Tuesday 9 September 2014

டீ வித் முனியம்மா பார்ட் - 20


முனிம்மா நேரத்தே வன்னு.........இய்யாலு லோகு எவ்விடே போயி......

டேய் மீச நீ இன்னாடா பொலம்பிகினு கீற, டீ போடுறா, ஓணத்துக்கு இன்னா செய்த.........

என்ன முனிம்மா நானு எந்த செய்யும்.......டீ அடிச்சு.......

லோகு இன்னாடா பயம் ஒருக்கா சைடு வாங்கிக்கினு வரான்.....

கோயம்பேடு போ சொல்ல காவால வியுந்துகினான் போல.

இன்னாடா செல்வம் இன்னா ஒரு சைடா நடக்குற.....

அடப்போ முனிம்மா, நேத்திக்கி சரக்கு எடுக்க போ சொல்ல ஒரே மயை, பஸ்ஸுகாரன் நடுரோடுல வண்டிய நிறுத்திகினு எறங்கு எறங்குன்றான், அப்படியே ரன்னிங்குல எறங்க சொல்ல காவால கால விட்டேனா, காலு சுளுக்கு ஆகிப்போயிடிச்சி. காபரேசன் காரனுங்க காவாவ மூடாம வச்சிகிரானுங்க பேமானிங்க.

முனியம்மா போர் வெல் அடிக்க சொல்ல மூடி போடாம போனா பைனடிப்பாங்க இதுக்கு யாருக்கு பைனடிப்பாங்க.

அடப் போ லிங்கம் சாரு, இதெல்லாம் கண்டுக்காம போய்க்கினு இருக்க சொல்லதான் இவனுங்க வேலய ஒயுங்க செய்ய மாட்டேங்குறானுங்க.

சரி முனிம்மா பெங்களூரு கேசு தீர்ப்பு வந்திடும் போல கீதே.

அஹான் பாய் கச்சிகாரனுங்க ஒட்டலில ரூம்பு போட்டு குந்திகிரானுங்க. பெங்களூரு, மாண்டியா, குத்ரேமுக்குன்னு அல்லா ஊருலயும் அம்மா கட்சிகாரனுங்க குந்திகிரானுங்க.

அப்படியா இது இன்னா இது?.

ஆமாண்டா லோகு, அம்மாவ ராங்கா எதுவும் செய்யல அப்படி கண்டி ஜட்ஜு சொன்னாருன்னா ஊருல ஒரே திரு வியாதான், கர்நாடகா போலீசுதான் பிதறல் எடுத்துகிரானுங்க.

அம்மா தப்புன்னு சொன்னா இன்னா செய்வானுங்க?

அப்டிகா தீர்ப்பு வந்தா நாடார், கச்சிகாரனுங்க வூடு கட்டி கலாட்டா செயவானுங்களான்னு, ஊரே நாறிடும்,   போலிசு பம்முது.

இந்த வாரம் இன்னா எல்லா நூசும் பெங்களுருலேய நடக்குது.

ஆமாண்டா  செல்வம் அந்த சாமிக்கி அண்ட்ராயர உருவிட்டானுங்க போல.
நித்தி ஒரே காண்டாய்கினாராம், திருவண்ணாமலைக்கி ஷிஃப்டு ஆவப்போராராம்.

முனிம்மா மதுரைல மருவாட்டி போஸ்டர் ஒட்டி தலீவர உசுப்புராங்காட்டியும்.

லிங்கம் சார் அது தலீவருக்கில்ல, தளபதிய உசுப்புரானுங்க. இளைஞரனிய  மீட்க வந்த கும்கியே ன்னு போஸ்டர் வச்சி அயகிரி மவனுக்கு கொம்பு சீவரானுங்க.

உள்ளாட்சி தேர்தலுல அம்மா கட்சி எதிர்க்க ஆளில்லாம கெலிச்சிகினு கீறாங்க.

ஆமாம் பாய் இப்போ உனுக்கு துட்டு வேணுன்னு வையி, அம்மா கட்சிக்கி எதிர வேட்பாளர் மனு கொடுத்த, உனுக்கு துட்டு குடுத்து வாங்கிடுவாங்க.

அடப்போ முனிம்மா அதெல்லாம் நமக்கு ஆவாது, நம்ம மாதிரி ஆளுங்கள டின்னு கட்டிடுவானுங்க.

அப்பால இன்னா சினிமா நூசு முனிம்மா.

செல்வம் இன்னாடா உனுக்கு அவசரம், அவன் அவன் ராஜபக்ஷே துட்டுல படம் எடுத்துகினு மெர்சல் ஆயிகிறான்.........நீ இனாடான்னா பொம்பளயாளுங்க படத்துக்கு அலைஞ்சிகினு கீற.





Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சபாஷ் சரியக சொன்னீர்கள் படம் கண்ணைக் கவரும் படம....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

கும்மாச்சி said...

ரூபன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

காசிராஜலிங்கம் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.