Monday 24 September 2012

கலக்கல் காக்டெயில் 87

மண் குவாரி மோசடி

விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரிகளில் அரசு அனுமதித்த அளவிற்கும் அதிகமாக செம்மண் அள்ளியதாக அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி உட்பட 3 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.

நாட்டில்  பல பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்க முன்னாள் அமைச்சர்களை தேடி வளைத்து உள்ளே தள்ளிக்கொண்டிருப்பதில் அரசு கவனம் செலுத்துவதுபோல் தெரிகிறது.

ஒரு  விஷயம் அத்துமீறி போகும்போது அதனுடைய உண்மையான காரணம் நீர்த்துப்போகிறது. முன்னாள் அமைச்சர்கள் ஒன்றும் கறை படியாதவர்கள் அல்ல, அதே சமயத்தில் இந்நாள் அமைச்சர்களும் அந்தக் கட்சியுடன் ஒட்டி உறவாடி தேனை நக்கிய விஷயங்களும் அவ்வப்பொழுது வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆக மொத்தம் இப்பொழுது இருக்கும் மின்சாரப் பிரச்சினை, காவிரி பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்பவே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவோ என்ற ஐயம் நமக்குள் எழுகிறது. 

பர்ஃபி

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பர்ஃபி நிஜமாகவே பார்க்கவேண்டிய படங்களில் ஒன்று. இயக்குனர் பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறார். முக்கியமாக காதுகேளாத, பேசமுடியாத கதாநாயகன் தான் காதலித்தவள் நிராகரிக்கும் பொழுது கொடுக்கும் உணர்ச்சிகள் பாராட்டத்தக்கவை.

ஆட்டிசம்  உள்ள பெண் நடிப்பில் ஒரே ஒரு குறை. கண்களில் புத்திசாலித்தனத்தை மறைக்க முயற்சி செய்யவில்லை என்பதை தவிர படத்தில் ஒரு குறையும் இல்லை.

இருக்கானா "இலியானா" அறிமுகமாம்.நன்றாகவே செய்திருக்கிறார்.

ரசித்த கவிதைகள்

குழந்தை அழும்போதெல்லாம்
நான் குதிரை ஆக
வேண்டியிருக்கிறது.
இம்மண்ணில் 
என்னை சவாரியாக்கி
கைகொட்டி சிரிக்க,
குழைந்தைக்குமா  ஆனந்தம்?

------------------------

குழந்தை
அவனுக்கு 
ஒரு நிமிடம்
அவளுக்கு
வாழ்க்கை.

---------------------ஆண்டாள் பிரியதர்ஷினி

இந்தவார ஜொள்ளு
 



24/09/2012







Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

rajamelaiyur said...

பெரிய மனசு உள்ள புகைப்படம் அருமை

கும்மாச்சி said...

ராஜா வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதைகள் ரசிக்க வைத்தது...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.