Monday 9 January 2017

சொர்க்க வாசல் திறந்திடிச்சு

ணக்கம் நான் உங்கள்  "மந்தி"  டிவியின்  தங்கராஜ் முண்டே............இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி என்பது இன்றைய கால கட்டத்திலே இன்றிமையாத ஒன்று.....இந்த நிகழ்ச்சியை நம் இப்பொழுது நேரடியாக காணலாம் இதற்காக நமது நிருபர்கள், கேமரா மென் போன்றவர்கள் பல இடங்களில் நின்றுகொண்டு இருக்கிறார்கள். இது போன்ற நிகழ்ச்சியை வேறெந்த தொலைக்காட்சிகளிலும் காணமுடியாது. முதன்முறையாக இதை நேரடி ஒலிபரப்பு செய்வது நமது "மந்தி" தொலைக்காட்சி என்பதில் பெருமை கொள்கிறோம். மேலும் இந்த நிகழ்ச்சியில் நமது நிருபர்கள் ஒரே சமயத்தில் சொர்க்கத்தில் உள்ளவர்களையும் பூமியில் உள்ளவர்களையும் பேட்டி காண்பார்கள். அதே சமயத்தில் இரண்டு இடங்களிலும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன........இனி நிகழ்ச்சிக்கு போகலாமா?

முதலில் சொர்க்க வாசல் முன் நிற்கும் எழில்,..........

முண்டே: எழில் அங்க நிலைமை எப்படி இருக்கு?

எழில்: நிச்சயமா!! ஒரே பரபரப்பா இருக்கு. சொர்க்கவாசல் முன்னாடி நின்னுகிட்டு இருக்கோம், கதவு எப்ப வேண்டுமானாலும் திறக்கப்படலாம். அதற்க்கான மோட்டார் தயார் நிலைமையில் இருக்கிறதா கிங்கரர்கள் சொல்கிறார்கள்.

முண்டே: கிங்கரர்களா அவர்கள் யாருன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா?

எழில்: நிச்சயமா!! அவர்கள்தான் இங்கு வாட்ச்மேன்கள்......தினமும் காலையில் வேலைக்கு வந்து விடுவார்களாம்..........இந்த கதவருகே நிற்பதுதான் அவர்கள் வேலை.

முண்டே: அவர்களிடம் பேசலாமா?

எழில்: நிச்சயமா!! கிங்கரர் உங்க வேலை என்ன சொல்லுங்க....

கிங்கரர்: தெனைக்கும் வந்து கதவாண்ட நின்னுகினு இருப்போம்... மேலிடத்தில எப்போ தொறன்னு சொன்னாலும் தொறப்போம்...ஆனா வருசத்துக்கு ஒரு தபா தான் தொறக்க சொல்லுவாங்க.

முண்டே: எழில் இணைப்பிலேயே இருங்க........கொயஸ் தோட்டத்து வாசலில் நமது நிருபர் தேன்மொழி இருக்காங்க அவங்க கிட்ட பேசுவோம்........தேன்மொழி நீங்க எங்க இருக்கீங்க அங்கே என்ன நெலமை?

தேன்மொழி: நிச்சயமா? இங்கே ஒரு மக்கல் வெல்லமா இருக்கு..அவர்கலிள் நிறைய பிரபலங்கலும் இறுகாங்க..........எல்லோரும் இங்கே இருந்து சொர்க்கவாசள்...............திறக்க காத்திருக்காங்க............

முண்டே: தேன்மொழி பிரபலங்கள் சொன்னீங்க யாரு யாரு இருக்காங்க?

தேன்மொழி: நிச்சயமா!!  மதிற்பிற்குரிய கம்பினுரை இருக்காரு, கலர்வதி இருக்காங்க, சிதைகுமார் இருக்காரு.............மற்றும் எல்லோரும் கரை வேட்டிக்கட்டிக்கிட்டு காத்திக்கிட்டு இருக்காக............

முண்டே: தேன்மொழி அங்கே என்ன நடக்குது?

தேன்மொழி: நிச்சயமா?!!! எல்லோரும் இங்கே கொயஸ் தோட்டத்து கதவு களற்றி வச்சிருக்கிறதால எல்லாம் கம்பி தடுப்புக்கு முன்னால நின்னுகிட்டு இருக்காங்க.........

முண்டே:கதவ கழ்ட்டிட்டான்களா? அது எப்போ அதை பற்றி ஏதாவது தகவல் உண்டா?

தேன்மொழி: நிச்சயமா!!இதுக்கு முன்னாடி இந்த கதவ எப்பவாவது தொரப்பான்கலாம் ஆனா இப்பொ அடிக்கடி அரசியல் பிரமுகர்கல் குனிஞ்சுகிட்டே வரதால அவுக  முதுகு பட்டு கதவு பெயிண்ட் அடிக்கடி போகுதுன்னு தங்கத்தாரகை மினிம்மா கழட்டி வக்க சொல்லிட்டாங்களாம்.......அப்படின்னு இங்க இருக்கிற பக்கத்து வீட்டு வாட்ச்மேன் சொள்றார்....

