Thursday 19 April 2018

தமிழா தமிழா.................

தமிழன் எப்போதும் உணர்ச்சிகளுக்கு அடிமை. அதில் என்ன பிரச்சினைனா எதுக்குப் பொங்கணும் எதுக்கு அடங்கனும்னு தெரியாத ஆட்டுமந்தைக் கூட்டம்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் தடை செய்யக்கோரி உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்கள் போராடிக்கொண்டிருக்கும் பொழுது அதில் உள்ளே பூந்து அந்தப் போராட்டத்தை காவிரி பக்கமா திசை திருப்பினானுங்க கூத்தாடி கும்பலும், கமிஷன் வாங்கிய அரசியல் வாதிகளும்.

இப்போ ஸ்டெர்லைட் காரன் "மச்சி எங்கிட்ட காசு வாங்கின பிச்சைக்கார நாய்ங்களா ரொம்ப கூவினிங்க இருக்குடி உங்களுக்குன்னு" குரல் விடப்போக போராட்டம் பக்கம் போனவனுங்க எல்லாம் பம்மிக்கிட்டு காவிரி பக்கம் ஒதுங்கிட்டானுங்க.😵

சரி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கனுமுன்னு, போணியாகாத, படம் வராத டைரடக்கர்கள்😥 போராடுறேன் பேர்வழின்னு அதை ஐ.பி. எல் பக்கமா திசைதிருப்பி சேப்பாக்கம் வழியா காவா வெட்டி பக்கிங்காம் காவல கொண்டு உட்டானுங்க. இடையே குறுக்கே டேய் ரஜினி உன்னை நான்தான் வளர்த்தேன்........கன்னட வந்தேரின்னு அவருக்கு சேரை தெளித்து தங்களது வயிற்றெரிச்சலை தனித்துக்கொண்டார்கள். இப்போ வயிற்றில் நெருப்பை கட்டிக்கொள்ளாம டப்பா படங்கள ரிலீஸ் பண்ணலாம்.😂

அப்புறம் கொஞ்ச நாளைக்கு அசீபா பக்கம் திருப்பி விடப்பட்டு தடுமாறி நின்றது.

அப்புறமாக வந்தாங்க நிர்மலாதேவி😣.........கணக்குப்பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டியவங்க கணக்கு பண்ண சொல்லப்போக போராட்டம் அப்படிக்கா கிளுகிளு மேட்டர் பக்கம் திரும்பி கிறங்கி போச்சு.


அப்புறம் நம்ம ஆட்டுதாடி ஐயோ "நான் அவனில்லை, நான் அவனில்லை"ன்னு கன்னத்தில என்னடி காயம்னு தொட்டு பார்க்க "ஐயோ பத்திகிச்சு"😜.

பிறகு "எச்சை" முறைதவறிய குழந்தை என்று உளறப்போக யாருகிட்ட தோ அவன் முறைதவறியவன், இதோ இவன், ராமன், கிஸ்ணன் அல்லாரும் அதேதான், எங்கிட்ட ஆதாரம் இருக்குதுன்னு இதிகாசங்கள நோண்டிட்டு இருக்கானுங்க.


மொத்தத்தில் காவிரிமேலான்மை வாரியம் அமைக்க பொங்கிய தமிழ்நாட்டை ஐ.பி.எல் விளையாட்டு பக்கம் மடைமாற்றி அங்கிருந்து நிர்மலாதேவி ஊடாக கவர்னர் மளிகை பக்கம் பாய்ந்தோட அதை லாவகமாக எச்சையால் கோபாலபுரம் திருப்பிவிடப்பட்டு இப்பொழுது பகுத்தறிவாதிகளால் இதிகாசங்களில் இழிபிறப்பு ஆராய்ச்சியில் போய் நிற்கிறது.

தமிழா தன்மானத் தமிழா................வீழ்வது நம் மானமாக இருப்பினும் வாழ்வது நாமாக இருக்க வேண்டும்............ஐயோ ஐயோ...




Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

KILLERGEE Devakottai said...

மானக்கேடான உண்மை.

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

ராஜி said...

மல்லாந்து எச்சில் துப்புற கதைன்னு ஒரு பயலுக்கும் புரியல

கும்மாச்சி said...

ராஜி வர்ருகைக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

வேதனை மட்டுமே மீதம்....

கும்மாச்சி said...

வெங்கட் நாகராஜ் வருகைக்கு நன்றி.

Yarlpavanan said...

அருமையான கண்ணோட்டம்
https://plus.google.com/u/0/communities/110989462720435185590

Tamilus said...

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.