Tuesday 7 June 2011

கலக்கல் காக்டெயில்-32

சாமியார் அரசியல்



பாபா ராம்தேவை ராம்லீலா மைதானத்தில் புகுந்து நள்ளிரவில் கைது செய்ததை எதிர்த்து இப்பொழுது எல்லா நாளேடுகளும் எழுதி கல்லா கட்டிக்கொண்டிருக்கின்றனர். சிங்கு வழக்கம் போல் வாய் மூடிக்கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் ஆடிப் போயிருப்பது உண்மை. சாமியாரை வேறு வழியில் ஆஃப் செய்திருக்கலாம். ங்கொயால இதேகண்டி தமிழ்நாடு அரசியலா இருந்தா, ஒரு நடிகையை செட் செய்து அவர் கோமணத்தை உருவியிருப்பார்கள். இல்லை என்றால் அரை கிலோ கஞ்சா வேலையை முடித்திருக்கும். வட நாட்டானுக்கு வெவரம் பத்தாது என்று இதற்குத்தான் சொல்கிறது.

ஆற்காட்டார் வாழ்க

அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் இருபத்து நாலு மணியும் ஃபேன் ஓடும், ஏசி வேலை செய்யும் என்று நினைத்தவர்களுக்கு அப்பப்போ ஆஃப் செய்து ஆற்ரகாட்டாரை நியாபகப் படுத்துகிறார்கள். தேர்தல் முன்பு எங்கள் ஏரியாவில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை மட்டுமே மின் தடை ஏற்பட்டது. இப்பொழுது நம் வீட்டிற்கு வரும் அழையா விருந்தாளி போல், ஒரு நான்கு மணி நேரம் காணமல் போய் சோற்றுக்கு வருவது போல் ஒரு சில நாட்களில் ஆறு மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது. மிக்ஸி, க்ரைண்டர் கொடுத்தவுடன் இது இன்னும் அதிகமாகலாம். எதற்கும் ஒரு டீசல் ஜெனரேடர் வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அஸ்தமித்த சூரியன் உதிக்காது


இன்று சட்டசபையில் அம்மா உரையில் தமிகத்திற்கு மேல்சபை என்றும் வராது என்று சொல்லியிருக்கிறார்கள். தி.மு.க வந்தால் மேல் சபை பற்றிய பேச்சும், அ.தி.மு.க வந்தால் அதை ரத்து செய்து அந்த பேச்சிற்கு சமாதி கட்டுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் அம்மா சொன்ன காரணம் அவர் ஆனவப்போக்கை காண்பிக்கிறது. “அஸ்தமித்த சூரியன்” இனி தமிழகத்தில் உதிக்காது என்று திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார். தமிழக மக்கள் பார்ப்பதற்கு கேனையன் போலிருப்பார்கள், தேர்தல் நேரத்தில் தெளிவாக கும்மிவிடுவார்கள்.

செருப்பு கலாசாரம்

இராக்கில் ஜார்ஜ் புஷ் மீது வீசப்பட்ட செருப்பு இப்பொழுது நம் நாட்டில் சகஜமாகிவிட்டது. முதலில் நம்ம “செட்டியார்” மீது வீசினார்கள். அடுத்தது கல்மாடி என்று தொடங்கி இப்பொழுது அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த காலத்து ராஜா எல்லாம் உஷார் பார்ட்டிகள். அரசவையில் ராஜாவை தவிர யாரும் செருப்பு அணிய அனுமதி இல்லை. இல்லை என்றால் நிறைய சிரச்சேதம் நடந்திருக்கும்.

“யாரங்கே ராஜ மீது பாதரட்சை பிரயோகம் செய்த செங்குட்டுவனின் தலையை பட்டத்து யானை நிரடட்டும்” என்று ராஜாவின் கூஜா கூவியிருப்பதை நம் பாடத்தில் படித்திருப்போம்.



ஜொள்ளுப் படம்

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

Faizal said...

இனிப்பு, காரம், புளிப்பு, ஜொள்ளு

டக்கால்டி said...

good

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.