அப்பனும் ஆத்தாளும்
கூறுகெட்ட வாழ்க்கை கண்டு
குடிமுழுகி மறைந்து போக
மூச்சு முட்ட குடித்துவந்து
முள் மூஞ்சி மனிதர்கள்
மாரினிலே தேய்க்கையில்
மனசு ரொம்ப நோகுது
காதலில்லா காமம்
காசு பணம் கொடுக்குது
காமமில்லா காதல்
கடைசி வரை கசக்குது
என் வயது பிள்ளைகள்
ஏடேடுத்து படிக்குது
எனக்கு மட்டும் வாழ்கை
ஏன் இப்படி இருக்குது?
![Follow kummachi on Twitter](http://twitter-badges.s3.amazonaws.com/t_logo-a.png)
9 comments:
நல்லா இருக்கு.
ஆண்டாள்மகன்
வருகைக்கு நன்றி நந்தா
//என் வயது பிள்ளைகள்
ஏடேடுத்து படிக்குது
எனக்கு மட்டும் வாழ்கை
ஏன் இப்படி இருக்குது?//
:(
ஜே வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
மிக அருமை நண்பரே
நன்றி வேலு
சோக கீதமா..!!
good one
வளர்ந்து வரும் காதலர்கள் காமப்பசியாளர்களாகத்தான் இருக்கிறார்கள்
என்றும் அன்புடன்
உங்கள் வீர,முருகேசன்
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.