Wednesday 20 October 2010

கலக்கல் காக்டெயில் -10 (++ 18 வயது வந்தவர்களுக்கு மட்டும்)

எந்திரனும் எரியும் வயிறுகளும்


எந்திரன் அடித்த வசூலைக் கண்டு நிறைய வயிறுகள் இப்பொழுது எரிந்துக் கொண்டிருக்கின்றன. படத்திற்கு வந்த விமர்சனங்களில் பெரும்பாலானவை படத்தைப் பற்றி நல்லதாகவே சொல்லியிருக்கின்றன. படத்தின் பிரம்மாண்டம், கொடுக்கப்பட்ட விளம்பரம் எல்லாம் படத்திற்கு நினைத்ததைவிட சற்று அதிகப் படியான வெற்றியையே கொடுத்திருக்கிறது. படத்திற்கு “ரிபீட் ஆடியன்ஸ்” அதிகம். அடையாரில் உள்ள மூன்று தியேட்டர்களிலும் எந்திரந்தான் ஓடுகிறது. இளைஞர்கள் இந்தப் படத்தை “ ஐ ரோபோ” “பைசெண்டியநெல் மேன்” படங்களின் அட்டைக் காப்பி என்று சொன்னாலும் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் இரண்டு வாரத்தை விட டிக்கெட்டுகள் இப்பொழுது எளிதாக கிடைக்கின்றன. இரண்டாயிரம் தியேட்டரிலிருந்து படிப்படியாக இருநூறு தியேட்டர் என்று இளைத்தாலும் இக்கால கட்டத்தில் இது வெற்றியே. கலாநிதி மாறன் காட்டில் மழை.



படித்ததில் பிடித்த கவிதை

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்

இவைசரி யென்றால் இயம்புதென் தொழில்

இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை

ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்

அவனும் யானுமே அறிந்தலை அறிக

பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்

பாசம் மிகுத்தேன், பற்றுதல் மிகுத்தேன்

நானே தொடக்கம் நானே முடிவு

நானுரைப்பதுதான் நாட்டின் சட்டம்.



--------------கண்ணதாசன்



ரசித்த நகைச்சுவை

சுஜாதாவின் கேள்வி பதில் தொடரில் “வயாக்ரா” பற்றிய கேள்விக்கு, வந்த ஒரு ஜோக்.

ஒருவன் டாக்டரிடம் சென்று தன் இயலாமையை கூறி மருந்து கேட்க அவர் மேற் கூறிய ஏழு மாத்திரைகளைக் கொடுத்து நாளைக்கு ஒன்று வீதம் ஏழு நாட்களுக்கு சாப்பிட சொன்னாராம். அவன் பேராசையில் ஒரே நாளில் ஏழையும் சாப்பிட்டிருக்கிறான். அப்புறம் என்ன ஓயாமல் இன்பத்தில் திளைத்து இறந்தே விட்டான்.

சவப் பெட்டியை இன்னும் மூடமுடியவில்லையாம்.

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சசிகுமார்.

ADAM said...

JOKE SUPER

புதிய மனிதா. said...

super thala ..

கும்மாச்சி said...

ஆடம், புதியமனிதா வருகைக்கு நன்றி

எஸ்.கே said...

தொகுப்பு நன்றாக உள்ளது!

பனித்துளி சங்கர் said...

கவிதையும் , நகைச்சுவையும் அருமை . பகிர்வுக்கு நன்றி

sarathy said...

மூடியதும் அறிவிக்கவும்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.