முண்டே: சரி அங்கே எதுக்கு எல்லோரும் காத்திருக்காங்க?

தேன்மொழி: நிச்சயமா!!எல்லோரும் மினிம்மா வர காத்திருக்காங்க...........

முண்டே: அவங்க எப்ப வருவாங்க ஏதாவது தகவல் உண்டா?

தேன்மொழி: நிச்சயமா!! அவங்க இப்போதான் புதிய கெட் அப்  போட்டிட்டு இருக்காகளாம்..........இதோ வந்துருவாங்க............

முண்டே: புதிய கெட்டப்பா அதை பற்றி ஏதாவது தகவல் உண்டா தேன்மொழி..

தேன்மொழி: நிச்சயமா!!! அதாவது முப்பது வருஷமா மேக்சிமா கூடவே இருந்ததால அதே மாதிரி கெட்டப் போடனுன்னு ஆடலரசன் சொன்னாராம்?

முண்டே: அதெல்லாம் எப்ப தைக்க குடுத்தாங்களாம் ஏதாவது தகவல் உண்டா?

தேன்மொழி: நிச்சயமா!! அவங்க உதவியாளர இதை பற்றி கேட்கிறேன்......ஏங்க மினிம்மா இந்த டிரஸ் எல்லாம் எப்ப தைக்க கொடுத்தாங்க எதாவது தகவல் உண்டா?

உதவியாளர்: அன்னிக்கு "மேக்சிமா" மயக்கம் போட்டாங்க இல்ல அப்ப இங்கே ஒரே பதட்டமாச்சி.............உடனே அப்போல்லோக்கு போன் போட்டாங்க.......அப்புறம் டைலர் வந்தாரு............அவருகிட்ட அளவெல்லாம் கொடுத்துட்டுதான் அப்போல்லோவுக்கே போனாங்க.........

தேன்மொழி: வந்துட்டாங்க........வந்துட்டாங்க...........மினிம்மா.....இதோ கம்பினுரை போறாரு............தவந்துகிட்டே போறததான் நீங்க பாத்துகிட்டு இருக்கீங்க.............அவரு மினிமா கிட்டே பேசுறாரு...........மைக்க முன்னாடி வக்கிறேன்...........மினிம்மா மினிம்ம நீதான் இனிமே எல்லாம்.............எங்களை எல்லாம் காப்பாத்து மினி தாயே...............அண்ணாவிற்குப் பிறகு தம்பி...........அக்காவிற்கு பிறகு தங்கை................மனைவிக்கு பிறகு துணைவி ............அடுப்புக்கு பிறகு தொடுப்பு...........மினிம்மா நீங்கதான் இனி எல்லாம்........"மேக்சி" பிறகு "மினி" தானே.............

அடுத்து கலர்மதி அழுதுகிட்டே போறாங்க.........மினிம்மா உங்க குரல் இனிமைம்மா..........நீ தான அந்த குயில்..........நீ கண்டி அப்ரோவர் ஆயிருந்த ங்கொயால ஆட்சியையும் இருந்திருக்காது மேக்சிம்மாவும் இருந்திருக்காது........த்தா எந்நன்றி கொண்டார்க்கும் ..மமாள உய்வுண்டாம் பேமானி கண்ட ங்கொய்யால...............சினிமாவுல செல்லாகாசுதானே அந்தம்மா...........நீதான் மினிம்மா இனி அல்லாம்...........

ஆடி அம்பட் இதோ பேசுகிறார்......வான்கோழி மயிலாகலாம்.........தவிடு .........நெல்லாகலாம்............பரோட்டா...........குருமா ஆகலாம்.........சைகோ ஒரு துரோகி..........யானை நடந்தா ............எறும்புகள் மடியத்தான் செய்யும்...

முண்டே: தேன்மொழி இணைப்பில் இருங்க..........எழில் விண்ணுலகிலிருந்து அழைக்கிராறு..........சொர்க்க வாசல் திறந்துட்டாங்களாம். எழில் அங்கே என்ன நடக்குது?

எழில்: நிச்சயமா!!! சொர்க்க வாசல் திறந்து ஐந்து நிமிடம் ஆகிறது........நீங்கள் கொயஸ் தோட்ட நேரலையில் இருந்தததால் அந்நிகழ்வை காண முடியவில்லை.

முண்டே; சரி சொர்க்கவசால் திறந்துட்டாங்க யாராவது தெரிகிறார்களா?

எழில்: நிச்சயமா!!! ஒருத்தரு கையில் சங்குசக்கரம், சங்கு தலையில் கிரீடம் எல்லாம் போட்டுக்கிட்டு பட்டாடை உடுத்தி நடுநாயகமா மேடையில் இருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது...........அவர் முன்பு நிறைய  பேர் உட்கார்ந்திருக்கிறார்கள் சில முகங்கள் நமக்கு பரிச்சயப்பட்ட முகங்கள் போல் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது..........முண்டே........

