Thursday 13 November 2014

டீ வித் முனியம்மா-பார்ட் 25

மொத தபா பாத்தேன் உன்ன
பெஜாராகிப்பூட்டேன் பொன்னே

யோவ் மீச ரெண்டு டீ போடுறா.........

இன்ன செல்வம் குஜாலா கீற இன்னொரு பிகர கரெக்ட் பண்ணிக்கினியா?

அடப்போ முனிம்மா ஒன்ன ஒட்டவே இங்க டாவு தீருது........

அதான பாத்தேன் அஞ்சல சொம்மா கரகம் ஆடிடும். அப்பால உன்பாடு டப்பா டான்சுதான்.....

சரி முனியம்மா இன்னா நூசு, கடியாண்ட காணோம்.

எங்கடா மய பொத்துகிட்டு ஊத்துது, வியாவாரம் ஒயுங்க செய்யமுடியல. ரோடெல்லாம் தொண்டி உயுந்துகீது, மவன கார்பரேசன் காரனுங்க இன்னா செய்யுறானுங்க தெர்ல.

கரீட்டா சொன்ன முனிம்மா, அந்தம்மாவ ஊட்டுல குந்தவச்சிகிரானுங்க, அவனவன் மொட்ட போடுறான், காவடி தூகுறான், வேலகண்டி செய்ய மாட்டேங்கிறானுங்க.

அத்த வுடு பாய், இவனுங்க ஒல் பஜனி செய்யுறது அல்லாருக்கும் தெரியும்.

காங்கிரஸ் காரனுங்க இன்னா கூத்தடிக்கிரானுங்க.

நாடாறு அது வந்து அவனுக வயக்கமா செய்யுற லுங்கி டான்சுதான். வாசன் புது கட்சி ஆரம்பிக்கிறாராம். அவரு அப்பா காலத்துல செஞ்சாங்க, போனி ஆச்சு, அப்பால இயுத்து மூடிக்கினாறு. இப்போ புள்ள செய்யுறான், இருக்கிற பத்து பேருல கூட்டம் சேர்த்து கும்மியடிக்கிரானுங்க.

க்ரானைட்டுல ஊயலு, சகாயம் கமிசன் வச்சாங்க இன்னாச்சு.

வைகுண்ட ராஜன் எப்ப வேணா உள்ள தூக்கி போட்டுருவானுங்க லிங்கம் சார். தமாசு பாரு அவர போட்டு கொடைசாங்கன்னு வையி, அல்லா தலையும் உருளும்.

பத்த வச்சாளே
குயா தண்ணி என்ன.......

இந்த செல்வம் பாட்ட நிப்பாட்டுரா, கொயா தண்ணி இன்னா கிஸ்னாயிலா பத்திக்க, ஒரே பாட்ட புடிச்சி கூவிக்கினு கீறான்.

இன்னா முனியம்மா மகாராஸ்ட்ராவில கவுனருக்கு உண்ட கொடுத்துகிரானுங்க.

ஆமாண்டா லோகு அவரு சட்டசபையில் உள்ளார போவாதேன்னு கூவிகினே காங்கிரஸ் காரனுங்க சட்டைய கொத்தா புட்ச்சி குமுரிகிரானுங்க. தமிய் நாட்டு நூஸ் படிக்கிறானுங்க காட்டியம்.

வேறென்னா நூசு.........

டேய் செல்வம் போய் பொயப்பபாரு.  மய வருது, அதுக்குள்ளார வியாவரத்த முடிக்கணும். இந்தாடா பேப்பரு..........உன் மேட்டரு இருக்கா பாரு.






Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

டீ சூப்பர்! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

டீ நல்லாத்தான் கீதுபா கீளே ஜாரியக்கண்டதும் பகீருர்னுச்சுபா,

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

வெட்டிப்பேச்சு said...

அகஸ்மாத்த வந்தேங்க... அசந்துட்டேன்.

சும்மா அதிருதில்ல..

God Bless You

கும்மாச்சி said...

வெட்டிபேச்சு வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.