சுமத்ராவில் வருகிறாய்
சும்மா சும்மா வருகிறாய்
சுழற்றி போட்டு அடிக்கிறாய்
சென்னையில் ஆட்டுகிறாய்
கடல் அலையை சீற்றுகிறாய்
உறங்கும் அரசை உசுப்புகிறாய்
எல்லாம் எமக்கு தெரியும்
உன் சீற்றம் முன்பறிவோம்
என்று இறுமாப்பு கொள்வோரை
அச்சமுற வைத்து
சடுதியிலே மறைகிறாய்
பண்பாடு விற்று
கொள்கைகளை காசாக்கி
நலிந்தோரை நசுக்கும்
நயவஞ்சகர்களை
இனம் கண்டு
இடமறிந்து
நாசமாக்க
நாளையேனும்
அறிவிப்பின்றி வா
![Follow kummachi on Twitter](http://twitter-badges.s3.amazonaws.com/t_logo-a.png)
1 comment:
இதுதான் இதேதான் இதைத்தான் எதிர்ப்பார்க்கிறேன் நானும்.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.