Tuesday 2 February 2010

ங்கொயால சிங்கமில்ல நாங்க........................


சென்னை: அதிமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டங்கள் நடப்பது அதிகரித்துவிட்டது.

எங்கம்மா இவனுங்களுக்கு இவ்வளவு தெகிரியம் வந்தது?. காலிலே விழுந்தவனுங்க எல்லாம் இப்போ கதவு வரைக்கும் வந்ததுட்டானுங்கோ. உஷாரா இல்லேன்னா இப்படிதாம்மா நிஜார் வரைக்கும் வந்துடுவானுங்கோ.

கொடனாடுலேயே கொடிய நட்டுக்கின்னா இவனுங்க அப்படித்தான் அரிப்பெடுத்து எந்தப் பக்கம் போவலாமுன்னு நோட்டம் வுடுவானுங்கோ.

உங்கள் நிலைமை, ரொம்ப பெஜாருதான். நடவடிக்கை எடுத்தா அத்தினி பெரும் அறிவாலயம் பக்கம் போய்டுவாங்க. அங்கே ஆளு சேர்க்க ஒரு கூட்டமே கதவாண்டே காத்திருக்காங்க.

இல்லேன்னா கருப்பு எம். ஜி. ஆர் குடும்பக் கட்சியில கப்புன்னு க்வார்ட்டர் உட்டுக்கின்னு கமுக்கம் ஆயிடுவாங்க.
ஆனாக்க பாருங்க இதிலே நீங்க சந்தோசமா இருக்கு ஒரு மேட்டர் இருக்கு, மருத்துவர் அய்யா பக்கம் எவனும் திரும்ப மாட்டேன்றானுங்க.

டெல்லி போனா அந்தம்மா டீ குடிக்கவே பயப்படுறாங்க. டெல்லி பக்கமும் ஒன்னும் பேர மாட்டேங்குது. இன்னா செய்வீங்க பாவம்!!!!!!!!!!!!. விதி வலியது?.

கதவாண்ட கத்திக்கினு இருக்கிறவன்களிலே, உ.பி.ச ஆளுங்க இருக்குறானா பார்த்துக்குங்க.


எதுக்கும் உ.பி.ச குடும்பத்தாண்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க. உங்க மத்தளத்துக்கு எல்லாப் பக்கத்திலே இருந்தும் இடிதான். இன்னா பண்ண.

(அன்றாயர் போட்டுகின்னு ஒரு நிருபர் வந்து சுளுக்கு எடுப்பாரு, அவராண்ட உசாரா இருங்க.)


ஆணைப் படுத்தா, எலி எங்கெல்லாமோ ஏறி விளயாடுமாம், எதொம்மா சொல்றதே சொல்லிட்டோம், பாத்து சூதானமா நடந்துக்கங்க.


இல்லேன்னா கட்சி தாராந்து போய்டும்.

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

vasu balaji said...

:)). சரியான யோசனை

அண்ணாமலையான் said...

அப்ப யோசனை செயலாளர் போஸ்ட் போட்டுடலாமா?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.