Sunday 28 November 2010

ஏட்டையா, நானும் அரசியல்வாதி, பகுத்தறிவாளன் சொன்னா நம்புங்க

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.ராஜா ஊழல் செய்தார் என்று சிஏஜி குற்றம் சாட்டவில்லை. அவருக்கு எதிராக ஒரு ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கையில் சில மீடியாக்கள் தொடர்ந்து ராஜாவை குற்றவாளி போல சித்தரித்து வருவது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.

எந்த உணர்வை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லி விளங்கவைக்க வேண்டும் என்று நினைத்தோமோ அந்த உணர்ச்சி மக்களிடையே எரிமலையாக இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம், 3ஜி ஸ்பெக்ட்ரம் என்பதெல்லாம் ஒரு புறத்தோற்றம். உண்மையிலேயே நடக்கின்ற போராட்டம் மனுதர்மத்திற்கும் - மனித தர்மத்திற்குமிடையே நடக்கின்ற போராட்டத்தின் முக்கிய கட்டம்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா மீது எங்கும், எந்த இடத்திலும் குற்றம் சாற்றப்படவில்லை. அதற்குரிய ஆதாரம் எங்குமே இல்லை. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் எங்கே போனது என்று கேட்கிறார்கள். வடமாநில ஆங்கில ஊடகத்தைப் பார்ப்பவர்கள் வெறும் 00.1 சதவிகிதம் என்று சொன்னார்கள்.

இது வெறும் ராசா என்ற தனி நபரைச் சார்ந்த பிரச்சனை அல்ல. இது ஆரிய- திராவிட போராட்டத்தின் முக்கியமான காலகட்டம். ஆதிக்கவர்க்கத்தால் பின்னப்பட்ட சதிவலை, கருணாநிதி சூத்திரர் ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகின்றார். வரக்கூடிய தேர்தலிலே மீண்டும் முதல்வர் கருணாநிதி ஆட்சி வரக்கூடாது என்பதற்காக ஆதிக்க வர்க்கத்தினரால் பின்னப்பட்ட ஒரு சதிவலை.



ஊடகங்கள் சூத்திரர் ஆட்சிக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றன. ராமாயண காலத்திலிருந்தே இதற்கு உதாரணம் இருக்கிறது. நம்மை சிந்திக்கவிடாமல் நமது மூளைக்கு விலங்கு போட்டார்கள்.



பார்ப்பனர் குற்றம் செய்தால் உச்சிக்குடுமியில் இரண்டு முடியை வெட்ட வேண்டும் அவ்வளவு தான். சூத்திரன் தவறு செய்தால் அவனுக்கு கொலை குற்றத்தண்டனை கொடுத்து கொல்ல வேண்டும். மரண தண்டனை விதிக்க வேண்டும். இதுதானே உங்களுடைய மனு தர்மச் சட்டம். சூத்திரனுக்கு ஒரு நீதி; பார்ப்பானுக்கு ஒரு நீதி.




ஏய் யாருலே அது, அவனாடா நீயி

அந்த முழுப் பூசணிக்காயை ...த்துல மறைக்கற கூட்டமா

வந்துட்டாரபா ராசாவுக்கு வக்காலத்து வாங்க.

நாடே ஒரு மெகா சைஸ் முறைகேடப் பார்த்து பொத்திக்கிட்டு இருக்காங்க, இவர் வந்துட்டார்பா. முதலில் உச்ச நீதி மன்றம், சி.பி.ஐயிடம் ஏன் ராசாவையும், அந்தத் துறை செயலரையும், மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒலி கற்றை உரிமையை வாங்கி சேவைத் தொடங்கும் முன்பெ கொள்ளை லாபத்திற்கு விற்ற நிறுவனங்களும் விசாரனைக்குட்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய பொழுதுதான், நம் பகுத்தறிவு சிங்கம், தன் மான சிங்கம் “ராசா பேரில் ஆதாரம் இல்லை” என்கிறார். மேலும் இந்த முறைகேட்டினால் அரசுக்கு ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி இழப்பு என்று சொல்லியிருக்கிறது.

ஐயா இதெல்லாம் இவருக்கு தெரியாது போலிருக்கிறது.

வழக்கமாக அடிக்கும் ஜால்ராவுடன் எப்பொழுதும் சொல்லும் “பார்ப்பணீய சூழ்ச்சியை” விட்டு விட்டார்.

சமீபத்தில் ஊழல புகாரில் சிக்கி ராஜினாமா செய்த கல்மாடியும், அசோக் சவானும் சூத்திரர் அல்லவே. ஆனால் வழக்கை எதிர்கொள்ள துணிவு இல்லாமல் இது போன்று கேவலமாக ஜாதியை சாட்சிக்கு அழைக்கவில்லையே.

அங்கே கூடாரமே ஆடிக் கொண்டு இருக்கிறது. குடும்ப தகராறும், கோஷ்டிகளின் உச்சகட்ட நாடகத்தின் விளைவில் விளைந்த இந்த குற்றச்சாட்டில் தாத்தா வாயடைத்திருக்கிறார்.

சூரமனிக்கு எல்லாம் நேரம், தேர்தல் வரும் முன்பே யாருக்கேனும் ஜால்ரா தட்டி கல்லா கட்ட வேண்டும். இம்முறை ஐயா கட்சி.

இப்பொழுது சுயமரியாதை, பகுத்தறிவு எல்லாம் கெட்ட வார்தைகளாகிவிடும், நம் பெரியாரின் வாரிசுக்கு.

போயா பெரியார் திடலை சுவிசேஷ கூட்டங்களுக்கும், இயேசு உயிருடன் இருக்கிறார் என்ற கூட்டங்களுக்கும் வாடகைக்கு விட்டு, கல்லா கட்டி பொழைப்பை பாருங்க.

பட்சி ஜாதி நீங்க

பகுத்தறிவெல்லாம் பார்க்காதீங்க.

எந்த பட்சி என்று சொல்லத்தேவையில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

sarathy said...

நல்ல பதிவு. மதி உள்ள மக்கள் யோசிப்பார்களா?

nis said...

தொடர் கொலை போல , எல்லா இடமும் தொடர் கொள்ளைகளா இருக்கே ;(((

பனித்துளி சங்கர் said...

எல்லோராலும் சிந்திக்க இயலும் ஆனால் சிலரால் மட்டுமே எல்லோரையும் சிந்திக்கவைக்க இயலும் இந்தப் பதிவும் அந்த வகையே ! . பகிர்வுக்கு நன்றி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

செருப்பிலடிச்சமாறி இருக்கு உங்க பதிவு.. விடுங்க.. தொடச்சு போட்டுட்டு, போயிட்டேயிருப்பானுக....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.