Tuesday 17 February 2015

டீ வித் முனியம்மா-பார்ட் 31

லோகு இன்னாடா இந்நேரத்துக்கு வந்து குந்திகின.

இன்னா செய்யுறது முனிம்மா சரக்கு வாங்க போன என் மச்சான் இன்னியம் வரல அதான் கடியாண்ட அம்மாவ வுட்டு இங்க வந்துகினேன்.

சரிடா மீசையாண்ட டீ சொலிக்க.............

தோடா முனிம்மா செல்வம் வந்துகினான் பாரு...........

நாடார், பாய் லிங்கம் சாரு அல்லாரும்  வந்துகினு இருக்காக..........

நீ நூசு இன்னா படி முனிமா.........

கேஜ்ரிவாலு டில்லில சொம்மா சொல்லி அடிச்சிகிரான்பா..............எய்வது சீட்டுல அருவத்தியேயு சீட்ட அள்ளிகிறான்..........

முனிம்மா மோடி அலை மோடி அலைனுவானுங்களே இன்னா கடலு கம்முனு சுருன்டுகிச்சா.............

அடப்போ லோகு...........டில்லில எங்கடா கடலு? சொம்மா வாருகோலு வச்சி அல்லாத்தையும் வலிச்சிகினாறு........

அது சரி முனிமா காங்கிரஸ் இன்ன இப்படி புட்டுகிச்சு.............

டேய் காங்கிரசு பத்து வருஷம் இன்னா ஆட்டம் ஆடினாகடா...................எது எத்தாலும் ஊயலு............அதான் இப்போ அடங்கிட்டானுங்க.

முனிம்மா அப்பால.........

டேய் செல்வம் அவரு பட்ச்சவருடா....................வந்து மொதொல ஒரு வேல செஞ்சுகினாறு பாரு........கவர்மெண்டு ஆபீசுல வேல செய்யுற ஆளுங்களோட புள்ள குட்டிங்க எல்லாம் காப்பரேசன் ஸ்கோலுலதான் படிக்கோணும் னு சொல்லிகினாரு.

அதால இன்னா ஆவப்போவுது.................

நாடார்.....காப்பரேசன் ஸ்கோலுல நல்ல டீச்சர வேலைக்கு வெப்பானுங்க............இல்லாங்காட்டியும் காசு வாங்கிக்கினு கண்ட கசுமாலம் எல்லாம் உள்ள உட்ருவானுங்க..............அவனுக புள்ளைங்களே படிக்க சொல்ல அப்டி செய்வானுங்களா?

அப்பால இன்ன செய்யப்போறாராம்?

பாய் அப்பால கரண்டு வேலைய பாதிக்கி பாதியா கம்மி பண்ணிகிராறு.......

சரி முனிமா எவ்வளவு நாளைக்கு இது தாங்கும்னு பாப்போம்.......

கரீட்டா சொன்ன லிங்கம் சாரு, நாம் பாக்காத சி.எம்மா...........

இன்ன முனிம்மா ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் ரிஜல்ட் வந்துகீதே...........

அடப்போ லோகு இதெல்லாம் ஒரு நூஸா? ஆளுங்கட்சிதான் கெலிக்கும்.......

திருமங்கலம் ஃபார்முலா வரும் முன்னிய கள்ள ஒட்டு குத்தினானுங்க..........ஆளுங்கட்சி போலிச கைக்குள்ள வச்சிகினு செய்வானுங்க............

ஆமா அதான் இப்போ முடியாதில்லா.............

அதான் லிங்கம் சார் இப்போ துட்டு குட்த்து  கெலிக்கிறாங்க.

இன்னா முனிமா அந்தம்மாவிட தாஸ்தி ஒட்டு வாங்கிக்கீதாம்.............மெய்யாலுமா?

ஆமாண்டா லோகு மெய்யாலும்தான்...............அந்தம்மா எந்த மந்திரிபயலுக்கு ஆப்பு வக்கப்போவுதோ!

ஏன் முனிம்மா தேர்தல் கமிசன் இன்னா செஞ்சுகின்னு இருந்தானுங்க...........இம்மா துட்டு வேலயாடிகீதுன்னு சொல்றானுங்க..........

அதுவா பாய் அவனுங்க எப்பவுமே ஆளுங்கட்சிக்கு ஜால்ரா ஆவானுங்க........இல்லன்னா அவனுகளுக்கு கட்சிக்காரனுங்க உண்ட கொடுத்துருவானுங்க..............அதால தேர்தல் கமிசன் ஆளுங்க கம்முன்னு போவானுங்க........

இன்னா முனிம்மா பன்னீரு சட்டசபையை மறுக்கா கூட்டிகிராறு............

அடப்போ நாடாரு இன்ன பேசுவானுங்க............ஆத்தா அத்த செஞ்சிச்சு இத்த செஞ்சிச்சுன்னு சொம்படிப்பனுங்க............அப்பால பெஞ்சு தட்டி கையி நோவேடுத்தா முடிச்சுடுவானுங்க...........

சரி முனிம்மா நமாளுங்க கப்ப தூக்கிடுவானுங்க...........

இன்னத்த தூக்குவானுங்க தமாசு பாரு...............அல்லாம் அடுத்து அப்ப்ரிக்க காரனுங்க கூட ஆடறானுங்க..........அப்போ அல்லாம் புட்டுக்குவானுங்க.......

ஆப்போநெண்டா ஆளே இல்ல சோலோவாயிட்டேன்..........நான் முன்னே போல இப்போ இல்ல ரொம்பா மாறிட்டேன்............

டேய் செல்வம் இன்னாடா கானா பாடிக்கினு பிலிமு காட்டுறே..........படம் பாத்துகினியா......

படம் சூப்பரா கீது முனிம்மா...........படத்துல ஒரு பிகரு வருது சூப்பரா கீது........

டேய் நீயி எங்கடா மாறப்போற.............நான் அப்பால போவங்காட்டியும் பேப்பர எத்து பிகர பாப்ப...........









Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

'பரிவை' சே.குமார் said...

கலக்கல்... படமும் பகிர்வும்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சொல்லிச்சென்ற விதம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம1
எனது பக்கம் கவிதையாக வாருங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எரியும் தீப்பிளம்பு:

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

காப்பரேசன் ஸ்கோலுலயாவது படிப்பார்களா...?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.