Tuesday 30 March 2010

யானைப் படுத்தா, எலி ஏறி.....................


யானைப் படுத்திடுச்சு, எலி ஏறிடுச்சு

ஒன்னும் இல்லைங்க நம்ம பென்னாகரம் முடிவை நினைத்து வந்த நெனப்புதான்.

சூரியன் முதலிடம்
மாம்பழம் இரண்டாமிடம்
இலை மூன்றாமிடம் (டெபாசிட் வேற காலி)

யாரும் “பணநாயகம்” வென்றது, “ஜனநாயகம்” தோற்றதுன்னு குரல் விடமுடியாது. எல்லாக் கட்சியும் பணப் பட்டுவாடா பலமா செய்ததா தொகுதி பக்கம் சொல்லிகிறாங்க. தேர்தல் “கங்காணி” என்ன செய்துகொண்டு இருந்தார்னு விவரம் இல்லை.


தி.மு.க. வெற்றி ஒன்றும் ஆச்சர்யமில்லை. (கொஞ்ச நஞ்சமா செலவு பண்ணியிருக்காங்க). ஆனா அவங்க யாரு இரண்டாவதா வரக்கூடாதுன்னு நினைத்தாங்களோ அவங்க வந்தது அடுத்தகட்ட சச்சரவுக்கு வழி.


தேர்தலில் நின்ற முப்பத்தியொரு வேட்பாளர்களில் இருபத்தி ஒன்பது பேருக்கு டெபாசிட் காலி. இது நம்ம பண்டைய கால மன்னர்கள் போரில் “முதுகில்” வேல் பாய்வதற்கு சமம். இதில் இருபத்தியேழு சுயேச்சைகளை விட்டு விடுவோம், அவர்கள் அதற்காகவே நிறுத்தி வைக்கப் பட்டவர்கள். மேலும் அவர்கள் ஏதாவது ஒரு பிரதானக்கட்சியின் பலிகடாக்கள். ( வோட்டை பிரிப்பதற்கு)

மற்றைய இரண்டு அவமானத்திற்கு உரியவர்கள், புரட்சிதலைவிக் கட்சி வேட்பாளரும், புரட்சிக் கலைஞர் கட்சி வேட்பாளரும். (முதலில் இரண்டு பேரும் என்ன புரட்சி பண்ணாங்கன்னு தெரியலை அதை விட்டுவிடுவோம்).

பு.க. கட்சிக்கு வருவோம், இவர் வாய் உதார் எடுபடலேன்னு தெரியுது. வேற எதாவது வீட்டுலே அம்மணியக் கேட்டு புதுசா செய்யணும். (மச்சானை மறந்துடாதீங்க, உலகத்திலேயே ரொம்ப முக்கியமான உறவுங்க)

பு. த. தோல்வி புடனியில விழுந்த அடின்னு நான் சொல்லலை அரசியல் ஆய்வாளர்கள் சொல்றாங்க. (அப்படி இருக்காங்களா?).
தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஊடால குண்டு வைக்க முடியாது. ஒரு முறை போய் பாட்டியைப் பார்த்து தோல்விதான். இப்பொழுதுக்கு கொடநாட்டில போய் குப்புறப் படுத்து குமுறி குமுறி யோசிக்கணும். எதிரி வெளியிலே இல்லை, கூடவே இருக்காங்க. கொடுத்த பணத்த ஒழுங்கா பட்டுவாடா பண்ணாம “சந்துல சிந்து பாடினதா” தொகுதியில பேசிக்கறாங்க, இன்னா விஷயம்னு பார்க்கணும். மொத்தத்தில் வோட்டு வங்கியில தாத்தா “ஆட்டைய” போட்டுட்டாரு.

யானைப் படுத்தா எலி ஏறி விளையாடும்னு சும்மாவா சொன்னாங்க.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

இராகவன் நைஜிரியா said...

:-)

Chitra said...

கும்மு கும்முன்னு கும்மிட்டீங்க........பதிவு, சூப்பர்!

கும்மாச்சி said...
This comment has been removed by the author.
கும்மாச்சி said...

ராகவன் & சித்ரா வருகைக்கு நன்றி.

சிங்கம் said...

சூப்பருங்கோ...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.