Thursday 27 November 2014

துலுக்கானமும் திருவள்ளுவரும்

டேய் துலுக்காணம் இன்னாடா லுங்கி கீய வுயுது போய்கினே கீற..........

ஐய உடு நைனா கடையாண்ட ஒரே சனமா கீது, என்பத்திநாலுல ஒன்னு வாங்கணும்............

டேய் பாத்துரா.........ரொம்ப ஓவராயி கோகிலா சுளுக்கு ஏத்தா மாரி இன்னிக்கி எவளாவது .............லிங்கிய உருவிட போறாளுக.

அது இன்னா மேட்டரு தொரை.......

அதாண்டா துலுக்காணம் அன்னிக்கி ஃபுல்லா அட்சி மப்பாயிட்டானா........சிங்கபெருமாலு கோயிலாண்ட பிளாட்பாரத்துல நட்டுகினான்........மப்புல நான்தாண்டா சிங்கபெருமாளுன்னு சொல்லி அந்த ஆளு கசிபு வவுத்த கியிக்கிறேன்னு கத்திகினே பூக்கட வச்சிகீதே கோகிலா அத்த பிடிச்சி வவுத்துல கை வச்சிகீறான், அது மெர்சலாய் இவன கயுத்தாமட்டைல தட்டி கவட்டையிலே வுட்டுகீது......

அதானா வாத்தியாரு ரெண்டு நாளா விரியாம்பாகாத்துல ஒரு காலும் வியாசர்பாடில ஒருகாலும் வச்சிக்கினு போய்கினான்.

இன்னிக்கி காலில இன்னா வண்டலூராண்ட ஒரு பெருச புட்ச்சி பேஜார் பண்ணிக்கின்னுகீறான்.

அந்தப் பெர்சு தாடி வச்சிகினு ரோட்டாரமா போய்கினு இருந்துதா, இவன் மப்புல அந்த பெர்ச புட்ச்சி யோவ் பெர்சு நீ வள்ளுவர்தான.....அப்படின்னு கேட்டுகிறான்.

பெர்சு பேஜாராய் பைய எடுத்து அக்கிளில சொருகிக்கினு  போய்கினே இருந்திகிது.

துலுக்காணம் விடாம பின்னாலேயே போயி ஆ......பெர்சு சொம்மா கேட்டுகினுகீரான் போய்கினே கீறே இன்னா மேட்டரு. பெர்சு நீ வள்ளுவருதானன்னு கேட்டுகினு கெயவர மடக்கிகீறான்.

யோவ் அவரு நான் இல்ல, அவரு போயிட்டாருப்பான்னு அவுரு எஸ் ஆவப்பாக்குறாரு.

துலுக்காணம் விடாம, யோவ் பெருசு இன்னா கமால் காட்ற அவரு எங்க போயிட்டாரு, அப்பீட் ஆயிட்டாரா?, . த நீ அவருதான், மய்லாப்பூராண்ட செல வச்சிகிறாங்க நான் பாத்துக்கிறான், அப்பாலகண்யாகுமரியாண்ட கடலுல சொம்மா கலீனறு செல வச்சிகிறாரே, அதுல கூட நீ அப்படியே சிம்ரன் கணுக்கா இடுப்ப ஓடிச்சிகினு நிப்பயே, அந்தாளுதான் நீ........அதே மாறி தாடி வுட்டுகீற.....

யோவ் நீ குடிச்சிருக்க, சொம்மா வம்பு வலிக்காத, அப்படின்னு கீறாரு.

யோவ் நீ வள்ளுவருதான் எனிக்கி அல்லாம் தெர்யும், நீ இன்னா பாட்டு எய்திகீறன்னு அவரு கைய புட்சிகீரான், . அகர மொதல எயுத்து..........ஆ.........ன்........அதான் கொரலு, டாஸ்மாக் பார்டிகளுக்கு இன்னா எய்திகீற சொல்லு. இந்தா நா சொல்றன் எய்திக்க..........

மிக்ஸ் செய்து குடிச்சவனுக்கு உய்வுண்டாம் உய்வில்ல 
ராவா குடிச்சவனுக்கு.......

கட்டிங் வுட்டு வாய்வாரே வாய்வார் அப்பால 
தெருல உய்ந்து கிடப்பர்.

உயச்சதனால் இன்னா பயனு சொல்லு
க்வாட்டரு அடிக்கான்காட்டியம்.

மவன் நைனாக்கு செய்யும் வேல
பொய்தோட க்வாட்டர் வாங்கியாரனும்.

போதை எறிட்சினா போட்டி வாங்கி 
கொடுப்பான் தோஸ்த்து.

தொ போயி அப்பால வா, இன்னொரு கட்டிங் வுட்டு அப்பால இன்னும் எத்து உட்றேன்னு... அவரு கைய வுட்டுகிறான்.

பெர்சு பைய தூக்கிகினு ஓடற பஸ்சுல ஏறி பூட்ச்சு.........

இந்த துலுக்காணம் பையன் தெனிக்கும் ஒராள புட்ச்சி மெர்சலாக்குறான். கோகிலா கணுக்கா எவங்கிட்டயோ உண்ட வாங்கப்போறான்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

KILLERGEE Devakottai said...

ரசித்தேன் நண்பா....

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

சென்னைத்தமிழில் அசத்துகிறீர்கள்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.