Thursday 27 November 2014

சி.எம். என்பார் முதல்வர் என்பார் ..........................

நமது பினாமி முதல்வரும் மைனாரிட்டி அரசு நடத்திய கலைஞரும் அறிக்கைப்போர் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நொந்து நூடூல்ஸ் ஆகிப்போன ஓ.பி.செல்வம் பாடும் பாடல், புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வந்த "ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள" என்ற மெட்டில் பாடிக்கொ(ல்ல)ள்ளவும்.

சி.எம் என்பார் முதல்வர் என்பார்
நாற்காலி இல்லை அமர
ஒரு அதிகாரமும் இல்லை ஆள
இது பொய்யும் இல்லை
அருகில் அம்மா இல்லை
டீக்கடையில் என்றோ
டீ அடித்தேன் நானே

சட்டசபையைக் கூட்டவில்லை
உட்கார இருக்கை இல்லை
காலியிடம் காணவில்லை
கண்டுபிடிக்க ஆளுமில்லை
கலைஞரும் கேள்வி கேட்டால்
பதிலளிக்க எவருமில்லை
பழிகளை தீர்க்க
வேறு வழி தெரியவில்லை

மேயருக்கு சீட்டு உண்டு
மேலே போட கவுனுமுண்டு
சபாநாயகருக்கு மைக்குண்டு
எனக்கென்று என்ன உண்டு
ஏன் கொடுத்தாங்களோ
அம்மா இந்த பதவி எனக்கு
மொத்தத்தில் எனக்கு
நிம்மதி இல்லை

இதய தெய்வம் உன்னை கண்டேன்
தினம் தினம் குனிந்து நின்றேன்
மரியாதை கொடுக்க என்று
காலில் விழுந்து வணங்கி நின்றேன்
பதவி ஏற்கும் போதோ
குலுங்கி குலுங்க அழுது நின்றேன்
சரித்திரத்தில் எனக்கோ
எப்போதும் இடம் உண்டு..............

சி.எம் என்பார் முதல்வர் என்பார்
நாற்காலி இல்லை அமர
ஒரு அதிகாரமும் இல்லை ஆள
இது பொய்யும் இல்லை
அருகில் அம்மா இல்லை
டீக்கடையில் என்றோ
டீ அடித்தேன் நானே

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

KILLERGEE Devakottai said...

நல்ல பாட்டு நண்பரே வாழ்த்துகள்.

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

ஹா.... ஹா... கலக்கிட்டீங்க போங்க...

கும்மாச்சி said...

குமார் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.