Monday 7 December 2009

மருத்துவர் ஐயாவும், அன்புமணியும் பின்னர் சூப்பர் ஸ்டாரும்.


இடம் தைலாபுரம்.


மருத்துவர் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு ஏதோ சிந்தனையில் இருக்கிறார்.
அன்புமணி குறுக்கும் நெடுக்கும் கோட் சூட்டுடன் அலைந்துக் கொண்டிருக்கிறார்.
மருமகள் இரண்டுபேருக்கும் மோர் கொண்டு வருகிறாள்.

“ஏம்மா இவன் காலையிலேயே எழுந்து கோட் சூட் போட்டுக்கிட்டு உலாத்தின்னு இருக்கான்”.

“அதை ஏன் மாமா கேக்குறிங்க, காலையிலேயே எழுந்து பழைய நியாபகத்துலே கோட் சூட் போட்டுக்கின்னு மீனம்பாக்கம் வரையிலும் போயிட்டு ஏர்போர்ட்ல உள்ளே விடலேன்னு அப்செட்லே இருக்கார்”.

“அன்புமணி குறுக்கிட்டு அதுக்குதான் நான் அப்பவே சொன்னேன் அம்மாகிட்டே போக வேண்டாம்னு கேட்டிங்களா.
இப்போ ஒரு பையன் நம்மளே மதிக்க மாட்டேங்கிறான். தொ இந்த தைலாபுரத்திலியே மதிக்க மாட்டேங்கிறான், இதுலே மீனம்பாகத்திலே இருக்கிறவன் எப்படி மதிப்பான்”.

“பொறுமையா இருடா மவனே நமக்கு காலம் வரும்”.

“எப்போ வரும், எல்லோரையும் பகைச்சின்னுரிக்கிங்க”

“இருடா காடுவெட்டி குரு, மத்த எல்லா கட்சி ஆளையும் கூப்பிட்டு இருக்கேன், எல்லாம் வந்த வுடனே எதான செய்வோம்”.

“அப்பா இத மக்களுக்கு சொல்லுங்கப்பா, ஏற்கனவே எதானா கேனத்தனமா ஒரு முடிவ எடுத்திட்டு அப்புறம் ஏதோ கட்சியோட சேர்ந்த முடிவுமாதிரி நம்மகிட்டயே உங்க வேலையே காட்டுரிங்களே”.

“எனக்கு போர் அடிக்குதுப்பா, நான் பாட்டுக்கு டெல்லிக்கும், தைலாபுரத்துக்கும் ட்ரிப் அடித்து, டிவி யிலே அப்பப்போ என்ன காட்டிகொண்டிருந்தார்கள், எல்லாத்துக்கும் வச்சிட்டியேப்பா ஆப்பு.
அது சரிப்பா திருசெந்தூருக்கும், வந்தவாசிக்கும் என்ன பண்ணப்போறோம்”.

“மருத்துவர் மனதுக்குள் "ஆமாம் என்னத்தே கிழிக்கப் போறோம், எப்பவும் போலே அறிக்கை வுட வேண்டியது தான்".

“அதாடா கண்ணு நம்ம கட்சியாளுங்க 49 ஒ ல போட சொல்லியிருக்கேன்.”.

“ஆமா இது பெரிய முடிவாக்கும், எப்படியிருந்தாலும் நம்ம ஆளுங்க எவனும் வெளியே வரவில்லை”.

“வேறே எதாவது சொல்லுங்கப்பா”

“சரிடா ரஜினி படம் ஏதோ வெளியே வரப்போகுதாமே, அத்த எதிர்த்து ஒரு அறிக்கை விடலாம்”.

“ஏம்பா இத விட உனக்கு கேனத்தனமான் ஐடியா இல்லையா.
ஏற்கனவே ஒரு தபா அந்த ஆளு கூட்டத்தோட மோதி, அப்புறம் என்ன அனுப்பி மன்னிப்பு கேட்க சொன்னே”.

“நம்ம வூட்லே எல்லோரும் அவர் படம் தான் பாக்கிறாங்க. அதுவும் ஒரு தடவ பார்த்தா பரவாயில்லே, இருபது தடவ பாக்கிறாங்க, அதையெல்லாம் அவர்கிட்டே சொன்ன வுடனே தான் அவர் தங்கள் ரசிகர்களை அமைதியா இருக்க சொன்னார், இல்லேன்னா நம்ம கத கந்தல் ஆகியிருக்கும்”.

“சரிடா இப்போ என்னதான் பண்ண சொல்லற அத்த சொல்லு”.
“கம்முன்னு அரசியல் விட்டு விலகிடுங்கப்பா. நான் மீதியே பாத்துகிறேன். ரொம்ப நாளைக்கி நாம வன்னியர், தமிழ், விவசாயின்னு குப்பைகொட்ட முடியாது. கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுப்பா”.
அப்போது கதவு தட்டப் படவே, திபு திபுவென்று கட்சியாட்கள் உள்ளே ஓடி வந்து, “தலை நீ சொன்ன சரி தலை” என்று மருத்துவரிடம் ஓடுகிறார்கள்
அன்புமணி மனைவியிடம், "பேசாம நம்ம தனியா கழண்டுக்க வேண்டியதுதான்".

கிழவனோட லொள்ளு தாங்கமுடியவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

சவுக்கு said...

அருமையாக இருக்கிறது நண்பரே. நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்.

என் நடை பாதையில்(ராம்) said...

இடைத்தேர்தலில் இவர்கள் 49 ஒ போடச் சொல்லி இருக்கார்கள். இவர்களது கட்சிக்காரன் கூட போடா மாட்டான்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.