Sunday 8 September 2019

சீமாண்டியும், சந்திராயனும் மற்றும் விக்ரம் லேன்டரும்.................

கடந்த இரண்டு நாட்களாக இஸ்ரோ ஏவிய சந்திராயனைபற்றியும், நிலவில் இறங்குவதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த விக்ரம் லேன்டர் தொடர்பை இழந்ததும் பற்றிதான் சமூக வலைதளங்களில் பேச்சு.

மோடி சிவன் கட்டித்தழுவல், கண்ணீர் காட்சி பற்றி ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலைதளங்களில் வலம் வந்துவிட்டன.

லேன்டர் மேட்டர்  தமிழ்நாட்டில் உள்ள வக்கிரம் பிடித்தவர்களை தோலுரித்து காட்டியது.

இனி சீமானார் பேச்சு............கற்பனைதான்.................


நானும் தலைவரும் சந்திரனை நோக்கி சென்றுகொண்டிருந்தோம் , நம்ம தம்பி........... துரைதான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான். ரொம்ப வேகமாக நிலவை நோக்கி சென்று கொண்டிருந்தான்........நான்தான்... தம்பி ரிவர்ஸ் கியர் போட்டு பிரேக்க விட்டு விட்டு பிடி..........அப்போதான் ஸ்மூத்தா லேண்டாகும்..........அப்பால அந்த கீழ வச்சிருக்கிறோம் பாரு ஆமை ஓடு அத்த கவுத்து போட்டாபோல வண்டில மாட்டி இறக்கு ராக்கெட்டுக்கு ஒன்னும் ஆவாது......நம்ம அப்பத்தா  வேற அங்கு வட சுட்டுகிட்டு இருக்கும்.......சட்டி கவுந்துட்டா நமக்கு வட கிடைக்காது...........ஹ்...ஹா.ஹ...ஹா........உடனே பக்கத்திலிருந்த தலைவரு என் முதுகுல தட்டி..........தம்பி நீதான்பா தலைவர் நான் உன் தம்பி என்றார். அப்புறம் வண்டிய விட்டு நானும் தலைவரும் இறங்கினோம்.........உடனே அங்கிருந்த நம்ம மக்கள் வாங்க சீமான் அண்ணே உங்க கூட இறங்கியிருக்காரே அவர் யாருன்னு கேட்டாங்க? நான்தான் தம்பி அவரு தமிழ் தேசிய தலைவரு.........ன்னு அறிமுகப்படுத்தினேன்...........ஹ...ஹ...ஹ...ஹ...ஹா. அப்புறம் அப்பத்தா வந்து சூடா..இரண்டு வடை  எனக்கு கொடுத்திச்சு,............அப்பத்தா தலைவருக்கும் ரெண்டு வட கொடுங்கன்னு கேட்டேன்...........அதுக்கு அப்பத்தா நீ சாப்பிடு அவருக்கு வட ஒரு கேடா? ன்னுச்சு..............வேணுமுன்னா ஊசிப்போன அரை வடை இருக்கு அத்த கொடுக்கிறேன்னிடிச்சு.அப்புறம் நான்தான் அப்பத்தாகிட்ட பதவிசா பேசி ஒரே ஒரு வட வாங்கி தலீவருகிட்டே நீட்டினேன்...........அவருக்கு அப்படியே கண்ணு கலங்கிடிச்சு........தம்பீன்னு என்ன கட்டிபிடிச்சு என்ன நிலவுக்கு கூட்டி வந்ததுமில்லாம வட வாங்கிக் கொடுத்த பாரு நீதான் தம்பி  நம்ம தமிழ் ஈழத்த காக்கவந்த அடுத்த தலைவருன்னு ஒரே கண்ணீர் விட்டு கதற ஆரபிச்சுட்டார்.

அப்போதான் அந்த பக்கம் நம்ம ஆர்ம்ஸ்ட்ராங்கு பையன் என்ன பாத்து ஓடி வந்தான்...........

அண்ணே சீமான் எப்படி இருக்கீங்க உங்க பேச்சு இங்கே தினம் கேட்குது.....அத கேட்காம நாங்க இங்க இருக்க முடியாது.

அப்புறம் தம்பி உனக்கு இங்கே என்ன பிரச்சினை ............அப்படின்னு கேட்டேன்.

இங்கே தண்ணியே இல்ல............ஆடு...........மாடுங்க கூட இல்ல.......இருந்தா கொஞ்சம் பாலாவது கறந்து குடிப்போம் அப்படின்னு ஒரு அழுவாச்சி.

தம்பி கலங்காத...........அடுத்தது நிலவுல நம்ம ஆட்சிதான்.........நம்ம தம்பிங்ககிட்ட சொல்லி ஒரு பத்தாயிரம் மாடு, கூட கண்ணு.........ஒரு ரெண்டு லட்சம் வக்க பிறி எல்லாம் அடுத்த வண்டில ஏத்தி அனுப்ப சொல்லியிருக்கேன்..........கவலை படாத தம்பின்னு...........சொன்னேன்.

அப்படியே ஆம்ஸ்ட்ராங்கு என் கால பிடிச்சிக்கிட்டான்.

உடனே தலீவரு என்ன தம்பி நாம திரும்ப எப்போ பூமிக்கு போப்போறோம் அப்படின்னாரு?

வாங்க வண்டில ஏறுங்க..............போகலம்முன்னு கிளம்பி அடுத்த இரண்டு நிமிடத்துல அவர கிளிநொச்சில இறக்கிட்டு............ஒரு ஆமை ஓட்டுல ஏறி இங்கே வந்துட்டேன்..........

ஹே.........ஹ.............ஹி   





Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா நல்ல கற்பனை.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி வெங்கட்..

Ravisankar said...

நல்லாத்தானே போய்கிட்டிருந்தது.......

வேகநரி said...

சீமான் பேச்சு இலங்கை எல்டிடிஈ பற்றி சீமான் பேசுவது போலவே உள்ளது.

Thulasidharan V Thillaiakathu said...

ஹா ஹா ஹா கற்பனை செம

துளசிதரன், கீதா

Vignesh said...

I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.