முண்டே: எழில் அவங்க யாருன்னு உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?

எழில்: நிச்சயமா? மேக்சிமா இருக்காங்க............அவங்ககூட வழுக்கைதலையோட ஒருத்தரு பேசிகிட்டு இருக்காங்க.........முண்டே.......

முண்டே: கேமரா மென் கிட்டே சொல்லி அவங்க கிட்ட ஜூம் பண்ண சொல்லுங்க.......அவங்களையே தெய்வமா வணங்கின கூட்டம் இப்பொ கொயஸ் தொட்டதுலதான் கூடியிருக்கு........அவங்க ஆனந்தப்படுவாங்க...........

எழில்: நிச்சயமா!!இப்பொ பாருங்க அவங்க முகம் தெளிவா தெரியுது..........

முண்டே:  தேன்மொழி சொர்க்கவாசல் திறந்துட்டதா அங்கே இருந்து எழில் சொன்னாரு....

தேன்மொழி: நிச்சயமா!! எங்களுக்கு தெரிகிறது..........மேக்சிமா கூட தெரியிறாங்க...........

முண்டே: அங்கே நிலைமை எப்படி இருக்கு?

தேன்மொழி: நிச்சயமா!!இன் எல்லோரும் மினிம்மா காரு டயர நக்கிட்டு இருக்காங்க............

முண்டே:அங்கே யாரும் சொர்க்க வாசல் நிகழ்ச்சியை பார்க்கவில்லை போல் தோன்றுகிறது என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் தேன்மொழி?

தேன்மொழி: நிச்சயமா!! அவங்க எல்லோரும் குனிந்து இருப்பதால அவங்களுக்கு சொர்க்க வாசல் திறப்போ இல்லை அங்கே அவர்கள் இதற்க்கு முன்னால் குனிந்து வணங்கிய மேக்சிமாவையோ பார்க்கமுடியவில்லை என்பதை நம்மால் காணமுடிகிறது........

முண்டே: தேன்மொழி திடீரென்று அங்கு என்ன கலவரம்........

தேன்மொழி: நிச்சயமா!!! இங்கு ஒருவர மண்டை திறந்திருக்கிறது...........அவரை ஒரு இருபது பேரு சேர்ந்து அடித்திருக்கிறார்கல்........

முண்டே: ஏன் அடிச்சாங்க ஏதாவது காரணம் தெரியுமா?

தேன்மொழி: நிச்சயமா!! இதோ அவருகிட்டேய கேட்போம் அவரு பேச ரொம்ப கஷ்டப்படுறாரு............ஏதோ சொள்றாரு அதை கேட்டு சொள்ரன்.....

முண்டே: கேட்டு சொல்லுங்க...........சத்தமா சொல்லுங்க.....

தேன்மொழி: அவரு மட்டும்தான் இந்தக்கூட்டத்தில் சொர்க்கவாசல் திறப்ப பார்த்தவராம்..........அவரு ஏதோ பழைய விசுவாசத்தில மாண்புமிகு ..........தலீவி மேக்சிமானு சத்தமா சொல்லிட்டாராம்..........

முண்டே: என்ன சொன்னாரு? கொஞ்சம் சத்தமா சொல்லுங்க நேயர்களுக்கு கேட்கணும் இல்ல..........

தேன்மொழி: சத்தமாக மேக்சிமா என்று சொல்ல.............படுத்திருந்த கூட்டம் அவர நோக்கி ..................ஏய் எவடி அவ..........ஓடரா மைக்க..........புடுங்குடா கேமராவா...........

தேன்மொழி: நன்றி உங்கலிடமிருந்து விடை பெறுவது கேமரா மென் குரலசரனுடன் .......தேன்மொலி..............

முண்டே: இதுவரை சொர்க்க வாசல் நிகழ்ச்சியை நேரில் பார்த்தீர்கள்...........இந்த நிகழ்ச்சியை முதலில் காண்பித்தது எங்கள் மந்தி டிவி என்று மற்றுமொரு முறை கூறிக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுவது தங்கராஜ் முண்டே........

சொர்க்கத்திலிருந்து.........சார் முண்டே சார்............நான் எழில்...........நான் எழில்...........என்று கதறிக் கொண்டிருக்கும் போதே திரை ஃபேட் அவுட்டாகிறது.........

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

KAYALVIZHI said...

aiyo aiyo konnuttinga.

கும்மாச்சி said...

நன்றி கயல்விழி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரசித்தேன்.

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா.... ரசித்தேன்.

கும்மாச்சி said...

வெங்கட் வருகைக்கு நன்றி.

Yarlpavanan said...

அருமையான பதிவு

Sampath said...

நல்ல கற்பனை வளம், நகைச்சுவை, நேரடி ஒளிப்பிரப்பின் பாணி என்று கலக்கி விட்டீர்கள். மிகவும் ரசித்தேன்.

கும்மாச்சி said...

ஜீவலிங்கம் ஐயா வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

சம்பாத் கல்யான் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.