Wednesday 21 May 2014

டீ வித் முனியம்மா--பார்ட் 10

டேய் மீச இன்னிக்கி அல்லாருக்கும் டீ இனாமா கொடுக்கிற இன்னா புர்ந்சுதா...........


இன்னா சாரே லோகு நம்ம அயாலு இல்லா...........

டேய் போடா டோமரு உங்காளுதான் இப்போ பிரதமரு, அவங்க கட்சி காரனுகளே அல்லாருக்கும் லட்டும் டீயும் கொடுத்துகிறாங்க. இப்படியே உட்டா நீ கூட ஒரு நாளிக்கி அங்க போயி குந்துவே.......

அடபோ செல்வம் மலையாளத்தான காலிலேயே கலாய்ச்சுனுகீற.....

தோ பாரு பாயும் லிங்கமும் ஓடியாறாங்க............

முனியம்மா எங்க போயகீது ஆள இன்னும் காணோம்.

தோ வந்துகினே கீது.

இன்னா முனியம்மா டீகட காரரு பிரதமரு ஆயிட்டாரு........

டேய் இன்னா செல்வம் அவரு ஆகக்கூடாதா..........மனுசண் இன்னாமா வேல செஞ்சுகிறாரு.ஒண்டி ஆளா இந்தியா பூரா சுத்தி கச்சிய கெலிக்க வச்சிகிராறு.செம அப்பாடக்கருவேலப்பா.......இன்னா சொல்ற பாய்.

அதானே முனியம்மா எங்காளுங்க நெம்ப இருக்குற மாநிலத்திலேயே கமாலு வேல காமிச்சுகிராறு.......

அது கண்டி இல்ல எந்த கட்சியுமே கூட இட்டார வேண்டாம், ஃபுல்லு மேஜாரிட்டில அள்ளிகினாறு............

அதானே லோகு..

தமியு நாட்டுல அம்மா இந்த கெலி கெலிச்சுகீது.  இன்னாதான் பவுரு கட்டுன்னு சொல்லி  தி.மு.க நக்கலு வுட்டாலும் அல்லாத்தையும் அள்ளிகினு சந்துல சிந்து பாடிக்கீது. இன்னா முனியமா இன்னா விசயம் சுத்தமா ஐயா கட்சி வழிச்சிகிச்சு................

அது வேற ஒன்நியம் இல்ல லிங்கம் சாரு, அம்மா கணுக்க கரீட்டா போட்டுகீது. தனிய நிக்கிறேன்னு சொல்லி ரெண்டு வருஷம் முன்னியே கட்சிக்காரங்கள உசுப்பி வுட்டு செமையா பெண்டேடுத்துகீது. டேய் செல்வம் அம்மானா சொம்மா இல்லடா..........

அப்போ முனியம்மா இன்னா ஐயா கட்சி தாராந்து போயிடுமா...........

அடப்போ லோகு அரசியல் தெரியாம ஆஃப் பாயில் கணுக்கா பேசிகினு கீற.
எம்.ஜி.ஆரு காலத்திலேயே சும்மா ஜனங்க ஆப்பு அடிச்சு வச்சானுங்க........அப்பால வரிலியா?

முனியம்மா இந்த அயகிரி உள்குத்துதான் கவுத்திடுச்சுன்னு சொல்லிகிரானுங்க..........

இன்னா பாய் பேசுற, அந்தாளு இருந்தாலும் இந்த ரிசுல்டுதான் வந்திருக்கும்.

அதான் பெரிசே சொல்லுதே........அவரு இருந்த போதும்தான் தோத்துகிறோமுனு.

இன்னா பெர்சு கண்ணு புளிச்சுது, காது அரிக்குதுன்னு அப்பால கட்சில அஞ்சா நெஞ்சன சேத்துகுவாறு..........

லிங்கம் சாரு அத கன்டி இந்த தபா  செஞ்சாரு கச்சிகாரனுங்க அல்லாம் காண்டாய்டுவானுங்க............

கேப்டனு இன்னா சொல்றாரு...........லோகு

அவரு இன்னா மச்சான் புட்டுகிட்டானு பொலம்பினுகீராறு........வூட்டம்மா சோறு வக்க மாட்டேங்குதாம்........

இன்னா முனியம்மா மேட்டரு ஏதாவது வச்சிக்கிற........

டேய் சும்மா இருடா பயம், வயக்கம் போல கடசீல காட்டுறேன்.......இன்னா மேட்டரு பேசிகினுகீறோம்....இவன் வேற, ரொம்பதான் ஆடுற அஞ்சலையாண்ட போட்டு கொடுத்தாதான்  நீ அடங்குவ.....

வை.கோ கூட புட்டுகினாரே..........செல்வம்

செல்வம் அதாண்டா தமியு நாடு............

தமியு நாட்டுக்கு மந்திரி பதவி கொடுப்பாரா மோடி........

தெர்ல பாய், பொன்னாருக்கு குடுப்பாருன்னு பேசிகிரானுங்க..........ஆனா பாய் காங்கிரசுக்கு நல்லா வச்சானுங்க ஆப்பு, இன்னா ஆட்டம் ஆடினானுங்க, அல்லாத்திலேயும் ஆட்டையப் போட்டானுங்க.


நம்ம சிங்கு இன்னா சொல்றாரு...........

அவரு இன்னா செய்வாரு பாவம், மூட்ட முடிச்ச கட்டிகினு வூட்ல குந்திக்கிராறு.

ஆறாயிரம் ஒட்டு வாங்கி இன்னா சிவகங்கை சின்ன சீமானு புட்டுகினாறு........

அவரு நைனா நின்னாலே அவ்வளதான் கெடச்சிருக்கும்.

இன்னா முனியம்மா நக்மா புட்டுகிச்சே..........

டேய் செல்வம் இன்னாடா நக்மா நக்மானு..........மோடி புன்னியவாண்டா, அக்கா, அம்மாகூட எல்லாம் கூட்டு சேரவேணாம். அப்பால ஏமாற சொல்ல லிங்கிய உருவிடும்...........

இன்னா முனியம்மா மோடி  நேத்திக்கி பேச சொல்ல பேஜாரா ஆயி அயுதுகினாராமே.

ஆமாண்டா லோகு நாடு எனுக்கு தாய் மாதிரி கட்சி எனுக்கு தாய் மாதிரி தாய்க்கு சேவை எண்ணிய வுட்டா யாரு செய்வாங்கன்னு பேஜாராய்கிராறு. மனுசன் இந்தில பாயி, பெஹனொன்னு சொல்லிகினு இன்னாவோ சொன்னாரு ஒன்நியம் புரில.

அப்பாலிகா............

அப்பாலிகா என்ன? போடா போயி தொயில பாரு.

இந்தாடா செல்வம் பாத்துக்க.........









Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான டீ! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாம் புட்டுகிச்சி...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.