Saturday 8 September 2012

சுரங்கத்தை தோண்டினால்..........

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் பாஜக தலைவர் நிதின் கட்காரியின் உதவியாளர் அஜய் சன்செட்டிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் இதுவரை காங்கிரஸார் பெயர் மட்டுமே அடிபட்டு வந்த நிலையில் நேற்று திமுக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் பெயரும் அடிபட்டுள்ளது. அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் லாபம் அடைந்தவர்களில் பாஜக தலைவர் நிதின் கட்காரியின் முக்கிய உதவியாளரான அஜய் சன்செட்டியும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

அடப்பாவிகளா  எல்லோருமே சேர்ந்து ஒட்டு மொத்தமா நாட்டை குத்தகைக்கு விட்டுவிட்டு மக்களுக்கு நல்லாத்தான் பிலிமு காட்டுறீங்க. என்ன எல்லோருமா சேர்ந்து கூப்பாடு போட்டுட்டு பாராளுமன்றத்து வாயில் நிக்கிற காவலாளியையோ , இல்லை டீ கடை பையனையோ பிடிச்சு உள்ளே போட்டு வழக்கு நாடகம் நடத்துவாங்க. நாமளும் அதை காசுவாங்கி, காசு சேர்க்கிற ஊடங்கங்களை உற்று நோக்கி நம் பங்கிற்கு கதையளப்போம்.

மொத்தத்தில் இந்த மழைக்கால கூட்டுத்தொடரில் முப்பத்திநான்கு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருந்தன, அதில் நான்கு தான் முடிந்தது, மீதியை கூப்பாடு போட்டு, ஒத்தி வைத்து டீலில் விட்டு  விட்டார்கள்.

மண்ணு மோகனு சிங்கு சைக்கிள் கேப்பில் வெளிநாடு போய் வந்துவிட்டார். மொத்தத்தில் எல்லா எம்.பி.க்களும் வேலை செய்யாமலே சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஹூம், நடத்துங்க, நடத்துங்க.

Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

NKS.ஹாஜா மைதீன் said...

எல்லாருமே காவாலி பயலுக நண்பா...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஹாஜா.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு புனிதமான வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்றம் இப்படி அயோக்கியர்களின் கூடாரமாக மாறிவிட்டது...


அவமானத்துக்குறியது..
சுரங்க ஊழல் போல் இன்னும் என்ன என்ன ஊழல்கள் மறைந்துக்கிடக்கிறதோ தெரியவில்லை

கும்மாச்சி said...

சௌந்தர் வருகைக்கு நன்றி.

யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான் என்ற நிலைமை தொடருவதுதான் வேதனை.

முத்தரசு said...

கடைசி படம் ஒன்னும் சொல்றதுக்கில்ல பாஸ்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாஸ்.

திண்டுக்கல் தனபாலன் said...

படமே எல்லாவற்றையும் சொல்லுகிறதே...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

மக்களவை முடங்கி போனதால்சில கோடிகள் விரயமானது! அரசியல்வாதிகள் பல கோடிகளை குவித்து விட்டார்கள் விசித்திரமான நாடு!

இன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கொடுமை.

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.