்போருக்கு

எந்நிலையில் இருந்தாலும்

என் அங்கம் தடவி

சத்தமுடன் விழுந்து

முத்தமழை பொழிந்து

என்னை தழுவுபவள்

அவள் தானே


நல்லாயிருக்கு கும்மாச்சி

அன்புடன் நான் said...

மழை என்னையும் நனைத்தது... பாராட்டுக்கள்.

goget99 said...

உங்கள் கவிதை
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
என்ற திருக்குறளை நினைவுக்கு கொண்டு வருகிறது!

விஜய் said...

நல்லாயிருக்கு... ஆனா...

//வானம் பார்த்து
பயிர் வளர்த்து
வயல் வெளியில்
வருகை பார்த்து//

இந்தத் துவக்கவரிகளில் இருக்குற இசைமையும், நறுக்குத்தன்மையும் தொடர்ந்திருந்தா இன்னும் நல்லா இனிமையா இருந்திருக்கும்...

அது சரி... அந்த புகைப்படம் எதைக்குறிக்க...? :-)

Chitra said...

எப்பொழுது விழுந்தாலும்

ஏற்கும் மனம்,ஏந்தும் கைகள்

ஏன் எனக் கேட்போருக்கு

எந்நிலையில் இருந்தாலும்

என் அங்கம் தடவி

சத்தமுடன் விழுந்து

முத்தமழை பொழிந்து

என்னை தழுவுபவள்

அவள் தானே

..............superb!

Chitra said...

உலகை வாழ

வைக்கும் விவசாயிக்கு

உண்மையான தேவதை

..... அருமையான வரிகள்.

பித்தன் said...

supper

Unknown said...

நல்லாயிருக்கு..

கும்மாச்சி said...

வருகை தந்து, பின்னூட்டம் இட்ட அணைவருக்கும் நன்றி.

http://rkguru.blogspot.com/ said...

படம் சூப்பர்........கவிதையும் சூப்பர்

sarathy said...

anubavitha sugamum therikirathu, kavithaiyilum + padathilumthaan!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.