Monday 1 February 2010

ஏ. ஆர். ரஹ்மான்


ஏ.ஆர். ரஹ்மானின் கிரீடத்தில் மற்றும் ஒரு ரத்தினம் பொறிக்கப் பட்டுள்ளது. கிராம்மி விருது இரண்டு வகையில் கொடுக்கப் பட்டுள்ளது. முதலில் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள். (மாஷா அல்லாஹ்)

அந்த வகையில் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் படவேண்டும். ரஹ்மான் எங்கள் ஊர்காரர் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

தமிழ் இசை உலகம் பல அறிய மேதைகளை சந்தித்திருக்கிறது.

முதலில் ஜி. ராமநாதன்.
இவரது இசைப் புலமை மிகவும் பிரசித்தம். குறைந்த பக்க வாத்தியங்களை வைத்துக் கொண்டு பல அருமையானப் பாடல்களை தந்தவர். உத்தம புத்திரன், தூக்கு தூக்கி பாடல்கள் இதற்கு எடுத்துக் காட்டு. அனைத்துப் பாடல்களையும் ஹிட் ஆக்குவதை தொடங்கிவைத்த மாமேதை.

அடுத்து இசை உலக இரட்டையர் என்று அழைக்கப் பட்ட விஸ்வநாதன் -ராமமூர்த்தி.தமிழ் இசையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றவர்கள். சுத்தமான கர்நாடக இசையுடன் மேற்கத்திய இசையையும் கலந்து ரசிகர்களை ஒரு இருபது முப்பது வருட காலம் கட்டிப் போட்டவர்கள்.

இவர்களுடைய இசைக்கு நிறையப் படங்களை சொல்லலாம். காதலிக்க நேரமில்லை, பாலும் பழமும், பாவமன்னிப்பு, காத்திருந்தக் கண்கள், சுமைதாங்கி.
கர்ணன் படம் எடுக்கும்பொழுது பி;ஆர். பந்துலு அவர்கள் ஜி. ராமநாதனை தான் இசை அமைப்பாளராக முடிவு செய்திருந்தாராம். ஏனெனில் புராணக் கதை என்பதால், ஆனால் ராமநாதன் இரட்டயரிடம் கொடுக்க சொன்னாராம். பாட்டுகள் அனைத்தும் ஹிட் ஆனது.

இந்த சமகாலத்தில் வாழ்ந்து ஒரு தனி பாணியில் இசை அமைத்த மற்றுமோர் இசை மேதை கே.வி. மகாதேவன்.

திருவிளையாடல், கொஞ்சும் சலங்கை போன்ற படங்களின் பாடல்களை எல்லாம் ஹிட் செய்தவர். மேலும் புரட்சித் தலைவரின் நிறைய படங்களுக்கு இசை அமைத்தவர். தாய் சொல்லைத் தட்டாதே,தர்மம் தலைகாக்கும் போன்றவை.

கிட்டத்தட்ட எழுபதுகளில் இளையராஜா என்னும் மற்றுமோர் மாமேதை தமிழ் திரைப் பட இசையை ஒரு புதிய பரிமாணத்தில் கொடுத்து பல எண்ணற்ற ரசிகர்களை தன் இசையால் கட்டிப் போட்டவர். வட நாட்டவரையும் தமிழ் திரை இசைப் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

அன்னக்கிளியில் தொடங்கி, பதினாறு வயதினிலே, கோழிகூவுது, நாயகன், நிழல்கள், ராஜாதி ராஜா, இதயம், ஜானி போன்ற ஐந்நூறுக்கும் மேற்பட்டப் படங்களில் இசையமைத்து பல கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு வாழ்வு கொடுத்தவர். இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் ஏராளம். இவர் இசை பின்னர் கடல் கடந்து சிம்போனி என்று பல பரிமாணங்களைத் தொட்டது.

