Wednesday 14 March 2012

ஈழத்தில் மறக்கமுடியாத ஓர் நாள்



 நாளை சேனல் நான்கு ஒளிபரப்பைக் காணும் முன் இந்தக் கவிதை படியுங்கள்.


ஈழத்தில் மறக்கமுடியாத ஓர் நாள்
கவிஞர்:திலீபன்
பிரசுரித்த திகதி:13, December 2010
Views 1595
பிஞ்சு குழந்தை  ஒன்று _அன்னை
நெஞ்சை முட்டி முட்டி
வயிற்றை நிரப்ப  முயன்ற தருணம்.....
வீட்டு முற்றத்தை சுத்தம் செய்தாள்
வீட்டுபாடம் செய்யாததால்  பாடசாலைக்கு
விடுமுறை தந்த மூத்தமகள் .....
பாடசாலைக்கு சென்றிருந்தான்
பால்மணம் மாற இளையமகன் ....
எதோ சத்தம்  அங்கு
அன்னை நெஞ்சு பதபதத்தது
பசிதிக்க  முட்டிய
பிள்ளையால்  அல்ல ......
உயிர் கொள்ளும் வெடிகுண்டை தங்கி
உரத்த சத்தத்துடன் வந்த விமானம் கண்டு
ஓடினாள் ஓடினாள்   பாடசாலை நோக்கி ஓடினாள் ...
அரை வயிறு கூட நிரம்ப பாலகன்
அலறுகிறான்  பசியால் அங்கு
அன்னை உள்ளம் பதறியது
அள்ளியனைத்தாள்  பிஞ்சு குழந்தையை நெஞ்சோடு
இறப்பு வந்தால் ஒன்றாய் இறப்போம்  என்று
மறுகையில்  மூத்தமகள் கைபிடித்து
ஓடினால் ஓடினால் ஆண்டவன்மேல் 
ஆயிர வேண்டுதல்களை வைத்து....
நால்வரும் ஒன்று கூடி
பதுங்கினர்  பதுங்குகுழி  ஒன்றுள்
பதபதத்த  நெஞ்சம் நிற்கவில்லை
பரிதவித்தது  காமம் பக்க சென்ற
கணவன் நிலையெண்ணி ....
பல குண்டு மழை பொலிந்து
ஒய்ந்தது சத்தம் மெல்ல
ஊருக்குள் பரவியது
ஒராயிரம் கதைகள்
வெடித்த குண்டு ஒவ்வென்றுக்கும் கணக்குகாட்டி ....
அதில் ஓர் கதையில்
இவள் கணவன் இறந்தான் என்பது
ஓலம் இட்டாள்
ஒப்பாரி வைத்தாள் ....

மிதிவண்டி ஒன்று வந்து நின்றது பதட்டம் கொண்டு
ஊரார் மெல்ல வெளியேறியது
அவள் கணவனை கண்டாள்
கண்ணீர் விட்டாள்
கண்ணீர் வெள்ளம் ஓங்கி ஒலித்தது ...
`என்னவனே என்றுதான் இந்நிலை மாறுமோ?
எத்தனை தடவை தான்  எம் மங்கையர்
தம்மை தானே முண்டைசியாய்  நினைப்பதோ?`
மெல்ல மெல்ல மணித்துளிகள்  கரைந்தது
இரவும் சூழ்ந்தது
ஒன்றாய் அமர்ந்தனர்  உணவு உண்ண
மனதில் மகிழ்சி மெல்ல துளிர்விட்டது
எதோ குருச்சேத்திர போரில் வெற்றி கண்டதுபோல்....
அடுத்த கணமே தயாராக வேண்டியிருந்தது
அடுத்த குருச்சேத்திர போருக்கு
அங்கு பரா லைட் ஏவிவிட்டான் சிங்களவன்
இனி எந்நேரமும் எதுவும் நடக்கலாம்....


Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.