Wednesday 14 May 2014

டீ வித் முனியம்மா---------- பார்ட் 9







இன்னா மீச முனிம்மா வந்துச்சு..........

யனிக்கி எங்கன அறியும் பழக்கட ,நீயே நோக்கி கொள்ளு.........

மவனே உனுக்கு கொயுப்புடா, முல்லை பெரியாரு தீர்ப்பு வந்தகண்டி காண்டா கீறான்...........பாடு, டேய் மீச ஒரு சைனா டீ  போடு, மவனே டீ ல கண்டி தண்ணிய ஊத்துன..........உனுக்கு இருக்குது..........

டேய் பயம் உடுறா அவனாட வம்பு வலிச்சிகின்னு...............

பின்ன இன்னா நாடார் முனியம்மா எங்கடான்னு கேட்டா பேஜார் பண்றான்..........

டேய் பயம் அதோடா முனியம்மா வருது பாரு, பாயும் கூட வராப்பல...........

இன்னா முனிம்மா லேட்டா வர, இன்னா எலிக்சன் முடிவு வந்திச்சா, அவனவன் அம்மா ஆட்டிகினாங்க, கொடாய்ஞ்சுகினாங்கன்னு உதார் உட்டுகினு கிரானுங்க.

டேய் பயம் நீ சின்ன பையன் உனுக்கு டாக்கத்து கெடையாது..........அதுக்கு பேரு எக்சிட் போல்லுடா...........ஒட்டு போட்டு வர்வனாண்ட யாருக்கு போட்டேன்னு கேட்டு போட்டுகிரானுங்க...............அத்த வச்சி இவங்களுக்கு அஞ்சு அவங்களுக்கு பத்து, முப்பது அவங்களுக்குன்னு அடிச்சி உட்டுகிரானுங்க........அவன் அவன் சொம்மா அடிச்சி உடுரானுங்க.......எதுவும் வெள்ளி கெயம தெர்ஞ்சிடும்..........

யாருதான் வருவாங்க முனியமா............

இரு பாய் இன்னா அவசரம்..............அல்லாம் தெரியப்போவுது.......

நம்ம பிரதமரு மன்மோகனு வூட்டுக்கு போவ சொல்ல ஆபிசுல கீற அல்லாரும் அய்தாங்கலாமே............

அஹான் லோகு, இன்னா சிங்கு இப்பகூட வாய தொறக்கம கம்முனு கீறேன்னு ஒரே பொலம்பலாம்.....................

ஆன்னா மனுஷன் கம்முனு குந்திகினே  பத்து வருஷம் ஓட்டிகுனு போயிட்டாரு.........பெரியாளுபா............

முனியம்மா இப்பா மோடி பிரதமரானா குஜராதுக்கு யாரு சி.எமு.........

அதுக்கு யாரோ ஒரு பொம்பள பேரு சொல்றாங்கபா...........ஆனந்திபெண்ணோ .......பண்ணோ....அந்தம்மா இப்போ அங்க நம்ம ஓ.பி. மாறியாம்........

நம்ம கொடநாடு தாயி ...........திட்டம் அம்பேலா..............மூணாவது அணி பிரதமருன்னு  கூவிகினு இருந்திச்சே............இன்னா முனியம்மா.....

அம்மா இன்னா செய்யும்னு எவனுக்கும் தெரியாது.............ஆனா அம்மா கட்சி நெறைய சீட்டு அடிக்கும்னு சொல்றானுங்க.....

யாரு சொல்றாங்க முனியமா................

டேய் லோகு அம்மாதாண்டா சொல்றாங்க.............

சரி முனியம்மா கேப்டனு நூசு இன்னா.......

அந்தாளு இப்போதான் கம்முனு கீறாரு. அவரப்போயி உசுப்பி உட்டுகினு..........

சரி முனியம்மா மோடி வந்தாருன்னா நம்ம மீனவங்கள சுடுரானுன்களே சிங்கலனுங்க அவங்களுக்கு ஆப்பு வைப்பாரா?

அது தெரியாது, இப்போகிறாரே, தேசிய பாதுகாப்பு ஆலோசகரு.........சிவசங்கர மேனனு அவர தூக்கிடுவாங்க, அந்தாளு நமக்கு எதிராவே கொரலு உட்டு அல்லாத்தையும்  பேஜாரு பண்ணிகினு இருந்தாரு.............இப்போஅஜித்தோவல்ன்னு ஒருஆள இட்டாறாங்க, இந்தாளு கொஞ்சம் தில்லு பார்ட்டி.............

சரி முனிம்மா போனவாரம் நீலாங்கரைல ஒரே அலம்பலாம்மே........சொம்பு, நயனு அல்லாம் டைட்டா ஆயிகினாகலாமே.............

அஹாண்டா பயம் விசயத்துக்கு வந்துட்டான்.........

அதாண்ட பொறந்தநாளு பார்ட்டியாம்...................அப்பால இன்னா ஓபின் தி பாட்டிலுதான்................

அப்புறம் அல்லாரும் குஜாலா இருப்பாய்ங்க..............அதெல்லாம் வயக்கமா நடக்குறதுதான்........
 



 

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நம்ம ஓ.பி. மாறியா...?

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.