Wednesday 30 January 2013

ஆத்தா கோபத்திற்கு ஆளானாரா கமல்?

கமலின் விஸ்வரூபத்திற்கு பிரச்சினை மேல் பிரச்சினை. நேற்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எப்படியும் படம் வந்துவிடும் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று பெருத்த ஏமாற்றம். அரசு வழக்கறிஞர்கள் ராவோடு ராவாக தலைமை நீதிபதி குழுவை சந்தித்து மீண்டும் தடை வாங்கி அம்மாவின் ஆணையை நிறைவேற்றிவிட்டனர்.

இந்த வழக்கை அரசியல் வழக்கறிஞர்கள் வாதாடிய விதத்திலிருந்தே அரசின் நிலைமை இன்னும் சொல்லப்போனால் ஆத்தாவின் கோபம் தெள்ளத்தெளிவாகிவிட்டது. இந்தப்படம் என்னதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பிற்கு பின் வெளிவந்தாலும் ஆத்தா தொல்லையில் "தாங்காது" என்றே தோன்றுகிறது. கமல் தரப்பில் உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாக செய்திகள் வருகின்றன.

ஆத்தாவின் கோபத்திற்கு உண்டான காராணத்தை எதிர்கட்சி ஊடகங்கள் வெளிச்சம் போட்டு கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு முன் வந்த ஒரு படத்திலும் இந்தப் பிரச்சினை வந்த பொழுது ஆத்தா தரப்பில் இருந்த ஆதரவு நாம் அறிந்ததே.

விஸ்வரூபம் இனி வந்தாலும் அசம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறை ஒத்துழைப்பு இருக்காது என்று தோன்றுகிறது.

அரசியல் விளையாட்டில் கமல்தரப்பும் ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளும் பகடைக் காய்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

திரையுலகில் சக கலைஞருக்கு பிரச்சினை வரும்பொழுது ஒரு சிலரே குரல் கொடுக்கின்றனர். மற்றவர்கள் ஆத்தா கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க மௌனம் காத்து தாங்கள் புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

 இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.


Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

Anonymous said...

SHAMEFUL ,DIRTY,FILTHY POLITICS BY............................

"ராஜா" said...

// மௌனம் காத்து தாங்கள் புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

ஆத்தாதான் இதற்க்கு காரணம் என்று தெரிந்தவுடன் அத்துணை பேருக்கும் டவுசர் கழண்டு விட்டது ... இப்பொழுது அவுந்த டவுசரை தங்கள் கையால் பிடித்து கொண்டு கமலின் நிர்வாணத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள் , ஆனால் இதே ஆத்தா நாளை அவர்கள் டவுசரையும் அவிழ்க்கும் என்று தெரியாமலே ..

DiaryAtoZ.com said...

"இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்."

Yes in Next Elections.

”தளிர் சுரேஷ்” said...

அரசியலு! பாவம் கமல்!

அருணா செல்வம் said...

ஆத்தாவின் கோபத்தைத் தணிக்கக் கூழைக் கும்பிடு
போடுவது போல் காலில் விழுந்து பின் வார வெண்டியது தான்.

கும்மாச்சி said...

சுரேஷ், அருணா வருகைக்கு நன்றி.,

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.