இவருடைய இசைப் புலமை இவரது வாரிசுகளிடம் இல்லை. ஏழை கிராமத்து இளைஞன் இவ்வளவு சிகரங்களைத் தொட்டது இவரது இசை வேட்கைக்கு எடுத்துக் காட்டு.

பின்னர் தொண்ணூறுகளில் ஏ. ஆர் ரஹ்மான் இசைப்புயலின் வருகை தமிழ் திரை பட இசையை உலகை நோக்கி பயணிக்க வைக்க தொடங்கியது. ரோஜாவில் தொடக்கமே சின்ன சின்ன ஆசை என்று தொடங்கி எல்லோரையும் தன் பக்கம் திரும்ப வைத்தார். தீவிர என் போன்ற இளையராஜா ரசிகர்களை பொறாமைப் பட வைத்தார். இவர் தொடர்ந்து கொடுத்த புதிய முகம், காதலன், ஜென்டில்மேன், கருத்தம்மா, பாம்பே என்று தொட்டதெல்லாம் தன் வித்தியாச இசையால் மின்ன வைத்தார். தயாரிப்பாளர்கள் இவர் வீட்டில் இரவுப் பகலாக காத்திருக்க ஆரம்பித்தனர். மிக விரைவில் இந்தி தயாரிப்பாளர்களை சென்னைப் பக்கம் வரவைத்தார்.

பின்பு வந்தேமாதரம் என்ற ஆல்பம் விற்பனையில் பெரிய சாதனைப் படைத்தது. பாம்பே டிரீம்ஸ் இசை நாடகம் என்ற அடுத்தக் கட்டம், லண்டனில் வாசம். நுர்சத் பதெஹ் அலிகான், என்ற பாகிஸ்தான் இசை மேதையை “ சந்தா சூரஜ் லாகி தாரே “ என்று வந்தே மாதரத்தில் பாட வைத்தார்.

வட இந்தியப் பின்னணிப் பாடகர்கள் தமிழ் இசைக்க ஆரம்பித்தார்கள். அட்னான் சாமியை தமிழ் பாட வைத்தார். சாதனா சர்கத்தின் தேன் குரலை :வெண்ணிலவே வெண்ணிலவே” என்று நம் காதுகளில் பாய வைத்தார்.

இப்பொழுது ஆஸ்கார், கிராம்மி என்று நம் தமிழுக்கு பெருமை தேடித்தந்திருக்கிறார்.
இதற்கெல்லாம் ஒரு ஐந்து வருடம் முன்பே “Inside man” என்ற ஹாலிவுட் படத்தில் தொடக்கப் பாட்டு “சைய சையாவை” உபயோகப் படுத்தி இருந்தார்கள்.

வாழ்க ரஹ்மான். உங்களுடைய காலகட்டத்தில் நாங்கள் இருப்பது எங்களுக்கு பெருமை.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மேலும் பெருமையும் புகழும் சேர்க்கட்டும்.

“இன்ஷா அல்லாஹ்”.

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

vasu balaji said...

இன்று அப்துல்லாவுக்கு அடுத்து உங்கள் இடுகையிலும் இன்ஷா அல்லாஹ்.:)

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...

Anonymous said...

எல்லா புகழும் இறைவனுக்கே

ஹேமா said...

அவரின் கர்வமில்லாத மனதுக்கு இன்னும் நிறையவே வளர்ச்சி இருக்கு.வாழ்த்துக்கள்.

இளமுருகன் said...

Well done Mr.Kummachi, ARR is surely capable for this award.nice one.
T.Elamurugan
Nigeria

மகா நடிகன் said...

ஏ. ஆர் ரஹ்மான் ஹாலிவுட் பட தமிழ் பாட்டு oscar விருதுக்கு பரிந்துரை செய்ய பட்டு இருக்கு.

எல்லா புகழும் இறைவனுக்கே

goget99 said...

பத்ம பூஷண் ஏ.ஆர் ரஹ்மான் சாதிக்கப் பிறந்தவர். இந்த தலைக்கனமற்ற இளைஞர் தொட வேண்டிய சிகரங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.