Wednesday 21 January 2015

வருது வருது இடைத்தேர்தல் வருது

வருது வருது இடைத்தேர்தல் வருது
ஸ்ரீரங்கத்திலே இடைத்தேர்தல் வருது
ஆத்தா போட்ட ஆட்டத்தினால் தேர்தல் வருது 
குன்ஹா எழுதிய தீர்ப்பினால் தேர்தல் வருது 

அரசியல் கட்சிகளெல்லாம் சேர்ந்து வருது
ஆத்தா கூட்ட அடிமையெல்லாம் ஆடி வருது 
எதிர் கட்சிகளெல்லாம் எதிர்த்து வருது 
ஏமாறும் மக்களையே ஏமாற்ற வருது 

தூங்கிக்கிடந்த திட்டமெல்லாம் ஓங்கி வருது 
தேங்கிக்கிடக்கும் வாக்குகளை வாங்க வருது 
வாங்கி வச்ச பணமெல்லாம்  தேடி வருது 
வாக்காளர்களின் வாக்குகளை வாங்க வருது 

மத்தியரசு அமைச்சரெல்லாம் மயக்க வருது
கூட்டணிக்கு அச்சாரம் போட தோட்டம் வருது 
வழக்குகளின் போக்கை எல்லாம் மாற்ற வருது
மத்தியிலே மாற்றம் செய்யவேண்டி வருது 

மேல்முறையீட்டின்  தீர்ப்பு விரைவில் வருது 
குமாரசாமியின் குறிப்பினிலே நீதி குனிந்து  வருது 
ஆத்தாவிற்கு விடுதலை விரைந்து வருது   
மூன்றாம் முறை ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் வருது  







Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

Unknown said...

நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சென்னை பித்தன் said...

//ஆத்தாவிற்கு விடுதலை விரைந்து வருது //
அப்படியா?!

கும்மாச்சி said...

ஆமாம் வழக்கு போகும் போக்கைப் பார்த்ததால் அப்படித்தான் தோன்றுகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

// ஏமாறும் மக்களையே ஏமாற்ற வருது... //

இது ஒன்றே மாறாது...!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன .. மக்களின் நிலை... பழைய நிலைதான்..ஐயா. அருமையாக சொன்னீர்கள். பகிர்புவுக்கு நன்றி த.ம 4

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

காலத்திற்கேற்ற பாடல்! உங்க ஆரூடம் பலிக்குதா பார்ப்போம்!

KILLERGEE Devakottai said...

வரட்டும் வரட்டும் மாறட்டும் மாறட்டும் மக்கள் ஏமாற....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.