Sunday 25 November 2012

கலக்கல் காக்டெயில் 93

கசாப்  செத்துட்டானா?

கடந்த சிலநாட்களாகவே பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை. வேலை பளுவினால் உலக விஷயங்களும் ஒன்றும் தெரியவில்லை. இன்றுதான் சற்று ஓய்ந்த வேலையில் செய்திகளை பார்க்க முடிந்தது. இன்னாது "கசாப் செத்துட்டானா?" ரேஞ்சுக்கு ஆகிவிட்டது நிலைமை. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அப்பாவி மக்களை குருவி சுடுவதுபோல் சுட்டவனை ஒரு வழியாக தூக்கில் போட்டுவிட்டார்கள். முன்னாடியே அறிவித்து விட்டால் எங்கு ஒரு கூட்டம் எதிர் கூச்சல் போடுமோ என்று அமைதியாக முடித்துவிட்டார்கள் வேலையை. இவன் விஷயத்தில் நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது அவன் செய்த மனிதாபமற்ற செயலின் எதிரொலிதான். புனே, மும்பை பக்கமெல்லாம் இனிப்பு கொடுத்து வெடி வைத்து கொண்டாடியிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் மும்பை தாஜ் ஓட்டலில் நடந்த வேட்டையையும், சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய கோரத்தையும் யாரும் எளிதில் மறக்க முடியாது. இவன் வெறும் அம்புதான். ஏவி விட்டவன் பழிவாங்குவேன் என்று கொக்கரித்துக்கொண்டிருக்கிறான். அவனை என்ன செய்யப்போகிறார்கள்?

2 ஜியும் கட்சி பேரமும்

மேற்படி  ஊழலில் சிக்கி சின்னாபின்னமாகி வெளியே வரவே உன் பிழைப்பு என் பிழைப்பு என்றாகிவிட்டது கையை நக்கியவர்களுக்கு. இப்பொழுது முழுவதுமாக ஆட்டையைப் போட்டவர்கள் அடித்துக் கொள்கிறார்கள். சி.ஜி. ஏ வை அப்படி ஒரு அறிக்கை தயார் செய்து கையெழுத்திட வைத்தவரே முரளி மனோகர் ஜோஷிதான் என்று சி.ஜி. எவே ஒப்புக்கொண்டவுடன் காங்கிரசோ பி.ஜே.பி. இன் கோரமுகம் தெரிகிறது என்று தப்பிக்க அச்சாரம் போடுகிறார்கள். நடந்தவற்றில் எல்லோருக்கும் பங்கு உண்டு என்பதை எப்போழுதிலிருந்தோ  மக்கள்உணர்ந்துவிட்டார்கள். எல்லோரும் அடிச்சதில் நன்றாக பேரம் பேசி எடுத்துக்கொள்ளுங்க. வரி கட்ட நாங்க இருக்கிறோம்.

2013 ல் மின்வெட்டே இருக்காதாம்

2013 ல் மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறிவிடும் என்று ஆத்தா சொல்லிடிச்சு. ஓடிக்கொண்டிருந்த மின்நிலயங்களே இப்பொழுது நொண்டிக்கொன்டிருக்கின்றன. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உள்ள ஐந்து யுனிட்டுகளுமே ஒரே சமயத்தில் ஓடியதாக சமீப காலத்தில் சரித்திரம் இல்லை. இதுலே இவங்க எப்போ புதியதாக திட்டம் போட்டு நமக்கெல்லாம் மின்சாரம் வரப்போகுதோ தெரியவில்லை. பதினாறு மணிநேரம் மின்வெட்டை எப்படித்தான் ஊரு பக்கம் தாங்குகிறார்களோ தெரியவில்லை.

ரசித்த கவிதை

நிலம் பிடிக்கும் ஆனால்
புதைய மாட்டேன்

நீர் பிடிக்கும் ஆனால்
கரைய மாட்டேன்

வான் பிடிக்கும் ஆனால்
பறக்க மாட்டேன்

நெருப்பு பிடிக்கும் ஆனால்
ஏரிய மாட்டேன்

காற்று  பிடிக்கும் ஆனால்
மிதக்க மாட்டேன்

சாப்பாடு பிடிக்கும் ஆனால்
ஃ புல் கட்டு கட்டுவேன்.

----------------------------விகடன் பேயோன் பக்கத்திலிருந்து


ஜொள்ளு



25/11/2012



Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நேற்று முதல் 18 மணி நேரம் மின் வெட்டு... இனி வாரம் இருமுறை என்று தகவல்...

ஹா...ஹா... நல்ல கவிதை...
tm2

முத்தரசு said...

//மக்கள்உணர்ந்துவிட்டார்கள். எல்லோரும் அடிச்சதில் நன்றாக பேரம் பேசி எடுத்துக்கொள்ளுங்க. வரி கட்ட நாங்க இருக்கிறோம்.//

அதானே... அப்படி போடு

முத்தரசு said...

//ஜொள்ளு//

ஆத்தீ

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.