Friday 15 May 2015

கலக்கல் காக்டெயில்-168

கணக்குல கோட்டை விட்டிடு


இந்த படத்தை "ஒரு ஊழியனின் குரல் வேலூர் ராமன்" அவர்கள் தன்னுடைய வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு பொருந்துகிறது பாருங்கள்.

நாடே எதிர்பார்த்த ஒரு தீர்ப்பு, அரசியல் வா (வியா)திகள் இனிமேலும் ஊழல் செய்ய அஞ்ச வேண்டும்,  தீர்ப்பு கடுமையாக இருக்கும் என்று எதிர் பார்த்த தீர்ப்பு,  திருவாளர் பொதுஜனத்திற்கு நமது சட்டம், பொத்திக்கிட்டு இரு எங்களது வியாபாரத்தின்  முன்!!!!   நீதி நேர்மை நியாயம் எல்லாம் ஒரு "மை"த்தையும் புடுங்க முடியாது என்று அழுத்தமாக எழுதிவிட்டார் மாண்புமிகு நீதியரசர். இந்த தீர்ப்பின் அடிப்படை ஒரு பத்து விழுக்காடு அனுமதிக்கலாம் என்று முன்பே முடிவு செய்து எல்லா எண்களையும் கூட்டி கழித்துப் பார்த்து ஒரு வழியாக எட்டு விழுக்காடில் முடித்தார், ஆனால் அங்குதான் குழப்பமே. கூட்டலில் தவற விட்டுவிட்டார். இப்போது பார்த்தல் 75 விழுக்காடு வருகிறது.

இப்போ என்ன சொல்லுகிறார்கள் என்றால் இதை அவர் திருத்த முயன்றாலும் நீதிமன்றம் அனுமதிக்காதாம்!!!!!!. உச்சநீதிமன்றம் போகவேண்டுமாம்.

அங்கே போனால் டான்சி வழக்கு மாதிரி முடித்து விடுவார்கள்.

அடேய் காசு வாங்கி ஒட்டு போடும் ஓணான்டின்களே சட்டம் உங்களைபோன்ற அஞ்சுக்கும் பத்திற்கும் அல்லாடும் கூட்டங்களுக்குத்தான். திட்டம் போட்டு சுரண்டும்   கூட்டத்திற்கு அல்ல. அது திருடிக்கொண்டேதான் இருக்கும்.

Why I like MK


இன்றைய ட்விட்டரில் மேலே தலைப்பில் உள்ள ஹேஷ் டேக் உருவாக்கி இணைய போராளிகள் நிறைய கீச்சுகள் கீச்சினார்கள். உண்மையிலே அவையெல்லாம் அவர்கள் அவரை புகழ்கிறார்களா? இல்லை ஓட்டுகிறார்களா? என்பது புரியவில்லை.



என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே என்ற வார்த்தை இவரை தவிர யார் சொன்னாலும் அவ்வளவு உயிர்ப்போடு இருக்காது

தங்களை திருநங்கை என்று குறிப்பிட்டுக்கொள்வதில் அந்த இனமே விரும்பும்படியாக, திருநங்கை என்ற பெயர் வைத்தார்... உழவர் சந்தை, உள்கட்டமைப்பு 

எரிச்சல் தரும் கேள்விக்கும் எகத்தாளமாய் பதில் தரும் டைமிங் சென்ஸ்

ADMK உருவாகவும், DMK அழியவும் கருணாநிதி மட்டுமே காரணம்.. 

கல்லக்குடி தண்டவாளத்தில் தலை வைத்ததால் #WhyILikeMK & ஒரு மணி நேர உண்ணாவிரதம் #WhyIhateMK.

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என எழவு வீட்டிலும் எதுகை மோனையில் விளையாடிய முத்தமிழே!.

என்னய்யா எல்லாரும் ‪#‎WhyILikeMKன்னு‬ கிளம்பிட்டீங்க? சரி நானும் சொல்லிக்கறேன்... என்னதான் கலாய்ச்சாலும் கழுவி ஊத்துனாலும், கிட்டத்தட்ட அறுபது வருஷமா, தமிழக அரசியலின் தவிர்க்கவே முடியாத முகமாக இருப்பதால் ‪#‎WhyILikeMK‬...

ஆபிஸ் அரசியலையே நம்மால தாக்கு பிடிக்க முடிய மாட்டேங்குது. இந்த வயசுலையும் தலைவரு அரசியல் பண்ணுற விதத்தை பார்த்தா ஆச்சரியமாத் தான் இருக்கு ‪#‎whyILikeMK‬

ரசித்த கவிதை 


வன் பிச்சைக்காரனா... 
பைத்தியக்காரனா எனத்
தெரியவில்லை.
விரல் இரண்டை
கத்தரிபோல் உதட்டில் வைத்து
பாவனை காட்டி
பீடி வாங்க வேண்டும் எனக்
கையேந்தினான்.
வழக்கம்போல்
பாக்கெட்டைப் பிதுக்கிக் காட்டி
சில்லறை இல்லை எனச்
சொல்லத் தோன்றவில்லை எனக்கு!

நன்றி: தென்பாண்டியன் 

ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

KILLERGEE Devakottai said...

அனைத்தும் அருமை நண்பரே...
தமிழ் மணம் 2

கும்மாச்சி said...

நன்றி கில்லர்ஜி

S.Raman, Vellore said...

நம்ம படத்தை பகிர்ந்ததற்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அவரே காரணம் என்பது உண்மை...

”தளிர் சுரேஷ்” said...

சுவையான காக்டெயில்! பணம் இருப்பவர்களுக்கு நீதியும் பாக்கெட்டில் இருக்கும் போல!

”தளிர் சுரேஷ்” said...

உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.