Thursday 29 November 2012

கலக்கல் காக்டெயில்-94

500 வது இடுகை.

இந்திய கிரிக்கட் வீரர்களுக்கே உள்ள பிரத்யேக நோய் நமக்கும் தொற்றிக்கொண்டு விட்டது. 500 வது இடுகை  என்ற இலக்கை எட்டிவிட்டதை பறைசாற்ற ஒரு பதிவு. எழுதியதில் எத்தனை உருப்படி என்று வாசித்தவர்களுக்கு தான் தெரியும்.

இருந்தாலும் பதிவுலக நண்பர்களின் ஆதரவில் 500 பதிவுகள் போட்டாகிவிட்டது. இனி வழக்கம்போல் மொக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கும்.

அவதூறு வழக்குகள்

இது தமிழ்நாட்டிற்கே உரிய தனி அடையாளம். குறிப்பாக அம்மா ஆட்சியில் இது அதிகம். அம்மாவை பற்றியோ அல்லது அவரது நடவடிக்கைகளையோ  யாராவது விமர்சித்தால் மேற்படி ஒரு வழக்கு அவரது அல்லக்கைகளால் தொடரப்படும். இதன் உச்சகட்டமாக கைது, கஞ்சா கடத்தல், குண்டாஸ் என்று விமர்சித்தவரின்  தரத்திற்கேற்ப அது விஸ்வரூபம் எடுக்கும்.

அம்மா விமர்சனத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பது ஏன் தான் இவர்களுக்கு தெரியாமல் போகிறதோ?

கெம்மனகுண்டி - அரசர்களின் உல்லாச நகரம்

இது என்னடா பேரு?, ஏதோ வில்லங்கமான விஷயம் என்று படிக்கப்போனால், கர்நாடகாவில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள உல்லாசபுரியாம். எப்படியெல்லாம் பேர் வைக்கிறாய்ங்கபா.

என்னாது கெம்மன குண்டியா?

கிரிக்கட்

இலங்கை கிரிக்கட் டீமுக்கும் கிட்டதட்ட இந்திய கிரிக்கட் டீமின் நிலைமைதான். மூத்த வீரர்கள் விலகாமல் இளைஞர்களுக்கு வாய்ப்பு தர மறுக்கின்றனர். அதன் விளைவு இன்று நியூஜிலாந்திடம் மூகடைபத்து நிற்கின்றனர்.

தில்ஷன், சங்கக்காரா, மகிளா எல்லாம் இனி ரொம்பநாள் தாக்கு பிடிக்க முடியாது. இல்லை வில்சேர் வைத்தாவது ஆடுவோம் என்றால், இனி பங்களாதேஷ் கூட  இந்த வயசான டீம்களை பந்தாடலாம்.

புத்தகம்

 வெகுநாட்களாக படிக்கவேண்டும் என்று நினைத்து கைவராமல் போன புத்தகத்தை இப்பொழுது விடுமுறையில்  வந்திருக்கும் என் மகள் அதை எனக்கு பரிசளித்திருக்கிறாள். ஜ்ஹோன் கிரேயின் "MEN ARE FROM MARS AND WOMEN ARE FROM VENUS".

படிக்க வேண்டும்.


ரசித்த  கவிதைகள்

காற்று வீசவும் 
அஞ்சும் ஓர் இரவில்
நட்சத்திரங்களிடையே
இருக்கிற
அமைதியின் அர்த்தம் 
என்ன என்று 
நான் திகைத்த ஓர் கணம்
கதவருகே யாருடைய 
நிழல் அது?

இந்த கவிதையின் தலைப்பு "எமன்"------------சேரன் 


ஆடித்தோற்ற காளியின்
உக்கிரம் தணிக்க 
அருகிலுள்ள ஊர்த்துவ தாண்டவர் 
மேல்
விசிறியடித்த  வெண்ணையாய்
எதையோ  நினைத்து 
எதையோ பற்றி 
உருகி வழியும்வாழ்க்கை.

----------------------------ந. ஜெயபாஸ்கரன்

நகைச்சுவை 

மச்சி எவ்வளவு அடிச்சாலும் மப்பு ஏறமாட்டேங்குதுடா.

அடச்சே  ஏற்கனவே நீ மப்புலதான் இருக்கே, நான் உன் நண்பன் இல்லை, உங்கப்பண்டா.

கணவர்கள் எல்லாம் ஸ்பிளிட் ஏசி மாதிரி...

எப்படி ராஜா சொல்றீங்க..??

ஏன்னா, வெளியிலதான் சவுண்டு ஜாஸ்தியா இருக்கும். ஆனா வீட்டுக்குள்ள படு கூலா, அமைதியா, கன்ட்ரோலா இருப்பாங்க...!

 ஜொள்ளு 





29/11/2012

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

JR Benedict II said...

wishes thala for ur 500

கும்மாச்சி said...

ஹாரி வாழ்த்துகளுக்கு நன்றி.

Subha said...

Why the issue of age applied only in cricket ? How many will do that in their respective professional life?

திண்டுக்கல் தனபாலன் said...

500-க்கு வாழ்த்துக்கள்...

கும்மாச்சி said...

தனபாலன் வாழ்த்துகளுக்கு நன்றி.

Anonymous said...

500க்கு வாழ்த்துக்கள்...Keep rocking...

கும்மாச்சி said...

ரெவரி வாழ்த்துகளுக்கு நன்றி.

முத்தரசு said...

500-க்கு வாழ்த்துக்கள்.

கும்மாச்சி said...

முத்தரசு நன்றி.

குல்ஜார் (அ) குல்ஷன் said...

let 500 become 5million

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.