Monday 22 October 2012

கலக்கல் காக்டெயில்-90

மல்யா எனும் மலை முழுங்கி

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பாட்டுள்ளது. விஜய் மல்யா ஒன்றும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர் தன் சொந்த விமானத்தை எடுத்துக்கொண்டு எங்கோ வெளிநாட்டில் சுற்றிக்கொண்டு இருக்கிறார். அவர் மகனோ கிங்கபிஷர் கேலண்டருக்கு குட்டி வேட்டையாடிக்கொண்டிருக்கிறார். 

ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் சம்பளம் தரவில்லை. ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.  அதை பற்றிய கவலையெல்லாம் "இந்த பெருச்சாளிகளுக்கு" இல்லை.  ஏர்லைன்ஸ் நஷ்டக்கனக்கில் ஒழிந்தது ஊரான் பணம்.


இவர்களது  இல்லாத கடனை ஒழிக்க மத்திய அரசுவேறு சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

வாழ்க பணநாயகம்.

இல்லாத மின்சாரமும், கொல்லும் டெங்கும்

இந்த அரசு மின்சார தட்டுப்பாட்டிற்கு ஆர்காட்டாரையே காரணம் சொல்லி அவரை நல்லவராக்கிவிட்டார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் கர்நாடகாவும், ஆந்திராவும் 2000 MW அளவிற்கு உற்பத்தியை பெருக்கிவிட்டார்கள். தமிழ் நாட்டிலோ மின்சாரத்தேவை 2001லிருந்த 7000 MW லிருந்து 11000 MW அளவிற்கு அதிகரித்திருக்கிறது. அனால் இரண்டு கழகங்களும் சேர்ந்து உற்பத்தியை வெறும் 483 MW அளவே உயர்த்தியிருக்கிறது. போறாத குறைக்கு ஓடிக்கொண்டிருந்த டர்பைன்கள் படுத்துக்கொண்டு பராமரிப்பிற்கு காத்துக்கொண்டிருக்கின்றன.

அரசு ஒன்றும் செய்வதாக தெரியவில்லை. மின்சாரம் இல்லாததனால் கொசுக்களின் தொல்லை அதிகரித்து டெங்கு வேட்டையாடிக்கொண்டிருக்கிறது.

இலவசம் வாங்கி கொண்டு, தமிழகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

அந்தர்  பல்டி ஆதீனம்

மதுரை ஆதீனம் விஷயம் கோர்ட்டுக்கு வந்து அரசு தரப்பின் நிலைமை தெரிந்தவுடன் நித்தியை இளைய மடாதிபதி பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார் அருணகிரிநாதர்.

முடிவெடுக்காவிட்டால்சொத்து அரசிடம் போய்விடும் என்று கவலையினால் வந்த முடிவு. நித்யானந்தா அடியாட்களிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று புலம்ப வேண்டிய நிலை.

பிடதியில் குத்தாட்டம் செய்த விளைவு.

ரசித்த கவிதை

"துயிலா இரவுகளில்
அப்பா என்று அலறித் துடிக்கிற
சின்ன மழலைக்கு
என்னதான் சொல்வாய்
உலவித்  திரிந்த நிலவைக் காட்டி
மார்பில் தாங்கி
அப்பா கடவுளிடம் போனார்
என்று சொல்லாதே
துயரம் தொடர்ந்த வகையைச் சொல்
குருதி படிந்த கதையைச் சொல்
கொடுமைகள் அழிய போரிடச் சொல்..."

--------------------------------------------ஒரு ஈழக் கவிஞன்

ஜொள்ளு 




22/10/2012


Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

NKS.ஹாஜா மைதீன் said...

nice....

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை அருமை...

தகவல்களுக்கு நன்றி...
tm3

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.