Wednesday 28 November 2012

சில்லறை வர்த்தகமும், சில்லறை பிள்ளைகள் அரசியலும்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஒற்றைக்காலில் நிற்கும் இந்த வேலையில் " இது தேவைதானா?" என்ற கேள்வி எழுகிறது.

சரிந்துகொண்டிருக்கும் பொருளாதார நிலைமையை சரி செய்ய இது ஒரு குறுக்கு வழியாக நிதியமைச்சர் நினைக்கிறார்.

இதனால்  சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற சந்தேகம் எல்லோருக்கும் உள்ளது. இதேபோன்ற நிலை கட்டாரில்  பத்து வருடங்களுக்கு முன்பு இருந்தது.ஆனாலும் இங்கு அந்நிய முதலீடு அனுமதி செய்யப்பட்டு சில்லறை வியாபாரிகளும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

மச்சான்ஸ் சில்ரே வர்தகமா? என்ன மச்சான்ஸ் இது?

ஆனால்  தமிழ்நாட்டில் உள்ள   பிரதான அரசியல் கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்து ஒட்டு வங்கியை அதிகரிக்க என்ன தகிடுதத்தம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நாள் வரை எதிர்ப்போம் என்று சொல்லிவந்த கலைஞர், முடிவை மாநில அரசிற்கு விட்டுவிடுவோம்  என்ற ஒரு பிரிவை பிடித்துக்கொண்டு, இப்பொழுது ஆதரித்து, காங்கிரசுடன் உறவை பலப்படுத்திக்கொண்டு பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று தன் முடிவை அறிவித்துவிட்டார். மேலும் 2ஜி விவகாரத்தில்  பி.ஜே.பி. இன் தகிடுத்தத்தம் வெட்ட வெளிச்சமான பின்பு தாங்கள் நிரபராதி என்று ஊருக்கு பறைசாற்ற இது சரியான தருணம் என்று நினைத்து மத்திய அரசின் பலம் தங்களுக்கு தேவை என்பதை மனதில் கொண்டு மேற்படி முடிவை அறிவித்து விட்டார்.

ஆத்தாவோ இது தான் தருணம் "அள்ளலாம் நாடார் ஓட்டை" என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார். ஆதலால் நாடார் சமூகத்தை வளைக்க அவர் மும்முரமாக வேலையில் இறங்கிவிட்டார்.

பிரதான கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் முட்டுகொடுக்கும் உபரி கட்சிகள்  இதை பற்றி பெரியதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.

 மொத்தத்தில் இவர்களுக்கு கொள்கை என்று ஒரு ...ரும் கிடையாது. சந்தரப்பவாத அரசியல்தான் இவர்களின் கொள்கைகளை நிர்ணயிக்கிறது.

இதையெல்லாம்  புரிந்தோ புரியாமலோ "மாறி மாறி ஒட்டு போட்டு" ஜனநாயகத்தை தக்க வைத்துக்கொண்டு சகித்துகொண்டிருக்கின்றரனர் "தமிழ் கூறும் நல்லுலக மக்கள்".


 

Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.