Sunday 29 January 2017

அண்ணே 144 அண்ணே

அண்ணே இன்னிக்கு பேப்பர பார்த்தீங்களா அண்ணே..........

(மைன்ட் வாய்சில்) ஏன் இந்த நாயி இன்னிக்கு பேப்பர பத்தி கொலைக்குது...
டேய் ஏண்டா நாயே நீ பாத்தியாக்கும்..........

இல்லீங்கண்ணே படிச்சேன்............


டேய் பேப்பருல சுருட்டி வச்ச ப்ரியானிய லவுட்டி தின்ற பேமானி நீ பேப்பர நீ படிச்சியாக்கும்.............டேய்.........அதெப்படிடா பொய் உன் வாயில காவாத்தண்ணி மாறி கொட்டுது..............

இல்லீங்கண்ணே உண்மையா படிச்சேன் அண்ணே...........மெரினாவுல 144 ன்னு போட்டிருக்காங்கண்ணே...

சரி அதுக்கு இன்னடா இப்பொ கோமுட்டி தலையா....

144 ன்னா என்ன அண்ணே? 9 பேருக்கு மேல கூட்டம் சேரக்கூடாது......அதுதானுங்களே அண்ணே............

டேய் கூமுட்ட தலையா.............உனக்கு எவண்டா 9 பேருன்னு சொன்னது...........டேய் CrPC 144  இன்ன சொல்லுதுன்னா 4  பேருக்கு மேல கூட்டம் சேரக்கூடாது.............

அப்படியும் சொல்லலாம் கூட்டம்.........அப்போ 144 கூட்டுங்க 9 வருதா அதான் சொன்னேன்...நான் சொலரதுதாண்ணே  ரைட்டு.........

டேய் செங்கல் மண்டையா காலையில ஏண்டா எங்கிட்ட வந்து லொள்ளு பண்ற............நாயே சரி 144  சட்டம் போட்டிருக்காங்க அதுக்கு இன்ன்ன...........

அதெப்படி அண்ணே............நடக்கும் இப்பொ பாருங்க நானு, நீங்க அண்ணி.......நாலு பேரும் பீச்சுக்குப் போறோமா?

டேய் நாயி....அண்ணி உன்கிட்டே வரேன்னு சொன்னாளாக்கும்............சரிடா கரிச்சட்டி தலையா......அதெப்படி நாலு பேரு.............

அண்ணே கூட உங்க தங்கச்சியும் வருமில்ல................

டேய் கருவாயா ஏண்டா காலைல கடை முன்ன வம்பு பண்ற.........போடா......

அது இல்லீங்கண்ணே.........அதுபோல நாலு நாலு பேரா வருவாங்க இல்ல...........அவங்க சுண்டல் கடைல நின்னா கூட்டமாவுமில்ல அப்போ போலீசு இன்னா செய்வாங்க...............

டேய் கோமுட்டி தலையா ஒரு முதலாளிய பார்த்து கேக்குற கேள்வியாடா இது..

அதில்லைங்க அண்ணே.....இன்ன செய்வாங்க கைது பண்ணுவாங்களா அண்ணே....

டேய் அதுக்குதான் சொல்லியிருக்காரு இல்ல............நடக்கிறவங்க........குடும்பமா வரவங்களுக்கு பிரச்சின இல்ல.........

அதெப்படி அண்ணே கூட்டமா நடந்து போனா...............

டேய் நாயே உனக்கு இன்னா வேணும்..............சொம்மா இங்க லொள்ளு பண்ணாதா........அதோ நாய்க்கு வைக்க ரெண்டு பொற வச்சிருக்கேன்.........அத்த கவ்விட்டு ஓடிடு.............அடேய்.........அந்த பெரிய பீச்சுக்கு 144  போட்ட ஒரே கவுமெண்டு நம்ம கவுமெண்டுதான்........அத்த பத்தி இந்த நாயி காலைல பேச வந்த்திடுச்சு....இல்ல கொலைக்க வந்திடுச்சு.........இன்னிக்கு நரி ஊளை உட்டிடிச்சு டோய்............ஊ...ஊ...ஒ..





Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

KILLERGEE Devakottai said...

1+4+4=9 ஸூப்பர் நண்பா.

கும்மாச்சி said...

கிள்ளர்ஜி வருகைக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

ரசித்தேன்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா...

ரசித்தேன்.

கும்மாச்சி said...

வெங்கட் நாகராஜ் நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹா..ஹா...

Unknown said...

சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று போகும்னு அறிவாளிங்க நினைப்பு :)

Unknown said...

நக்கல் நன்று!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.