Monday 9 March 2015

டீ வித் முனியம்மா பார்ட்- 32

ஐயே.........இன்ன முனிம்மா கடியாண்ட காணோம், நீ வர்லியேன்னு லோகுப்பையனும் செல்வமும் மெர்சல் ஆயிகிரானுங்க.

அடப்போ பாய் நான் இன்னா அவனுகமாறி லுச்சா பார்ட்டிங்களா? வியாவாரம் கீது இல்ல.

முனிம்மா குடிக்கானு வேண்டி டீ அல்ல வெள்ளம்  வேணுமா?

இவன் ஒருத்தன் பேஜார் பண்ணிக்கினு கம்முன்னு டீ அடிடா..

இன்ன முனிம்மா பெங்களூரு வழக்குல இன்னா நூசு போட்டுகிறாங்க?

லிங்கம் சாரு, வயக்கு நல்லாத்தான் போயிகீதான், ஜட்ஜி தீர்ப்ப அப்பால அடுத்த வரம் சொல்லிக்றேன்னு போயிட்டாரு.

இன்னாதான் ஆவுமாம்?

இன்னா நாடார் இதெல்லாம் நமக்கு தெரிஞ்ச விசயம்தானே, ஜட்ஜி ரெண்டு பார்டியான்டையும் ஆதாரம்........ ஆதாரம்..... கொடுன்னு கேட்டுகினே கிறாரு. அவனுக எங்க போவானுங்க, ஆதாரம் இருந்தா இந்நேரத்துக்கு கேச இம்மாம் வருஷம் இஸ்துகினானுங்க.......வச்சினா பால்மாரிகிறாங்க.

அம்மா இன்னா சொல்லுதாம்.......

அது இன்னா சொல்லும், அவங்க ஆளு ஒருத்தன் வேற இப்போ புச்சா கேசுல மாட்டிக்கினு கீறான்.........

இன்ன சொல்ற முனிமா..........

அப்படி கேள்றா செல்வம், நீ இன்னாடா  நூசெல்லாம் கேட்டுகினு, பொம்பளைங்க படம் பாத்துட்டு ஜூட் வுட்டுகினு போய்கினே இருப்ப.........

அக்ரி கிச்னமூத்தி கேசா........டேய் அது பெரிய கேசுடா..............தோல துன்னவனுக்கே இந்த தண்டனைன்னா...........பயத்த துன்னவனுக்கு இன்னா செய்யுறதுன்னு கலீனறு நக்கல் உடுறாருடா........இவரு உசுப்பி வுட்டு அந்தம்மா இன்னும் என்ன செய்யப்போவுதோ.

சரி முனிம்மா இன்னா கேசு அது......அத்த சொல்லு.....

டேய் தின்னவேலில அதிகாரி முத்துக்குமாரசாமி தண்டவாளத்துல உயுந்து தற்கொல பண்ணிகினாறு............அதுக்கு காரணம் இந்த கிஸ்னமூத்திதாணு சொல்றானுங்க..

அதெப்டி..........

டேய் லோகு அந்தாளு ஆபிசுக்கு வண்டி ஓட்ட டிரைவருங்க வேலைக்கு எடுக்க சொல்ல அமைச்சரும் அவங்க ஆளுங்களும் அவங்க சொல்ற ஆள்தான் எடுக்கனமுன்னு சொல்லிகிறாங்க. அதுக்கு அவரு ஒத்துக்காம நியாயமா ஆளுங்கள வேலைக்கு எடுத்துகிராறு.

அப்பால.

அதுக்கு இவனுங்க சரி வேலைக்கு எடுத்ததுதான் எத்த அந்தாளுகிட்ட துட்டு வசூல் செஞ்சி கொடு இல்ல நடக்குறதே வேற மவனேன்னு மெர்ட்டிகிரானுங்க.

அந்தாளு பயந்துகினு தண்டவாளத்துல தலைய உட்டுகிராறு......அதாண்ட கேசு இப்ப.

அது சரி அம்மா இல்லாம இந்த அமைச்சருங்க கச்சி ஆளுங்க எல்லாம் நல்லா காசு பாக்குறதா சொல்றாங்க.

ஆமாண்டா அந்தம்மா இல்லாங்காட்டியும் நெம்பத்தான் ஆடுறானுங்க போல,

சரி முனிம்மா கலீனறு அறிவாலயத்தாண்ட கூட்டம் போட்டாரே இன்ன சொல்லிகினாங்க, அடுத்த முதல்வரு ஸ்டாலினாமா?

ஏண்டா லோகு அவரு இன்னா டக்கர்........பார்ட்டி, அத்த கண்டி சொல்ல மாட்டாரு..........பசி எடுக்குது அல்லாம் போய் துன்னுங்கன்னு சொல்லி கழண்டுகினாறு............

முனிம்மா டெல்லி நூசு இன்னா..........

போன வாரம் அதிமுக பார்ட்டி ஒன்னு பாடிக்கிச்சே அத்த கேக்குறியா........அத வயக்கம் போல நடக்கறதுதானே.........எல்லாம் அடிமைங்கடா............நம்மளகண்டி அங்க உட்டானுங்கன்னு வையி சொம்மா நாட்ல கீற அல்லா பிரச்சினையும் அவுத்து வுட்டு வூடு கட்டி அடிப்போம்.

கேஜ்ரிவாலு இன்னா சொல்றாரு.............

அவரு பெங்களூராண்ட சித்த வைத்தியம் செய்ய வந்துகிராறு.

சரி முனிமா சினிமா நூசு இன்னா சொல்லு...........

இப்போ ஒன்னியும் இல்லடா...........நானா உளுகனாய்க்கன் படம் வருதுடா. அதாண்ட நூசு.........

அந்தாளு வயக்கம் போல இன்னா பண்ணிகிறாரா? இல்ல புச்சா எதுனா செஞ்சுகிறாரானு பாப்பம்.
இந்தாடா செல்வம் பேப்பரு படம் பார்த்துக்க...............


Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

KILLERGEE Devakottai said...

எப்படி ? பாஸூ சென்னைத்தமிழை இவ்வளவு அழகா எழுதுறீங்க ?
தமிழ் மணம் 1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கும்மாச்சி

மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் இறுதியில் உள்ள படம் கண்ணைப்பறிக்கிறது..ஆகா...ஆகா.. த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

அமாவாசையையும் ,பௌர்ணமியையும் ஒருசேர ,கண்னுக்கு குளிர்ச்சியா பார்க்க முடிந்தது ,உங்க புண்ணியத்தில் :)
த ம 4

'பரிவை' சே.குமார் said...

அருமையாச் சொல்லியிருக்கீங்க...

திண்டுக்கல் தனபாலன் said...

சரிதான்ப்ப்பா...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.