Monday 9 February 2015

டீ வித் முனியம்மா பார்ட்-30

டேய் மீச இன்னாடா முனியம்மா வர்ல..........சரி எனிக்கு சைனா டீ போடுறா......இட்லி வடகறி கீதா...............

இல்லே சாரே இந்நல வட அல்லாம் போயி..........

இன்னாது நேத்தி வட மீந்து போவலையா..........போடா இன்னாதான் கீது இடியாப்பம் பாயா கீதா..........

ஐய முனிமா இன்னா லேட்டு .............

டேய் லோகு, செல்வம் நான் இன்னாடா உன்னிய மாரியா.........வியாவாரம் முக்கியம்டா..............

தோடா அல்லா பெருசுங்களும் வந்துகின்னுகீது பாரு.

சரி முன்னிமா இந்தம்மா தமியிசை "குதிரயே ஓடிச்சு......... அப்பால லாயத்த இய்த்து மூடி இன்னா யூசுன்னு கேக்குதே" இன்னா விசயம்..........

அதா லோகு ஸ்ரீரங்கத்துல தேர்தல கண்காணிக்க கர்னடகாவிலேந்து ஒரு இனிஸ்பெக்டறு வராராம்.அந்தாளு இப்போ வந்து இன்னா பிரயோசனம். அதுக்குள்ளார எல்லா கட்சிங்களும் துட்டு அள்ளி வுட்டுக்கினானுகளே. அந்த காண்டுலதான் அந்தம்மா அப்படி பேசுது.............

அதுவும் நியாயம்தானே.............

அடப்போ பாய்....... திராவிட கட்சிங்க வந்த பின்னால எங்க நியாயம் நேர்மை எல்லா.......இவனுங்க ஆட்சியில இருக்கசொல்ல  பணத்த அள்ளிவுடுவானுங்க..........அவனுங்க வந்தா அவனுங்க அள்ளி வுடுவானுங்க...........

அவனுங்க கொடுத்தா வாங்குற பேமானிங்களுக்கு அறிவு எங்க போச்சு......

அது இல்ல லிங்கம் சாறு வாங்குறவன் அடிச்ச  துட்டுல நமக்கு கொடுக்குறான் வாங்கிக்கினா இன்ன தப்புன்னு இப்போ ஜனம் நெனைக்குது.......இன்னத்த சொல்ல.

மொதல்ல கள்ள ஒட்டு குத்தி.................கெலிச்சானுங்க..............சேசன் வந்து அட்டை கொடுத்து அதுக்கு ஆப்பு வச்சாரு.............அதால இப்போ புச்சா பணம், பிரியாணி, சாராயம், டாப்பப்புன்னு இறங்கிட்டானுங்க..............

அய்யே அது இன்னா முனிம்மா டாப்பப்பு.............

அய்ய உனுக்கு தெரியாதா நாடார்...........ஸ்ரீரங்கத்துல சில கடையில போயி உன் செல்லுக்கு இனாமா சார்ஜு போட்டுக்கலாமா............

சரி அத்த வுடு முனிம்மா டெல்லில யாரு வருவாங்க........

கேஜ்ரிவால்தான் வருவாராம் போல.............சொல்லிகிரானுங்க.

போன தபா வந்து துண்டைகானோம் துணியக் காணோமுன்னு அம்பேல் ஆயிட்டாபோல...........இப்ப இன்ன செய்வாரு.........

கேஜ்ரிவாலுக்கு கிரண்பேடிய மேலுன்னு சொல்றாங்க...........

அடப்போடா கேஜ்ரிவால் மேலு.............கிரண்பேடி பீமேலுடா...........

அய்ய தோபாருடா முனிம்மா நக்கல் செய்யுது............

இன்னா முனிமா நம்ம கேப்டனு.............பா.ஜ.க வுக்கு தண்ணி காமிக்கிறாராமே..

ஆமாண்டா அவரு கச்சில ஆளு நிக்கப்போவதா சொன்னாரு, பி.ஜே.பி சந்துல பேந்தா வுட்டுகிச்சா............மனுசன் மெர்சல் ஆயிட்டாரு.

முன்னிமா புச்சா படம் வந்துகிச்சே...............தல படம் எப்படி கீதாம்.

ஒரே டிக்கடுல மூணு படம் காமிக்கிராங்கன்னு அவனவன் நக்கல் வுட்டுகினு கீறானுங்க............இவனுங்க அரச்ச மாவையே அரச்சிகினு புளிப்பு ஊத்திகினு கீறானுங்க.

இந்தி படம் எப்படி கீதான்...............

கமலு பொண்ணு வருதே அந்தப் படமா............படம் நல்லகீதுன்னு கோயிலாண்ட பேசிக்கினு போனாணுக............நமக்கு இன்னா தெரியும் இந்திப் படம் பத்தி.................

முனிம்மா ஐய பேப்பர குடு இன்னா போட்டுக்கிறான்

செல்வம் இன்னாடா பொம்பளையாளுங்க படமா..............










Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

KILLERGEE Devakottai said...

ஸூப்பரா கீதுபா
ஜொள்ளு டக்கரா கீதுபா
த.ம ஒண்ணுபா

கும்மாச்சி said...

கில்லர் நைனா கடியாண்ட வந்து கண்டுக்கின டேங்க்ஸ்பா.

திண்டுக்கல் தனபாலன் said...

நேற்று தான் பார்த்தேன்... செம புளிப்பு...

கும்மாச்சி said...

ஆமாம் ஆமாம்

'பரிவை' சே.குமார் said...

சூப்பருங்கண்ணா....

கும்மாச்சி said...

வணக்கம்னா வாங்கண்ணா.............நன்றிண்ணா.

சிங்கம் said...

சரியான மொக்க படம்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.