Friday 22 July 2016

கபாலி..........

நேற்றே வளைகுடா நாடுகளில் "கபாலி" திரையிடப்பட்டுவிட்டது. வழக்கம் போல் முதல் நாள் முதல் காட்சி பார்த்தாகிவிட்டது.

படம் எப்படி? மாறுபட்ட கருத்துக்களுடன் வெளியே வந்தேன்........

இது ரஜினி படமா? இல்லை ரஞ்சித்தின் படமா என்பதெல்லாம் தேவையற்ற விவாதங்கள்.

ரஜினி ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள் எனபதும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது.

படம் என்னுடைய பார்வையில்............

கதை சுருக்கம் விரிவான கதையெல்லாம் எழுதி இந்த விமர்சனத்தை முன் வைக்கப்போவதில்லை....

முதலில் ரஞ்சித்திற்கு ஒரு பாராட்டு.............ரஜினி என்ற ஒரு சூப்பர் ஸ்டாருக்காக கதையில் சமரசம் செய்துகொள்ளவில்லை. மேலும் ஒரு அடக்கப்பட்ட சமூகத்தின் கொந்தளிப்பை தைர்யமாக வெளியே கொண்டு வந்தது. காந்தி கோட்டை துறந்ததும்......அம்பேத்கார் கோட்டை அணிந்ததிலும் அரசியல் இருக்கிறது என்று ரஜினியின் வசனத்தில் ஒரு சமூகத்தின் எழுச்சியை பொறுக்காத கூட்டத்திற்கு வைத்த சவுக்கடி.

அதே சமயத்தில் எந்த காட்சியை மிகைப்படுத்த வேண்டும், எதில் மேம்போக்காக காட்டிவிட்டு போய்க்கொண்டிருக்க வேண்டும் என்பதில் பெரிய சறுக்கல். மேலும் கதையில் திருப்பம் எனபது மருந்தளவிற்கும் இல்லை அதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை செய்யத் தவறிவிட்டார். உதாரணமாக ரஜினியும் தன்ஷிகாவும் ராதிகாவை தேடி இந்தியா வந்து பாண்டிச்சேரி சென்று அவரை காணும் பொழுது அதே சமயத்தில் வில்லன் கூட்டம் கபாலி குடும்பத்தை முடிக்க ஏற்பாடு செய்கிறார்கள், இந்த இரண்டையும் சேர்த்து இன்னும் அழகாக பின்னியிருக்கலாம்.

ரஜினி: வழக்கமான வேகமான நடையை துறந்து வயதிற்கேற்றார்போல் செய்திருக்கிறார். முக்கியமாக தேவையில்லாத நடனங்களோ இல்லை காதல் காட்சிகளோ இல்லை.  ரஜினியின் மிகைப்படுத்தாத நடிப்பு இதில் பாராட்டப்பட வேண்டும். குறிப்பாக தனது மகள் தன்ஷிகா என்று அறிந்தவுடன் கண்கள் இமைக்காது நடந்து செல்லும் காட்சி, வெகு வருடங்களுக்கு பிறகு தனது மனைவியை சந்திக்கும் தருணம்........"ஒற்றைக்கை காளி" கண்முன் வந்து போவதை தவிர்க்க இயலவில்லை. இந்த ரஜினிதான் இப்பொழுது தேவை...........இனி பாட்ஷாகளோ படையப்பாக்களோ வேண்டாம்........காலம் அதை ஏற்றுக்கொள்ளாது.

ரித்விகா, ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிப்பு பாராட்டப்பட வேண்டிய விஷயம். பாட்டுக்கள் ஒன்றும் சொல்லும்படியாக இல்லாவிட்டாலும் படத்தின் முக்கியமான விஷயம் BGM அதில்  சந்தோஷ் நாராயன் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

படத்தின் முதல் முப்பது நிமிடம் நிமிர்ந்து உட்கார வைத்தது.........பிறகு ஆயாசம்............கடைசி இருபது நிமிடம்.........சரி.....நடுவே ரசிகர்களை கட்டிப்போடும் காட்சிகள் இல்லாதது மிகப்பெரிய குறை.

மொத்தத்தில் இது சந்திரமுகியோ, பாட்ஷாவோ, படையப்பாவோ இல்லை.

இந்தப்படம் எதிர்பார்த்த அளவு என்னுடைய பார்வையில் சத்தியமாக இல்லைதான்............

இது ஓடும் ஓடாது என்பது வேறு விஷயம்.............ஆனால் ரஜினி இது போன்ற வயதுக்கேற்ற கதாபாத்திரங்களையே  தேர்ந்தெடுப்பது  அவருக்கும் ரசிகர்களுக்கும்  நல்லது.


கபாலி................மிகுந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.


Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

'பரிவை' சே.குமார் said...

உண்மையான விமர்சனம்...
சூப்பர் ஸ்டார் ஆகுமுன்னர் இருந்த ரஜினிதான் இனிமேல் தேவை...

ஸ்ரீராம். said...

பட்டிமன்றத் தீர்ப்பு போல விமர்சனம்!

:))

அ.சந்தர் சிங். said...
This comment has been removed by a blog administrator.
NewWorldOrder said...



Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. But some extraordinary smart groups in TN have portrayed this movie as Dalit movie and tried to damage it. I strongly say that It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie.

***Watch more***

Makizhchi!!!

We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.

After 10-20 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.

Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!

Watch more Kabali!

By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.